ஒரு மிஷனரி பயண உரை

58-0330A

சகதரர பரனஹம ஒரவரடம பசககணடரககமபத, சபயர 'Only Believe' வசவசகக மடடம சய படலப படககணடரககறரகள, ஆனல வரததகள தளவகப பரயவலல - தகபபசரயர நனற. ஓ, இஙக நறகம இநதச சற பளளகளயம, தஙகள கரஙகளல தஙகள சலலக கழநதகள வததரககம தய மரகளயம, தகபபனமரகளயம நன பரககமபத... நன மறநள இரவ பரசஙகம பணணககணடரநத அநத நரதத நனககறன; அதவத மரயள தன கரஙகளல பல

ஒரு மிஷனரி பயண உரை

58-0330Aமதியம்மிடில்டவுன் ஒஹாயோ821958-03-30

ஒரு மிஷனரி பயண உரை

58-0330Aமதியம்மிடில்டவுன் ஒஹாயோ821958-03-30

1(சகோதரர் பிரான்ஹாம் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, சபையார் 'Only Believe' (விசுவாசிக்க மட்டுமே செய்) பாடலைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் வார்த்தைகள் தெளிவாகப் புரியவில்லை - தொகுப்பாசிரியர்) நன்றி. ஓ, இங்கே நிற்கும் இந்தச் சிறு பிள்ளைகளையும், தங்கள் கரங்களில் தங்கள் செல்லக் குழந்தைகளை வைத்திருக்கும் தாய் மார்களையும், தகப்பன்மார்களையும் நான் பார்க்கும்போது... நான் மறுநாள் இரவு பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்த அந்த நேரத்தை நினைக்கிறேன்; அதாவது மரியாள் தன் கரங்களில் பாலகன் கிறிஸ்துவை ஏந்திக்கொண்டு வரிசையில் நின்ற நேரத்தை. அவள் அந்தக் குழந்தையை தேவனிடமிருந்து பெற்றாள். நீங்களும் உங்கள் குழந்தைகளை தேவனிடமிருந்தே பெற்றிருக்கிறீர்கள். அவர் உங்கள் பிள்ளையின் மேல் எவ்வளவு அக்கறையாயிருப்பாரோ, அதே அளவு எந்தப் பிள்ளையின் மேலும் அக்கறையாயிருக்கிறார், ஏனெனில் அது அவருடைய சிருஷ்டிப்பின் ஒரு பகுதியாகும். இப்போது, வேதாகமத்தில், வேத வசனங் களின் விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை, எங்களால் முடிந்தவரை நெருக்கமாகப் பின்பற்ற எங்கள் சபையில் நாங்கள் எப்போதும் முயற்சிக்கிறோம். சிலர் சிறு பிள்ளைகளின் மேல் தண்ணீர் தெளிப்பார்கள், அல்லது ஞானஸ்நானம் - அதாவது குழந்ததைகளுக்கான ஞானஸ்நானம் கொடுப்பார்கள். நான் அதை வேதாகமத்தில் ஒருபோதும் கண்டதில்லை. அது வேதப்பூர்வமானது என்று நான் நம்பவில்லை. வேதாகமத்தில் நாங்கள் கண்ட ஒரே இடம், இயேசு சிறு பிள்ளைகளை எடுத்து அவர்களை ஆசீர்வதித்து, "சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப் பட்டவர்களுடையது" என்று சொன்ன இடம்தான்.

2இப்போது, ஒவ்வொருவரையும் தனித் தனியாக எடுத்துக்கொள்வதற்கு நமக்குக் கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் உங்களுக்குத் தெரியும், நம்முடைய கைகள் அவ்வளவு முக்கியமானவை அல்ல, அவருடைய கரங்களே அவர்கள்மேல் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அப்பாக்கள் மற்றும் அம்மாக்களே, தேவன் இந்த விலையேறப்பெற்ற சிறு ஆபரணத்தை உங்கள் கைகளில் கொடுத்திருக்கிறார். மேலும் உங்களுக்குத் தெரியும், இந்தக் குழந்தைகளை வளர்ப்பதற்கு அவர் உங்களை உயிரோடு வைப்பார் என்று நான் நம்புகிறேன். இயேசுவின் வருகை தாமதித்தால், நீங்கள் உங்கள் கரங்களில் வருங்காலத்துக்கான பாடகர்களையும், சுவிசேஷகர்களையும், போதகர் களையும், பிரசங்கிகளையும், தீர்க்கதரிசி களையும் ஏந்திக்கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். யாருக்குத் தெரியும்? தேவனுக்கு மட்டுமே தெரியும். நமது கடமை அர்ப்பணிப்பதாகும். உங்கள் கரங்களில் ஏந்திக்கொண்டிருக்கும் இந்தச் சிறு குழந்தைகளை, அவர்களை உங்களுக்குத் தந்த சிருஷ்டிகரிடமே திரும்பக் கொடுக்கிறோம் என்பதை உங்கள் இருதயத்தில் நீங்கள் உணர வேண்டும் என்று நான் விரும்பு கிறேன். தேவன் அவர்களை உங்க ளுக்குக் கொடுத்தார், அவர்கள் விலையேறப் பெற்ற வர்கள். இப்போது, நீங்கள் அவர்களை அவரிடமே திருப்பிக் கொடுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள்.

3சகோதரர் சல்லிவன், இங்கே உள்ள... அவருடைய மனமாற்றத்திற்கான காரணங்களில் ஒன்று (அவர் உங்களிடம் எப்போதாவது சொன்னாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது), ஒரு குழந்தை டிப்தீரியா (தொண்டை அடைப்பான்) நோயினால் இறந்து கொண்டிருந்ததுதான் காரணம். (அது என்ன?) [யாரோ ஒருவர், "டிப்தீரியா," என்று சொல்கிறார்]. டிப்தீரியா. கென்டக்கியில், பெந்தெகொஸ்தேவின் ஆரம்ப நாட்களில், ஒரு தகப்பன், சகோதரர் சல்லிவன் அந்நகரில் ஒரு நீதிபதியாக இருந்தார், ஒரு தகப்பன் தன் குழந்தையின் சுகத்திற்காகத் தேவனை நம்புவது என்று ஒரு முடிவை எடுத்திருந்தார். அவர் ஒரு புதிய விசுவாசி என்று நான் நினைக்கிறேன், ஒரு கள்ளச்சாராயம் விற்பவர் அல்லது காய்ச்சுபவர் அல்லது அப்படிப்பட்ட ஏதோ ஒன்று, அவர் அப்போதுதான் மனமாறி யிருந்தார். அந்தக் குழந்தைக்கு டிப்தீரியா வந்தது, அந்நாட்களில் அது மரணத்தை விளைவிக்கக்கூடியது. ஆனால் அந்தத் தகப்பன், "நான் தேவனை நம்புவேன்," என்றார். அதனால், அந்தத் தகப்பனைக் கைது செய்யவும், அவரைச் சிறையில் போடவும், அந்தக் குழந்தையை மருத்துவ உதவிக்காகப் பலவந்தமாக எடுத்துச் செல்லவும் ஒரு அறிக்கையில் கையெழுத்து வாங்குவதற்காக அவர்கள் இங்கே நகரத்திலிருக்கும் நீதிபதியிடம் வந்தார்கள். எனவே நீதிபதி தொடங்கி, "அவரைத் தூக்கிச் சிறையில் போடவேண்டும்," என்றார். எனவே அவர் அந்த அறிக்கையில் அல்லது பிடியாணையில் கையெழுத்திடத் தன் பேனாவைப் பிடித்தார், அவர் அப்படிச் செய்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்மேல் அசைவாடினார், "நீ அதில் கையெழுத்திடாதே," என்று சொன்னார். அவர் மீண்டும் கையெழுத்திடத் தொடங்கினார், "தான் உறைந்து போய் விடுவோம் என்று நினைத்தார்." ஏதோ ஒன்று, "அதில் கையெழுத்திடாதே," என்று சொன்னது. அப்போது அந்த வக்கீல், "என்ன விஷயம், நீதிபதியவர்களே?" என்றார். அதற்கு அவர், "இன்று நான் இதில் கையெழுத்திட விரும்புவதாக நான் நம்ப வில்லை," என்றார்.

4அவர் அதை உதவி நீதிபதியிடம் (Squire) கொண்டு சென்றார், அந்த உதவி நீதிபதி அதில் கையெழுத்திட்டார். எனவே நகரத்தில் இருந்த அவருடைய நண்பர்கள் சிலர், மலையின் குறுக்கே ஓடிச் சென்று அந்தக் குழந்தையின் தகப்பனிடம், "அவர்கள் வருகிறார்கள் (அந்தச் சிறு பிள்ளை உயிரற்றுக் கிடக்கிறது), அவர்கள் வருகிறார்கள், அவர்கள் உங்களைக் கைது செய்து, உங்களைச் சிறையில் அடைத்து, அந்தக் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் போகிறார்கள்," என்று சொன்னார்கள். இந்த அப்பா உள்ளே சென்று, தன் இறக்கும் தருவாயிலிருந்த குழந்தையை எடுத்து, தன் கைகளில் வைத்து, மேலே உயர்த்தி, "தேவனே, நீர் இதை எனக்குக் கொடுத்தீர், நீர் இதை எடுத்துக்கொள்ளும். ஏனென்றால் நான் புதிதாகப் பிறந்த ஒரு குழந்தை. அவர்கள் இங்கே வந்தால், அங்கே துப்பாக்கிச் சூடு நடக்கும், நான் எதிலும் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. நீர் இதை எனக்குக் கொடுத்தீர், நான் உம்மை நம்புகிறேன், நீர் இதை எடுத்துக்கொள்ளும். இப்போது, நீர் இதன் உயிரை எடுத்துக்கொள்ளும். நீர் இதை எனக்குக் கொடுத்தீர், நீர் இதைத் திரும்ப எடுத்துக்கொள்ளும்," என்றார். அவர் அப்படிச் சொன்னபோது, அந்தச் சிறு குழந்தை தகப்பனின் கைகளில் புரண்டு, "அப்பா, என்னைக் கீழே விடுங்கள், எனக்குப் பசிக்கிறது," என்று சொன்னது. அவர்கள் வந்தபோது, அதிகாரிகள் குழந்தையை எடுக்க அல்லது தகப்பனைப் பிடிக்க வந்தபோது, "நாங்கள் உங்களைக் கூட்டிக்கொண்டு அந்தக் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் போகிறோம்," என்றார்கள். அதற்கு அவர், "வெளியே முற்றத்திற்குப் போய் பாருங்கள், அவர்கள் எல்லோரும் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள், யாருக்கு டிப்தீரியா இருந்தது என்று எனக்குச் சொல்லுங்கள். யாருக்கு டிப்தீரியா இருந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவரை எடுத்துக்கொள்ளுங்கள்," என்றார். அந்த நீதிபதி ஒரு பிரசங்கியாராக மாறிவிட்டார்.

5அந்தக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிந்த அதே தேவன், உங்கள் குழந்தையின் வாழ்க்கையையும் ஆசீர்வதிக்க முடியும், அவன் இப்போது உங்கள் கைகளில் இருக்கிறான். நாம் அவனை தேவனிடத்தில் ஏந்திப்பிடித்து, தேவன் அந்தக் குழந்தையை ஆசீர்வதிக்கவும், அது பூமிக்கு வந்ததன் நோக்கத்தை அவர் நிறைவேற்றவும் கேட்போம். நாம் நம் தலைகளைத் தாழ்த்தி, ஒரு நிமிடம்... இப்போது, தாய்மார்களே மற்றும் தகப்பன்மார்களே, உங்கள் சொந்த எளிய முறையிலும், உங்கள் இருதயத்திலும், என் எளிய முறையிலும், இந்தக் குழந்தைகளை நம் தேவனாகிய கர்த்தருக்கு அர்ப்பணிப்போம்.

6எங்கள் பிதாவாகிய தேவனே, நீர் இவர்களுக்குக் கொடுத்திருக்கும் இந்தச் சிறிய அன்பின் துணுக்குடன் இங்கே நிற்கும் இந்தத் தாய்மார்கள் மற்றும் தகப்பன்மார்கள், இந்தச் சிறு குழந்தைகள், இவர்களில் சிலர் வழுக்கைத் தலையுடனும், சிலர் நீண்ட தலைமுடியுடனும், மற்றும் அழகான சிறுமிகள். இவர்கள் அனைவரும் வீட்டின் பந்தத்தை இன்னும் இறுக்கமாக்க வந்திருக்கும் விலையேறப்பெற்ற சிறு ஆபரணங்கள், இந்தப் பெற்றோர்கள் வளர்ப்பதற்காக நீர் அவர்களுக்கு அருளி யிருக்கும் உம்முடைய ராஜ்யத்தின் குட்டிப் பிரஜைகள். அவர்கள் இங்கே ஜீவனுள்ள தேவனின் பீடத்திற்கு முன்பாக நிற்கிறார்கள், பரலோக பிதாவே, உமது இரக்கத்தின் கரம் அவர்கள் ஒவ்வொருவர் மேலும் தங்கும்படி நான் உம்மை வேண்டிக்கொள்கிறேன். அந்தத் தகப்பன்மார்களும் தாய்மார்களும் அந்தச் சிறிய வர்களை உமக்கு நேராக உயர்த்தியிருக்கையில், கடந்த நாட்களில் தம்மிடம் வந்த அந்தச் சிறியவர்களின் தலைகள் மேல் வைக்கப்பட்ட அந்தப் பெரிய கரங்கள், ஆணிகள் பாய்ந்த அந்தக் கரங்கள், இவர்களில் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் ஆசீர்வதிப்பதாக.

7நீர் வார்த்தையில் சொல்லியிருக்கிறீர், "நீங்கள் இந்த மலையைப் பார்த்து, பெயர்ந்து போ என்று சொல்லி, நீங்கள் சொல்வதை நம்பினால், அது நடக்கும்." உமது ஊழியனாகவும், ஆண்டவரே, உமது ஊழியர்களாகிய இந்த ஜனங்களாகவும், நாங்கள் அந்தப் பெரிய பரிசுத்த ஆவியானவரிடம் சொல்கிறோம், "இந்தச் சிறியவர்களின் வாழ்க் கையை உமது கரங்களில் எடுத்துக்கொள்ளும். அவர்களுக்குள் ஏதேனும் நோய் இருந்தால், அதை எடுத்துப்போடும்." மேலும் ஆண்டவரே, ஒரு நாளை இருக்கிறது என்றால், அவர்கள் நாளை உலகத்திற்குச் சுவிசேஷத்தைச் சுமந்து செல்லும் ஆண்களாகவும் பெண்களாகவும் இருக்கும்படியான ஒரு வாழ்க்கையை அவர்கள் வாழ்வார்களாக. அதை அருளும் ஆண்டவரே, நாங்கள் அவர்களை உமக்கு அர்ப்பணிக்கும் போது எங்கள் தாழ்மையான ஜெபத்தைக் கேளும். உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில். ஆமென். தேவன் உங்கள் ஒவ்வொருவரின் குழந்தை களையும் ஆசீர்வதிப்பாராக, அதற்கு நீண்ட சந்தோஷமான ஆயுளைக் கொடுப்பாராக.

8இன்றைய இரவு, நிறைவு ஆராதனையாக இருப்பதால், சுகமளிக்கும் சேவைகளில் ஒரு பெரிய உச்சக்கட்டத்தை இன்றிரவு நான் எதிர்பார்க்கிறேன். இது நமது சிறந்த இரவுகளில் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இப்போது, இந்த மதிய வேளையில், உங்களுக்குப் பிரசங்கம் பண்ணுவதற்குப் பதிலாக, நான் உங்களுக்கு ஒரு மிஷனரி பயண உரையை (A Missionary Talk) கொடுக்க விரும்பினேன். வெளிநாட்டு மிஷனரி ஊழியங்களுக்காக இன்று மதியம் அவர்கள் ஒரு காணிக்கை எடுத்தார்கள் என்று நினைக்கிறேன். நான் வெளிநாட்டு மிஷனரி ஊழியங்களில் முழு ஈடுபாடு கொண்டவன். நான் அதை என் முழு இருதயத்தோடும் நம்புகிறேன்.

9இப்போது, சகோதரனாகவும் சகோதரி யாகவும் தவிர நமக்கு ஒருவரையொருவர் தெரியாது, நான் இங்கே வரும்போது இன்று மதியம் நினைத்தேன், உண்மையில், 'நீர்க்கால்களிடத்தில் தாகமாயிருத்தல்' (The Thirsting At The Water Brook) என்ற தலைப்பில் பிரசங்கிக்கப் போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் நான்... ஏதோ ஒன்று என் மனதை மாற்றியது, மிஷனரி ஊழியங்களைப் பற்றியும், எனக்குத் தெரிந்தவற்றைப் பற்றியும் உங்களிடம் பேசலாம் என்று நினைத்தேன், வெளிநாட்டு மிஷனரி ஊழியங்களைப் பற்றி நாம் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவது என்று சொல்லக்கூடிய ஒரு பேச்சு. இதைச் செய்வதற்கு முன், அவருடைய வார்த்தையை வாசிப்பதை தேவன் ஆசீர்வதிக்கும்படி நாம் கேட்போம். கர்த்தராகிய தேவனே, இது உமது வார்த்தை, இது உமது ஜனங்கள். இப்போது, அதன் நோக்கம் நிறைவேறும்படி இதை ஆசீர்வதியும். ஏனென்றால், "அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது எதற்காக அனுப்பப்பட்டதோ அதை நிறைவேற்றும்" என்று நீர் சொல்லியிருக்கிறீர். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், வார்த்தையோடு கூட எங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். ஆமென்.

10வார்த்தையும் மிஷனரி ஊழியங்களும் எப்போதும் சரியாக இருப்பதற்கு ஒரு காரணம்... நான் அதை இங்கே வேதாகமத் திலிருந்து வாசிக்க விரும்புகிறேன், நம்முடைய ஆண்டவர் தமது சபைக்குக் கொடுத்த கடைசி கட்டளை, மாற்கு 16-ம் அதிகாரம், 15-ம் வசனத்திலிருந்து தொடங்குகிறது: பின்பு அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்ற வன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையா ளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்த மாவார்கள் என்றார். இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுாரிசத்திலே உட்கார்ந்தார். அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனே கூடக் கிரியை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப் படுத்தினார். ஆமென். எடுத்துக்கொள்ளப்படக்கூடிய மிகச்சிறந்த மிஷனரி வேதப்பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். உங்களுக்குத் தெரியும், நமது வார்த்தையில், தேவன் அல்லது கிறிஸ்து தமது சபைக்குக் கொடுத்த முதல் கட்டளை, "வியாதியுள்ள வர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகி களைச் சுத்தமாக்குங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள், மரித்தோரை எழுப்புங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்." மத்தேயு, 10-ம் அதிகாரம். அவர் தனது சபைக்குக் கொடுத்த கடைசி கட்டளை: "விசுவாசிக்கிறவர்களால் இந்த அடை யாளங்கள் நடக்கும். நீங்கள் எருசலேமுக்கும், உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும், வெள்ளை மனிதன், கறுப்பு மனிதன், பழுப்பு நிற மனிதன், மஞ்சள் நிற மனிதன், சிவப்பு நிற மனிதன் என ஒவ்வொரு சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்." சுவிசேஷம் என்பது நற்செய்தி. "சர்வ சிருஷ்டிக்கும்," அது எவ்வளவு காலம் நீடிக்க வேண்டும்? "உலகத்தின் முடிவுபரியந்தம். நீங்கள் உலகமெங்கும் போய், சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்."

11இப்போது சுவிசேஷம் என்றால் என்ன? "சுவிசேஷம்" (Gospel) என்ற வார்த்தைக்கு "நற்செய்தி" (good news) என்று அர்த்தம். நற்செய்தி என்பது வேதாகமம், ஆனால் வேதாகமம் என்பது எழுத்து. "எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது." எனவே பவுல், "சுவிசேஷம் வார்த்தையினால் மாத்திரமல்ல, பரிசுத்த ஆவியின் வல்லமை யினாலும் வெளிப்படுதலாலும் வந்தது" என்று சொன்னார். இப்போது கவனியுங்கள், சுவிசேஷம் பிரசங்கிக்கப்படக்கூடிய ஒரே வழி, பரிசுத்த ஆவியின் வல்லமையை வெளிப்படுத்துவதுதான். அப்படியானால் அடுத்த மேற்கோள் என்ன? "மேலும் (ஒரு இணைப்புச் சொல்) விசுவாசிக்கி றவர்களால் இந்த அடையாளங்கள் நடக்கும்." இந்த அடையாளங்கள் நடக்கலாம் என்றல்ல, அவை அவர்களைப் பின்தொடர வேண்டும் என்றல்ல, ஆனால் விசுவாசிக்கிறவர்களை அவை பின்தொடரும் (shall follow). அப்படி யானால் கண்டிப்பாகச் சொன்னால், இது நடக்கும் வரை ஒரு மனிதன் தன்னை ஒரு விசுவாசி என்று தகுதிப்படுத்திக்கொள்ள முடியாது. இந்த அடையாளங்கள் அவர்களைப் பின்தொடரும் வரை எந்தச் சபையும் தங்களை விசுவாசிக்கும் சபை என்று அழைத்துக் கொள்ளும் உரிமையைப் பெற முடியாது. அதைத்தான் இயேசு சொன்னார். அது என்ன செய்கிறது? அது வார்த்தையை வெளிப் படுத்துகிறது.

12இப்போது கவனியுங்கள், சில காலத்திற்கு முன்பு ஒரு இளம் பையன் இருந்தான், அவன் தன் அம்மாவிடம், "அம்மா, எனக்கு ஊழியத்திற்கு ஓர் அழைப்பு இருக்கிறது," என்று சொன்னான். எந்த ஒரு உண்மையான அம்மாவும் இருப்பதைப் போலவே, அவளும் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். அவள், "ஓ, என் மகனே, நீ ஊழியத்திற்கு அழைக்கப்பட்டிருந்தால், அதை வெற்றிகரமாக்க என்னால் முடிந்த அனைத் தையும் செய்ய விரும்புகிறேன்," என்று சொன்னாள். எனவே அவள் மதப் பத்திரிகை களைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினாள், தன் இளம் மகனை அனுப்புவதற்குச் சிறந்த மதப் பள்ளியின் (seminary) மிகப் பெரிய பெயரை மதப் பத்திரிகைகளில் கண்டுபிடிக்கும் வரை தேடினாள். அதுதான் தாயின் இதயம். அவள் அதைச் செய்தபோது, அவனைப் பள்ளிக்கு அனுப்புவதற்காக ஒரு சலவை பலகையில் (washboard) துணி துவைத்தாள்.

13எனவே ஒரு நாள், அவள் 'ப்ளூ' (flu) காய்ச்சலால் மிகவும் நோய்வாய்ப்பட்டாள். அது காய்ச்சலிலிருந்து நிமோனியாவாக மாறியது, அவளுடைய இரண்டு நுரையீரல்களிலும் சளி தேங்கிவிட்டது. அவள் சுமார் இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த தன் போதக மகனுக்குத் தந்தி அனுப்பினாள், "தயராக இரு, காலையில் எனக்குக் குணமாகவில்லை என்றால், நீ உன் தாயை உயிருடன் பார்க்க விரும்பினால் உடனே வீட்டுக்கு வர வேண்டும் என்று டாக்டர் சொல்கிறார்," என்று அதில் சொன்னாள். நகரத்தின் ஒதுக்குப்புறத்தில், அவர்கள் ஒரு சிறிய கடையின் முன்புறத்தில், ஒரு சிறிய மிஷனில் ஒரு சிறிய ஜெபக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அங்கே, அந்தச் சிறிய மிஷனில் அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருந்தபோது, அவர்களில் சிலருக்கு ஒரு பெண் நோய்வாய்ப்பட்டிருப்பதாகக் கர்த்தரிட மிருந்து ஒரு வெளிப்பாடு கிடைத்தது. ஒரு பெண்மணி மேலே வந்து, அவள் கதவைத் தட்டினாள், "அம்மா, நாங்கள் ஜெபக் கூட்டத்தில் இருந்தபோது, இந்த வீட்டில் யாரோ நோய்வாய்ப்பட்டிருப்பதாகப் பரிசுத்த ஆவியானவர் எங்களிடம் சொன்னார். அது உண்மையாக இருந்தால், எங்கள் போதகர் வந்து உங்களுக்காக ஜெபித்தால் நீங்கள் விரும்பு வீர்களா என்று கேட்கிறேன்," என்று சொன்னாள். அதற்கு அவள், "தாராளமாக வரலாம், அன்பே. தன்னால் இனி எதுவும் செய்ய முடியாது என்று டாக்டர் சொல்லிவிட்டார்," என்றாள்.

14எனவே அவர்கள் சென்று போதகரை அழைத்துக்கொண்டு மேலே வந்தார்கள். அவர் அந்தப் பெண்ணை எண்ணெயினால் அபிஷேகம் செய்து, யாக்கோபு 5:14-ஐ வாசித்தார். அவளை எண்ணெயினால் அபிஷேகம் செய்து, பிறகு அவர் அபிஷேகம் பற்றிய வேதவசனத்தை வாசித்து முடித்ததும், நான் இப்போது படித்த மாற்கு 16-க்குத் திரும்பினார். அவர் அதை அவளுக்கு வாசித்தார், "விசுவாசிக்கிறவர்களால் இந்த அடையாளங்கள் நடக்கும், வியாதியஸ் தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்." அந்த உண்மை யுள்ள, சிறிய மிஷன் போதகர் அந்தப் பெண்ணின் மேல் தன் கைகளை வைத்து, அந்த நோயை அவளுடைய சரீரத்தை விட்டு வெளியேறும்படி கட்டளையிட்டார், ஏனென் றால் தேவன் அந்தக் கட்டளையைக் கொடுத் திருந்தார். மறுநாள் காலையில், அவள் எழுந்து தனது காலை உணவைச் சமைத்துக் கொண்டிருந்தாள்.

15சுமார் ஒரு வருடம் கழித்து, அவள் மகன் வீட்டுக்கு வந்தான். அவனது அன்பான தாயை வாழ்த்திய பிறகு, அவன் அம்மாவிடம், "என் இதயத்தில் ஒரு விஷயம் இருக்கிறது. நான் உன்னிடம் ஒன்றைக் கேட்க வேண்டும். நீ எனக்கு அந்தத் தந்தியை அனுப்பி, 'தயராக இரு,' அடுத்த நாள் காலையில் குணமாகவில்லை என்றால் நிமோனியாவால் இறக்கப் போகிறேன் என்று சொன்னாய், நான் உன்னிடமிருந்து சுமார் ஒரு வாரம் எந்தச் செய்தியும் கேட்கவில்லை, பிறகு நீ நன்றாக இருக்கிறாய் என்று எனக்கு ஒரு அன்பான கடிதம் வந்தது. டாக்டர் உனக்கு என்ன மருந்து கொடுத்தார் என்று எனக்குச் சொல்?" என்றான். "ஏன், அவர் எனக்கு எதுவும் கொடுக்க வில்லை," என்றாள். "அவர் என்னை ஒரு ஆக்ஸிஜன் கூடாரத்தின் கீழ் வைக்கப் போனார், அவர் மறுநாள் காலையில் திரும்பி வந்தபோது, கர்த்தர் என்னைக் குணமாக்கியிருந்தார்," என்றாள். "ஓ," என்றான் அவன், "அம்மா." "ஆம்," என்றாள், "மகனே, அங்கே சந்துக்கு மூலையில், அந்தச் சிறிய மிஷன் இருக்கிறதே, அந்தச் சிறிய பெந்தெகொஸ்தே மிஷன் உனக்குத் தெரியுமா?" "ஆம்," என்றான். "அவர்கள் இங்கே மேலே வந்து, எனக்காக வேதாகமத்திலிருந்து வாசித்துக் காட்டினார்கள், அதாவது மக்கள் வியாதியஸ்தருக்காக ஜெபித்து அவர்கள்மேல் கைகளை வைக்க வேண்டும் என்றும், அவர்கள் குணமாகுவார்கள் என்றும் வாசித்தார்கள்." "உனக்குத் தெரியுமா அந்தப் போதகர் எனக்காக ஜெபித்தார், மறுநாள் காலையில் நான் முற்றிலும் குணமாகி விட்டேன்," என்று சொன்னாள். அதற்கு அவன், "இப்போது, பார் அம்மா," என்றான், "அது மிகவும் நல்லது." அவன், "ஆனால் அது உன்னைக் குணமாக்கியிருக்க முடியாது," என்றான். "தேவன் இனிமேல் அதுபோலக் குணமாக்குவதில்லை," என்றான். "ஓ," என்றாள் அவள், "மகனே, அதை என்னிடம் சொல்ல நீ ரொம்பத் தாமதமாகி விட்டாய். அவர் அதை ஏற்கனவே செய்து விட்டார்." "ஓ," என்றான் அவன், "அம்மா," "அது கடந்த காலத்தில் இருந்தது," என்றான். "ஓ," என்றாள் அவள், "மகனே, அந்தப் போதகர் எனக்கு வேதாகமத்திலிருந்து சில வேதவசனங்களை வாசித்தார்." "அம்மா, அவர் மாற்கு 16-லிருந்து வாசிக்கவில்லையா?" என்றான். "ஆம், அதிலிருந்துதான் அவர் வாசித்தார்," என்றாள். "ஓ," என்றான் அவன், "நான் உனக்குச் சொல்கிறேன் அம்மா, கீழே செமினரியில், மாற்கு 16-ல் 9-ம் வசனத்திலிருந்து உள்ளவை தேவ ஆவியால் அருளப்படவில்லை என்று நாங்கள் கற்றுக்கொண்டோம்," என்றான். அந்தத் தாய், "சரி, அல்லேலூயா," என்றாள். "ஓ," என்றான் அவன், "அம்மா, நீ அந்த மிஷன் கூட்டத்தைப் போலவே நடந்து கொள்ள ஆரம்பிக்கிறாய்." "நீ அப்படி நடந்துகொள்ளக் கூடாது," என்றான். அவள் சொன்னாள், "சரி, மகனே, நான் ஒன்றை யோசித்துக் கொண்டிருந்தேன்." "மாற்கு 16-ல் 9-ம் வசனத்திலிருந்து உள்ள வேதம் தேவ ஆவியால் அருளப்படவில்லை என்று நீ எனக்குச் சொல்ல வருகிறாயா?" என்றாள். "அது சரிதான்," என்றான். அவள், "சரி, தேவனுக்கு மகிமை," என்றாள். "அம்மா, உனக்கு என்ன ஆயிற்று?" என்றான். "தேவ ஆவியால் அருளப்படாத வேத வசனத்தைக் கொண்டே தேவன் என்னைக் குணமாக்க முடிந்ததென்றால், அது உண்மை யிலேயே தேவ ஆவியால் அருளப்பட்டிருந்தால் அவரால் என்ன செய்ய முடியும் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்," என்றாள்.

16ஓ, அது மகிமையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது எல்லாமே தேவ ஆவியால் அருளப்பட்டதுதான். தேவனுடைய சவாலைச் சந்திக்க நம் விசுவாசத்தை வெளியே கொண்டுவர நாம் பயப்படுகிறோம். அவ்வளவு தான். இதில், விசுவாசிக்கிறவர்களால் இந்த அடையாளங்கள் நடக்கும், உலகத்தின் முடிவு பரியந்தம், அப்போஸ்தலர்களுக்கு மட்டுமல்ல, உலகத்தின் முடிவுபரியந்தம். ஒரு உலகம் இருக்கும் வரை, மற்றும் பிரசங்கிக்கப்பட வேண்டிய ஜனங்கள் இருக்கும் வரை, விசுவாசிக்கிறவர்களால் இந்த அடையாளங்கள் நடக்கும். வெகு காலத்திற்கு முன்பு அல்ல, இங்கே அமர்ந்திருக்கும் ஒரு நண்பரிடம், அவர் இந்த மனிதரின் நண்பர், அவருடைய பெயர் பாரிஸ் ரீட்ஹெட் (Paris Reidhead). அவர் இன்று மதியம் இந்தக் கட்டிடத்தில் இருக்கலாம். அவர் என் வீட்டுக்கு வந்தார், அவர் என்னிடம் இதைப் பற்றிக் கேட்க விரும்பினார். அவரை யாருக்காவது தெரிந்திருந்தால், உங்களில் அநேகருக்கு பாரிஸ் ரீட்ஹெட் தெரிந்தி ருக்கலாம். அவர் பெரிய சூடான் மிஷனின் தலைவர், உலகின் மிகப்பெரிய மிஷன்களில் ஒன்று. அவர், "திரு. பிரான்ஹாம்," என்றார், "நான் சிறு பையனாக இருந்தபோதே எனக்குத் தேவனிடமிருந்து ஓர் அழைப்பு இருந்தது." "என் நம்பிக்கைக்குரிய, வயதான தாய் என்னைப் பள்ளிக்கு அனுப்பினாள்," என்றார், "தேவனுக் காகச் சிறந்த பிரசங்கியாராக என்னை உருவாக்க." "நான் என்னுடைய டாக்டர் பட்டம் பெற்றபோது, நான் கிறிஸ்துவைக் கண்டு பிடிப்பேன் என்று நினைத்தேன்." "நான் கண்டு பிடிக்கவில்லை," என்றார். "நான் என்னுடைய இளங்கலைப் பட்டம் பெற்றபோது, நான் கிறிஸ்துவைக் கண்டுபிடிப்பேன் என்று நினைத்தேன்." இப்படியே போய்க் கொண்டி ருந்தது. "பிரசங்கியாரே, உங்கள் சுவரில் ஒட்டு வதற்குப் போதுமான பட்டங்கள் என்னிடம் உள்ளன," என்றார். அவர் சொன்னார், "அதெல்லாவற்றிலும் கிறிஸ்து எங்கே?" நான் சொன்னேன்... "ஆசிரியர்கள் தவறாக இருந்துவிட்டார்களா?" என்றார். நான் சொன்னேன், "அவர்கள் தவறு என்று நான் சொல்ல விரும்பவில்லை. அந்தப் பட்டங்கள் எல்லாம் சரிதான், ஆனால் அது இன்னும் கிறிஸ்து அல்ல. அது வெறும் ஒரு பட்டம் தான்."

17மற்றும் அவர் என்னிடம் ஒரு இந்தியப் பையனின் கதையைச் சொன்னார், அவன் தன் கல்விக்காக இங்கே வந்திருந்தான். அவன் திரும்பிச் செல்லும் வழியில் திரு. ரீட்ஹெட் வெளியே போய்க்கொண்டிருந்தபோது அவரைச் சந்தித்தான். அவர், "இப்போது, நீ உன் கல்வியைப் பெற்றுவிட்டாய், மகனே. நீ ஒரு ஊழியராக மாற உன் சொந்த நாடான இந்தியாவுக்குத் திரும்பும் வழியில் இருக்கிறாய்," என்றார். "நீ ஒரு முகமதியன் என்று எனக்குப் புரிகிறது," என்றார். "நான் முகமதியன்தான்," என்றான் அவன். அவர், "அப்படியானால் அந்தப் பழைய மரித்துப்போன தீர்க்கதரிசியைக் கைவிட்டு, ஏன் ஜீவனுள்ள இயேசுவை உன்னுடன் அழைத்துச் செல்லக்கூடாது, மரித்தோரிலிருந்து உயிர்த் தெழுந்த ஒருவரை?" என்றார். இந்த இந்தியப் பையன் சகோதரர் ரீட்ஹெட் எதிர்பார்த்ததை விடச் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தான். அவன் தன் காலால் தரையை ஒரு கணம் உதைத்துவிட்டு, 'ஐயா," (இப்போது கேளுங்கள்!) "உங்கள் இயேசுவால் எனக்கு என்ன செய்ய முடியும், என் தீர்க்கதரிசியால் செய்ய முடியாத எதை அவர் செய்வார்?" என்றான். அவன் சொன்னான், "அவர்கள் இருவரும் புத்தகங்களை எழுதினார்கள், நீங்கள் உங்களுடையதை பைபிள் என்கிறீர்கள், நாங்கள் எங்களுடையதை குர்ஆன் என்கிறோம். இருவரும் வாக்குறுதிகளை அளித்தார்கள், நாங்கள் அந்த வாக்குறுதியை நம்புகிறோம்." அவன் சொன்னான், "எப்படியிருந்தாலும், முகமது மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை மட்டுமே வாக்களித்தார். நான் அதை நம்புகிறேன். இயேசு மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை வாக்களித்தார், நீங்கள் அதை நம்புகிறீர்கள்." எனவே அவன், "அவர்களுக் கிடையில் என்ன வித்தியாசம்?" என்றான்.

18இப்போது, மெத்தடிஸ்ட் அல்லது பாப்டிஸ்ட் உடன், அல்லது பெந்தெகொஸ்தே அல்லது நசரேன் உடன் அவர்களின் மதத்தைப் பற்றி நீங்கள் வாதிடலாம் என்பதால், இதை ஒருபோதும் நினைக்காதீர்கள், ஆனால் நீங்கள் அந்த வெளிநாட்டுக் களத்தை ஒருபோதும் சந்தித்ததில்லை. அவர்கள் எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று அவர்களுக்கு அதிகம் தெரியும். வேண்டாம்... ஒரு மந்திரவாதி உங்களுக்குச் சவால் விடுவான் என்று நீங்கள் நினைக்கவில்லையா? ஒரே ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். நீங்களும் எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று தெரிந்து வைத்திருப்பது நல்லது. அவர்களால் பல தந்திரங்களையும் அதிசயங்களையும் செய்ய முடியும், அது உங்கள் தலையைச் சுற்ற வைக்கும். இந்த மனிதர் சொன்னார், "சரி இப்போது, ஒரு நிமிடம் இருங்கள்." "உங்கள் தீர்க்கதரிசி இறந்து கல்லறையில் இருக்கிறார், ஆனால் எங்கள் இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த் தெழுந்தார்," என்றார். "திரு. ரீட்ஹெட், அதைத்தான் நீங்கள் நம்புகிறீர்கள்," என்றான் அவன். அவன், "ஆனால் நாங்கள் அதை நம்பவில்லை," என்றான். "உங்கள் இயேசுவும் எங்கள் தீர்க்கதரிசியைப் போலவே இறந்துவிட்டார் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றான். அவர், "ஆனால் அவருடைய உயிர்த் தெழுதலின் ஆதாரம் எங்களிடம் இருக்கிறது," என்றார் திரு. ரீட்ஹெட். அவன், "சரி, உங்கள் ஆதாரம் என்ன?" என்றான். அவர், "அவர் ஜீவிக்கிறார்!" என்றார். "அவர் எங்கே இருக்கிறார்?" என்றான். "என் இதயத்தில்," என்றார் அவர். அதற்கு அந்த முகமதியன், "இயேசு உங்கள் இதயத்தில் இருப்பதைப் போலவே, முகமதுவும் என் இதயத்தில் இருக்கிறார்," என்றான். அவர், "ஆனால் ஐயா, அதையறிவதினால் எங்களுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் இருக்கிறது," என்றார். அவன், "இப்போது, ஒரு நிமிடம் இருங்கள், திரு. ரீட்ஹெட். கிறிஸ்தவம் உருவாக்கக்கூடிய அதே அளவு உளவியலை (psychology) முகமதிய மதமும் உருவாக்க முடியும்," என்றான். சகோதரர் ரீட்ஹெட் சொன்னார், "தான் சந்தித்தது ஒரு சாதாரண மனிதனை அல்ல என்று தனக்குத் தெரியும். அவன் எதைப் பற்றிப் பேசுகிறான் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது." அவன் சொன்னான், "அதுமட்டுமல்லாமல், திரு. ரீட்ஹெட், எங்கள் முகமது மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைத் தவிர வேறெந்த ஒரு விஷயத்தையும் வாக்களிக்கவில்லை. உங்கள் இயேசு, தாம் செய்த அதே அடையாளங்களை உங்கள் போதகர்களும் செய்வார்கள் என்று வாக்களித்தார், மேலும் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தால், அவர் உங்களுடன் இருப்பார், உங்களுக்குள் வாழ்வார், தாம் செய்த அதே காரியங்களைச் செய்வார் என்று வாக்களித்தார்." "அது நடப்பதைப் பார்க்க நாங்கள் காத்திருக்கிறோம். அப்போது அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று நாங்கள் நம்புவோம்," என்றான்.

19அமெரிக்காவில் உள்ள தொண்ணூறு சதவீத கிறிஸ்தவர்களை விட அவர்களுக்கு இதைப் பற்றி அதிகம் தெரியும். புரிகிறதா? நீங்கள் செல்லும்போது... அதனால்தான் நான் இன்று மதியத்தை இதற்காக எடுத்துக் கொண்டேன். நீங்கள் உண்மைகளைப் பேசப் போகிறீர்கள் என்றால், அது சும்மா குதிப்பதும் ஓடுவதும் அல்ல. நான் முகமதியர்களைப் பார்த்திருக்கிறேன், தீர்க்கதரிசிகளின் பண்டிகை யில், ஒரு ஈட்டியை எடுத்துத் தங்கள் தாடை வழியாகச் செலுத்தி மூக்கு வழியாக மேலே கொண்டு வருவார்கள், "அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹ்," என்று கத்துவார்கள், அதைத் திரும்ப வெளியே இழுப்பார்கள், அதிலிருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராது. அவர்கள் தரையில் அமர்ந்து, முன்னும் பின்னுமாக அசைந்தாடி, "அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹ்," என்று கத்துவதையும், எழுந்து, சிலாம்புகளை எடுத்து, தங்கள் விரல் நகங்களுக்கு அடியில் செலுத்தி, அவற்றைத் திரும்ப வெளியே இழுப்பதையும், முகம் சுளிக்காமல் இருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் ஒருவரைப் பார்த்தேன், அவர் ஒரு வெறித்தனமான நிலைக்குச் சென்றார், ஒரு வாளை எடுத்து, இங்கே வைத்து, அதை உள்ளே செலுத்தி முதுகு வழியாக வெளியே கொண்டு வந்தார். ஒரு மருத்துவர் அதைச் சந்தேகித்தார், அவர் அவனை மேடைக்கு வரும்படி சவால் விடுத்தார், "அந்த வாள் உள்ளே ஒன்றுமில்லாதது (hollow)," என்றார். இந்த முனையில் தண்ணீரை ஊற்றினார், அது அவனது பின்பக்கமாக வெளியே ஊற்றியது. அதை வெளியே இழுத்துவிட்டு, சிரித்துக்கொண்டே நடந்து சென்றான். அது எங்கே இருக்கிறது என்றால், உங்கள் இரத்தம் அதுபோன்ற ஒரு நிலையில் இருக்கிறது... அதுபோன்ற உளவியல்...

20ஆனால் அவன் சொன்னான், "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான் என்று உங்கள் இயேசு சொன்னார்." திரு. ரீட்ஹெட், "நீங்கள் அநேகமாக மாற்கு 16-ஐ படித்திருப்பீர்கள்?" என்றார். "அது ஒரு இடம்," என்றான் அவன். இவர், "சரி, மாற்கு 16 முழுவதும் தேவ ஆவியால் அருளப்படவில்லை," என்றார். அவன், "நீங்கள் என்ன விதமான புத்தகத்தை வாசிக்கிறீர்கள்?" என்றான். "குர்ஆன் முழுவதும் தேவ ஆவியால் அருளப்பட்டது. கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் நீங்கள், 'இந்த வார்த்தைக்கு இது அர்த்தம், அந்த வார்த்தைக்கு அது அர்த்தம் மற்றும்...' என்று சொல்வதைக் கேட்க எனக்கு அருவருப்பாக இருக்கிறது," என்றான். "நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்று உங்களுக்கே தெரியவில்லை." அவன் சொன்னது சரியா தவறா? நிச்சயமாக அவன் சொன்னது சரிதான். "நீங்கள்... நீங்கள் அதன் ஒரு பகுதியை எடுத்துக்கொள்கிறீர்கள், உங்கள் சொந்தக் கோட் பாடுகளுக்குப் பொருந்தும்படி அதை மாற்றிக் கொள்கிறீர்கள்," என்றான். ஒரு அந்நியன், ஒரு கிறிஸ்தவனிடம் சொல்கிறான். மேலும் அவன், "கிறிஸ்து உங்களுக்குள் வாழ்வதை நாங்கள் காணக்கூடிய ஒரு இடத்திற்கு நீங்கள், கிறிஸ்தவர்கள் வரும்போது, அவர் மரித்தோரி லிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை நாங்கள் நம்புவோம்," என்றான். திரு. ரீட்ஹெட், "நான் விரக்தியில் மண்ணை உதைத்துவிட்டுப் பேச்சை மாற்றினேன்," என்றார். அது என்ன? ஒரு தோல்வியுற்ற கிறிஸ்தவன்.

21அவர் சொன்னார், "சகோதரர் பிரான்ஹாம், இன்று நான் இதைக் கேட்ப தற்காக இங்கே இருக்கிறேன்." அவர் சொன்னார், "பெந்தெகொஸ்தேகாரர்கள் தரையில் நாற்காலிகளை உதைப்பதையும், மேஜை நாற்கா லிகளை உடைப்பதையும் நான் பார்த்திருக் கிறேன், ஆனால் அவர்களிடம் ஏதேனும் இருக்கிறதா?" ரீட்ஹெட் என்னைப் போலவே ஒரு பாப்டிஸ்டாக இருந்தார். நான், "ஆம், சகோதரர் ரீட்ஹெட், அவர்களிடம் இருக்கிறது," என்றேன். அவர், "அவர்களிடம் பரிசுத்த ஆவி இருக்கிறதா?" என்றார். நான், "ஆம், ஐயா," என்றேன். அவர், "சரி, நாங்களும் பாப்டிஸ்டுகள் வைத்திருக்கிறோம்," என்றார். நான், "நீங்கள் பெற்றிருந்தால், நீங்கள் விசுவாசித்த பிறகுதான் அதைப் பெற்றி ருப்பீர்கள், நீங்கள் விசுவாசிக்கும்போது அல்ல," என்றேன். நீங்கள் விசுவாசிக்கும்போது அதைப் பெறுவீர்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். பவுல் அப்போஸ்தலர் 19-ல், "நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?" என்று கேட்டார். நான் சொன்னேன், "ஆவிக்குரிய வெப்ப மானி நாற்பது டிகிரிக்கும் கீழே செல்லும் அளவுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் ஒரு பழைய சபையில் உட்கார்ந்திருப்பதை விட, கொஞ்சம் காட்டுத் தீயையும் (wild fire) மேஜை நாற்காலிகளை உதைத்துத் தள்ளுவதையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியும். நெருப்பே இல்லாததை விடக் கொஞ்சம் காட்டுத் தீயையே நான் விரும்புகிறேன்."

22மற்றும் நாம் பாப்டிஸ்டுகள் நெருப்பை வரைந்து கொண்டு (painting fire) மட்டுமே இருக்கிறோம். குளிரில் உறைந்து கொண்டி ருக்கும் ஒரு மனிதனிடம், "பார், அந்தப் பெரிய அழகான படத்தை? அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எரிந்த ஒரு பெரிய நெருப்பு. போய், அதில் குளிர் காய்ந்து கொள்," என்று சொல்வதில் என்ன பயன்? வரையப்பட்ட நெருப்பு அனல் மூட்டாது. நமக்குத் தேவையானது அதே பரிசுத்த ஆவியும் நெருப்பும் பற்றிய ஒரு அனுபவம், அது இதயத்தை அனல் மூட்டுகிறது, மற்றும் வார்த்தையை நிறைவேற்றுகிறது, பின்னர் காரியங்களைச் செய்கிறது, ஏனென்றால் அந்த அதே ஆவியானவர் இன்று அது எப்போதாவது கொண்டிருந்த அதே வல்லமையுடனும் அபிஷேகத்துடனும் வாழ்கிறார். நாம் எங்கே ஒரு பெரிய தவறு செய்திருக்கிறோம் என்றால் இந்தக் கட்டளை யைப் பின்பற்றாததுதான். "உலகமெங்கும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள், அல்லது ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொரு மக்க ளுக்கும் பரிசுத்த ஆவியின் வல்லமையை நிரூபித்துக் காட்டுங்கள்." நாம் என்ன செய்திருக்கிறோம்? நாம் சென்று பள்ளிக் கூடங்களைக் கட்டினோம், மக்களை ஒன்றாகச் சேர்த்து அமைப்பாக்கினோம், அவர்களை, "சரி, அவர்கள் நம்மைப் போலவே நம்புவதில்லை, அவர்களுடன் பழகாதீர்கள். அவர்களின் சபைகளின் பக்கமே செல்லாதீர்கள்," என்று ஆக்கினோம். எங்களிடம் பெரிய பள்ளிக்கூடங்கள் இருந்தன, நாங்கள் மக்களுக்குக் கல்வி கற்பிக்க முயன்றோம். கல்வியின் மூலம் நீங்கள் ஒருபோதும் கிறிஸ்துவுக்கு நெருக்கமாக வர முடியாது. ஏதேனும் நடந்தால், நீங்கள் அவரிடமிருந்து வெகு தொலைவில் செல்வீர்கள். நான் இதைச் சொல்லவில்லை... நான் ஒரு பள்ளிக்கூடத்தில் இருக்கிறேன், ஆனால் இங்கே இருப்பதை நான் பாராட்டுகிறேன், மேலும் என் அறியாமையை ஆதரிக்க நான் ஊன்று கோல்களைப் பயன்படுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய கடன், கள்ளச்சாராயக் கடைகள் அல்ல, அது பள்ளிக்கூடங்கள்தான். அதைச் சொல்வது கடினம்தான், ஆனால் அது உண்மையல்லவா என்று வரலாற்றைத் தேடிப் பாருங்கள்.

23FBI-ன் தலைவரான கேப்டன் அல் ஃபாரர் (Al Farrar), என்னை அவரது இடத்திற்கு அழைத்தார், அவர் ஒரு பாப்டிஸ்ட், அவர், "சகோதரர் பிரான்ஹாம், நான் ஒரு பாப்டிஸ்ட், ஆனால் நீங்கள் எதைப் பற்றிப் பேசுகிறீர்களோ அது என்னிடம் இல்லை," என்றார். நாங்கள் அவருடைய துப்பாக்கி சுடும் இடத்தில் இருந்தோம். அவர், "உங்கள் பேச்சை நான் பாராட்டுகிறேன்," என்றார். "நானும் இதே போன்ற-அதே கருத்தைச் சொல்கிறேன்," என்றார். அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு இளம் குற்றவாளியும் எங்கே இருக்கிறார்கள் என்பதைக் காட்ட அவர் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்களை, மிகவும் தவறிழைக்கிறவர்களை நாம் எங்கே காண்கி றோம்? குற்றவாளிகள் எங்கிருந்து வருகி றார்கள்? ஏழை மக்களிடமிருந்து அல்ல, புத்திசாலிகள் மற்றும் படித்தவர்களிடமிருந்தே வருகிறார்கள். அவர்கள் தேவனை விடத் தங்களுக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கிறார்கள். நீங்கள் அந்த இடத்திற்கு வரும்போது, நீங்கள் தொலைந்து போனீர்கள்! தேவன் கல்வியிலிருந்து வருவதில்லை, தேவன் ஒரு கொள்கையை ஏற்றுக்கொள்வதிலிருந்து வருகிறார், அது அவருடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசு, மற்றும் மறுபடியும் பிறப்பதாகும். நித்திய ஜீவனின் ஆவி ஒரு மனிதனுக்குள் வருவது, அவனுக்குக் கல்வி கற்பிப்பதன் மூலம் அல்ல, ஆனால் அவன் கர்த்தராகிய இயேசுவைத் தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வதன் மூலமே வருகிறது. ஆனால் நாங்கள் போய் மக்களுக்கு அதைக் கல்வி மூலம் கற்பிக்க முயன்றோம். பலிபீடத்தில் வைத்து அவர்களுக்குள் அதை உலுக்கிவிட முயன்றோம், நாம் பரிசுத்தவான்களும் பெந்தெகொஸ்தேக்காரர்களும். தெளித்தல், ஊற்றுதல், தலைகீழாக, மற்றும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, இயேசுவின் நாமம், இன்னும் பலவிதமான முறைகளில் ஞானஸ்நானம் கொடுத்து அவர்களை உள்ளே கொண்டுவர முயன்றோம். ஆனால் அது அந்த வழியில் வருவதில்லை, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையை உங்கள் இதயத்தில் காண்பது ஒரு தனிப்பட்ட நபரின் அனுபவமாகும். அதுதான் முற்றிலும் சரி. அங்கேதான் நாம் தவறிவிடுகிறோம்.

24இந்த இந்தியர் மோரிஸ் ரீட்ஹெட்டிடம், அல்லது, பாரிஸ் ரீட்ஹெட்டிடம் கூறினார், அவர் சொன்னார், "ஐயா, இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை நிரூபிக்க உங்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் இருந்தன," மேலும் அவர் சொன்னார், "உலகில் மூன்றில் இரண்டு பங்கினர் அவர் பெயரை ஒருபோதும் கேள்விப்பட்டதே இல்லை." ஆனால் இங்கே நாம் வாதிடுகிறோம், "ஏன், நாங்கள் பிரஸ்பிடீரியன். நாங்கள் பாப்டிஸ்ட். நாங்கள் பெந்தெகொஸ்தே. நாங்கள் நசரேன்." இங்கே நின்று கொண்டு வாதாடுகிறோம், ஆனால் ஆப்பிரிக்காவில் உள்ள அந்தச் சிறிய, கறுப்பு சிறுவர்கள் அந்தக் கதையை ஒரு முறையாவது, எப்படியாவது கேட்கத் துடிக்கிறார்கள். ஓ, இது உங்கள் இருதயத்தை சுடுகிறது! ஒரு மனிதன் மிஷனரி களங்களுக்குச் சென்றுவிட்டு, திரும்பி வரும்போது அதே மனிதனாக இருக்கவே முடியாது. நான் அங்கு சென்றபோது, நினைத்தேன், "சரி, நான் சும்மா இங்கே போய் சில விலங்குகளை...," ஆனால் நான் மனிதர்களின் ஆத்துமாக்களைக் கண்டபோது, சிறிய, கறுப்பு சிறுவர்கள் அவ்வளவு அழுக்காகவும், தங்கள் வாழ்நாளில் ஒருமுறை கூட குளித்திராதவர்களாகவும், முழுவதும் புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கும் ஒரு பழைய இறைச்சித் துண்டை எடுத்து, அதை அப்படியே உண்பதையும், அவர்கள் அங்கே நிர்வாணமாய் கிடப்பதையும் கண்டேன்!

25இதை இங்கே உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும் மரியாதையுடன் சொல்ல விரும்புகிறேன். ஆனால் அந்த அஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் கூட்டத்திற்குள் வந்தபோது, அவர்கள் இந்த உலகத்திற்குள் வந்ததைப் போலவே நிர்வாணமாக இருந்தார்கள், அவர்களுக்கு முன்பாகத் தொங்கிக்கொண்டிருந்த சுமார் ஆறு, எட்டு அங்குலச் சதுரமான ஒரு சிறிய துணியைத் தவிர வேறொன்றுமில்லை. அங்கே அறியாத அந்த ஸ்திரீகளுக்கு, எது வலது கை, எது இடது கை என்றுகூடத் தெரியாது, அவர்கள் தலைமுடியில் சேறும், காதுகளில் எலும்புகளும் இருந்தன, ஆனால் அவர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலின் வல்லமையைக் கண்டபோது, அந்தப் பெண்கள் அங்கிருந்து நடந்து சென்றபோது, இளம் பெண்களும் வயதான பெண்களும், ஆடைகளை அணிந்துகொள்ளும்படி யாரும் அவர்களுக்குச் சொல்லவில்லை. ஆண்களின் முன்னிலை யிலிருந்து விலக அவர்கள் தங்கள் கைகளை இப்படி மடக்கிக் கொண்டார்கள். ஆனால், வணங்காக் கழுத்துள்ள, விறைப்பான அமெரிக் கர்களாகிய நாம், நம்மை எப்படிக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ள முடியும், ஒவ்வொரு ஆண்டும் நாம் அதிகமான ஆடைகளைக் களைந்து கொண்டிருக்கிறோம். ஓர் அஞ்ஞானி கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது, அவன் தன்னை அலங்கரித்துக்கொண்டு ஆடைகளை அணிகிறான். என்ன நடந்தது? அங்கே நின்றுகொண்டிருந்த இளம் பெண்கள், வாழ்க்கையின் மலரும் பருவத்தில், நிர்வாணமாக இருந்தார்கள், அது அவர்களுக்குத் தெரியாது. தங்கள் கைகளைப் பார்ப்பதை விட அது அவர்களுக்கு எந்த அவமானத்தையும் தரவில்லை. பதினாறு, பதினெட்டு, இருபது வயதுடைய இளம் பெண்கள், குழந்தைகளுடன் பாலூட்டிக்கொண்டிருக்கும் தாய்மார்கள்... நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து இருபது அடி தூரத்திற்குள், நான் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு தாய் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். மற்றொரு பெண்மணி அதற்கு உதவினாள், அவள் அந்தக் குழந்தையைத் தூக்கிப் பாலூட்டத் தொடங்கினாள், நான் பிரசங்கிப்பதைக் கேட்டுக்கொண்டே இருந்தாள். முழுமையாக வளர்ச்சியடைந்த பெண்களாக அங்கே நின்றுகொண்டிருந்த அந்த இளம் பெண்கள், பரிசுத்த ஆவியானவர் வந்தபோது, அவர் அவர்களைத் தொட்டவுடனே, அவர்கள் தங்கள் கைகளால் தங்களை மூடிக் கொண்டார்கள். பரிசுத்த ஆவியானவர் நிர்வாணம் குறித்த உணர்வைக் கொண்டு வருகிறார்.

26அதன் பிறகு, தங்களைப் பெந்தெ கொஸ்தே என்று அழைத்துக்கொள்ளும் நீங்கள், மேலும் நன்கு அறிந்திருக்க வேண்டிய பெண்களாகிய நீங்கள், இந்தக் குளியல் உடைகளிலும் (bathing suits), வீட்டின் பின்புறத்தில் சிறிய பழைய அரைக்கால் சட்டை களிலும் (shorts) உங்களை அப்பட்டமாக்கிக் கொள்கிறீர்கள், அதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும். அதுதான் முற்றிலும் சரி. நாகரிகம், பின்னோக்கி ஊசலாடுகிறது. சகோதரர்களே, சகோதரிகளே, நான் இதை-கடுமையாகவோ அல்லது முரட்டுத்தனமாகவோ இருப்பதற்காகச் சொல்லவில்லை, மாறாக, இது சுவிசேஷ சத்தியமாக இருப்பதால் நான் இதைச் சொல்கிறேன். அங்கே மக்கள் மனவிருப் பத்துடன் இருக்கிறார்கள், ஆனால் நாம் நமது முயற்சிகளை இங்கே மாநிலங்களில் (அமெரிக்காவில்) போடுகிறோம். டர்பனில் (Durban) நடந்த அந்த மதிய வேளையில், மேடையில், ஒரு தரிசனத்தின்படி இன்னும் சில நாட்களில் நான் அங்குத் திரும்பப் போகிறேன், அங்கே மக்களுக்கு ஜெப அட்டைகளை (prayer cards) விநியோகிக்க வழியில்லை. பில்லியும் இன்னும் இரண்டு ஆண்களும் ஜெப அட்டைகளைக் கொடுக்க முயன்றதில், பில்லி தன் கோட் மற்றும் காலணிகள் மற்றும் எல்லாவற்றையும் இழந்தான். நான், "மிஷனரிகளை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் சுமார் நான்கு அல்லது ஐந்து பேரை மட்டும் வரச் சொல்லுங்கள்," என்றேன். அங்கே பதினைந்து விதமான மொழிகள் இருந்தன. இப்போது, நான் பிரசங்கிக்க முயற்சிப்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம், நான், "இயேசு கிறிஸ்து, தேவனுடைய குமாரன்," என்று சொல்லும் போது, இவன் தன் தொண்டையில், "க்ளங்" என்று ஒரு சத்தம் எழுப்புவான்: "க்ளங், க்ளங், க்ளங், க்ளங்." அதற்கு, "இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்" என்று அர்த்தம். மற்றொருவன் ஒரு பறவையைப் போலச் சீட்டி அடிப்பது போன்ற ஒரு சத்தத்தை எழுப்புவான், அதற்கு இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று அர்த்தம். அடுத்த மொழிபெயர்ப்பாளர், ஒருவேளை, அவர் தன் தொண்டை அல்லது நாவினால் ஏதோ ஒரு விதமான நடுக்க ஒலியை (warble) எழுப்புவார்.

27உங்களுக்குத் தெரியும், பெந்தெகொஸ்தே கூட்டங்களில் மக்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன், அதை நான் நம்புகிறேன் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன். ஆனால் மக்கள் அந்த வரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் (நிச்சய மாக), அது சரியான இடத்தில் வைக்கப் படவில்லை. தேவன் கொடுத்த ஒவ்வொரு வரமும் சபைக்கானது என்று நான் நம்புகிறேன், ஆனால் நாம் ஒன்றின்மேல் மட்டும் பைத்தியமாகப் போய்விட முடியாது. இன்னும் இருக்கிறது. மேலும் ஒன்று மற்றொன்றிலிருந்து மிகவும் வித்தியாசமாக ஒலிப்பதால், அது எப்படி ஒன்றாக இருக்க முடியும் என்று நான் நினைப்பது வழக்கம்? ஆனால் வேதாகமம் சொல்கிறது, "உலகத்திலே அநேகவிதமான பாஷைகள் உண்டு, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல." நான் அதைக் கேட்டபோது அதை நம்பினேன். எல்லா விதமான வெவ்வேறான பேச்சுக்கள், அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் இருந்தது. ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு அர்த்தம் உண்டு.

28அன்றைய தினம் மேடையில், பல மருத்துவர்கள் இருந்தனர். ஒரு லட்சத்து ஐம்பது, இரண்டு லட்சம் மக்கள் அந்தப் பந்தய மைதானத்தில் கூடியிருந்தார்கள். முதலில் மேலே வந்தவர் ஒரு முகமதியப் பெண், நான் அவளிடம், "நீங்கள் ஒரு முகமதியராக இருக்கும்போது, ஏன் என்னிடம் வந்தீர்கள்?" என்று கேட்டேன். அவள் தூய இரத்தமுள்ளவள் என்பதற்கான சிவப்புப் பொட்டை வைத்தி ருந்தாள், மற்றும்... நான், "ஏன், நீங்கள் என்னிடம் வந்தீர்கள்?" என்றேன். அவள், "நீங்கள் எனக்கு உதவ முடியும் என்று நான் நம்புகிறேன்," என்றாள். நான், "ஏன் உங்கள் குருவிடம் (priest) போகவில்லை?" என்றேன். அவள், "நீங்கள் எனக்கு உதவ முடியும் என்று நான் நம்புகிறேன்," என்றாள். "ஓ," நான் சொன்னேன், "எனக்கு உங்களைத் தெரியாது. ஆனால் மரித்தோரிலிருந்து தன் குமாரனை எழுப்பின கர்த்தராகிய தேவன்..." அவள், "நான் கர்த்தராகிய தேவனை நம்புகிறேன்," என்றாள். நிச்சயமாக அவள் நம்புகிறாள், அவர்கள் இஸ்மவேலர்கள், உங்களுக்குத் தெரியும். அவள், "நான் கர்த்தராகிய தேவனாகிய யேகோவாவை நம்புகிறேன்," என்றாள். ஆனால் அவள், "முகமது அவருடைய தீர்க்கதரிசி என்று எங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது," என்றாள். நான், "இயேசு அவருடைய குமாரன், முகமது கல்லறையில் இருக்கிறார், ஆனால் இயேசு கல்லறையிலிருந்து எழுந்தார், மேலும் அவர் செய்த அதே கிரியைகளை நாமும் செய்வோம் என்று அவர் வாக்களித்தார்," என்றேன். அவள், "அது நடந்தால் (மொழி பெயர்ப்பாளர் மூலம் பேசினாள்), அப்போது நான் இயேசுவை என் இரட்சகராக ஏற்றுக்கொள்வேன்," என்றாள். அது என்ன? அதைத்தான் நம் ஆண்டவர் இங்கே பேசிக்கொண்டிருந்தார். உலகமெங்கும் போய், உயிர்த்தெழுதலையும், பரிசுத்த ஆவியின் வல்லமையையும் நிரூபித்துக் காட்டுங்கள். அவள், "நான் அதை நம்புவேன்," என்றாள். "உங்கள்-உங்கள்... அம்மையாரே, உங்கள் கணவர் ஒரு சிறிய மனிதர். அவர் ஒரு கறுப்பு மீசை வைத்திருக்கிறார். கடந்த வாரம் நீங்கள் ஒரு மருத்துவருடைய அலுவலகத்தில் இருந்தீர்கள், ஒரு முகமதிய மருத்துவர், உங்கள் கர்ப்பப்பையில் ஒரு நீர்க்கட்டி (cyst) இருப்பதாக அவர் உங்களிடம் சொன்னார்," என்றேன். அவள் அதை மளமளவென்று சொன்னாள், மொழிபெயர்ப்பாளர், "ஒவ்வொரு வார்த்தையும் உண்மை," என்றார். ஆயிரக்கணக்கான முகமதியர்கள் பார்ப் பதற்காக எழுந்து நின்றார்கள், ஒரு சில நிமிடங்களில், அவள், "அப்படியானால் நான் இயேசுவை என் இரட்சகராகவும் சுகமளிப் பவராகவும் ஏற்றுக்கொள்கிறேன்," என்றாள்.

29முப்பது ஆண்டுகளாகத் தங்கள் பழங்குடியினரிடையே இருந்த மிஷனரிகளிடம் நான் பேசியபோது, அவர்கள் முகமதிய மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாற்றிய ஒரு விலையேறப்பெற்ற ஆத்துமாவைப் பற்றிப் பேசினார்கள். சகோதரனே, துண்டுப் பிரசுரங்களை (tracts) விநியோகிப்பதன் மூலம் நீங்கள் அதை ஒருபோதும் செய்ய முடியாது. நீங்கள் தேவனுடைய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இங்கே ஒரு ஆப்பிரிக்கான்ஸ் (Afrikaans) பையன் இருக்கிறான், இங்கே உட்கார்ந்து என் முகத்தைப் பார்க்கிறான். நாம் மிஷனரிகள் என்று அழைப்பது ஒரு நோஞ்சான் காட்சி. அங்கே எங்காவது ஒரு செப்பனிட்ட பாதை இருக்கும் என்று எதிர்பார்த்துச் சென்றால், நீங்கள் எதைக் காண்பீர்கள்? சிறந்த ஹோட்டல்களில் தங்குவது, மற்றும் ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட கேடில்லாக் காரில், சில துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க ஒரு வளாகத்திற்கு வெளியே செல்வது. நமக்குத் தேவையானது, ஏதோ ஒரு சபையிலிருந்தோ அல்லது பிரிவிலிருந்தோ அனுப்பப்பட்டவர்கள் அல்ல, ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையுடன் பரலோகத் திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவி நிறைந்த மிஷனரிகள். அதுதான் முற்றிலும் சரி.

30அடுத்து மேடைக்கு வந்தவர், ஒரு இளம் வெள்ளைக்காரி. அவளால் ஆங்கிலம் பேச முடிந்தது, அவள் ஆப்பிரிக்கான்ஸ் இனத்தவள். அது (பரிசுத்த ஆவி) அவளிடம் சொன்னது, "அம்மையாரே," அவளுடைய நோய் என்ன வென்று அவளிடம் சொன்னது, ஆனால், "மரணத்திற்குத் தயாராகுங்கள், நீங்கள் இன்னும் சிறிது காலமே வாழ்வீர்கள்," என்று சொன்னது. அவள், "என் மார்பில் உள்ள அந்தச் சிறிய கட்டி என்னைக் கொன்றுவிடுமா?" என்று கேட்டாள். நான், "என்னால் சொல்ல முடியாது. நான் இப்போதுதான் உங்கள் இறுதிச் சடங்கைப் பார்த்தேன், கர்த்தர் உரைக்கிறதாவது, மரணம் நெருங்கிவிட்டது," என்றேன். அவள் மேடையை விட்டு இறங்கி, திரும்பிச் சென்று, தன் கணவருடன் பேசிக் கொண்டிருந்தாள், அவள் உட்கார்ந்திருந்த இடத்திலேயே செத்து விழுந்தாள். நான் ஒரு சுகமளிப்பவனாக இருந்திருந்தால், நான் அவளைக் குணமாக்கியிருப்பேன், ஆனால் ஒரே ஒரு சுகமளிப்பவர் மட்டுமே இருக்கிறார், அது தேவன்.

31அடுத்து வந்தது ஒரு பரிதாபகரமான காட்சி, ஒரு சிறிய கறுப்பினப் பையன். அவன் ஜூலு (Zulus) இனத்தைச் சேர்ந்தவன். இப்போது, சிறுகுழந்தைகளே, நான் உங்களிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், சிறுமிகளே, அவர்கள் எப்படித் தண்ணீர் குடிக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? தங்களைப் எத்தனை முதலைகள் பார்க்கின்றன என்று சுற்றிலும் பார்த்துவிட்டு, பின்னர் குனிந்து குடிப்பார்கள். நான் அங்கே இருந்தபோது, ஒரு முதலை ஒரு சிறுமியைப் பிடித்தது, கொஞ்சம் இரத்தம் தோய்ந்த தண்ணீர், அவள் உள்ளே போனாள், அவ்வளவுதான். ஒரு சிறிய பையன் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தான், ஒரு முதலை அவனது காலைப் பிடித்தது, அவன் வெளியே ஓடினான் - அவன் திரும்பி ஓடி முதலையை விரட்ட ஒரு குச்சியை எடுத்தான், அவன் கரையில் ஓடினான், முதலை மீண்டும் வந்து அந்தச் சிறிய பையனைப் பிடித்து, அவனது ஒரு காலை மட்டும் பிய்த்துக்கொண்டு தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. அதைத் திரும்ப எடுத்துச் சென்று, கரையில் எங்காவது அவன் மென்மையாகும் வரை புதைத்து வைத்து, பின்னர் அவனைத் தின்றது. ஒருவனுக்குக் கொஞ்சம் ஐஸ்கிரீம் கொடுத்தார்கள், அவன் அதைத் சட்டென்று கீழே போட்டான், "அது என்னைச் சுட்டது," என்றான். என்னுடைய குழந்தைக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ இருப்பதைப் போலவே, அந்தச் சிறிய கறுப்பினப் பையனுக்கும் சாப்பிடுவதற்கும், ஆடைகளை அணிவதற்கும் அதே உரிமை இருக்கிறது. அவர்களுக்கு உணவளிக்கப் போதுமானதை நாம் நம் குப்பைத் தொட்டிகளில் வாரிப் போடுகிறோம். கம்யூனிசம் நாட்டைப் பிடித்துக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை. நாம் அவர்களை நடத்திய விதம் அப்படி. அதுதான் முற்றிலும் சரி. இந்தியாவுக்கு அது பாதிகூட இல்லை.

32அந்தச் சிறிய பையன் பயங்கரமான மாறுகண் (cross-eyed) கொண்டவன். அது நான்காவது நபர். அவன் பயங்கரமான மாறுகண் கொண்டவன். நான், "இப்போது, இந்தச் சிறு பையனைக் குணமாக்க, என்னால் முடியாது. ஆனால் தேவன் பேரில் உள்ள அவனது சொந்த விசுவாசத்தின்படியே, அது அவனைக் குணமாக்கும். ஆனால் இப்போது, அவனது சிறிய வாழ்க்கையை மறைக்க முடியாது," என்றேன். அப்போதுதான், பரிசுத்த ஆவியானவர் வந்தார், நான், "இந்தப் பையன் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்திலிருந்து வந்தவன், ஏனென்றால் வைக்கோல் கூரையுடனான அவனது சிறிய குடிசையில், சுவரில் என் ஆண்டவரின் படம் தொங்குவதை நான் பார்க்கிறேன்," என்றேன். நான், "அவனது தாய் ஒரு ஒல்லியான பெண்," என்றேன். ஜூலுக்கள் மிகவும் வலிமையான மக்கள். நான், "அவனது தந்தை ஒரு இளம் மனிதர், இன்னும் வலிமையானவர், ஆனால் அவர்கள் கிறிஸ்தவர்கள்," என்றேன். ஒரு நகரத் தொகுப்புக்கு (city block) அப்பால் தூரத்தில், ஜூலு மொழிபெயர்ப்பாளர் அதைச் சொன்னவுடனே தாயும் தந்தையும் எழுந்து நின்றார்கள். அது உண்மையாக இருந்தது. நான், "ஆனால் இப்போது, அவனது மாறு கண்ணைக் குணமாக்க என்னால் முடியாது," என்றேன். கவனியுங்கள், நான் பார்த்தபோது, அவனது சிறிய கண்கள் என்னுடையது அல்லது உங்களுடையது போலவே மிகச் சரியாக இருந்தன. நான் மீண்டும் பார்த்தேன், நான், "யாரும் அந்தச் சிறு பையனைப் பார்க்கலாம், அவன் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே அவன் குணமடைந்திருக்கிறான்," என்றேன். நான் அவனை மேடையிலிருந்து அனுப்பி வைத்தேன்.

33அங்கே பின்பக்கத்தில் ஒரு பெரிய சலசலப்பை நான் கேட்டேன், அங்கே ஒரு பிரிட்டிஷ் டாக்டர் இருந்தார். சகோதரர் பாஸ்வொர்த் மற்றும் மற்றவர்கள், அவரை மேடையிலிருந்து கீழே இறக்க முயன்றார்கள், "நீங்கள் இப்போது மேலே போக முடியாது, சகோதரர் அபிஷேகத்தின் கீழ் இருக்கிறார்," என்றார்கள். அவர், "ஆனால் நான் அவரிடம் பேச வேண்டும்," என்றார். நான் திரும்பினேன், "டாக்டர், என்ன விஷயம்?" என்றேன். சகோதரர் பாஸ்வொர்த் அவரை விட்டார், சகோதரர் பாக்ஸ்டரும் விட்டார். மேடைக்கு மேலே வந்தார், அவர், "திரு. பிரான்ஹாம், நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க வேண்டும்," என்றார். அவர், "நான் தேவனை நம்புகிறேன். இந்த லில்லி மலர்களில் தேவன் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்," என்றார். (சகோதரிகளே, நீங்கள் லில்லிகளைப் பற்றிப் பேசுகிறீர்கள், நீங்கள் அவற்றைப் பார்த்திருக்க வேண்டும். அவற்றில் சில பதினெட்டு அங்குல அகலம் கொண்டவை, பெரிய காலா லில்லிகள் (calla lilies), மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில். மேடை அந்தப் பெரிய லில்லிகளால் மிகவும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.) அவர், "அந்த லில்லிகளில் ஒரு ஜீவனுள்ள தேவன் இருக்கிறார், இல்லையென்றால் அதனால் உயிர்வாழ முடியாது," என்றார். அவர், "ஆனால் திரு. பிரான்ஹாம், அந்தக் குழந்தைக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்றார். நான், "நான் ஒன்றும் செய்யவில்லை. என்னைவிட நீங்கள்தான் அவனுக்கு மிக அருகில் இருந்தீர்கள். அவன் இன்னும் எனக்குப் பத்து அடி தூரத்திற்குள் கூட வரவில்லை," என்றேன். "நீங்கள் அந்தப் பையனை ஹிப்னாடிசம் (hypnotize) செய்தீர்களா?" என்றார். நான், "டாக்டர், பிரிட்டிஷ் மருத்துவக் சங்கம் உங்களுக்கு மருத்துவம் பார்க்க உரிமம் அளித்திருக்கிறது, மேலும் ஹிப்னாடிசத்தைப் பற்றி உங்களுக்கு அவ்வளவுதானா தெரியும்? ஹிப்னாடிசம் அந்தப் பையனின் கண்களை நேராக்கும் என்றால், நீங்கள் எல்லோரும் ஹிப்னாடிசம் செய்வது நல்லது," என்றேன். "அது என்ன செய்தது?" என்றார். சகோதரர் பாக்ஸ்டர் அவரைத் தோளில் பிடித்தார். நான், "ஒரு நிமிடம் இருங்கள்," என்றேன். அவர், "திரு. பிரான்ஹாம், ஒரு தேவன் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன், ஆனால் அந்தச் சிறு பையனின் கண்கள் திறக்கும்படிச் செய்யுமளவிற்கு அவர் உண்மையானவரா (tangible), நான் அவரை மேடையில் நிறுத்துகிறேன்," என்றார். "ஏன்," நான் சொன்னேன், "அவர் இப்போது உங்கள் கையில் இருக்கிறார்." "அவன் அங்கே பயங்கரமான மாறுகண்ணோடு இருந்தான், இப்போது அவனுக்குப் பார்வை கிடைத்துவிட்டது. அங்கே இருந்ததற்கும் இங்கே வந்ததற்கும் இடையில் ஏதோ நடந்திருக்கிறது," என்றார். நான்-அவர், "அது என்ன?" என்றார். நான், "எனக்கும் அவனுக்கும் இடையில் பரிசுத்த ஆவியானவர் நின்றார், பரிசுத்த ஆவியானவர் அவனது கண்களை நேராக்கினார்," என்றேன். அவர் தலையைச் சொறிந்தார். நான், "இப்போது, நீங்கள் என்னை நம்ப விரும்பினால், சரி. நீங்கள் நம்பவில்லை என்றால் அது உங்கள் விருப்பம்," என்றேன். நான் தொடர்ந்து நடந்தேன். அவர், "ஒரு நிமிடம் இருங்கள், திரு. பிரான்ஹாம்," என்றார். இங்கே ஒரு பெரிய மைக் இணைக்கப்பட்டிருந்தது, மற்றும் ரேஸ் டிராக் (race track) வழியாகக் கீழே... அவர் அங்கே நடந்து வந்தார், அவர், "அப்படியானால் அந்த இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன்," என்றார்.

34சுமார் ஆறு வாரங்களுக்குப் பிறகு நான் அவரை ஜோகன்னஸ்பர்க்கில் (Johannesburg) சந்தித்தபோது, முப்பதாயிரம் பேர் எனக்கு விடைபெற வெளியே வந்திருந்த அந்த மைதானத்தில், அந்த இளம் டாக்டர், என் கழுத்தைக் கட்டிக்கொண்டு, "சகோதரர் பிரான் ஹாம், தேவன் எனக்கு மிஷனரி ஊழியங் களுக்கு அழைப்பு கொடுத்திருக்கிறார்," என்றார். என் கழுத்தைக் கட்டிக்கொண்டிருக்கும்போதே அவர் அந்நிய பாஷைகளில் பேசத் தொடங்கினார், ஒரு பிரிட்டிஷ் டாக்டர் (நிச்சயமாக), அந்நிய பாஷைகளில் பேசினார். அவர் அதைச் செய்வார் என்று அவருக்குத் தெரியாது. அவர் என் கழுத்தைக் கட்டிக் கொண்டார். அவர், "என்னே, தேவனே, எனக்கு என்ன நடந்தது?" என்றார். நான், "இப்போது, தேவன் உங்களைத் தகுதிப்படுத்தியிருக்கிறார். புறப்படுங்கள்," என்றேன்.

35அன்று மதியம், இங்கே ஒரு பையன் வந்தான். பில்லி பால், என் மகன், மற்றும் மற்றவர்கள் கழுத்தில் சங்கிலி போடப் பட்டிருந்த அவனை மேடைக்குக் கூட்டிவர உதவினார்கள், அவனது மனநிலையும் சரியில்லை. நான், "அந்த ஏழைப் பிறவியைப் பாருங்கள். நிச்சயமாக, என்னால் அவனுக்கு உதவ முடிந்தால், நான் அதைச் செய்வேன். என்னால் அதைச் செய்ய முடியாது. ஆனால் அவனது வாழ்க்கையை மறைக்க முடியாது, ஏனென்றால் கர்த்தருடைய தூதன் அருகில் இருக்கிறார்," என்றேன். அது (பரிசுத்த ஆவி) அவனது நிலையைச் சொல்லத் தொடங்கியபோது. நான், "இப்போது, இங்கே, ஒரு விஷயம் அவன் மனதில் இருக்கிறது, அவன் ஒரு சகோதரனைப் பற்றிக் கவலைப்படுகிறான். அவனுக்கு ஒரு சகோதரன் இருக்கிறான், அவன் ஒரு மஞ்சள் ஆட்டினாலோ அல்லது நாயினாலோ காயப் படுத்தப் பட்டிருக்கிறான். அவன் சவாரி செய்து கொண்டிருந்தான்... அவனது கால்களை முடமாக்கியது, அவன் அக்குள் அடியில் இரண்டு குச்சிகளை வைத்திருக்கிறான், அவன் ஊன்று கோல்களுடன் நடக்கிறான்," என்றேன். ஆனால் நான், "கர்த்தர் உரைக்கிறதாவது, அவனது சகோதரன் குணமடைந்ததை நான் பார்க்கிறேன்," என்றேன். ஒரு நகரத் தொகுப்பு அல்லது அதற்கும் அப்பால் தூரத்தில் ஒரு அலறல் சத்தம் கேட்டது, இங்கே அவனது சகோதரன் வந்தான், தலைக்கு மேலே குச்சிகளைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, "ஒரு நகரத் தொகுப்புக்கு அப்பால் தேவன் அவனைக் குணமாக்கினார்," என்று தன் முழு பலத்தோடு கத்திக்கொண்டு வந்தான். அதுதான் இயேசு பேசிக்கொண்டிருந்த சுவிசேஷம்.

36நான் பார்த்தேன், அந்த மனிதனைக் கண்டேன். நான் மீண்டும் கவனித்தேன், நான் அவனுக்காக ஜெபித்து, அவனை அனுப்பிவிடப் போனேன். அவனுக்கு மேலே ஒரு நீல நிழல் (blue shadow) போன்ற ஒன்றை நான் கவனித்தேன். அதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன், சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் அங்கே நிற்பதைப் பார்த்தேன், தலை நிமிர்ந்து, நேராக நின்றுகொண்டிருந்தான் (இது அவர்களின் முதுகெலும்பில் வரும் ஒரு நோய். டாமி, அதை என்னவென்று அழைப்பார்கள் என்று உனக்குத் தெரியுமா? அது அவர்களைக் கைகளையும் காலங்களையும் ஊன்றி நடக்கும்படிச் செய்கிறது.) மற்றும் நான்-அது அவனை முடமாக்கியதா என்று எனக்குத் தெரியவில்லை, ஓ, அங்கே கிட்டத்தட்ட நிர்வாணமாக நின்றது பயங்கரமாக இருந்தது. ஆனால் அவனுக்குச் சற்று மேலே, அவன் குணமடைந்ததை நான் பார்த்தேன். நான், "கர்த்தராகிய தேவனே, இதுதான் வேளை," என்றேன். நான் ஒரு நிமிடம் நிறுத்தினேன். நான், "தேவன் இந்த மனிதனுக்கு அவனது சரியான நிலையைத் தந்தால், உங்களில் எத்தனை பேர் கர்த்தராகிய தேவனைச் சேவிப்பீர்கள்?" என்றேன். உங்களால் பார்க்க முடிந்த தூரம் வரை கைகள் உயர்ந்திருந்தன, கறுப்பர், வெள்ளையர், மஞ்சள், பழுப்பு நிறத்தவர். நாங்கள் அந்தப் பையனுக்காக ஜெபித்தபோது, அவனுக்கு நான் சொன்னது புரியவில்லை, மிஷனரிகள் வரும்போது அவன் செய்வதைப் போல, நான் அவனை நடனமாடச் சொல்கிறேன் என்று நினைத்தான், உங்களுக்குத் தெரியும், கோமாளித்தனம் செய்வது, நடனமாடுவது. அவர்கள் எல்லோரும் ஒரு சிறிய போர் நடனம் (war dance) செய்ய விரும்புகிறார்கள். அவனைச் சங்கிலியால் பிடித்துத் தூக்கினோம், பரலோகத்தின் தேவன் அவனைத் திரும்பச் சீர்படுத்தினார். அவன் அங்கே நின்றான், கண்ணீர் அவன் கன்னங்களில் வழிந்து அவனது கறுப்பு வயிற்றில் விழுந்தது. அவன் குணமடைந்தது மட்டுமல்லாமல், சரியான மனநிலையிலும் இருந்தான். முப்பதாயிரம் போர்வை போர்த்திய அஞ்ஞானிகள் (blanket heathens) தங்கள் விக்கிரகங்களைத் தரையில் போட்டு உடைத்து, ஒரே நேரத்தில் இயேசு கிறிஸ்துவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள். ஓர் ஆத்துமாவுக்காக இருபது அல்லது முப்பது ஆண்டுகள் ஆகிறது. தேவன் தம்முடைய மனிதர்களைக் களங்களுக்கு அனுப்பும் வேளை வந்திருக்கிறது. கிறிஸ்து வெளிப்படும் வேளை வந்திருக்கிறது.

37நான் செல்லும் வழியில்-இங்கே இன்னும் ஒரே ஒரு சிறிய கதை. இதை உங்களிடம் சொல்ல வேண்டும் என்பது என் இதயத்தில் இருக்கிறது. ஒரு இரவு, நான் ரயிலில் ஹூஸ்டன், டெக்சாஸிற்குப் போய்க்கொண்டிருந்தேன். அங்கே உள்ளே, நான் ஒரு சிறிய பையனைக் கண்டேன் (நான் மியாமி, ஃப்ளோரிடாவைச் சொல்லுகிறேன்), ஒரு சிறிய பையன் இறந்து கிடந்தான், அங்கே நிறைய மரங்கள் பாறைகளுடன் பின்னிக் கொண்டிருந்தன, அவனது விநோதமான தலைமுடி வெட்டு (funny looking haircut), பெரிய பழுப்பு நிறக் கண்கள் சொருகியிருந்தன. அவனது கால்கள் காலுறைகள் (socks) வழியாக வெளியே வந்திருந்தன. சாலையோரத்தில் ஒரு கார் நொறுங்கிக் கிடந்தது, அவன் இறந்து போயிருந்தான். அவனது சிறிய உடல் உடைந்த எலும்புகளின் ஒரு பெரிய குவியலாக இருந்தது. நான், "அது யார்?" என்று நினைத்தேன். அந்தத் தரிசனம் என்னை விட்டுச் சென்றது. நான் கீழே சென்றேன். இங்கே மக்கள் உட்கார்ந்திருக்கலாம். நான் அதை விளக்கினேன், மக்களிடம் சொன்னேன், "தயராக இருங்கள், உங்கள் புத்தகத்தில் இதை எழுதிக்கொள்ளுங்கள். உங்கள் வேதாகமத்தின் முன்னட்டை தாளில் (flyleaf) இதை எழுதுங்கள், இது நடக்கிறதா என்று பாருங்கள். எங்கேயோ ஒரு குழந்தை, சுமார் எட்டு வயது, கருமையான பழுப்பு நிறத் தலைமுடி, பழுப்பு நிறக் கண்கள், விநோதமான தலைமுடி வெட்டு, சிறிய பனியன் சட்டை போன்ற கால்சட்டை (short pantywaist pants) அணிந்திருப்பான்." நான், "அவன் கொல்லப் படப் போகிறான்," என்றேன். முப்பதாயிரம் அல்லது நாற்பதாயிரம் வேதாகமங்களில் அது வைக்கப்பட்டிருந்தது என்று நான் ஊகிக்கிறேன்." வாய்ஸ் ஆஃப் ஹீலிங் (The Voice Of Healing) பத்திரிகையில் அந்தக் கட்டுரையை நீங்கள் படித்திருக்கலாம்.

38நான் அதைப் பற்றிச் சொல்வதற்கு முன்பே அந்தச் சம்பவம் எத்தனை பேருக்குத் தெரியும், உங்கள் கைகளை உயர்த்துங்கள்? அது நடப்பதற்கு முன்பு முன்னறிவிக்கப்பட்டது, பின்பு அல்ல, நடப்பதற்கு முன்பே. அங்கே, அந்தச் சம்பவத்தில், ஒரு சிறிய பையன் நீரில் மூழ்கினான், அவர்கள் என்னை வெளியே அழைத்து வந்தார்கள், அவர்கள்... அந்தத் தகப்பன் பிணத்தைப் பதப்படுத்துபவரை (undertaker) அவனை எடுக்க அனுமதிக்க வில்லை. நான் வெளியே சென்றேன், நான், "அது அந்தக் குழந்தை அல்ல, அது நன்கு உடை அணிந்த குழந்தை, உண்மையான அடர் கறுப்புத் தலைமுடி கொண்டது, அது அவன் அல்ல," என்றேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்வீடன், நார்வே, பின்லாந்துக்கு மேலே, நான் குபியோவிலிருந்து (Kuopio) கீழே வந்து கொண்டிருந்தேன், அது நள்ளிரவு சூரியன் தேசத்திற்கு மேலே இருக்கிறது, நாங்கள் அங்கே ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்தோம். அங்கே மேலே இருந்த அந்தச் சிறு பையன்கள், குழந்தைகளைத் தவிர வேறில்லை, போருக்குப் பிறகு உடனே, அவர்கள்-அவர்கள் ஒருபோதும் சவரம் செய்ததில்லை. அந்தச் சிறு பையன்களில் சிலர்... பதினைந்து வயதிற்கு மேல் இருக்காது, மிகப் பெரிய பழைய நீண்ட கோட்டுகள், மற்றும் பூட்ஸ் அணிந்திருந்தார்கள், நகரத்தில் உள்ள பெண்கள் அனைவரும், இளம் பெண்கள் அனைவரும் வயதான ஆண்களும் கூடினார்கள். ரஷ்யர்கள் அவர்கள் அனைவரையும் போரில் கொன்றுவிட்டார்கள்.

39வயல்வெளியில், வைக்கோல் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அரைக்கால் சட்டை அணிந் திருக்கவில்லை, பெரிய தடிமனான பாவா டைகள், பெரிய பூட்ஸ் அணிந்திருந்தார்கள், நீங்கள் சந்தித்திருப்பதிலேயே மிகச் சிறந்த மக்களில் சிலர், அந்தப் பின்லாந்துக்காரர்கள் (Finns), உண்மையான விசுவாசமுள்ளவர்கள். நான்... அங்கே மேலே நின்று கொண்டிருந்தபோது, சகோதரர் லின்ட்சே, மற்றும் அனைவரும், சுமார் முப்பது ஊழியர்கள் அங்கே இருந்தார்கள், நான், "ஏதோ நடக்கப் போகிறது. என்னால் அதை உணர முடிகிறது," என்றேன். "அது என்ன, சகோதரர் பிரான்ஹாம்?" என்றார்கள். நான், "எனக்குத் தெரியாது," என்றேன், அவர்கள் அப்போது படம் எடுக்கத் தொடங்கினார்கள். "கர்த்தருடைய தூதன் அருகில் இருக்கிறாரா, எங்களால் படமெடுக்க முடியுமா?" நான், "எனக்குத் தெரியாது. ஆனால் ஏதோ நடக்கப் போகிறது, எனக்குச் சாட்சியாக இருங்கள்," என்றேன்.

40நாங்கள் மலையிலிருந்து கீழே வந்தோம், நாங்கள் ஒன்றை கவனித்தோம். இப்போது, பெட்ரோல் ஒரு கேலன் சுமார் இரண்டு டாலருக்கு விற்கப்படுகிறது. நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் பேர் இருக்கும் கூட்டங்களில், அநேகமாக மூன்று அல்லது நான்கு கார்கள் மட்டுமே இருக்கும். அவர்கள் அனைவரும் சறுக்கு வண்டிகளில் (sleds) கலைமான்களைப் பூட்டிக்கொண்டு, நடந்தும், எப்படியாவது அங்கே வந்து சேர்வார்கள். ஆனால் அங்கே சுமார் 1925, '30 மாடல் ஃபோர்டு (Ford), அல்லது அதைவிடச் சற்றுப் பிந்தைய மாடல், அமெரிக்கத் தயாரிப்பான ஃபோர்டு கார் ஒன்று நொறுங்கிக் கிடந்தது, சுமார் ஐந்நூறு பேர் அதைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள், இரண்டு சிறு பையன்கள் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக்கொண்டு பள்ளியிலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். மணிக்குச் சுமார் அறுபது மைல் வேகத்தில் வந்த இந்தக் கார், வளைவில் வேகமாகத் திரும்பியது, அந்தச் சிறு பையன்களுக்கு எந்தப் பக்கம் போவது என்று தெரியவில்லை. ஒருவன் ஒரு பக்கமாகவும், இன்னொருவன் மறுபக்கமாகவும் ஓடினான், டிரைவர் அவர்கள் மேல் மோதாமல் இருக்க முயன்றதில், ஒரு சிறிய பையனின் தாடைக்கு அடியில் அவனது பம்பர் அல்லது ஃபெண்டர் மோதி, அவனைச் சுமார் முப்பது கெஜ தூரத்திற்குத் தூக்கி எறிந்து, ஒரு மரத்தில் மோதி நசுக்கியது. மற்ற சிறிய பையன் அப்படியே உருண்டு சென்றான், சக்கரங்கள் அவனது சிறிய உடலைச் சாலையின் குறுக்கே சுமார் இருபது அடி தூரத்தில் உள்ள ஒரு புல்வெளியில் உதைத்துத் தள்ளின. கார் குன்றின் மேல் ஓடி நொறுங்கியது. சகோதரர் லின்ட்சே மற்றும் மற்றவர்கள் வெளியே வந்தார்கள், அவர்கள் அதைப் பார்த்தார்கள். அவர்கள் அழுது கொண்டே திரும்பினார்கள். சகோதரி ஐசக்சன் (Sister Isaacson) வெளியே வந்தார், என் மொழிபெயர்ப்பாளர். அவள் அழுதுகொண்டே திரும்பி வந்தாள், "சகோதரர் பிரான்ஹாம், நீங்கள் போய் அதைப் பார்க்க வேண்டும்," என்றாள்.

41நான், "ஓ, இல்லை, என்னால் முடியாது. நான் சுமார் இருபத்தி நான்கு வயது இளம் பிரசங்கியராக இருந்தபோது என் மனைவி இறந்தது உங்களுக்கு நினைவிருக்கும். நான் அவளையும் என் குழந்தையையும் அடக்கம் செய்தேன். எங்களுக்கு ஒரே ஒரு சிறிய பையன் மட்டுமே மிஞ்சியிருந்தான், அவன்தான் பில்லி. இரவில் அவனுடைய சிறிய பாட்டிலை என் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு நான் நடந்தேன். அவனது பாட்டிலைச் சூடாக வைத்திருக்க நெருப்பு மூட்ட எங்களிடம் போதுமான பணம் இல்லை, அதனால் நான் அதை என் தலைக்கு அடியில் வைத்துக்கொண்டேன். அதனால்தான் அவன் இன்று என்னுடன் இருக்கிறான். நான்-நான் அவனுக்கு அப்பா, அம்மா இரண்டுமாக இருந்திருக்கிறேன். அவள் இறக்கும் போது நான் அவளுக்குக் கொடுத்த வாக்குறுதி அதுதான். நான் அவனது சிறிய உடலைச் சூடாகவும், அவனது சிறிய பாட்டிலை என் உடலோடும் வைத்திருந்தேன்," என்றேன். அப்போது அவனுக்குச் சுமார் பத்து வயது இருக்கும், நான், "எனக்குச் சொந்தமான என் சிறிய பையன் அமெரிக்காவில் இருக்கிறான். நான்-நான்-நான் போய் அவனைப் பார்க்க முடியாது. நான் இப்போது சுமார் மூன்று மாதங்களாகப் பில்லியைக் காணவில்லை, என்னால் அவனைப் பார்க்க முடியாது," என்றேன். ஏதோ ஒன்று, "போய் பார்," என்று சொன்னது.

42நான் நடந்து சென்றேன், அவர்கள் அவனது சிறிய கோட்டை அவன் முகத்தின் மேல் போர்த்தியிருந்தார்கள், அவர்கள் அதை இழுத்தார்கள். ஓ, என் தேவனே, நான் திரும்பி நடந்து செல்ல ஆரம்பித்தேன். நீங்கள் இதை நம்புவீர்களா இல்லையா என்று எனக்குத் தெரியாது. அது உங்களுக்கும் தேவனுக்கும் இடையிலானது. ஏதோ ஒன்று என் தோளின் மேல் தங்கள் கையை வைத்தது, அது சகோதரர் மூர் (Brother Moore) என்று நான் நினைத்தேன். நான், "என்ன, ஏன், என்னைச் சுற்றி யாரும் இல்லையே, ஆனாலும் அந்தக் கை என் தோளின் மேல் இருந்தது." நான், "இது என்ன?" என்று நினைத்தேன். யாரோ ஒருவரின் கை என் தோளின் மேல் இருந்தது, நான் அந்தக் குழந்தையை நோக்கித் திரும்பினேன். கால்கள் எல்லாம் உடைந்த நிலையில், அவனது பெரிய பழைய, வரிவரியான கறுப்பு காலுறைகள் (stockings) வழியாக அவனது சிறிய பாதம் வெளியே வந்திருப்பதை நான் கவனித்தேன். அது பழக்கமானதாகத் தோன்றியது. நான் முக்கிய மனிதரிடம், அதாவது நகரத்தின் மேயரிடம், "முடியுமா...?" என்றேன். அவர்கள் தகப்பனும் தாயும் வருவதற்குக் காத்துக்கொண்டிருந்தார்கள், நான் நினைத்தேன், "ஓ, என் தேவனே, அந்தச் சிறிய அப்பாவும் அம்மாவும் வந்து இந்தக்குழந்தை இங்கே நசுங்கிக் கிடப்பதைப் பார்க்கும்போது என்ன நினைப்பார்கள்." மற்ற சிறிய பையன், அவன் உயிருடன் இருந்தான், அதனால் அவர்கள் அவனை ஒரு காரில் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றார்கள். எனவே இந்தச் சிறு பையன் இறந்து சுமார் முப்பது நிமிடங்கள் ஆகியிருந்தது. பிணத்தைப் பதப்படுத்துபவர் அவனை அப்புறப் படுத்து வதற்கு முன்பு அவனது தகப்பனையும் தாயையும் அழைத்துவர அவர்கள் காத்திருந்தார்கள். நான், "அந்தப் பையனை நான் மீண்டும் பார்க்கலாமா?" என்றேன். அவர்கள் அவனது சிறிய கோட்டை உயர்த்தினார்கள், நான் பார்த்தேன், அந்தச் சிறிய பழுப்பு நிறக் கண்கள் சொருகியிருந்தன, அந்தக் கருமையான பழுப்பு நிறத் தலைமுடி, சிறிய கால்சட்டை (pantywaist), காலுறைகள் வழியாக அவனது பாதங்கள். நான் சுற்றிலும் பார்த்தேன், அங்கே ஒரு குன்று வந்தது, குபியோ (Kuopio) மலையிலிருந்து கீழே இறங்கி வந்தது, பசுமைமாறா மரங்கள் (evergreens), ஒன்றன்மேல் ஒன்றாகப் பாறைகள், நான் திரும்பிப் பார்த்தேன், "அது அவன்தான்," என்று நினைத்தேன். ஓ, சகோதரனே, மகிமையில் சந்திக்கும் வரை நான் உங்களை இனிச் சந்திக்காமல் போகலாம், ஆனால் அது என்ன உணர்வு என்பதை இன்று மதியம் உங்களுக்கு விளக்கும் வலிமை எனக்கு இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நரகத்தில் உள்ள எல்லாப் பிசாசுகளாலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, அல்லது அதுவா, இதுவா, அல்லது மற்றதா என்பது விஷயமல்ல, அது ஏற்கனவே முடிந்துவிட்டது. தேவன் அப்படிச் சொல்லியிருக்கிறார். நான் பார்த்துவிட்டு, "அது அவன்தான்," என்றேன். நான், "சகோதரர் மூர், சகோதரர் லின்ட்சே, சீக்கிரம் வாருங்கள்," என்றேன். நான், "உங்கள் வேதாகமத்திலிருந்து அந்த முன்னட்டை தாளை (flyleaf) சீக்கிரம் எடுங்கள்," என்றேன். "என்ன விஷயம், சகோதரர் பிரான்ஹாம்?" நான், "அந்த முன்னட்டை தாளை வாசியுங்கள்," என்றேன். "கர்த்தர் உரைக்கிறதாவது, அது சம்ப விக்கும், எட்டு முதல் பத்து வயதுக்கு இடைப்பட்ட ஒரு சிறு பையன், அவனது அடையாளம், பாறைகள் கேதுரு மரங்களோடும் பசுமைமாறா மரங்களோடும் பின்னிக் கொண்டிருக்கும் ஒரு இடத்தில் கிடப்பான்." "என்ன," என்றார், "அது என்ன, சகோதரர் பிரான்ஹாம்?" நான், "அந்தக் குழந்தையைப் பாருங்கள். அங்கே அந்தப் பாறைகளைப் பாருங்கள்," என்றேன். அவர், "அது... அது அவனா?" என்றார். நான், "அது அவன்தான்," என்றேன்.

43ஓ, என்னே. ஓ, தேவனே, சபையை அந்த நிலைக்குக் கொண்டுவாரும். என்னை அந்த இடத்தில் தங்க வையும். நான், "நீங்கள் உடனே பேசுங்கள், சகோதரி ஐசக், எனக்கு மொழிபெயருங்கள்," என்றேன். நான், "அமெரிக்கத் தேசத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கர்த்தராகிய தேவன், இதோ இந்தச் சகோதரர்களின் வேதாகமத் தாள்களில் எழுதியிருக்கிறபடி, இந்தச் சிறு பையன் ஐந்து நிமிடங்களில் உயிருடன் தன் காலில் நிற்கவில்லையென்றால், நான் பின்லாந்தை விட்டு, என் முதுகில் 'கள்ளத் தீர்க்கதரிசி' (False Prophet) என்ற அட்டையை மாட்டிக்கொண்டு போவேன்," என்றேன். ஓ, தேவன் என்ன செய்யப் போகிறார் என்று உங்களுக்குத் தெரியும் போது அது எவ்வளவு அற்புதமான விஷயம். நான் அவர்களைக் கூடச் செய்தேன், நான் மண்டி யிட்டு, "கர்த்தராகிய தேவனே..." என்றேன். மேயரிடமிருந்து இதன் விவரங்களை நீங்கள் பெற விரும்பினால், நான் அவருடைய முகவரியைத் தருகிறேன். நான், "கர்த்தராகிய தேவனே, தாய்நாட்டில் நீர் இந்தத் தரிசனத்தைப் பற்றிப் பேசினீர். உமது மகத்தான முன்குறிக்கப்பட்ட சித்தத்தில், அது ஏற்கனவே முடிந்துவிட்டது என்பதை நான் அறிவேன். எனவே மரணமே இந்தப் பையனின் உயிரைத் திருப்பிக் கொடு," என்றேன். இன்று மதியம் இந்த வேதாகமத்திற்கு முன்பாக, தேவனே எனக்கு உண்மையான நியாயாதிபதி, அந்தச் சிறிய பையன் அடிபடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு எப்படி இருந்தானோ, அதே இயல்புடன் துள்ளித் தன் காலில் நின்றான்.

44அன்று இரவு, கூட்டத்தில், உங்களால்... கூட முடியாது. அவர்கள் அங்கே ராணுவத்தை நிறுத்தியிருந்தார்கள், நான் உங்களிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு நினைவிருக்கும், இரும்புத் திரைக்கு (iron curtain) அது இரண்டு மைல் தொலைவில் மட்டுமே இருந்தது, அன்று மதியம் ரஷ்யா முழுவதும் அது பரவியபோது, வானொலியில், அன்று இரவு நான் வந்தபோது, அங்கே அந்தக் கம்யூனிஸ்ட் வீரர்கள் ஒரு நகரத் தொகுப்பு (city block) அளவுக்கு நின்றார்கள், கண்ணீர் தங்கள் கன்னங்களில் வழிந்தோட, அந்த ரஷ்ய சல்யூட் அடித்துக்கொண்டு அங்கே நின்றார்கள், அவர்கள், "வல்லமையுள்ள இப்படிப்பட்ட ஒரு தேவனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்," என்றார்கள். என்ன விஷயம்? புராட்டஸ்டன்டுகளாகிய நீங்களும் கத்தோலிக்கர்களும், அங்கே ஓடி, அவர்களின் பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு, அதை மிகப் பெரிய கட்டிடங்களில் போட்டீர்கள், உலகின் மற்றவர்கள் பெற்றி ருந்ததைத் தவிர வேறெதையும் உருவாக்கத் தவறினீர்கள். "விசுவாசிக்கிற வர்களால் இந்த அடையாளங்கள் நடக்கும்." குளிர்ந்துபோன, சம்பிரதாயமான சபை இதற்கு எதிராகப் பேசுவதில் ஆச்சரியமில்லை. நான் நேற்றிரவு சொன்னது போல், "இது தூஷிக்கப்படும் ஒரு அடையாளமாக இருக்கிறது."

45அன்று இரவு, கூட்டத்தில், நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். எனக்கு இன்னும் பத்து நிமிடங்கள் கிடைத்தால். நாங்கள் மக்களை வரிசையில் கொண்டுவந்து கொண்டிருந்தோம், அங்கே ஒரு பெரிய குவியல்... என் புத்தகத்தில் நீங்கள் கவனித்திருப்பீர்கள், ஊன்று கோல்கள் மற்றும் குச்சிகளின் ஒரு குவியல், அவை-மக்கள் தூக்கி எறிந்தவற்றை உங்களால் இந்த மேடையில் குவிக்க முடியாது. இன்னும் அதிகமானோர் உள்ளே வரச் சில ஆயிரம்பேரை வெளியேற்ற வேண்டியிருந்தது. அன்று இரவு, நான் கட்டிடத்திற்குள் நுழையத் தொடங்கியபோது, நான் மிக மெதுவாக நடந்து கொண்டிருந்தேன், எனக்கு முன்னால் இரண்டு சிறிய வீரர்கள், பின்னால் இரண்டு பேர், வாள்களுடன், மக்களை உங்களைவிட்டு விலக்கி வைக்க, இப்படிப் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.

46நான் கட்டிடத்திற்குள் நுழைந்தபோது, பெண்களுக்கான தங்கும் விடுதியில், ஒரு சிறிய கதவு-மூடியிருந்தது, நான் பார்த்தேன், இங்கே ஒரு இனிய சிறுமி நின்றுகொண்டிருந்தாள், இப்போது என் சிறிய ரெபேக்காவுடைய வயதில், சுமார் பத்து, பன்னிரண்டு வயது, ஒரு கால் (என் புத்தகத்தில் உள்ள படத்தை நீங்கள் பார்க்கலாம்) மற்றதை விட அந்த அளவுக்குக் குட்டையாக இருந்தது, அவளைச் சுற்றி ஒரு பெரிய இரும்புப் பட்டை (brace) இருந்தது. அவள் ஷூவின் கால்விரல் பகுதியில் ஒரு பட்டை (strap) இருந்தது, அது மேலே சென்று, குறுக்காகச் சென்று இங்கே பின்னால் இருந்த இந்தப் பெரிய இரும்புப் பட்டையில் மோதியது, மேலும் இந்த ஷூ ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு இரும்புப் பட்டையுடன் கட்டப்பட்டிருந்தது. அவளால் அந்தச் சிறிய காலை அசைக்க முடியவில்லை, எனவே அது ஒரு முழுமையான இரும்புப் பட்டையாக இருக்க வேண்டி யிருந்தது, அப்போதுதான் அவள் இப்படித் கீழே விழமாட்டாள். அவள் அசையும் ஒவ்வொரு முறையும், அவள் தன் சிறிய தோளைப் பயன்படுத்தி, அந்தப் பாதத்தை மேலே தூக்கி அதைத் தள்ள வேண்டும், பின்னர் அவள் அடியெடுத்து வைப்பாள். அவளுடைய சிறிய பாவாடைகள், அவளுடைய சிறிய ஆடைகள் கிழிந்திருந்தன, அவளுடைய சிறிய தலைமுடி எல்லாம் வெட்டப்பட்டிருந்தது, அவளுடைய சிறிய, குழந்தை முகம் வெளிறியிருந்தது. அவள் என்னைப் பார்த்தபோது, தெருவில் என்னை நிறுத்தக்கூடாது என்று அவர்களிடம் சொல்லப் பட்டிருந்தது. எனக்குச் சிறு குழந்தைகளை மிகவும் பிடிக்கும்.

47சகோதரர் பாக்ஸ்டர் மற்றும் மற்றவர்கள், அனைவரும் மதிய ஆராதனையை முடிக்கும் வரை நான் காத்திருப்பேன், நான் அந்தப் பழைய பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்று கொஞ்சம் மிட்டாய் வாங்குவேன், எனக்குப் பின்னால் இரண்டு பிளாக் (blocks) நீளத்திற்கு ஒரு குழந்தைப் பட்டாளமே வரும், நான் அவர்களுக்கு மிட்டாய்களைத் தூக்கி எறிவேன்.

48இங்கே அவள் இருந்தாள், அவள் ஏதோ தவறு செய்துவிட்டது போல நினைத்தாள். அவள் தன் சிறிய தலையைக் குனிந்து கொண்டாள், அவளிடம் இரண்டு ஊன்று கோல்கள் இருந்தன, அவள் இந்த ஊன்று கோல்களை எடுத்து, அவற்றை வெளியே வைத்து, தன் சிறிய தோள்களை வளைத்து, அந்தக் காலை மேலே தூக்கி வெளியே எறிவாள், அவள் நடந்த விதம் அப்படித்தான் இருந்தது. நான் அவளைப் பார்த்தேன், அவள் ஏதோ தவறு செய்துவிட்டது போல நினைத்தாள், அதனால் நான் கடந்து செல்வதைக் கவனிக்காதது போல, அவள் தன் சிறிய தலையைக் கீழே குனிந்து கொண்டாள். உள்ளே ஏதோ ஒன்று அசையத் தொடங்கியது.

49நான் அவளைப் பார்த்தேன், எனக்குப் பின்னால் இருந்த வீரரிடம், என்னால் ஃபின் (Finn) மொழியில் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. எனவே அவர் வெளியே போகும்படி சைகை செய்தார். "ஒரு நிமிடம் இருங்கள்." அந்தக் குழந்தை மேலே பார்த்தது, நான் அவளைப் பார்த்து இப்படிச் சைகை செய்தேன். அவள் அங்கே வர விரும்பினாள் என்று எனக்குத் தெரியும். நிச்சயமாக அவள் முடமாக இருந்தாள், அதற்காகத்தான் அவள் கூட்டத்திற்கு வந்திருந்தாள். நான் அவளைப் பார்த்துச் சைகை செய்தேன், அவள் என்னைப் பார்த்தாள், நான் என் தலையை ஆட்டி, "ஆம்," என்றேன். அவள் தன் சிறிய ஊன்று கோல்களை வெளியே வைத்தாள், தன் சிறிய காலை மேலே தூக்கினாள், அவள் ஒரு அடி எடுத்து வைத்தாள், அவள் மீண்டும் ஒரு குழந்தையைப் போலப் பார்த்தாள். அவள் எனக்கு மிக அருகில் வரும் வரை நான் ஒன்றும் சொல்லாமல் காத்திருந்தேன். அவள் என்னைப் பார்த்தாள், அந்தச் சிறிய, சின்னஞ்சிறிய வெளிறிய 'பேபி ப்ளூ' (baby blue) கண்கள். அவள் ஒரு சிறிய பின்லாந்துப் போர் அனாதை என்று நான் பின்னர் தெரிந்துகொண்டேன், அவளுக்குத் தாய் அல்லது தந்தை, யாரும் இல்லை. அவள் சில மக்களுடன் ஒரு கூடாரத்தில் வசிக்கிறாள். அவளுடைய அம்மா வும் அப்பாவும் ரஷ்யர்களால் கொல்லப் பட்டிருந்தார்கள். அவர்கள் அவளுக்காகச் செய்திருந்த பழைய முரட்டுத்தனமான இரும்புப் பட்டை. அந்தக் குழந்தை என்ன செய்யும் என்று நினைத்து நான் அப்படியே நின்றேன். என்னால் அவளிடம் பேச முடியவில்லை. அவள் கீழே குனிந்து என் கோட்டைப் பிடித்துக்கொண்டு என் சட்டைப் பையை முத்தமிட்டாள். தன் சிறிய பாவாடையை இப்படி விரித்து, "கீட்டோஸ் (Kiitos)," என்றாள், அதற்கு "நன்றி" என்று அர்த்தம்.

50நான், "ஓ, தேவனே," என்று நினைத்தேன். அப்போது எனக்கு முன்பாக, அந்தச் சிறு குழந்தை அந்த இரும்புப் பட்டைகள் இல்லாமல், நடந்து செல்வதைக் கண்டேன். நான், "ஓ, அதை அவளுக்குத் தெரியப்படுத்த முடிந்தால்," என்று நினைத்தேன். நான், "அன்பே," என்றேன். அவள், "கீட்டோஸ்" என்று சொல்லிக் கொண்டே இருந்தாள், கண்ணீர் அவளுடைய சிறிய வெளிறிய கன்னங்களில் வழிந்தோடியது. "கீட்டோஸ், கீட்டோஸ்." நான், "அன்பே," என்றேன். "ஓ, தேவனே," நான் சொன்னேன், "கர்த்தராகிய தேவன்... ஓ, தேவனே, என்னை ஏதேனும் பேசவிடும். நீ குணமாகிவிட்டாய்." அந்தச் சமயத்தில், அவர்கள் வந்தார்கள், ஒரு கூட்ட வீரர்கள், "வாருங்கள், அவர்கள் 'Only Believe' பாடி முடித்துவிட்டார்கள்," என்றார்கள், நான் போக வேண்டியிருந்தது, அவர்கள் என்னை உள்ளே தள்ளிக்கொண்டு போனார்கள்.

51அன்று இரவு, ஆராதனை முடியும் தருவாயில், என் சகோதரன் என்னிடம் வந்து, "அது போதும், அது போதும். உனக்கு நாளை இரவும் இன்னொரு ஆராதனை இருக்கிறது," என்றான். நான், "ஓ, பார், எத்தனை அட்டைகளை நீங்கள் கொடுத்தீர்கள்?" என்றேன். "ஓ, அவர்கள் ஒரு அட்டைக்கட்டையே கொடுத்திருக்கிறார்கள், நீங்கள் அவற்றை நாளை இரவு பயன்படுத்தலாம்," என்றான். பாருங்கள்? ஆங்கிலத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. நான், "இன்னும் சிலரை மட்டும் கூப்பிடுங்கள்," என்றேன். மேலும் நான், "ஜெப அட்டை, இன்னாரிலிருந்து இன்னார் வரை எனக்குக் கொடுங்கள்," என்றேன். தேவனுடைய பெரிய பராமரிப்பினால், அந்த வரிசையில் அடுத்ததாக அவள் இருந்தாள். இங்கே அவள் வந்தாள். நான், "சகோதரி ஐசக்சன், நான் சொல்வதை அப்படியே சொல்லுங்கள். மொழிபெயருங்கள்," என்றேன். நான், "அன்பே, நீதான் வெளியே அந்தத் தாழ்வாரத்தில் என்னைச் சந்தித்த சிறுமி. இயேசு கிறிஸ்து உன்னைக் குணமாக்கியிருக்கிறார். அங்கே போ, உட்கார்ந்துகொள், அந்த உதவியாளர்களில் சிலர் உன்னிடமிருந்து அந்த இரும்புப் பட்டையைக் கழற்ற அனுமதி யுங்கள்," என்றேன். நான் மற்றொருவரை அழைக்கும்போது, இதோ அவள் மேடையின் குறுக்கே வந்தாள், இரண்டு கால்களும் சமமாக இருந்தன, அந்த இரும்புப் பட்டைகளைத் தன் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக்கொண்டு, தேவ மகிமைக்காகக் கூச்சலிட்டுக் கொண்டு வந்தாள். ஆயிரக் கணக்கான பின்லாந்துக்காரர்கள் தங்கள் முகங்குப்புற விழுந்து கர்த்தராகிய இயேசு வுக்குத் தங்கள் வாழ்க்கையைக் கொடுத்தார்கள், குளிர்ந்துபோன சம்பிரதாயமான சபை அங்கத் தினர்கள் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.

52அது என்ன? "நீங்கள் உலகமெங்கும் போய், சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசிக்கிறவர்களால் இந்த அடையாளங்கள் நடக்கும்." ஒரு சிறிய பின்லாந்துக்காரர் மேல் தேவன் அக்கறையுள்ளவராக இருந்தால், அவர் ஒரு அமெரிக்கர் மேலும் அக்கறையுள்ளவராக இருக்கிறார். அவர் ஒரு சிறிய கறுப்புப் பையன், மஞ்சள் பையன், பழுப்பு நிறப் பையன் மேலும் அக்கறையுள்ளவராக இருக்கிறார். அவர் தேவனாகவே இருக்க வேண்டும். நம் கழுத்திலிருக்கும் விறைப்பை நம்மால் ஏன் எடுக்க முடியவில்லை? அற்புதங்களின் நாட்கள் முடிந்துவிட்டன என்று நமக்குக் கற்பிக்கப்பட்ட இறையியலை நம்மால் ஏன் பெற முடியவில்லை, கிறிஸ்து சொன்னதைப் பின்பற்ற முடியவில்லை? அவர், "எந்த மனுஷனும் பொய்யனென்று காணப்பட்டாலும், தேவனுக்கேற்ற சத்தியம் விளங்கப்பண்ணக்கடவன். இந்தக்கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை," என்றார். ஆகவே நீங்கள்-நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.

53நான் சொல்கிறேன், "கிறிஸ்து என்னும் கன்மலையின்மேல் நான் நிற்கிறேன், மற்ற நிலமெல்லாம் புதையுண்டாகும் மணல்." நான் களத்தில் இறக்க நேரிட்டால், என் கையில் கேடயத்தோடு போக விரும்புகிறேன். அடுத்த வாரம் எனக்கு நாற்பத்தொன்பது வயதாகிறது, நான் ஒன்றும் சிறு குழந்தை அல்ல. நான் ஒரு வயதான மனிதனாகிக் கொண்டிருக்கிறேன். முன்பு வளையத்தில் (ring) நின்ற இந்தத் தோள்கள், இறுக்கமாக இருந்த தசைகள், வயதாகி மென்மையடைகின்றன. மரணம் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய இடம் எனக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கிறது. எனக்கு அது தெரியும். என் இதயம் துடிக்கும் ஒவ்வொரு முறையும், நான் அந்த இடத்திற்கு ஒரு துடிப்பு நெருக்கமாக இருக்கிறேன். ஒருநாள் அது அதன் கடைசித் துடிப்பை எடுக்கும், நான் மரணம் என்று அழைக்கப்படும் அந்த இருண்ட இடத்திற்குள் செல்ல வேண்டியிருக்கும். நான் செய்ய விரும்பும் ஒரு விஷயம் இதோ: நான் ஒரு கோழையாக உள்ளே செல்ல விரும்ப வில்லை. என் கடைசி வேளை வந்துவிட்டது என்று எனக்குத் தெரியும்போது, நான் அவருடைய நீதியின் அங்கிகளை எனக்குள் போர்த்திக்கொள்ள விரும்புகிறேன், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் நான் அவரை அறிந்திருக்கிறேன் என்ற இந்த ஒரே நிச்சயத்துடன் என் இருதயத்தில் உள்ளே செல்ல விரும்புகிறேன், அவர் மரித்தோரிலிருந்து அழைக்கும்போது, அந்தப் பெரிய நாளில் மரித்தவர்களுக்கு நடுவிலிருந்து நான் வெளியே வருவேன்.

54என் நண்பரே, இன்று மதியம் அந்த நம்பிக்கை உங்களுக்குள் தங்கியிருக்கிறதா? நீங்கள் எந்தச் சபையைச் சேர்ந்தவராக இருந் தாலும், எத்தனை ஜெபங்கள் செய்திருந்தாலும், எத்தனை மெழுகுவர்த்திகளை ஏற்றியிருந்தாலும், எத்தனை அருள்நிறை மரியே (Hail Mary's) என்று கத்தியிருந்தாலும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் நீங்கள் அவரை அறியாவிட்டால், அது எல்லாம் வீண். அவர் ஜீவிக்கிறார்! அவர் ஜீவிக்கிறார்! கிறிஸ்து இயேசு இன்றும் ஜீவிக்கிறார், நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். நாம் நம் தலைகளைத் தாழ்த்தவோம்.

55மகத்துவமும் வல்லமையுமுள்ள யேகோவா தேவனே, நான் சாட்சியிட்ட இந்தக் காரியங்களுக்கு நீர் எனக்குச் சாட்சியாக இருக்கிறீர். நீர் அவற்றைச் செய்தபடியால், அவை உண்மை என்று உமக்குத் தெரியும். இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின கர்த்தராகிய தேவனே, இங்கே உள்ள ஒவ்வொரு அவிசுவாசியையும், இப்பொழுதே அவர் பேரில் ஒரு உண்மையான உயிருள்ள விசுவாசத்திற்கு நீர் உயிர்ப்பிக்க முடியும். ஆண்டவரே, இங்கே அமர்ந்திருக்கும் அநேகர் வெறும் பெயரள விலான சபை அங்கத்தினர்கள், அவர்கள் எல்லா விதமான வெவ்வேறான சபைகளுக்கும், பெந்தெகொஸ்தே, நசரேயன், மெத்தடிஸ்ட் மற்றும் எல்லா விதமான பிரிவுகளுக்கும் சொந்தமானவர்கள். ஓ தேவனே, அவர்கள் இன்னும் அந்தக் கோட்டைக் கடக்கவில்லை. சிலர் உம்மை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே இல்லை, மேலும் பரிசுத்த ஆவியானவர் சாட்சியாக இருப்பாராக, இங்கே அமர்ந் திருக்கும் நரைத்த தலைமுடி கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும், நான் ஒரு சிறிய பாவியான பையனாக இருந்தபோது சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களுக்கு, காலம் தவறிப் பிறந்த ஒரு பாவியான எனக்கு, உமது மகிமையைக் காணவும், தேவையுள்ளவர்களுக்கு அதை வெளிப்படுத்தவும் என் கண்களுக்கு நீர் சிலாக்கியம் கொடுத்திருக்கிறீர் என்பதை நீர் அறிந்திருக்கிறபடியால், அந்த மக்கள் என்னைப் பற்றிச் சொந்தமாக ஏதேனும் நினைக்கும்படி நான் இந்த வார்த்தைகளைச் சொல்லவில்லை.

56தேவனே, இன்று மதியம், பரிசுத்த ஆவியானவர் இங்கேயுள்ள ஒவ்வொரு இருதயத் தையும் பரவசப்படுத்தும்படியும், அவர்களுக்கு உள்ள தேவையை அவர்கள் உணரச் செய்யவும் அருளும். பிதாவே, விரும்புவர்களுக்கு, இன்று மதியம், கிறிஸ்துவை அவர்களுக்குக் கொடும். உமது ஊழியனின் ஜெபத்தைக் கேளும். உள்ளே வந்த சோகமான உள்ளங்கள், மற்றும் அவிசுவாசமுள்ள மற்றும் சந்தேகமுள்ள உள்ளங் கள் சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும் வெளியே செல்லட்டும். எங்கள் தலைகள் தாழ்த்தப் பட்டிருக்கும் போது. இங்கே உள்ள அனைவரிலும், யாரெல்லாம் அவரை விரும்புகிறீர்கள், அவருக்காக உங்கள் கையை உயர்த்துவீர்களா? "கர்த்தராகிய தேவனே, என்மேல் இரக்க மாயிரும், என்னை ஒரு உண்மையான கிறிஸ்தவனாக மாற்றும்," என்று சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அது நல்லது. இந்த நடு வரிசை முழுவதும். மறுபக்கத்தில் உள்ள வரிசை. ஓ, ஆம்...?... அநேக கைகள். பால்கனி (balcony), மேலே உள்ள இளம் பிள்ளைகள் அனைவரும், பத்து, பதினைந்து பதின்வயதினர் தங்கள் கைகளை உயர்த்தியிருக்கிறார்கள். இடதுபுறம். சரி, இங்கே வலதுபுறம், இந்த வழியில் எத்தனை பேர், "தேவன் இரக்கமாயிருப்பாராக, என்னை கிறிஸ்துவின் உண்மையான மெய்யான ஊழியனாக மாற்றும். இந்த நாள் முதல், நான் உம்முடையவனாக இருக்க வாக்குப் பண்ணுகிறேன், ஆண்டவரே. எனக்கு இப்பவே உதவும், என்னால் மிஷனரி களங்களுக்குச் செல்ல முடியாவிட்டால், களத்தில் இருப்பவர் களுக்காக ஜெபிக்க என் இருதயத்தில் ஒரு பாரத்தை வையும்," என்று சொல்லி உங்கள் கைகளை உயர்த்துங்கள். அது உங்களுக்கு நீதியாக எண்ணப்படும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சுற்றிலும் உள்ள அனைவரையும். அது சரி.

57பாவியான நண்பரே, இரக்கம் கேட்டு உங்கள் கைகளை உயர்த்தியிருக்கிறீர்கள், ஊற்றினிடத்தில் உங்களுக்காக இடம் இருக்கிறது. இரத்தத்தால் நிறைந்த ஒரு ஊற்று உண்டு இம்மானுவேலின் நரம்புகளிலிருந்து பெறப் பட்டது, பாவிகள் அந்த வெள்ளத்தில் மூழ்கும்போது, தங்கள் குற்றக் கறைகள் அனைத்தையும் இழக்கிறார்கள்: மரிக்கும் தருவாயில் அந்தத் திருடன் கண்டு களிகூர்ந்தான் அவன் நாளில் அந்த ஊற்றை, அங்கே நானும், அவனைப் போல் இழிவானவனாயிருந்தாலும், என் பாவங்கள் அனைத்தையும் கழுவலாம்: விசுவாசத்தினால், அந்த நதி உம் காயங்களிலிருந்து பாய்வதைக் கண்டதிலிருந்து, மீட்கும் அன்பு என் கருப்பொருளாக இருக்கிறது, நான் மரிக்கும் வரை அதுவே இருக்கும்: பின்பு ஒரு உன்னதமான, இனிமையான பாடலில், இரட்சிக்கும் உமது வல்லமையை நான் பாடுவேன், இந்த ஏழை மழலை பேசும், திக்குவாய் நாவு கல்லறையில் அமைதியாகக் கிடக்கும் போது:

58அங்கே உன் சின்னஞ்சிறிய இருதயத்தை தேவன் ஆசீர்வதிப்பாராக, அன்பே, ஒரு...?... இரண்டு வயதுக்கு மேல் இருக்காத சிறுமி, தன் பிஞ்சு கைகளை அசைக்கிறாள், அவளுடைய சிறிய கறுப்பு கண்கள் மேலே பார்க்கின்றன. ஓ, என் தேவனே, தேவன் அதுபோன்ற ஒரு சிறு குழந்தையிடம் பேச முடிந்தால், கொடூரமான, கல் நெஞ்சுள்ள பாவிகளின் நிலை என்ன? விஷயம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்கள் இருதயத்தை அநேக பழைய "உண்மைக் கதை" (True Story) பத்திரிகைகள் வழியாகவும், வானொலி மற்றும் தொலைக் காட்சியில் வரும் பழைய ஆர்தர் காட்ஃப்ரே (Arthur Godfrey) குப்பைகள் வழியாகவும் இழுத்துச் சென்றிருக்கிறீர்கள், அது மிகவும் கறுப்பாகவும் மரத்துப்போயும் விட்டதால், பரிசுத்த ஆவியால் இனிப் பேசக்கூட முடியாது. என்ன ஒரு அவமானம். அந்தச் சிறு குழந்தை... "அவள் என்ன செய்கிறாள் என்று அவளுக்குத் தெரியாது," என்று நீங்கள் சொல்கிறீர்கள். அவளுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் பரிசுத்த ஆவியானவருக்குத் தெரியும். "சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணா திருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப் பட்டவர் களுடையது," என்று அவர் சொல்லவில்லையா.

59நாம் ஜெபிப்பதற்கு முன், இதுவரை தங்கள் கைகளை உயர்த்தாத சில கைகள் இருக்குமானால், இப்போது, "சகோதரர் பிரான்ஹாம், நான் முழு சுவிசேஷத்தையும் நம்புகிறேன், என்னுடைய எல்லாவற்றையும் அவருக்கே அர்ப்பணிக்கிறேன். இதோ என் கை, ஆண்டவரே. நான் அதை உமது ஊழியராகிய சகோதரர் பிரான்ஹாமுக்கு உயர்த்தவில்லை, நான் அதை உமக்கு உயர்த்துகிறேன், ஆண்டவரே. இன்று மதியம் உமது புஸ்தகத்தில் என் பெயரை எழுதும், இந்த நாள் முதல் உமக்காக வாழ என்னை அனுமதிப்பீராக," என்று சொல்வீர்களா? தங்கள் கையை உயர்த்தாத சிலர். உங்கள் கையை உயர்த்துவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அம்மையாரே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, இளம் பெண்ணே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அங்கே பின்னால் இருக்கும் ஐயா, நீங்கள், நீங்கள், மற்றும் நீங்கள், அங்கே இருக்கும் அம்மையாரே. அங்கே பின்புறம் பால்கனியில், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சுற்றிலும் உள்ள அனைவரையும். சரி இப்போது, அது நல்லது. தேவன் உங்களோடு இருப்பாராக. நான் முரட்டுத் தனமாக இருக்கவில்லை, நான் உங்களைத் திட்டவில்லை - அப்படிச் செய்ய நினைக்க வில்லை, அவர் ஏதேனும் சொல்லும்படி நான் காத்திருக்கிறேன். இங்கே ஒரு நபர் திட்டு வாங்குவதற்குத் தகுதியானவராக இருக்கலாம், அவரிடம்தான் பரிசுத்த ஆவியானவர் பேசிக்கொண்டிருந்தார்...?... உங்கள் இருதயம் உங்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதா என்று உங்களுக்குத் தெரியும்.

60இப்போது, இந்தக் கைகளுக்காக நாம் ஜெபிப்போம், சுமார் இருபது அல்லது முப்பது, ஒருவேளை அதற்கு மேலும் உயர்ந்தன. அன்புள்ள தேவனே, அவர்கள் உம்முடை யவர்கள். அவர்கள் தங்கள் இருதயத்திலிருந்து உண்மையில் அதை அர்த்தப்படுத்தியிருந்தால், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்குக் காத்திருந்து, இப்பொழுதே ஆவியினால் பிறந்திருக்கிறார்கள். இந்த நிமிடத்தில் அவர்கள் உமது குடிகள், "ஏனெனில் என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் எவனும் என்னி டத்தில் வரமாட்டான். என்னிடத்தில் வருகிற யாவருக்கும், நான் நித்திய ஜீவனைக் கொடுப்பேன், கடைசி நாளில் அவனை எழுப்புவேன்." கர்த்தராகிய தேவனே, அவர்கள் உம்முடையவர்கள். அவர்கள் இந்தச் செய்தியின் வெற்றிக் கோப்பைகள். அவர்கள் பிதா குமாரனுக்குக் கொடுத்த அன்பளிப்புகள். அவர்கள் எப்படி அழிந்துபோக முடியும்? "நான் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன், அவர்கள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை" என்று நீர் சொன்னீர். அவர்கள் உம்முடை யவர்கள். அவர்கள் உமக்காக வாழட்டும், ஆண்டவரே. அவர்கள், ஒரு நல்ல சபையைக் கண்டுபிடித்து, அங்கே ஞானஸ்நானம் பெற்று, தங்கள் உறுப்புரிமையைச் சேர்த்து, மரணம் அவர்களை விடுவிக்கும் வரை கிறிஸ்துவின் சரீரத்திற்காக அங்கே வேலை செய்வார்கள் என்று நான் அறிவேன். என்றாவது ஒரு நாள், ஆண்டவரே, நாம் நதியினிடத்தில் வரும்போது, இதோ இங்கே அமர்ந்திருக்கும் ஆண்களும் பெண்களும், இந்த பூமியில் தங்கள் வீட்டுக்கு ஒருபோதும் திரும்ப மாட்டார்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்? ஒரு மாரடைப்பு, அல்லது சாலையில் விபத்து, குடித்துவிட்டு ஓட்டும் டிரைவர் ஒருவர் அவர்கள் மேல் மோதுவது, எதிர்காலம் எதை வைத்திருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் எதிர்காலத்தை யார் வைத்திருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம்.

61இப்போது, ஆண்டவரே, உமது புஸ்தகத்தில் அவர்கள் பெயரை எழுதும். உமது பார்வையில் எனக்குத் தயவு கிடைத்திருந்தால், உமது புஸ்தகத்தில் அவர்கள் பெயரை எழுதும், ஆண்டவரே. இப்போது என்னால் அவர்கள் கைகளைக் குலுக்க முடியாமல் போகலாம், ஒருவேளை வாழ்க்கையில் ஒருபோதும் முடியாது, ஆனால் எல்லாம் முடியும் போது ஒருநாள் நான் குலுக்க முடியும். உமது கிருபையினால், நான் செய்வேன். ஓ, இந்த மக்களின் மனங்களில் மிஷனரி ஊழியத்தை வையும். நாம் எப்படி ஒரு சபையிலிருந்து இன்னொரு சபைக்கு மதமாற்றம் செய்து இழுக்கிறோம், ஆனால் அவருடைய விலையேறப்பெற்ற நாமத்தைக் கூட ஒருபோதும் கேள்விப்படாத, இன்று மரித்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கானவர்களை நினைத்துப் பாருங்கள். ஆப்பிரிக்காவிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வாசல்களைத் திறந்தருளும், ஆண்டவரே. ஆதரிக்கவும், செல்லவும் பிரசங்கியார்ளின் இருதயங்களில் பாரங்களை வையும், ஏனென்றால் மணிநேரங்கள் முடிவடைந்து கொண்டிருக்கின்றன. அதை அருளும், பிதாவே. அவர்கள் இப்போது உம்முடையவர்கள். நான் அவர்களை உமக்குக் கொடுக்கிறேன்.

62என்றாவது ஒரு நாள், ஆண்டவரே, நானும் வரவேண்டும். அது இன்றாக இருக்கலாம். ஆனால் ஒரு நாள், நான் இந்த வேதாகமத்தை எனக்காகக் கடைசி முறையாக மூடப் போகிறேன். நான் அதை உணருகிறேன், பிதாவே. நான் என் கடைசி ஜெபத்தை ஜெபிக்கப் போகிறேன், நான் சாலையின் முடிவுக்கு வரும்போது, யோர்தானின் அலைகள் என் முகத்தில் மோதுவதை நான் உணரும் போது, நான் கடந்து வந்த ஒவ்வொரு முட்செடிப் புதரையும், ஒவ்வொரு மலையையும் திரும்பிப் பார்த்து, அந்தப் பழைய வாளை எடுத்து, நித்தியத்தின் உறையில் செருகி, தலைக்கவசத்தைக் கழற்றி, அதைக்கரையோரம் வைத்து, "உயிர்காக்கும் படகை வெளியே தள்ளும் ஆண்டவரே, நான் இன்று காலை வீட்டுக்கு வருகிறேன்," என்று கத்த விரும்புகிறேன். என் ஊழியம் முடியும் போது, நான் சமாதானத்தோடு போக என்னை விடும், ஆண்டவரே. காலம் நின்றுபோன, நித்தியம் என்றென்றும் தொடர்கிற அந்த இடத்தில், அங்கே என் நண்பர்களைக் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் நான் சந்திப்பேனாக. நாட்கள் வெப்பமாக இருக்கின்றன, சூரியன் மறைந்து கொண்டிருக்கிறது, நாகரிகம் மரித்துக் கொண்டிருக்கிறது, இயேசு வருகிறார். ஓ தேவனே, எங்களைச் சீக்கிரம் விழித்தெழச் செய்யும், எழுந்து நம்மை உலுக்கிக்கொள்ள, நம் சரீரங்களைக் கிள்ளிக்கொள்ள அல்ல, ஆனால் விழித்தெழ நம் ஆத்துமாக்களைக் கிள்ளிக் கொள்ளச் செய்யும், ஏனென்றால் நாம் நினைப்பதை விட நேரம் கடந்துவிட்டது. வியாதியுள்ளவர்களையும் பாதிக்கப் பட்டவர் களையும் குணமாக்கும், ஆண்டவரே. ஓ தேவனே, இன்றிரவு அப்படிப்பட்ட ஒரு இரவாக இருக்கட்டும், நம் மத்தியில் பலவீனமான ஒரு நபர்கூட இருக்கக்கூடாது. அதை அருளும். விரைவில் மற்றொரு கூட்டத்திற்குச் செல்லத் தயாராகும்போது எங்களை இப்போது ஆசீர்வதியும். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

63உங்கள் நேரத்தில் இன்னும் ஒரு கணம். பில்லி, நீ போவதைப் பற்றி அறிவிக்கச் சொன்னாயா - இந்த நாளிலிருந்து, நீ ஜெப அட்டைகளைக் கொடுப்பாய் என்று, சிலவற் றையா, அல்லது...? ஆறரைக்கா? ஆறரைக்கு. லியோ எங்கே? ஜீன்? அவர்களுக்கும் சில அட்டைகளைக் கொடுங்கள், அதனால் அவர்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டு உடனே விநியோகிக்க முடியும். சரி. ஆறரைக்கு.

64கவனியுங்கள், நான் என் ஜெபத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன். எத்தனை பேர் மிகவும் நன்றாக உணருகிறீர்கள்? "ஓ..." என்று சொல்லி உங்கள் கைகளை உயர்த்துங்கள். நாம் ஒருமுறை பாடுவோம்: நான் அவரை நேசிக்கிறேன் (எல்லோரும்), நான் அவரை நேசிக்கிறேன், ஏனெனில் அவர் முதலில் என்னை நேசித்தார் என் இரட்சிப்பை கிரயம் கொடுத்து வாங்கினார் கல்வாரி மரத்தில்.

65இப்போது இதை மன்னியுங்கள், இப்போது வரை நான் அதைக் கவனிக்கவில்லை. சரீரத்தில் என் சகோதரர்களில் ஒருவரான, டாக் (Doc)-ஐ நான் பார்க்கிறேன். நான் அவனை டாக் என்று அழைப்பேன், எட்கர் (Edgar). அவனும் அவன் மனைவியும் இங்கே அமர்ந்து... உன் கையை உயர்த்து, டாக். என் சகோதரன், என் சொந்த இரத்தச் சகோதரன், அங்கே இருக்கிறான், அவனும் அவன் மனைவியும், மற்றும் சகோதரர் மற்றும் சகோதரி வுட், டேவிட். முறுக்கப்பட்ட காலைக் கொண்ட ஏதோ ஒரு வகையான பையனைப் பற்றி நான் மறுநாள் இரவு பேசியது உங்களுக்கு நினைவிருக்கிறதா, அவனது அப்பா ஒரு யெகோவா சாட்சி என்பது? அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்தப் பையன் இப்போது இங்கே நின்று கொண்டிருக்கிறான். உன் கையை உயர்த்து, டேவிட். நீ வெளியே நடந்து வருவாயா, ஒரு நிமிடம்? நான் உன்னை வேடிக்கைக் காட்ட விரும்பவில்லை, டேவிட். முறுக்கப்பட்ட காலுக்குத் தேவன் செய்வது இதுதான். அவனைத் தொடக்கூட இல்லை, கூட்டத்தில் அமர்ந்திருந்தான். இந்த வழியாக நடந்து வா, டேவிட். அவனுக்கு அடியில் முறுக்கப்பட்ட காலைக் கொண்டிருந்த பையன் அதோ இருக்கிறான். இங்கே மேலே வா. நான்-நீ பார்க்க நல்ல பையனாக இருக்கிறாய், நாங்கள் அனைவரும் உன்னைப் பார்க்க விரும்புகிறோம். அது அங்கே அவனது அம்மா என்று எனக்குத் தெரியும். எந்தக் கால் அது, டேவிட்? அவனுக்கு இப்போது தெரியவில்லை....?..., உன்னை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி, டேவிட். இந்தப் பையனின் கால் அவனுக்கு அடியில் முறுக்கப்பட்டிருந்தது. கர்த்தராகிய தேவன், இந்தக் கட்டிடத்தை விட வெகு தொலைவில் பின்னால் அமர்ந்திருந்து, அவனது காலைக் குணமாக்கினார்.

66டாக்? நீதான் பிரான்ஹாம்களில் அழகானவன். ஒரு நிமிடம் இங்கே மேலே வா. சரி. சகோதரர் பர்ன்ஸ் (Burns) அங்கே பின்னால் நின்று கொண்டிருக்கிறார். எனக்கு நினைவிருக்கிறது... கர்த்தருடைய தூதரின் அந்தப் புகைப்படம் எத்தனை பேரிடம் இருக்கிறது? ஆம். அவர் மனைவி (டாக் வரும்போது), அல்லது... அவர் மனைவி... அவர் புற்றுநோயால் மருத்துவமனையில் மரித்துக் கொண்டிருந்தார். (டாக், உன்னைப் பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.) அதனால் அவர்கள்... அவர் மனைவி மருத்துவமனையில் இருந்தார்... சகோதரர் நெவில் ஏற்கனவே அறிமுகப் படுத்தப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்... சகோதரர் நெவில், கூடாரத்திலிருந்து (Branham Tabernacle) வந்த போதகர் அதோ அங்கே நின்று கொண்டிருக்கிறார். நீங்கள் அறிமுகப் படுத்தப்பட்டீர்களா, சகோதரர் நெவில்? அப்படியானால் உங்களை இங்கே மேடைக்குக் கொண்டு வாருங்கள். சகோதரர் நெவில். இங்கே ஒரு மெத்தடிஸ்ட் போதகர் இருக்கிறார், என் பாப்டிஸ்ட் சபையை மேய்க்கிறார், ஆனால் நாங்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்ற மெத்தடிஸ்ட் மற்றும் பாப்டிஸ்ட். இந்தப் பையன் ஆஸ்பரி கல்லூரியைச் (Asbury College) சேர்ந்தவன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரர் நெவில்,...?... ஓ, அது நல்லது. இப்போது, எங்களிடம் நிறைய பேர் இருக்கிறார்கள்...

67ஜெஃபர்சன்வில்லிலிருந்து எத்தனை பேர் இங்கே இருக்கிறீர்கள்? இங்கே சுற்றிலும் இன்னும் யாராவது இருக்கிறார்களா? சபையைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து, உங்கள் கையை உயர்த்துங்கள். ஓ, ஆம்...?... சகோதரர் பீலர் (Beeler), ஜெஃபர்சன்வில்லிலிருந்து வந்திருக்கும் மற்றொரு பிரசங்கியார் அங்கே பின்னால் இருப்பதை நான் பார்க்கிறேன். ஒரு பெரிய கும்பல்... இன்றிரவு அவர்கள் எல்லோரையும் இங்கே மேலே கொண்டு வந்து, அறிமுகப் படுத்த முடியாது. சகோதரி பர்ன்ஸ் பற்றி இதை நான் சொல்ல விரும்புகிறேன். அவள் இப்போது மகிமையில் இருக்கிறாள். சகோதரர் பேங்க்ஸ் வுட் மற்றும் நான், நாங்கள் இருவரும் கென்டக்கியைச் சேர்ந்தவர்கள், நாங்கள் அணில் வேட்டையாடிக் கொண்டிருந்தோம். காட்டிலிருந்து ஏதோ ஒன்று என்னை அழைத்தது, அது இந்தப் பையனுடைய அப்பா. "என்ன விஷயம், நாங்கள் வீட்டுக்குப் போக வேண்டும்," என்று நான் நினைத்தேன். நான், "நான் எதற்காக வீட்டுக்கு வருகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை, சகோதரர் பேங்க்ஸ்," என்றேன். நான் கொஞ்சம் ஓய்வெடுக்க முயன்று கொண்டிருந்தேன். நான், "நான் தோட்டாக்கள் (shells) வாங்குவதற்குச் செல்கிர்க்ஸுக்கு (Selkirks) போகிறேன்," என்றேன். எங்களால் இலக்குகளைச் சரியாகச் சுட முடியும், அதனால் நாங்கள் சுற்றிச் சென்றோம். நான், "சகோதரர் பேங்க்ஸ்..." என்றேன். அவர் கென்டக்கியைச் சேர்ந்தவர். நான், "நீங்கள் மூலையில் வண்டி ஓட்டிக்கொண்டு செல்லுங்கள், நான் செல்கிர்க்ஸுக்குள் சென்று தோட்டாக்களை வாங்கிக் கொண்டு வருகிறேன், நீங்கள் உள்ளே வரும்போது என்னைச் சந்தியுங்கள். அந்தத் தெருவில் உங்களால் வண்டியை நிறுத்த முடியாது," என்றேன். அவர் தவறான இடத்தில் சுற்றிலும் சுற்றிலும் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார். நான் வெளியே நின்று கொண்டிருந்தேன், "சரி, என்ன விஷயம்? அந்த ஆள் எங்கே இருக்கிறார்?" என்று நினைத்தேன். சுமார் முப்பது நிமிடங்களில், அவர் வேறொரு நகரத் தொகுப்புக்கு (city block) வெகு தொலைவில் தெருவைச் சுற்றிச் செல்வதை நான் கவனித்தேன். "ஓ," நான் நினைத்தேன், "அந்த ஆள் லூயிஸ்வில்லில் வளர்ந்தவர். அவர் எங்கே இருக்கிறார் என்று அவருக்கு ஏன் தெரிய வில்லை? அவர் அதைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறார், பாருங்கள், செல்கிர்க்ஸ் அங்கே இல்லை, அவர் பத்து அல்லது பதினைந்து சுற்றுகள் வந்துவிட்டார்."

68எனவே அவரை நிறுத்துவதற்காக நான் தெருவில் ஓடினேன், அவர் சுற்றி வந்தபோது, சகோதரி பர்ன்ஸ்... சகோதரர் பர்ன்ஸ் அவர்கள் தெரிந்துகொள்ளும்படி அங்கே உங்கள் கையை உயர்த்துவீர்களா? அவருடைய மனைவி... அவர் மண்ணீரலில் (spleen) புற்றுநோய் வந்து மரித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு பாப்டிஸ்ட் என்று நான் நம்புகிறேன், நான் தவறாக நினைக்கவில்லை என்றால், கென்டக்கியைச் சேர்ந்தவர், அங்கே வீட்டில் சுகமடைந்தார், இந்த வருடங்கள் எல்லாம் வாழ்ந்தார். அவர் மிகவும் மோசமான புற்றுநோயுடன் மருத்துவ மனையில் இருந்தார். மருத்துவர் அவரைக் கைவிட்டிருந்தார். அவருடைய அன்பான, இனிய மனைவி, "கர்த்தராகிய தேவனே, சகோதரர் பிரான்ஹாம் எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது," என்றாள். அவள் போய் அந்தப் புகைப்படத்தை எடுத்து, தரையில் வைத்தாள், மண்டியிட்டாள். அவள், "ஓ, தேவனுடைய தூதரே, இந்தக் காகிதத்தில் யாருடைய படம் இருக்கிறதோ, சகோதரர் பிரான்ஹாமை என்னிடம் மிகச் சீக்கிரம் அனுப்பும்," என்றாள். அவள் எழுந்து, "ஓ, நான் என் பயன்பாட்டுக் கட்டணத்தைச் (utility bill) செலுத்த வேண்டும்," என்றாள். அவள் நகரத்திற்குள் மைல் கணக்கில் சென்றாள். அவள் பயன்பாட்டுக் கட்டணத்தைச் செலுத்தினாள், ஏதோ ஒன்று அவளை மூலையில் வழிநடத்தியது. அவள் அந்த மூலைக்கு வந்தபோது, நான் அந்த மூலையில் இருந்தேன். அங்கே அது இருந்தது. அவள் சகோதரர் பர்ன்ஸ் பற்றி என்னிடம் சொன்னாள், மற்றும் கர்த்தராகிய தேவன் அவரை மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்தார். சாட்சியிட்ட பிறகு, இதோ இன்று அவர் நிற்கிறார். சகோதரர் பேங்க்ஸை தேவன் தவறான சதுக்கத்தில் (square) சுற்றிலும் சுற்றிலும் போக வைத்தார். தேவன் எங்களை அந்த இடத்திற்குப் பிடிக்கும் வரை எங்களை அங்கே பிடித்து வைத்தார். அவர் ஜெபத்திற்குப் பதிலளிக்கிறார். நீங்கள் அதை நம்புகிறீர்களா? ஆமென் என்று சொல்லுங்கள். [சபையார் ஆமென் என்று சொல்கிறார்கள்] அவர் இன்றும் ஜீவித்து ஆளுகை செய்கிறார். [சகோதரர் பிரான்ஹாம் ஒருவரிடம் பேசுகிறார்] சொல்வதற்கு ஏதேனும் இருக்கிறதா?...?...

69இந்தப் பழைய பாணியிலான பாடல் களை நான் நேசிக்கிறேன், நீங்கள் நேசிக் கவில்லையா? நாம் பாடுவோம், நாம் சந்திக்கும் வரை (Till We Meet). நீங்கள் பாடுவீர்களா? சரி. ஒரு இசை கொடு, மகனே, உன்னால் முடிந்தால். நாம் சந்திக்கும் வரை. சரி. நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடு இருப்பாராக, அவருடைய ஆலோசனைகள் உங்களை வழிநடத்தி, தாங்கட்டும், அவருடைய ஆடுகளோடு உங்களைப் பாதுகாப்பாக மந்தையில் சேர்க்கட்டும், தேவன் உங்களோடு இருப்பாராக...

70அது நிறையக் கூச்சலிடுவதை விட, அதிகமாகத் தேவனைப் போல ஒலிக்கிறது அல்லவா? இப்போது கேளுங்கள், உங்களுக்குப் பக்கத்தில், உங்களுக்கு முன்னால், உங்களுக்குப் பின்னால், உங்கள் பக்கவாட்டில் உள்ள ஒருவருடன் கைகுலுக்கிக் கொள்ளுங்கள், உங்கள் இருக்கையை விட்டு எழாதீர்கள். நாம் இன்னும் முடிக்கவில்லை, சும்மா கைகுலுக்கிக் கொள்ளுங்கள். நாம் சந்திக்கும் வரை, சந்திக்கும்... நீங்கள் மெத்தடிஸ்ட் மற்றும் பாப்டிஸ்ட் அனைவரும் இப்போது, பெந்தெகொஸ்தேக் காரர்கள், பிரஸ்பிடீரியன்கள், மேலே பால்கனியில், கைகுலுக்கிக் கொள்ளுங்கள். நாம் இயேசுவின் பாதத்தில் சந்திப்போம், (சந்திக்கும் வரை,) சந்திக்கும் வரை, சந்திக்கும் வரை, நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடு இருப்பாராக. (மெதுவாக) சந்திக்கும் வரை... (இப்போது, அவருக்காக உங்கள் கையை உயர்த்துங்கள்), சந்திக்கும் வரை... (ஓ, அது எனக்குப் பரலோகம் போல இருக்கிறது) நாம் இயேசுவின்... (ஒருவேளை இரவுக்கு முன்) சந்திப்போம் சந்திக்கும் வரை, சந்திக்கும் வரை, நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடு இருப்பாராக. இப்போது, நாம் நம் தலைகளைத் தாழ்த்தும்போது, அதை முணுமுணுப்போம். [சகோதரர் பிரான்ஹாம் மற்றும் சபையார் முணுமுணுக்கிறார்கள்] (சந்திக்கும் வரை,) சந்திக்கும் வரை, சந்திக்கும் வரை, நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடு இருப்பாராக. இப்போது நம் தலைகள் தாழ்த்தப் பட்டிருக்க. ஜெபத்தில் நம்மை விடுவிக்க, ஜெஃபர்சன்வில்லில் உள்ள பிரான்ஹாம் கூடாரத்தைச் சேர்ந்த நமது அன்பான, நேசத்துக்குரிய போதகர், சகோதரர் ஆர்மென் நெவில் (Orman Neville) அவர்களை நான் கேட்கப் போகிறேன். சகோதரர் நெவில். ஒரு மிஷனரி பயண உரை