1 காலை வணக்கம். இக்காலையில் மீண்டும் இங்கு கர்த்தருடைய ஆராதனையில் இருப்பதற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். வெளியே மோசமான காலநிலை காணப்படுகிறது. ஆனால், ஓ, உள்ளேயோ, மிகவும் அருமையாக இருக்கிறது. வெளியேயிருந்து கொண்டு உள்ளே பார்ப்பதைவிட உள்ளேயிருந்து கொண்டு, வெளியே பார்ப்பது நன்றாக இருக்கிறது. (அவ்வாறில்லையா?)… 2 கடந்த இரவு நல்ல ஓய்வு கிடைத்தது, அதனால் இக்காலையில் மிக நலமாகவே உணருகிறேன். கடந்த இரவு நமக்கு ஒரு அற்புதமான நேரம் உண்டாயிருந்தது, நமக்கு உண்டாயிருக்கவில்லையா? அப்படியே ஒரு அற்புதமான வேளையது! அதை நான் போற்றுகிறேன். ஷ்ரிவ்போர்ட்டில் நடைபெற்ற கூட்டத்தைப் போலவே நமக்குண்டாயிருந்த…நேற்றிரவுக் கூட்டமும் இருந்தது. ஏறத்தாழ அக்கூட்டத்தில் ஏற்பட்ட ஆவியின் அசைவு தொடர்ந்து இப்பொழுதும் இக்கூட்டத்திலும் ஏற்பட்டதாக இருந்தது. உ—ஊம். எனவே அவருடைய தயவு, இரக்கம் இவைகளுக்காக நாம் தேவனுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாகவும், மிகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாகவும் இருக்கிறோம். நீங்களும் கூட அவர் நம்மை வழி நடத்தவும், நமக்கு வழிகாட்டும்படியாகவும் உங்கள் ஆவியை அவரிடம் ஒத்துழைப்போடு சமர்பித்து இருந்தீர்கள்.
23 பாருங்கள், நீங்கள் பேசுவதைக் கேட்டு கோபமடையும் கூட்டம் உங்கள் முன் இருந்தால், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் ஒன்றையும் வெளிப்படுத்தமாட்டார். உங்களோடு மனதொருமித்து கிரியை செய்யும் ஒரு கூட்டம் உங்களுக்கு இருக்க வேண்டும். “அவர்கள் ஓரிடத்தில் ஒருமனப்பட்டு கூடிவந்தார்கள்.” அப்பொழுது வானத்திலிருந்து சடுதியாய ஒரு முழக்கம் உண்டாயிற்று என்று பார்க்கிறோம். பாருங்கள். ஆனால் உங்களுக்கு கிடைத்திருப்பது…நான் எவ்வளவு அதிகமாய் ஜெபித்தாலும், இரவு பகலும் ஆய்ந்து படித்து கர்த்தருக்கு முன்பாக ஜெபித்தாலும் சரி, நான் ஒருவேளை அபிஷேகம் என்மேல் தங்கினவனாய் இங்கே உள்ளே நடந்து வருகையில், அந்த கசப்புணர்வு, பாருங்கள், அவர்—அவர்…மக்களிடையே காணப்பட்டால், அப்பொழுது அவையொன்றும் கிரியை செய்யாது, அவ்வித உணர்வு அவரை உடனே துக்கப்படுத்துகிறது. அவர் ஒன்றையுமே வெளிப்படுத்தமாட்டார். ஆனால் அபிஷேகத்துடன் இங்கே உள்ளே நடந்து வருகையில்; அபிஷேகத்தின் கீழாக சபையினரும் இருப்பதை நீங்கள் உணருகையில், அப்பொழுது தான் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்ய ஆரம்பிக்கிறார். அப்பொழுது அவர் அசைவாடி நமக்கென மகத்தான காரியங்களைச் செய்கிறார். எனவே, உங்களுக்குப் புரிகிறதா?
34 மேய்ப்பன் அவர்களிடம் நான் இன்னும் பேசவில்லை… நம்பிடுவாய் என்ற பாடலைக் கேட்டதும் நான் உள்ளே வந்துவிட்டேன். அவர் இன்று காலைக்காக என்ன தீர்மானித்திருக்கிறார் என்பதைக் குறித்து அவரிடம் பேசவில்லை. இப்பொழுது சகோதரன் நெவில் அவர்களே! என்னவென்று நான் உங்களுக்குச் சொல்லுவேன். நான் இந்த சிறிய பாட வகுப்பை ஆரம்பித்து, ஏறக்குறைய பதினொரு மணி வரைக்கிலும் நான் தொடர்ந்து பேசுகிறேன், சரி, அதன்பிறகு நீங்கள் ஆராதனையை மீண்டும் எடுத்து நடத்தி, பிரசங்கிக்க ஆரம்பித்துவிடுங்கள். அது எப்படியிருக்கும்? [சகோதரன் நெவில் அவர்கள், “ஆம், அபிஷேகத்தின் கீழாக நடத்தப்படுகையில், அதை தடை செய்யாமல், நீங்கள் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டே இருங்கள்” என்று கூறுகிறார்.—ஆசி.] ஓ, அபிஷேகமானது பின்னால் இங்கேயும் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன், அபிஷேகமானது பின்னால் இங்கும் கூட வருகிறது. அவர் ஒரு…
45 சகோதரன் நெவில் அவர்கள் எப்பொழுதும்…இதற்கு முன் வந்திராத புதியவர்களுக்கு அவரைக் குறித்து நான் கூற விரும்புகிறேன். அவரது (முகத்திற்கு முன்பாக முகஸ்தியாக எதுவும் நான் சொல்லவில்லை. ஆனால்) அவர் ஒரு மிகவும் கிருபை பெற்றவரான மனிதர், எப்பொழுதும் அப்படித்தான் இருந்திருக்கிறார். அவர் வேதவாக்கியத்தை வாசித்து, அதை ஜீவித்துக் காண்பிப்பவராக காணப்படுகிறார். அவர் எப்பொழுதும் கிறித்துவுக்குள்ளாக “கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக் கொள்ளுங்கள்” என்னப்பட்டவராக இருக்கிறார். அவர் எப்பொழுதும் பிறரை கனம்பண்ணுகிறதில் முந்திக்கொள்பவர். நான் அவரை அறிந்த நாள் முதலாய் அவர் அப்படிப்பட்டவராகவே இருந்து வந்திருக்கிறார். அவர் இக்கூடாரத்தில் வந்த நாள் முதலாய் அல்ல, அநேக ஆண்டுகளுக்கு முன்பாக நான் அவரை அறிந்த காலம் முதற்கொண்டே அவர் அவ்விதமாகத்தான் இருந்து வந்திருக்கிறார். முதன்முதலாக நான் அவரை சந்தித்து அவரை அறிந்துகொள்ள சென்றதை நான் நினைவு கூருகிறேன். அவர் ஹோவர்ட் பார்க் என்ற இடத்திலுள்ள மெதோடிஸ்ட் சபையில் பிரசங்கிப்பதைக் கேட்க சென்றிருந்தேன். அது அநேக ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தது. அது இருபது அல்லது அதற்கும் அதிகமான வருடங்களுக்கு முன்னர் என்றே (நான் கருதுகிறேன்) அப்பொழுதிலிருந்து அவரை எனக்குத் தெரியும். அவர் ஒரு வேலையுங்கூட செய்து வந்தார். அவர் ஹென்றிவில் என்ற ஊரிலிருந்து வந்தவர். அங்கே அவர் வனங்கள் சம்மந்தமான பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் தன் பிழைப்புக்காக அவ்வேலையை செய்து கொண்டே பிரசங்கமும் செய்து வந்தார். நானும் சமீபகாலம் வரையிலும் அவ்வாறு வேலை செய்து வந்திருக்கிறேன். அதே விதமாகத்தான் அவரும் இருந்தார். அதன்பிறகு, நாங்கள் இருவரும் தேவனுடைய ஊழியத்தைத் தவிர வேறு எந்த வேலையும் செய்ய முடியாத அளவுக்கு இருந்த கட்டத்தை ஆரம்பித்தோம். எனவே நான், அதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். நான் எங்களிருவருடைய புதிய எஜமானுக்காக மகிழ்ச்சியடைகிறேன். சகோதரன் நெவில், நீங்கள் அவ்வாறு மகிழ்ச்சியடையவில்லையா? ஆம் ஐயா! நான் அதை நிச்சயமாக விரும்புகிறேன். ஆம் ஐயா. நான் அவரோடு மிகவும் திருப்தியடைந்திருக்கிறேன்!
56 இப்பொழுது சிறுவருக்கான ஞாயிறு வேதபாட பள்ளி வகுப்புகளை அவர்கள் நடத்தப் போவதில்லை என்று நான் நம்புகிறேன். ஆம். சிறுவர்களுடைய ஞாயிறு வேதபாட வகுப்பு, ஏனெனில் அவர்களுக்கென இருந்த அந்த அறையில் தடுப்புகளெல்லாம் பிரித்து அகற்றப்பட்டதால் அவர்களுக்கு இடமில்லாமற் போய்விட்டது, அதனால் சபையினர் கூடிவர இடங்கொள்ளுமளவுக்கு இடம் கிடைத்துள்ளது.
67 இப்பொழுது, இன்றிரவில் நாம் அந்த முடிவான மகத்தான காலமாகிய லவோதிக்கேயாவைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். நேற்றிரவில் நாம் பிலதெல்பியாவின் காலத்தை எடுத்துக் கொண்டு, லவோதிக்கேயா சபையின் காலத்தின் துவக்கத்திற்குள் வந்து, இரு சபைக் காலத்திற்கும் நடுவில் இருக்கும் அந்த இடைப்பட்ட காலத்தைக் குறித்துப் பார்த்தோம். அதன்பிறகு, “திறந்த வாசல்” “கொஞ்சம் பெலன்” “என் வார்த்தையைக் காத்துக் கொண்டாய்,” “என் நாமத்தைப் பற்றிக் கொண்டிருந்தாய்” என்பவைகளைப் பற்றிய இவ்விரு சபைக்காலத்திற்கும் இடைப்பட்ட காலத்திற்குரிய மகத்தான இரகசியங்களை தேவன் நமக்கு வெளிப்படுத்த ஆரம்பித்தார். அச்சிறு காரியங்களையெல்லாம் தேவன் எவ்வாறு நமக்கு மிக அற்புதமாக மெய்பித்துக் காண்பித்தார் என்பதைப் பார்க்கையில், நாம் அதற்காக மிக, மிக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.
78 நம் மத்தியில் புதிதாக விஜயம் செய்துள்ள வியாதியுள்ள மக்கள் யாராகிலும் இருப்பின், ஒரு காரியத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள், அதாவது வியாதியஸ்தருக்காக அடுத்த ஞாயிற்றுக்கிழமையன்று நாம் ஜெபம் வைத்திருக்கிறோம். அது கர்த்தருக்கு சித்தமானால் நடக்கும். நான் அதை “கர்த்தருக்கு சித்தமானால்” என்று எப்பொழுதும் குறிப்பிடுவதை கவனியுங்கள். “கர்த்தருக்கு சித்தமானால்” என்று கூற வேண்டும் என்று வேதம் கூறுகிறது. இது வரைக்கிலும் நமக்கு திட்டவட்டமாகத் தெரியவில்லை. நான் இங்கிருப்பேனா, அல்லது சபையானது இங்கு இருக்குமா, நாம் யாவரும் இங்கு இருப்போமா என்றும், மற்றுமுள்ள விஷயங்களையும் அவர் எனக்கு ஒருபோதும் சொல்லவில்லை. அப்படியானால், அது அவருக்கு சித்தமாயிருக்குமானால், நாம் இங்கு இருப்போம். நீங்கள் பாருங்கள். அவருக்கு சித்தமில்லையெனில், அப்பொழுது நிச்சயமாக நாம் இருக்கமாட்டோம்.
89 வானொலியின் மூலமாக சகோதரன் நெவில் மற்றும் இங்கிருக்கிற இந்த சகோதரன் மற்றும் வானொலி ஒலிபரப்புச் செய்கிற ஏனையோரும் அதைப் பற்றி தொடர்ந்து அறிவித்துக் கொண்டேயிருப்பார்கள். ஞாயிற்றுக் கிழமை காலையில் ஜெபிப்பதற்காக பெருங்கூட்டமான மக்கள் வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனவே ஞாயிறு காலையில் முடிந்த அளவு முன் கூட்டியே வந்துவிடுங்கள். நாங்களும் வந்துவிட விரும்புகிறோம். நாம்…நல்லது, நாம் பார்க்கலாம்…நான்…ஒரு வேளை இதுபோல் பெருங்கூட்டமாக வந்துவிட்டால், அச்சமயங்களில், ஜெப அட்டைகள் கொடுத்து ஒழுங்கு செய்வதுதான் சரியாக இருக்கும், ஏனெனில் அவர்கள் ஒருவரையொருவர் நெருக்கிக் கொண்டு மக்கள் திரண்டு விடுவர். ஆகவே அதை ஒழுங்குபடுத்திச் செய்தால் அப்பொழுது ஒவ்வொருவராக வந்து ஜெபித்துக்கொண்டு போகலாம் என்று நான் கருதுகிறேன்… அது மக்கள் மத்தியில் குழப்பத்தை நீக்கிவிடும் என்பதை நீங்கள் அறிவீர்கள். 10 அப்பொழுது…உங்கள் அட்டையானது வரிசைப்படி அழைக்கப்படுகிற வரையிலும் நீங்கள் எழுந்திருக்க வேண்டியது அவசியமில்லை. நீங்கள் வியாதிப்பட்டு, உடல்நிலை மோசமாக இருந்து கொண்டிருந்தால், நீங்கள் எங்கே உட்கார்ந்திருக்கிறீர்களோ, அங்கேயே இருக்கலாம், வீணாக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை. உங்களுடைய அட்டையானது அழைக்கப்படும் போது, மேலே வந்து ஜெபித்துக் கொண்டு நீங்கள் திரும்பிச் செல்லலாம். பிறகு அதேபோல், அடுத்தவர் தன் முறைப்படி வருவார். இவ்வாறான முறையை நாம் அனைவருக்கும் கடைப் பிடிக்க விரும்புகிறேன். நான் வழக்கமாக, ஒரு சில பேர்களை முன்னுக்கு அழைப்பதுண்டு, அவர்கள் காத்துக் கொண்டிருக்கையில், யாராவது உடல்நிலை பாதிப்பால் கஷ்டமாக உணருகையில் அவர்கள் அமருவதற்காக ஆசனங்களை வாலிபர்களைக் கொண்டு போடச் செய்வதுண்டு. அதைவிட அவர்கள் இருக்குமிடத்தில் தங்கள் ஆசனங்களிலேயே அமர்ந்திருக்கச் செய்து, அவர்களுடைய எண்ணானது அழைக்கப்படுகையில் வந்து ஜெபித்துக் கொண்டு போகலாம். அது வரையில் அவர்கள்—அவர்கள் ஆசனங்களிலேயே காத்திருக்கலாம்.
911 நான் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசங்கொண்டுள்ளேன்: அது வேதத்தின் மகத்தான போதகங்களில் ஒன்றானதாயுள்ளது. ஆனால் தெய்வீக சுகமளித்தல் என்பது தெய்வீக சுகமளித்தலைப் பெறுவதைவிட அதிக அர்த்தமுள்ளதாயுள்ளது. தெய்வீக சுகமளித்தல், “மீண்டும் வரப்போகிற ஒரு தேவன் உண்டு” என்று கூறுகிறது. தெய்வீக சுகமளித்தல் எதைக் குறித்து பேசுகிறது? அது நமது உயிர்த்தெழுதலின் அச்சாரமாகும். தெய்வீக சுகமளித்தல் என்ற ஒன்று இல்லாவிடில், அப்பொழுது உயிர்த்தெழுதல் என்ற ஒன்றும் இருக்காது, பாருங்கள். இப்பொழுதும் நம்மை அபிஷேகிக்க பரிசுத்த ஆவி என்ற ஒன்றும் இருக்காவிடில், அப்பொழுது வரப்போகிற உலகில் நித்திய ஜீவன் என்ற ஒன்றும் இருக்காது. வேதமோ, “இது நமது மீட்பின் அச்சாரமாயிருக்கிறது” என்று உரைத்துள்ளது. அச்சாரம் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? அது “முன் பணமாக” இருக்கிறது. பாருங்கள். நீங்கள் போய் ஒரு பண்ணையை விலைக்கு வாங்கினீர்களென்றால், அதற்கு விலைக்கிரயமாக பத்தாயிரம் டாலர்கள் வேண்டுமென்று சொன்னால், நீங்கள் அதற்கான் முன் பணமாக இரண்டாயிரம் டாலர்களை செலுத்தினால், அதை அவர்கள் “அச்சாரம்” என்றழைக்கிறார்கள். இப்பொழுது, இந்த பரிசுத்த ஆவியின் அபிஷேகமானது வரப்போவதின் அச்சாரமாக இருப்பின், ஓ, நாம்—நாம் முழுக் கிரயத்தையும் பெற்றுக்கொள்ளும்போது அது என்னவாயிருக்கும்? அது மகிமையானதாயிருக்குமே!
1012 இப்பொழுது இன்று காலையில், கர்த்தருக்குச் சித்தமானால்,…சபைக் காலங்களுக்கு இடையில் உள்ள அந்த சில காரியங்களை நாம் இணைக்க முயற்சிக்கப் போகிறோம். (இவைகள் சரியாக இங்கே உள்ளன), அங்கே ஏதோ நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர், மீதியாயிருக்கிறவர்கள், நித்திரை செய்யும் கன்னியர், புத்தியுள்ள கன்னியர், பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்படுதல், மிருகத்தின் முத்திரையிடப்படுதல் ஆகிய இந்த காரியங்களைப் பற்றி பார்க்கலாம். இது காலத்தின் முடிவாக இருக்கிறது, அனைத்து காரியங்களும் இங்கே இந்த ஒரே இடத்தில் தான் வந்து விழுகிறது. எனவே நாம் குளிர் காலத்திற்கு முன்பாக மீதமுள்ளவைகளையும் பார்த்து முடித்து வெளிப்படுத்தின விஷேஷப் புத்தகத்தை முடித்ததாக வேண்டும். அது எவ்வாறு ஒன்றாக இணைகிறது என்பதைப் பாருங்கள்.
1113 நீங்கள் எப்போதாவது கவனித்தீர்களா? திரு வுட் அவர்களே, நாகரிகமானது அதேவிதமாக பயணம் செய்தது. அது ஒரு…இந்த மனிதனானவன் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியில் தோன்றியது முதற்கொண்டு இருந்ததுபோலவே, தொடர்ந்து ஆறு புலன்களை, இல்லை ஐம்புலன்களைக் கொண்டவனாய்தான் இருக்கிறான். ஆனால் இந்த கடைசியில் சிறிது காலத்திற்குள், அதாவது கடந்த நூறு ஆண்டுகளில்… என்னே! முன்காலத்தில் அவன் மாட்டு வண்டியில் மெதுவாக வந்து கொண்டிருந்தான். கடந்த நூறு ஆண்டு காலத்தில், அவன் மாட்டு வண்டியிலிருந்து மணிக்கு இரண்டாயிரம் மைல்கள் வேகத்தில் பறக்கும் ராக்கெட் காலத்திற்குள் வந்து விட்டான். அந்தவிதமாகத்தான் மாண்டு வண்டியிலிருந்து ராக்கெட்டிற்கு வேகமாக வந்துவிட்டான். பாருங்கள், இது கடந்த சில ஆண்டுகளாக மாத்திரமே இருந்து வருகிறது, ஏன், கடந்த ஐம்பது ஆண்டு காலத்திற்குள்தான் இதெல்லாம் நடக்கிறது என்றே நான் கூறுவேன்.
1214 யூடிக்கா பைக் என்ற இடத்தில், நான் ஒரு சிறுபையனாக இருந்த பொழுது, அங்கே எல்மெர் ஃபிராங்க் என்ற மனிதன் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சட்ட வழக்கறிஞர். அவர் அந்த சாலையில் குடியிருந்த லஷர் என்ற பெயருள்ள வாலிபமான பெண்ணை மணந்து கொண்டார். அப்பெண்ணின் தந்தையிடம், என் தந்தை பணியாற்றினார். அவர்களிடத்தில் ஒரு…ஒருவிதமான ஒரு மோட்டார் வாகனம் இருந்தது. அதில் வாகனத்தின் சக்கரத்தை சுழலச் செய்வதற்காக உள்ள ஒரு வளவு திருகும் இருந்தது. நீங்கள் அந்த சுழல் வளைவு திருகினை வாகனத்தின் பக்கவாட்டில் சென்று இயக்கிவிட வேண்டும், அது அவ்விதமானதொரு அமைப்புள்ள வாகனம். அதில் ஏனைய சக்கரங்களை இயங்க வைக்க ஒரு செயல் கருவி மாத்திரமே இருந்தது. அவ்வாகனத்திற்கு ரப்பரினால் ஆன பெரிய ஒலிப்பான் பொருத்தப்பட்டிருக்கும். அதைக் கொண்டு தான் அந்த வண்டி போகையில் அந்த ஒலிப்பானை ஒலிக்கச் செய்ய வேண்டும். அவர்களோ, “அந்த வண்டி பயங்கர வேகமாகிய மணிக்கு பத்தொன்பது மைல்கள் வேகத்தில் போகும்” என்று கூறினார்கள். என் தந்தை சாக்குகளில் மணலை அடைத்து அவ்வண்டியில் வைத்துக் கொண்டு வந்து, அது அவர்கள் கூறுகிறபடி மணிக்கு பத்தொன்பது மைல்கள் வேகத்தில் உண்மையிலேயே ஓடக்கூடியது தானா என்று பார்ப்பதற்காக ஓட்டிச் சென்றார். புரிகிறதா? ஆனால் அந்த சாலைகளை நீங்கள் பார்க்க வேண்டும், உ- ஊ: அந்த வாகனம் இந்த வழியாக மணிக்கு பத்து மைலும், மேலும் கீழுமாக இருந்த இந்த வழியில் ஒன்பது மைல்கள் வேகத்திலும் சென்றது. பாருங்கள்? இப்படியாக இரண்டையும் கூட்டினால், மணிக்கு பத்தொன்பது மைல்கள் கிடைக்கிறது.
1315 நாங்கள் யாவரும் சிறுவர்களாக இருக்கையில், அப்பொழுது பிள்ளைகள் நாங்கள் ஐந்து பேர்கள். என் தாயார் எங்களை குளிப்பாட்டி விடுவார்கள். நாங்கள் வேலியருகில் நின்று, அந்த வண்டி வருவதை பார்க்க ஆவலோடு காத்திருப்போம். அநேக மைல்களுக்கப்பால் அது வந்து கொண்டிருக்கையிலேயே அதன் பெரிய உர், உர், உர், உர் போன்ற முழுக்கத்தை நாங்கள் கேட்போம். அந்த வண்டி வரும்போது அதன் சப்தத்தை கேட்கும் யாவரும் நின்று, தங்கள் குதிரை வண்டிகளை சாலையை விட்டு அகற்றி, குதிரைகளை இந்தவிதமாக பிடித்துக் கொள்வார்கள், உங்களுக்குத் தெரியுமா? என்னே அந்த வாகனமோ சாலையில் வரும்போது பயங்கரமாயிருக்கும். அது நான் கிட்டத்தட்ட ஏழு வயதாயிருக்கும்போது என்று நான் எண்ணுகிறேன். எப்படியாய்…அது சுமார் 1914 ஆம் ஆண்டில் அவ்வாறிருந்தது. அப்போது இருந்த நிலைமைக்கு, அது முதற்கொண்டு இக்காலம் வரையிலும் எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது கடந்த நாற்பதாண்டு காலமாக ஏற்பட்டவைதான் என்பதைப் பாருங்கள். பாருங்கள், இன்றைக்கு இங்கு உள்ள இந்தக் காரியங்களையெல்லாம் உண்டாக்க, மனிதனுக்கு ஆறாயிரம் ஆண்டுகள் பிடித்திருக்கிறது. ஏனெனில் வேதமானது, அந்தவிதமாக மனிதன் செய்வான் என்பதை முன்னுரைத்திருக்கிறது. “கடைசி நாட்களில் அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம்.”
1416 நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நாகூம் தீர்க்கதரிசியானவன், இங்கு சிக்காகோவிலுள்ள வாகனப் போக்குவரத்துக்கான விரைவு நெடுஞ்சாலைகளைக் கண்டு எழுதியுள்ளதை நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? அவன், “அவைகள் வீதிகளில் கடகடவென்றோடி, இடது சாரி வலதுசாரி வரும்” என்று கூறியுள்ளான். நான் பழங்காலத்துப் பாணியிலுள்ள ஆஸ்லோ மற்றும் இதர நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அந்த நாடுகளின் தெருக்களில் நடந்து செல்லக்கூட இடமில்லாத வகையில் அமைந்திருக்கும். ஒரு பெரிய இரதமானது அவர்களுடைய நகரத்தில் ஓடுவதற்கு மட்டும் வசதியாக தெருவானது அமைந்திருக்கும். இங்கிருந்து அந்தச் சுவர் வரையிலுமுள்ள தூரம்தான் தெருவானது அமைந்திருக்கும். அதாவது ஒரு இரதம் ஓடுவதற்கு மட்டுமே போதுமான அகலம் உள்ள தெருவாக அது இருக்கும். நல்லது, பாருங்கள், ஆனால் நாகூம், சொன்னது என்னவெனில், “அகலமான வீதிகள்” என்றான். “அவைகள் மின்னல்களைப்போல் வேகமாய்ப் பறக்கும்” என்றும், “அவைகள் தீவட்டிகளைபோல் விளங்கி” என்று இந்த வண்டிகளையேக் கூறினான். அவ்வண்டிகளிலுள்ள விளக்குகளைப் பற்றியே அவன் அவ்வாறு கூறினான். “அவைகள் ஒன்றுக்கெதிராக ஒன்று ஓடிவரும்” என்றே கூறினான். அவை விபத்துகள். அந்த தீர்க்கதரிசி தன் காலத்திற்கு அப்பால் எதிர்வரும் காலத்தினுள், நான்காயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் இவைகள் வருவதை பார்த்தான். அதைப்பற்றி எண்ணிப் பாருங்கள்! உ—ஊம், ஆவியின் ஏவுதல்.
1517 ஆனால் நாமோ கடைசி காலத்திற்குள் இருக்கிறோம். நண்பர்களே! அதேவிதமாக வேத வாக்கியமும் இருக்கிறது. சரியாக இந்தக் கடைசி காலத்திலே அதில் சொல்லப்பட்டவைகளெல்லாம் சம்பவித்துக் கொண்டு வருகின்றன. இன்று காலையில் கூட, தேவன் நமக்கு உதவி செய்வாரெனில் இவற்றில் சில காரியங்களை, நம்மால் முடிந்த அளவுக்கு, ஒன்று சேர்த்து இணைத்துப் பார்க்கலாம் என்று நான் எண்ணினேன். பின்பு, இன்றிரவில் அந்த மகத்தான கடைசி காலத்தில், அதாவது லவோதிக்கேயா சபையின் காலத்தில், அது எவ்வாறு தன்னுடைய செய்தியை பெற்றுக்கொண்டது என்றும், அதன் பிறகு, அது எவ்வாறு அதைவிட்டு விலகி, தனக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை அலட்சியம் செய்து, நேராக அது அனலுமின்றி குளிருமின்றி வெதுவெதுப்பான நிலைமைக்குள் சென்று, அதினால் தேவனுடைய வாயிலிருந்து வாந்திப் பண்ணிப் போடும்படியான நிலைமைக்கு வந்தது என்பதைப் பற்றியும் பார்ப்போம். பாருங்கள், வேறு வார்த்தைகளில் கூறினால், அதைப் பற்றி எண்ணிப் பார்த்தாலே தேவனுக்கு வயிற்றை உமட்டிக்கொண்டு வருகிற அளவுக்கு அது அவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது. “என் வாயினின்று வாந்திப் பண்ணிப் போடுவேன்” என்று அவர் கூறினார்.
1618 இப்பொழுது இன்று காலையில் நான் குறிப்பிட்டுக் காட்டும்படி சில வேத வாக்கியங்களை இங்கே எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு, ஜெபத்திற்காக நாம் சற்று நேரம் எழுந்து நிற்பது நமக்கு அப்படியொன்றும் கடினமாக இராது என்று நான் கருதுகிறேன். 19 எங்கள் கிருபையுள்ள பரலோகப் பிதாவே, நாங்கள் மீண்டும் இந்த ஓய்வு நாளில் கூடி வருகையில், வெளியிலே, மழையானது தூற ஆரம்பித்து, மிகவும் கடுமையான குளிர் காற்று அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நாங்களோ இன்றைக்கு எங்கள் தலைகளுக்கு மேல் ஒரு கூரை இருப்பதற்காகவும், எங்களுக்கு கூடி வர ஒரு சிறிய இடமிருப்பதற்காகவும், எமது மனச்சாட்சி எவ்வாறு ஆராதிக்க வேண்டும் என்று கூறும் எந்தவொரு வழியிலும் கூடி வந்து தேவனை ஆராதிப்பதற்கு வசதியான ஒரு தேசம் இன்னும் எங்களுக்கு இருப்பதற்காகவும், மகிழ்ச்சி அடைகிறோம். 20 பிறகு உம்முடைய வார்த்தையிலே, இந்நிலைமை நீண்ட காலத்திற்கு நீடித்திருக்காது என்பதைக் காண்கிறோம். எனவே பிதாவே, இதிலிருந்து நாங்கள் பெற்றுக் கொள்வதற்கென்றே வைக்கப்பட்டுள்ள மிகச் சிறந்தவற்றை நாங்கள் பெற்றுக் கொள்ளத்தக்கதாக எங்களை விசேஷித்த வண்ணமாக அபிஷேகியும் என்று ஜெபிக்கிறோம். எங்களால் கிரியை செய்ய முடியாத வரப்போகிற அந்த வேளைகளுக்காக நாங்கள் ஆயத்தமாக இருந்திட எங்களுக்கு உதவி செய்யும். இன்னும் எவ்வளவு காலம் இருக்கும் என்பதை நாங்கள் அறியோம். அது ஒருவேளை வாரக் கணக்கில் இருக்கக்கூடும், மாதங்கள் கணக்கில் இருக்கக்கூடும், அல்லது வருடக் கணக்கில் இருக்கக்கூடும் என்பதை நாங்கள் அறியோம். ஆனால் வரப்போகும் என்றாவது ஒரு நாளில் நாங்கள் இவ்வாறு செய்ய இயலாமற்போகும். எனவே, பிதாவே, நீர் எங்களை உமது தெய்வீக வழி நடத்துதலின் கீழாக வைத்து, எங்கள் சிந்தைகள் உம்மைக் குறித்தே இருக்கும்படி செய்து, எங்கள் இருதயத்தின் தியானம் உமது சமூகத்தில் ப்ரீதியாக இருக்கும்படி செய்தருளும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம், ஓ கர்த்தாவே. 21 எங்களுடைய பாவங்களை மன்னியும். நாங்கள் பாவம் செய்து, உம்முடைய வழியை விட்டு விலகினோம் என்று நாங்கள் அவைகளை அறிக்கை செய்கிறபடியால், நாங்கள் பாவ மன்னிப்பைக் கேட்கிறோம். நாங்கள் உம்முடையவர்கள் என்று அழைக்கப்பட சற்றேனும் தகுதியுடையவர்களல்ல, கூலிக்கு அமர்த்திக் கொள்ளப்பட்ட உம்முடைய வேலைக்காரர்களாக மாத்திரமாவது எங்களை வைத்துக் கொள்ளும், கர்த்தாவே. நாங்கள் செய்ய வேண்டுமென நீர் எங்கள் மேல் சுமத்தும் எந்தவொரு வேலையையும் செய்ய விருப்பமுள்ளவர்களாயிருப்போம். அதை நாங்கள் செய்ய விருப்பமுள்ளவர்களாயிருக்கிறோம், எங்களை உம்முடைய இராஜ்ஜியத்திற்குள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே. அதினால் நாங்கள், இவ்வுலகை எதிர் நோக்கியுள்ள இந்தப் பெரிய பயங்கரமான வேளையில் கிரியை செய்ய எங்களுக்கு இயலுமே. 22 உம்முடைய பிரசன்னத்தினாலே இப்பொழுது எங்களை ஆசிர்வதியும், உம்முடைய பரிசுத்த ஆவியைக் கொண்டு எங்களுக்குப் போதித்தருளும், இங்கு ஒருமித்துக் கூடிவந்துள்ள எங்கள் மூலமாக மகிமைப்பட்டருளும். இயேசுவின் நாமத்தினாலே இதை வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
1723 இப்பொழுது முதலாவதாக இங்கு வந்துள்ள எனது நண்பர்கள் ஒவ்வொருவரையும் நான் அடையாளம் கண்டு கொள்ள விரும்புகிறேன். அவர்கள் யார் யார் வந்திருக்கிறார்கள் என்பதை நான் இன்று காலை முதற்கொண்டே சுற்று முற்றும் கவனித்துக் கொண்டேயிருக்கிறேன். இரவு நேரத்தில் நண்பர்கள் யார் யார் வந்திருக்கிறார்கள் என்பதை கண்டுகொள்வது சற்று சிரமமான விஷயம் தான். ஏனெனில் நம்முடைய ஒளியமைப்பில், பின்னால் தொங்கிக் கொண்டிருக்கிற விளக்குகள் நிமித்தமாக மக்களை அடையாளங்கண்டு கொள்வது கடினமாய் இருக்கிறது. இந்த பிரசங்க பீடத்திலிருந்து கொண்டு, இரவு நேரத்திலும் சரி, பகல் நேரத்திலும் சரி, மக்களை சரியாக பார்த்து அடையாளங் கண்டு கொள்வது கடினமாயுள்ளது. தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்திருக்கிற நமது நண்பர்கள் பலரை நான் பார்க்கிறேன். இன்றைக்கு பகல் வேளையில் இன்னின்னார் வந்துள்ளனர் என்று அடையாளங் கண்டு கொள்வது, இரவு நேரத்தைவிட சுலபமாக இருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டு சொல்ல இயலாதபடி, அவர் அநேகராய் இருக்கின்றனர், ஆனால் உங்களையெல்லாம் நான் நிச்சயமாகவே பாராட்டுகிறேன் என்பதை நீங்கள் அறிந்திருக்க விரும்புகிறேன். வேத வாக்கியங்களின்படி, நான் இந்த கடிந்து கொள்ளுதலையெல்லாம் செய்து சத்தியத்தை கொண்டுவர வேண்டியுள்ளது. நான் அவ்வாறு செய்ய வேண்டுமென சுயமாக விரும்பி அப்படிச் செய்யவில்லை. ஆனால் இங்கே எவ்வாறு செய்ய வேண்டுமென தேவன் எழுதி வைத்திருக்கிறாரோ, நீங்கள் பாருங்கள், அப்பொழுது அது செய்யப்பட வேண்டியதாயிருக்கிறது. அதே சமயத்தில் பல்வேறு ஸ்தாபனங்களைச் சேர்ந்த என்னுடைய சகோதரர்கள் அநேகர், இன்னமும் கூட என்னுடன் கூட அமர்ந்திருக்கிறதை நான் காண்கையில், இவர்களை நான் மிக மிக அதிகமாக பாராட்டுகிறேன். உங்களை…தேவன் தாமே உங்களை ஆசீர்வதித்து, உங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்பதே என்னுடைய ஜெபமாயிருக்கிறது.
1824 இப்பொழுது… [சகோதரன் ஸ்ட்ரிக்கர், “சகோதரன் பிரான்ஹாமே?” என்று அழைக்கிறார்—ஆசி.] ஆம் சகோதரனே, [“இங்குள்ள அனைத்து மக்கள் சார்பாகவும் நான் பேசிட சபையின் அனுமதி எனக்கு இருக்குமென்றால், நாங்கள் அனைவரும் உங்களை பாராட்டுகிறோம் என்பதை நீங்கள் அறிந்திட வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”] உங்களுக்கு நன்றி, சகோதரன் ஸ்ட்ரிக்கர் அவர்களே. [“நாங்கள் உம்மை நேசிக்கிறோம்.”] உங்களுக்கு நன்றி, சகோதரன் ஸ்ட்ரிக்கர் அவர்களே. [“நீங்கள் கடந்து செல்ல வேண்டியதாயுள்ளவைகளுக்காக தேவையான கிருபை உங்களுக்குக் கிடைக்க நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம்.”] உங்களுக்கு நன்றி, சகோதரர் ஸ்டிரிக்கர் அவர்களே. [சபையார், “ஆமென்” என்று கூறுகிறார்கள்—ஆசி.] சபையே, உங்களுக்கு நன்றி. இதைக் கூறும் நீங்கள் அருமையானவர்களாய் இருக்கிறீர்கள். நான் அதை மிகவும் உயர்வாகவே பாராட்டுகிறேன்.
1925 நேற்றிரவில் யாரோ ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்…அது சகோதர ஃப்ரெட் என்று நான் நினைக்கிறேன். அவர் என்னை அழைத்து, நேற்றிரவு கூட்டம் முடிந்து வீடு திரும்பப் போகையில், தன்னிடம் ஒரு சகோதரன் தான் கண்டதாக கூறின தரிசனம் இல்லை சொப்பனம் பற்றி என்னிடம் எடுத்துரைத்தார். அதில், நான் பூமியின் வளைவான பகுதியில் நிற்பதாகவும், என் பின்னால் கருமேகம் சுருண்டு நிற்பதாகவும் காணப்பட்டுள்ளது. அவன் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறான் என்பதை நான் அறிவேன். ஆனால் அது தேவன் கிரியை செய்து முடிக்கிற வரையிலும் அவனால் ஒன்றும் செய்ய இயலாது …அதன்பிறகு, அப்பொழுது நான்—நான்…நான் போய்விடுவதற்கு நேரமாயிருக்கிறது. எனவே… 26 ஆனால், இதன் காரியம் என்னவெனில், “பெரிய ஆளாக” நான்—நான் இருக்க விரும்பியதே கிடையாது. இல்லை, அவ்விதம் ஆகிட நான் விரும்பியதில்லை, பாருங்கள். ஆனால் நான், வாழ்க்கையின் சங்கீதத்தைப் பற்றித்தான் எண்ணுகிறேன். மாமனிதர்களின் வாழ்க்கைகள் அனைத்தும் நமக்கு நினைவூட்டுகின்றன; (பவுல் என்ன செய்தார், ஐரேனியஸ் என்ன செய்தார், லூத்தர் என்ன செய்தார், வெஸ்லி என்ன செய்தார், அல்லது பரிசுத்த மார்ட்டின் என்ன செய்தார், அவர்கள் என்ன செய்தனர் என்பதைப் பாருங்கள்.) நம்முடைய வாழ்க்கைகளை நாம் விழுமியதாக்க முடியும், மேலும், மாள்வுற்று நமது அடிச்சுவடுகளைப் பின்னே கால மணல்களின் மேல் விட்டுச் செல்கிறோம் என்பதை மாமனிதர்களின் வாழ்க்கைகள் அனைத்தும் நமக்கு நினைவூட்டுகின்றன; ஒருவேளை வேறொருவன், வாழ்க்கையினுடைய, பெருமிதமான ஆழ் கடலின் மேல் பயணம் செய்கையில், (நான் போய்விட்ட பின்பு, பாருங்கள் போய்விட்ட பிறகு) ஒரு கைவிடப்பட்ட, கப்பற் சேதமடைந்த சகோதரன் (இப்புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் படியுங்கள்) அடிச்சுவடுகளைக் கண்டு, மீண்டும் மனம் தேறுதலடைவான். (அதுதான் காரியம்) நாம், அடுத்து, ஏற்ற துணிவுடனிருந்து செயல்பட்டு, வாழ்க்கையின் எந்த முடிவுக்கான ஒரு இருதயத்தோடு; (நான் அதை விரும்புகிறேன், நீங்கள் விரும்புகிறீர்களா?) ஊமையாக, ஓட்டப்படும் கால்நாடையைப் போன்றிராதே!(வார்த்தையண்டை ஓட்டிவிடப்பட வேண்டும்) ஆனால் யுத்தத்தில் ஒரு வீரனாய் இரு! (நான் அதை விரும்புகிறேன்)
2027 இப்பொழுது, எங்களுடைய சிறிய சகோதரனாகிய ஜார்ஜ் அவனுக்குப் பிடித்தமான பாடலைப் பாடுவான். நான் அதை அவனுடைய அடக்க ஆராதனையிலும் பாடியிருந்தேன். வழக்கமாக நாங்கள்…நானும் அவனும் உட்கார்ந்து பாடுவோம். நான் வாழ்க்கையின் சங்கீதம் என்ற பாடலையும், உங்களுக்குத் தெரியும், அவன் உட்கார்ந்து, மரணத்தை கடத்தல் என்ற பாடலையும் பாடுவான். பாருங்கள்? நீங்கள் அப்பாடலை கேட்டிருக்கிறீர்கள்: சூரிய அஸ்தமனத்தின் வேளையில் மாலை நேர—நட்சத்திரம் தோன்றுகையில், எனக்கென தெளிவான அழைப்பு வந்திடுமே! நான் கடலுக்குள் செல்ல புறப்படும்போது, அம்மரண வேளையில் துக்கங்கொண்டாடுதல் இருக்காது, (இதை நீங்கள் அநேக முறைகள் கேட்டிருக்கிறீர்கள்) நேரம் தூரம் இவைகளால் புறம்பே இருப்பவைகளெல்லாம் அசையும், வெள்ளங்கள் என்னை தூரத்தில் கொண்டு செல்லும், மரணத்தை நான் கடக்கையில், எனது மாலுமியை முகமுகமாய் கண்டிடுவேன் என நான் நம்புகிறேன். (அவன் அதைக் கடந்திருப்பான் என்று நான் நிச்சயமாயிருக்கிறேன்.) 28 எனவே…அதன் பின்னர் என்னுடைய பாடல் இதோ: என் பின்னால் பிரிவுகள் ஏற்பட்டுள்ளன காலத்தின் மணற்பரப்பில் கால் அடிச்சுவடுகள் பதிந்தன, அதினால் மற்றவர்கள் அதைக் கண்டு, அப்பாதையில் தொடர்ந்து வரலாம், இதை மனதில் பதித்து, தொடர்ந்து செல்லுங்கள். 29 ஏனென்றால், ஒரு மகத்தான நாளில் இயேசு வருவார். (அதைப் பற்றித்தான் இந்தக் காலையில் நாம் படிக்கப் போகிறோம்), அப்பொழுது எல்லாம் முடிந்துவிட்டிருக்கும்.
2130 இப்பொழுது, நான் இதைப் பற்றி இன்று காலையில் சிந்திக்கையில், இந்த சபைக்காலங்களின் செய்தியில் இதைப்பற்றி நாம் பேச இயலாமற் போனால், ஒரு வேளை கர்த்தருக்கு சித்தமானால், சீக்கிரத்தில், உண்மையான சபை மற்றும் கள்ள சபை என்பதன் பேரில் பேசும்படியான ஒரு சிறிய தொடர் கூட்டங்கள் ஏற்பாடு செய்து, ஆதியாகமம் தொடங்கி வேதாகமம் முழுவதிலும் வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் தீவிரமாக கடந்து சென்று, அதைப் பற்றி படிக்கலாம் என்று எண்ணினேன். அவ்விரண்டு சபைகளும் என்ன செய்யப் போகின்றன என்பதைப் பற்றிப் பார்ப்போம். பின்பு, ஒருவேளை, என்றாவது ஒரு நாளில், நாம் சபைக் கட்டிடத்தை கட்டிவிட்டோமென்றால், அப்பொழுது, இன்னும் கூடுதலாக மக்கள் அமருவதற்கு இடம் உண்டாயிருக்கும். எத்தனை பேர் வந்து அந்தவிதமாக இடம் இல்லை என்பதைப் பற்றிக் கூறினார்கள் என்பதை நீங்கள் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். எனவே அவர்கள் காரோட்டி வந்து, உள்ளே நிரம்பிவிட்டதைப் பார்த்துவிட்டு, அவர்கள் அப்படியே போய் விடுகிறார்கள், பாருங்கள். எனவே அவர்களுக்கு…நமக்கு போதுமான இடம் இல்லாமல் இருக்கிறது. 31 ஒரு வேளை கோடை காலத்தில், மிகவும் உஷ்ணமாக இருக்கும்போது, அப்பொழுது, அந்த உயர் நிலைப் பள்ளியின் அரங்கத்தை எடுத்துக் கொண்டு, அதிலே கூட்டங்களை ஒழுங்கு செய்து கொண்டு, வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தையும், இன்னும் வேறு எதையாவதையோ, அல்லது தானியேலின் புத்தகம் மற்றும் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, அவைகளை ஒன்றாக இணைத்து நாம் படிக்கலாம்.
2232 இப்பொழுது, நாம் யூதர்களைப் பற்றி பார்க்கப் போகிறதில்லை. யூதர்கள்… 33 இப்பொழுது நான் ஏற்கனவே கூறிய வண்ணமாக, கி.பி.1500-ல் இருண்ட காலங்களில், கத்தோலிக்க மார்க்கத்தின் குருக்களாட்சியானது, சபையையும், அரசையும் ஒன்றாக இணைத்துவிட்டு, அது அவர்களது “ஆயிர வருட அரசாட்சிக்கு பிந்தின காலம்” ஆக இருந்தது. அவர்கள், கிறிஸ்துவைப் போல ஒருவர், கிறிஸ்துவுக்குப் பதிலாளாக, ஒரு சிங்காசனத்தில் அமர வேண்டியவராக சபையானது ஏற்றுக் கொண்டுவிட்டபடியினால், தாங்கள் சரியாக ஆயிரம் வருட அரசாட்சியின் காலத்தில் இருப்பதாக எண்ணிக் கொண்டனர். சபையும் அரசங்கமும் ஒன்றாக இணைந்து, யாவும் நன்றாக ஆகிவிட்டபடியினால், அதுவே, “மகத்தான ஆயிரம் வருட அரசாட்சி நடந்து கொண்டிருக்கிறது” என்று நம்பினர். அவர்கள் இன்னமும் அவ்வாறு தான் விசுவாசிக்கிறார்கள். ஆனால் அது ஒரு பிழையான காரியமாகும். ஏனெனில், கிறிஸ்துவின் வருகை ஏற்படாமல், ஆயிரவருட அரசாட்சி ஆரம்பிக்க முடியாது. 34 கிறிஸ்து ஆயிரம் வருட அரசாட்சியைக் கொண்டு வருகிறார். அவரே செழிப்பின் குமாரனாயிருக்கிறார். அவர் வரும்பொழுது, அப்பொழுது ஆயிரவருட அரசாட்சி இருக்கும். அப்பொழுது சபையானது மேலே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும், அதன் பின்னரே கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சிக்கான வருகையிருக்கும். நினைவிருக்கட்டும்…நாம் அடுத்தபடியாக எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்? சபையின் எடுத்துக் கொள்ளப் படுதலுக்காகத்தான்.
2335 இப்பொழுது, சபையின் எடுத்துக் கொள்ளப்படுதலையும், வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பையும் ஒன்றாகப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். ஏனெனில், சபை எடுத்துக் கொள்ளப்படும் பொழுது நியாயத்தீர்ப்பு இல்லை, பாருங்கள். நியாயத்தீர்ப்பை நீங்கள் இங்கேயே சந்தித்துவிட்டீர்கள். அதுதான் உண்மை, “கிறிஸ்துவுக்குள் இருப்பவர்கள் நியாயத்தீர்ப்பினின்று நீங்கலாயிருக்கிறார்கள்.” இயேசு, “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்,” என்றார். 36 நாம் எவ்வாறு அதைப் பெறுகிறோம்? நாம் கிறிஸ்துவுக்குள் வந்து, ஒரு சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். I கொரிந்தியர் 12-ம் அதிகாரம் “ஒரு சரீரம்” என்று கூறுகிறது. இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக நாம் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். தேவன் அச்சரீரத்தை ஏற்கனவே நியாயத்தீர்த்திருக்கிறார். அவரால் நம்மை மீண்டும் நியாயத்தீர்ப்பில் நிறுத்தி முடியாது, ஏனென்றால் அவர் அந்த சரீரத்தை ஏற்கெனவே நியாயத்தீர்த்துவிட்டார். கிறிஸ்துவின் அனுமதியின் மூலமாகவும் அவருடைய கிருபையின் மூலமாகவும், அவர் தமக்குள் நம்மை கொண்டு வருகிறார். 1 கொரிந்தியர் 12-ம் அதிகாரம், “ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, நியாயத்தீர்ப்பினின்று விடுவிக்கப் பட்டிருக்கிறோம். ஏனெனில் அவர் அந்த நியாயத்தீர்ப்பை தாமே ஏற்றுக் கொண்டு விட்டார்.” ஓ, இதற்காக நீங்கள் அவருக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கவில்லையா? அவர் நமக்காக நியாயத்தீர்ப்பை தன் மேல் எடுத்துக் கொண்டார். இனி நியாயத்தீர்ப்பே இல்லை. ஆனால் அது, அவருக்குள் வர மறுக்கிறவர்களுக்கு உண்டு, அச்சரீரத்திற்குள், அந்த இரகசியமான சரீரத்திற்குள் வர மறுப்பவர்களுக்கு உண்டு…நாம் எவ்வாறு அதற்குள் பிரவேசிக்கிறோம்? வெறுமனே கைகளை குலுக்கிக் கொள்வதினாலா? இல்லை. கடிதத்தின் வாயிலாகவா? இல்லை. ஏதாவது ஒரு வகை தண்ணீர் ஞானஸ்நானத்தினாலா? இல்லை. “ஒரே ஆவியினாலே, பரிசுத்த ஆவியினாலே, நாம் யாவரும் அந்த சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்!”
2437 இப்பொழுது இன்று காலையில் நாம் அதைப் பற்றி உன்னிப்பாக பார்க்கப் போகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒன்று நீங்கள் அச்சரீரத்திற்குள்ளாக இருக்க வேண்டும் அல்லது அதற்கு புறம்பே இருக்க வேண்டும். இரண்டுக்கும் நடுவில் இருக்கும் ஒரு ஏற்பாடு இல்லை. கிறிஸ்தவர்களிலே, மிக நல்ல கிறிஸ்தவர்கள் என்று ஒரு வகுப்பார் கிடையாது. ஒன்று நீங்கள் கிறிஸ்தவர், அல்லது கிறிஸ்தவர் அல்ல என்ற நிலைதான் உண்டு. கறுப்பு- வெள்ளை பறவை என்ற ஒன்றோ, குடித்து- தெளிவாக உள்ள மனிதன் என்றோ இருக்க முடியாது. அவ்விதமானதொன்று உங்களுக்கு இருக்க முடியாது. ஒன்று நீங்கள் கிறிஸ்தவராக இருக்க வேண்டும், அல்லது கிறிஸ்தவர் அல்ல என்ற நிலை இருக்க வேண்டும். ஒன்று நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்க வேண்டும், அல்லது கிறிஸ்துவுக்கு புறம்பேயிருக்க வேண்டும்.
2538 இப்பொழுது இவைகள் ஒரு போதனை (teaching) போல் தோன்றலாம். நான் ஒரு போதகன் (teacher) என்ற நிலையிலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறவன். ஆனால் போதித்தல் என்பது துண்டித்தலாய், அதாவது கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு விசேஷித்த வரமாயிருக்கிறது, முதலாவதாக அப்போஸ்தலர்கள், அதன் பிறகு தீர்க்கதரிசிகள், பின்பு போதகர்கள், மற்றும் சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், சரீரமாகிய சபையில் ஐந்து ஊழிய வரங்கள் இவைகள். அவற்றில் போதித்தல் என்பது ஆவியின் வரங்களிலொன்றாகும். இப்பொழுது, நான் படித்து ஆராய்ந்து, நான் சரியெனக் காண்கிறதெதுவோ அதை மக்களுக்கு கொண்டுவர வேண்டியதாயுள்ளது. வேத வாக்கியங்களைப் படித்து அவைகளை ஒன்று சேர்த்து நான் கொண்டுவர வேண்டியுள்ளது. ஆனால், கிறிஸ்துவுக்குள்ளாக மட்டுமே, கிறிஸ்துவின் சரீரம் அடையாளங் கண்டு கொள்ளப்பட வேண்டும்.
2639 இப்பொழுது, வெளிப்படுத்தின விசேஷத்தின் முதல் மூன்று அதிகாரங்கள் சபையைக் குறித்துப் பேசுகின்றன. புறஜாதியினர், யூதர், எத்தியோப்பியர், ஆப்பிரிக்கர்கள், ஆகிய உலகத்தில் உள்ள ஒவ்வொரு இன மக்களும், புற ஜாதிகளாக இந்த ஒரு சரீரத்தை உருவாக்குகின்றனர். அவர்கள் கறுப்பாராக, வெள்ளையராக, பழுப்பு நிறுத்தவராக, மற்றும் அனைத்து நிறத்தவராக, பல்வேறு நிற மலர்களால் ஆன மலர்ச் செண்டைப் போலுள்ளனர். அது அவ்வாறுதான் உள்ளது. அதை தேவன் தன்னுடைய பலிபீடத்தில் படைக்கிறார். அவர்கள் எல்லா ஜாதிகள், கோத்திரங்கள், பாஷைக்காரரில் இருந்து வந்தவர்கள். 40 ஆனால் இப்பொழுது, நீங்கள் 3-ம் அதிகாரத்தை தாண்டிவிட்டால் (சபைக்காலங்கள் இங்கே இவற்றில் அடங்கியுள்ளன), தேவன் திரும்பி வந்து, யூதர்களை சேர்த்துக் கொள்கிறார். அந்தக் காலத்தில் சபையானது இனிமேல் காணப்படவேயில்லை. அது யூதர்களின் காலம். தேவன் யூதர்களோடு, ஒவ்வொரு தனி நபர்களாக காரியமாற்றுவதில்லை. அவர் இஸ்ரவேலரோடு, எப்பொழுதும் ஒரு தேசமாகவே பார்த்து காரியமாற்றுகிறார்.
2741 அன்றொரு நாள், அதைப் பற்றி ஒருவருக்கு கேள்வியுண்டாயிற்று. கலப்பு மார்க்கம் என்ற செய்தியை நான் பிரசங்கித்தபோது, நான் குறிப்பிட்ட ஒன்றின் பேரில் எனக்கு—எனக்கு ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன. வேதமானது முறைதவறிப் பிறந்த குழந்தை, அதாவது “வேசிப் பிள்ளை,” கர்த்தருடைய சபையில் பத்து தலைமுறைகளுக்கு பிரவேசிக்கலாகாது என்று கூறப்பட்டுள்ளதைக் குறித்து நான் அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தேன். பத்து தலைமுறையென்றால், நானூறு ஆண்டுக்காலமாகும்; அவ்வளவு காலத்திற்கு முறை தவறிப் பிறந்த குழந்தையும் அதன் தலைமுறையினரும், கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. கலப்படமாய் பிறத்தல் அவ்வளவு மோசமானதாயிருந்தது; ஒரு குழந்தை அதன் தாய், தன் புருஷனோடு சேராமல் அந்நிய புருஷனோடு சேர்வதினால் பிறந்ததாய் இருக்குமானால், அதுவே கலப்படமாய்ப் பிறந்த குழந்தையாகும். அக்குழந்தை தன் தகப்பனாயிருக்க வேண்டியவருக்குப் பிறக்காமல், தன் தாய் அந்நிய புருஷனோடு சேர்ந்ததினால் பிறந்ததாயிருக்கும். பாருங்கள்? அது தேவனுக்கு முன்பாக மிகுந்த தீமையானதாக இருந்தது. தேவனுக்கு முன்பாக சரியான வித்து மீண்டும் தோன்றிட பத்து தலைமுறைக்காலம் கடந்து செல்ல வேண்டியுள்ளது. 42 ஆனால் அது இந்தக் காலத்திற்கு பொருந்துவதாயிருக்காது. இப்பொழுது உங்களுக்கு ஒரு புதிய பிறப்பு உண்டாயிருக்கிறது. அவர்களுக்கோ…பழைய ஏற்பாட்டுக் காலத்தில் அவர்களுக்கு ஒரே பிறப்புதான் உண்டாயிருந்தது. அதுவும் இனச் சேர்க்கையினால் பிறப்பிக்கப்பட்டவையாயிருந்தது. இப்பொழுது நமக்கு ஆவிக்குரிய பிறப்பாயிருக்கிற புதிய பிறப்பு உண்டாயிருக்கிறது. அதுதானே எல்லா கழிவுகளையும் வெளியேற்றிவிடுகிறது. நாம் கிறிஸ்து இயேசுவிலே, தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்த புதிய சிருஷ்டிகளாயிருக்கிறோம். புதிய சிருஷ்டிகள்! இந்த சிருஷ்டி என்ற வார்த்தையை இங்கேயுள்ள நல்ல கல்விமான்களாயிருக்கிறவர்கள் புரிந்து கொள்வீர்கள். (நீங்கள் அதைப் பற்றி கவனிக்கவில்லையெனில், அதைப் பற்றிப் பாருங்கள்.) சிருஷ்டி என்ற வார்த்தை கிரேக்க மொழியில் “ஒரு புதிய சிருஷ்டி” என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. ஓ, நீங்கள் இங்கே இனச்சேர்க்கையினால் ஒரு சிருஷ்டியாக பிறந்திருப்பதுபோன்றே பரலோகத்திற்கும் நீங்கள் அதன்பின்னர் ஒரு புதிய சிருஷ்டியாகவும் பிறந்தவர்களாயிருக்கிறீர்கள். ஒரு புதிய மனிதனை சிருஷ்டிக்கும் தேவனுடைய புதிய சிருஷ்டிப்பாக அது இருக்கிறது. புதிய சிருஷ்டி என்பது ஒரு பிறப்பாகும். மாம்சத்தில் பிறப்பதற்கு பிறப்பு எப்படி அவசியமோ, அவ்வாறே, அதுவும் ஒரு பிறப்பாய் இருக்க வேண்டும். மாம்சத்தின் பிறப்பைப் போலவே, ஆவிக்குரிய பிறப்பும் அவசியமாயிருக்கிறது.
2843 விவாகம் செய்துகொள்ளும் ஒரு இளம் தம்பதிகள், மணந்து கொண்டு ஒரு வேளை இப்படிக் கூறலாம்: “எங்களுடைய முதல் மகனுக்கு ‘யோவான்’ என்று பெயரிட்டு நாங்கள் அழைக்கப் போகிறோம்” என்று கூறுவதாக வைத்துக்கொள்வோம். அப்பொழுது அவன் பிறக்கவேயில்லையென்றால், யோவான் என்பவன் அங்கே இல்லவேயில்லை. அதேவிதமாகத்தான் …நீங்கள் ஒரு வேளை…பரலோகத்தைப் பற்றி உங்களுக்கு பல்வேறு புராண கட்டுக் கதையின்படியான அநேக கருத்துக்கள் இருக்கக் கூடும். அது எவ்வளவு பெரியதாயிருந்தாலும், நீங்கள் மறுபடியும் பிறக்காவிட்டால், நீங்கள் அங்கே இருக்கமாட்டீர்கள். அவ்வளவுதான், பாருங்கள். அந்தவிதமாகத்தான் அது இருக்க வேண்டும். ஏனெனில், அது பிறப்பின் வழியாகத்தான் சாத்தியமாகும். தேவன் தமது பிரமாணங்களை விதித்துள்ளார். எனவே யாவும் அவருடைய பிரமாணங்களின்படி தான் நடைபெற வேண்டும். புரிகிறதா?
2944 இப்பொழுது, இவர்களில், யூதர்களில் மீதியாயிருப்பவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும். நாம் முதலில் அவர்களைப் பற்றி எடுத்துக் கொள்ளப் போகிறோம். ஏனெனில் அது… இப்பொழுது, எப்பொழுதுமே அங்கே மூன்றுவிதமான மக்கள் எல்லாக் காலத்திலும் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறார்கள். அவைகளை மனதில் பதித்து வைத்துக்கொள்ளுங்கள். அவையாவன: விசுவாசி, பாவனை விசுவாசி, அவிசுவாசி. அந்த விதமான மூன்று வகுப்பார். நமக்கு தருணம் அளிக்கும் பொருட்டு தள்ளிவிடப்பட்ட யூதன் இருக்கிறான், அனலுமின்றி, குளிருமின்றி வெதுவெதுப்பாயுள்ள சபை உள்ளது, மற்றும் ஆவியால் நிரப்பப் பெற்றுள்ள சபையும் உள்ளது.
3045 ஒரு சமயம், சார்லி பொஹேனென் என்பவர், நான் பணிபுரிந்த பொது சேவை நிறுவனத்தின் தென் மாவட்டங்களின் தலைவராக இல்லை, கண்காணிப்பாளாராக இருந்து வந்தார். அப்பொழுது நான் ஒரு வாலிபனாக இருந்த அக்காலத்தில் வேதவாக்கியங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் என்னை அழைத்து, “பில்லி, பத்மூ தீவில் இருந்த யோவான் கொஞ்சம் சிவப்பு மிளகினைத் தின்றுவிட்டு தீக்கனவு கண்டிருக்க வேண்டும்” என்றார். 46 அதற்கு நான், “திரு. பொஹேனென் அவர்களே, நீங்கள் அவ்வாறு சொல்லியிருக்கக் கூடாது” என்றேன். அவர் எனது மேலதிகாரியாக, மேற்பார்வையாளராக இருந்தார். அப்பொழுது அவர், “பரவாயில்லை, உலகில் யார் தான் அதைப் புரிந்து கொள்ள முடியும்?” என்று கேட்டார். அதற்கு நான், “அது புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்த ஆயத்தமாயிருக்கும்போது, அது புரிந்து கொள்ளப்படும்” என்று பதிலளித்தேன். அது தான் உண்மை. 47 அப்பொழுது அவர், “ஓ, என்னே! நான் அதைப் படிக்க முயன்றேன். எனது மேய்ப்பரும் அதை படிக்க முயன்றார். ஆனால் அதின்பேரில் நாங்கள் மோசமானதொரு குழப்பத்துக்கு தான் வரவேண்டியுள்ளது” என்றார். அவர் மேலும், “சீனாய் மலையின் மேல் மணவாட்டி நிற்க நாம் காண்கிறோம்” என்றும் கூறினார். பார்த்தீர்களா? அவர் மேலும், “அதன் பிறகு மணவாட்டிக்கெதிராக வலுசர்ப்பமானது தன் வாயிலிருந்து வெள்ளத்தை அனுப்புகிறது. மீதியாயிருக்கிற ஸ்திரீயின் வித்தோடு அது யுத்தம் பண்ணப் போகிறது. பின்பு மணவாட்டி பரலோகத்திலும் இருக்கிறாள். ஒரே வேளையில் மூன்று காரியங்கள் நடைபெறுகின்றன” என்று கூறினார். அதற்கு நான், “அது ஆவிக்குரிய பிரகாரமான புரிந்துகொள்ளுதல் இல்லாதிருப்பதினால் தான்” என்று பதிலளித்தேன். பார்த்தீர்களா? அப்பொழுது அவர், “பரவாயில்லை, அவர்கள் ஒரே வேளையில் மூன்று இடங்களிலும் காணப்படுகிறார்களே” என்று கூறினார். 48 நான் அதற்கு, “ஆம் ஐயா, ஆனால் அவ்விதமாக அவர்கள் அங்கே இடம் பெற்றிருக்கவில்லை. பாருங்கள், நீங்கள் அந்த லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரை ‘மணவாட்டி’ என்று அழைத்தீர்கள். ஆனால் அவர்கள் மணவாட்டியல்ல. அவர்கள் யூதர்களாயிருந்தனர். வலுசர்ப்பமானது எவர்களுக்கெதிராக யுத்தம்பண்ணும்படி தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றினதோ, அவர்கள் தான் மீதியாயிருக்கிற, மீதியாக வைக்கப்பட்டுள்ள ஸ்திரீயின் வித்தானவர்கள். அவர்கள் கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறவர்களும் இயேசுவின் சாட்சியை உடையவர்களுமாவர். மணவாட்டியோ மகிமையில் இருக்கிறாள்” என்று பதிலளித்தேன். கவனித்தீர்களா? 49 வெளிப்படுத்தின விசேஷம் 14-ம் அதிகாரத்தில் உள்ள இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் சீனாய் மலையின் மேல் நிற்கிறார்கள். (அது சரியாக அப்படியே உண்மையாயிருக்கிறது.) தங்கள் பிதாவின் நாமத்தை தங்கள் நெற்றியில் கொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள். அது முற்றிலும் சரிதான். அவர்கள் யூதர்கள், யூதர்களில் மீதியாயிருப்பவர்கள்.
3150 அதன் பிறகு, இங்கே வலுசர்ப்பமானது வருகிறது. அது ரோம குருக்களாட்சியாகும். (அப்பொழுது ஏற்கனவே சபையானது எடுத்துக் கொள்ளப்பட்டு, மகிமையில், அங்கே மூன்றரை ஆண்டுகள் கலியாண விருந்தில் இருக்கிறது.) அதன் பிறகு வலுசர்ப்பம் வருகிறது, பாருங்கள், வலுசர்ப்பம் எப்பொழுதும் “ரோமாபுரியையே” குறிக்கிறது, அது சிவப்பான வலுசர்ப்பமாகும். அது அதுதான் என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்தும்படி, வெளிப்படுத்தின விசேஷம் 12-ம் அதிகாரத்தில், வலுசர்ப்பமானது ஸ்திரீயின் மேல் கோபமடைந்தது. அந்த ஸ்திரீயானவள் சகல ஜாதிகளையும் இருப்புக் கோலால் அரசாளும் ஆண் பிள்ளையை பெற்றெடுக்கவிருந்தாள். வலுசர்ப்பமானது தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றிவிட்டு, ஸ்திரீயின் வித்தாயிருக்கிற மீதியாயிருக்கிறவர்களோடு யுத்தம் பண்ணப் போனது. ஆனால் இந்த சிவப்பான வலுசர்ப்பமானது, முதலில் ஸ்திரீக்கு முன்பாக நின்றது. ஸ்திரீயானவள் இந்த குழந்தையை பெற்று எடுத்தவுடனேயே, அக்குழந்தையை பட்சிக்கும்படி அது ஆயத்தமாக நின்றது. (இஸ்ரவேல் என்ற ஸ்திரீயாகிய) இஸ்ரவேல் சபைக்கு முன்பாக அவளுடைய குழந்தையாகிய (இயேசுவை) பட்சிக்கும்படி நின்றது யார்? ரோமாபுரியே! ஏரோது இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளையெல்லாம் கொன்று போடும்படி உத்தரவு பிறப்பித்தான். அதன்படி அத்தேசம் முழுவதிலும் எபிரெயக் குழந்தைகளையெல்லாம் வெட்டிக் கொலை செய்தார்கள். அவ்வாறே இயேசுவுக்கு முன்னடையாளமாயிருந்த மோசேயையும் பிடித்துக் கொலை செய்ய பார்வோன் முயன்றான். அவன் குழந்தைகளையும் கொன்றான். ஆனால் மோசேயை அவனால் பிடிக்க முடியவில்லை. ஓ—ஓ—ஓ—ஓ, தேவன் அவர்களை எவ்வாறு மறைப்பது என்பதை அறிந்திருக்கிறார்.
3251 ஓ, நீங்கள் மறைக்கப்பட்டிருக்கிறபடியால் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா? ஓ, ஒரு மறைவிடம்! வேதம் “நீங்களும் உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாக எண்ணிக் கொள்ளுங்கள். கிறிஸ்துவுக்குள் உங்கள் ஜீவன் மறைந்திருக்கிறது, கிறிஸ்துவுக்குள் மறைக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நீங்கள் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள்” என்று உரைத்துள்ளது. பிசாசு தேடினாலும் உங்களை கண்டுபிடிக்க அவனால் முடியாது. அவனால் அதைக் கண்டு பிடிக்க முடியாது, நீங்கள் பாருங்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குள் மறைக்கப்பட்டிருக்கிறீர்கள்! உங்களை மரித்தவர்களாக எண்ணிக்கொள்ளுங்கள். கிறிஸ்துவின் மூலமாக தேவனுக்குள் அது மறைக்கப்பட்டு, அது பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டுள்ளது.
3352 இப்பொழுது, இப்பொழுது, இந்த மீதியாயிருப்பவர்களான இவர்கள் நித்திரை செய்யும் கன்னியராவர், ஸ்திரீயின் வித்தாகிய மீதியாயிருக்கிறவர்களோடு யுத்தம்பண்ணும்படிதான் வலுசர்ப்பமானது தன் வாயிலிருந்து வெள்ளத்தை அவர்களுக்கு பின்னாக ஊற்றிவிட்டான். இப்பொழுது மீதியாயிருக்கிறவர்கள் என்பவர் யார்? இங்கே தான் நீங்கள்—நீங்கள் இந்த சாயல்களை ஒன்று சேர்த்துப் பார்க்க வேண்டும். ஒரு சபை உண்டு, அது மாம்சத்தின்படியான ஒரு சபையாய் இருக்கிறது. 53 அதை நான் இங்கே வரைந்து இன்னும் கொஞ்சம் தெளிவாக்கிட விரும்புகிறேன். இப்பொழுது சகோதரன் நெவில் அவர்களே! உங்களுடைய நேரத்தில் கொஞ்சம் நான் எடுத்துக் கொண்டால் அதற்காக நீங்கள் என்னை தயவு செய்து மன்னியுங்கள். [சகோதரன் நெவில், “ஆமென், எனக்கென நேரம் ஏதுவும் இல்லை” என்று கூறுகிறார்.—ஆசி.]
3454 இப்பொழுது, அங்கே…இப்பொழுது, அங்கே என்ன இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்? அவிசுவாசி, அவர்களை நான் இங்கே “அவி” என்று எழுதுகிறேன். அது பாவியாகும். அடுத்து, இங்கே இன்னொன்று இருக்கிறது, அது தான் சடங்காச்சாரமான மார்க்கத்தை குறிக்கிறது. அதை நான் “ச ச” என்று குறிப்பிடுகிறேன். அது சடங்காச்சார சபையைக் குறிக்கும். அதன்பின்னர் இங்கே உள்ள மற்றொன்று இரட்சிக்கப்பட்ட சபையாகும். அதை, “இ ச” என்று குறிப்பிடுகிறேன். அதாவது இரட்சிக்கப்பட்ட சபை. இப்பொழுது, அவைகளை எல்லா நேரத்திலும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 55 இப்பொழுது இந்த இரட்சிக்கப்பட்ட சபையில் இருசாரார் இருக்கின்றனர், இந்த சபையில் இங்கே , மற்றும் இங்கேயும் இருக்கிறார்கள். அது கிறிஸ்துவினால், மாதிரியாக சொல்லப்பட்டது. அவர்களில் ஒரு பிரிவார் நித்திரை செய்யும் கன்னியர், இன்னொரு சாரார் தங்கள் விளக்கின் எண்ணெயை உடையவர்களாக இருக்கிறார்கள். இப்பொழுது நீங்கள்—நீங்கள் யாவரும்…எத்தனை பேர்கள் அந்த உவமையை நினைவில் வைத்திருக்கிறீர்கள்? நாம் இன்னும் ஒரு நிமிடத்தில் அதைப் பார்க்கப் போகிறோம்.
3556 இப்பொழுது முதலாவது அதைப் பார்ப்பதற்கு முன்பாக, நாம் வெளிப்படுத்தின விசேஷம் 7-ம் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களைப் பற்றி பார்க்கப் போகிறோம், அதனால் நாம் உண்மையாகவே அதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இப்பொழுது இதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பெடுத்துக் கொள்ளுகிறவர்கள், வெளிப்படுத்தின விசேஷம் 7- அதிகாரத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். 57 நமக்கிருந்த நேரத்தை நாம் இதை விளக்குவதற்கென்று எடுத்துக் கொள்வோமாக. (நீங்கள்—நீங்கள் ஞானஸ்நானம் கொடுக்கப் போவதில்லையே…இந்த காலை ஆராதனைக்கு பிறகா, சரி.) எனது கைக் கடிகாரத்தை நான் இங்கே வைத்திருந்து, நேரத்தை கவனித்து, உரிய நேரத்தில் முடித்து வெளியேறுவோம். இப்பொழுது ஏறக்குறைய சுமார் இரண்டு மணி நேரம் நமக்கிருக்கிறது. கர்த்தர் இந்த பாடத்தை ஆய்ந்து கற்க நமக்கு உதவி செய்வாராக. இவைகளுக்குப் பின்பு…
3658 இப்பொழுதும் நாம்…6-ம் அதிகாரம் வெள்ளைக் குதிரையைப் பற்றிப் பேசுகிறது. அது பூமி முழுவதிலும், ஜெயிக்கிறவராகவும் ஜெயிக்கப்போகிறவராகவும் புறப்பட்டுச் செல்கிற பரிசுத்த ஆவியானவர் ஆவார். பின்பு, மங்கின நிறமுள்ள குதிரை வருகிறது. அதை மரணம், பாதாளம் இவை பின் தொடர்ந்து. இவ்விதமாக ஒவ்வொரு குதிரைகளின் மேலும் சவாரி செய்தவர்கள் இருந்தனர். 59 இப்பொழுது, “இவைகளுக்குப் பின்பு” என்றால், இந்த பெரிய அழிவிற்குப் பிறகு என்பதாகும். முதலாவதாக பரிசுத்த ஆவியானவர், ஜெயிக்கிறவராகவும், ஜெயிக்கப்போகிறவராகவும் பூமி முழுவதிலும் கடந்து செல்கிறார். அதன்பிறகு வருவது, மிகப்பெரிய பஞ்ச காலத்தில் உள்ளதாகும். “ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணையையும் திராட்ச் இரசத்தையும் சேதப்படுத்தாதே” என்றும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர் இந்த—இந்த முத்திரைகளைத் திறந்தார்.
37இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவரக் கண்டேன்; அவன், பூமியையும் சமுத்திரைத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி: நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். 60 இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், ஊழியக்காரர்கள் என்னப்பட்டவர்கள் எப்பொழுதும்…தேவனுடைய ஊழியக்காரர்களாக யூதர்கள் இருக்கிறார்கள். ஆபிரகாம் அவருடைய ஊழியக்காரனாக இருந்தான். புறஜாதியார் ஊழியக்காரன் அல்ல. அவர்கள் மணவாடியாக இருக்கிறார்கள். அவர்கள் குமாரனாக இருக்கிறார்கள். சபையானது குமாரனாக இருக்கிறது. யூதர்கள் ஊழியக்காரர்களாக இருக்கிறார்கள். ஓ, உங்களால் இயலுமென்றால்…நமக்கு போதுமான நேரம் இருக்குமெனில் இவ்விதமான வார்த்தையைகளை அலசி ஆராய்ந்து பார்க்க முடியும். அநேக தடவைகளில் எனது அறையில் நான் அவ்வாறு ஒத்து வாக்கியங்களை எடுத்துக் கொண்டு அலசி ஆராய்ந்து பார்த்து, அதை ஒழுங்கு படுத்துவதுண்டு, யூதர்கள் ஊழியக்காரராயிருக்கின்றனர். நான் இங்கு நின்று கொண்டு, இருக்கிற நேரத்தையெல்லாம், “ஒரு ஊழியக்காரன்” என்கிற விஷயத்தைப் பற்றி எடுத்துக் கொள்வேனென்றால், மற்ற விஷயங்களை நான் தொட முடியாது. நீங்கள் பாருங்கள். எனவே, நான் சொன்னதை நினைவில் கொண்டு, அதை வேதம் பூராவும் தொடர்ந்து தேடிப் பாருங்கள். அப்பொழுது, யூதன் தேவனுடைய ஊழியக்காரனாயிருக்கிறான் என்பதை நீங்கள் காணுவீர்கள்.
3861 எசேக்கியல் 4-ம் அதிகாரத்தை நாம் திரும்பிச் சென்று பார்ப்போமானால், அங்கே என்னே ஒரு அழகான ஒத்ததான ஒரு காரியத்தை நாம் காண்கிறோம்! அவ்வசனத்தில், “இவ்விதமான காரியம் இதற்கு முன் சம்பவித்ததுண்டோ?” என்று கேட்கிறார். எசேக்கியல் உயரமான சுவற்றைப் பார்த்தான். அங்கே அவன் அந்நகரத்தில் செய்யப்பட்ட அருவருப்புகளையெல்லாம் கண்டான். அங்கே நான்கு புருஷர் சங்கரிக்கும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அவர்கள் எருசலேம் நகர முழுவதிலும் சென்று, யாவரையும் சங்கரிக்கும்படி புறப்பட்டு வந்தனர். 62 அவர்கள் சங்கரிக்கும்படி போகப் புறப்படும் முன்னர், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். ஏனெனில், தன் அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்து வெண்மையான ஆடை தரித்த ஒருவன் வந்தான். (எத்தனை பேர்கள் அதை வாசித்திருக்கிறீர்கள்?) எசேக்கியேல் 4-ம் அதிகாரம் அந்தப் புருஷன், தன் அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்தான். வெண்மையான ஆடை அணிந்திருந்தான். என்று கூறியுள்ளது. கர்த்தர் அவனை நோக்கி, “முதலாவது நீ தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போடும்முன்னர், நகரத்தினுள் போய் எவரையும் நீ சங்காரம் செய்ய வேண்டாம்” என்று கூறினார். அவன் புறப்பட்டுப் போய், சிறு குழந்தைகளிடமும் கூறி, உரியவர்களையெல்லாம் முத்திரையிட்டான்.
3963 அதன் பிறகு, சங்கரிக்கும் ஆயுதங்களை வைத்திருந்த நான்கு பேர்களும், புறப்பட்டு வந்து உள்ளே சென்று, ஈவு இரக்கமின்றி யாவரையும் முழுவதுமாக வெட்டிச் சாய்த்துக் கொண்டே போனார்கள். அவர்கள் புருஷர், ஸ்திரீகள் சிறு பிள்ளைகள் ஆகியோரில், கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்த புருஷன் எவர்களையெல்லாம் முத்திரையிட்டாரோ, அவர்களைத் தவிர மற்ற யாவரையும் வெட்டிச் சென்று போட்டனர். அந்த மகத்தான… 64 இச்சம்பவமானது, புவியில் வந்த நம்முடைய கர்த்தரின் நாட்களுக்குப் பிறகு நடந்தவையாகும். அவைகளைப் பற்றி கர்த்தரும் மத்தேயு 24-ம் அதிகாரத்தில் முன் கூட்டியே எச்சரித்திருந்தார். எப்படியெனில், “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது வீட்டின்மேல் இருக்கிறவன் இறங்காதிருக்கக்கடவன், வயலில் இருக்கிறவன் வீட்டில் போய் தனது அங்கியை எடுத்துக் கொள்ள திரும்பிப் போகாதிருக்கக்கடவன், ஆனால் யூதேயாவில் இருக்கிறவர்கள்…” ஜோசிபஸ் என்பவர் அவர்கள் எவ்வாறு ஓடிப் போனார்கள் என்பதைப் பற்றி எழுதியுள்ளார். கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே தப்பித்துக் கொண்டவர். சேனைகள் சூழ்ந்து கொண்டதை அவர்கள் கண்டபோது, தீத்து கி.பி 96-ல், தீத்து எருசலேமின் மதில்களை சுற்றி வளைத்து சூழ்ந்து கொண்டதை அவர்கள் கண்டபோது, அவர்கள் மரப் பட்டைகளை புசித்தனர், அவர்கள் நிலத்தின் புல்லையும் புசித்தனர். உண்மையாகவே ஒருவர் இன்னொருவருடைய குழந்தைகளை வேவித்துப் புசித்தனர். அவர்கள் முற்றுகையினால் யூதர்களை பட்டினி போட்டு அவர்கள் செயலற்றுப் போகச் செய்து, அவ்வேளையில் உள்ள நுழைந்து, அவர்கள் இரத்தமானது ஒரு ஓடையைப்போல் வாசல் வழியாக வழிந்தோடும் அளவுக்கு அவர்களை சங்கரித்தனர். அவர்கள் ஆலயத்தை சுட்டெரித்தனர். மதில்களை இடித்து கீழே தள்ளினர், அவ்வாறு இன்று வரையிலும் அது உள்ளது.
4065 தேவாலயம் இருந்த அதே இடத்தில் ஓமர் பள்ளி வாசலானது கட்டப்பட்டது. இயேசுவும் அதைப் பற்றி மத்தேயு 24-ம் அதிகாரத்தில் பேசியிருக்கிறார். “மேலும் பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன், நீங்கள் அதை பரிசுத்த ஸ்தலத்திலே நிற்கக் காணும்போது.” இங்கே இது அடைப்புக் குறிகளில் உள்ளது, “(வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்)” என்றார். பாருங்கள், “இந்த அருவருப்பை, முஸ்லீம்களின் ஓமர் பள்ளிவாசல் அங்கு அருவருப்பாக, முன்பு ஒரு காலத்தில் பரிசுத்த ஸ்தலமாக இருந்த இடத்தில்…நிற்பதை நீங்கள் காண்கையில்” இன்றைக்கும் தேவாலயம் ஸ்தாபிக்கப்பட்டிருந்த அதே இடத்தில் அந்த முஸ்லீம் பள்ளி வாசலானது அமைக்கப்பட்டுள்ளது. இயேசு கூறியவாறும், தானியேல் கூறியவாறும் முகம்மதியர்களின் அந்த பள்ளி வாசலானது அங்கே நின்று கொண்டிருக்கிறது. ஆம், இயேசுவும் அவ்வாறு நடக்கும் என்பதை உறுதிப்படுத்தினார்.
4166 அந்த தீர்க்கதரிசிகளும், தேவனும் அந்த காரியங்களை முன்னுரைத்திருப்பதைக் கவனியுங்கள், சகோதரரும், அது உங்களை, நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதை அறியச் செய்து, நம் கழுத்தின் பின்புற முடியை சிலிர்த்து நிற்கச் செய்தல் வேண்டும். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். வேறு ஒன்றும் மீதியாக விடப்பட்டிருக்கவில்லை. இவ்வாறு நடக்கும் என்று அவர் கூறிய பிரகாரமாகவே இவையாவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அது நம்மை தைரியமூட்டி நம்மை ஆயத்தப்படுத்த வேண்டும். “இவை யாவும் சம்பவிப்பதை நீங்கள் காணும்போது” என்று கூறி இயேசு தம்மை எச்சரித்திருக்கிறார். “உங்கள் மீட்பு சமீபமாயிருக்கிறபடியால் நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயத்துங்கள்” என்று நாம் பேசிக்கொண்டிருக்கிறோமே, அதைப் போலத்தான் இது உள்ளது. 67 உலகம் முழுவதையும் நாம் ஆதாயப்படுத்தினாலும் அதினால் நமக்கு என்ன பயன்? நாம் எப்படியும் அதை இழந்து விடத்தான் போகிறோம். அந்தவிதமாக அதை நாம்—நாம் நமக்கு ஆதாயப்படுத்திக் கொள்ள முடியாது. ஒரேயொரு விதமான ஆதாயப்படுத்திக் கொள்ளுதல் தான் உண்டு, அது கிறிஸ்துவின் மூலமாகத் தான். கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் வெல்லக் கூடியவர்களாக இருப்பீர்கள். நீங்கள் இந்த உலகைவிட்டு போகத்தான் வேண்டும்; இந்த ஆராதனை முடிவதற்கு முன்னர் ஒரு வேளை நீங்கள் கடந்து சென்று விடக் கூடும். இன்று சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னர் ஒரு வேளை நீங்கள் கடந்து சென்று விடக்கூடும். சூரியன் நாளை காலை உதயமாவதற்கு முன்னர் ஒரு வேளை நீங்கள் இவ்வுலகை விட்டுப் போய்விடக்கூடும், அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்கு முன்பாக ஒரு வேளை நீங்கள் போய்விடக் கூடும், நாம் யாவரும்கூட ஒரு வேளை போய்விடக் கூடும், நாம் எப்பொழுது இவ்வுலகைவிட்டு கடந்து செல்லப்போகிறோம் என்பதை நாம் அறியோம். ஆனால் நீங்கள் போயாக வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அதை ஏற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டுக் கொண்டே போவது மதீயினமான தொன்றல்லவா? மரணத்தோடு நீங்கள்—நீங்கள் நெருங்கி, நீங்கள்—நீங்கள் மரணத்தோடு சரசமாடிக் கொண்டிருக்கிறீர்கள்.
4268 அது பழங்காலத்திய, பனிக்கட்டியின் மீது வழிக்கியோடுவதற்காக மரத்தினாலான ஒரு வகை வண்டியில் ஏறிச் செல்வது போலுள்ளது. அதில் ஏறிக் கொண்டு சுற்றிலும் சறுக்கிக் கொண்டே வரும்பொழுது, அவர்களையும் அறியாமல் திடீரென ஒரு சரிவில் வழுக்கிக்கொண்டே போய்விடுவார்கள், மரணத்திற்கு மிகவும் சமீபமாக வருவார்கள். அவ்விதமாகதான் நீங்களும் சுற்றிலும் சறுக்கிக் கொண்டே வந்து வழுக்கிவிழப் பார்க்கிறீர்கள். எந்த நிமிடத்தில் ஏதோ ஒன்று உங்களை கவிழ்த்து நீங்கள் இல்லாமற் போகும்படி செய்யப் பார்க்கிறது என்பதை நீங்கள அறிவீர்கள். இருதயம் நின்று விடுதல், மோட்டார் வாகன விபத்து, மற்றும் வேறெந்த ஒன்றும் எந்த நேரமும் நேரிட்டு, நீங்கள் மரிக்க நேரிடலாம். அப்பொழுது நீங்கள் போய்ச் சேர வேண்டிய உங்களுடைய நித்திய சேருமிடம் சரியாக உங்களுக்கு முன்பாக உள்ளது. நண்பரே, அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்.
4369 “பாழாக்கும் அருவருப்பை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,” இயேசு புவியில் வந்துவிட்டுப் போனதற்குப் பிறகு, தீத்து வந்திட்ட நாட்களிலே, அங்கே தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்துக் கொண்டுவந்த அந்த நபர் பரிசுத்த ஆவியானவர் தாமே. அவர் எருசலேம் முழுவதிலும் உருவக் கடந்து போய், உரிய மக்கள் மேல் அடையாளத்தைப் போட்டார். சபை உறுப்பினரே, நீங்கள் ஒரு காரியத்தை கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறதாக உரிமைகோரிக் கொள்ளுகிறீர்கள் அல்லவா? அவர், “நகரத்திலெங்கும் அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சு விட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் தவிர வேறு எவர்மேலும் அடையாளத்தைப் போடாதே” என்று கூறினார். இப்பொழுது உலகத்தைப் பற்றியும் அவர்களுடைய நிலையைப் பற்றியும் பாரமடைந்திருக்கிற நிலையில் உள்ளவர்கள் எங்கேயிருக்கிறார்கள்? 70 நல்லது, அவர்களோ, “நான் மெதோடிஸ்ட், நான் பாப்டிஸ்ட், ப்ரெஸ்பிடேரியன். எனவே அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப் போகிறது?” என்று கூறுகிறார்கள். 71 ஓ, இழந்து போகப்பட்டவர்கள் மேல் தொடர்ந்து இருக்கும் பாரமல்ல அது. அது இனிமையாகும். உங்கள் ஆத்துமாவில் எந்தவொன்றும் எழும்பி உங்களுக்குள் கசப்பை போட்டு விட இடம் கொடாதிருங்கள். உங்களை ஒருவர் எவ்வளவு மோசமாக நடத்தியிருந்தாலும் அல்லது எந்தக் காரியமாயிருந்தாலும் சரி, அதைப் பொருட்படுத்த வேண்டாம். ஒருபோதும் கசப்பு வேண்டாம். உங்களுடைய ஆத்துமாவில் கசப்பானது நங்கூரமிட்டுவிடும் குற்ற உணர்வு உடையவர்களாக ஆகாதிருங்கள். அது தானே பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தி, உங்களைவிட்டு நீங்கச் செய்துவிடும். நிச்சயமாக அதுதான் நடக்கும்.
4472 இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக நான் இங்கே ஒரு தவறான காரியத்தைப் பேசிவிட்டிருந்ததை நான் நினைத்துப் பார்க்கிறேன். வழக்குரைஞர்கள் என்னை அழைத்திருந்தனர், நான் சென்றேன்…என் மனைவி அங்கே அமர்ந்திருக்கிறாள் …ஏதோ என் தலையே பிரிந்து வந்ததைப் போல் நான் உணர்ந்தேன். நான் திரும்பிப் போய்விட்டேன். அவர்கள் தொலைபேசியின் மூலமாக “இன்று மதியம் அங்கு வரும்படி அவரிடம் சொல்லுங்கள்” என்று என் மனைவியிடம் கூறினார்கள். மேடா என்னிடம், “வழக்குரைஞர்கள் பேசினார்கள்” என்றாள். நான் வாசலை விட்டு வெளியே நழுவிக் கொண்டே, “நான் இங்கே இல்லை என்று கூறிவிடு” என்று அவளிடம் சொன்னேன். அதற்கு அவளோ, “பில்” என்றாள். அப்பொழுது நான், “இப்பொழுது நான் இங்கே இல்லை என்று அவரிடம் சொல்லிவிடு” என்று கூறுவிட்டு, நான் வெளியே போய்விட்டேன். 73 பிறகு நான் வெளியே போய்விட்டு, மனதில் மிகவும் துக்கமடைந்தவனாய் வீடு திரும்பினேன். அவள் வழக்குரைஞரிடம் நான் சொன்னதை கூறிவிட்டாள். அக்காரியம் அவளை மிகவும் புண்படுத்தியிருந்ததை நான் கண்டேன். 74 வியாதியுற்றிருந்த ஒரு சிறு குழந்தைக்காக ஜெபிக்கும்படி ஒரு மனிதன் வந்திருந்தார். நான் அதற்காக ஜெபிக்கப் போனேன். அக்குழந்தையின் மேல் நான் என் கையை வைத்து ஜெபிக்க ஆரம்பித்த பொழுது, ஏதோ ஒன்று என்னிடம், “நீ ஒரு மாய்மாலக்காரன், பார்த்தீர்களா? நீ என்ன செய்தாய் என்று நீ அறிவாய்” என்றது. 75 நான் அம்மனிதனிடம், “ஐயா, நான் உமது குழந்தைக்காக ஜெபிக்க தகுதியற்றவன். பாருங்கள், என்னில் உள்ள பரிசுத்த ஆவியானவர் துக்கமடைந்துள்ளார். நான் குழந்தையின் மேல் என் கைகளை வைத்து ஜெபிக்க பாத்திரவானாயிருக்கவில்லை. நான் போய் ஒரு காரியத்தை சரி பண்ணிக்கொண்டு வருமளவும் நீங்கள் காத்திருங்கள்” என்றேன். 76 நான் எனது வழக்குரைஞரிடம் போய், “நான் தவறு செய்தேன்” என்று கூறினேன். அதற்கு அவரோ, “நீங்கள் வெளியே போய்விட்டிருந்தீர்கள் என்று நான் நினைத்தேன்” என்றார். அப்பொழுது நானோ, “இல்லை, தவறான ஒன்றை உங்களிடம் சொல்லும்படி நான் என் மனைவியை காரணமாக்கிவிட்டேன். நான் அதற்காக வருந்துகிறேன். நான் அதை வேண்டுமென்றே செய்யவில்லை. என்னை அதற்காக மன்னிப்பீர்களா?” என்று அவரிடம் கேட்டேன். அந்த விஷயத்தில் என்னை மன்னிக்கும்படி என் மனைவியையும் கேட்டேன்.
4577 அதற்குப் பிறகு க்ரீன்ஸ் மில் என்ற இடத்திற்கு நான் சென்றேன். அது ஒரு ஜூலை மாதத்தில் நடந்தது. ஓ, அந்த சமயத்தில் அங்கே காட்டில் மிகவும் நிசப்தமாக இருந்தது. நான் குகையில் அந்த மதியம் முழுவதும் ஜெபித்துக் கொண்டேயிருந்தேன். நான் குகையை விட்டு வெளியே போய், பாறையின் மேல் போய் நின்றேன். என்னால், மலைகளுக்கு அப்பாலும் பார்க்க முடிந்தது, அது மிகவும் அழகான காட்சியாயிருந்தது; இலைகள் மற்றும் யாவும் அசையாமல் அமைதியாக இருந்தது. அப்பொழுது மாலை சுமார் 5, மணி இருக்கும், அல்லது 6 மணி இருக்கும். அது கோடை காலமாயிருந்தது, ஒன்றும் அசையவில்லை, மிகவும் அமைதியாயிருந்தது. மிகவும் உஷ்ணமான பகலாக அன்று இருந்தது. அப்பொழுது நான், “பரலோக பிதாவே, ஒரு சமயம் நீர் மோசேயை பாறையின் மேல் நிறுத்தி அவனுக்கு முன்பாக கடந்து சென்றீர்” என்றேன். மேலும் நான், “நான் செய்த பொல்லாங்கை நீர் மன்னித்தருளுவீரானால், நீர் மீண்டும் ஒரு தடவை எனக்கு முன்பாக கடந்து சென்று நான் உம்மை காணும்படி செய்வீரா?” என்று கேட்டேன். அப்பொழுது எனது இடது பக்கத்தில் உள்ள மலையின் பக்கமாக சிறு சுழற்காற்று உண்டாகி, இலைகளை நன்கு அசையச் செய்து என் பக்கமாக இந்தவிதமாக அது தாழ இறங்கிவந்து வீசி, காட்டுக்குள் கடந்து சென்றது. அதைக் கண்டு நான் ஒரு குழந்தையைப் போல் கதறி அழுதேன். 78 நான் வீட்டுக்குத் திரும்பிச் சென்று, “என் பாவம் இப்பொழுது எனக்கு மன்னிக்கப்பட்டது என்று அறிவேன்” என்று நான் கூறினேன், பார்த்தீர்களா? 79 எப்பொழுதும் கசப்பான வேர் உங்களை விட்டு அகன்று போகும்படி பாருங்கள். புரிகிறதா? உங்களுக்கு யார் என்ன செய்தாலும் அதைப்பற்றி பொருட்படுத்த வேண்டாம். தேவன் அங்கே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள், அப்பொழுது அது பொல்லாங்கு யாவையும் உங்களைவிட்டு அகன்றிருக்கும்படி செய்யும்.
4680 இப்பொழுது, கிறிஸ்துவின் எச்சரிக்கையைப் பெற்றிருந்த இந்த கிறிஸ்தவர்களின் காரியமானது, இன்று காலையில் நாம் பேசிக் கொண்டிருந்த காரியத்திற்கு ஒரு மாதிரியாயிருக்கிறதைக் கவனியுங்கள். இயேசுவின் இந்த எச்சரிக்கையைப் பெற்றிருந்த இந்த கிறிஸ்தவர்கள், அவர் சொன்னபடி அழிவானது ஏற்படப் போகிறதை அறிந்திருந்தபடியினால், உரிய சமயத்தில், ஆபத்து வருவதற்கு முன் கூட்டியே எருசலேம் பட்டணத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். 81 இப்பொழுது சபை அங்கத்தினர்களை கவனியுங்கள், இவர்களுக்கு அந்நாட்களில் இருந்தவர்கள் முன்னடையாளமாயிருந்தார்கள். அக்காலத்தில் மக்கள் சபையைச் சேர்ந்து கொண்டு, சபைக்குப் போனார்கள். அவர்கள், “ஓ, சேனைகளானது சூழ்ந்து கொண்டு வருகிறது, எனவே யுத்தம் வந்து கொண்டிருக்கிறது, நாம் இப்பொழுது கர்த்தருடைய வீட்டிற்குள் சென்று ஜெபம் செய்வோம்” என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் மிகவும் தாமதமாகிவிட்டனர். அது ஒரு இம்மியளவு கூட பலனளிக்கவில்லை. பாருங்கள்.
4782 ஆனால் இந்த சீஷர்களோ இயேசு முன்னுரைத்த எச்சரிப்பை அறிந்திருந்து, அதன்படி சம்பவிக்கப் போவதை கவனித்துக் கொண்டேயிருந்தார்கள். அவர்கள் அதனால் தப்பித்துக் கொண்டனர். (சரித்திரக்காரர்கள் அதை, “அந்த நரமாம்சத்தை தின்ற, அதாவது இயேசு என்றழைக்கப்பட்ட இந்த மனித சரீரத்தை தின்றவர்கள்; அவர்களை இயேசு குணமாக்குவதுண்டு,” என்றே குறிப்பிட்டனர். பாருங்கள், சீஷர்கள் இராப்போஜனம் எடுத்ததை, வரலாற்றாளர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அது என்னவென்று தெரியாது, பாருங்கள், காரணம் அவன் ஒரு மாம்சப்பிரகாரமான மனிதன் தானே, ஒரு விசுவாசியல்ல, வெறும் ஒரு வரலாற்றாளன் தான். அவன்…) அவர்கள் பூமியின் மேல் வந்த அழிவின்று தப்பினார்கள்.
4883 இப்பொழுது, நீங்கள் பாருங்கள், அதன்பின்னர் எருசலேம் முழுவதும் அழிக்கப்பட்டது …பாருங்கள். இப்பொழுது அது இங்கே பரிபூரணமான இணையான முன் மாதிரியாக இருக்கிறது. அது வெளிப்படுத்தின விசேஷம் 7-ம் அதிகாரம். இப்பொழுது கவனியுங்கள்! உலகத்திற்குள்ளாக்க, தீத்து எருசலேமை முற்றுகையிட்ட காலம் தொடங்கி, 1914-ம் ஆண்டு வரையிலும் உள்ள இடைப்பட்ட காலத்தில் எப்பொழுதாவது முழு உலகமும் ஒரு பெரிய யுத்தத்தை செய்து கொண்டதாக வரலாற்றில் ஒரு சமயமும் இருந்ததேயில்லை. இப்பொழுது கவனமாக கேளுங்கள். இந்த இடத்தில் தான் திருவாளர் ரூத்தர்போர்ட் அவர்கள் தவறான முடிவுக்கு வந்திருக்கிறார். இங்கேதான் என்று நான் நிச்சயமாக அறிந்திருக்கிறேன். இப்பொழுது கவனியுங்கள்: இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, (இவ்விதமாக அந்நால்வரும் பூமியின் நான்கு மூலைகளில் நின்று கொண்டிருக்கிறார்கள்) பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு , (வேதத்தில் காற்றுகள் என்பது “போர், சண்டை” என்ற அர்த்தத்தை கொடுக்கிறது என்றும், பிசாசானவன் ஆகாயத்தின் அதிகாரப் பிரபு என்பதையும் எவரும் அறிந்திருப்பர், நீங்கள் பாருங்கள்)… பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந் திசையிலிருந்து (அத்திசையிலிருந்து இயேசுவும் வருவார்) ஏறிவரக்கண்டேன்; அவனுடைய நெற்றியில், அவனுடைய கையில்: அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி: நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான்.
4984 இப்பொழுது, தேவனுக்கு நேரம் என்பது கிடையாது, அவருடையது நித்தியமானதாயிருக்கிறது. நாம் காலக்கணக்கினைக் கொண்டு அளவிட பார்க்கிறோம். நமக்குத் தெரிந்ததெல்லாம், அங்குலங்கள், சதுரங்கள், இத்தனை கல் தொலைவு என்பன போன்றவை தான். தேவன் நித்தியமானவராயிருக்கிறார், துவக்கும் இல்லை, முடிவும் கிடையாது. பாருங்கள், அவர்—அவர் நித்தியமானவராயிருக்கிறார். 85 1914-ம் ஆண்டில் முழு உலகமும் ஜெர்மனியை நோக்கி ஒரு உலக யுத்தத்திற்காக அணி வகுத்துச் சென்று கொண்டிருந்தது, அது உண்மை, முழு உலகமும் ஒரு உலக யுத்தத்திற்காக புறப்பட்டன. நீங்கள் கவனித்தீர்களா? நிச்சயமாகவே அது ஒரு வினோதமான காரியமாயிருந்தது. 86 எனது நல்ல நண்பராய் இங்கே அமர்ந்திருக்கிற சகோதரர் வுட் அவர்களின் தந்தையே, நீங்கள் இதை தெளிவாக புரிந்து கொள்ள விரும்புகிறேன். பாருங்கள், அவர்கள்…அவர் யேகோவா சாட்சிகளிலிருந்து மனந்திரும்பியவர் ஆவார். நீங்கள் பாருங்கள்.
5087 ஆகவே, அவர்கள் யாவரும் யுத்தத்திற்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர். அது 1914-ம் ஆண்டு என்று உங்களுக்கு நன்கு நினைவிலிருக்கும். அவர்களுக்கு இது நாள் வரையிலும், யார் அந்த யுத்தத்தை நிறுத்தியது என்பது தெரியாது என்பது வினோதமாக இல்லையா? ( உலக யுத்தத்தின் வீழ்ச்சி என்ற புத்தகத்தின் இரண்டாவது தொகுதி, நாற்பத்தி நான்காம் பக்கத்தில் சரியாக அது உள்ளது, அப்புத்தகத்தின் தொதிகள் யாவும் என்னிடம் உள்ளன.) கெய்சர் வில்ஹெம், தான் அதற்காக உத்தரவு ஒன்றையும் பிறப்பிக்கவில்லை என்று கூறினார். ஆனால் திடீரென யுத்தமானது நின்று போனது, ஒருவருக்கும் ஏன் நின்று போனது என்பது தெரியாது. அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென முன்னணியில் வந்து, அவர்களிடம் கூறினார்கள். “எல்லாம் முடிந்தது, யுத்தம் நின்றது” என்றனர். அவர்கள் ஏற்கெனவே சமாதன உடன்படிக்கையில் என்ன நடக்கிறதென்று அறியாமல் கையொப்பமிட்டிருந்தனர். 88 இப்பொழுது உண்மையாகவே, அவைகள் யாவையும் குறித்து விளக்கிப் பேச வேண்டுமானால், ஒன்றிரண்டு நாட்கள் பிடிக்கக் கூடும். அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் நாம் அதிலுள்ள முக்கியமான பகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு பார்ப்போம். தேவன் தன்னுடைய வார்த்தையை நிறைவேற்றுவதற்காக, அவரே இதை நிறுத்தினார். அந்த தூதன் அதை நிறுத்தினான். அத்தூதர்கள் சங்கரிக்கும் ஆயுதங்களை தங்கள் கைகளில் பிடித்துக் கொண்டு சென்றார்கள், (எதற்காக?) முழு உலகையும் அழிப்பதற்காகவே, இன்னொரு தூதன் “ஒரு நிமிடம் பொறுங்கள், அதைச் செய்யாதீர்கள், ஏனெனில், முதலில் நாம் நமது தேவனுடைய ஊழியக்காரருடைய நெற்றிகளில் முத்திரை போட்டாக வேண்டும்” என்று கூறினார்.
5189 சரியாக, பெந்தெகொஸ்தே எழுப்புதல் உண்டான சமயம் அது. 1906-ல் அது துவங்கியது. யுத்தம் 1914-ல் துவங்கியது. உங்களில் எத்தனை பேர்கள் அதை அறிவீர்கள்? அந்த பழைய நாட்களை நினைவில் வைத்துள்ள பழங்காலத்து பெந்தெகொஸ்தேக்காரர்கள் யாராகிலும் இங்கே உண்டா? நிச்சயமாக. அக்காலங்களில், பரிசுத்த ஆவியானவர் மக்கள் மேல் விழ ஆரம்பித்தபோது, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று, அந்நிய பாஷைகளில் பேசி, வியாதியஸ்தருக்காக ஜெபித்தார்கள். அதன் துவக்கமாக அக்காலம் இருந்தது அல்லது இரு காலங்களுக்கும் இடைப்பட்ட காலமாக அது இருந்தது. அவ்வாறு அது பிறந்தபொழுது, உண்மையான சபையும் ஏற்பட்டது. அதன் பின்பு, பெந்தெகொஸ்தேயினர் அசெம்ப்ளீஸ் ஆஃப் காட், சர்ச் ஆஃப் காட் ஆகிய ஸ்தாபனங்களை உண்டாக்கிக் கொண்டனர். இவ்வாறு அவர்கள் தங்களுடைய ஸ்தாபன கொள்கைகளுக்குள் சென்று, வழி தவறினர். இப்பொழுது இருக்கிறது போலவே அப்பொழுதும் இருந்தனர். எனவே அது…நாம் காலத்தின் கடைசியில் இருக்கிறோம் என்பதை நீங்கள் பாருங்கள். யாவும் முடிவுக்கட்டத்தை நோக்கி இறங்கி வருகிறது, யாவும் சரியாக இந்தக் கடைசிக் கட்டத்திற்குள் ஓடி வருகின்றது.
5290 இப்பொழுது, இந்த நான்கு…நீங்கள் கவனித்துப் பாருங்கள், போர் சரியாக பதினோராம் மாதமாகிய நவம்பரில் பதினொராம் தேதி, பகல் பதினொராம் மணி வேளையில் நின்று விட்டது. அது சரியாக வருடத்தில் பதினொராம் மாதம், மாதத்தில் பதினொராம் நாள், நாளின் பதினொராம் மணி வேளையாக இருந்தது. அதைக் குறித்து இயேசு என்ன சொன்னார் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? “முதலாம் மணி வேளையில் ஒருவன் திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றான். அவனுக்கு ஒரு பணம் கூலியாக கிடைத்தது. கடைசியாக சிலர் வேலைக்குச் சென்றார்கள்.” அவர்கள் தான் பதினொராம் மணி வேளையில் சென்றவர்கள். அது சரியாக இருக்கிறதல்லவா? அங்கே அவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் பதினோராம் மணி வேளையில் உள்ளவர்கள். அவர்கள் பிந்தினோர் ஆவர். இப்பொழுது அவர்கள் வருவதற்கு உரிய வேளையாகி விட்டது. அவர்கள் யூதர்கள் மத்தியிலிருந்து வந்து உள்ளார்கள், இப்பொழுது ஒன்று சேர்ந்து ஒரு தேசமாக உருவாகிவிட்டார்கள். அவர்கள் உலகம் முழுவதிலும், ஈரான் முதற்கொண்டு பல்வேறு தேசங்களிலும் சிதறிடிக்கப்பட்டுவிட்டார்கள். அங்கே அவர்கள் இருந்த பொழுது, இயேசு பூமியில் இருந்தார் என்பதனை அறியாதிருந்தார்கள்; ஒரு புதிய ஏற்பாடு உண்டு என்பதையோ, அல்லது வேறு எதையுமோ ஒருபோதும் அறியாதிருந்தார்கள்.
5391 இப்பொழுது நீங்கள் லுக் என்ற பத்திருக்கையிலும், லைட் என்ற பத்திரிக்கையில் அவர்கள் தங்கள் சுய தேசத்திற்குத் திரும்பி வந்து கொண்டிருப்பதைக் குறித்த படங்கள் பிரசுரித்துள்ளதைப் பார்க்கலாம். “அத்தி மரம் துளிர் விடுவதை நீங்கள் காணும் போது” என்று இயேசு கூறவில்லையா? யூதர்கள் எப்பொழுதும் அத்திமரத்தினால் உவமையாக சொல்லப்படுகிறார்கள். “இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே, இந்த சந்ததி ஒழிந்து போகாது” என்று இயேசு கூறினார். இப்பொழுது அவர்கள் ஏற்கனவே தங்கள் தேசத்திற்கு திரும்பி வந்து விட்டார்கள். அவர்கள் ஏற்கனவே ஒரு தேசமாக ஆகி, தங்கள் சொந்த நாணயத்தையும், சொந்தக் கொடியையும் உடையவர்களாக இருக்கின்றனர். அத்தேசம் ஐக்கியா நாடுகள் சபையில் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவள் தன் நாட்டில் குடியேறிவிட்டாள்! அவள் ஆயத்தமாக இருக்கிறாள்! இப்பொழுது எதற்காக ஆயத்தமாயிருக்கின்றனர்? அவர்களிலுள்ள லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் ஆகிய இஸ்ரவேலர் முத்திரையிடப்படுவதற்காகவே. (இப்பொழுது, இன்னும் ஒரு நிமிடத்தில் நாம் அதைப் பற்றிப் பார்ப்போம்.) நான் உண்மையான யூதர்களைப் பற்றி தான் இங்கே குறிப்பிடுகின்றேன். அவர்கள் யூதர்கள், வால் ஸ்ட்ரீட்டிலுள்ள எப்பொழுதும் ஏமாற்றி திருடும் கூட்டமாகிய யூதர்களை நான் குறிப்பிடவில்லை. அங்கே தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்ளும் மிகவும் உண்மையான யூதர்களைப் பற்றித் தான் நான் குறிப்பிடுகிறேன்.
5492 இப்பொழுது உண்மையான யூதர்கள் மீண்டும் பாலஸ்தீனாவில் கூடி வந்து கொண்டு இருக்கிறார்கள். தீர்க்கதரிசி என்ன உரைத்தானோ, அதே விதமாக, இஸ்மவேலும், ஈசாக்கும் ஒருவர் கழுத்தை ஒருவர் நெருக்கும்படியான அளவுக்கு அருகருகில் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள். கடைசி நாட்களில் இவ்வாறு அவர்கள் அங்கே இருப்பார்கள் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளபடி, அவர்கள் அவ்வாறே அங்கே வாசம் பண்ணுகிறார்கள். இஸ்மவேல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாசம்பண்ணுகிறானென்றால், ஈசாக்கு அதற்கடுத்த தெருவில் இருக்கிற அளவுக்கு மிகவும் அருகருகே அவர்கள் வாசம்பண்ணுகிறார்கள். (முகம்மதியர்களும், யூதர்களுமான அவர்கள்,) ஒருவருக்கொருவர் எவருக்கும் சொந்தமில்லாத இடத்திற்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
5593 இப்பொழுது, நாம் பெற்றிருக்கிற இந்த செய்தியோடு அந்தக் காரியம் தொடர்புடையதாக இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி பார்ப்போம். இஸ்ரவேல் என்ற ஒரு நாடு ஏற்படுவதைப் பற்றி கையெழுத்திடப்படும் அதே வேளையில், அதே மணி நேரத்தில், அதே நாளில், அதே மாதத்தில் நான் இந்தியானாவிலுள்ள க்ரீன்மில் என்னுமிடத்தில் இருந்தேன். அப்பொழுது அந்த தூதன் அங்கே எனக்கு தரிசனமாகி, இந்த செய்தியோடு என்னை ஊழியக்களத்திற்கு அனுப்பினார்; அங்கே அவர் அந்த நதிக்கரையில் என்னை சந்தித்து என்ன நடக்கும் என்று கூறியபிறகு, அதற்கு பதினொரு ஆண்டுகள் கழித்து, இஸ்ரவேல் தேசமாக உருவாவதற்கான தீர்மானம் கையெடுத்திடப்பட்ட அதே நேரத்தில் அவர் எனக்கு தமது கட்டளையைக் கொடுத்தார். அது யாவும் ஒன்றோடொன்று சம்மந்தப்பட்டுள்ளது.
5694 பாருங்கள், கர்த்தருடைய தூதனானவர் இப்பொழுது பூமியில் இருந்து கொண்டு, எங்கும் சுற்றித் திரிந்து, கர்த்தருடைய வருகைக்காக யாவற்றையும் ஆயத்தப்படுத்தக் கொண்டிருக்கிறார், பாருங்கள். அதே தூதர்கள் தான் சோதோமுக்குள் சென்று, அவர்களுடைய பாவங்களின் கூக்குரல், கேட்டதன்படியே இருப்பதைப் போய் கண்டார்கள். “எங்களிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிய இறங்கி வந்திருக்கிறோம்,” என்றார்கள். 95 உங்களுக்கு அது நினைவிருக்கிறதா? ஒரு தூதன் அங்கே போனான்…(ஒரு தூதனானவர் தெரிந்து கொள்ளப்பட்ட ஆபிரகாமோடு தங்கிவிட்டார்) சோதோம் இங்கே , இருந்தது. இரு தூதர்கள் அங்கே சென்று அவர்களுக்கு பிரசங்கித்து, அச்சிறு குழுவாகிய உறங்கும் கன்னியரை வெளியே கொண்டு வந்தனர். பாருங்கள்? சரி. (ஆனால் ஒரு தூதனானவர் ஆபிரகாமோடு தங்கி விட்டார்) இந்த தூதர்களோ இங்கே சோதோமில் பிரசங்கித்தார்கள். ஒரு நவீன பில்லிகிராம் மற்றும் உள்ளோரும் அவர்களை வெளியே இழுத்தனர்.
5796 ஆனால் ஆபிரகாமோடு தங்கிவிட்ட இந்த தூதனானவரோ, தன்னுடைய முதுகு கூடாரத்தின் பக்கமாக திரும்பியிருக்கும்படி நின்று கொண்டிருந்தார். அவர், “ஆபிரகாமே, உன் மனைவியாகிய சாராள் எங்கே?” என்று கேட்டார். அவள் விவாகமானவள் என்பதும், அவன் விவாகமானவன் என்பதும் அத்தூதனுக்கு எப்படித் தெரியும்? அவனுக்கு ஒரு மனைவி இருந்தாள் என்பது அவருக்கு எப்பத் தெரியும்? அவனுடைய பெயர் என்ன என்றும், அவளுடைய பெயர் சாராள் என்பதும், அவருக்கு பின்புறமாய் உள்ள கூடாரத்தில் அவள் இருந்தாள் என்பதும் அவருக்கு எப்படித் தெரியும்? 97 அவர், “நான் உனக்கு ஒரு வாக்குத்தத்தம் செய்துள்ளேன்” என்றார். “நான்” அந்த தூதன் யாரென்பதை நீங்கள் அறிவீர்கள். “நான் உனக்கு ஒரு வாக்குத்தத்தம் செய்தேன். ஒரு உற்பவ காலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்கு திரும்ப வருவேன். அப்பொழுது உன் மனைவியாகிய சாராள் இந்த குழந்தையை பெற்றெடுக்கப் போகிறாள்” என்றார். 98 அவருக்குப் பின்னாக கூடாரத்தின் வாசலில் நின்றிருந்த சாராள் அதைக் கேட்டபோது நகைத்தாள். தூதனானவரின் முதுகுப்புறமானது சாராள் இருந்த கூடாரத்திற்கு எதிராக இருக்கும்படி இருக்க, அவர், “சாராள் ஏன் நகைத்தாள்?” என்றார். தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கு அவர் கொடுத்த அடையாளத்தை பார்த்தீர்களா? 99 சோதோமில் அவர்கள் பெற்றுக்கொண்ட அடையாளத்தைப் பார்த்தீர்களா? 100 மீண்டும் அங்கே உங்களுடைய மூன்று விதமான பிரிவினர் இருக்கிறார்கள், நாம் மீண்டும் அவர்களை பார்க்கிறோம்.
58101 உலகம் முழுவதும் ஊழியம் செய்துவரும் இந்த பெரிய ஊழியக்காரர்களை…நாம் பெற்றுள்ளோம். பில்லிகிரஹாம் பரிசுத்த ஆவியைப் பெற்ற பிறகு, இதற்குள்ளாக இங்கே வர முடியவில்லை. அவருடைய ஊழியகளம் அங்கே தான் இருக்கிறது. அவர் அதை கண்டு கொள்கிறார். தேவனும் அவரை அங்கே தான் வைத்திருக்கிறார். பாருங்கள்? அறிவினால் நிறைந்த அந்த பிரசங்கத்தைக் கொண்டு, இங்கே உள்ளதை அவர் கேட்டிருந்தும் கூட, அவர் சோதோமுக்குள் இருக்கும் உறங்கும் கன்னியருக்கு கிருபை கிடைத்து அவர்களை காப்பாற்றிட முயற்சிக்கிறார். புரிகிறதா? 102 ஆனால் இங்கோ , ஆபிரகாமும் அவனது வகுப்பினரும் இருக்கிறார்கள். இயேசு, “சோதோமின் நாட்களில் நடந்தது போல் மனுஷ குமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்” என்று கூறினார். 103 பாருங்கள், அத்தூதர்கள் இப்பூமியில் இருந்து கொண்டு அதே காரியத்தைச் செய்து கொண்டிருப்பார்கள். பாருங்கள், அதனால் தான் பில்லிகிரகாம் பாப்டிஸ்ட்டுகள் மற்றும் அதைப் போன்ற சபைகளுக்கும் சென்று கொண்டிருக்கிறார். அவ்விதமாகத்தான் அவர் செய்தாக வேண்டும். பாருங்கள், ஜேக் ஷூலர் மற்றும் ஏனைய பெரிய மனிதர்களைப்—மனிதர்களைப் பாருங்கள், அவர்கள் எழுப்புதல் பிரசங்கிகள் ஆவர். அவர்கள்—அவர்கள் மக்களை இழுக்கிறார்கள். எனவே அவர்கள் அப்படித்தான் இருந்தாக வேண்டும். அவர்கள் அங்கே அற்புதங்கள் ஒன்றும் செய்யவில்லை. ஒரு சில காரியங்களை, அதாவது மக்களை குருடாக்கியுள்ளனர், ஆனால் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல் அவர்களை குருடாக்கிப் போட்டிருக்கிறது, பாருங்கள், வேதம் அவ்வாறு கூறுகிறது. 104 ஆனால் இங்கே உள்ள இந்த நபரோ ஆபிரகாமுக்கும், அவனுடைய கூட்டத்தாராகிய தெரிந்துகொள்ளப்பட்ட சபைக்கும் இவ்வடையாளங்களை, இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்களை செய்தார்.
59105 இப்பொழுது, 1914-ல் உலகம் ஒரு யுத்தத்திற்கு சென்றது. அது முதற்கொண்டு அவர்கள் சமாதானமாயிருக்கவில்லை. தொடர்ச்சியாக அவர்கள் சண்டையிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இன்னமும் அவர்கள் அதே காரியத்தைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அத்தூதர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் “பிடித்துக் கொண்டிருந்தார்கள்!” ஓ தேவனே, இரக்கமாயிரும்! நான் தரிசனத்தில் கண்ட அம்மகத்தானதை அவர்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். (முழுவதும் அழிவுக்குள்ளாகின்றது) அது வந்து அழிக்கிற வரையிலும், அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளாதபடிக்கும், இஸ்ரவேல் தன் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்று ஒருமித்து கூடுகிற வரையிலும், செய்தியானது இஸ்ரவேலுக்குச் சென்று, பரிசுத்த ஆவியாகிய முத்திரையினால் அவர்கள் முத்திரையிடப்படுகிற வரையிலும், அணுகுண்டுகளையும், யுத்தங்களையும் அத்தூதர்கள் தடுத்து நிறுத்தி பிடித்து வைத்திருக்கிறார்கள். பாருங்கள், புறஜாதியார் மத்தியிலிருந்து அவரது நாமத்திற்கென ஒரு கூட்டம் மக்கள் பிரித்தெடுக்கப்பட்ட பிறகு; இந்த காலத்தில் தான் இங்கே அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அதன் பிறகு, இஸ்ரவேல் மட்டுமே, மூன்று வருடங்கள் ஆறு மாதங்கள் அளவுக்கு செய்தியை பெறுகிறது. 106 தானியேல் அவ்வாறு உரைத்தான். அவர்கள் அவ்வாறு செய்வார்கள், அங்கே அது இருக்கும் என்று உரைத்திட்டான். “அங்கே எழுபது வாரங்கள் இருந்தது…அதாவது—அதாவது ஏழு ஆண்டுகள் இன்னும் யுதர்களுக்கான இரட்சிப்புக்காக விடப்பட்டுள்ளது என்று அவர்களுக்கு தீர்க்கதரிசனமுரைக்கப்பட்டது.” “அந்த எழுபதாவது வாரத்தின் மத்தியிலே அதிபதியாகிய மேசியா, அவர்தான் கிறிஸ்து, வந்திடுவார், அவர் அப்பொழுது சங்கரிக்கப்படுவார்” என்று தானியேல் கூறினான். இயேசு மூன்றரையாண்டுகள் பிரசங்கித்தார். அதன் பிறகு அவர் சங்கரிக்கப்பட்டார். தானியேல் கூறியிருந்த அன்றாட பலி அத்தோடு நிறுத்தப்பட்டது.
60107 அதன்பிறகு, ஒரு இடைப்பட்ட காலமானது புறஜாதியருக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் இந்த காலத்திற்குள் வருகிறார்கள். பிறகு, யூதர்களுக்கு இன்னும் மூன்றரை ஆண்டுகள் மீதியாகவிடப்பட்டுள்ளது. இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 11-ம் அதிகாரத்தை நாம் எடுத்துக்கொண்டால், நாம் அங்கே சரியாக முடிவு காலத்தைக் குறித்து தெளிவாகப் பார்க்கலாம். (சபையானது வெளிப்படுத்தின விசேஷம் 19-ம் அதிகாரம் வரையிலும் தோன்றவேயில்லை.) ஆனால் அதன் முடிவில் மோசேயும், எலியாவும் மீண்டும் தோன்றி, யூதர்களுக்கு பிரசங்கிக்கின்றனர். அந்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட இரு மனிதர்களோ, அல்லது அவர்கள் இருவருமே வருவார்கள். அவர்கள் இருவரும் மரிக்கவில்லை. ஆகவே, அவர்கள் அவர்களை கொன்றுவிட, அவர்களது சரீரங்கள் சோதோம் என்னப்பட்ட தெருவில் கிடக்கும். அங்கே நமது கர்த்தரும் சிலுவையில் அறையப்பட்டார். அது “எருசலேமாகும்.” மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜீவன், அதாவது ஜீவ ஆவியானது அவர்களுக்குள் வந்து, அவர்கள் உயிரோடெழும்பி, மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார்கள். அப்பொழுது முன்றிலொரு பங்கு பூமியானது வெடித்துச் சிதறியது. அவர்கள் யூதர்கள் மத்தியில் அற்புத அடையாளங்களைச் செய்தனர்.
61108 இதோ இங்கே இந்த யூதர்களுக்குத்தான் அவர்கள் இருவரும் பிரசங்கிக்க வருகிறார்கள். அந்த யூதர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி வருகிற வரையிலும், உலகத்தினால், அவர்களால் ஒருவரையொருவர் குண்டுவீசி அழித்து, அழிவைக் கொண்டு வர முடியாது; இங்கேயிருக்கிற வேதாகம் அவ்வாறு கூறுகிறது: அவன் அந்த நான்கு தூதர்களையும் கண்டான். அவர்கள் என்ன பெறப்போகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். அவர்கள் பெற்றது போலவே, யூதர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றாக வேண்டியதாயிருக்கிறது. 109 கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்த அந்த மனிதன் பரிசுத்த ஆவியானவர் தான் என்பதை (வேதத்தை வாசிக்கிற நாம் யாவரும் உணர்ந்திருக்கிறோம்) நல்லது, இங்கே அதே தூதன் தான் பரிசுத்த ஆவியோடு, அதாவது “ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலோடு” மீண்டும் வருகிறார். எபேசியர் 4:30-ல், “…பரிசுத்த ஆவியினால், மீட்கப்படும் நாள் வரையிலும் முத்திரையிடப்பட்டிருக்கிறதைப்” பற்றி கூறப்பட்டுள்ளது. 110 அந்த யூதர்கள் யாவரும் தங்கள் சுய தேசத்திற்கு திரும்பிப் போகிற வரையிலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. சில வாரங்களுக்கு முன்புதான். அவர்கள் யாவற்றையும் ஒன்று சேர்த்து அவர்களை வகைப்படுத்தி, ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு உறுப்பினராக ஆனார்கள். அது ஆயத்தமாயிருக்கிறது. நாம் முடிவிலே இருக்கிறோம், இப்பொழுது யாவும் முத்திரையிடப்பட்டுள்ளது.
62111 இப்பொழுது, அவர்கள் யூதர்கள் தான் என்பதை இப்பொழுது நிரூபிக்கப்படுவதை கவனியுங்கள். நான் இப்பொழுது இந்த வசனத்தை எடுத்துக் கொள்ளப்போகிறேன். நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். 112 இப்பொழுது இந்த வெளிப்பாடு சரியானது தான் என்பதை நிரூபிப்பதற்காக, இந்த நான்காம் வசனத்தை கவனியுங்கள்: முத்திரை போடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன்: இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர். 113 “இஸ்ரவேலர்.” அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் இப்பொழுது தான் கூடி வந்திருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் முத்திரையிடப்படும் நாளுக்காக ஆயத்தமாகக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். “யூதா கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம்; ரூபன் கோத்திரத்தில் பன்னீராயிரம்; காத் கோத்திரத்தில் பன்னீராயிரம். ஆசேர் கோத்திரத்தில், பன்னீராயிரம், நப்தலி கோத்திரத்தில், பன்னீராயிரம்.” இவ்வாறே சிமியோன் முதல், ஓ…தொடர்ந்து பென்யமீன் கோத்திரம் முடிய உள்ள பன்னிரண்டு கோத்திரங்களும் முத்திரை போடப்பட்டதைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது. பன்னிரண்டாயிரத்தை பன்னிரண்டால் பெருக்கினால் வருவது இலட்சத்து நாற்பத்து நாலாயிரம். புரிகிறதா? இப்பொழுது அவர்கள் தான் அது…
63114 இப்பொழுது நீங்கள் 14-ம் அதிகாரத்தில் பார்ப்பீர்களேயானால், அப்படியே ஒரு விநாடி இங்கே நீங்கள் பாருங்கள். பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக் கண்டேன். 115 “சீனாய் மலை.” இங்கே ஆட்டுக்குட்டியானவர் எடுத்துக் கொள்ளப்படுதலை முடித்துவிட்டு திரும்பி வந்திருக்கிறார். அவர் திரும்பி வந்தபோது, அன்றிரவில் நாம் பார்த்தவிதமாக, யோசேப்பு புறஜாதிகள் யாவரையும் தன்னைவிட்டு அப்புறமாக அனுப்பிவிட்டு, தன் சகோதரருக்கு முன்பாக நின்று, “நான் தான் யோசேப்பு உங்கள் சகோதரன்” என்றான். அப்பொழுது அவர்கள் பயமடைந்தனர். 116 சபைக்கால செய்தியில் நாம் கேட்டிருக்கிறதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். அவர் எப்பொழுது திரும்பி வருவார்? அவருடைய கரங்களை குத்தியவர்கள் கூட பார்த்து, அவரிடம், “உம் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று?” கேட்பார்கள். 117 அவரோ, “என் சிநேகிதரின் வீட்டில் காயப்பட்டதினால் உண்டானவைகள்” என்று கூறினார். அவர்கள் புலம்பினார்கள். ஒவ்வொரு குடும்பமும் தனித்தனையே அழுது அழுது புலம்பினார்கள். ஏனெனில் அவர்கள், இந்த பொல்லாங்கை செய்திருந்தனர். அவர்களுடைய மேசியா தேவனேயாவார். யோசேப்பு தன் சகோதரிடம், “நீங்கள் ஒருவருக்கொருவர் கோபப்பட வேண்டாம். ஜீவரட்சனை செய்யும்படிக்கே தேவன் இதைச் செய்தார்” என்று சொன்னது போல் தேவனும் யூதர்களிடம் அவ்வாறே கூறுவார். 118 “தேவன்…” வேதமோ “புறஜாதியாருக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கும்படி, தேவன் யூதரின் கண்களைக் குருடாக்கினார். (நாம் தானே அதைப் பெறும்படி,) அவரது நாமத்திற்கென ஒரு ஜனத்தை தெரிந்தெடுக்க, புறஜாதிகளிலிருந்து அவரது மணவாட்டியை பிரித்தெடுக்க” என்றே கூறுகிறது. ஓ, அது அழகாக இருக்கிறது. அவ்வாறில்லையா? அங்குதான் உங்கள் காரியமே உள்ளது.
64119 அங்கே தான் உங்களுடைய இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் உள்ளனர். மணவாட்டி இதற்குப் பிறகு தான் வருகிறாள் என்பதையும், இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் மணவாட்டியல்ல என்பதை நீங்கள் காணும்படி தொடர்ந்து 8-ம் அதிகாரத்திலிருந்து வாசித்துக் கொண்டே போவோம். இல்லை, ஆம், 8-ம் அதிகாரம்; இல்லை நான் கூறுவது 7-ம் அதிகாரம் 8-ம் வசனத்திலிருந்து வாசிப்போம். நாம் 9-ம்—9-ம் வசனத்திலிருந்து வாசிக்கத் துவங்குவோம், ஏனெனில் 8-ம் வசனத்தில் பென்யமீன் கோத்திரத்தார் பன்னிரண்டாயிரம் பேர் முத்திரையிடப்பட்டதைக் குறித்து கூறப்பட்டுள்ளது. இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும், கோத்திரங்களிலும், ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், (இங்கே தான் மணவாட்டி வருகிறாள்) வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு, இரட்சிப்பின் மகிமை சிங்காசத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழ நின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு, ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். ஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்… [ஒலி நாடாவில் காலி இடம்.—ஆசி.] பார்த்தீர்களா?
65120 உங்கள் மனைவி என்ன செய்கிறாள்? அவள் உங்களுக்கு வீட்டில் பணிவிடை செய்கிறாள். நீங்கள் அமர்ந்திருக்க அவள் உங்களுக்கு உணவு பரிமாறுகிறாள், உங்கள் ஆடைகளை ஆயத்தம் செய்து கொடுக்கிறாள். பாருங்கள், அவள் இரவும் பகலும் வீட்டில் உங்களுக்கு பணியாற்றுகிறாள். புரிகிறதா? மணவாட்டியாயிருக்கிற இவள் எல்லா புறஜாதிகளிடமிருந்தும் வந்தவர்களாவர்; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக, அவரோடு இரவும் பகலும் இருந்து கொண்டிருக்கின்றனர். கடந்த இரவிலே, நாம் அதின் பேரில் என்ன பேசினோம் என்பதை யாவரும் நினைவில் வைத்திருக்கிறீர்களா? சிங்காசத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். இவர்கள் இனி பசியடையவதுமில்லை; இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதுமில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.
66121 இப்பொழுது, அங்கே உங்களுடைய இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேராகிய (இஸ்ரவேலர்) கர்த்தருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். புறஜாதிகளின் நிறைவு உண்டாகிற வரையிலும் அவர்கள் உள்ளே போக முடியாது. புறஜாதிகள் காலம் முடிவடைந்தாக வேண்டும். 122 இப்பொழுது நான் ஒரு சிறிய என் சொந்த விஷயத்தை குறிப்பிடுவேன், அதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். ஸ்வீடன், ஸ்டாக் ஹோமில் உள்ள பிலதெல்பியா சபைகளின் தலைமை பொதுக் கண்காணிப்பாளர் லேவி பெத்ரஸ் என்பவர் இந்த யூதர்களுக்கு பத்து இலட்சம் வேதாகமங்களை, அதாவது சிறிய அளவில் உள்ள புதிய ஏற்பாட்டு புத்தகங்களை அனுப்பிக் கொடுத்தார். அவைகளில் ஒரு பிரதி அவரிடமிருந்து எனக்கு ஒரு ஞாபகச் சின்னமாக அனுப்பப்பட்டிருந்தது. அவர்களுடைய—அவர்களுடைய மொழியானது எப்படிப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். யூதர்கள் பின்னால் இருந்து முன்னாக வாசித்துக் கொண்டு வருகிறவர்கள். அவர்கள் இப்புத்தகங்களை வாசித்து, “நல்லது, இந்த இயேசு தான் மேசியாவெனில், அவர் மரித்து, அவரது ஆவியானது ஆவியின் ரூபத்தில் வந்திருக்கிறது எனில், அவர் தீர்க்கதரிசிக்குரிய அடையாளத்தைச் செய்து காண்பிப்பதை நாங்கள் பார்க்கட்டும், அப்பொழுது நாங்கள் அவரை விசுவாசிப்போம்” என்று கூறினார்களாம். 123 என்னே ஒரு பரிபூரணமான அமைப்பு இது! நான், “ஆண்டவரே, இதோ இப்பொழுதே வேளை வந்திருக்கிறது. இது தான் சமயம், இங்கே அது வந்திருக்கிறது” என்றேன். எனவே, நானும், பில்லியும், லாய்ஸூம் விமானத்தில் பயணமானோம்.
67124 நான் இந்தியாவுக்குள் சென்றுக்கொண்டிருந்தேன். அப்பொழுது நான், “அங்கிருந்து நான் திரும்பப் பிராயணமாகையில், அங்கே இறங்கி யூதர்களுக்கு செய்தியைப் பிரசங்கிப்பேன். ‘இது உண்மைதானே’ என்று அவர்களுக்கு எடுத்துக் காண்பிப்பேன்” என்று கூறினேன். 125 யூதர்கள் எப்பொழுதும் தங்களுடைய தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறார்கள். நாம் யாவரும் அதை அறிவோம். ஏனெனில் மேசியா ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று தேவன் அவர்களுக்கு உரைத்திருக்கிறார். அவர்கள் தங்களுடைய தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறார்கள். நாம் யாவரும் அதை அறிவோம். ஏனெனில் மேசியா ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று தேவன் அவர்களுக்கு உரைத்திருக்கிறார். அவர்கள் தங்களுடைய தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறார்கள். தேவன், “உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், ஞானதிருஷ்டிகாரனாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி” என்று கூறினார். “அந்த தீர்க்கதரிசி சொல்லும் காரியம் நிறைவேறினால், அப்பொழுது அவனுக்கு செவி கொடுக்க வேண்டும், ஏனெனில் நான் அவனோடிருக்கிறேன்.” புரிகிறதா? “ஆனால் அவன் கூறிய வார்த்தை நிறைவேறாமற்போனால், அந்த தீர்க்கதரிசியோடு எந்த சம்மந்தமும் வைத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில் நான்—நான்—நான் அவனோடு இருக்கவில்லை. ஆனால் அவன் கூறியது நிறைவேறினால், அப்பொழுது அவனுக்கு செவி கொடுங்கள். ஏனெனில் நானே அவனோடிருக்கிறேன்” என்று கூறியுள்ளார். யூதர்கள் அதை அறிவார்கள்.
68126 நான், “ஓ என்னே! அது அற்புதமானதாய் இருக்காதா? நான் அவர்களில் நான்காயிரம் அல்லது ஐந்தாயிரம் பேர்களை வரவழைத்து, அங்கே நிற்கச் செய்திடுவேன், அவர்கள்—அவர்கள் வேதாகமத்தை வாசிக்கட்டும், ‘இது மேசியாவானால், அவர் தீர்க்கதரிசியின் அடையாளத்தை செய்வதை நாம் காண்போமாக’” என்று கூறலாம் என்று எனக்குள் எண்ணினேன். அப்பொழுது நான், “அது என்ன ஒரு அமைப்பாயிருக்கும்!” என்று கூறினேன். என்னுடைய பயணச் சீட்டு என் கையில் இருந்தது, அராபிய விமான நிர்வாக விமானத்தில் பயணம் செய்வதற்கு பயணம் செய்பவர்களை விமானத்திற்கு வரும்படி அழைத்து முடிக்க இன்னும் முப்பது நிமிடங்கள் இருந்தன. எனவே நான் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நின்றிருந்தேன். அப்பொழுது நான், “தேவனுக்கு ஸ்தோத்திரம்! இன்னும் இரண்டு மணி நேரம். அப்பொழுது யூதர்கள் முழு நிச்சயத்தோடே பெந்தெகொஸ்தேயில் அவர்கள் பெற்றுக் கொண்டதைப் போல் இவர்களும் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள்” என்று எண்ணினேன்: மேலும், நான், ‘நீங்கள் போய் ஒரு கூட்டம் ஜனங்களை அழைத்து வந்து, அவர் இன்னமும் மேசியா தானோ என்பதை காணும்படி செய்யுங்கள் என்பேன்’ என்று எண்ணினேன். பாருங்கள், அதன்பின்னர் நான், ‘இப்பொழுது, உங்களுடைய முற்பிதாக்கள் எந்த அடிப்படையில் இந்த மேசியாவை புறக்கணித்தார்களோ, அதே அடிப்படையில் நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் கரங்களை உயர்த்திடுங்கள்; இப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வீர்கள்’ என்று சொல்லுவேன் என்று நினைத்தேன். அப்பொழுது உலகில் அவர்கள் உள்ள பகுதியில் போய் அவர்கள் சுவிசேஷத்தை பரவச் செய்வார்கள். இந்த செய்தியை அவர்கள் ஏற்றுக் கொள்ளும்பொழுது, தலைவர்களைப் பிடியுங்கள். அவர்களின் நாடித்துடிப்பாய் இருக்கின்ற தலைவர்களைத் தொடுங்கள். அவர்கள் இதை துவக்கட்டும்” என்று சொல்லுவேன் என்று நான் மேலும் நினைத்தேன்.
69127 அப்பொழுது எனக்குள் ஏதோ ஒன்று, “இப்பொழுது போகாதே, வேளையானது இன்னமும் வரவில்லை” என்று கூறியது. பாருங்கள், புறஜாதிகளின் நாளானது இன்னமும் முடிவைடையவில்லை, பாருங்கள். “ஓ” நான், “இது என்னுடைய எண்ணம்தான்” என்று அப்பொழுதுதான் சிந்தித்தேன். 128 எனவே நான் மீண்டும் புறப்பட்டேன், அப்பொழுது, என்னால் தாங்க முடியாத அளவுக்கு எனக்குள் ஒரு மோசமான நிலை ஏற்பட்டது. நான் விமானம் நிறுத்தி வைக்கும் விமானக் கொட்டகையின் பின்பக்கமாகச் சென்று தலை வணங்கி, “பிதாவே, நீர் தான் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறீரா?” என்று கேட்டு ஜெபித்தேன். 129 அவர், “இப்பொழுது இஸ்ரவேலுக்குப் போகாதே, வேளையானது இன்னும் வரவில்லை” என்று கூறினார். உடனே நான் உள்ளே போய், எனது பயணச்சீட்டை மாற்றிக் கொண்டு, வேறு வழியாக போக பாதையை மாற்றினேன். வேளையானது இன்னமும் வரவில்லை என்பதை பாருங்கள். 130 ஆனால் இந்நாட்களில் ஒன்றில் செய்தியானது இஸ்ரவேலுக்குப் போகும். தேவன் அவர்களிடமாக மோசேயையும் எலியாவையும், வெளிப்படுத்தின விசேஷம் 11-ம் அதிகாரத்தில் கூறியுள்ளபடி அனுப்புவார். அவர்கள் அற்புத அடையாளங்களைச் செய்து காட்டுவார்கள்; அது யேகோவாவின் அடையாளமாகும். அப்பொழுது புறஜாதிகளின் காலமானது முடிவடைந்திருக்கும். புறஜாதி சபையைவிட்டு கிருபையானது அகன்றுவிட்டிருக்கும்; பெந்தெகொஸ்தே யுகமானது முடிவடைந்திருக்கும். ஸ்தாபனங்கள் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும். ஏனெனில் அவர்கள் உறங்கும் கன்னியரோடு எழும்பி வருகிறார்கள்; (நாம் சிறிது நேரத்திற்குள் அந்த விஷயத்திற்குள் செல்லுவோம்.) ஆனால் அவர்கள் அந்த பிரிவில் தான் வருவார்கள்.
70131 ஆனால் அவர்கள் அதைச் செய்யும்போது, யூதர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறுவார்கள்; அவர்களுக்கு ஒரு எழுப்புதலுண்டாகி, அது மழை பெய்யாது வானத்தை அடைக்கும் காரியத்தைச் செய்யும். அவர்கள் எல்லாவிதமான அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள். இறுதியாக ரோமானிய குருக்களாட்சியானது…கத்தோலிக்க சபையானது யூதர்களோடு செய்து கொண்டிருந்த உடன்படிக்கையை முறித்துக் கொண்டுவிடுவார்கள். அப்பொழுது அங்கே… (அவர்கள் தங்களுக்கிடையே செய்து கொண்ட ஒப்பந்தமானது…) அவர் அங்கே செல்லுவார். தேவன் ஆதி நாட்களில் இஸ்ரவேலுக்காக யுத்தம் செய்தது போல, நின்று அவர்களுக்காக யுத்தம் பண்ணுவார். அவர்கள் முடிவில், அந்த இரு தீர்க்கதரிசிகளையும் கொன்றுவிடுவார்கள். அவர்கள் தெருவில் கிடப்பார்கள். அவர்கள் மேல் துப்புவார்கள். 132 சில வாரங்களுக்கு முன்பாக, அங்கே அந்த பெந்தெகொஸ்தே ஊழியக்காரரையும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளையும் கொன்று போட்டது போல் நடக்கும். அப்பிள்ளைகளின் சிறிய வயிறு மிகவும் பெரிதாக உப்பிப்போயிற்று. மக்கள் அப்பிரேதங்களின் பக்கமாக நடந்து சென்று, அவர்கள் மேல் துப்பி, அவர்களது உடல்கள் அடக்கம் பண்ணப்படாமல், அப்படியே மூன்று அல்லது நான்கு நாளாக வெயிலில் கிடந்தன. 133 அதே காரியத்தையே அவர்கள் செய்வார்கள். வேதம் அவ்வாறு கூறுகிறது. அங்கே சரியாக இதே காரியத்தை அவர்கள் செய்வார்கள். அவர்கள் அவர்களைக் கொலை செய்யும்பொழுது, மூன்று நாட்கள் அவர்கள் பிரேதங்கள் வீதிகளில் கிடக்கும்பொழுது, ஜீவ ஆவி இரு தீர்க்கதரிசிகளுக்குள் பிரவேசித்து அவர்கள் எழுந்து நின்று, மகிமைக்குள் ஏறிச்செல்வார்கள். பிறகு, ஏறக்குறைய அதே வேளையில் தான் அக்கினியானது விழ ஆரம்பிக்கிறது. அதுதான் கடைசி நேரம். அப்பொழுது தான் அவள் முடிந்து போவாள்.
71134 ஆனால் அது சம்பவிப்பதற்கு முன்பாக, புறஜாதிகள், தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டி… அங்கே உங்களில் சிலர், இக்காலைகளில் ஒன்றில் மேசையருகே அமர்ந்திருப்பீர்கள். அதில் ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார், இன்னொருவர் கைவிடப்படுவார். முடிவாக நீங்கள் “இது என்ன விஷயம்?” என்று வியப்புறுவீர்கள். ஒரு மோட்டார் வாகனத்தை உங்கள் மனைவியோடோ அல்லது உங்கள் கணவனோடே இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டே ஒட்டிக் கொண்டே சென்று கொண்டிருக்கக் கூடும், நீங்கள் கேட்பதற்கு அவர்கள் பதிலளிக்கமாட்டார்கள், ஏனெனில் அவர்கள் திடீரென அங்கு இருக்கமாட்டார்கள். நீங்கள் கல்லறைக்கு ஓடிச் செல்வீர்கள், சில கல்லறைகள் திறந்திருக்கும், வேறு சில இன்னமும் அப்படி மூடியே கிடக்கும். “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.” அப்படியே ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அது அப்பொழுது முடிவடைந்திருக்கும்.
72135 அது ஒரு இரகசிய வருகையாக இருக்கும், அது எப்பொழுது சம்பவிக்கப் போகிறது என்பதை ஒருவரும் அறியமாட்டார்கள். நாம் ஆயத்தமாகவும் விழிப்புடனும் இருக்கும்படி கட்டளையிடப்பட்டிருக்கிறோம். எந்த மணிவேளை என்பதை நாம் அறியோம். ஆனால் அது என்னவாயிருந்தாலும் சரி, கடந்த காலத்தில் மரித்தவர்களுக்கு நாம் முந்திக் கொள்வதில்லை. இயேசு தோன்றியதுமே, முழு ஜாமமும் விழித்தெழுகிறது. மரித்தவர்களோ, உயிரோடிருக்கிறவர்களோ, யாராயிருந்தாலும் சரி. 136 முதலில், நாம்—நாம் அவரை சந்திப்பதில்லை.நாம் ஒருவரையொருவர் முதலில் சந்திப்போம். வேதம் கூறியுள்ளது, எபேசியர் 5-ம் அதிகாரம் “கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை” என்றே அது உரைத்துள்ளது. தங்களுடைய சாட்சிகளை தங்களுடைய இரத்தத்தினால் முத்திரையிட்ட அந்த விலையேறப் பெற்ற ஜனங்கள். “நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை. ஏனெனில்…எக்காளம் தொனிக்கும்” அப்பொழுது ஒன்று சம்பவிக்கும். “சுவிசேஷத்தின் ஏதோஒன்று தொனிக்கும்.” அது தானே அவருடைய வருகையை அறிவித்தலாகும். “கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது உயிரோடு எழுந்திருப்பார்கள்.” பின்பு உயிரோடிருக்கும், காத்திருக்கும் நாமும் மறுரூபமடைவோம், சுருக்கங்கள் மறைந்து போகும். நரை மயிர் நீங்கிவிடும், ஒரு மாற்றம் ஏற்படுவதை நாம் நன்கு உணருவோம். நாம் ஒரு இமைப்பொழுதில் மாற்றப்படுவோம். நாம் நின்று கொண்டிருக்கையில், நமக்குப் பிரியமானவர்களை முதலில் நாம் சந்திப்போம். “அதோ அங்கே அம்மா இருக்கிறார்கள், அப்பா இருக்கிறார்கள், அதோ அங்கே பிரிய சிநேகிதன் இருக்கிறான். ஓ, அல்லேலுயா, நாம் ஆயத்தமா இருக்கிறோம்” என்று சொல்லுவோம். மரித்துயிர்த்து அவர்களோடுகூட நாம் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, கர்த்தரை சந்திப்போம் என்று வேத வாக்கியம் கூறுகிறது. இதுவே வருகையின் ஒழுங்காகும்.
73137 ஓ, எனக்கு வயது சென்ற தந்தையை காண்பது எவ்வளவு நன்றாயிருக்கும்! ஓ, என்னே! மண்ணுக்குள் சென்ற நமக்கு மிகவும் பிரியமானவர்களை சந்திப்பது எவ்வளவு அருமையாயிருக்கும். தேவனுடைய இனிமையைப் பாருங்கள். அவரை முதலில் நாம் சந்திப்போமானால், “அம்மா அங்கே இருக்கிறார்கள், அம்மா கடைசியாக அதை அடைந்தார்களா? அவர்களுக்கு மிகவும் உறுதியாக பிரசங்கித்தோம், நாம்—நாம் முயற்சி செய்தோம்; அவர்கள் இங்கு இருக்கிறார்களா? ஜோ மாமா இங்கு இருக்கிறார்களா? அந்த சகோதரன் இங்கிருக்கிறாரா? இன்னார்—இன்னார் இங்கு இருக்கிறாரா?” என்றெல்லாம் நாம் கேட்போம் என்று அவர் அறிந்தே இருக்கிறார். புரிகிறதா? “கர்த்தாவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம், உம்மை நேசிக்கிறோம், ஆனால்…” என்று கேட்போம். முதலாவதாக நாம் ஒருவரையொருவர் சந்திக்கப் போகிறோம். ஓ—ஓ—ஓ! அவர்கள் அங்கு இருக்கிறார்களா என்று நாம் வியக்கத் தேவையில்லை. நாம் யாவரும் அங்கே இருக்கிறோம். 138 அவர்கள் நின்று, “ஆமென், மகிமையும், ஞானமும், கனமும், வல்லமையும், பெலனும் உண்டாவதாக” என்று கூறியதில் வியப்பொன்றுமில்லை. 139 இருபத்து நான்கு மூப்பர்கள் தங்கள் கிரீடங்களை கழற்றிவிட்டு, தரையிலே வணக்கமாய் விழுந்து, அவர்கள் யாவரும் தரையிலே விழுந்து கிடந்து, அவரைத் தொழுது கொண்டனர்.
74140 இந்நாட்களில் ஒன்றில் நாம் பூமிக்கு அப்பால், பூமியின் வளையத்திற்கு அப்பால், எங்கோ ஆகாயத்தில் நிற்போம். அப்பொழுது நாம் அப்படியே பரலோகத்திற்கு போய் விடமாட்டோம்; நாம் அவரை ஆகாயத்தில் முதலில் சந்திப்போம். 141 ரெபெக்காள் விரைவாக தீர்மானித்தாள். தான் ஈசாக்கை சந்திக்க எலியேசருடன் ஒட்டகத்தின் மேலேறி செல்வோம் என்று அவள் தீர்மானித்தபொழுது, தனக்கு கணவனாக ஆகப் போகிற ஈசாக்கின் முகத்தை அவள் இதற்கு முன் பார்த்ததேயில்லை, ஆயினும் தேவன் அவளை வழி நடத்திக் கொண்டிருந்தார் என்பதை அறிந்திருந்தாள். யாக்கோபின் குமாரன் இல்லை…மாலையின் குளிர்ச்சியான வேளையில், ஈசாக்கு வயல் வெளிகளில் போவதற்காக போய்க் கொண்டிருந்தான். அது மாலை வேளையாயிருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்பொழுது ரெபெக்காள் ஒட்டகத்தின் மேலேறி வந்து கொண்டிருக்கிறாள். எலியேசர் அவளிடம், “இதோ அவர் வருகிறார்” என்று கூறினான். அப்பொழுது ரெபெக்காள் ஒட்டகத்தை விட்டிறங்கி, தன் முகத்தின் மேலிருந்த முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டாள். அவள் இதற்கு முன் அவனைப் பார்த்ததே கிடையாது. அறிந்திருக்கவில்லை…அவன்தான் அவளுடைய கணவன் என்று, அவனை இதற்கு முன் பார்த்ததே கிடையாது. அவள் அவனை விசுவாசத்தினால் சந்திக்க போவதாக இருந்தாள். (அவர் எப்படி தோற்றமளிப்பார் என்பதை நான் அறியேன், ஆனால், ஓ, நான் அவரை சந்திக்கும்பொழுது!) அவனை அங்கே வெளியே அவள் சந்தித்தபொழுது, அது கண்டதும் காதலாக மலர்ந்தது. அவனும் அவளை இதற்கு முன்பு கண்டதில்லை. அவன் கண்டபோது, அது கண்டதும் காதலாக மலர்ந்தது. இங்கே இவர்கள் ஒருவரையொருவர் வயல் வெளிகளிலே சந்திக்க வருகிறார்கள். அவன் அவளைத் தன் தந்தையின் இராஜ்யத்தினுள் கொண்டு வந்து அவளை விவாகம் செய்து கொண்டாள்.
75142 அதே விதமாகத்தான், கர்த்தர் கீழே இறங்கி வருகிற வழியிலே, அவரை மத்திய ஆகாயத்திலே, சபையானது ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு சந்திக்கும். ஓ, அது எப்பேர்ப்பட்ட உறவாக இருக்கும், கண்டதும் காதலாகத்தான் இருக்கும். நாம் பூமியின் வளையங்களிலே நின்று கொண்டிருக்கும் பொழுது, அந்த மீட்பின் பாடல்களைப் பாடும்போது, அது எப்படியாயிருக்கும்! ஓ, என்னே! எப்படியாய், நாம் நமக்கு அவர் அளித்த நம்முடைய மீட்பின் கிருபையைக் குறித்து…அவரைப் பாடித் துதிப்போம். பூமியின் வட்டத்தை, தலை வணங்கியவாறு, தூதர்கள் சுற்றி சூழ்ந்து கொண்டிருக்கையில், நாம் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி அறியாமலிருப்பார்கள். அத்தூதர்கள் இழக்கப்படவில்லை. இரட்சிக்கப்படுவது என்றால் என்ன என்பதை அத்தூதர்கள் அறியமாட்டார்கள். நாம் தான் இழக்கப்பட்டோம். நாம் தான் அவ்வாறிருந்தோம். அப்பொழுது, எவ்வளவு பயங்கரமான காரியம் நமக்கு முன்பாக இருந்தது என்பதை நாம் உணர்ந்து கொள்வோம், அவரோ நம்மை சகல கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலும் இருந்து தம்முடைய இரத்தத்தினாலே மீட்டார். அது என்னே ஒரு களிகூரும் நாளாயிருக்கும்!
76143 நான் இவ்வாறு எழுதப்பட்டுள்ள அப்பாடலை விரும்புகிறேன். ஆகாயத்தில் சந்திப்பொன்றுண்டு இனிமையாய், இனிமையாய், சீக்கிரத்திலே, நான் வான்வெளிக்கப்பால் உள்ள வீட்டிலே உன்னை சந்தித்து வாழ்த்தப் போகிறேன்; அழிவுள்ளோர் காதுகளில் கேட்டிராத அப்பேர்ப்பட்ட பேரின்ப கீதம் பாடுவோம். அது மகிமையாயிருக்கும், நான் அறிவிக்கிறேன்! தேவனுடைய சொந்தக் குமாரன், அவரே முன்னின்று நடத்திச் செல்லுவார் ஆகாயத்தில் நாம் அவரை சந்திக்கையில்.(ஓ!) நாணற்பெட்டிக்குள்ளிருந்த குட்டி மோசேயைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், பயமற்ற தாவீதையும், அவனுடைய கவணையுக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; சொப்பனங்கண்ட யோசேப்பின் கதையைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; தானியேலையும், சிங்கங்களையும் குறித்து நாம் அவ்வப்போது பாடுகிறோம். ஓ, இன்னும் அநேகர், மற்ற அநேகர் வேதத்திலுண்டு. அவர்கள் யாவரையும் காண நான் வாஞ்சிக்கிறேன் என்று நான் அறிவிக்கிறேன்! (அது உண்மையே!) நாம் அவர்களை சந்திப்பது என்னே ஒரு ஆனந்தமாயிருக்கும். அந்த ஆகாயத்தில் சந்திக்கும்போது நடக்கும் (அந்நாளுக்காக காத்திருக்கிறேன்!)
77144 அதோ அங்கே உங்களுடைய இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் வருகிறார்கள். அவர்கள் பிறகு சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்வார்கள். புறஜாதிகள் மேல் ஒளியானது வீசிக் கொண்டிருக்கையில், அதே வேளையில் அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. யூதர்கள் அதை மறுதலித்து மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது, ஒளியானது…புறஜாதியார் எடுக்கப்பட்ட பிறகு, ஆவியானவர் அவர்களுக்கு சாட்சி கொடுக்கும்படி இருவர்மேல் வருகிறார். அப்பொழுது யூதர்கள் ஏற்றுக் கொள்ளுகிறார்கள். அவர்கள் தான் அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களான காணாமற்போன இஸ்ரவேல் வீட்டார், அவர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்வார்கள்; அப்பொழுது மணவாட்டியானவள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருப்பாள்.
78145 அங்கே பத்து கன்னியர் காணப்படுகிறார்கள். நாம் மத்தேயு எழுதின சுவிசேஷம் 21-ம் அதிகாரத்தை இப்பொழுதே எடுத்துக் கொள்வோம். பாருங்கள், நமக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. ஓ, நான் வேதாகமத்தை நேசிக்கிறேன். எனது இளைப்பாறுதலை நான் பரலோகத்தில் எடுக்கையில், அது என்னே ஒரு அருமையான பயணமாயிருக்கும்! அங்கே பரலோக இசைக்குழு இசைக்கும் பாடல் இசையை நான் கேட்பேன், என்னுடைய வாசலில்…எனது இரட்சகரின் முகத்தை நான் காண்பேன்; நித்திய பசுமை மர நிழலின் கீழ் நதியின் கரையில் அமர்ந்து, எனது இளைப்பாறுதலை பரலோகத்தில் கழிக்க நான் வாஞ்சிக்கிறேன், நீங்கள் உங்களுடைய இளைப்பாறுதலைக் கழிக்க என்னோடு வரமாட்டீர்களா?
79146 இப்பொழுது, பரிசுத்த மத்தேயு எழுதின் சுவிசேஷம் 25-ம் அதிகாரம் என்று நான் நம்புகிறேன். நான் 21-ம் அதிகாரம் என்று கூறினேனல்லவா? நான் இங்கே 21-ம் அதிகாரம் என்று குறித்து வைத்துள்ளேன். ஆனால் அது தவறு. அது 25-ம் அதிகாரம் தான். நான் இக்காலையில் சற்று விரைவாகச் செல்ல வேண்டும். நான்—நான் களைப்பாக தாமதித்து எழுந்தேன். எனவே நான் அவசரம் அவசரமாக சில வேத வாக்கியங்களை குறித்து வைத்துக் கொண்டதில், 25-க்குப் பதிலாக, 21-ம் அதிகாரம் என்று குறித்து வைத்துவிட்டேன். அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். 147 இப்பொழுது: அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை. புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். மணவாளன் வரத் தாமதித்தபோது, (அது சபைக் காலங்களிலே) அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.
80148 காலம் முழுவதிலும், அவர்கள் புறப்பட்டுச் சென்றபோது, அவர்கள் யாவரும் மரித்தனர், நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். இப்பொழுது அவர்கள் இழக்கப்படவில்லை, ஆனால் அவர்கள் “நித்திரை மயக்கமடைந்து, தூங்கிவிட்டனர்.” அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். தாங்கள் மரித்ததாக அவர்கள் கூறவில்லை. ஆனால் அவர்கள் “நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.” பார்த்தீர்களா? நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி. நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய் உங்களுக்காக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். (என்னை மன்னியுங்கள்) அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். (இப்பொழுது, அவர்கள் அவிசுவாசிகள் அல்லவென்பதைப் பாருங்கள். அவர்கள் நல்லவர்கள் தான்) அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
81149 இப்பொழுது இந்த ஐந்து “புத்தியுள்ள” கன்னியர். இப்பொழுது, வேதத்தில் எண்ணெயானது “பரிசுத்த ஆவியைக்” குறிக்கிறது. நாம் யாவரும் அதை அறிவோம். எனவேதான் நாம் வியாதியஸ்தரை எண்ணெய் பூசி ஜெபிக்கிறோம். எண்ணெய் பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. எனவே புத்தியுள்ளவர்கள் தங்கள் விளக்குகளில் எண்ணெயை உடையவர்களாக இருந்தார்கள். அது பரிசுத்த ஆவியாகும். எனவே அவர்கள் கலியாண விருந்துக்குள் பிரவேசிக்கத்தக்கதாக ஆயத்தமாயிருந்தார்கள். நாங்கள் எசேக்கியேல் 9-ம் அதிகாரத்திற்கு திரும்பிச் சென்று உங்களுக்கு காண்பிக்க முடியும். ஆனால் நான் இங்கே சுமார் பதினைந்தும் அதற்கு மேலுமாக வேதவாக்கியங்களை குறித்து வைத்துள்ளேன். எனவே எண்ணெயானது…இந்த வாரத்தில் நடந்த நம்முடைய வகுப்பில், எண்ணெயானது “பரிசுத்த ஆவியைக்” குறிக்கும் என்பதை ஏற்கனவே பார்த்துவிட்டோம் என்று நான் நம்புகிறேன். நாம் யாவரும் அதை அறிவோம்.
82150 இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் இரு சாராருமே “கன்னியர்தான்.” இதை நான் இப்பொழுது எடுத்துக் கொள்கிறேன், இங்கே நாம் இந்த இரு சாராரையும் பற்றிப் பார்த்துவிடுவோம். இது ஒரு கன்னிகை, அது ஒரு கன்னிகை, இது புத்தியில்லாத கன்னிகை, அது புத்தியுள்ள கன்னிகை, ஆனால் இருவருமே கன்னியர்தாம். 151 கன்னிகை என்ற அந்த வார்த்தையை நீங்கள் எடுத்துக் கொண்டு அதன் அர்த்தத்தை—அர்த்தத்தை நீங்கள் ஆராய்ந்தால், “பரிசுத்தமாக, சுத்தமான, சுத்திகரிக்கப்பட்ட” என்ற அர்த்தங்களை தருகிறது. பரிசுத்தமாக்கப்பட்ட என்ற வார்த்தை, “பரிசுத்தவானாக்கப்பட்ட” என்பதிலிருந்து வருகிறது, அது “சுத்தமான” என்று பொருள் தருகிறது. எபிரெய வார்த்தையைப் போல…கிரெக்க மொழியில், பரிசுத்தமாக்கப்பட்ட என்பது, “சுத்தமான” என்று அர்த்தமாகிறது. எபிரேய பாஷையில் “பரிசுத்தமாக்கு” என்று அர்த்தமாகிறது. புரிகிறதா? நமக்கு “சுத்தமான” என்று இருக்கிறது. இப்பொழுது அவர்கள் மூன்று வார்த்தைகளை எடுத்துக் கொள்கிறார்கள், மூன்றுக்குமே ஒரே அர்த்தம் தான் உண்டு. ஆனால் அது வேறுபட்ட வார்த்தைகளாக கூறப்பட்டுள்ளது. “சுத்தமுள்ள, பரிசுத்தமான, பரிசுத்தமாக்கப்பட்ட” ஆகிய மூன்று வார்த்தைகளையும் போல். மூன்றுமே ஒரே வார்த்தை தான்.
83152 நாய் என்ற (Dog) வார்த்தையைக் குறித்து நாம் கூறுவதுபோல, நான் நாயை ஆங்கிலத்தில் “டாஃக்” என்று கூறுவேன். ஜெர்மானிய பாஷையில் நாயை “ஹண்ட்” (Hund) என்றும் கூறுவேன், பிரட், அது சரிதானே? சகோதரன் நார்மன் அவர்களே, நான் ஸ்பானிஷ் பாஷையில் நாயை, “அஜோ” என்று கூறுவேன், அது “அஜோ”, “அஜோ, ஹண்ட், டாஃக்” எல்லாமே நமக்கு நாய் என்றே பொருள்படுகிறது பாருங்கள், எனவே அது—அது ஒரு சொல் தோற்றம் தான். 153 எனவே சுத்தமான என்பதற்குரிய சொல் கிரேக்க மொழியில் “பரிசுத்தமாக்கப்பட்ட” என்ற அர்த்தத்திலும், எபிரெய பாஷையில், “பரிசுத்தமான” என்ற அர்த்தத்திலும் உள்ளன. “பரிசுத்தமான, சுத்தமான, பரிசுத்தமாக்கு” ஆகிய இவை யாவும் ஒரே வார்த்தை தான். எனவே இது அசுத்தமான, அழுக்கடைந்த சபை அல்ல. அது பரிசுத்தமாக்கப்பட்ட, சுத்தமான சபையாகும். “பத்து கன்னியர் மணவாளனை சந்திக்கப் புறப்பட்டுப் போனார்கள்.” அதன் அர்த்தம் என்ன? இந்த சபைகள் யாவும். இல்லை…இப்பொழுது, இங்கே இந்த ரோமன் சபையில் அல்ல. ஆனால் ஏனைய ஸ்தாபனங்களில், நிக்கொலாய் மதஸ்தர். பாப்டிஸ்ட்டுகள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து பிரசங்கிக்கிறார்கள்; மெத்தோடிஸ்டுகள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து பிரசங்கிக்கிறார்கள்; ப்ரெஸ்பிடேரியன்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து பிரசங்கிக்கிறார்கள்; நசரேய சபைக்காரர்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து பிரசங்கிக்கிறார்கள். யாத்திரீக பரிசுத்தர் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்துப் பிரசங்கிக்கிறார்கள். அது சரிதானே? “அவர்கள் யாவருமே மணவாளனை சந்திக்கப் புறப்பட்டார்கள்.” அவர்கள் ஒவ்வொருவரும் மணவாளனை சந்திக்கும்படி தங்களுடைய பாதையில் போய்க் கொண்டிருந்தார்கள் என்பதை இப்பொழுது நீங்கள்—நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். தேவன் அதை கனம் பண்ணியிருந்தால், அப்பொழுது அவர்களையும் அவர் எடுத்துக் கொள்ள வேண்டியதாயிருக்கும்.
84154 சபைக் காலங்களின் செய்தியில் அதே விஷயத்தை தேவன் நம்மோடு அன்று இரவில் பிலேயாமின் உவமையைக் குறித்து, அதாவது “பிலேயாமின் உபதேசம்” என்பதைப் பற்றி பேசியதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா? இங்கே பிலேயாம் நின்று கொண்டிருக்கிறான். அது அருமையான, மகத்தான, பெரிய ஸ்தாபிக்கப்பட்ட தேசமாயிருந்தது. அவர்கள் தேவனில் விசுவாசம் கொண்டவர்களாயிருந்தார்கள். ஏனெனில் பாலாக் வந்தபோது என்ன செய்தான் என்பதைப் பாருங்கள். சரியாகக் கூறினால் பிலேயாம், என்ன செய்தான் என்று பாருங்கள், பிலேயாம், இஸ்ரவேலர் தொழுத அதே தேவனுக்கு, இஸ்ரவேலருடைய தேவனுக்கு, யேகோவாவுக்கு அதேவிதமான பலிகளைச் செலுத்தினான். அவன் ஏழு பலிபீடங்களை உண்டாக்கினான். ஏழு என்ற எண் தேவனுடைய பூர்த்தியான, முழுமையான எண்ணாக இருக்கிறது.
85155 “அவர் ஆறு நாட்கள் கிரியை செய்தார், ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார்,” ஏழு என்பது பூர்த்தியடைந்ததைக் குறிக்கிறது, பாருங்கள். இவ்வுலகில் அவர் ஆறு நாட்கள் வேலை செய்தார். முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனபோது, உலகமானது தண்ணீரால் அழிக்கப்பட்டது. இரண்டாவது இரண்டாயிரமாண்டில் கிறிஸ்து வருகிறார்; இப்பொழுது இது மூன்றாவதான இரண்டாயிரம் ஆண்டுக்காலம் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இரண்டாயிரம் ஆண்டுகளின் முடிவில் முக்கியமான ஒன்று சம்பவித்திடுகிறது; அப்பொழுது உலகமானது மீண்டும் ஒரு தடவை அசைக்கப்படுகிறது. ஆறாயிரம் ஆண்டுக் காலத்தில் அவர் உலகை உருவாக்கி அமைத்தார். ஆறாயிரம் ஆண்டுக்காலம் சபையானது உலகுக்கு எதிராக பாடுபடுகிறது; அதன் பிறகு ஏழாயிரமாண்டுதான், ஆயிர வருட அரசாட்சிக்காலமாகிய ஆயிரமாண்டுக் காலமாகும். அதை இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? 156 இப்பொழுது சபைக்குங்கூட ஏழு சபைக்காலங்கள் உண்டாயிருக்கிறது. தேவன்…அதுதான் சபைக் காலங்களின் முழுமையான பூர்த்தியான எண்ணாக இருக்கிறது. அவையாவும் ஏழாக இருக்கிறது. ஏழு என்ற எண் தேவனுடைய பூர்த்தியான முழுமையான எண்ணாக இருக்கிறது. ஏழு சபைக் காலங்கள், சிருஷ்டிப்பின் ஏழாயிரம் ஆண்டுக் காலங்கள், யாவும் ஏழு என்ற எண்ணில்தான் அமைந்துள்ளன.
86157 அங்கே கன்னிகைகள் அவரைச் சந்திக்கும்படி புறப்பட்டுச் சென்றார்கள். ஆனால் “புத்தியில்லாத” கன்னியரிடம், அவர்கள் விளக்குகளில் எண்ணெய் இல்லை, ஆனால் அவர்கள் மற்ற யாவையும் உடையவர்களாக இருந்தார்கள்; அவர்கள் சுத்தமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் கிறிஸ்துவிலே விசுவாசம் கொண்டவர்களாயிருந்தார்கள். அவர்கள் விசுவாசித்த வார்த்தையை, அதாவது தங்கள் ஸ்தாபனங்கள் அவர்களை பிரசங்கிக்க அனுமதித்த வார்த்தையை அவர்கள் பிரசங்கித்தார்கள். அவர்கள் அதைப் பிரசங்கித்தனர், இரண்டாம் வருகையைப் பற்றியும், பாவ நிவாரண பலியைக் குறித்தும் அவர்கள் பிரசங்கித்தார்கள். அவர்கள் விசுவாசிக்கிறார்கள். ஒரு நல்ல பாப்டிஸ்ட் வேத பண்டிதர் ஒருவரோடு எப்பொழுதாவது நீங்கள் விவாதிக்க நேர்ந்தால், (ஊ) நீங்கள் அவரோடு பேசும் விஷயத்தைக் குறித்து சரியானபடி அறிந்து வைத்திருங்கள். நிச்சயம் நீங்கள் அப்படி செய்துதான் ஆக வேண்டும். ஹூ—ஹூ.
87158 ஆனால், நீங்கள் பாருங்கள், “மிகவும் நெருக்கமாக” என்று மத்தேயு 24, கூறியுள்ளது, மத்தேயு 24:24-ஐப் படித்துப் பாருங்கள்; அப்பொழுது நீங்கள் புரிந்து கொள்வீர்கள். கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக, இக்கடைசி நாட்களில் இரு ஆவிகளுமே மிகவும் நெருக்கமாக ஒத்துக் காணப்படும் என்று இயேசு கூறியுள்ளார். அது மிகவும் ஒத்திருப்பதுபோல் இருக்கும். அது முழுவதுமாக பெந்தெகொஸ்தேயினரையும் கூட சுழன்றிடச் செய்துவிடும். நிச்சயமாக. மத்தேயு 24-24ஐ யாராவது எடுத்துவிட்டீர்களா? எனக்கு அங்கே கிடைக்கவில்லை. சகோதரி உங்களுக்கு கிடைத்து விட்டதா? அல்லது வேறு யாருக்கும் கிடைத்ததா? மத்தேயு 24, கிடைத்ததா? பென்? சரி, அதைப் படியுங்கள். [ஒரு சகோதரி வாசிக்கிறார் “ஏனெனில் கள்ளக் கிறிஸ்தவர்கள் எழும்புவார்கள்,” கள்ள—கள்ள கிறிஸ்துக்கள்,—ஆசி.] கள்ளக் கிறிஸ்துக்கள்! [கள்ளத் தீர்க்கதரிசிகளும்] , கள்ளத் தீர்க்கதரிசிகள்! எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். ] 159 அங்குதான் காரியமே உள்ளது. இப்பொழுது, என்ன எழும்பப்போகிறது? கள்ள கிறிஸ்துக்கள் எழும்புவார்கள், “நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவன்” என்று கள்ள ஜனங்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். கள்ளத் தீர்க்கதரிசிகளும், “நான் இதுவாக இருக்கிறேன், நான் அதுவாக இருக்கிறேன்” என்று கூறிக் கொள்வார்கள். அவர்கள் கூடுமானால், தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் கூட ஏறக்குறைய வஞ்சிக்கப் பார்ப்பார்கள். அதிலிருந்து நீங்கள் காப்பாற்றப்பட ஒரேயொரு வழிதான் உண்டு. நீங்கள் உலகத் தோற்றத்திற்கு முன்னால் தெரிந்து கொள்ளப்பட்டிருந்தால்தான் இயலும். அது முன்னறிவினால் நீங்கள் தெரிந்து கொள்ளப்படுதலினால் உண்டாவதாகும்; உங்களது பெயர் அப்பொழுது புத்தகத்தில் எழுதப்பட்டிருத்தலினால் அது உண்டாகிறது. “பெரிய அடையாளங்கள்.”
88160 அங்கே இரு சபைகளைக் குறித்துப் பாருங்கள் ஓ, என்னால் கூடுமானால்…இதைக் குறித்து மக்கள் கண்டுணரச் செய்ய என்னால் கூடுமானால் …என் ஆத்துமாவில் அவ்விஷயம் கொழுந்துவிட்டு எரிகிறது! இது… இந்த சபைகள் உண்மையான சபையைப் போலவே, சுத்தம் உள்ளதாகவும், பரிசுத்தமானதாகவும் உள்ளன. இவர்கள் யாவரும் கன்னியர் என்றால், அவர்களும் கன்னியர்தான். அதேபோலவே சுத்தமாயிருக்கின்றன. இரு சாராருக்கிடையேயுள்ள ஒரேயொரு வேறுபாடு என்னவெனில், இவர்களுக்கு விளக்கில் எண்ணெய் ஆகிய பரிசுத்த ஆவி உள்ளது. பரிசுத்த ஆவியானது அங்கே இருக்குமெனில், அது பெந்தெகொஸ்தே நாளில் உண்டான அதேவிதமான ஆக்கினியைத்தான் இங்கேயும் உண்டாக்குகின்றது. ஆனால் அவர்களுக்கோ தங்கள் விளக்கில் அக்கினியோ, எண்ணெயோ இல்லை. அவர்களுக்கு சபைச் சடங்காச்சாரம்தான் உள்ளது. முடிந்த அளவுக்கு சபையானது பார்க்க சம்பிரதாயங்களைக் கொண்டதாகத்தான் இருக்கிறது. அருமையான வைபவங்கள் அவர்களுக்கு உண்டு. (அதற்கெதிராக ஒன்றுமில்லை) சமயசார கோட்பாடுகள் அங்கே உண்டு; அது உங்களது மனச்சாட்சியைக் கூட அசைத்திடுகிறது. தூதர்களைப் போல் பாடல்கள் பாடுதல் இதெல்லாம் அவர்களிடம் உண்டாயிருக்கின்றன. அவர்கள்…உங்களால் அவர்களுடைய ஜீவியத்தின் மேல் உங்களுடைய விரலை நீட்டி…குற்றஞ்சொல்ல முடியாது. ஆயினும் அது தவறாயிருக்கிறது! அதுவல்ல…அவர்களுடைய காரியங்கள் வார்த்தையின் ஒரு பாகமாக இருக்கிறதேயல்லாமல், முழுமையான வார்த்தையாக அது இல்லை, அந்த விதமான ஒரு கூட்டத்தினர்தான் எடுத்துக் கொள்லப்படுதலில் கைவிடப்படுகிறார்கள். புரிகிறதா? அவர்கள்…
89161 இப்பொழுது கவனியுங்கள். இங்கே மோவாப் வருகிறது. நான் அதன் விஷயத்தை இப்பொழுது எடுத்துக் கொள்கிறேன். அதினால் நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள இயலும். இதோ இங்கே மோவாப் ஒரு பெரிய ஸ்தாபனமாக இருக்கிறது. அதை நான் இங்கே ஸ்தாபனத்திற்கு சாயலாக “உதாரணமாக” வரைகிறேன். “ஸ்தாபனமில்லாத” சபைக்கு அடையாளமாக இஸ்ரவேலை இங்கு வரைகிறேன். இதோ இங்கே மோவாபிடம் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழு பலிபீடங்கள் உள்ளன. இஸ்ரவேலும், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு பலிபீடங்களை உண்டாக்கினார்கள். அது சரி. மோவாப் தான் உண்டாக்கின ஏழு பலிபீடங்களின் மேலும், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழு காளைகளை செலுத்தினது. இஸ்ரவேலும் தனது ஏழு பலிபீடங்களின் மேல், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழு காளைச் செலுத்தினது சரி. மோவாப், “ஒரு சமயம் உண்டாயிருக்கும், அப்பொழுது மனிதனாகிய ஒருவர், (கிறிஸ்து) பூமியின்மெல் வருவார்; அவரே சர்வலோகத்தின் பாவங்களையும் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாயிருப்பார்: எனவே நாங்கள் ஏழு செலுத்தியுள்ளோம்” என்று கூறினது (என்ன?) “பலிபீடத்தின் மேல் ஆட்டுக்குட்டிகள்” இஸ்ரவேலும், “அது மிகவும் சரிதான், பலிபீடத்தின்மேலும் ஏழு ஆட்டுக்குட்டிகள்” என்றது. பார்த்தீர்களா?
90162 இப்பொழுது, ஆதியிலேயே கூட, காயீன் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, அதின்மேல் பலி செலுத்தி, தொழுது கொண்டு, ஆபேல் செய்த யாவற்றையும் இவனும் செய்தான். …(ஓ, இதை அறிந்து கொள்ளுங்கள்!) ஆனால் தேவனைப் பற்றிய வெளிப்பாடு இல்லாமல்தான் அவை யாவையும் காயீன் செய்தான். ஆனால் முழு சபையும் அந்த வெளிப்படுத்துதலின் மேல் தான் கட்டப்பட்டுள்ளது. இயேசு அவ்வாறு தான் கூறினார், “இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்” என்றார். இயேசு கிறிஸ்துவின் உன்னத தெய்வீகத் தன்மையைப் பற்றிய சத்தியம் ஆவிக்குரிய பிரகாரமாக வெளிப்படுத்தப்பட்டது “இந்தக் கல்லின்மேல் என் சபையை கட்டுவேன்.” 163 இப்பொழுது, தேவன் உங்களுடைய சடங்காச்சாரங்கள், உங்களுடைய சடங்குகள், இவைகளைத்தான் மதிக்கிறார் எனில், அவைகளைச் செய்கிறவர்கள், மெதோடிஸ்ட்டுகள், பாப்டிஸ்டுகள், பெந்தெகொஸ்தேயினர் மற்றும் இன்ன பிற சபையினர்தான்; அவர் உங்களிடம் அதைத்தான் செய்யும்படி எதிர்பார்க்கிறாரென்றால், அத்தோடு இரண்டாம் வருகையைக் குறித்து பிரசங்கித்தும் மற்றும் இன்ன பிற காரியங்களையும் பிரசங்கித்து, (அது முற்றிலும் வேத பூர்வமானது தான்): பாப்டிஸ்டுகளும் ப்ரெஸ்பிடேரியன்களும் இவைகளைச் செய்கிறார்கள்; அப்பொழுது, இரு சாராரையுமே எடுத்துக் கொள்ள தேவன் கடமைப்பட்டவராயிருக்கிறார்; ஏனெனில் அவர் அதைத்தான் எதிர்பார்க்கிறார் என்று ஆகிவிடும். ஆனால், நீங்கள் பாருங்கள், வெளிப்பாடில்லாமல், அதோ அங்கே நித்திரை செய்யும் புத்தியில்லாத கன்னிகைகள் இருக்கிறார்கள். இங்கே இதோ, புத்தியில்லாத கன்னிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு ஸ்தாபனமாக, ஒரு பெரிய ஜாதியாயிருக்கிறார்கள்.
91164 அன்றொரு இரவில் நாம் வாசித்தபோது, வார்த்தை கூறினதோ, “இந்த ஜனங்கள் ஒரு ஸ்தாபனமாக இருக்கமாட்டார்கள், அவர்கள் தேசத்தில் அலைந்து திரிகிறவர்களாயிருப்பார்கள், கூடாரங்களில் குடியிருப்பார்கள், தரித்திரராயும், தாழ்மையோடும் இருப்பார்கள்” என்பதாகும். ஆனால் “அவர்களை நீங்கள் சபிக்க முயற்சிக்க வேண்டாம். ஏனெனில் நான் அவர்களோடிருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இப்பொழுது கவனியுங்கள்! இவர்கள் விசுவாசித்த அதே முறைமையை அவர்களும் விசுவாசித்து, அதே தேவனை இவர்களும் தொழுது கொண்டார்கள். பாருங்கள்? ஆனால் அவர்களோடு, அற்புத அடையாளங்கள் பின் தொடரவில்லை. ஆனால் இஸ்ரவேலரோடு ஒரு வெண்கல சர்ப்பம், ஒரு அடிக்கப்பட்ட கன்மலை, இராஜாவின் ஜெய கெம்பீரம், தெய்வீக சுகமளித்தல், தீர்க்கதரிசிகள், இங்கே காணப்படுகிற ஒவ்வொரு காரியமும் இருந்தது. அவர்களிடமோ இவைகள் இல்லை, அவர்களிடம் வெறும் சடங்காச்சாரம்தான் உண்டு, எண்ணெயாகிய ஆசீர்வாதமின்றி இருந்தார்கள்.
92165 இதேவிதமாகத்தான் நித்திரை செய்யும் புத்தியில்லாத கன்னிகைகளோடும், புத்தியுள்ள கன்னிகைகளோடும் இருந்தது. அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்ட ஜனங்களாயிருந்தார்கள். ஆனால் இவர்களிடம் எண்ணெய் இருந்தது. இவர்களோ எண்ணெய் இல்லாமலிருந்தனர். எனவே அவர்கள், “நாங்களும் உங்களைப் போலவே நல்லவர்களாகத்தான் இருக்கிறோம்” என்றார்கள். அதைப் பொறுத்த மட்டில், நம்மில் நல்லவர்கள் எவருமே கிடையாது. “ஏன், நீங்கள் ஒரு கூட்டம் உருளும் பரிசுத்தராயிருக்கிறீர்கள்” என்கிறார்கள், நல்லது, அது சரிதான். உ—ஊ, அது பரவாயில்லை. நம்மில் நல்லவர்கள் எவருமே இல்லை: நாமெல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களானோம். ஆனால் அதை நீங்கள் அறிந்து கொள்வதற்குரிய ஒரே வழி, சபையை சேர்ந்து கொள்ளுவதினால் அல்ல, நல்லவிதமாக ஜீவிக்க முயற்சி செய்வதினால் அல்ல. ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதினால் மட்டுமே. நான் எப்படி ஜீவிக்கிறேனோ அதன்படியல்ல; அவர் என்னவாயிருக்கிறார் என்பதைப் பொறுத்ததே அது. நான் என்னவாயிருக்கிறேன் என்பதைப் பற்றியது அல்ல அது, அவர் என்னவாய் இருக்கிறார் என்பதாகத்தான் இருக்கிறது. அவருடைய கிருபையினால் நான் அவராக, தேவனுடைய குமாரனாக ஆகும்படி, அவர் என்னைப்போல் ஆனார். நீங்கள் இதை புரிந்து கொண்டீர்களா?
93166 இங்கே, ஒரு நித்திரை செய்யும், புத்தியில்லாத கன்னிகை இருக்கிறாள்; இங்கே தன் விளக்கில் எண்ணெயை உடையவளாக ஒரு புத்தியுள்ள கன்னிகையும் இருக்கிறாள். இப்பொழுது திடீரென ஒரு சப்தம், “இதோ மணவாளன் வந்துவிட்டார், அவரைச் சந்திக்க எதிர்கொண்டு போங்கள்” என்று உண்டாயிற்று. அப்பொழுது அவர்கள் விழித்தெழுந்தார்கள். ஆனால் அவர்கள் விழித்தெழுந்தபோது, இந்த ஒரு கூட்டம் தங்கள் விளக்குகளில் எண்ணெயை உடையவர்களாக இருந்தார்கள். அதுவே வித்தியாசமாயிருந்தது. 167 இன்னொரு பிரிவினரால் உள்ளே பிரவேசிக்க முடியவில்லை, ஏனெனில் அவர்களது விளக்கில் எண்ணெய் இருக்கவில்லை; அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி வேண்டுதல் செய்ய திரும்பிப் போனார்கள். ஆனால் அவர்கள் அதற்காகப் போயிருக்கையில், யாவும் முடிவுற்றது. ஸ்தாபனங்கள், “நல்லது, ஒரு வேளை நாங்கள் தவறாயிருக்கக் கூடும். ஒரு வேளை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காக தேட நாங்கள் அவரிடம் திரும்பிப் போவது நல்லதாக இருக்கக்கூடும்” என்று கூறுகின்றனர். அதைத்தான் அவர்கள் இப்பொழுது செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அதை நீங்கள் கவனித்தீர்களா? ப்ரெஸ்பிடேரியன்கள்…ஒரு நிமிடம் ஒலி நாடாவில் பதிவு செய்வதை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். நான் அவருடைய பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. [ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.] …?… மணவாளன் வருகிறார். அவர்கள் இப்பொழுது, எண்ணெயை விலைக்கு வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறபொழுது, அவருடைய வருகையானது எவ்வளவு சமீபமாயிருக்கிறது? சரி, ஜீன், உங்களுடைய ஒலிப்பதிவை ஆரம்பித்திடுங்கள். இப்பொழுது அதை புரிந்து கொண்டீர்களா? “அவர்கள் எண்ணெய் வாங்க சென்றபொழுது” அவர்கள் இப்பொழுது அதை வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து சபைகளும் ஒரு எழுப்புதலை, எழுப்புதலை அடைய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக திரும்பிப்போக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
94168 இப்பொழுது, டாக்டர் பில்லிகிரகாம் அவர்கள்கூட, விசுவாசத்தைக் குறித்து கூறும் வருகையின் தூதன் என்று சிக்காகோவிலிருந்து வரும் பத்திரிக்கையில் (Hearald of Faith) எழுதியிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அதில் அவர், “பெந்தெகொஸ்தே அசைவை நாம் அவமதிக்கக் கூடாது” என்று எழுதியிருக்கிறார். “நாம் அவர்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிட முடியாது, ஏனெனில் மற்றெல்லா சபைகளையும் ஒன்று சேர்ந்து ஒரு வருடத்தில், அவர்கள் யாவரும் செய்திட்ட ஆத்தும ஆதாயத்தைவிட பெந்தெகொஸ்தேயினர் அதிகமாக ஆதாயப்படுத்தியிருக்கிறார்கள்” என்று எழுதியுள்ளார். 169 அது சரியாக, அக்கினி பற்றியெறிதலும், அது அசைத்தலும், ஒன்று திரட்டுதலும், வலையை வீசியெறிந்து, இழுத்தலுமாயிருக்கிறது. நீங்கள் ஒரு வலையை கடலில் வீசியெறிகையில்…இயேசு, “தேவனுடைய இராஜ்யம் ஒரு மனிதன் சென்று கடலில் வலையை வீசி, அதை அவன் கரைக்கு இழுத்தபொழுது, அதில் அவனுக்கு ஆமைகளும், பாம்புகளும், தவளைகளும், சர்ப்பங்களும், மற்றவைகளும் கிடைத்தன. ஆனால் அவனுக்கு சில மீனும் கிடைத்தன” என்று கூறினார். பெந்தெகொஸ்தே செய்தி அதைத்தான் செய்து வருகிறது. அது பூமி முழுவதிலும் தீவிரமாய் பரவுகிறது; அதை வீசியெறிந்து கரைக்கு இழுக்கும்பொழுது, நாம் ஆமைகளையும், நன்னீர் நண்டுகளையும், மற்ற வகையான நண்டுகளையும், தவளைக் குஞ்சுகளையும், நீர் நாய்களையும், நீரில் குதித் தெழும்பும் ஒரு வகை நீர் பறவைகளையும், மற்றும் உள்ளவைகளையும் நாம் அந்த வலையில் பெற்றுக்கொள்கிறோம். ஆனால் அது என்னவென்றால், அங்கே சில மீன்களும் கூட உள்ளன. அவைதான் எஜமானுக்குரியவைகளாயிருக்கின்றன. 170 இவ்வொலிநாடா செய்தியைக் கேட்கும், பிரமாணத்தை மிகவும் கடுமையாக ஆசரிப்பதில் விசுவாசங்கொண்டிருக்கிற சகோதரில் சிலரே, அதை எரித்துவிட விரும்புவீர்களோ? அவர்கள் எப்பொழுது மீன்களாக மாறினார்கள்? வலையானது அவர்கள் மேல் சென்றபொழுதோ? இல்லை, அவர்கள் துவக்கத்திலேயே மீனாக இருந்தனர், அது உண்மையே. உலகத்தோற்றத்திற்கு முன்னரே அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். மற்றவைகளோ எஜமானின் உபயோகத்திற்குள்வராதவைகளாகும்.
95171 அதுதான் உங்களுடைய தவளை, வலையிலிருந்து ஒரு பழைய தவளையை நீங்கள் வெளியே எடுத்து கரையில் எறிந்துவிட்டால், அது “வாப் வாப்” என்று சத்தமிட்டுக் கொண்டே, தண்ணீருக்குள் மீண்டும் திரும்பிவிடும். 172 அங்கே அந்த வயதான நண்டு உட்கார்ந்து கொண்டு, “ஆ, அந்தக் கூட்டம், ஒரு உருளும் பரிசுத்தரின் கூட்டம் அது” என்று சொல்லும். அதுவும் மீண்டும் தண்ணீருக்குள் திரும்பிச் சென்று விடுகிறது. “ஆ—ஆ—ஆ—ஆ—ஆ, ஓ, இல்லை, முடியாது” என்று சொல்லி விட்டு, திரும்பவும் அது சேற்றினுள் விரைவாக தப்பி ஒடி விடுகிறது, அது உண்மையே. 173 வலையில் அகப்பட்ட அந்த வயதான பாம்பும் சிறிது நேரம் சீறிவிட்டு, “அற்புதங்களின் காலம் முடிவடைந்துவிட்டன. வேத பண்டிதர் இன்னார் இன்னார், மற்றும் இன்னார்—இன்னார் என்னிடம் கூறினார்,” எனவே, “ஆ—ஆ—ஆ—ஆ—ஆ—ஆ—ஆ, என்னை நீங்கள் முட்டாளாக்க முடியாது!” என்று கூறிவிட்டு, அது மீண்டும் அங்கே தண்ணீருக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறது, நீங்கள் பாருங்கள். 174 பாம்பு பாம்பாகத்தான் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிறது. தவளை தவளையாகத்தான் ஆரம்பித்தது. அந்த விதமான மக்களைப்பற்றி பவுலுங்கூட குறிப்பிடுகையில், “அவர்கள் நம்முடையவர்களாக இல்லாதபடியினால் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள்” என்று கூறினான். புரிகிறதா? உம்! சரி, அது புத்தியில்லாத கன்னிகையாகும்.
96175 புத்தியுள்ள கன்னிகை தன்னுடைய தீவட்டியில் எண்ணெயை வைத்திருந்தாள், அவள் ஆயத்தமாயிருந்தாள். 176 “அவள் கொஞ்சம் எண்ணெய் வாங்கப்போயிருந்தபொழுது” அதைத்தான் அவர்கள் இப்பொழுது செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பெரிய சுவிசேஷ சபைகள் யாவும், இம்மகத்தான காரியங்களை கண்டு கொள்ள முயற்சித்து, வேதத்திற்குத் திரும்பிப் போய், “எங்களுக்கு பெந்தெகொஸ்தே ஆசீர்வாதம் தேவை” என்று வேண்டுகின்றனர். அவர்கள் என்னவிதமான ஆராதனையைப் பெற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பதை நீங்கள் நன்கு கற்பனை செய்து பார்க்கலாம். அவர்கள் அதைப் பெறப்போகிறதில்லை; அவர்கள் அங்கு சென்று தங்கள் மேல் பூசப்பட்ட அழகு சாதனைகளையெல்லாம் கெடுத்துக் கொள்ளப் போகிறதில்லை. ஓ, இல்லை. அவர்கள் தங்களுடைய சங்கங்களையும் ஸ்திரீகள் ஐக்கிய சங்கங்களையும் விட்டுவிடப் போவதில்லை. ஏசாவைப் போல், ஒரு கையால் உலகைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையில் தேவனையும் பிடித்துக் கொள்ள முயலுகிறார்கள். அப்படி நீங்கள் செய்ய முடியாது. ஓரக் கண் பார்வை உள்ள கிறிஸ்தவராக இருக்க முடியாது: தேவனையும் நோக்கிக் கொண்டு, உலகையும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. உங்கள் முழு பார்வையும் கல்வாரியின் மேல் தான் மையம் கொண்டிருக்க வேண்டும், அங்கே தான் நிலைத்திருங்கள்.
97177 அவர்கள் அங்கே திரும்பிப்போய் வாங்க முயன்று கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு சமீபமாயிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எண்ணெயை வாங்க அவர்கள் போன அதே வேளையில் தான் மணவாளன் வந்துவிட்டார். 178 ஓ! சகோதரன் ஸ்ட்ரிக்கர் அவர்களே, நாம் சமீபமாக அங்கே இருக்கிறோம். நாம் நமது பரம வீட்டுக்கு சமீபமாக வந்துவிட்டோம். ஓ, இக்காளைகளில் ஒன்றில்: கர்த்தரின் எக்காளம் தொனிக்கும், இனி காலம் செல்லாது, காலைப்பொழுது நித்தியத்தில் பிரகாசமாயும், அழகாகவும் விடியும்; அப்பொழுது இரட்சிக்கப்பட்ட அவருடையவர்கள் ஆகாயத்திற்கப்பால் உள்ள் தங்கள் வீட்டில் ஒன்று கூடுவர். (அது எப்பேர்பட்ட நேரமாயிருக்கும்!)
98179 ஆம், நித்திரை செய்யும் கன்னியர்…இந்த நித்திரை செய்யும் கன்னியருக்கு என்ன நேரிடும் என்பதை அறிந்திட நீங்கள் விரும்புகிறீர்கள். அப்படித்தானே? ஒரு காரியத்தைப் பற்றி நான் விளக்கிட விரும்புகிறேன். இந்த சபைகளுக்கு என்ன நேரிடப் போகிறது? ஒரு பகுதி தூரம் மட்டுமே கிறிஸ்துவோடு வந்துவிட்டு, கிறிஸ்துவோடு முழுத் தூரமும் கூடப்போகாத இம்மக்களுக்கு என்ன நேரிடப்போகிறது? 180 இப்பொழுதும் ரோமருக்கு எழுதின நிருபத்தில், அது 2:22 என்று நான் நம்புகிறேன். வேதம் கூறியள்ளது, பவுல், “தேவனுடைய ஆவி உங்களில் இராவிடில், நீங்கள் தேவனுடையவர்கள் அல்ல” என்று கூறினான். அப்பொழுது நீங்கள் ஸ்தாபனத்திற்கு சொந்தமாயிருக்கிறீர்கள், தேவனுக்கு அல்ல. தேவனுடைய ஆவி உங்களுக்கு இலையென்றால், நீங்கள் தேவனுடையவர்கள் அல்ல, பாருங்கள். நீங்கள் தேவனுடையவர்களாயிருக்க தேவனுடைய ஆவியைப் பெற்றிருக்க வேண்டும். நிச்சயமாகவே!
99181 அது சரி, ஐயா, “மகா உபத்திரவ காலம்.” இப்பொழுது, இப்பொழுது நீங்கள்…அவர்கள் அதன் வழியாக கடந்து செல்ல வேண்டியதாயிருக்கிறது…இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். அவர் கூறினார்…இப்பொழுது, நான் இனி மீதியாயிருக்கிற விஷயத்தை எடுத்துக் கொள்ளுகிறேன், “இப்பொழுது அவர்கள் புறம்பான இருளிலே தள்ளப்பட்டார்கள். அங்கே அழகையும், புலம்பலும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.” சரி, அது மகா உபத்திரவ காலமாகும். அவ்வாறில்லையா? மகா உபத்திரவ காலம்! இப்பொழுது, இந்த உபத்திரவ காலத்திற்குப் பிறகு, அந்த ஜனங்கள்… 182 இப்பொழுது, மீதியாயிருக்கிறவர்களைப் பற்றி நான் மீண்டும் இங்கே எடுத்துக்கொள்ளட்டும். இப்பொழுது பாருங்கள்! இங்கே ஒரு துண்டு துணி இருக்கிறது. பெண்ணானவள் அதை இவ்வாறு விரித்து வைத்து, அதிலிருந்து தனக்கு ஒரு ஆடையை தயாரிக்கப்போகிறாள். அவளிடத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள துணிதான் இருக்கிறது. அத்துணியின் ஒவ்வொரு பகுதியும் ஒரே விதமான துணியாகத்தான் உள்ளது. அது சரிதானே? 183 இரு சாராருமே கன்னியர்தான். புரிகிறதா? சரி. அவர்களுக்கு கிறிஸ்துவில் விசுவாசம் இருந்தது, தேவ பக்தியின் வேஷம் உண்டாயிருந்தது, அவர்கள் சபைக்கு சென்று வந்தார்கள்; நல்ல காரியங்களை, தர்மங்களையெல்லாம் செய்துவந்தவர்களாகத் தான் இருந்தார்கள். அவர்களுடைய கிரியைகளுக்கெதிராக குறையொன்றும் சொல்லக் கூடியதாக இல்லை. “உன் கிரியைகளை நான் அறிந்திருக்கிறேன்” என்று கர்த்தர் கூறினார். ஒவ்வொரு காலத்திலும் அதைக் குறித்து அவர் கூறினார், “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். ஆனாலும் உன்னிடத்தில் குறையுண்டு” என்றார். பாருங்கள்?
100184 அந்த ஸ்திரீயானவள்…அவள் தன் மனதில், எந்த விதமாக அவ்வாடையைத் தயாரிக்க விரும்புகிறாளோ அதற்கான மாதிரியைப் பற்றி திட்டமிட்டுக் கொள்ளுகிறாள்; அந்த மாதிரியின்படி எவ்வாறு அத்துணியை வெட்ட வேண்டும் என்பதைப் பற்றியும் அவள் சிந்திக்கிறாள்; தான் வெட்டப்போவது என்னவாயிருக்கும் என்பதையும் முன் கூட்டியே அறிந்திருக்கிறாள். அது சரிதானே? அவள் அம்மாதிரியில் போதுமான சிறந்த பகுதி எதுவென்று எண்ணுகிறாளோ அதை அவள் எடுத்துக்கொள்கிறாள். அது சரிதானே? ஏனென்றால் அத்துணி முழுவதும் ஒரேவிதமான துணியாகத்தான் உள்ளது. ஆனால், அவள் விரும்புகிற வண்ணமாக அத்துணியைப் பிரித்து இந்தவிதமாக அல்லது அந்தவிதமாக பிரித்து அவள் எடுத்துக்கொள்கிறாள். அதன் பின்னர் கத்தரிக்கோலை எடுத்து, அதை வெட்டியெடுத்துக் கொள்ளுகிறாள். அத்துணியிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டுப்போக மீதியாக இருப்பதுதான் “மீதியானது” என்று கூறப்படுகிறது, (Remnant) சரி. இந்த மாதிரியானது என்னவாயிருக்கிறது, அது எவ்வாறு அறிந்து கொள்ளப்பட்டது? எதிலிருந்து வெட்டியெடுக்க வேண்டும் என்று அந்த பெண்மணி தெரிந்து கொண்டாளோ, அதிலிருந்து வெட்டி எடுத்துக் கொண்டாள்.
101185 ஆதி முதல் அந்தம் வரையிலும் முன்னறிவினாலே அறிந்திருந்த தேவனானவர். உலகத் தோற்றத்திற்கு முன்னரே, எங்கிருந்து வெட்டியெடுக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருந்தார் . ஏசாவுக்கும், யாக்கோபுக்கும் உள்ள வேறுபாட்டை அவர் அறிந்தேயிருந்தார். பாவிக்கும், பரிசுத்தவானுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும் அறிந்தேயிருந்தார். அவர் வித்தியாசத்தை அறிந்திருந்தார். ஒவ்வொரு இருதயத்தின் நோக்கத்தையும் அவர் அறிந்தேயிருந்தார், எனவே, அவர் நம்மை உலகத் தோற்றத்திற்கு முன்னரே தெரிந்துகொண்டு, நமது பெயர்களை ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் எழுதினார்; அடிக்கப்படப்போகிற ஆட்டுக்குட்டியாக அவ்வாட்டுக்குட்டி இருந்தது; (அவர் அடிக்கப்படப் போவதற்கு முன்னரே, நமது பெயர்களை எழுதினார்). கிறிஸ்துவானவர் உலகத்தோற்றத்திற்கு முன்னரே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் என்று வேதம் கூறியுள்ளது. அடிக்கப்படுவதற்கென்று அவர்—அவர் ஆதியில் தெரிந்து கொள்ளப்பட்ட பொழுது, அவர் யாருக்காக அடிக்கப்பட வேண்டுமோ, அதற்குரிய ஜனங்களாக நாம் தெரிந்து கொள்ளப்பட்டோம். அதை புரிந்து கொள்கிறீர்களா?
102186 யாவரும் கன்னிகைகள்தான். இதோ இங்கே அந்த கொஞ்சம் மீதியாயிருக்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் வெட்டப்படுவதில் விழும் கழிவுத் துண்டுகள் அல்ல இவர்கள். ஓ, இல்லை, அப்பெண்மணி அதை பத்திரமாக எடுத்து வைத்து வைக்கிறாள், அதை அவள் வேறு எதற்காவது உபயோகிக்க முடியும். பாருங்கள்? ஆனால் சபைக் காலத்தில் இங்கே அது உபயோகப்படப் போகிறதில்லை, அங்கே வெட்டியெடுக்கப்பட்ட சபைதான் உபயோகிக்கப்படும். மீதியாயிருக்கிற அவர்கள் (உபத்திரவ காலத்தினூடே செல்லுகிறபடியினால்), அவர்கள் நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டியுள்ளது. அதை இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? 187 இங்கே சபையானது பரம வீட்டிற்கு போகின்றது. அது பரம வீட்டிற்குப் போகிறது. இதோ இங்கே மீதமாக விடப்பட்டிருக்கிற மீதியாயிருக்கிறவர்கள் இருக்கிறார்கள். இங்கேதான் சீயோன் மலையின் மேல் நிற்கிற யூதர்களாகிய இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் இருக்கிறார்கள். அது மூன்று வித்தியாசமான மணவாட்டிகள் அல்ல. ஊ! அதுதானே மணவாட்டி, அடுத்து மீதியாயிருக்கிறவர்கள்; இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள். சரியாக அதுதான். யோவான் அங்கே பரிசுத்த ஆவியின் உணவைத் தவிர வேறு எதையும் புசித்துக் கொண்டிருக்கவில்லை. எனவே அவன் சரியான நிலையில் தான் இருந்தான் என்றும், அவனிடத்தில் எந்தவித தவறும் காணப்படவில்லை என்று நான் கருதுகிறேன். புரிகிறதா? அவர்கள் அதோ அங்கே—அங்கே இருக்கிறார்கள்.
103188 காலத்தின் இறுதியிலே, “பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்கள்” என்று வேதம் கூறுவதை எத்தனை பேர்கள் அறிந்திருக்கிறார்கள்? பவுல் அவ்வாறு கூறினான். நாம் இப்பொழுது தானியேலின் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, அங்கே வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பைப் பற்றி பார்ப்போம். வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்தும் அந்தக் காட்சியை நாம் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் நான் தானியேலின் புத்தகத்திலிருந்து எடுத்துக் கொள்ள விரும்புகிறேன், அது அதேக் காரியம் தான். தானியேல் 7-ம் அதிகாரம், நாம் இங்கே அந்த மகத்தான வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பைப் பற்றி புரிந்துகொள்வோம். நாம் தானியேலின் புத்தகம் 7-ம் அதிகாரம் 8-ம் வசனத்திலிருந்து துவங்குவோம்: அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது; (இப்பொழுது, அங்கே நாம் ரோமாபுரியைக் காண்கிறோம் என்பதை நாம் அறிவோம். புரிகிறதா?) இதோ, அந்தக் கொம்பிலே மனுஷக் கண்களுக்கு ஒப்பான கண்களும், (இப்பொழுது, நினைவிருக்கட்டும், இந்த கொம்பு ஒரு கிரீடத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. அது ஒரு தந்திரமான காரியமாயிருந்தது. ஏனைய கொம்புகள் மிருகங்களை பின்பற்றின. இந்த கொம்பு ஒரு தந்திரமான மனிதனாகும். அஞ்ஞான மார்க்கத்திற்குப் பதிலாக அது போப் ஆகும். நீங்கள் பாருங்கள்) பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது.
104189 இப்பொழுது 9-ம் வசனத்தைக் கவனியுங்கள்: நான் பார்த்துக் கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; (புறஜாதிகளுடைய இராஜியங்களெல்லாம் முடிவுற்றன. தீர்க்கதரிசி பேசுகிறான், இப்பொழுது நினைவிருக்கட்டும், நாம் பேசிக்கொண்டிருக்கிற நம்முடைய வரலாற்றின் மூலம் தீர்க்கதரிசி முன்னுரைத்த காரியங்களெல்லாம் இந்நாள் வரை நிறைவேறியிருக்கிறதை நாம் அறிவோம்.)… சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போலத் துப்புரவாகவும் இருந்தது ;…(அன்றிரவில் நாம் பார்த்த அத்தரிசனத்தில் அது யார் என்று பார்த்தோம்? அது இயேசு தான்) … அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப் போலத் துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜீவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது. அக்கினி நதி அவர் சந்ததியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள், (இதோ அவரோடு திரும்பி வருகிற சபையை அங்கே காண்கிறோம், பாருங்கள்.) கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள் …(மணவாட்டி அவருடன் வருகிறாள், மற்றும் உலகில் மீதியுள்ளவர்களுமே) … நியாய சங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது. …நியாய சங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது. …அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலை செய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. (நான் குறிப்பிடுவது) …மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; (நான் பொருட்படுத்திக் கூறுவதோ) ஆனாலும், அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது.
105190 நியாயசங்கமானது அமர்ந்து, புத்தகங்கள் திறக்கப்பட்டன. அப்பொழுதுதான் மணவாட்டி திரும்பி வந்து நியாயத்தீர்ப்பில் அமர்ந்திடுகிறாள். தெரிந்துகொள்ளப்பட்ட சபையானது…அந்த மூன்றரையாண்டுகளுக்குப் பிறகு, எடுத்துக்கொள்ளப்பட்ட சபையானது திரும்பி வருகிறது. அதற்குப் பிறகு…வெளிப்படுத்தின விசேஷம் அதைப் பற்றி கூறுகிறது. “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.” உங்களில் எத்தனைபேர் அதை வாசித்துள்ளீர்கள்? அநேக, அநேக முறைகள் வாசித்துள்ளோம். “ஆயிர வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.” இயேசு மணவாட்டியோடு, மணவாட்டியோடு திரும்பி வருகிறார்.
106191 யாவும் மூன்று என்ற எண்ணில் காணப்படுகின்றன என்று நான் கூறியதை நினைவில் கொள்ளுங்கள். அவருடைய வருகை மூன்று முறைகள்; முதல் தடவை அவர் தனது மணவாட்டியை மீடக வந்தார்; இரண்டாவது தடவை அவர் தன் மணவாட்டியை எடுத்துக் கொண்டு போக வருகிறார். அது ஒரு காதல் விவகாரத்தைப் போன்றேயுள்ளது, அவர்தானே இரகசியமாக வந்து அவளை இரவு நேரத்தில் திருடிக் கொண்டு, உலகைவிட்டு எடுத்துக் கொண்டு போய்விடுகிறார். “அவரை நாம் ஆகாயத்தில் சந்திப்போம்.” அது கர்த்தருடைய இரகசிய வருகையாயிருக்கிறது. இரண்டாவது தடவை அவர் வருவது, தன் மணவாட்டியை பெற்றுக் கொள்ளத்தான். முதலாவது தடவை, அவர் அவளை மீட்டுக்கொள்ள வந்தார். இரண்டாவது தடவை அவளைப் பெற்றுக்கொள்ள வருகிறார்; மூன்றாவது முறையோ இராஜாவும் இராணியும் வருகிறார்கள்!
107192 அவர் இங்கே தேசங்களின்மேல் நியாயத்தீர்ப்புக்கென திரும்பி வருகிறார். பவுல் “உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால் நீதிமன்றத்திற்கு போகத் துணிகிறதென்ன? அற்ப வழக்குகளை தீர்க்க நீங்கள் அபாத்திரரா? பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயத்தீர்ப்பார்களென்று அறியீர்களா?” என்று கூறினான். இங்கே நியாய்த்தீர்ப்பானது கிறிஸ்துவினிடமும், அவருடையவர்களிடமும் ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தான் விசாரனை கூண்டிலேற்றி விசாரிக்கிற வழிக்கறிஞர்கள் ஆவர். அவரே சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். இங்கே வழக்குறைஞராக மணவாட்டி இருக்கிறாள். 193 இங்கே இவைகள் வருகின்றன. புத்தகங்கள் திறக்கப்பட்டன், ஜீவ புத்தகம் என்ற மற்றொரு புத்தகமும் திறக்கப்பட்டது. 194 முதல் புத்தகம், புறம்பே தள்ளப்பட்ட பாவியைப் பற்றிய புத்தகமாகும். சரி. அவன் துவக்கத்திலேயே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டவனாய் இருக்கிறான். அவர்கள் தான்—அவர்கள் தான் வெள்ளாடுகள். அவனுக்கு ஒரு வாய்ப்பும் இல்லை; பாருங்கள், அவன் துவக்கத்திலேயே ஒரு பாவியாகத்தான் இருக்கிறான், சரி, எனவே இப்பொழுது அவன் புறம்பே தள்ளப்படுகிறான்.
108195 செம்மறியாடுகள், வெள்ளாடுகள் நியாயத்தீர்ப்பில் நிற்கின்றன. அவைகள் நியாயந்தீர்க்கப்பட வேண்டும்; பரிசுத்தவான்கள் அவர்களை நியாயத்தீர்க்க வேண்டும். தேவன் அநீதியுள்ளவரல்ல. ஒரு அஞ்ஞானி தூர தேசத்திலிருக்கையில், அங்குள்ள அஞ்ஞானிகளுக்கு செய்தியை கொண்டு செல்வதற்குப் பதிலாக நாம் இங்கே அமெரிக்காவில் எட்டு, பத்து மில்லியன் டாலர்கள் மதிப்பில் ஆலயங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறோம். தேவன் நம்மை அதற்காக பொறுப்பாளியாக்கப்போகிறார், ஆனால் அவர்களையோ தப்புவிக்கப்போகிறார். நிச்சயமாக! தேவன் அநீதியுள்ளவரல்ல. 196 இங்குள்ள நீங்கள்—நீங்கள் இதை இதற்கு முன்பு அறிந்திருக்காவிடில், நீங்கள்—நீங்கள் பொறுப்பாளியாக்கப்படாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் இப்பொழுது பொறுப்புள்ளவர்களாயிருக்கிறீர்கள்! உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் யாவ்ரும் பொறுப்புள்ளவர்களாயிருக்கிறீர்கள்…நாம் செய்தியைக் கொண்டு செல்ல பொறுப்புள்ளவர்களாயிருக்கிறோம், நீங்களோ அதற்கு நீங்கள் செவி கொடுப்பீர்களா, அல்லது இல்லையா என்பதற்கு பொறுப்புள்ளவர்களாயிருக்கிறீர்கள்.
109197 அஞ்ஞானிகள் எழும்புவார்கள், அந்த ஜனங்கள் அங்கே ஒரு கோவிலைக் கட்டி தொழுகிறார்கள். அவர்களுக்கு அதைவிட மேலாக ஒன்றும் தெரியாது. அவர்களுக்கு தேவனைப்பற்றி ஒன்றுமே தெரியாது. தேவன் அநீதியுள்ளவரல்ல. அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்காவிடில், அவர்களை தேவன் ஆக்கினைக்குள்ளாக்கமாட்டார். அவர்களுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும். 198 எனவே சபையில் ஒவ்வொரு சபைக் காலத்திலும், எபேசு சபைக் காலம் முதற்கொண்டு, இங்கே இந்த சபைக்காலம் வரையிலும், செய்தியானது, கிறிஸ்துவின் உண்மையான செய்தியானது, அது ஆதியில் இருந்ததைப் போலவே, (பரிசுத்த ஆவியின் அபிஷேகம், வல்லமை, உயிர்த்தெழுதல், அந்நிய பாஷைகளில் பேசுதல், அந்நிய பாஷைகளில் பேசுதலுக்கு வியாக்கியானமளித்தல், சுகமளிக்கும் வரங்கள், கர்த்தராகிய இயேசு நாமத்தினால் ஞானஸ்நானம், மற்றும் அவர் போதித்த அந்த எல்லாக் காரியங்களை,) பெற்றிருக்கும் மணவாட்டியில் உள்ள ஒவ்வொருவரும், வழக்குரைஞராக நிற்பார்கள்.
110199 இதோ இங்கே ஒருவருடைய வழக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. “இன்னின்ன இடத்தில் உனக்கு ஒரு கூட்டம் உண்டாயிருந்தது. நீ அவரிடம் கூறினாயா?” என்று கேட்கப்படுகிறது. 200 இப்பொழுது வழக்குரைஞர் கூறுகிறார்: “ஆம், நான் அவருக்குச் சொன்னேன்” என்று கூறப்படுகிறது. அது புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அதை நீங்கள் மறக்க முடியாது. நம்முடைய எண்ணங்கள் கூட அங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. புரிகிறதா? அதை நீங்கள் மறுதலிக்க முடியாது. “ஆம் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று நான் அவனுக்குக் கூறினேன்” என்று பதிலளிக்கிறார். “அங்கே ஜெஃபர்சன்வில்லில் உள்ள கூடாரத்தில் தானே?” “ஆம் ஐயா, நான்—நான் அதை அறிவேன்” என்று பதில் வருகிறது. 201 “ஆம், இங்கே இப்புத்தகத்தில், அவர்கள் அதைச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நீ கூறியவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் வேதவாக்கியங்களையெல்லாம் ஆராய்ந்து, அது சரிதான் என்பதை கண்டு கொண்டனர், ஆனாலும் அதைச் செய்யவில்லை.” 202 அப்பொழுது, “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள், உங்களை நான் அறியேன்” என்பார். புரிகிறதா? 203 அங்கேதான் அவர் வெள்ளாடுகளை செம்மறியாடுகளை விட்டு பிரிக்கிறார், நீங்கள் பாருங்கள், செம்மறியாடுகளை தனது வலது பக்கமாகவும், வெள்ளாடுகளை தனது இடது பக்கமாகவும் நிறுத்துகிறார். அங்கே நீங்கள் அந்த மூன்றுவிதமான பிரிவினரையும் மீண்டும் காணலாம்.
111204 ஆனால், மணவாட்டியாகிய இந்த வகுப்பினர் ஒரு போதும் அந்த வகுப்பினராக இருக்க முடியாது. நீங்கள் கவனியுங்கள், அப்பொழுது மணவாட்டியானவள், அவரோடு ஆலயத்தில் இருக்கிறாள். ஏனையோர், பாடுபட்டு, தங்களுடைய மகிமையை இராஜ்யத்தினுள் கொண்டு வருகிறார்கள். ஆனால் மணவாட்டியோ மணவாளனோடு தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறாள். மற்றவர்களுக்கோ, கீழே இங்கே உள்ள இவர்களைப் போல் ஒருபோதும் பங்கீட்டளிக்கப்படமாட்டாது, அவர்கள் பணிவிடை செய்வார்கள், அவர்கள் புறம்பே தள்ளப்படுவதில்லை, ஏனெனில் செம்மறியாடுகளாகிய அவர்களை அவர் வெள்ளாடுகளினின்றும் வேறு பிரித்தார். ஆனால் அவர்… 205 ஆனால் வெள்ளாட்டுக்கோ அதைப் பற்றிய அறிவு இல்லை; அதைப் பற்றி அது அக்கறை கொள்ளவில்லை. அவன் ஒரு வெள்ளாடாக இருந்தான், வெள்ளாடு என்ற நிலையைப் பற்றி திருப்தி கொண்டிருக்கிறான். எனவே ஒரு வெள்ளாடாக அவன் மரிக்கிறான். அதுவே அவன் முடிவாகும். அவ்வளவு தான், பாருங்கள். 206 ஆனால் செம்மறியாடோ, அவனுக்கு இருக்குமென்றால்…தேவன் அதை பிடித்துக் கொள்வாரானால், அதாவது நான் தேவனைப் பற்றி ஒன்றும் கேள்விப்பட்டிராத தேவனற்ற அந்த அஞ்ஞானிகளோடு நின்று கொண்டிருந்தேன். எனவே நீங்கள் அந்த மக்களுக்கு இந்த சுவிசேஷத்தை பிரசங்கித்தால்…
112207 நான் அங்கே நின்றாக வேண்டும். அண்மையில் தேவன் எனக்கு கொடுத்த அந்த மகத்தான மறுரூபப்படுத்தலில், நான் அந்த ஜனங்களோடு நிற்க வேண்டியிருந்தது. நான் அவர்களுக்காக பொறுப்புள்ளவனாக இருப்பேன் என்று கூறினது உங்களுக்கு நினைவிருக்கிறதா? இலட்சக்கணக்கான மக்கள் அங்கே நின்று கொண்டிருந்ததை நான் கண்டு, “அவர்கள் யாவரும் பிரான்ஹாம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களா?” என்று கேட்டேன். அப்பொழுது, “இல்லை, அவர்கள் உன் ஊழியத்தில் ஆதாயப்படுத்தப்பட்டவர்கள்” என்று பதில் வந்தது. அதன்பின்னர் நான் கூறினேன், நான்—நான், “நான் இயேசுவைக் காண வேண்டும்” என்று கூறினேன். அப்பொழுது அவர், “அதற்கு இன்னும் சமயம் வரவில்லை. அவர் வருவதற்கு முன்னர் ஒரு சமயம் உண்டாயிருக்கும். ஆனால் அவர் முதலில் உன்னிடம் வருவார், அப்பொழுது நீ பிரசங்கித்த வார்த்தையின்படியே நியாயந்தீர்க்கப்படுவாய். அவர்கள் அதன் பேரில்தான் இளைப்பாறிக்கொண்டு இருக்கிறார்கள்” என்று கூறினார். அப்பொழுது நான், “எல்லோரும் அங்கே நின்றாக வேண்டுமா? பவுலுங்கூ அங்கே நின்றாக வேண்டுமா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர், “ஆம், பவுல் தான் யாருக்கு பிரசங்கித்தானோ அவர்களோடுங்கூட அவன் நின்றாக வேண்டும்” என்று கூறினார். அப்பொழுது நான், “பவுல் பிரசங்கித்த அதே செய்தியைத் தான் நானும் பிரசங்கித்தேன்” என்றேன். 208 அப்பொழுது இலட்சக்கணக்கானோர் தங்களுடைய கரங்களையுயர்த்தி, “அதன் பேரில்தான் நாங்களும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்” என்றார்கள். அங்குதான் காரியமே உள்ளது, நீங்கள் பாருங்கள்! ஆம், மேலும், “பின்பு நாம் யாவரும் ஒன்று சேர்ந்து புசிக்கவும் குடிக்கவும் கூடியதான ஒரு சரீரத்தை அடைய பூமிக்குத் திரும்பிப் போவோம். பின்பு, முடிவில்லாத காலங்களாக ஒன்று சேர்ந்து வாழ்வோம்” என்று கூறப்பட்டது. அதுவே கர்த்தருடைய வருகையாயிருக்கிறது. அது சரிதான். 209 இப்பொழுது, இன்னும் ஒரு நிமிடம். இப்பொழுது…இன்னும் கொஞ்சம் நேரத்தில் முடித்தாக வேண்டும். ஏனெனில் கிட்டத்தட்ட நேரமாகி விட்டது. நம்முடைய சகோதரன் ஞானஸ்நான ஆராதனைக்கோ அல்லது அவர் உபயோகிப்பதற்காக வேறெந்த காரியத்திற்குமான நேரமாக இது இருக்கிறது.
113210 சரி, இப்பொழுது, இந்த சபையின் காலத்தில், ஓ, இங்கே மிகவும் அழகான காரியம் ஒன்றிருக்கிறது. நான் இதை மிகவும் விரும்புகிறேன். இச்சபைக் காலங்களில் ஏறத்தாழ ஒன்றையொன்று ஒத்ததுபோல் கிரியை செய்துவந்த இரு வித்தியாசமான ஆவிகள் இங்கே இந்தக் காலம் வரையிலும் இருந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று ஸ்தாபனம், மற்றொன்று பரிசுத்த ஆவியாகும். இயேசு, “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அது மிகவும் நெருக்கமாக காணப்படும்” என்று கூறினார். இவ்விரண்டு ஆவிகளும் எதிர்வரும் நியாயத்தீர்ப்புக்கென தமது ஜனங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன. சாத்தான் தன் ஜனங்களுக்கு, கிறிஸ்துவைக் காட்டிலும் கூடுதலான ஜனங்களை உடையவனாக இருப்பான் என்று வாக்களித்தான். அவன் அதைப் பெற்றிருக்கிறான்; இப்பொழுது இதை உண்மையாகவே, மிகவும் கவனமாகக் கவனித்துப் பாருங்கள். மக்களை அடையாளப்படுத்தும்படி, அது உண்மையானதைவிட அதிகமாக இருக்கிறது.
114211 அநேகர் ஏவாளைப் போல் இருக்கிறார்கள். வஞ்சிக்கப்படத்தக்கதாக ஏவாள் நீண்ட நேரம் நின்று விட்டாள். அவள் அவ்வாறு நின்றிருக்காவிடில், வஞ்சிக்கப்படுதலே இருந்திருக்காது. ஆனால் ஏவாளோ நின்றுவிட்டாள். அவள் அவ்வாறு நின்றுவிட்ட போது, அங்கேதான் அவள் வஞ்சிக்கப்பட்டாள். தொடர்ந்து நிலைநிற்பதற்குப் பதிலாக…இப்பொழுது நான் கூறுவதை நீங்கள்—நீங்கள் கவனமாகக் கேட்கிறீர்களா? கவனியுங்கள்! ஏவாள் வஞ்சிக்கப்பட்டதன் காரணம் என்னவெனில்… நீங்கள் அதை நிச்சயமாகவே புரிந்து கொண்டீர்கள் என்று நான் அறிந்து கொள்ளும்படியாக அதை நாம் சேர்ந்து சொல்லுவோமாக. [சகோதரன் பிரான்ஹாமும் சபையாரும் சேர்ந்து இவ்வாறு கூறுகிறார்கள்.—ஆசி.] “ஏவாள் வஞ்சிக்கப்பட்டதன் காரணம் என்னவெனில் அவள் ஒரு போதும் முழுமையாக தேவனுடைய வார்த்தையை கைக்கொள்ளவில்லை.” சாத்தான் தேவனுடைய வார்த்தையை அவளிடம் மேற்கோள் காட்டினான். ஆனால் அவன் எல்லா சத்தியத்தையும் அவளிடம் கூறவில்லை. அவனுடைய ஸ்தாபனமும் அவ்வாறுதான் செய்து வருகிறது. பார்த்தீர்களா? ஆனால் அவள் வார்த்தையின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளத்தக்கதாக அந்த அதிக அளவு நேரம் அங்கே நின்றுவிட்டாள். அவள் வார்த்தையை முழுமையாக எடுத்துக் கொள்ளவில்லை.
115212 நித்திரை செய்யும் புத்தியில்லாத கன்னியரைப் பொறுத்தமட்டிலும், காரியமானது இவ்வாறு தான் உள்ளது. அவர்கள் வார்த்தையை முழுமையாக எடுத்துக் கொள்ளாமல், ஒரு பகுதியை மட்டுமே எடுத்துக் கொள்ளத்தக்கதாக, நீண்ட நேரம் தங்கிவிட்டார்கள். வஞ்சிக்கப்பட்ட சபையானது, வார்த்தையின் முழுமையையும் ஏற்றுக் கொள்ளாமல், வார்த்தையின் பாகத்தை மட்டும் எடுத்துக் கொள்ளத்தக்கதாகத்தான் நீண்ட நேரம் தங்கிவிட்டார்கள். அவர்கள் அதைக் குறித்து உண்மையும், உத்தமுமாயிருந்தனர். ஏவாள் வஞ்சிக்கப்பட்டாள்! வேதம், “அவள் வஞ்சிக்கப்பட்டாள்” என்று உரைத்துள்ளது. 213 ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை. ஆதாம் தான் தவறு செய்வதை நன்கு அறிந்தேயிருந்தான். ஆனால் அவன் மனைவியோ, தான் செய்கிறதை செய்துவிட்ட, விலக்கப்பட்ட அதைச் செய்யுமாறு அவனையும் தூண்டினாள். ஏன், அவன் ஒரு மனிதனாயிருந்தான். அவனுக்கு அது அவ்வாறு இருந்தது. அதாவது அவள்…நீங்கள் புரிந்து கொள்ளுங்கள், பாருங்கள். அவன் தான் தவறிழைப்பதை அறிந்திருந்தான். ஆனால் ஏவாள், தான் சரியானைதைச் செய்து கொண்டிருந்தாக எண்ணினாள்.
116214 ஓ, உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? எனவே தான் பவுல், ஒரு ஸ்திரீயானவள் ஒருபொழுதும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கக் கூடாது என்று கூறினான். உ—ஊ. ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டாள். “உபதேசம் பண்ணவும், அதிகாரம் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. அவள் அமைதலாயிருக்க வேண்டும்.” புரிகிறதா? “என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும் ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை. ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.” “அப்படியிருந்தும், அவள் இழந்து போகப்பட மாட்டாள், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும், அன்பிலும், பரிசுத்தத்திலும் நிலை கொண்டிருந்தால், பிள்ளைப் பேற்றினாலே (அவளுக்கு ஒரு கணவன் இருந்தால்) இரட்சிக்கப்படுவாள்” என்றே கூறினான். “ஆனால் ஒருபொழுதும் ஸ்திரீயானவளை உபதேசம் பண்ணவோ, அதிகாரம் செலுத்தவோ அனுமதிக்காதீர்கள். அப்படிச் செய்யக் கூடாது” என்று பவுல் கூறினான். புரிகிறதா? “கர்த்தருடைய சிந்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்று நான் எண்ணுகிறேன்” என்று அவன் கூறினான்.
117215 “ஏன், தீர்க்கதரிசிகள், அங்கே, நாங்கள் பிரசங்கித்தாக வேண்டும் என்று தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்களே” என்று அவர்கள் கூறினர். 216 அவன், “என்ன? தேவ வசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது? ஒருவன் தன்னைத் தீர்க்கதரியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன்” என்று பவுல் கூறினான். புரிகிறதா? அது உண்மை. அவன் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். 217 ஆனால் “ஒருவன் அறியாதவனாயிருந்தால் அறியாதவனாயிருக்கட்டும் அவ்வளவு தான். அவன்—அவன் செவிகொடுக்க மனமில்லாதவனாயின், அவனைப் போகவிடுங்கள். அவன் சரியாக அந்த அருவி அரித்த படுகுழியில் போய் விழுவதற்குப் போய்க் கொண்டிருக்கிறான், பாருங்கள் அவன் அதற்கு நேராகப் போகட்டும்” என்றான். ஆனால் அங்கே, அந்த இரண்டு ஆவிகள் உள்ளன.
118218 காரணம். காவல் துறை படையில் அவர்கள் பெண்களை சேர்த்து வீதிகளில் நிறுத்தி வைத்திருக்கிறார்களே, அதைப்போல். அந்த தாய்மார்களை வீதிகளிலே அவ்வாறு நிறுத்தியிருப்பது அமெரிக்க கொடிக்கே மிகுந்த இழுக்காகும். ஆயிரக்கணக்கான புருஷர்களுக்கோ வேலையில்லாமல் இருக்கிறது. ஏன், இது ஒரு ஸ்திரீயின் தேசமாயிருக்கிறது. இது ஒரு ஸ்திரீயினுடைய ஸ்தலமாயுள்ளது, ஒரு பெண்ணானவள் ஆதிக்கத்துக்கு வருவாள். அது ஸ்திரீயை வழிபடும் தேசம். அது கத்தோலிக்க மதத்தின் கோட்பாடு பற்றியதின் ஆவியாயிருந்தது. ஒரு ஸ்திரீயை கடவுளாக வழிபட வைத்துள்ளது. இங்கே அது…அது அங்கே அமர்ந்திருந்து கொண்டிருக்கிறது. அது உருவாகி வருவதை நீங்கள் காணவில்லையா? 219 ஒரு மனைவியை, உண்மையான, மனைவியைக் காட்டிலும் இனிமையான வேறெதையும் ஒரு மனிதனுக்கு தேவன் அளித்திருக்க முடியாது. ஆனால் அவளோ அதை தாண்டி எதையும் பெற்றுக் கொள்ளும்போது, அவள்—அவள் இழக்கப்படுகிறாள். அது முற்றிலும் உண்மையே. தேவன் ஒரு போதும் பெண்கள் இந்த மாதிரி இடங்களில் வேலை செய்யவும், இம்மாதிரியான காரியங்களைச் செய்யவும் நோக்கங்கொள்ளவில்லை. இந்த பெண்மணிகள் பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்க்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் யாவரும், ஒவ்வொருவரும் சிறு சிறு பிரசங்கிகள் ஆவார்கள். ஆனால் அவர்களுக்கென சொந்தமாக மேய்க்கத்தக்க மந்தையானது அவர்கள் வீடுகள் தோறும் உள்ளன. அதுதான் அவர்களின் பிள்ளைகளை வளர்த்தலாகும். சரி.
119220 இப்பொழுது, இரு ஆவிகள், ஏறத்தாழ் ஒத்திருக்குமாப்போல் உள்ளன. ஏவாள் வார்த்தையை ஒத்திருந்த சாத்தான் சொன்னவைகளை நம்பினாள். சாத்தான், அவன், “தேவன் கூறியுள்ளார்…” “ஊ ஊ” “தேவன் கூறியுள்ளார்” “ஊ ஊ, அது சரிதான்” “தேவன் கூறியுள்ளார்” “ஊ ஊ” 221 “தேவன் கூறியுள்ளார். ஆனால், ஓ, நாம், ‘பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்’ நாமத்தினல் ஞானஸ்நானம் பெற்றால், நிச்சயமாக தேவன் நம்மை ஆக்கினைக்குள்ளாக்கமாட்டார். அப்படி ஞானஸ்நானம் பெறுதல் நன்றாக இருக்கவில்லையா?” என்று கூறுகிறார்கள். நீங்கள் அசுத்தமான மாய்மாலக்காராயிற்றே! ஆம், ஐயா. தேவன் ஒருபோதும் அதைக் கூறவில்லையே! 222 எந்த வகையிலும், அவ்வகையான ஒரு காரியம் இல்லை. அது மரித்ததாய் இருக்கிறது. அவ்விதமான காரியம் ஒன்றும் இல்லை! “பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம்” என்று ஒரு நாமம் எங்கேயிருக்கிறது என்பதை எனக்கு கூறுங்கள் பார்க்கலாம். அவ்விதமான ஒரு நாமம் இல்லவேயில்லை. அப்படிப்பட்டது மரித்ததாயிருக்கிறது! அது எங்கேயிருந்து வந்தது? அது “மரித்துப்போன” சர்தை சபையின் காலத்தில் தோன்றினது. அப்படிப்பட்டதொன்று இல்லை! “உயிரோடிருக்கிறவன் என்ற பெயர் உனக்கு இருக்கிறது. நீ ஒரு ‘கிறிஸ்தவ சபை’ என்று உன்னை அழைத்துக் கொள்கிறாய். ஆயினும் நீ மரித்ததாகத்தான் இருக்கிறாய்!”, அது உண்மை. “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” யின் நாமம் என்ற நாமம் ஒன்று இல்லை.
120“ஓ நல்லது, அது மற்றதைப் போலவே நன்றாக இல்லையா?” என்கிறார்கள். 223 அது நல்லதாக இருக்காது. பவுல் அது சரியாக இருக்காது என்று கூறினான். “நீங்கள் விசுவாசிகளானதிலிருந்து, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். “அப்படிப்பட்டதொன்று உண்டென்று நாங்கள் கேள்விப்படவேயில்லை” என்றார்கள். 224 “அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான். “வாருங்கள், வந்து மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று பவுல் கூறினான். “இதைத் தவிர வேறு எதையும் வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனே வந்து போதித்தாலும், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்!” என்று பவுல் கூறியுள்ளான். 225 அதுவே சத்தியமாயிருக்கிறாது! இதை நான் கூறுவதற்கு மட்டுமே பொறுப்புள்ளவனாயிருக்கிறேன். அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இந்த ஒலி நாடாக்களின் வாயிலாக நான் உங்களுக்கு மட்டும் கூக்குரலிடவில்லை; பாருங்கள், ஏனெனில், அவைகள் (எவ்விடமும்) போவதை நான் அறிந்திருக்கிறேன். அதற்காகத்தான் அவைகள் உள்ளன. சரி. இது…
121226 ஏவாள் வஞ்சிக்கப்பட்டாள். அவள் வார்த்தையின் ஒரு பாகத்தையே கண்டாள். மோவாப் வஞ்சிக்கப்பட்டது. நித்திரை செய்த புத்தியில்லாத கன்னியர் வஞ்சிக்கப்பட்டனர். சபையானது வஞ்சிக்கப்பட்டது. ஸ்தாபனங்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கின்றன. புரிகிறதா? 227 வார்த்தையோடு நிலைத்திருங்கள்! அது ஒன்றே வழி. அதோடு சரியாக நிலைத்திருங்கள். வார்த்தையின் எந்தவொரு பாகத்தைவிட்டும் அகன்றுவிடாதீர்கள். அதோடு நிலைத்திருங்கள். தேவன் என்ன செய்ய வேண்டுமென்று கூறினாரோ, அதில் சரியாகச் செல்லுங்கள். யார் என்ன சொன்னபோதிலும், அதைப்பற்றி கவலைப்படாமல், தேவன் வகுத்துள்ள கோட்டில் நில்லுங்கள்.
122228 நித்திரை செய்த புத்தியில்லாத கன்னியர் தங்களுடைய ஸ்தானத்தை இழந்தனர், அதை நாம் அறிவோம். அவள் நியாயத்தீர்ப்பில் எழும்பி வருவாள். அவள் சத்தியத்தை எப்பொழுதாவது கேட்டிருந்தால், அவள் ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறாள். அது சரிதான். இயேசுவை எங்கே நீங்கள் விட்டுவிட்டீர்களோ, அவ்விடத்தைத் தவிர வேறு எங்கும் அவரைக் காண முடியாது. 229 யூதாஸ் எழும்பி வரக்கூடும்…நினைவில் கொள்ளுங்கள். “‘நித்திரை செய்த புத்தியில்லாத கன்னியர்’, ‘அவர்கள் பிசாசினால் ஊக்குவிக்கப்பட்டிருக்கக் கூடுமோ?’” என நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக அப்படித்தான்!. “இன்னமும் பரிசுத்தமாக வாழ்கிறார்களா?” என்று கேட்கலாம். ஆம் ஐயா, யூதாஸும் அவ்வாறே வாழ்ந்தான். அவன் இரட்சிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டு, தெய்வீக சுகமளித்தலை பிரசங்கித்து, பிசாசுகளைத் துரத்தினவனாக இருந்தான். ஏனையோர் இருந்ததைப் போலவே அவனும் ஏறத்தாழ அவ்வாறே காணப்பட்டான். ஆனால் பெந்தெகொஸ்தே வந்தபொழுதோ, அவன் தன்னுடைய சுய ரூபத்தை காண்பித்தான். அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவேயில்லை. அவன் துணிந்து நின்று கர்த்தராகிய இயேசுவை மறுதலித்தான். சபைகளும் சரியாக அதையே செய்தன. பெந்தெகோஸ்தே ஆசீர்வாதத்தைப் பெறும் வேளை வந்த போது, அவர்கள் அதிலிருந்து விலகிப் போனார்கள். ஓ, சபையோரே, இதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
123230 ஓ, இப்பொழுது இன்றிரவில் அந்த மகத்தான தலைக்கல், ஆனால் இன்னும் ஒரு நிமிடம், இங்கே நமக்கு இன்னும் சற்று நேரம் உள்ளது என்று நான் எண்ணுகிறேன், வேறு ஒரு காரியத்தையும் நான் எடுத்துக் கூற விரும்புகிறேன். நான் மிருகத்தின் முத்திரையை உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். மிருகத்தின் முத்திரை, நாம் வெளிப்படுத்தின விசேஷம் 13-ம் அதிகாரத்தை ஒரு நிமிடம் எடுத்துக் கொள்வோம். வெளிப்படுத்தின விசேஷம் 13:15, அவன் என்ன செய்யப்போகிறான் என்பதை அங்கே வாசியுங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 13:15… சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது …(இப்பொழுது, அது என்னவெனில், “ப்ராடெஸ்டென்ட், சபைகளுக்கு, ப்ராடெஸ்டென்ட் சபைகளுக்குக் கொடுக்கப்பட்டது.”) 231 அவனுக்கு வல்லமை இருந்தது. ஏனெனில் அவர்கள் ஒரு சொரூபத்தை உண்டாக்கினார்கள். ப்ராடெஸ்டென்ட் சபைகள் உண்டாக்கின. சபைகளின் ஆலோசனை சங்கம் மூலமாக, ப்ராடெஸ்டென்ட் ஐக்கியம் யாவும் இணைக்கப்படுவதற்கான ஒரு ஸ்தானத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. உலகிலுள்ள சபைகள் யாவுக்குமான ஒருங்கிணைப்பான அந்த மகத்தான கட்டிடத்தைப் பற்றி எத்தனை பேர்கள் படித்து அறிந்திருக்கிறீர்கள்? நிச்சயமாக. பாருங்கள்? ஐக்கிய நாடுகள் சபையைப் போலவே அதுவும் அங்கே எழும்பியுள்ளது. அவர்கள் யாவரும், அவர்கள் ஒவ்வொருவரும், அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபையினரும் கூட, அங்கே இணைந்துவிட்டனர். அவர்கள் அங்கே கூடிவிட்டார்கள். அவர்கள் இங்கே இருக்கிறார்கள், பாருங்கள். “நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது” என்று சொல்லப்பட்டதின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது. மீண்டும் அதே காரியத்தை (நிச்சயமாகவே) செய்கிறார்கள். ஏறத்தாழ தங்களுடைய சுவிசேஷ ஊழிய நிலையையே மறுதலிக்கிறவர்களாயிருக்கிறார்கள். அங்குதான் காரியமே உள்ளது, இஸ்ரவேலர் ஏனைய ஜாதிகளுக்கு இராஜாக்கள் இருந்ததைப் பார்த்து, “எங்களுக்கு ஒரு இராஜாவை ஏற்படுத்தும்” என்று கேட்டது போல், உலகத்தாரைப் போல் ஆக விரும்பி, தாங்கள் பெரிதாக ஆக வேண்டும் என்று விரும்புகின்றனர் பாருங்கள்?
124மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலை செய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது. 232 மிருகத்தினுடைய சொரூபம் : அதாவது “ப்ராடெஸ்டெண்ட் ஸ்தாபனங்கள்” கத்தோலிக்கம் அல்ல. இது அமெரிக்காவில் உள்ளது, இதைத்தான் அவர் குறிப்பிடுகிறார். நீங்கள் பாருங்கள். ஏனெனில், வெளிப்படுத்தின விசேஷம் 13-ம் அதிகாரம் அமெரிக்காவைப் பற்றினதாகும். பூமியிலிருந்து எழும்பி வருகிற மிருகம்…பாருங்கள். ஏனைய மிருகங்கள் யாவும் தண்ணீரிலிருந்து எழும்பி வருகின்றன. அதன் அர்த்தம் என்னவெனில், “திரள் கூட்டமான ஜனங்கள்” என்பதாகும். ஆனால் இங்கேயுள்ள இந்த மிருகமோ, ஒரு ஆட்டுக்குட்டியைபோல் ஜனங்களே இல்லாத பூமியிலிருந்து எழும்பி வருகிறது; அதற்கு இரு கொம்புகள் உண்டாயிருக்கிறது, அது ஒரு வலு சர்ப்பத்தைப் போல் பேசினது. அவர்கள் அம்மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டு பண்ணினார்கள், அது ஐரோப்பாவில் உண்டாயிருந்தது. அதற்கு இங்கே ஒரு சொரூபத்தை உண்டு பண்ணினார்கள். சபைகள் யாவையும் ஒன்றாக இணைத்து, அவ்வாறு இந்த ப்ராடெஸ்டென்ட் ஐக்கியத்தை உருவாக்கி, பின்பு, ஏனைய அனைத்து சபைகளையும் நிர்ப்பந்தித்து ஒன்று சேரச் செய்வார்கள். அப்படி சேராவிட்டால், மிருகத்தின் சொரூபத்தை அவர்கள் பெற்றிருக்காமல், விற்கவோ, வாங்கவோ முடியாதபடி செய்துவிடுவார்கள்.
125233 இங்கே என்ன சம்பவிக்கிறது என்பதைக் கவனியுங்கள்: அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங்கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும்: அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது, அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. (இது யார் என்று நாம் அறிவோம்; அது தான் ரோமச் சபையின் பரம்பரை குருக்களாட்சியின் போப் ஆகும்.) 234 நான் அங்கே போயிருந்த பொழுது நானே அவருடைய ஸ்தலத்தில், (அவருடைய சிம்மாசனத்தை அது இருக்கிற வண்ணமாக) கண்டேன். இங்கே கத்தோலிக்க காலத்தின் துவக்கத்தில், III-ம் போனிபேஸ்-ஐ முதல் போப்பாக அவர்கள் ஏற்படுத்தி அமர வைத்தபோது இருந்தபடியே அச்சிம்மாசனம் அங்கே உள்ளது. அதன்மேல், அங்கே வைகாரியஸ் ஃபிலியை டியை ( Vicarius Filii Dei ) என்று எழுதப்பட்டிருந்தது. அதன் அர்த்தம் என்னவெனில், “தேவ குமாரனுடைய பிரதிகுரு” டி-ஐ, டி-ஐ , “தெய்வத்துவம்” பாருங்கள். பாருங்கள், “தேவ குமாரனுடைய பிரதிகுரு” வேறு வார்த்தைகளில் கூறினால், “தேவ குமாரனைப் போல் பூமியில் வீற்றிருக்கிறார்” என்பதாகும், பாருங்கள், “வேதாகமத்தைக் கூட மாற்ற சர்வ வல்லமை படைத்தவர்” விரும்பும் எதையும் மாற்றிவிட அதிகாரம் படைத்தவர். எனவே, “மரியே வாழ்க” என்று போய் கூறும்படி கூறுவாரானால், “நமக்கு ‘மரியே வாழ்க’ என்று ஏற்படுத்திக் கொள்வோம்.” அத்துடன் அது முடிவுபெறுகிறது. ஊ—ஊ. “நாம் இன்னின்னதைச் செய்வோம்” என்று போப் சொன்னால், அதுதான், அவ்வளவுதான் என்கிறார்கள். “தேவனுடைய குமாரனுக்கு பதிலாக அவருடைய ஸ்தானத்தை வகிக்கிற பிரதிகுரு” என்று கூறுகிறார்கள். 235 சமீபத்தில் அவர்கள் ஒரு புதிய கொள்கையை வெளியிட்டார்கள்; அதாவது “மரியாள் அடக்கம் பண்ணப்படவில்லை,” என்பதை உடையவர்களாயிருந்தனர். (மரியாளுடைய கல்லறை இன்னமும் அவர்களிடத்தில் இருக்கத்தான் செய்கிறது; அவளை எங்கே அடக்கம் செய்தார்களோ, அவ்விடத்தை அடையாளம் பண்ணி வைத்திருக்கிறார்கள்.) “இல்லை, அவள் மீண்டும் உயிர்த்தெழுந்துவிட்டாள்” என்று போப் சொல்லிவிட்டதால், “அது உண்மையே!” அது அவ்வாறுதான் என்கிறார்கள். பாருங்கள். ஏனெனில், போப் “பிழையற்றவராக” இருக்கிறார், பாருங்கள், அவர் “தேவனுடைய குமாரனின் பிரதிகுருவாக” உள்ளார், அவர் சொல்வது சரிதான் என்று நம்புகின்றனர்.
126236 “இப்பொழுது எவராது, இந்த மிருகமானது யாரைக் குறிக்கிறது, இந்த வல்லமை எங்கிருந்து வருகிறது என்பதை அறிய விரும்பினால்” வேதம், “ஞானமுள்ளவன் எண்களை கணக்குப் பார்க்கக்கடவன்” என்று கூறியுள்ளது. பரிசுத்த ஆவியின் வரங்களில் ஒன்று ஞானமாகும். பாருங்கள்? “ஞானமுள்ளவன் மனுஷனுடைய இலக்கத்தை கணக்குப் பார்க்கக்கடவன்” என்று கூறப்பட்டுள்ளது. மிருகமானவனின் இலக்கமானது அறுநூற்று அறுபத்தாறு ஆகும். நீங்கள் அந்த பெயரை எடுத்துக் கொண்டு, அதை அகரவரிசையில் ஒவ்வொரு எழுத்தாக எடுத்து, அதாவது V—I—C—O என்று அவைகளுக்குச் சரியான ரோம இலக்கத்தை எடுத்துப் பார்த்தால், அதைக் கூட்டுகையில் அறுநூற்று அறுபத்தாறுதான் வருகிறது. அது சரிதான்.
127237 “நாம் அந்த மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்குவோம்” என்பார்கள். இந்த தேசத்தில் அவர்கள் ஒரு சொரூபத்தை உண்டாக்கினார்கள். அதுதான், ஸ்தாபனங்களின் ஒருமித்து கூட்டு சேர்ந்த சபையின் கூட்டமைப்பாகும். நிக்கொலாய் மதஸ்தினர் ஒன்று சேர்ந்து, தங்களை ஸ்தாபனமாக ஆக்கிக் கொண்டுவிட்டார்கள். முடிவிலே அவர்கள் இந்த சகோதரத்துவ ஐக்கியத்தை இணைத்து, கத்தோலிக்கராக ஆகாமல், ஆனால் சகோதர ஐக்கியத்தில் ஒன்றிணைந்து, கம்யூனிசத்தை ஒழித்துக்கட்ட முயலுவார்கள். 238 வேதம் கூறுகிறபடி, தேவனுடைய ஜனங்களுக்கு அவர்களுக்கு இழைத்த கொடுமைகளுக்காக அவர்களைப் பழிவாங்கவே கம்யூனிசத்தை தேவன் எழுப்பினார். அது முற்றிலும் சரியாக இருக்கிறது. அவர், “அவர்கள்—அவர்கள்—அவர்கள் சிந்திய இரத்தத்தினிமித்தம் பழிவாங்க அவர்கள் ஒரு மணி நேரமளவும் அந்த மிருகத்திற்கு அதிகாரம் அளித்தனர்” என்றார். அந்த வாட்டிகன் நகரை அணுகுண்டோ அல்லது மற்ற எதுவுமோ தாக்குகையில், ரோம குருக்களாட்சி இனி இல்லாமற் போய்விடும். “உலகில் கொல்லப்பட்ட ஒவ்வொரு இரத்த சாட்சியின் இரத்தமும் அவளில் காணப்பட்டது” என்று வேதம் உரைத்துள்ளது. அவள் அங்கே இருக்கிறாள். இங்கே அதற்குரிய சொரூபம் உள்ளது. அதுவே, சபைகளின் கூட்டமைப்பு ஆகும். 239 கதவுகளை நாம் அடைத்து விடுவதற்காக வேளையானது அதிக தூரத்தில் இல்லை, அது உண்மை, அல்லது ஸ்தாபனத்தின் அடையாளத்தை எடுத்துக்கொள்ள வேண்டியதாகிவிடும். நாம் வாசல்களை அடைத்துவிடுவோம். அது சரிதான். அதைவிட நாம் நன்கு அறிவோம்.
128240 இப்பொழுது, இன்னும் அடுத்த சில நிமிடங்களில் நாம் இங்கிருந்து கடந்து செல்லும் முன்னர், நெருக்கடியின் கடைசிப் பாகத்தைக் கவனிக்க நான் விரும்புகிறேன். இப்பொழுது, தேவனுடைய முத்திரையானது பரிசுத்த ஆவியாகும். நீங்கள் யாவரும் அதை அறிவீர்களல்லவா? சரி, பரிசுத்த ஆவியே தேவனுடைய முத்திரை என்று நாம் யாவரும் அறிவோம். இப்பொழுது அதைக் கண்டறிய…வெளிப்படுத்தின விசேஷம் 9-ம் அதிகாரம் 1 முதல் 4 முடிய உள்ள வசனங்களை நீங்கள் எடுத்துக் கொண்டால், அவர்கள் யாவருடைய நெற்றிகளிலும் முத்திரையைப் பெற்றிருந்தார்கள் என்பதை நீங்கள் கண்டறியலாம். I கொரிந்தியர் 1:22-ல் பவுல், “அவர் பரிசுத்த ஆவியினால் நம்மை…மீட்கப்படும் நாள் வரை…முத்தரித்துள்ளார்” என்றான். எபேசியர் 4:30-ல் பவுல், “பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்” என்று கூறியுள்ளான். அந்த தூதனானவர் வந்து அவ்வாறு அவர்களுடைய நெற்றியில் முத்திரையிடுகிறார். அவர் வந்து உங்கள் நெற்றிகளில் ஒரு பொட்டு போன்ற ஒன்றை இடுவார் என்ற அர்த்தமல்ல. உங்களுடைய நெற்றி உங்களுக்குக் கிடைக்கும் வெளிப்படுத்துதலாகும், பாருங்கள். உங்களுடைய கரமானது, அதைக் குறித்து நீங்கள் கிரியை செய்வதைக் குறிக்கிறது. பாருங்கள், அது ஒரு ஆவிக்குரிய அடையாளமாகும். புரிகிறதா? அவர் ஒரு பெரிய முத்திரையை எடுத்து அவ்வாறு உங்களைக் குத்துகிறதில்லை. ஓ, இல்லை.
129241 சில ஆண்டுகளுக்கு முன்பாக என்.ஆர்.ஏ. என்றவொரு நிறுவனம் ஏற்பட்டபோது, இதுதான், அதுதான்… அந்த காரியம் என்று அவர்கள் கூறினர்… அதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். அது ஏற்கனவே வந்துவிட்டது. நீண்ட காலத்திற்கு முன்னரே அது ஆரம்பித்துவிட்டதாக வேதம் கூறியுள்ளது. புரிகிறதா? அது உண்மை. 242 ஆனால் அவர் முத்திரையிடப்பட்டவர்களை அடையாளமிட்டார். பாருங்கள்? முதலாம் முத்திரையானது எவ்வாறு—எவ்வாறு காணப்பட்டது, அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தனர். அவர்களது கிரியைகள் கிறிஸ்துவின் கிரியைகளாயிருந்தன. அவர்கள் வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைத்தார்கள், அவர்கள் குணமடைந்தனர். அவர்கள் எல்லாவிதமான அற்புத அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்தனர். அவர்களுடைய நெற்றிகளில், அவர் தேவனுடைய குமாரன் என்ற வெளிப்பாடு முத்திரையாக இடப்பட்டிருந்தது. அவர்கள்—அவர்கள் அவரோடு கிரியை செய்து கொண்டிருந்தனர். (கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மை) அதுவே அதற்குரிய அடையாளமாயிருக்கிறது.
130243 நீங்கள், “அவர் மூன்றாம், அல்லது இரண்டாவது ஆள்” என்று கூறலாம். உங்களுக்கு இன்னும் முத்திரை கிடைக்கவில்லை. எனவே அதை விட்டுவிடுங்கள். பாருங்கள், வேதாகமத்தில் அவ்விதமான ஒன்று இல்லையாதலால், அதின் தாள்களில் இருந்து நீங்கள் முடிவடைந்து போய்விட்டீர்கள். “நாங்கள் ஆசீர்வதிக்கிறோம்…நாங்கள் பரிசுத்த திரித்துவத்தில் விசுவாசங்கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது காகிதத்திலேயே இல்லை, பாருங்கள். ஏனெனில் வேதத்தில் திரித்துவம் என்று ஒன்று குறிப்பிடப்படவே இல்லை. வேதத்தில் திரித்துவம் என்ற வார்த்தையை கண்டு பிடித்துக் கொண்டு வாருங்கள். பார்க்கலாம்.
131244 [ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.] …குமாரனுக்குள் குமாரத்துவம் என்று அழைக்கப்படுகிறது. அவர் இப்பொழுது பரிசுத்த ஆவியாக உங்களில் வாசம் பண்ணுகிறார்; அதுவே பரிசுத்த ஆவியின் அபிஷேகமாய் உள்ளது. அதே தேவன் தான் அவர். பரிசுத்த ஆவியானவரே இயேசு கிறிஸ்துவின் பிதாவாக இருந்தார். “இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் என்னைக் காணாது” என்று இயேசு கூறினார். “நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், மறுபடியும் தேவனிடத்திற்கு திரும்பிப் போகிறேன் (மீண்டும் பரிசுத்த ஆவியானவராக.) நான் உங்களோடு இருப்பேன், உங்களில் (முடிவு வரைக்கிலும்) முடிவு காலம் வரையிலும் இருப்பேன். காலம் முழுவதிலும், முடிவு பரியந்தமும், உங்களுக்குள் இருப்பேன் என்றார். நான் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். நான் செய்த கிரியைகள் யாவும் எல்லா காலங்களிலும் விளங்கும், அதுவே விசுவாசிக்குரிய அடையாளமாக காலமெல்லாம் இருக்கும். நீங்கள் போய் பிரசங்கித்தது, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள், அப்பொழுது அவர்கள் என்னுடைய ஆவியினால் நிரப்பபட்டிருப்பார்கள். அவர்கள் விசுவாசிகளாயிருப்பார்களானால், உலகத்தின் முடிவு பரியந்தமும் இந்த அடையாளங்கள் அவர்களைப் பின் தொடரும். நான் உலகத்தின் முடிவுபரியந்தமும் உங்களோடு இருப்பேன்” என்றார். அவர் மகிமையில் ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார். ஒரு நாளில் அவர் திரும்ப வருவார் என்று நாமெல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதுவே தேவனுடைய முத்திரையாக உள்ளது, நாம் அதை அறிவோம்.
132245 இதை நினைவில் கொள்ளுங்கள், அங்கே இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்கள் மட்டுமே முத்திரையிடப்படுகின்றனர். அவர்கள் மீதியாக இருக்கப் போகும் யூதர் கூட்டமாகும். ஆனால் இந்த புறஜாதி மணவாடியில், அவர்கள் ஆயிரம் பதினாயிரம் பேர்களானவர்கள் ஆவர்; அவர்கள் முத்திரையிடப்பட்டவர்கள். ஏனெனில் அவர்கள் காலங்கள் தோறும் இரத்த சாட்சிகளாக இருந்தார்கள், ஒவ்வொரு காலங்களிலும் அவர்கள் இவ்வாறு இருந்து வந்தார்கள். அவர்கள் நியாயத்தீர்ப்பு நாளில் எழும்புவார்கள். 246 நியாயத்தீர்ப்பின் வெண்கலம் போன்ற பாதங்கள் அந்நாளில் நிற்கையில், என்ன நடக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அந்த இரத்த சாட்சிகளும் அங்கே நிற்பார்கள்; அப்பொழுது ரோமர்கள் அங்கே நிற்பார்கள் (அவர்களின் முன்பாக; இந்த இரத்த சாட்சிகளை மரத்தில் தூக்கி எரித்தும், சிங்கத்தின் குகைகளில் தூக்கி எறிந்ததுமான நிக்கொலாய் மதஸ்தினரே இவர்கள்,) அந்த இரத்த சாட்சிகள் இவர்களுக்கெதிராக வழக்கை எடுத்துக்கூறி அவர்கள் மேல் குற்றஞ்சாட்டும் வழக்குரைஞர்களாக அவர்களுடைய ஆசனத்தில் அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது நீதிபதியானவர் இந்த வழக்கறிஞர்களிடம், “நீங்கள் அவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தீர்களா?” என்று கேட்பார். “நான் என் ஜீவனை ஒரு சிங்கத்தின் வாயில் விடும்போது, அப்பொழுது என் ஜீவனை இவர்களுக்காக நான் முத்திரையிட்டேன்” என்பார்கள். 247 ஓ, ஓ சகோதரனே! “என்னைவிட்டு அகன்று போங்கள்” என்று இயேசு கூறியதைப் பற்றி பேசுகிறீர்களே, நரகமானது அவர்களுக்கு போதிய தண்டனையாயிராது. அது முற்றிலும் சரி.
133248 “உறுதியாக பற்றிக்கொள். தாங்களைத் தாங்களே (நிக்கொலாய் மதஸ்தினர்) என்றும், ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள் என்றும் அழைத்துக் கொள்ளுகிறார்கள், ஆனால் அவர்கள் அப்படியல்ல என்பதை நான் அறிந்திருக்கிறேன்” பார்த்தீர்களா? அங்குதான் காரியம், ஓ!, என்னே ஒரு வேளை வருகிறதாயிருக்கிறது, என்னே ஒரு பயங்கரமான வேளையது. தேவன் பழிவாங்குவார்! “நான் பழிவாங்குவேன்” என்று கர்த்தர் கூறுகிறார். “நான் பதில் செய்வேன்” என்கிறார். ஒவ்வொரு பொல்லாங்கான கிரியைக்கும் நீதியான தீர்ப்பு உண்டு. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்திருக்கிற ஒவ்வொரு கிரியையும், அல்லது உங்கள் சிந்தனையும், உங்களுக்கெதிராக அங்கே அந்த மகத்தான காந்த ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டிருக்கும். உங்கள் சிந்தையில் தோன்றிய ஒவ்வொரு பொல்லாத எண்ணமும் காணப்படும். பிள்ளைகளே, மனந்திரும்புங்கள்! 249 அதிலிருந்து விடுபட ஒரேயொரு வழி மட்டுமே உண்டு, கிறிஸ்துவுக்குள் வாருங்கள். அவருடைய வாழ்வில் பட்ட அவ்வினிய ஐந்த காயத்தினுள் நீங்கள் பிரவேசிக்கையில், அவர் சரீரத்திலுள்ள ஐந்து விலையேறப் பெற்ற காயங்களுக்குள் நீங்கள் பிரவேசித்து, அங்கே காயத்தில் ஓடும் இரத்தத்தை நீங்கள் காண்கையில், அங்கே மறைந்து கொண்டு, “பிளவுண்டு இருக்கும் கன்மலையே, நான் நல்லவனல்ல, என்னை உள்ளே மறைத்துக் கொள்ளும், பிளவுண்ட கன்மலையே” என்று கேளுங்கள். விலையேறப்பெற்ற பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தை உணருங்கள். உங்கள் சுயத்திற்கு மரித்து, கிறிஸ்துவின் சரீரத்தினுள் பிரவேசித்து, எழும்பி, புதிய காரியத்திற்கு உங்களைச் சுற்றியுள்ள புதிய உலகிற்குள் விழித்திடுங்கள். நீங்கள் முன்பு சிநேகத்திருந்த பாவங்கள் உங்கள் பின்னாகப் போய்விட்டன. ஓ, வருங்காலமோ, நிகழ்காலமோ, மரணமோ வேறெந்த ஒன்றோ உங்களை அதிலிருந்து பிரித்திடாது. உங்களுடைய மீட்பின் நாள் பரியந்தமும், நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டுள்ளீர்கள். அவர் யார் என்பதைப் பற்றிய வெளிப்பாடு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. மரணத்தினின்று நீங்கலாகி ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் இருதயத்தில் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
134250 அப்பொழுது உங்கள் கரத்தின் கிரியைகளை கவனியுங்கள். நீங்கள் பாருங்கள். இனிமேல் நீங்கள் திருடுவதில்லை, இனிமேல் நீங்கள் தீமை செய்வதில்லை. உங்கள் கரங்கள் எல்லா இரத்தப் பழிகளுக்கும் நீங்கலாயிருக்கின்றன. அப்பொழுது நீங்கள் எழும்பி நின்று, சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எது சரியோ அதையே பேசி, எது சரியோ அதன்படி ஜீவித்து, எது சரியோ அதையே செய்கின்றீர்கள். பரிசுத்த ஆவியானவரும் உங்களோடிருந்து, ஒவ்வொரு நாளும் அற்புத அடையாளங்களைக் காண்பிக்கிறார். “நீ என்னுடைய ஆசீர்வதிக்கப்பட்ட பிள்ளை, நான் உன்னோடு இருக்கிறேன், நான் உன்னோடு இருக்கிறேன், நீ எங்கிருந்தாலும் சரி, நான் உன்னோடு இருக்கிறேன், இருண்ட வேளைகளினூடாக எவ்விடத்தும் நான் உன்னோடு செல்லுவேன்” என்று தேவன் உங்களோடு பேசித் தெரியப்படுத்துகிறார், ஓ, என்னே, ஓர்—என்னை ஓர் நங்கூரம்! இளைப்பாறும் துறைமுகத்தில் நான் என் ஆத்துமாவை நங்கூரமிட்டுள்ளேன், இனி கொந்தளிக்கும் கடலலைகள் மேல் பயணமில்லை, ஓ, ஆழ் கடலில் புயல் கொந்தளித்தாலும், நான் என் இயேசுவில் பத்திரமாயுள்ளேன்.
135251 ஏன் மரணம் கூட ரீங்காரமிட்டுக் கொண்டு, இந்நாட்களில் ஒன்றில் உங்களைச் சுற்றிவந்து, ஒரு தேனீயைப்போல உங்கள் தலையைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டே வரக்கூடும். அப்பொழுது நீங்கள் மரணத்தை நோக்கி, “ஓ மரணமே, உன் கூர் எங்கே?” என்று கேட்கலாம். 252 பின்னால் அமர்ந்திருக்கிற எனது சிறிய மகள் சாராள் அன்றொரு நாளில் எழுதியிருந்ததைப் போல்: அதாவது அவள் பிரசங்கத்தை குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள். அவளும், சகோதரன் காலின்ஸ் அவர்களின் மகளும், என்று நான் நினைக்கிறேன். நான் என்ன சொன்னேனோ, அதின் பேரில் குறிப்பெடுத்திருந்தனர். நானும், சாராளின் தாயும் அவள் எழுதினவைகளை வாசித்துக் கொண்டிருந்தோம். அவள், “வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம்” (Book of Revelation) என்பதற்கு பதிலாக “புரட்சிகளின் புத்தகம்” (Book of Revolutions) என்று எழுதிவிட்டாள். ஆமென், அவள் கூறினாள்…முடிவில் நான் மரணத்தைப் பற்றிக் கூறிய அச்சிறு கதையை நீங்கள் அறிவீர்கள். மரணத்திற்குக் கொடுக்கு இல்லை என்று கூறியதைக் கேட்டிருக்கிறீர்கள். அக்கதை கூறப்பட்டபோது நீங்கள் இங்கே இருந்தீர்களா? பாருங்கள், மரணத்திற்கு ஒரு காலத்தில் ஒரு கொடுக்கு இருந்தது, ஆனால்…
136253 இந்த மனிதன் மனுஷகுமாரனா இல்லையா என்பதைப் பற்றி சாத்தான் அதிகம் நிச்சயமில்லாதவனாக இருந்தான். அவன் அங்கு நிற்பதை நீங்கள் காண்பீர்கள்…இயேசுவண்டை சாத்தான் வந்து, “நல்லது உம்மால் அற்புதம் செய்யக் கூடுமானால், நீர் ஓர் அற்புதம் நடப்பிக்கிற நபராக இருப்பீரேயானால், நீர் தேவனுடைய குமாரனேயானால் நான் உனக்குக் கூறுவேன், அது வேதத்தில் எழுதப்பட்டுள்ளது, பாருங்கள், நீர் ஒரு அற்புதம் நடப்பிப்பதை நான் காணட்டும்; இப்பொழுது நீர் பசியாயிருக்கிறீர்; நாற்பது நாட்களாக ஒன்றுமே நீர் புசிக்கவில்லை; நீர் ஏன் அந்தக் கல்லை அப்பமாக்கி, உட்கார்ந்து அதைப் புசிக்கக்கூடாது? நீர் அதை செய்வதை நான் பார்க்கட்டும். அப்பொழுது நீரே தேவனுடைய குமாரன் என்பதை நான் விசுவாசிப்பேன்” என்று கூறினான். 254 இயேசு அதற்குப் பிரதியுத்தரமாக: “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல…ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று கூறினார். ஓ, என்னே! சாத்தான் அங்கே மோசேயை சந்திக்கவில்லை என்பதை அறிந்துகொண்டான், அவன் அறிந்து கொண்டானல்லவா? மோசே கற்பனைகள் எழுதிய கற்பலகையை கீழே போட்டு உடைத்தெறிந்தான். ஆனால் சாத்தான், தான் மோசேயைவிடப் பெரியவரை சந்தித்தாக அறிந்தான்.
137255 பின்பு, சாத்தான், இயேசுவை உயரத்திலே எடுத்துச் சென்று, “இவ்வுலக இராஜ்யங்களையெல்லாம் பாரும், அதோ அங்கே அமெரிக்கா இருக்கிறது, அங்கே க்ரேட் பிரிட்டன், அங்கே அந்த இராஜ்யங்களெல்லாம் வரவிருக்கும் ஆண்டுகளில் வரப்போகின்றன. அவைகள் யாவும் எனக்கு சொந்தமாயுள்ளன, நீர் அதை அறிவீர்.” (அவன் தான் அவர்களை ஆளுகிறான்.) “அவைகள் எனக்குச் சொந்தமானவை; நான் அவர்களை ஆட்டுவிப்பேன், நானே அவர்களை யுத்தத்திற்கு அனுப்புகிறேன். அவர்களுக்கு என்ன செய்ய நான் விரும்புகிறேனோ அதை நான் செய்கிறேன், அவர்கள் என்னுடையவர்கள், நீர் என்னைத் தொழுதுகொண்டால், அந்த இராஜ்யங்களை உமக்குத் தருவேன்” என்றான். 256 அப்பொழுது இயேசு, “அப்பாலே போ சாத்தானே” என்றார். எப்படியும் முடிவில் தான் அனைத்திற்கும் சுதந்தரவாளியாகிவிடப் போவதை அவர் அறிந்திருந்தபடியினால், “அப்பாலே போ சாத்தானே” என்றார்.
138257 இறுதியாக அவர்கள் ஒரு நாளில் அவரைப் பிடித்தபொழுது, அவர்கள் ஒரு துணியை எடுத்து அதைக் கொண்டு அவரது முகத்தை இந்தவிதமாக மூடினார்கள். அவர்கள்—அவர்கள் அவரது தலையைச் சுற்றி கட்டிவிட்டிருந்தது, ஒரு பழைய அழுக்கான துணியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். அவரோ அங்கே காயமுற்றவராய், இரத்தம் சிந்தினவராக அமர்ந்திருந்தார். அதிகாலையில் கடுங்குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. அவர்கள் அவரை ஏற்கனவே சாட்டையால் அடித்தார்கள், அவரது தோள்கள் வழியாக இரத்தமானது பீறிட்டு ஓடியது, அவர்மேல் சுற்றி எதையோ இந்தவிதமாக அவர்கள் எறிந்தார்கள். இரத்தமானது அவரது முதுகில் அப்படியே பசையைப் போல் ஒட்டிக் கொண்டிருந்தது; அவர் சிரசின்மேல் முட்கிரீடத்தை இந்தவிதமாக அழுத்தி அணிவித்தார்கள். அவரது முகத்தின் மேல் இரத்தமும், போர்ச்சேவகர் அவரது முகத்தில் துப்பிய எச்சிலுடன் நிறைந்தவராக அங்கே உட்கார்ந்திருந்தார். அது ஒரு கோரமான காட்சியாக இருக்கவில்லையா? (ஓ தேவனே!) 258 “நான் அப்பொழுது அங்கே இருந்திருப்பேனென்றால், அந்த விஷயத்தில் ஏதாவது செய்திருப்பேன்” என்று நீங்கள் இப்பொழுது கூறலாம். நல்லது, நீங்கள் ஏன் இப்பொழுது அந்த விஷயத்தில் ஏதாவது செய்யக்கூடாது? ஏனெனில் நீங்கள் இருந்தால்…இப்பொழுது நீங்கள் அதைக் குறித்து என்ன செய்கிறீர்களோ, அதையே தான் அக்காலத்தில் இருந்திருந்தாலும் செய்திருப்பீர்கள்.
139259 அங்கே அவர் பரிக்கசிக்கப்பட்டு, முகத்தில் காறித்துப்பட்டவராக உட்கார்ந்து கொண்டிருந்தார். சீஷர்களோ அங்கே நின்றிருந்து, “ஓ என்னே! இப்படியும் நடக்கக் கூடுமோ? கல்லறையிலிருந்து மரித்தவனை உயிரோடு எழுப்ப முடிந்தது. அந்த மனிதரை, இப்பொழுது அவரைப் பாருங்கள்” என்று கூறினர். ஆனால் அவர்களோ வேதவாக்கியங்களை அறிந்து கொள்ள தவறிப் போய்விட்டனர். அந்த விதமாகத்தான் அது உள்ளது, பாருங்கள். 260 ஆகவே அவரது முகத்தில் எச்சிலும், இரத்தமும் நிறைந்தவராகக் காணப்பட்டார். ஒரு துணியைக் கொண்டு அவரது கண்களை மறைத்து கட்டி, “உங்களுக்குத் தெரியுமா, இதோ இந்த மனிதன் இருதயத்தை பகுத்தறியும் ஆவிக்குரிய வரம் கொண்டவர் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். அவர் ஒரு தீர்க்கதரிசி என்றார்கள். மக்களிடம் அவரால் கூற முடிந்தது, கிணற்றண்டையில் நின்றிருந்த அந்த ஸ்திரீயின் பாவங்களைக் கூறிவிட்டார். சீமோனிடம் அவனது தந்தையின் பெயரை கூறினார். அவனது பெயர் யோனா என்பதையும் கூறினார், மற்றும் எல்லா சங்கதிகளையும் கூறிவிட்டார். இப்பொழுது அவ்வாறு அவரால் கூற முடிகிறதா என்பதை நாம் இப்பொழுது பார்ப்போம்” என்றார்கள். 261 அவர்கள், “அவருக்கு நாம் ஒரு சிறிய சோதனை கொடுப்போம்” என்றார்கள். அது அந்த மக்களில் பிசாசு அவ்வாறு கிரியை செய்து கொண்டிருந்ததாகும். அவரது கண்களைத் துணியால் இந்தவிதமாகக் கட்டி, ஒரு கோலினால் அவரது தலையில் அடித்து, “நீ தீர்க்கதரிசியானால், உன்னை அடித்தது யார் என்பதைச் சொல்” என்றார்கள். அவர் தன் வாயைத் திறக்கக்கூட இல்லை. அவர் பேசாமல் அமர்ந்திருந்தார். 262 சாத்தான், “அது தேவனாயிருக்க முடியாது என்று அறிவீர்களாக” என்று கூறினான். 263 அதைத்தான் பழைய ஸ்தாபனமானது இன்று கூறுகிறது, “அந்த உருளும் பரிசுத்த கூட்டமானது தேவனுடையதாக இருக்க முடியாது” என்று கூறுகிறது. ஆனால் அவர்கள் அறியமாட்டார்கள். அவர்களுக்குத் தெரியாது. “அக்காரியங்களையெல்லம் தேவன் செய்ய முடியாது. அவர்கள் மனோவசியத்தால் கிரியை செய்கிறவர்கள். அவர்கள்—அவர்கள் குறிசொல்லுகிறவர்கள்?” என்கிறார்கள். அவர்கள் அது என்னவென்று அறிந்து கொள்ளவில்லை, அவ்வளவு தான்.
140264 எனவே அவர்கள் அவர்மேல் அங்கியை அணிவித்து மலையின்மேல் ஏறத் தொடங்கினார்கள்—தொடங்கினார்கள். அவர் மனிதனாக இவ்வுலகில் இருக்கையில், அவருக்காக மரியாளும், மார்த்தாளும், முழுவதும் தையலேயில்லாமல் தயாரித்தளித்திருந்த அந்த ஒரே அங்கியைத்தான் அணிந்து கொண்டிருந்தார் என்று நான் ஊகிக்கிறேன். அவருக்கிருந்த ஆடையெல்லாம் அது தான். அதை அவரது முதுகின் மேல் போட்டார்கள். அவர் மலையின்மேல் ஏறிச் செல்லுகையில், அவரது அங்கியின் மேல் சிறு இரத்தக் கறைகள் காணப்பட்டன. அவரோ, அந்த பழைய சிலுவையை இழுத்துக் கொண்டே தள்ளாடிக் கொண்டே சுமந்து சென்றார். அவரது அந்த பலவீனமான சரீரத்தோடு அவர் போகையில் அவர்கள் அவரை சாட்டையால் அடித்துக் கொண்டேயிருந்தார்கள், மற்றும் இவ்வாறான அனைத்து பாடுகளையும் அவர் சகித்துக்கொண்டே சென்றார். அந்த பழைய சிலுவை “ப்ம்டி—ப்ம்ப்” என்று தரையில் இழுக்கையில் சத்தமிட்டுக்கொண்டே அவரது தோளில் அவரை அழுத்திக் கொண்டிருக்க, அவர் தள்ளாடியவாறே தொடர்ந்து சென்றார். 265 அந்தச் சிறு சிறு கறைகள் பெரிதாகி, பெரிதாகி கடைசியில் ஒரு பெரிய புள்ளியாக கறையாக அவரது அங்கியில் ஆகியது. பழைய சாத்தானானவன், மரணம் என்னும் கொடுக்கை உடைய ஒரு “தேனீயின்” ரூபத்தில், அவரண்டை வந்து, “ஹா, ஹா! அவரா? தேவன் அவ்வாறு செய்யமாட்டார், அவர் வெறும் ஒரு மனிதன் தான், அவர் நடிக்கிறார்” என்றான். அவன் இன்னமும் அவ்வாறே நினைக்கிறான். “அவர் அவ்வாறு நடித்துக்கொண்டிருக்கிறார், எனவே நான் அவரை கொட்டவுள்ளேன். அவர் தேவனாயிருந்தால், அவன் அவரை கொடுக்கினால் கொட்டினால், அவர் மரிக்க முடியாது. எனவே நான்—நான் அவரை கொடுக்கால் கொட்டி என்ன நடக்கிறது என்று பார்க்கப் போகிறேன். நான்—நான் அவரை சோதித்துப் பார்ப்பேன்” என்றான்.
141266 எனவே, அவன் இயேசுவை சிலுவையில் அறையச் செய்தபொழுது, அவர் உடலில் தனது கொடுக்கை வைத்துக் கொட்டினான், ஆனால் சாத்தான் அந்தக் கொடுக்கை வைத்துக் கொட்டியபொழுது, அவனது கொடுக்கை அவன் இழந்துவிட்டான். அவர் மனிதனைவிட மேலானவர். அந்தத் தடவை அவன் தேவனைக் கொட்டிவிட்டான். 267 அக்காரணத்தினால்தான், பவுல் எழுதுகையில், “ஓ மரணமே…” என்றான். ஒரு தேனீ ஆழமாக ஒன்றினுள் கொட்டிவிட்டால், அதன்பிறகு இனிமேல் அதனால் கொட்டவே முடியாது என்று நீங்கள்—நீங்கள் அறிவீர்கள். அந்த தேனியாகிய சாத்தான் ரீங்காரமிடுவான், ஓசையெழுப்புவான், எல்லாம் செய்வான், ஆனால் அவனால்—அவனால்—அவனால் இப்பொழுது கொட்ட முடியாது, ஏனெனில், அவன் ஏற்கனவே தனது கொடுக்கை இழந்துவிட்டான், அவனிடம் கொடுக்கு இல்லை. எனவே மரணத்திற்கு இனிமேல் கொடுக்கே கிடையாது. பவுலின் தலையை வெட்ட அதற்கென ஒரு இடத்தை அவர்கள் கட்டிக் கொண்டிருக்கையில், பவுலைச் சுற்றி அந்த தேனீ ரீங்காரமிட்டது, அப்பொழுது அவன், “ஓ மரணமே, உன் கூர் எங்கே?” என்றான். 268 கல்லறையோ, “பவுலே நான் உன்னை என்னிடம் சேர்த்துக்கொள்வேன், நான் உன்னை புழுதியில் புரட்டப்போகிறேன்” என்று கூறினது. (பவுலை சிரச்சேதம் செய்து, அவர்கள் சாக்கடை குழியில் அவனை வீசியெறிந்த இடத்திற்கு நான் சென்று இருக்கிறேன்.) கல்லறையோ, “நான்—நான்—நான் உனது சரீரத்தை அழியச் செய்து, அழுகிப்போகச் செய்வேன்” என்று கூறினது. 269 “ஓ—ஓ, ஓ, பாதாளமே, உன் ஜெயம் எங்கே” என்று பவுல் கூறினான். பாருங்கள்? “கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.” மரணம் தனது கூரை அவனிடத்தில் இழந்தது. “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.” ஆமென். “விரும்பினால் இப்பொழுதே தலையை வெட்டிக் கொள்” என்றான். ஊ! ஓ, அது—அதுதான் அது. அந்தவிதமாகத்தான் சகோதரனே. அதுவே—அதுவே உண்மையான கிறிஸ்தவ ஆவியாகும்.
142270 இப்பொழுது—இப்பொழுது உங்களுக்கு அறிந்து கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டால், மிருகத்தின் முத்திரை எங்ஙனம் பெற்றுக்கொள்ளப்படுகிறது என்பதை அறியுங்கள். நான் இதைப் பற்றிக் கூற விரும்புகிறேன். ஏனெனில், அதைப் பற்றிக் கூறிவிட்டு முடித்துவிடலாம் என்று நான் எண்ணினேன். நீங்கள் எவ்வாறு மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக் கொள்ளப்போகிறீர்கள்? நீங்கள் அதை அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அதன் விளைவுகள் என்ன? மிருகத்தின் முத்திரை என்றால் என்ன? 271 தேவனுடைய முத்திரை என்ன என்பதை நாம் அறிவோம். தேவனுடைய முத்திரையானது என்ன? நல்லது, எபேசியர் 4:30-ஐ எடுத்துக் கொள்வோம். அப்பொழுது—அப்பொழுது நீங்களே அதைப் புரிந்து கொள்வீர்கள், அப்பொழுது அதைப் பற்றி அங்கே நீங்களே படித்துத் தெரிந்து கொள்வீர்கள். உங்களில் யாராவது வெளிப்படுத்தின விசேஷம்-வெளிப்படுத்தின விசேஷம் 9:1-4 ஐ எடுக்கலாம். இன்னொரு வசனம் II கொரிந்தியர் 1:22. அதைப் பற்றி பல இடங்களில் உள்ளது. அவைகளில் சிலவற்றை நான் குறித்து வைத்துள்ளேன். ஆனால் நாம் எபேசியர் 4:30ஐ எடுத்துக் கொண்டு, அங்கே நீங்கள் தேவனுடைய முத்திரையானது என்னவென்று கண்டுகொள்ளலாம். வேறு பல வசனங்களிலும் இதைப் பற்றிக் காணாலாம். முத்திரை என்ற வார்த்தையை நீங்கள் எடுத்துக் கொண்டு, உங்களது ஒத்த வாக்கிய அகராதியில் ஆராய்ந்து பார்க்கலாம். சரி, எபேசியர் 4:30 இதைக் கவனியுங்கள். அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
143272 தேவனுடைய முத்திரையானது என்ன? அது பரிசுத்த ஆவியாகும். நிச்சயமாக, அது சரி. “தேவனுடைய ஆவியைப் பெற்றிராதவன் என்னுடையவனல்ல.” நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தால், நீங்கள் தேவனுடைய பாகமாக இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் அவருடையவர்களாக இருக்கிறீர்கள். அவர்—அவர் உங்களை முத்திரையிட்டு, உங்களில் இருக்கிறார், உங்களில் கிரியை செய்துகொண்டு இருக்கிறார். அவர் செய்த அடையாளங்களை நீங்களும் கூட செய்கிறீர்கள். இப்பொழுது சபையோரே, நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் புரிந்து கொண்டீர்களா? தேவனுடையவர்களாயிருப்பதற்கு பரிசுத்த ஆவியே தேவைப்படுகிறது. பரிசுத்த ஆவிதான் தேவை. அவ்வாறு நீங்கள் பரிசுத்த ஆவியையுடையவர்களாக இருப்பின், இயேசு செய்த அதே கிரியைகளை நீங்களும் செய்கிறீர்கள். பார்த்தீர்களா? உங்களுடைய அன்பானது… 273 அவர்கள் உமது முகத்தில் காரி உமிழ்ந்து, உம்மைச் சுற்றி நின்று அடித்தபோது, உம்மில் கசப்பின் வேர் எதுவுமே இல்லை. அவர் அவர்களை உற்று நோக்கிவிட்டு, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார். அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் பாருங்கள்.
144274 அதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவரது இரத்தத்தை சிந்த வேண்டுமென்று, அவரது சொந்தப் பிள்ளைகளே கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர். வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவர். பூமியிலிருந்து அவர் முளைத்தெழும்பச் செய்த மரத்தினால் உண்டாக்கப்பட்ட சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார்; அவரது சொந்தப் பிள்ளைகள்! (பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள், உங்கள் சொந்தப் பிள்ளைகள்) அவருக்கெதிராகக் கூக்குரலிட்டு, “அவனை அகற்றும், கள்ளனாகிய அந்தப் பரபாஸை விடுதலையாக்கும்” என்றார்கள். 275 ஓ, நான் அந்த பரபாஸாயிருந்தேன். மரிக்கிறதற்கு பாத்திரவனாயிருந்தவன் நான் தான், அவரோ என்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். சிறையில் அந்த பரபாஸ் என்பவன் இருந்தபொழுது, அங்கே அந்த நூற்றுக்கதிபதி மிகுந்த ஓசையோடு நடந்து வந்து கதவைத் திறந்தபொழுது, பரபாஸ் எவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்திருப்பான்? அந்த பரபாஸோ, “ஐயோ! இன்னும் சிறிது நேரத்தில் நான் மரித்துப் போய்விடுவேன், நான் ஒரு கொலைக்காரன், நான்—நான் ஒரு திருடன், இன்று என்னை அவர்கள் கொன்றுவிடப் போகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்பதை நான் அறிவேன். இன்று பஸ்கா தினமாகும், எனவே நான்—நான் உண்மையிலேயே…நான் இன்று மரிப்பேன் என்று அறிவேன்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டிருந்தான். முந்தின இரவு முழுவதும் நடுங்கினவனாக காணப்பட்டான். நிம்மதியற்ற எந்தவொரு பாவியையும் போல அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தான். முதலாவதாக, உங்களுக்குத் தெரியுமா? அங்கே அந்த காவலாளி வருகிறான். அப்பொழுது பரபாஸ், “ஓ, ஓ, இதோ இவன் வந்துவிட்டான், நான் போய்விட வேண்டும், நான் போய்விட வேண்டும்” என்றான். அப்பொழுத் சாவியைப் போட்டு க்ளிக் என்று காவலாளி கதவைத் திறந்தான். காவலாளி நேராக நின்று, “பரபாஸே, வெளியே வா” என்று அழைத்தான். பரபாஸ் “ஊ—ஊ, ஆம், நான் போக வேண்டும் என்பதை அறிவேன். நான் போய்க் கொண்டிருக்கிறேன்” என்றான். காவலாளியோ, “நீ போகலாம், உனக்கு விருப்பமானபடி செய்து கொள்ளலாம்” என்றான். அப்பொழுது பரபாஸ், “என்ன?” என்று கேட்டான். அதற்கு அவன், “நீ விரும்புகிறதை போய் செய். வெளியே வா, நீ விடுதலையாகிவிட்டாய்” என்றான். 276 “நான் விடுதலையாகிவிட்டேனா? ஏன்? நீரல்லவா எனக்கு மரண தண்டனை அளித்தீர்” என்றான். அது உண்மை, தேவன் அனைத்து பாவிகளையும் மரணாக்கினைக்குள்ளாக்குகிறார். “நீர் எனக்கு மரண தண்டனை விதித்துள்ளீரே, அப்படியிருக்க நான் எப்படி விடுதலையாகி போகமுடியும்?” என்று பரபாஸ் கேட்டான். 277 “இங்கே வா பரபாஸ், அதோ அங்கே அவர் அந்த மலையின் மேல் ஏறிச் செல்வதைப் பார், சிலுவை தரையின் மேல் மோதும் போது உண்டாகும் சத்தத்தைக் கேள். அவருடைய கைகளில் அவர்கள் ஆணியறைவதனால் உண்டாகும் சத்தத்தைக் கவனி, அங்கே கதறுகிற அவரை நோக்கிப்பார், அவர் முகத்தில் உப்பான தண்ணீரும், இரத்தமும் கலந்து காணப்படுகிறதை பார். பரபாஸே, உனது ஸ்தானத்தை அவர் எடுத்துக்கொண்டார். அவர் உனக்காக மரித்தார்.” “நான் விடுதலையாவதற்காக அவர் மரித்தார் என்றா கூறுகிறீர்கள்” “ஆம்” 278 “சரி, நான் மறுபடியும் கொலை செய்ய ஆரம்பிப்பேன்.” ஓ, என்னே ஒரு நன்றியற்றவன் நீ, நீ மரிப்பதற்கு பாத்திரமானவன்.
145மகிமையின் அதிபதி மரித்த, அவ்வற்புத சிலுவையை நான் காண்கையில், என்னுடைய பெருமையெல்லாம் வீண் நஷ்டம் தான். ஓ, என்னே! கவிஞன் இவ்வாறு பாடியதில் வியப்பொன்றுமில்லையே. ஜீவிக்கும்போது, அவர் என்னை நேசித்தார், மரிக்கும்போது, அவர் என்னை இரட்சித்தார்; அடக்கம் பண்ணப்படும்போது, அவர் என் பாவங்களை தொலைதூரம் கொண்டு சென்றுவிட்டார்; உயிர்த்தெழுந்தபோது, அவர் இலவசமாய் என்றென்றைக்குமாய் நீதிமானாக்கினார்; என்றோ ஒரு நாள் அவர் வருகிறார், ஓ, மகிமையான நாள்!
146279 அவர் எனக்காக செய்ததை நான் காண்கையில், அவரை நான் எவ்வாறு புறக்கணிக்க முடியும்? நான் எங்ஙனம் அதைச் செய்வேன்? பூமியில் எனக்குள்ள ஒவ்வொரு நண்பரையும் நான் இழந்துவிட விரும்புவேன். எப்படி…நான்…ஸ்தாபனங்களால் நான் உதைத்து எறியப்படவும், யாவற்றாலும் உதைத்து எறியப்படவும் ஆயத்தமாயிருப்பேன். நான் அங்கே நோக்கிப் பார்க்கையில், நான் மரணாக்கினைக்குள்ளாக்கப்பட்டிருக்கையில், அவரோ என்னுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டுவிட்டார். நிச்சயமாக, கர்த்தாவே, யாவற்றையும் வீண் நஷ்டமென்று நான் எண்ணுகிறேன். ஓ, நான் சிலுவையை தழுவிக்கொள்ளட்டும். ஓ, கர்த்தாவே. பிளக்கப்பட்ட கன்மலைகள், இருண்ட ஆகாயங்களுக்கு மத்தியில், என் இரட்சகர் தலையை சாய்த்துமரித்தார், அப்பொழுது திரைச்சீலை கிழிந்து வழியை வெளிப்படுத்தியது பரலோகத்தின் மகிழ்ச்சிக்கும், முடிவற்ற நாளுக்குமே.
147280 ஓ, இயேசுவே, நான்—நான் உம்மண்டையில் நெருங்கி தங்கியிருக்கட்டும். உமது பக்கத்திலிருந்து என்னை அகற்றிவிடாதேயும், இரத்தம் வடியும் உமது ஐந்து காயங்களை நான் காணட்டும். ஓ பரலோகத்தின் அதிபதியே! எப்படியாக அவர் மரித்தர், எனக்காக மரித்தார்! நான் பிழைக்கும்படியாக அவர் மரித்தார்… 281 ஆக்கினைக்குட்படுத்தப்பட்ட ஒருவன்…பாவ சங்கிலியால் நரகத்தின் சிறையில் வைக்கப்பட்டிருந்த, ஆக்கினைக்குட்படுத்தப்பட்ட, குற்றமுள்ளவனாக, என்றென்றும் அழிந்து போயிருக்கும்படியாக இருந்தேன். ஒருவர் என்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். அதன்பிறகு அவர்கள்…இங்கே நான் பதினெட்டு அல்லது இருபது வயதுள்ளவனாக இருக்கையில், ஒரு நாளிலே பரிசுத்த ஆவியானவர்…நான், “நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன், எங்கே போகிறேன்?” என்று கூறினேன். 282 “அவர் உனது ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். நீ அங்கே போய்க் கொண்டிருந்தாய். அவர் உன் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். அவர் அங்கே இருக்கிறார்” என்று அவர் கூறினார். 283 நான், “ஓ தேவ ஆட்டுக்குட்டியே, ஓ தேவ ஆட்டுக்குட்டியே, நான் வருகிறேன், நான் வருகிறேன். வெறுங்கையனாக நான் வருகிறேன், உமக்குக் கொடுக்க என்னிடத்தில் ஒன்றுமில்லை. உம்முடைய சிலுவையை நான் பற்றிக்கொள்கிறேன். கர்த்தாவே, என்னிடம் இருப்பதெல்லாம் அது மாத்திரமே” என்று கூறினேன். அவர் என்னை உள்ளே எடுத்துக்கொண்டார். கெட்ட குமாரனை அவனுடைய தந்தை உடுத்துவித்ததுபோல, என்னையும் உடுத்துவித்தார். புத்தாடையை எனக்கு உடுத்துவித்தார். ஒரு விவாக மோதிரத்தை, அந்நாளில் நான் மணவாட்டியோடு இருக்கத்தக்கதாக, என் விரலில் அணிவித்தார். இப்பொழுது கொழுத்த கன்று அடிக்கப்பட்டிருக்கிறது. நாம் இப்பொழுது களிகூர்ந்து கொண்டிருக்கிறோம், ஏனெனில், நான் முன்பு மரித்திருந்தேன், இப்பொழுதோ நான் உயிரோடிருக்கிறேன், நான் ஒரு காலத்தில் காணமற்போனேன், இப்பொழுதோ நான் கண்டுபிடிக்கப்பட்டேன். ஆச்சரியமான கிருபை, அதன் சப்தம் எவ்வளவு இனிமையானது, அது என்னைப் போன்ற பாதகனையும் இரட்சித்தது! (பரபாஸை விட மோசமான ஒருவன்.) நான் ஒரு காலத்தில் காணாமற்போனேன், ஆனால் இப்பொழுதோ நான் கண்டு பிடிக்கப்பட்டேன். நான் குருடனாயிருந்தேன், ஆனால் இப்பொழுதோ நான் காண்கிறேன். கிருபையே பயப்படும்படி என் இருதயத்திற்கு போதித்தது, என் பயங்கள் யாவற்றையும் போக்கியதும் கிருபையே; நான் முதலில் விசுவாசித்த வேளையிலே கிருபையானது எவ்வளவு விலையேறப் பெற்றதாய் பிரசன்னமானது! பத்தாயிரம் ஆண்டுக் காலங்களாக நாம் அங்கே இருக்கிற வேலையில், சூரியனைப் போல பிரகாசமாயிருப்போம். (இனி நட்சத்திரங்களோ, சூரியனோ இல்லை.) நாம் ஆதியில் ஆரம்பித்ததை விட, அவரைத் துதித்துப் பாடிட நமக்கு நீண்ட காலம் உண்டாயிருக்கும். (நாம் அப்பொழுது நித்தியத்தில் இருக்கிறோம்) 284 ஓ, நான் எவ்வளவாய் இயேசுவை நேசிக்கிறேன். ஏனெனில் அவர் என்னை முதலில் நேசித்தார். ஓ எவ்வளவு அற்புதமானது!
148இப்பொழுது என்னோடு கூட யாத்திராகமம் 21-ம் அதிகாரத்திற்குத் திருப்புங்கள். 285 அவருடைய “ஆவியைக்” குறித்த ஆலோசனைகள், இப்பொழுது எவ்வாறு முத்திரையைப் பெறுவது என்பதைப் பற்றி இப்பொழுது பேசப் போகிறோம். நான் உங்களுக்கு அதைக் குறித்து காண்பித்து, அதன் விளைவுகளைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தேன். அதோ “ அங்கே அவர் இருக்கிறார்.” 286 எவ்வாறு “மிருகத்தின்” முத்திரையை நீங்கள் பெற்றுக்கொள்கிறீர்கள்? அங்கே உங்களுடைய முடிவு எவ்வாறு உள்ளது என்பதை நான் காண்பிப்பேன். இப்பொழுது, மிருகத்தின் முத்திரை…யாத்திராகமம் 21-ம் அதிகாரம். நீங்கள் இங்கே புரிந்து கொள்ளும்படியாய் அதைக் குறித்து பழைய ஏற்பாட்டிலிருந்து நாம் எடுத்துக்கொள்வோம். நாம் யாவரும் அறிந்திருக்கிறபடி புதிய ஏற்பாட்டிலும் உள்ள ஏராளமான வேதவாக்கியங்களை இங்கே நான் குறித்து வைத்துள்ளேன். இப்பொழுது நாம் வாசிப்போமாக. மேலும், நீ அவர்களுக்கு அறிவிக்க வேண்டிய பிரமாணங்களாவன: எபிரெயரில் ஒரு அடிமையைக் கொண்டாயானால்,… (பாருங்கள். எபிரெயன் என்னப்பட்டவன் ஒரு விசுவாசி என்பதை இப்பொழுது நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்) … அவன் ஆறு வருஷம் சேவித்து, ஏழாம் வருஷத்திலே ஒன்றும் கொடாமல் விடுதலைபெற்றுப் போகக்கடவன். ஒன்றிக்காரனாய் வந்திருந்தானானால், ஒன்றிக்காரனாய்ப் போகக்கடவன்; விவாகம்பண்ணினவனாய் வந்திருந்தானானானால், அவன் பெண்ஜாதி அவனோடேகூடப் போகக்கடவள். அவன் எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை விவாகம்செய்துகொடுத்தும், அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையாவது பெண் பிள்ளைகளையாவது பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் அவன் எஜமானைச் சேரக்கடவர்கள்; அவன் மாத்திரம் ஒன்றியாய்ப் போகக்கடவன்.
149287 நான்…போகிறேன்…என்னுடைய நேரமானது முடிந்துவிட்டது என்று நான்—நான்—நான்—நான் அறிவேன். சகோதரன் நெவில் அவர்களே, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், சகோதரனே, ஆனால் இதை நான்—நான் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும். 288 இங்கு கவனியுங்கள். உங்களுடைய தாய் என்னவாக இருக்கிறார்கள் என்பதோ உங்கள் தந்தை என்னவாக இருக்கிறார் என்பதோ காரியமல்ல. அது நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பதேயாகும்! உங்களுடைய மனைவி அல்ல, பாருங்கள், உங்கள் மனைவிக்கும் இதற்கும் சம்மந்தமில்ல. அவனது மனைவியும் பிள்ளைகளும் காரணமல்ல. அது அந்த நபரைப் பொறுத்ததுதான். உங்களது தாயார் ஒரு பரிசுத்தவாட்டியாயிருந்திருக்கலாம், உங்களது தந்தை ஒரு பரிசுத்தவானாக இருந்திருக்கக்கூடும்; அதைப் போலவே, ஏசாவின் தாய், தந்தையும் இருந்தார்கள். ஆனால் அவன் ஒரு நிலையற்றவனாக இருந்தான். பாருங்கள்? ஆனால் அவன்…ஆனால் அதுவோ தனிப்பட்ட நபரான உங்களைப் பொறுத்ததுதான். 289 “என் தந்தை ஒரு பிரசங்கியார்” என்று கூறலாம். அதற்கும் உனக்கும் எந்த சமந்தமும் இல்லை. “என் தாயார் ஒரு தேவ பக்தியுள்ள பெண்மணி” எனலாம். “ஓ, அவள் பரலோகத்தில் இருக்கிறாள்” என்றும் கூறலாம். அது சரியாக இருக்கலாம். ஆனால் உன்னைக் குறித்து என்ன? உன்னைப் பொறுத்துதான் உள்ளது.
150அந்த அடிமை… 290 இங்கே தான் அவன்…இப்பொழுது இந்த மிருகத்தின் முத்திரையைக் குறித்து கவனியுங்கள். வரிசைக் கிரமமாக நான் ஏற்கனவே கூறியவைகளை மீண்டும் கூற எனக்கு—எனக்கு நேரமேயில்லை, ஏனெனில் இன்னும் இருபது நிமிடங்களேதான் உள்ளது. ஆனால் நான் உங்களுக்கு இதைக் கூற விரும்புகிறேன். 291 ஒவ்வொரு ஏழாம் வருஷம் என்று கூறப்பட்ட ஒரு வேளையானது அக்காலத்தில் கூறபட்டுள்ளது. அது ஆறு ஆண்டுகளாயிருந்தது. ஏழாம் ஆண்டில் (இங்கே சுற்றிலும் அமர்ந்திருக்கிற வேதமாணாக்கர்கள், ஊழியக்காரர்கள் இது உண்மை என்று அறிவர்) …ஏழாம் ஆண்டில் யாவும் ஓய்ந்திருந்தது. அது யூபிலி வருஷம் என்று அழைக்கப்பட்டது. ஏழாம் ஆண்டில் ஒன்றும் பயிரிடப்படவில்லை. தேசமானது ஓய்ந்திருந்தது. அவர்கள் தானியங்களை பொறுக்க மட்டுமே செய்தார்கள். யாவும் ஏழாம் ஆண்டில் ஓய்ந்திருந்தன. ஏழாம் ஆண்டில், அங்கே ஒரு—ஒரு ஆசாரியனானவன் ஒரு எக்காளம் ஊதுவான். ஒரு மனிதன் அடிமையாக இருந்தானென்றால், அவனது கடன்கள் எவ்வளவாயிருந்தாலும், எனக்கு கவலையில்லை, அவன் விடுதலையாகிவிடுவான்.
151292 இப்பொழுது, அதுதானே சுவிசேஷ எக்காளத்திற்கு முன்னடையாளமாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக ஒரு வேளை நீங்கள் சாத்தானின் சங்கிலியால் கட்டுண்டு, மது அருந்துதல், புகைத்தல், சூதாடுதல், மற்றும் பாவம், அசுத்தமான காரியங்களிலும் ஈடுபட்டு, அதினால் அவனுக்கு சேவை செய்திருப்பீர்கள். ஆனால் சுவிசேஷ எக்காளம் ஊதப்படுகையில் நீங்க்ள் கேட்கும்பொழுது, நீங்கள் அடிமையாயிருப்பவைகளினின்று விடுதலையாகிச் செல்லலாம் என்பதே அதற்கு ஒரு அடையாளமாய் உள்ளது. நீங்கள் விடுதலையாகிச் செல்லலாம்! “விசுவாசம் [சபையோர், “கேட்பதினால்” என்கின்றனர்.—ஆசி.] கேள்வியினால், தேவனுடைய வார்த்தையை கேட்பதினால் வரும்” இப்பொழுது நீங்கள் பூரண சுவிசேஷத்தைக் கேட்டிருக்கிறீர்கள். அப்பொழுது, நீங்கள் இனிமேல் கட்டுண்டவர்களாக இருக்கத் தேவையில்லை. 293 இப்பொழுது, நீங்கள் உட்கார்ந்து, “ஓ, நான் அதன் சப்தத்தை கேட்டேன். ஆனால் நான் அதற்குச் செவி கொடுக்கவில்லை” என்று கூறக்கூடும். பாருங்கள்? நல்லது. அப்படியாயின், அது உங்களுக்கானது அல்ல. ஊ—ஊ, அது செவி கொடுக்கிறவர்களுக்கே உரியது. அது சரி, உங்களால் செவி கொடுக்க முடிந்தால் மட்டுமே, அது உங்களுக்குரியது.
152294 அவர் இங்கு என்ன கூறியிருக்கிறார் என்பதை இப்பொழுது கவனியுங்கள். இதைப் பற்றி நிரூபிக்கப்படத்தக்கதாக, இப்பொழுது கூர்ந்து கவனித்து, அடுத்த இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு உங்கள் சிந்தையை கவனமாக வைத்து கவனியுங்கள். அந்த வேலைக்காரன்: (இவன் விடுதலை செய்யப்படுவதற்காக உள்ள மனிதன்) என் எஜமானையும், நேசிக்கிறேன்… 295 “ஓ, நான் நடனமாடச் செல்ல விரும்புகிறேன். யாருக்காகவும் நாட்டியமாடப் போவதை நான் விட்டுக்கொடுக்கமாட்டேன். நான் இதையோ அதையோ , அல்லது மற்றதையோ யாருக்காகவும் விட்டுவிடமாட்டேன், எனது மனைவியானாலும், என் பிள்ளைகளானாலும் அல்லது நான் நேசிக்கிற இவ்வுலகின் காரியங்களையானாலும் விட்டுக்கொடுக்கமாட்டேன். இப்பொழுது, இங்கே நோக்குங்கள், சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் உங்களுக்குச் சொல்லப்போவது என்னவெனில்: நான் அதை விட்டுவிட வேண்டுமென்று நீங்கள் கூறுகிறீர்களா?” என்று கேட்பீர்கள். நீங்கள் ஒன்றையும் நிறுத்த வேண்டாம். நீங்கள் உள்ளே வாருங்கள். அது தானாகவே நின்றுவிடும். ஆனால்—ஆனால் நீங்களோ, “நல்லது, நான் அதைச் செய்யமாட்டேன். நான் அதைச் செய்ய வேண்டியதில்லை. நான் சபையைச் சேர்ந்தவனாக இருக்கிறேன். உங்களையும் இன்னும் வேறு யாரையும்விட நல்லவனாகத்தான் இருக்கிறேன்” என்று கூறுகிறீர்கள். சரி, சகோதரனே, பரவாயில்லை, அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சத்தியத்திற்கு செவி கொடுங்கள். “இங்கே கூறப்படுவதை கவனியுங்கள். ‘பிதா குமாரன் பரிசுத்த ஆவி’…?” நல்லது. நீங்கள் அவ்வாறே வைத்துக்கொள்ள விரும்பினால், தொடர்ந்து அதில் செல்லுங்கள். 296 எக்காளமானது என்ன ஒலித்துக் கூறியது என்பதைக் கேட்டிருக்கிறீர்கள். அது என்ன ஸ்வரத்தை இசைத்தது என்பதை கேட்டீர்கள். வேதம் கூறியது… (ஓ தேவனே!) அதை நோக்குங்கள்! அடுத்த மணி நேரத்திற்குரிய செய்திக்கு இது ஒரு பொருளாக அமையலாம் அல்லவா? “எக்காளமானது விளங்காத சத்தமிட்டால்.” உங்களுடைய ஸ்தாபனங்கள் “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்று கூறினால், அது எக்காளத்தைப் போல் சப்தமிடவில்லை. “எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவான்?”
153வேலைக்காரன்: என் எஜமானையும்…நேசிக்கிறேன் என்று மனப்பூர்வமாய்ச் சொல்வானானால்… 297 “என்னை இவ்விதச்—இவ்விதச் செயல்களைச் செய்யும்படி செய்யச் செய்யும் பிசாசை நான்—நான் நேசிக்கிறேன், அதெல்லாம் சரிதான். நான் அவ்வாறு நினைக்கவில்லை…நீங்கள் குறுகின எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறீர்கள் என்றே நான் நினைக்கிறேன். நீங்கள் மிகவும் குறுகின எண்ணமுடையவர் என்றே நான் எண்ணுகிறேன்”. சரி. “நான் அவைகளை நேசிக்கிறேன். இதைப் போன்ற இந்த பெரிய காரியங்களை நாம் பெற்றிருக்க வேண்டும், இதை செய்ய வேண்டும் என்று நான்—நான் நினைக்கிறேன், உலகில்…எங்களுக்கு நடனங்கள் உள்ளன, எங்கள் சபையில் சீட்டு விளையாட்டு உள்ளது. அதைப்போன்ற வேறு காரியங்களும் உள்ளது. அங்கே உங்களுக்கு இருக்கிறவைகளைவிட நல்ல காரியங்கள் எங்களுக்கு உள்ளது” என்று கூறுகிறீர்கள். சரி, அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். சரி. நான் விடுதலை பெற்றுப் போக மனதில்லை…நீங்கள் கூறுகிற அந்த ஆவிக்குரிய சுயாதீனத்திற்குள் செல்ல நான் விரும்பவில்லை என்று கூறுகிறீர்கள். அவன் எஜமான் (அது பிசாசாகும்) அவளை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக் கொண்டு போய், அவனைக் கதவின் அருகேயாவது… 298 ஊ: அது என்ன? யார் அந்த வாசல்? [சபையார். “இயேசு கிறிஸ்து” என்று கூறுகின்றனர்—ஆசி.] “உனக்கு முன்பாக ஒரு வாசலை நான் வைப்பேன்.” எப்பொழுது மிருகத்தின் முத்திரை வந்தது? திறந்த வாசலை வைத்திருக்கிற இக்காலத்தில் தான். இது…மிருகமானது தன் முத்திரையை இடுதலின் இறுதிக் கட்டமாகும். அவனைக் கதவின் அருகேயாவது கதவு நிலையின் அருகேயாவது சேரப் பண்ணி … (அது கல்வாரியைக் குறிக்கிறது, சரி) அங்கே எஜமான் அவன் காதைக் கம்பியினாலே குத்தக்கடவன்: பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக் கொண்டிருக்கக்கடவன். 299 “சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” நீங்கள் சுவிசேஷ சத்தியமானது தொனிக்கக் கேட்டும், அதில் நடக்க நீங்கள் மறுத்துவிட்டால், அப்பொழுது தேவன் தாமே உங்கள் காதை, இனி ஒரு போதும் அதைக் கேட்கக் கூடாதபடி அடையாளமிட்டுவிடுகிறார். அதனால் நீங்கள் ஜீவனுக்கும் மரணத்துக்கும் இடையே உள்ள கோட்டை கடந்துவிடுகிறீர்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் ஸ்தாபன சங்கத்தோடு மீதமுள்ள உங்கள் வாழ்நாள் முழுவதும் என்றென்றுமாக சென்றுவிடுகிறீர்கள். (பிள்ளைகளே, ஒளியில் நடவுங்கள், அதுதான் சரியானது.) நீங்கள் அந்த எஜமானை என்றென்றுமாக சேவீப்பீர்கள்.
154300 உங்களுக்கு விருப்பமில்லை…பாருங்கள், எக்காளமானது முழங்கியது. அதினால் அவன் விடுதலை பெற்றுப்போக முடியும், அது தேவனுடைய கிருபையாயிருக்கிறது. அதுதானே யூபிலி வருடமாயிருக்கிறது, பூர்த்தியடைந்ததாக இருக்கிறது. பாவத்தின் நாளானது முடிவடைந்துவிட்டது, சகோதரனே. பாவத்திற்கு ஊழியம் செய்யும் ஒவ்வொருவருக்கும் நான் கூறுகிறேன்; (அவர்கள் ஒலி நாடாவில் கேட்கிறவர்களாயினும் சரி, பார்க்கத்தக்கதாக அமர்ந்திருக்கும் சபையாரானாலும் சரி) பாவத்திற்கு ஊழியம் செய்யும் ஒவ்வொருவருக்கும் கூறுகிறேன், பாவத்தின் நாளானது முடிந்துவிட்டது! இயேசு மரித்தார், எனவே நீங்கள் இனி பாவத்திற்கு ஊழியம் செய்ய வேண்டியதில்லை. மதக்கோட்பாடுகளுக்கும், ஸ்தாபனங்களுக்கும் முன்பாக நீங்கள் இனி தலை வணங்கத் தேவையில்லை. “குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.” நீங்கள் விடுதலையாகிச் செல்ல விரும்பினால், குமாரனுக்குள் விடுதலையாகிச் செல்ல விரும்பினால், எல்லாவற்றினின்றும் உங்களை விடுவித்துக் கொண்டு அவரை சேவியுங்கள். வாருங்கள்! 301 ஆனால் நீங்கள் அவ்வாறு செய்ய விரும்பாவிடில், அப்பொழுது உங்களுடைய மத ஸ்தாபனமானது, உங்களுடைய எஜமானானவன், அல்லது நீங்கள் யாரை சேவித்துக் கொண்டிருக்கிறீர்களோ அவன், இனிமேல் ஒருபோதும் சுவிசேஷ எக்காளத்தைக் கேட்கவே கூடாதபடி, உங்களுடைய காதைக் குத்தி அடையாளாப்படுத்திவிடுவான். தேவன் எப்பொழுதாவது உங்களிடம் பேசி, “வா, இதுவே தருணம்” என்று அழைத்தால், அப்பொழுது நீங்கள் அவர் பேசுவதைப் புறக்கணித்தால், சத்தியத்திற்கு செவிகொடுக்க முடியாதபடி கடினமடைந்தவராக இருக்கும்படி, அவனுடைய அடையாளத்தை நீங்கள் பெற்றுக் கொண்டு விடுவீர்கள். அதுதான் பிசாசின் முத்திரையாகும். அதுவே மிருகத்தின் முத்திரையாகும். உங்களுக்குப் புரிகிறதா? மிருகத்தின் முத்திரையானது என்ன செய்கிறது? உங்களை மீண்டும் ரோமானியக் கொள்கையில், மத ஸ்தாபனக் கோட்பாட்டில் வைத்து விடுகிறது. இனி உங்களால் வெளியே வந்து சுதந்திரமடைய முடியாது. அதைத்தான் என்றென்றும் சேவிக்கிறவர்களாயிருப்பீர்கள். அங்கேதான் மிருகத்தின் முத்திரையானது இருக்கிறது. 302 அது கடினமான விஷயமாகத்தான் இருக்கிறது, நண்பர்களே, அது வெட்டுகிறது. ஆனால் அதுதான்…நான் அதற்கு பொறுப்பாளியல்ல…வேதம் என்ன கூறுகிறதோ அதையே நான் கூறுகிறேன்.
155303 இப்பொழுது, “நீ விடுதலையாயிருக்கிறாய்” என்று முழங்குகிற நற்செய்தியாகிய சுவிசேஷ எக்காளம் முழங்குவதைக் கேட்பதற்கு முன்னடையாளமாக, இது நிழலாக, பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள மாதிரியாகும். இனி நீ கட்டுண்டு கிடக்கத் தேவையில்லை, நீ முழுவதுமாக கிறிஸ்து இயேசுவுக்குள் விடுதலையாயிருக்கிறாய், இனி பாவங்கள் மற்றக்காரியங்கள் ஏதுமில்லை. நீங்கள் இனிச் செய்வதில்லை. 304 நீங்கள் இவ்வுலகை நேசித்தால், வேதம், “நீங்கள் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால், தேவனுடைய அன்பு உங்களிடத்தில் இல்லை” என்று உரைத்துள்ளது. அது உண்மைதானே? உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால், தேவனுடைய அன்பு உங்களிடத்தில் இல்லை. அப்படியென்றால் மார்க்கத்தின் பெயரால் இன்று உலகில் நடந்து கொண்டிருக்கிற பெரிய காரியங்களைப் பற்றி என்ன? அவைகள் உலகத்தின் காரியங்கள் ஆகும். பன்றி அடைக்கும் பட்டியில் உள்ள பன்றி தன் உணவை ஆவலுடன் விழுங்குவது போல், மக்களும் உலகத்திற்குரிய இக்காரியங்களை ஆவலுடன் விழுங்குகிறார்கள். “ஓ, இது அருமையாயிருக்கிறது. அதைப்பற்றி ஒன்றும் தவறில்லை” என்று கூறுகிறார்கள். பாருங்கள், அவர்கள் முத்திரையிடப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள். புரிகிறதா?
156305 யூதர்களில் மீதியானவர்கள் என்பது யார் என்பதைப் பற்றியும் நீங்கள் புரிந்து கொண்டீர்களா? அவர்கள் எங்கே அமர்ந்திருந்து, காத்துக் கொண்டிருக்கிறார்கள்? இதே மணி வேளையில்தான். புத்தியில்லாத கன்னியர் எண்ணெயை எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதையும், அவர்கள் தாமே எழும்பி, நியாயத்தீர்ப்பு நாளில் நல்லவைகளும், பொல்லாங்கானவைகளும் பிரிக்கப்படும் நாளில் பிரிக்கப்படுவார்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? எண்ணெயைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை புத்தியில்லாத கன்னிகை அறிந்து இப்பொழுது நடப்பதை போல, அதைத் தேடிச் சென்ற அதே நேரத்தில் மணவாளன் வந்துவிட்டார் என்பதைப் புரிந்துகொண்டீர்களா? 306 அப்படியாயின் நாம் முடிவுக்கு எவ்வளவு சமீபமாயிக்கிறோம்? இப்பொழுதே! நமக்கு இன்னும் குறுகிய நேரந்தான் இருக்கிறது. இன்னும் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது எனக்குத் தெரியாது. எப்பொழுது என்று என்னால் கூற முடியாது. எனக்குத்—எனக்குத் தெரியாது. ஒரு வேளை இன்னொரு வருடம் பிடிக்கலாம். அது ஒரு வேளை இன்னொரு பத்து வருடங்கள் ஆகலாம் அல்லது நாற்பது ஆண்டுகள் ஆகக் கூடும் அல்லது நாற்பது நிமிடங்கள் மட்டுமே கூட ஆகலாம். எனக்குத்—எனக்குத் தெரியாது. என்னால் கூற முடியாது. ஆனால் அது சமீபமாக இருக்கிறதென்று மட்டும் எனக்குத் தெரியும். அது உண்மையாகவே சமீபமாயுள்ளது. கர்த்தருடைய ஆவியானவர்…
157307 ஒரு சமயமானது வரப்போகிறது, அப்பொழுது முதலாவதாக சபையானது குளிர்ந்துபோகிற நிலைக்குப் போக ஆரம்பிக்கும். கடந்த சில ஆண்டுகளில் சபையானது அவ்வாறு—அவ்வாறு குளிர்ந்துபோகிற நிலையை அடைய ஆரம்பித்ததை எத்தனை பேர்கள் கவனித்திருக்கிறீர்கள்? நிச்சயமாக. அது எதற்குள் போகப்போகிறது? லவோதிக்கேயா. இன்றிரவில் அதிலிருந்து நாம் அந்த சபைக் காலத்திற்குரிய தூதன் இன்னார் என்பதை கண்டுபிடித்து பார்த்து, அவனுடைய செய்தியையும் நாம் கண்டு கொண்டு, அது எப்படி இருக்கும் என்பதையும், லவோதிக்கேயா சபைக் காலத்தின் முடிவில் அவன் நித்தியத்திற்குள் போய் முடிவடைந்து அதற்குள் பரந்து நிற்கிறபொழுது எப்படியிருக்கும் என்பதையெல்லாம் நாம் காணலாம்.
158308 ஓ, நான் அவரை நேசிக்கிறேன். நீங்கள் நேசிக்கவில்லையா? ஆம், ஐயா. ஓ,…தேவனுடைய முத்திரையானது என்ன—என்னவாயிருக்கிறது? பரிசுத்த ஆவி. மிருகத்தின் முத்திரையானது என்னவாயிருக்கிறது? பரிசுத்த ஆவியை புறக்கணித்தலேயாகும். அந்த இரு பிரிவினர். அவர்களில் ஒருவர் காண்கின்றார்… 309 நல்லது, அவர்கள்…பூமியில் எத்தனை பேர் அதைப் பெற்றுக் கொள்ளாமலிருந்தனர்? “முத்தரிக்கப்படாதவர் யாவருமே மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக் கொண்டனர்.” எத்தனை பேர்கள் தேவனுடைய முத்திரையைப் பெற்றுக் கொள்ளவில்லையோ, அவர்கள் யாவரும் மிருகத்தின் முத்திரையைப் பெற்று கொண்டனர். தேவனுடைய முத்திரையானது பரிசுத்த ஆவியாகும். வேதம் அவ்வாறு கூறியுள்ளது. அதைக் குறித்து வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு இடத்திலும், அது தேவனுடைய அடையாளம், “தேவனுடைய முத்திரை” என்று கூறுகிறது. அம்முத்திரையை பெற்றிராதவர்கள் யாவரும், அதை புறக்கணித்தவர்கள் ஆவர். அதை அவர்கள் எவ்வாறு புறக்கணித்துள்ளனர்? அதற்கு செவி கொடுக்க மறுப்பதன் மூலமே. அப்படித்தானே?
159310 இப்பொழுது நினைவிருக்கட்டும், விசுவாசத்தை நீங்கள் எவ்வாறு பெற்றுக்கொள்ளுகிறீர்கள்? “செவி கொடுத்தலின் மூலமாக.” அது எங்கே அடையாளப்படுத்தப்பட்டது? கையிலா? இல்லை. தலையிலா? இல்லை. அது காதிலேதான், பாருங்கள். காதிலே, “கேட்பதினால்” அது என்ன செய்தது? கேட்பதற்கே பயமடைந்துள்ளனர். “இனிமேல் வேண்டாம்” என்று நீங்கள் கூறுகிறீர்கள். “இனி நான் அதைப்பற்றி கேட்கமாட்டேன், அதனோடு எந்த சம்மந்தமும் எனக்கு வேண்டாம். நான் அதனோடு எந்த ஒரு சம்மந்தமும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை” என்று கூறுகிறீர்கள். அது அவர்களைப் போலவே இருக்கிறது… 311 சகோதரன் நெவில் அவர்களே, இதை இப்பொழுது நான்—நான்—நான்—நான் விட்டுவிட்டு… 312 “ஒரு தடவை பிரகாசிக்கப்பட்டவர்கள் மறுதலித்துப்போனால் அவர்களை புதுப்பிப்பது கூடாத காரியம்” என்கிற விஷயத்தைப் பற்றி உங்களுக்கு நான் கூறவிருந்தேன். நீங்கள் பாருங்கள், “அவர்களால் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கு இயலாது.” நீங்கள் பாருங்கள், அதுதானே எல்லைக் கோட்டில் நிற்கும் விசுவாசிகளைப் போன்றதாயுள்ளது: பாருங்கள், ஏனெனில், ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசி பார்த்தும், மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். …தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி… 313 பாருங்கள். ஆனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒருவன் இவ்வாறு செய்வது என்பது முற்றிலும் முடியாத காரியமாகும். பாருங்கள், அவன் அவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில், அவன் என்ன செய்வான்? பாருங்கள்? “உடன்படிக்கையின் இரத்தத்தை நம்பி…” இப்பொழுது நீங்கள் பாருங்கள் ஒருவன் தெரிந்துகொள்ளப்பட்டவனாயிருந்தால், அந்தக் கூட்டத்தில் ஒருவனாக இருந்தால், அவனால் அவ்வாறு மறுதலிக்க முடியாது. அவ்வாறு செய்வது என்பது அவனுக்கு முடியாத காரியமாகும்.
160314 இப்பொழுது, இதை நாம் எடுத்துக்கொண்டு இங்கே வந்திருக்கிறோம். எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து …முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும்…இருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு. (கோதுமை மணியோ பரம வீட்டுக்கு களஞ்சியத்தில் சேர்க்க எடுத்துச் செல்லவிருக்கிறது) 315 ஆனால் இந்த ஜீவனை அளிக்கும் மழையானது களை, கோதுமை ஆகிய இரண்டின் மேலுமே பெய்கிறது. அவையிரண்டுமே மழை வருவதைக் குறித்து மகிழ்ந்து களிகூர்ந்து, அது வருவதைப் பற்றி ஒரேவிதமாகத்தான் எண்ணுகின்றன. ஆனால் அவைகளுடைய கனிகளினால் நீங்கள் அவைகளை அறிவீர்கள். அவைகள் களையின் கனிகளையா அல்லது கோதுமை மணியின் களைகளைக் கொண்டவையா என்பதை அவற்றின் கனியைக் கொண்டு அறிந்து கொள்ளுகிறீர்கள். (இப்பொழுது, கோதுமையைக் குறித்து).
161316 இப்பொழுது, அதைப்பற்றி அறிந்துகொள்வது எவ்வாறெனில் …இந்த எல்லைக்கோடு விசுவாசியைக் குறித்து உங்களுக்கு காண்பிக்கும்படியாக…நீங்கள்—நீங்கள் அதைப் புரிந்து கொள்வதற்காக நான் இந்த புத்தியில்லாத கன்னிகையை உங்களுக்கு காண்பிக்கிறேன். நீங்கள் பாருங்கள். இஸ்ரவேலரின் மத்தியில், இந்த எல்லைக்கோடு விசுவாசியிலே, அவர்கள் காதேஸ்பர்னேயாவுக்கு வருகையில் என்ன நேரிடுகிறது என்பதைக் கவனியுங்கள். நான் அதைப்பற்றி ஆதியாகமத்திலிருந்து யாத்திராகமம் முடிய முன்னும் பின்னும் எடுத்து, இந்த சபையோர் அதைக் காணத் தவறக்கூடாது என்பதற்காக நான் உங்களுக்கு முன்னடையாளத்தைக் காண்பித்தேன். நீங்கள் பாருங்கள்.
162317 யாத்திராகமத்தில் இந்த ஜனங்கள் காதேஸ்பர்னேயாவுக்கு வருகையில் …காதேஸ்பர்னேயாதான் அந்தக் காலத்தில் உலகுக்கே நியாயாசனமாக இருந்தது. அங்கேதான் இஸ்ரவேல் தன்னுடைய நியாயசனத்தைப் பெற்றது. அந்த மலையில் அவர்கள் பத்துக் கட்டளைகளைப் பெற்றுக் கொள்ள வருகிற வரையிலும், அவர்கள் பதினொரு நாட்கள் பிரயாணம் செய்தார்கள். அங்கே தான் அவர்கள் நியாயத்தீர்ப்பை சந்தித்தார்கள். “அவர்கள் கடலோரமாக பதினொரு நாட்கள் பிராயணம் செய்தார்கள்” என்று வேதம் உரைத்துள்ளது. பதினொரு நாட்கள் பிரயாணம் செய்து, அவர்கள் காதேஸூக்கு வந்து சேர்ந்தார்கள், அங்கே அவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டார்கள். இன்னும் நான்கு நாட்களில் தேவன் அவர்களைக் கானானுக்குள் கொண்டு சென்றுவிடப் போகிறதற்கு இருந்தபோது, அவர்கள் மீண்டும் வனாந்திரத்தில் வந்த வழியே திரும்பிப் போய் வனாந்திரத்தில் அலைந்து திரியும்படியாயினர். அவர்கள் கட்டளைகளைப் பெற்றார்கள். மீண்டும் திரும்பிப் போனார்கள். அப்புறம் என்ன நேரிட்டது? அவர்கள் மீண்டும் இங்கே வந்து…அங்கிருந்து பதினொரு நாட்கள் பிரயாணத்தில், காதேஸ் பரனேயாவில் தங்களுடைய நியாயத்தீர்ப்பண்டையில் அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.
163318 என்ன நேரிட்டது? ஒவ்வொரு கோத்திரத்திலும் ஒவ்வொருவனாக மோசே தெரிந்து கொண்டு, “நீங்கள் போய் தேசத்தை வேவுபார்த்து, அது எப்படிப்பட்ட தேசம் என்பதைக் கண்டு வாருங்கள்” என்று கூறினான். அவர்கள் யாவரும் அங்கு சென்று அதை நோக்கினார்கள். 319 அவர்களில் இருவர் போய் ஒரு பெரிய திராட்சைக் குலையை எடுத்துக் கொண்டார்கள். ஓ, அது இருவர் சுமக்க வேண்டிய அளவுக்கு ஒரு பெரிய குலையாக இருந்தது. 320 அத்தேசம் எத்தகைய தேசம் என்பதை போய் கண்டறிந்து திரும்பி வந்தபிறகு அவர்கள் என்ன செய்தார்கள்? அங்கே அவர்கள் எமோரியர் மற்றும் இன்னபிற மக்களைக் கண்டார்கள். இஸ்ரவேலரோ “அவர்கள் இராட்சதர்கள்” என்று கூறினர். (அதாவது உண்மையிலேயே, காயீனின் புத்திரர் அந்த தேசத்தில் முடிவிலே அங்கு சென்றடைந்திருந்ததைக் கண்டனர்.) அவன், “அவர்கள்—அவர்கள்—அவர்கள் இராட்சதர்களாயிற்றே” என்றான். மேலும், “நாங்கள்—நாங்கள்—நாங்கள் அத்தேசத்தை எடுத்துக்கொள்ள முடியாது. அவர்கள்—அவர்கள்—அவர்களுடைய தேசம் முழுமையும் பெரிய மதில் சூழ்ந்த பட்டணங்கள் ஆகும். காரணம், அவர்கள் கண்களுக்கு நாங்கள் வெட்டுக்கிளிகளைப் போல் இருந்தோம்” என்று கூறினான்.
164321 அவர்கள் என்ன செய்திருந்தனர்? அவர்கள்—அவர்கள் முழுமையாக அத்தேசத்தை பார்வையிட்டுவிட்டார்கள். அத்தேசத்தின் கனியைக்கூட அவர்கள் ருசி பார்த்துவிட்டார்கள். பாருங்கள், காலேபும் யோசுவாவும் கூட அங்கே போய் அத்தேசத்தின் நிலையை விளக்கும் அத்தாட்சியைத் தங்கள் தோள்களின் மேல் சுமந்து கொண்டு வந்திருந்தனர். அவர்கள் அந்த கனியை ருசிபார்த்தனர்! அது உண்மை. மற்றவர்கள் இவர்களைபோல அங்கே ஒரு போதும் அங்கே செல்லவில்லை, ஆனால் காலேபும் யோசுவாவும் அங்கு சென்று அத்தாட்சியைத் திருமப கொண்டு வந்திருந்தனர். காலேபும் யோசுவாவும், “நாம் அத்தேசத்தைக் கைப்பற்றிட நமக்கு இயலும்” கூறினார்கள். பார்த்தீர்களா? ஏன்? ஏனெனில் காலேபும் யோசுவாவும் வார்த்தையை உற்று நோக்கினவர்களாகவே இருந்தார்கள். 322 தேவன், “இத்தேசம் உங்களுடையது. தேசம் முழுவதிலும் எமோரியரும், ஏவியரும், மற்றும் பல்வேறு ஜாதியினர் ஆகியோரால் நிறைந்துள்ளது. ஆனால் தேசமோ உங்களுடையது. உங்கள் பாதம் மிதிக்கும் ஒவ்வொரு இடமும் உங்களுக்குச் சொந்தமானதாகும். நான் அதை உங்களுக்குக் கொடுப்பேன். அது உங்களுடையது. ஆகவே அதை நோக்கி நடந்து கொண்டேயிருங்கள்” என்று கூறினார். பாருங்கள், அது உண்மை. 323 ஆனால் அவர்களோ, “ஓ, இல்லை! அவ்விதமாக நாங்கள் ஒரு எழுப்புதலைக் கொண்டிருக்க முடியாது. ஓ! ஓ, ஓ, ஏன் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? தலைமை பேராயர் அல்லது பேராயர் அல்லது திருச்சபை முப்பரோ அல்லது வேறு யாருமோ வந்து எங்களையெல்லாம் வெளியே துரத்திவிடுவாரே” என்றனர். ஹூ! முன்னே செல்லுங்கள், அதுதான் சரியானது, நாம் அதை அடைவோம்.
165324 இப்பொழுது, இந்த இருவரும் திரும்பி வந்து, “அத்தேசத்தை நாம் கைப்பற்றிட நம்மால் இயலும், ஏனெனில் தேவன் அவ்வாறு கூறியுள்ளார். எனவே நாம் போய் அத்தேசத்தை எடுத்துக்கொள்வோம்” என்றார்கள். 325 ஆனால், பாருங்கள், இந்த எல்லைக்கோடு விசுவாசிகளோ, தேசத்தின் கனியை ருசி பார்க்க தூரத்திலிருந்து வந்தவர்கள், அவர்கள், “அது மிகவும் ருசியாக இருக்கிறது. ஆம் ஆனால், ஓ, நம்மால் அத்தேசத்தை கைப்பற்ற முடியாது” என்றார்கள். 326 இப்பொழுது அது என்ன? இதோ இன்றைக்கு விசுவாசி இருக்கிறான். இப்பொழுது, இந்த நபரைக் கவனியுங்கள். தேவன் அவனுக்கு ஒரு அழைப்பைக் கொடுக்கிறார். ஊ—ஊ. அது சரி. இப்பொழுது முதலில் அவன் இரட்சிக்கப்படுகிறான். அவனுடைய தாய் துணிகளைத் துவைத்து பிழைப்பை நடத்தி, அதைக் கொண்டு அவனை ஒரு கல்லூரிக்கு, பிரசங்கிப்பது எப்படி என்பதற்குரிய கல்வியைக் கற்கும்படி அனுப்பி வைக்கிறாள். அவன் அங்கே சென்றும்…அவன் இன்னமும் சிந்திக்கிறான்…ஒவ்வொரு முறையும் பெண்கள் ஒழுக்கக்கேடாக உடையுடுத்திடுவதை அவன் காண்கையில், அது அவனது மனதை சுக்குநூறாக உடையச் செய்கிறது. சிகரெட்டுகளின் புகையை அவன்—அவன் முகருகையில் புகைபிடிப்பதை தவிர்க்க அவனால் இயலாமற்போகிறது. அது தவறானது என்பதை அவன் அறிவான். அவன் அதைச் செய்ய விரும்புகிறதில்லை. எனவே அவன், “கர்த்தாவே, என்னை பரிசுத்தமாக்கும், அந்தக் காரியத்தை என்னைவிட்டு அகற்றிப்போடும்” என்று வேண்டுகிறான். 327 தேவனோ, “சரி, நான் அதை உனக்காக செய்வேன், மகனே, அவை யாவற்றையும் நீ உன்னை விட்டு அகற்றிப்போடு” என்பார்.
166328 ஒரு இரவில் அவன் ஒரு சிறு கூட்டத்திற்கு சென்று, அங்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து பேசப்படுவதைக் கேட்கிறான். “உதாரணமாக” பாருங்கள். 329 அவன் முதல் அடியாகிய நீதிமானாக்குதலை அடைந்துவிட்டான், இரண்டாவது கட்டமாகிய பரிசுத்தமாகுதலையும் அடைந்தான். இப்பொழுது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு ஆயத்தமாகிவிட்டான். பாருங்கள்: ஒன்று, இரண்டு, மூன்று. அவன் ஞானஸ்நானத்திற்கு ஆயத்தமாகிவிட்டான். அவன் அங்கே போய்ச் சேருகையில், வேதாகமத்தை நன்கு படிக்கிறான். அவனோ, “அவர்கள் அவ்வாறுதான் செய்தார்கள். ஆம், அது சரிதான். இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம், அவர்களும் அப்படித்தான் செய்தார்கள். அது சரிதான். நான் வேதம் முழுவதிலும் படிக்கிறேன். அவர் சரியாக வார்த்தையில் தான் இருக்கிறார்” என்று கூறுகிறான். “பேராயரே, நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்கிறான். “அந்த அர்த்தமற்றதெல்லாம் ஒன்றுமில்லை” என்கிறார். “ஓ எனக்கு புரிகிறது” என்கிறான். 330 “அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். அந்நிய பாஷைகளில் பேசினார்களே, அவர்கள் இதைச் செய்தார்கள், அவர்கள் பிணியாளிகளை சொஸ்தமாக்கினார்கள். ஓ, ஆம் சரியாக அவ்வாறுதான்” என்று கூறுகிறான். அவன் இவ்வாறு தேசத்தின் எல்லையில் இருந்து கொண்டு அந்த நல்ல தேசத்தை நோக்கிப் பார்க்கிறான், நீங்கள் பாருங்கள். 331 “ஓ, நான் இதைப்போய் என் சபைக்கு போதித்துவிட்டால்…ஓ, நான் ஒரு ப்ரெஸ்பிடேரியன், மெதோடிஸ்ட், பாப்டி… ஓ. பேராயர் என்னை வெளியே தள்ளிவிடுவார், நாங்கள் அதைச் செய்ய முடியாது. அவ்விதமானதொரு கூட்டத்தை எங்கள் சபையில் நடத்திட முடியாது. ஒவ்வொருவரும் சபையிலிருந்து வெளி நடப்பு செய்துவிடுவார்கள்” என்று கூறுகிறார்கள்.
167332 “ஒரு தடவை ஒருவன் இதனால் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசி பார்த்தும், அவன் தெரிந்து கொண்ட அந்த பாதையிலிருந்து அவன் விழுந்து போனால், அவனைப் புதுப்பிப்பது கூடாத காரியம். ஏனென்றால் அவன் தேவனுக்கு விரோதமாக பாவஞ்செய்துவிட்டான்…” பாவமானது என்ன—என்ன? அவிசுவாசம் தான். அவன் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்துவிட்டான். அவன் என்ன செய்துவிட்டான்? அவன் தன்னை சுத்திகரித்த உடன்படிக்கையை, அது ஏதோ பரிசுத்தமில்லாத ஒன்றாக கருதிவிட்டான். அவனை அங்கே கொண்டுவந்த கிருபையின் கிரியைகளை அலட்சியம் செய்துவிட்டான். அங்கே அவனுக்கென இனிமேல் பலியே இல்லை. ஆனால் பயப்படத்தக்க விதமான விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே காத்துக் கொண்டிருக்கிறது. “பழி வாங்குதல் எனக்கே உரியது” என்று கர்த்தர் சொல்லுகிறார். 333 “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும் கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” அங்குதான் காரியமே உள்ளது, அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. ஒளியை நீங்கள் காண்கையில் அதிலே நடவுங்கள்! நடவுங்கள்! நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறியீர்கள். ஆயினும் தொடர்ந்து நடந்து செல்லுங்கள். கல்வாரியை நோக்கி நடவுங்கள், கல்வாரியின்மேல் அர்த்தமுள்ள பார்வையை பதித்திடுங்கள், நடவுங்கள்! நடத்திடுங்கள்!
168334 ஓ தேவனே, ஒரு நாளில் சபையானது…ஏனோக்கு சபைக்கு முன்னடையானமாயிருக்கிறான். ஐந்நூறு ஆண்டுகள் அவன் தேவனுக்கு முன்பாக நடந்தான். நடந்தானே! “தேவன் கூறிய யாவற்றையும் செய்தவனாக இருந்தான்” என்ற சாட்சியோடு அவன் ஒளியில் நடந்தவனாக இருந்தான். அவன் தேவனுக்கு பிரியமில்லாமல் நடக்கவில்லை. கர்த்தர் என்ன கூறினாரோ, அதையே ஏனோக்கு செய்தான். அவன் ஒரு முன்னடையாளமானவன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பேழையோ யூதர்களுக்கு முன்னடையாளமாக உள்ளது. இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேராகிய யூதர்களுக்கு முன்னடையாளமாக பேழை இருக்கிறது. நோவாவும் அவனுடைய கூட்டத்தினருமாகிய பேழையிலுள்ளவர்கள் ஜலபிரளயத்தின் வழியாக கடந்து சென்றார்கள். ஆனால் ஏனோக்கோ ஜலப்பிரளயத்திற்கு முன்னால், பரம வீட்டிற்கு சென்றுவிட்டான். அதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே, ஏனோக்கு தொடர்ந்து ஒளியில் நடந்து சென்றான். ஆகவே அவ்வாறு அவன் நடந்து செல்லுகையில், ஒரு நாள் அவனது பாதங்கள் பூமியைவிட்டு மேலே கிளம்பிவிட்டதாக உணர்ந்தான். அவன் தொடர்ந்து நடந்து சென்று மரியாமலேயே மகிமைக்குள் நடந்து சென்று விட்டான், அது உண்மை. தேவன் அவனை எடுத்துக் கொண்டார், ஏனெனில், “அவன் தேவனுடைய ஒளியில் நடந்தான்” என்ற சாட்சியோடு ஒளியில் நடந்துகொண்டேயிருந்தான். தொடர்ந்து நடந்துகொண்டே, நடந்து கொண்டேயிருங்கள்.
169335 சபையே, நாம் நடந்து செல்வதற்குரிய பாதரட்சைகளை அணிந்துகொள்வோமாக. தொடர்ந்து ஒளியில் நடவுங்கள், அழகான ஒளியில், அதினின்று இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாய் வருகின்றன; நம்மைச் சுற்றிலும் இரவும் பகலும் பிரகாசிக்கிறது, இயேசு உலகத்தின் ஒளியாயிருக்கிறார். இப்பொழுது நாம் அதைப் பாடுவோம். நாம் ஒளியில் நடப்போம், அழகான ஒளி, ஓ, அதனின்று இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாய் வருகின்றன. இரவும் பகலும் நம்மைச் சுற்றிலும் பிரகாசிக்கிறது, இயேசு உலகத்தின் ஒளியாயிருக்கிறார். ஒளியின் பரிசுத்தரே நீங்கள் யாவரும் இயேசுவே உலகின் ஒளியென்று பிரசித்தம் செய்வீர்; அப்பொழுது பரலோகத்தின் மணிகள் இயேசு உலகின் ஒளியென முழங்கிடுமே. நாம் ஒளியில் நடப்போம், அப்பேர்பட்ட ஒரு அழகான ஒளி, ஓ, அங்கிருந்து இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாய் வருகின்றன; இரவும் பகலும் நம்மைச் சுற்றிப் பிரகாசிக்கிறது, இயேசுவே உலகத்தின் ஒளியாயிருக்கிறார்.
170336 இப்பொழுது சற்று நேரம் நாம் நம் தலைகளை வணங்குவோமாக. இங்கு எவரேனும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் அனுபவத்தைப் பெற வேண்டுமென வாஞ்சையுள்ளவர்கள் இருப்பார்களாயின், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, என்னை நினைவு கூருங்கள், சபையே, என்னை நினைவு கூருங்கள். நான் ஒளியில் நடக்க விரும்புகிறேன். எனக்கு அந்த இனிமை வேண்டும், என்னில் கசப்பான் வேர் எதுவும் இருக்கலாகாது, நான் தேவனுடைய ஊழியக்காரனாகவே இருக்க விரும்புகிறேன்” என்று கூறுங்கள். “ஓ, கர்த்தாவே என்னை நினைவு கூரும்” என்று கரத்தை உயர்த்திக் கூறுங்கள். ஆம், இருபது அல்லது அதற்கும் மேலான கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. 337 நாம் மென்மையாய் ஒன்று சேர்ந்து பாடுகையில், இப்பொழுது உங்களுடைய தலைகளை வணங்கிய வண்ணமாகவே இருங்கள்: ஓ, இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார். நாம் இவ்வொளியில் நடப்போம், அது ஒரு அழகான ஒளியாய் உள்ளது, அங்கிருந்தே இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாய் வருகின்றன; இரவும் பகலும் நம்மைச் சுற்றி பிரகாசிக்கிறது. இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார். ஒளியின் பரிசுத்தவான்களே நீங்கள் எல்லோரும் வந்து, ஓ இயேசு, அவரே உலகத்தின் ஒளியென பிரகடனம் செய்யுங்கள்; அப்பொழுது ஓ இயேசுவே, அவரே உலகத்தின் ஒளியென பரலோக மணிகள் ஒலிக்கும். ஓ, நாம் இந்த ஒளியி நடப்போம், அது அப்பேர்ப்பட்ட ஒரு அழகான ஒளியாயுள்ளது, அங்கிருந்தே இரக்கத்தின் பனித் துளிகள் பிரகாசமாய் வருகின்றன; நம்மைச் சுற்றிலும் இரவும் பகலும் பிரகாசிக்கிறது ஓ, இயேசுவே, உலகத்தின் ஒளியாம். 338 [சகோதரன் பிரான்ஹாம் அவர்கள் இயேசுவே உலகத்தின் ஒளி என்னும் பாடலை தனக்குள் மெதுவாக பாடுகிறார்—ஆசி.]
171கர்த்தராகிய இயேசுவே, இவர்கள் சுவிசேஷ ஒளியில் நடக்க விரும்பி இப்பாடலை தங்களுக்குள் மெதுவாக இசைத்துக் கொண்டிருக்கையில், கர்த்தாவே, அவர்களின் விலையேறப்பெற்ற அந்த இருதயங்களை ஏற்றுக்கொள்ளும். அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்கள், அவர்களை சுத்திகரியும், எல்லாப் பொல்லாங்கையும் எடுத்துப்போடும், எல்லா அவிசுவாசத்தையும் வெளியே அகற்றிவிடும், உலகத்தின் ஒளியான இயேசு அவர்களுக்குள்ளாக வருவாரக. இங்கே உறுமால்கள் வைக்கப்பட்டுள்ளன. கர்த்தாவே, இவைகள் பிணியாளிகளுக்காகவும், துன்பப்படுவர்களுக்காகவும் வைக்கப்பட்டுள்ளன. கர்த்தராகிய இயேசுவே, அவர்களண்டைக்கு வந்து, அவர்கள் ஒளியில் நடக்கும்படியாக அவர்களை குணமாக்கும், கர்த்தாவே, அதை அருளும். 339 எங்களுடைய பாடத்திற்காகவும், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் எங்களோடு இருந்து, எங்களைக் காத்து, மணிக்கணக்கில் இங்கே அமர்ந்திருக்கச் செய்ததற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். மக்கள் இந்த உஷ்ணமான அறையில் அமர்ந்து காத்துக் கொண்டிருக்கிறர்கள். கர்த்தாவே, அவர்கள் எதிர்பார்ப்போடும், ஆச்சரியத்தோடும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், வசனமானது வாசிக்கப்படுகையில், நாங்கள் கடைசிக் காலத்தில் இருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். உலகில் களியாட்டம்தான் மீதியாக விடப்பட்டுள்ளது. இந்நாட்களில் ஒன்றில், இந்த வேஷமான, போலியானவைகளெல்லாம் ஒழிந்துபோம். 340 தெய்வீக பிரசன்னதில் இருக்கும் ஒவ்வொரு நபரையும் நீர் இரட்சிக்க வேண்டுமென, தேவனே, நான் ஜெபிக்கிறேன். அவர்களை உமது ஆவியால் இரட்சித்தருளும். பரிசுத்த ஆவியானவர்தாமே அவர்கள் ஒவ்வொருவரு மேலும் வந்து, அவர்கள் ஆவியின் கனியாகிய நீடிய பொறுமை, தயவு, சமாதானம், பொறுமை, சாந்தகுணம், விசுவாசம் ஆகியவைகளை பரிசுத்த ஆவிக்குள் பெற்றுக் கனிகொடுக்கும்படி அவர்களுடைய இருதயங்களை நிரப்பும். கர்த்தாவே, இதை அருளும், உம்முடைய சேவைக்காக அவர்களை இப்பொழுது நான் உம்மிடம் உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஒப்படைக்கிறேன். ஆமென்.
172நாம் ஒளியில் நடப்போம்,… (நாம் பாடும்பொழுது நம்முடைய கரங்களை நாம் உயர்த்திடுவோமாக) …அழகான ஒளி, பிரகாசமான இரக்கத்தின் பனித்துளிகள் அங்கிருந்த வருகின்றன; நம்மைச் சுற்றி இரவும் பகலும் பிரகாசிக்கிறது, ஓ, இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன். ஏனெனில் அவர் என்னை முதலில் நேசித்தார், சம்பாதித்தார் என் இரட்சிப்பை, கல்வாரி மரத்தினிலே.
173341 ஓ, அவர் அற்புதமானவரக இருக்கவில்லையா? நாம் இப்பொழுது பத்து அல்லது பதினைந்து நிமிட நேரத்திற்கு அல்லது எவ்வளவு நேரமோ அவ்வளவு நேரத்திற்கு ஞானஸ்நான ஆராதனையை நடத்துவோம். இங்கே ஒரு வாலிபப் பெண்மணி ஞானஸ்நானம் பண்ணப்படுவதற்காக இருக்கிறாள் என்று நான் நினைக்கிறேன். அது சரியா? [“அநேகர் இருக்கின்றனர்” என்று சகோதரன் நெவில் கூறுகிறார்—ஆசி.] சரி, மாலையில் உள்ள ஞானஸ்நான ஆராதனையில் ஞானஸ்நானம் எடுக்க வர இயலாமல் இருந்து, காலையில் உள்ள ஞானஸ்நான ஆராதனையில் ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்? ஒன்று, இரண்டு, மூன்று, இவர்கள் இன்று மதியம் அல்லது மாலை ஆராதனைக்கு முன்பாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் எடுக்க வர இயலாமல் இருக்கிறார்கள். பிள்ளைகளே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களுக்கு முன்பாக திறந்த வாசலை வைத்திருக்கிறதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் உள்ளே பிரவேசிக்க இப்பொழுது ஆயத்தமாக இருக்கிறீர்கள்; நீங்கள் கல்லறைக்குள் போய், பழையவைகளெல்லாம் உங்களுக்கு மரித்ததாக ஆகி, அடக்கம் பண்ணப்படுவதற்காக இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், உங்களுடைய ஞாஸ்நானம் இங்கே உள்ளத்தில் ஏதோ சம்பவித்திருக்கிறது என்பதன் வெளிப்புறத்தில் வெளிப்படுத்திக் காட்டுவதாய் மாத்திரமே அது அமைந்துள்ளது. அப்படியானால் நாம் இந்த ஒளியில் நடப்போம், (ஆயத்தமாகிவிடுவோம்) அழகான ஒளி, ஓ, நம்மைச் சுற்றிலும் இரவும் பகலும் பிரகாசிக்கிறது, ஓ இயேசுவே, உலகின் ஒளியாயிருக்கிறார்.
174342 ஓ, இந்த மகத்தான ஐக்கியம்! நீங்கள் அதைப்பற்றி நல்லதாக உணரவில்லையா? ஓ, நான் மிகவும் நன்றாக இருப்பதாக உணருகிறேன், மாசுபோக்கும் சவுக்காரத்தைக் கையாண்டு, பழங்காலத்து அழுக்குத் தேய்க்கும் தூரிகையைக்கொண்டு தேய்த்து அழுக்கையெல்லாம் அகற்றிடும் ஒரு இடத்தில் இருந்து சுத்தம் செய்யப்பட்டு வந்தது போல் எனக்கு தென்படுகிறது. 343 ஆயத்தமாகி, ஒரு வேளை இன்று காலையில் ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறவர்கள் அனைவரும் எடுக்கக்கூடும் என்று என் சகோதரன் கூறினார். ஞானஸ்நானத்திற்கென்றே உள்ள பிரத்தியேக ஆடைகள் இன்றிரவில் ஈரமாக ஆகிவிடும். ஆனால் நீங்கள் அவ்வாறு ஞானஸ்நானம் எடுக்க விரும்பினால் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் இன்று காலையில் ஞானஸ்நானம் எடுக்க ஆயத்தமாயிருந்தால், எடுத்துக்கொள்ளுங்கள். 344 நாம் இதோடு முடித்துக்கொண்டு கடந்து செல்ல வேண்டுமென எண்ணுகிறேன், அப்படித்தானே சகோதரன் நெவில் அவர்களே? சரி, ஐயா. எத்தனை பேர்கள் இப்பொழுது தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுக்கப் போவதைக் காண விரும்புகிறீர்கள்? ஒரு வேளை இதை நீங்கள் இதுவரையிலும் பார்த்திராவிடில், சில நிமிடங்கள் தங்கித் தரித்து, அதைக் கண்டுவிட்டுப் போங்கள். அப்படித் தங்கியிருந்து அதைக் காண முடியாவிடில் பரவாயில்லை, ஆனால் இரவு ஆராதனைக்கு நிச்சயம் திரும்பி வாருங்கள். ஆனால் ஞானஸ்நான ஆராதனையை கவனிக்க நீங்கள் விரும்பினால் இன்னும் சில நிமிடங்கள் தரித்திருங்கள். நாம் இதை அகற்றுவோம். அங்கே பின்னால் பெரிய கண்ணாடி இருக்கிறது, அதன் வழியாக ஞானஸ்நானத்திற்காக தண்ணீருக்குள் செல்லும் ஒவ்வொருவரையும் அது காண்பிக்கும். அதின் தாக்கம் உங்களுக்கு ஏற்படும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். ஞானஸ்நானத்தில் நாம் கர்த்தரோடு அடக்கம்பண்ணப்படுகிறோம். ஆமென். அவர் மரித்ததுபோல, நாமும் அவருடைய மரணத்தில் அடக்கம்பண்ணப்பட்டு, புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடக்கும்படி, அவருடைய உயிர்த்தெழுதலுக்குள்ளாக நாம் எழுப்பப்படுகிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
175345 இன்றிரவில் உள்ள பாடம் எதைப் பற்றியது என்று எத்தனை பேர் அறிவீர்கள்? அதுதான் லவோத்திக்கேயா ஆகும். சபைக் காலங்களின் உச்சக்கட்டமானதும் கடைசியானதுமாகும். 346 சரி, நாம் ஞானஸ்நான ஆராதனையை நடத்துவோம். டெடி. நீங்கள் விரும்பினால்… 347 நீங்கள் ஞானஸ்நானம் எடுக்க விரும்பினால்… [ஒலி நாடாவில் காலி இடம்—ஆசி.] …ஏற்கனவே ஞானஸ்நானம் எடுத்து விட்டிருந்தால் …இப்பொழுது சிக்காகோவுக்குப் போக வேண்டிய சிலர் உள்ளனர், பாருங்கள். நாம் ஜெபம் செய்வோமாக. 348 கர்த்தராகிய இயேசுவே, அவர்கள் ஆராதனை முழுவதிலும் அமர்ந்திருந்து செவி கொடுத்திருக்கிறார்கள். சிக்காவுக்கு அவர்கள் போகின்றபடியால், நாங்கள் அவர்களை இப்பொழுது உம்மிடம் ஒப்புவிக்கிறோம், கர்த்தாவே. அவர்களோடே செல்லும். கர்த்தாவே, அவர்கள் ஒவ்வொருவரும் அந்த அற்புத ஒளியை தங்களோடு எடுத்துச் சென்று அதை அவர்கள் போகும் ஒவ்வொரு இடத்திலும் சிக்காகோ நகரம் முழுவதிலும் பரவச் செய்வார்களாக. அவர்களோடிரும். மீண்டும் நாங்கள் சந்திக்கிற வரையிலும் அவர்களுடைய ஆவிகள் உம்மில் நங்கூரமிடப்பட்டிருப்பதாக. இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென்.
176349 [சகோ.நெவில் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்—ஆசி.] நாம் நம்முடைய கரங்களை உயர்த்தி, “கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி, உமது நாமத்திற்கு ஸ்தோத்திரம்” என்று கூறுவோம். கர்த்தாவே, உமக்கு நன்றி. நாங்கள் அதை அடையாளங்கண்டு கொள்கிறோம். கர்த்தாவே, வேதத்தில் ஒரு மனிதன் மேல் ஆவியானவர் இறங்கி, தேவனுடைய இரகசியம் யாவற்றையும் கூறி, என்ன நடக்கப் போகிறது என்பதையும் எடுத்துரைத்தார். பிதாவே, நீர் இன்னமும் மாறாத தேவன் என்பதை நாங்கள் அறிவோம். இங்கே இருக்கிற இந்த தாழ்மையான மேய்ப்பனின் மேல் இன்று காலையில் இறங்கினீர். கர்த்தாவே, ஒரு காலத்தில் இவர் நிக்கொலாய் மதஸ்தரின் சபையில் இருந்தார். ஆனால் நீர் அவரை அசைத்தபொழுது, அவர் ஒளியைக் கண்டு, அதிலிருந்து வெளியே வந்துவிட்டார். இங்கோ அவரோடு நீர் பேசத்தக்கதாக அவருடைய இருதயம் உமக்கென்று திறந்ததாய் இருக்கிறது. அவர் தான் என்ன கூறப்போகிறோம் என்பதையே அறியாதவராயிருந்தபொழுது, அவர் எழும்பி நின்று, எங்களுக்கென தீர்க்கதரிசனத்தின் சத்தமாக இருக்கும்படி, தன் மூலமாக பரிசுத்த ஆவியானவர் அசைவாட இடம் கொடுத்தார். பிதாவே, உமக்கு நன்றி. என்னுடைய பயணத்திட்டங்களுக்காக நான் உம்மை நோக்கிப் பார்க்கிறேன். ஆமென்.
177350 [ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பேசுகிறார். ஒலி நாடாவில் காலி இடம். இன்னொரு சகோதரி அதற்குரிய வியாக்கியானத்தைத் தருகிறார்—ஆசி.] ஆமென். நீங்கள் அதை பெற்றுக்கொண்டீர்களா? அது என்னவென்று பார்த்தீர்களா? அந்நிய பாஷையில் பேசின அந்த பெண்மணியின் தொனியையும், அதே தொனியில் அந்த சகோதரியின் வியாக்கியானத்தையும் கவனித்தீர்களா? அவர்களிருவரும் வெவ்வேறு பெண்கள். அவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருந்திருப்பார்களா அல்லது இல்லையா என்றே ஐயுறுகிறேன். அவர்கள்—அவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. அந்த சப்தத்தில் உள்ள தொனியை கவனியுங்கள், அங்கே பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். இங்கே ஜனங்களின் மத்தியில் கிறிஸ்து இருக்கிறர் என்பதை நீங்கள் உணரவில்லையா? அது உண்மை.
178351 சகோதரன் பேட் அவர்களே, நீங்கள் ஏதோ வாசிக்க விரும்புகிறீர்களா? வாசியுங்கள், பாருங்கள். [சகோதரன் பேட் வெளிப்படுத்தின விசேஷம் 22:16ல் இருந்து கர்த்தருடைய நாமத்தில் நான் வாசிக்கிறேன்: “சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படி இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன்” என்று வசனத்தை வாசிக்கிறார்—ஆசி.] ஆமென். 352 இப்பொழுது அது ஆவிக்குரியபிரகாரமான, தெய்வீக வழி நடத்துதலாயுள்ளது. சபையினரினூடாக பரிசுத்த ஆவியானவர் அசைவாடுவதைப் பாருங்கள், அவர்களுக்குள் உலாவிப் பேசுகிறார். ஓ, அவர் அற்புதமானவராக இருக்கிறாரல்லவா? நண்பர்களே, அதைப்பற்றி நாம் எண்ணுகையில், அது வேதத்தில் சொல்லப்பட்டுள்ள அதே காரியம்தான். அது இன்றைக்கு இங்கே இருக்கிறது. அதைப்பற்றி நாம் எண்ணுகையில், அது வேதத்தில் சொல்லப்பட்டுள்ள அதே காரியம்தான். அது இன்றைக்கு இங்கே இருக்கிறது. அதைப்பற்றி இனிமேல் ஆச்சரியப்படத் தேவையில்லை. என்னுடைய விலையேறப்பெற்ற மக்களே, ஓ, வந்து அவரை ஏற்றுக்கொள்ளுங்கள், வந்து அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். 353 டெட்டி, நாங்கள் ஞானஸ்நானத்திற்காக ஆயத்தமாகிக்கொண்டிருக்கையில், (தேவன் உங்களின் இருதயங்களை ஆயத்தமாக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்) அவர் எங்கே என்னை வழி நடத்திச் செல்லுகிறாரோ, நான் அங்கே பின் செல்லுவேன். 354 என்னுடைய சகோதரர்களே நான் உங்களுக்கு இங்கே உதவி செய்யலாமா? நல்லது, நீங்கள் ஒலிப்பெருக்கியின் இணைப்பை துண்டித்துவிடுங்கள். உ—ஊம் [ஒலி நாடாவில் காலி இடம்—ஆசி.] 355 நீங்கள் வந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி அவருடைய வார்த்தையின் ஆலோசனையைக் கொண்டும், ஜீவனுள்ள தேவனைக்கொண்டும் நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன். அதைச் செய்யும்படி வேதம் நம்மை வற்புறுத்திகிற காரணத்தால் நான் அதைச் செய்கிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பவுல் அதைச் செய்யும்படிக் கூறினான்: தூதனே வேறு எதையாவது பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்ககடவன் என்று கூறிவிட்டான். பவுல் செய்ததுபோல நானும்—நானும் என்னுடைய பாதையின் முடிவில் இதை அப்படியே அறிவிக்க விரும்புகிறேன்; தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேன். 356 ஓ, நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? ஓ, நான் எப்படியாய் அவரை நேசிக்கிறேன். சரி. நம்முடைய கலந்து செல்லும் பாடலை நாம் பாடுகையில் நாம் எழும்பி நிற்போமாக. சரி, அந்த நேரம் வரையில் நாம்: இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல், துயரமும், துக்கமுமான பிள்ளையே. அது உனக்கு சந்தோஷத்தையும், ஆறுதலையும் அளிக்கும், நீ எங்கு சென்றாலும் அதை கொண்டு செல். விலையேறப்பெற்ற நாமம் (விலையேறப் பெற்ற நாமம்), ஓ எவ்வளவு இனி…(ஓ எவ்வளவு இனிமையானது), பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாமே. விலையேறப் பெற்ற நாமம் (விலையேறப் பெற்ற நாமம்), ஓ எவ்வளவு இனிமை…(ஓ எவ்வளவு இனிமையானது) பூமியின் நம்பிக்கையும்,…சந்தோஷமுமாமே. இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், நாம் பாடுவோம்: இயேசுவின் நாமத்தில் வணங்கி, சாஷ்டாங்கமாய் அவருடைய பாதத்தில் விழுந்து, நம்முடைய யாத்திரை முடிவுறும் போது… பரலோகத்தில் ராஜாதி ராஜாவாகிய அவருக்கு நாம் முடிசூட்டுவோம்.