முதலாம் முத்திரை

63-0318

இபபழத நம ஜபததறகக நமமடய தலகள வணஙகவமக. எஙகள பரலகப பதவ, உமம ஆரதபபதறகனற வரமபடயக இனனமர தரணம அளககபபடடதறகக இனறரவ நஙகள உமம ஸதததரககறம. நஙகள உயர வழநத, நததய ஜவனன இநத மகததன வளபபட எஙகளககள தஙகயரபபதறகக உமமத ததககறம. பதவ, தவனடய வரததய ஒனறக சரதத ஆரயவதறகன இனறரவ நஙகள கட வநதளளம. இநத மகததன இரகசயஙகள உலகததறறமதறகணட மறககபபடடர

முதலாம் முத்திரை

63-0318ஜெபர்ஸன்வில் இந்தி1691963-03-18

முதலாம் முத்திரை

63-0318ஜெபர்ஸன்வில் இந்தி1691963-03-18

1 இப்பொழுது நாம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை வணங்குவோமாக. எங்கள் பரலோகப் பிதாவே, உம்மை ஆராதிப்பதற்கென்று வரும்படியாக இன்னுமொரு தருணம் அளிக்கப்பட்டதற்காக இன்றிரவு நாங்கள் உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். நாங்கள் உயிர் வாழ்ந்து, நித்திய ஜீவனின் இந்த மகத்தான வெளிப்பாடு எங்களுக்குள் தங்கியிருப்பதற்காக உம்மைத் துதிக்கிறோம். பிதாவே, தேவனுடைய வார்த்தையை ஒன்றாக சேர்த்து ஆராய்வதற்கென இன்றிரவு நாங்கள் கூடி வந்துள்ளோம். இந்த மகத்தான இரகசியங்கள் உலகத்தோற்றமுதற்கொண்டே மறைக்கப்பட்டிருக்கின்றன. அதை ஆட்டுக்குட்டியானவர் ஒருவரே எங்களுக்கு வெளிப்படுத்தித் தர முடியும். இந்த கடைசி காலத்தில் நாங்கள் எப்படி அவருக்கு சிறந்த ஊழியர்களாயிருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ளும்படியாக, இன்றிரவு அவர் எங்கள் மத்தியில் வந்து தமது வார்த்தையை எடுத்து, அதை எங்களுக்கு வெளிப்படுத்த நாங்கள் மன்றாடுகிறோம். ஓ தேவனே, நாங்கள் இப்பொழுது கடைசி நாட்களில் இருக்கிறோம் என்பதை காண்கிறபடியால், கர்த்தாவே, எங்களுடைய ஸ்தானத்தை அறிந்துகொள்ளவும், பலவீனராகிய எங்களுக்கு வெகுவிரைவில் கர்த்தர் வரப்போகிறார் என்னும் நிச்சயத்தை அறிந்துகொள்ள எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 2 “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மனமகிழ்ச்சியாயிருந்தேன்” என்று தாவீது ஒரு முறை கூறியிருக்கிறான் என்று நான் நம்புகிறேன். நாம் இங்கு கூடி வருவது எப்பொழுதுமே பெரும் சிலாக்கியமாகும். நாம் ஒன்று கூடி தேவனுடைய வார்த்தையை ஆராய்வது இந்த மகத்தான நம்பிக்கையை நமக்களிக்கிறது.

23 அநேகர் நின்றுகொண்டிருக்கிறார்கள். எனவே என்னால் முடிந்தளவு துரிதமாக ஆராதனையை முடிக்கப் போகிறேன். கடந்த இரண்டு நாட்களாக பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தினால் நான் களிகூர்ந்தது போல, நீங்கள் களிகூர்ந்திருப்பீர்களென்று நான் நம்புகிறேன். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 4 வெகுகாலமாக எனக்கு நிகழாத ஒரு காரியம் இன்றைக்கு நிகழ்ந்தது. முத்திரைகள் உடைக்கப்படும் பாகத்தை நான் வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். 5 இருபது வருடங்களுக்கு முன்பாக நான் படித்ததுண்டு என்று நான் ஊகிக்கிறேன். ஆனால் அப்பொழுது எனக்கு எவ்விதத்திலும் திருப்தி ஏற்படவில்லை. இந்த முத்திரைகளில் ஏதோ விசேஷித்த ஒன்று அடங்கியிருப்பதாக எனக்குத் தென்பட்டது. ஏனெனில் முத்திரகள் கொண்டது ஒரு முழுப்புஸ்தகமாகும். பாருங்கள்? அது அந்தப் புஸ்தகமாயிருக்கிறது. அந்த முழு புஸ்தகமும் முத்தரிக்கப்பட்டுள்ளது. அது ஆரம்பிக்கிறதோ…

36 உதாரணமாக, நான் இங்கு ஒரு காரியத்தை வைத்திருந்தால், அப்பொழுது நான் என்ன கருதுகிறேன் என்பதை உங்களுக்கு நான் காண்பிப்பேன். [சகோதரன் பிரான்ஹாம் காகிதங்களை உபயோகித்து, புஸ்தகச் சுருளைக் குறித்தும், அது எவ்வாறு முத்திரிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறித்தும் விளக்கிக் காண்பிக்கிறார்—ஆசி.] இதோ ஒரு முத்திரை உள்ளது. இது அந்தவிதமாக மற்றொன்று. அதை இவ்விதம் சுருட்டுகிறோம். கடைசியில் காகிதத்தின் ஒரு சிறு பாகம் அந்தவிதமாக வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும். அது முதலாம் முத்திரை. அது சரி. அது புஸ்தகத்தின் முதல் பாகம். அதன் பின்பு அடுத்த முத்திரை அது மறுபடியும் இவ்விதமாகவே அதன் பக்கவாட்டில் சுருட்டப்பட்டு, முடிவில் வேறொரு பாகம் வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும். அப்படியெனில், ஆக மொத்தம் இரண்டு முத்திரைகள் வைக்கப்பட்டுள்ளன. 7 இந்தவிதமாக சுருள்களாக வேதப் புஸ்தகம் முழுவதுமே அக்காலத்தில் எழுதப்பட்டது. [சகோதரன் பிரான்ஹாம் தான் விளக்கும்படியாக உபயோகித்த காகிதங்களைப் பிரிக்கிறார்—ஆசி.] ஆகவே, இம்முத்திரைகளை நாம் உடைக்கும்போது, புஸ்தகத்தில் உள்ள இரகசியங்கள் வெளியரங்கமாகின்றன.

48 நீங்கள் எரேமியாவின் புஸ்தகத்தைப் படித்தீர்களா? உங்களில் அநேகர் சென்ற இரவு அந்த பாகத்தைக் குறித்துக் கொண்டீர்களா? அது எழுதி முத்திரிக்கப்பட்டு, அவன் எழுபது வருட சிறைவாசம் கழிந்து தன் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வரும்வரை அது வைக்கப்பட்டிருந்தது. 9 நான் அதை ஆராய்ந்து படிக்க நிச்சயம் விரும்புகிறேன். உங்களால்…அவையெல்லாவற்றையும் விவரிக்க இயலாது. ஏனெனில் அது நித்திய வார்த்தையாக, நித்திய புஸ்தகமாக இருக்கிறது. ஆகையால் முக்கியமான பாகங்களை மாத்திரம் நாம் அறிந்து கொள்ள முயல வேண்டும். இன்றைக்கு நான் படித்தபொழுது அநேக வேத வாக்கியங்களை குறித்துக்கொண்டு வந்துள்ளேன். நீங்கள் இவைகளைப் படிக்கலாம். …நீங்கள் ஆராய்ந்து படிக்கையில், ஒலிநாடாக்களில் கேட்கும்போது அதைக் குறித்த அதிகமாகவே வெளிப்படும். அநேகக் காரியங்கள் இருக்கின்றன.

510 எனக்கு அறையினுள் வெளிப்பட்ட விதமாய் எல்லாவற்றையும் நான் உங்களுக்கு இந்த மேடையின் மேல் நின்று வெளிப்படுத்தினால் அது மிகவும் அற்புதமாயிருக்கும். ஆனால் இங்கு நான் வந்தவுடன் ஒருவாறு நெருக்கப்படுவதனால், ஜனங்கள் புரிந்து கொள்ள வேண்டுமெனக்கருதி, சிலவற்றைக் கடந்து முக்கியமான பாகத்தை மாத்திரமே அவர்களுக்கு எடுத்துரைக்க முடிகிறது.

611 சகோதரன் உங்ரன் (Ungren) தம்முடைய மகிமையை விட்டு இறங்கி வந்தார் என்னும் பாட்டை இப்பொழுது பாடினார். அதை நான் நிச்சயமாகவே பாராட்டுகிறேன். அவர் தம்முடைய மகிமையை விட்டு இறங்கி வரவில்லையென்றால், இன்றிரவு நம்முடைய நிலை என்னவாயிருக்கும்? ஆகவே நமக்கு உதவி செய்ய அவர் இறங்கி வந்ததற்காக அவருக்கு நாம் நன்றியுள்ளவர்களாயிருப்போம்.

712 இப்பொழுது அநேகர் நின்றுகொண்டிருப்பதால், நம்மால் முடிந்தவரை துரிதமாக முடிக்க முயல்வோம். அதாவது துரிதமாக முடித்து விடுவேன் என்ற கருத்தில் நான் கூறவில்லை. நம்மால் முடிந்தவரை ஆராதனையை சீக்கிரம் துவக்கலாம் என்ற கருத்தில் நான் கூறினேன். இப்பொழுது நாம் திருப்புவோம், இப்பொழுது, பிறகு… 13 நாம் இதுவரை வெளிப்படுத்தின விசேஷம் 1-ம் அதிகாரம், 2-ம், 3-ம், 4ம் அதிகாரம் வரை பார்த்துவிட்டோம். சென்ற இரவு 5-ம் அதிகாரத்தை தியானித்தோம். இன்றிரவு நாம் வெளிப்படுத்தின விசேஷம் 6-ம் அதிகாரத்தை துவங்கியிருக்கிறோம். 14 இப்பொழுது, நாம் இந்த அதிகாரத்தை ஆராயும்போது, பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் காணப்படும் அநேக பாகங்களை நாம் குறிப்பிட நேரிடும். ஏனெனில் அந்த புஸ்தகம் முழுவதுமே இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. பாருங்கள்? அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முழுமையாக வெளிப்படுத்துகிற புஸ்தகமாய் உள்ளது. தேவன் தம்மையே இந்த புஸ்தகத்தில் வெளிப்படுத்துகிறார், தேவன் தம்மை கிறிஸ்துவின் மூலமாய் இப்புஸ்தகத்தில் வெளிப்படுத்துகிறார். கிறிஸ்து தேவனுடைய வெளிப்படுத்தலாயிருக்கிறார். அவர் தேவனை வெளிப்படுத்த வந்தார். ஏனெனில் அவரும் தேவனும் ஒன்றாயிருக்கின்றனர். “தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து உலகத்தை தம்மோடு கூட ஒப்புரவாக்கினார்”. வேறுவிதமாகக் கூறினால், நீங்கள் காணும்படியாக தேவன் கிறிஸ்துவின் மூலம் தம்மை வெளிப்படுத்தாதிருந்தால், தேவன் யாரென்பதை நீங்கள் ஒருபோதும் அறிந்து கொண்டிருக்கவே மாட்டீர்கள். 15 பல வருடங்களுக்கு முன்னால், தேவன் என் பேரில் கோபங்கொண்டிருக்கிறார். ஆனால் கிறிஸ்து என்னை நேசிக்கிறார் என்று நான் நினைத்ததுண்டு. உண்மையைக் கூறினால், அவர்களிருவரும் ஒருவர்தான் என்பதை பின்பு கண்டு கொண்டேன். பாருங்கள், கிறிஸ்து தேவனுடைய இருதயமாயிருக்கிறார்.

816 இப்பொழுது நாம் இதை ஆராய்ந்து படிக்கையில், நாம் அதை இப்பொழுது ஒப்பிட்டு பார்த்துக்கொண்டிருக்கிறோம். வெளிப்படுத்தின விசேஷத்தில் முதல் மூன்று அதிகாரங்களும், அதைக் குறித்து நாம் நன்கு ஆராய்ந்தோம், ஏழு சபையின் காலங்களை விவரிக்கின்றன. ஏழு சபை காலங்கள் அல்லாமல், ஏழு முத்திரைகள், ஏழு எக்காளங்கள், கலசங்கள், தவளைகள் போன்ற அசுத்த ஆவிகள் இவையெல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டுள்ளன. 17 என்னே, ஒரு பெரிய படம் வரைந்து இவையெல்லாவற்றையும் அதனதன் ஸ்தானத்தில் பொருந்தி, நான் காண்கிற விதத்தில் உங்களுக்கு விவரிக்க எனக்கு மிகவும் ஆசையாயிருக்கிறது. அதை ஒரு சிறிய காகிதத் துண்டில் வரைந்து வைத்திருக்கிறேன். ஆனால், நான்…நீங்கள் அறிவீர்கள். இதுவரையில் எல்லாமே அதில் சரியாக அமைந்துள்ளன. வந்துபோன காலங்கள் அனைத்தும் சரியாக பொருந்துகின்றன. நான் வரைந்தது ஒருக்கால் எல்லாமே சரியாயிராது. ஆனால் அவ்வளவுதான் நான் அறிந்தது. என்னால் முயன்றவரை நான் சிறப்பான ஒரு செயல் புரிந்து, அதில் ஏதாவது ஒரு தவறு நேரிடின், தேவன் நிச்சயமாக அப்பிழையை மன்னிப்பார் என்று நான் நன்றாய் அறிவேன்.

918 ஆனால், இப்பொழுது, முதல் மூன்று அதிகாரங்கள் ஏழு சபையின் காலங்களைப் பற்றினவை, அதன் பின்னர் வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரத்தில் யோவான் பரலோகத்திற்கு எடுக்கப்படுகிறான் என்பதை நான் கண்டறிகிறோம். பாருங்கள்? நாம் சபையின் காலங்களைக் காண்கிறோம். சபையின் காலங்களைக் குறித்து அதிகம் சொல்லப்படவில்லை. அங்கேதான் ஜனங்கள் ஆச்சரியமடையப் போகின்றனர் என்று நான் நினைக்கிறேன். சம்பவிக்கப்போகிற உபத்திரவ காலத்திற்குள் அவர்கள்—அவர்கள்—அவர்கள்—சபையைப் பொருத்துகின்றனர். நான் ஞாயிற்றுக்கிழமை, நேற்று கூறினபடி உபத்திரவகாலம் வரும்போது எடுக்கப்படுதல் ஏன் சம்பவிக்கவில்லை என்று அநேகர் கேட்பார்கள். அப்பொழுது எடுக்கப்படுதல் ஏற்கனவே நிகழ்ந்திருக்கும். ஆனால் அவர்கள் அதை அறியாமலிருப்பார்கள். அது எவ்விதம் இருந்ததோ, அவ்விதமே இருக்கும். அது கடந்து சென்றதை அவர்கள் அறியமாட்டார்கள். பாருங்கள்? 19 இப்பொழுது மணவாட்டியாகிய புறஜாதி சபைக்கு அநேக வாக்குத்தத்தங்கள் அளிக்கப்படவில்லை. இப்பொழுது, ஆகவே ஒரு சபையும் ஒரு மணவாட்டியும் உள்ளனர் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். பாருங்கள்?

1020 எல்லாமே மூன்று மூன்றாக அமைய வேண்டும். நான்காக அல்ல. அது தவறு. மூன்று, ஏழு, பத்து, பன்னிரெண்டு, இருபத்துநான்கு, நாற்பது, ஐம்பது, உடைபடாத முழு எண்கள். தேவன் தம்முடைய செய்திகளை வேதத்தின் எண்களைக் கொண்டு அந்த எண்களில் உறுதிப்படுத்துகிறார். நீங்கள் கவனியுங்கள்…இந்த எண்களைத் தவிர, குறைவான எண்கள் உண்டானால், அடுத்து நிகழும் சம்பவத்துடன் அது பொருந்தாது. அப்பொழுது ஆரம்பத்திலிருந்து நீங்கள் மறுபடியும் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்.

1121 சகோதரன் வேல், சகோதரன் லீ வேயில், (Lee vayle) அவர்—அவர்…இங்கிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அன்றொருநாள் பாதையை விட்டு விலகிச் செல்லும் மனிதரைக் குறித்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். இது ஒரு இலக்கை நோக்கிச் சுடுவது போன்றதாகும். துப்பாக்கி சரிவர அமைந்து சுடுபவர் சரியான பயிற்சி பெற்று, இலக்கை நன்றாக நோக்கி சுட்டால் குண்டு இலக்கை அடிக்கும். சுடும்போது துப்பாக்கியின் குழாய் குறியை விட்டு அசைந்து போனால், அல்லது அதிர்ச்சியினால் ஆடிபோனால், அல்லது பலத்த காற்று அதை அசைத்தால், குறி தவறிப்போகும். எங்கிருந்து அதை துவங்கினாலும், மீண்டும் இலக்கை சரியாகச் சுடவேண்டுமானால் ஆரம்பத்திலிருந்து துப்பாக்கியை சரிவர அமைத்து சுடவேண்டும். இல்லையெனில் குறி மறுபடியும் தவறிவிடும்.

1222 வேதம் வாசிப்பதும் அவ்விதமாகவே அமைந்துள்ளது என்று நான் நம்புகிறேன். நாம் அதை ஆராயத்தொடங்கி அது சரிவர அமையவில்லையெனில், நாம் எங்கேயோ தவறு செய்திருக்கிறோம் என்பது அதன் அர்த்தம். ஆகையால் நாம் மீண்டும் அதை ஆரம்பத்திலிருந்து படிக்க வேண்டும். நாம் ஞானத்தை உபயோகித்து அதை புரிந்து கொள்ள முடியாது. அது… 23 வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அதைச் செய்ததில்லை, செய்யவும் முடியாது என்று வேத வசனங்களை கொண்டு நாம் அறிந்து கொண்டோம். ஆட்டுக்குட்டியானவர் மாத்திரமே அதை செய்ய முடியும். ஆகவே வேதபள்ளிகள் அளிக்கும் வியாக்கியானம் எதுவாயினும் அது ஒன்றுமில்லை. பாருங்கள்? ஆட்டுக்குட்டியானவர் மாத்திரமே அதை வெளிப்படுத்த முடியும். அது சரி. அவர் நமக்குதவி செய்வார் என்று நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

1324 “முன்னே நடந்தும், இப்பொழுது நடக்கிறதும், இனி நடக்கப் போகிற” காரியங்களையும் காண்பதற்கென யோவான் 4-ம் அதிகாரத்தில் பரலோகத்திற்கு எடுக்கப்பட்டான். ஆனால் சபையானது 4-ம் அதிகாரத்தில் முடிவுறுகின்றது. கிறிஸ்து சபை தம்மை சந்திக்கும்படியாக அதை ஆகாயத்தில் எடுத்துக் கொள்கின்றார். வெளிப்படுத்தின விசேஷம் 19-ம் அதிகாரம் வரை அது மீண்டும் காணப்படுவதில்லை. அந்த அதிகாரத்தில் இயேசு ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக சபையுடன் திரும்ப வருகிறார். எப்பொழுதாவது ஒருநாள் அவர் வருவார். இப்பொழுது, ஓ…அதற்கு முன்னால் இவை யாவையும் விவரித்து முடிக்கலாமென நம்புகிறேன். அவ்வாறு இயலாவிடில், அதன் சாரம்சத்தையாவது நாம் அறிந்து கொள்ளலாம்.

1425 இப்பொழுது 5-ம் அதிகாரத்தில் இந்த முத்திரைகளை உடைத்தலையும், ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட புஸ்தகத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. முதலாவதாக, நாம் முதலாம் முத்திரையை வாசிப்போம். 26 ஆனால் அதற்கு முன்பு, இதற்கு ஆதாரமாக நேற்று மாலை கூறினவைகளைப் பார்ப்போம். அந்த புஸ்தகம் அதன் மூல சொந்தக்காரராகிய தேவனின் கையில் இருப்பதை யோவான் கண்டான். அது எப்படி இழக்கப்பட்டது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆதாமின் மூலமே. சாத்தானின் விவேகத்தைப் பெற்று அவன் ஜீவ புஸ்தகத்தை பறி கொடுத்து, தனக்கிருந்த உரிமை யாவையும் அவன் இழந்து போனான். அவனை மீட்பதற்கு வேறு வழியே இல்லாமலிருந்தது. பின்னர் தேவன் மனித ரூபங்கொண்டு, இறங்கி, நம்மை மீட்கும்படியாக ஒரு மீட்பரானார். 27 ஆகவே கடந்த காலங்களில் இரகசியமாயிருந்தவை இக்கடைசிகாலத்தில் நமக்கு வெளிப்படவேண்டியிருக்கிறது என்பதை நாம் இப்பொழுது கண்டறிகிறோம்.

1528 இனத்தான் மீட்பர் முன்னே தம்முடைய உரிமைகளைக் கோரும்படியான அழைப்பை யோவான் கேட்டபோது, வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது ஒருவனும் அதைச் செய்ய பாத்திரவானாகக் காணப்படவில்லை என்பதை இப்பொழுது நாம் கண்டறிகிறோம். அந்தப் புஸ்தகத்தைப் பார்ப்பதற்கும்கூட யாரும் பாத்திரவானாக இல்லை. அதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். அதைப் பார்ப்பதற்கு ஒருவருமே பாத்திரவானாயில்லை. 29 ஆகவே, யோவான் அப்பொழுது அழத் தொடங்கினான். அப்படியானால், மீட்கப்படுவதற்கு எவ்வித வாய்ப்புமில்லை என்று யோவான் அறிந்து கொண்டான். ஓ! எல்லாமே தோல்வி கண்டிருந்தது. 30 ஆனால் யோவானின் அழுகை விரைவில் நின்றது என்பதை நாம் கண்டறிகின்றோம். ஏனெனில் நான்கு ஜீவன்களில் ஒன்று இல்லை…சரியாகக் கூறினால், மூப்பர்களில் ஒருவன், “யோவானே, அழவேண்டாம். புஸ்தகத்தை திறப்பதற்கு யூதா கோத்திரத்து சிங்கமானவர் ஜெயங்கொண்டிருக்கிறார்” என்றான். வேறுவிதமாகக் கூறினால், “அவர் மேற்கொண்டு, ஜெயங்கொண்டார்.

1631 யோவான் திரும்ப பார்த்து, ஒரு ஆட்டுக்குட்டி வருவதைக் கண்டான். அது இரத்தம் தோய்ந்ததாய், அடிக்கப்பட்டு காயப்பட்டதாயிருக்க வேண்டும். “அடிக்கப்பட்டவண்ணமாயிருந்த ஒரு ஆட்டுக்குட்டி…” உண்மையாகவே அது இன்னமும் இரத்தம் தோய்ந்ததாயிருந்தது. நீ ஒரு ஆட்டுக்குட்டியை வெட்டுவாயானால் அந்த ஆட்டுக்குட்டி கொல்லப்பட்ட விதமாகவே செய்வாயானால் அது இரத்தம் தோய்ந்ததாயிருக்கும். ஆகவே ஆட்டுக்குட்டி உண்மையாகவே இரத்தம் தோய்ந்ததாயிருக்கின்றது. அது சிலுவையில் துண்டு துண்டாக துண்டிக்கப்பட்டது. விலாவில் ஈட்டியால் குத்தப்பட்டு கைகள் ஆணிகளால் கடாவப்பட்டு, தலை முள்முடியால் சூட்டப்பட்டிருந்தது. அவர் மிகவும் கோரமான, பயங்கரமான நிலையில் இருந்தார். இத்தகைய ஆட்டுக்குட்டியானவர் புறப்பட்டு வந்து, மீட்பின் முழு உரிமைப் பத்திரத்தைக் கையில் கொண்டவராய் சிங்காசனத்தில் வீற்றிருந்தவரின் அருகில் சென்று, அப்புஸ்தகத்தை அவர் கையிலிருந்து எடுத்து, முத்திரைகளை உடைத்து, புஸ்தகத்தைத் திறந்தார். 32 இச்சம்பவம் நிகழ்ந்தபோது, பரலோகத்தில் மகத்தான காரியங்கள் நடைபெற்றன என்பதை நாம் கண்டோம். இருபத்து நான்கு மூப்பர்களும், ஜீவன்களும், பரலோகத்தில் உள்ள யாவரும், “பாத்திரவான்” என்று ஆர்ப்பரிக்கத் துவங்கின. இதோ தூதர்கள் வந்து பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களை ஊற்றினர். பலிபீடத்தின் கீழிருந்த பரிசுத்தவான்கள் சத்தமிட்டனர், “ஆட்டுக்குட்டியானவரே நீர் பரிசுத்தவானாயிருக்கிறீர். நீர் எங்களை மீட்டுக்கொண்டு எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர். நாங்கள் பூமியிலே அரசாளுவோம்” என்று பாடினர். ஓ, என்னே! அவர் புஸ்தகத்தைத் திறந்தபோது பரலோகத்தில் இவ்விதம் சம்பவித்தது.

1733 நீங்கள் பாருங்கள். அந்த புஸ்தகம் உண்மையாகவே உலகத்தோற்றத்துக்கு முன்னாலேயே திட்டமிடப்பட்டு எழுதப்பட்டது. கிறிஸ்துவும் ஆட்டுக்குட்டியானவராக உலகத்தோற்றத்துக்கு முன்னமே அடிக்கப்பட்டார். அவருடைய மணவாட்டி அங்கத்தினரின் பெயர்கள் உலகத்தோற்றத்துக்குமுன்னமே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டன. ஆனால் அப்பொழுது அது முத்திரிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுதோ அதில் யாருடைய பெயர்கள் உள்ளன என்பதைக் குறித்த யாவும் வெளிப்படுத்தப்படுகின்றன. என்ன ஒரு மகத்தான காரியம். 34 யோவான், “ஆமென். துதியும் கனமும் அவருடையது” என்று அவன்—அவன் கூறியதை பரலோகத்திலுள்ள யாவரும், பூலோகத்திலுள்ள அனைவரும் கேட்டதாக உரைக்கிறான். பரலோகத்தில் அவனுக்கு அது ஒரு மகத்தான தருணமாயிருந்தது. ஏனெனில் “ஆட்டுக்குட்டியானவர் பாத்திரவானாயிருந்தார்.”

1835 ஆகவே இப்பொழுது ஆட்டுக்குட்டியானவர் நின்று கொண்டிருக்கிறார். இப்பொழுது இன்றிரவு நாம் 6-ம் அதிகாரத்தை தியானிக்க தொடங்கும் இச்சமயத்தில் ஆட்டுக்குட்டியானவர் புத்தகத்தை கையில் ஏந்தியவாறு நின்றுக்கொண்டு, இரகசியங்களை வெளிப்படுத்த தொடங்குகிறார். 36 ஓ, இன்றைக்கு முற்றிலுமாக நான் கூறுவதைப் புரிந்து கொள்ள ஜனங்கள் ஆவிக்குரியவர்களாக இருக்கிறார்களென்று நம்புகிறேன். இன்று பகல் பன்னிரெண்டு மணிக்கு பரிசுத்த ஆவியானவர் என் அறைக்குள் நிழைந்து, நான் உங்களிடம் கூறத்தக்கதாக நான் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த ஒன்றை திருத்தியிராவிட்டால், நான் உங்களிடம் இன்று செய்தியளிக்கும்போது, பயங்கரமான தவறு ஒன்றைப் பிரசங்கித்திருப்பேன். 37 நான் பழைய பிரசங்கங்களிலிருந்து சிலவற்றை எடுத்து அப்பொழுது குறிப்பு எழுதிக் கொண்டிருந்தேன். அதைக் குறித்து என்னிடம் வேறொன்றும் இல்லாதிருந்தது. இரண்டாம் முத்திரையின் இரகசியம் எனக்குத் தெரியாது. அநேக வருடங்களுக்கு முன்னர் இதைக் குறித்து நான் அளித்த செய்தியிலிருந்து சில குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான் டாக்டர் ஸ்மித் (Dr. Smith) என்பவரின் கருத்துக்களையும், அநேக பிரசித்தி வாய்ந்த போதகர்கள் கொண்டிருந்த கருத்துக்களையும் ஒன்று தொகுத்து அப்பிரசங்கத்தை நான்—நான் ஆயத்தம் செய்தேன். அவர்கள் யாவரும் அதைத்தான் விசிவாசித்தனர். ஆகவே நான் அதை எடுத்து எழுதிவைத்திருந்தேன், இவைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு முதலாம் முத்திரையை இந்த கோணத்திலிருந்து படிக்கலாமென்று தீர்மானம் செய்தேன். 38 ஆனால் இன்று ஏறக்குறைய பன்னிரெண்டு மணிக்கு பரிசுத்த ஆவியானவர் வேகமாய் அறைக்குள் நுழைந்தார். உடனே, இந்த—இந்த முதலாம் முத்திரையைக் குறித்த இரகசியம் முழுவதும் திறக்கப்பட்டு வெளிப்பட்டது. நான் இன்றிரவு இங்கே நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிஜமோ, அதைப் போலவே நான் இங்கு கூறப் போகின்ற சுவிசேஷ சத்தியமும் நிஜமாகவே இருக்கின்றது. அதை நான்—நான் சற்று முன்பு தான் அறிந்தேன்.

1939 ஏனெனில் ஒரு வெளிப்பாடு தேவனுடைய வார்த்தைக்கு முரண்பட்டதாயிருந்தால் அது வெளிப்பாடே அல்ல. உங்களுக்குத் தெரியுமா? சில காரியங்கள் சத்தியமாக தென்படும். ஆனால் அவை சத்தியமாய் இல்லாமல் இருக்கக்கூடும். பாருங்கள்? அது அதைப்போலத் தோன்றும். ஆனால் அது அதுவல்ல.

2040 ஆட்டுக்குட்டியானவர் இப்பொழுது புத்தகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார் என்று நாம் காண்கிறோம். 6-ம் அதிகாரத்தை இப்பொழுது படிப்போம். ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்: அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.

2141 இப்பொழுது, அது முதலாம் முத்திரை. இந்த ஒன்றை நாம் இன்றிரவு தேவகிருபையைக் கொண்டு விரிவாக விவரிக்கப் போகிறோம். ஒரு மனிதன் இதனை தன் சொந்த ஞானத்தினால் வியாக்கியானம் செய்ய முயன்றால், அவன் ஆபத்துக்கள் நிறைந்த நிலத்தின் மேல் நடக்கிறான். நீ என்ன செய்கின்றாய் என்பதை அறியாமல் இருக்கிறாய் என்றால்…பாருங்கள்? ஆகவே, அது எனக்கு வெளிப்பாட்டினால் வருமானால் அதை நான் உங்களுக்குக் கூறுவேன் அல்லது அதை நான் என் சிந்தனையின் மூலம் எடுப்பேனாகில் அதைக் குறித்து நான் பேசுமுன்னரே உங்களுக்கு நான்—நான் அதைக் கூறிவிடுவேன். நான் இன்றிரவு இங்கே நின்று கொண்டிருப்பது எவ்வளவு உறுதியோ, அதேபோல் நான் கூறப்போகும் இதன் விளக்கம் நான் சர்வ வல்லவரிடமிருந்து இன்று நேரடியாகப் பெற்ற வெளிப்பாடு என்பது உறுதி. வேதத்தின் இப்பகுதிக்கு வரும்பொழுது, நான் மாறாகக் கூறுகின்ற சுபாவம் உடையவனல்ல. நான்—நான்… 42 நான் இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது என்ன என்பது உங்களுக்கு புரிகிறது என்று நான் நம்புகிறேன், நீங்கள் பாருங்கள். இப்பொழுது, நீங்கள் சிலவற்றை சொல்ல முடியாது…ஏதோ ஒன்று இங்கு வைக்கப்படுவதாயிருந்து, அது இங்கு வைக்கப்படுவதற்கு முன்பாகவே நாம் அதைக் குறித்துப் பேச முடியாது. பாருங்கள்? உங்களுக்குப் புரிகின்றதா? நீங்கள் ஏதோ ஒன்றை கவனிக்கிறீர்களா? பாருங்கள்?

2243 இப்பொழுது, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்ட சுருள் புஸ்தகம் இப்பொழுது ஆட்டுக்குட்டியானவரால் வெளியிடப்படுகிறது. அந்தப் பகுதியைத்தான் நாம் இன்றிரவு அணுகுகிறோம். தேவன் நமக்கு ஒத்தாசை செய்வாராக. முத்திரைகள் உடைக்கப்பட்டு, வெளிப்படும்போது, புத்தகத்தில் உள்ள இரகசியங்கள் வெளிப்படுகின்றன. 44 இப்பொழுது பாருங்கள், இதுதான் முத்திரிக்கப்பட்ட புஸ்தகம். இப்பொழுது நாம் அதை நம்புகிறோம். நாம் நம்பவில்லையா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அது முத்திரிக்கப்பட்ட புஸ்தகம் என்று நாம் நம்புகிறோம். முத்திரிக்கப்பட்ட அந்த புஸ்தகத்தை நாம் முன்பு ஒருபோதும் அறிந்ததில்லை. ஆனால் அது, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்தது. அது, புஸ்தகத்தின் பின்புறத்திலே ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்தது.

2345 நாம் இந்தவிதமான புஸ்தகத்தைக் குறித்துப் பேசுவோமானால், அது ஒவ்வொரு முத்திரையாக ஏழு தோல் வார்களில் (Straps) கட்டப்பட்டிருந்தது. [சகோதரன் பிரான்ஹாம் ஒரு புஸ்தகத்தை எடுத்து விளக்கிக் காண்பிக்கிறார்—ஆசி.] ஆனால் அது இதைப் போன்ற புஸ்தகம் அல்ல. 46 அது ஒரு சுருளாயிருந்தது. அந்த சுருளை அவிழ்க்கும்போது, முதலாவது வருகின்றது. அதன்பின் இரண்டாம் முத்திரை அங்குள்ளது அதனுள்ளே என்ன எழுதப்பட்டுள்ளது என்று அது கூறுகின்றது. ஆனால் அது ஒரு இரகசியமாயுள்ளது. ஆனால் அதேசமயத்தில் நினைவு கொள்ளுங்கள். அந்தப் புஸ்தகமானது முத்திரிக்கப்பட்டிருந்த போதிலும், நாம் அதை ஆராய்ந்துள்ளோம். இப்புஸ்தகம் இரகசியம் அடங்கிய வெளிப்பாடான புஸ்தகமாயுள்ளது. பாருங்கள். இந்தப் புஸ்தகம், இயேசு கிறிஸ்துவைக் குறித்த வெளிப்படுத்தல்களின் புஸ்தகம், காலங்கள் முழுவதுமாக மனிதன் அதை ஆராய்ந்து அதற்குள் இருப்பதைப் பெற்றுக்கொள்ள முயன்றான் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாமனைவரும் அதை அறிந்துள்ளோம்.

2447 ஒரு முறை, நான் நினைவு கூறுகிறேன். திரு. போகன்னான், இப்பொழுது அவர் இன்றைய கூட்டத்தில் இருந்தால், அல்லது அவர் பந்துக்கள் யாராயினும் இருந்தால், நான்—நான் இப்பொழுது கூறப்போவதை அவமரியாதையாகக் கொள்ள வேண்டாம். திரு. போன்னான் என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் நான் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அவர் அரசாங்க பொது சேவைத் துறை மேற்பார்வையாளராக இருந்தார். நான் இரட்சிக்கப்பட்டவுடன், ஒரு நாள் அவருடன் வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அதற்கு அவர், “நான் அதை வாசிக்க முயற்சித்திருக்கிறேன்,” என்றார். திரு. போகன்னான் ஒரு அருமையான மனிதர். அவர்—அவர் ஒரு ஸ்தாபனத்தில் அங்கத்தினராயிருந்தார். ஆனால் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர் என்று நான் அறியேன். அவர் என்னிடம், “யோவான் காரமுள்ள உணவை அன்றிரவு வயிறு புடைக்கத் தின்று உறங்கச் சென்றிருப்பான் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

2548 நான் அதை அவரிடத்தில் கூறியிருந்தபோது, என்னுடைய வேலையே பறிபோயிருக்க முடியும், ஏனென்றால் நான், “அதைக் கூற நீங்கள் வெட்கப்படவில்லையா?” என்று கேட்டேன். நான் அப்பொழுது ஒரு வாலிபப் பையனாய் இருந்தேன். ஆனால் நான், “தேவனுடைய வார்த்தையைக் குறித்து அவ்விதம் கூற நீங்கள் வெட்கப்படவில்லையா?” என்று கேட்டேன். பாருங்கள்? அப்பொழுது எனக்கு இருபத்திரண்டு அல்லது இருபத்திமூன்று வயதாயிருக்கும். வேலைக் கிடைப்பதென்பது அந்தநேரத்தில் அபூர்வமாயிருந்தது, ஆயினும் தேவனுடைய வார்த்தை எவ்விதத்திலாவது அவமதிக்கப்படுவதை நான் கேட்கும்பொழுது, எனக்கு ஒரு பயம் ஏற்படுவதுண்டு. அது சத்தியமாகும். அனைத்துமே சத்தியம். யோவான் கண்டது ஒரு சொப்பனமன்று; அல்லது ஒரு தீயக்கனவும் (nightmare) அல்ல. அவன் ஆகாரம் உட்கொண்டதனாலும் அல்ல. 49 அவன் தேவனுடைய வார்த்தையைப் புத்தக வடிவில் எழுத முயன்றதன் காரணத்தால், ரோம அரசாங்கத்தாரால் பத்மு தீவுக்கு அவன் நாடு கடத்தப்பட்டான். கர்த்தருடைய நாளில் அவன் அத்தீவில் இருந்தான். அவனுக்குப் பின்னால் எக்காள சத்தம் போன்ற ஒரு பெரு வெள்ளத்தின் சத்தத்தைக் கேட்டு அதைப் பார்க்கத் திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளைக் கண்டான். அங்கே அவைகளின் மத்தியில் தேவகுமாரன் நின்று கொண்டிருந்தார். இப்பொழுது…

2650 அந்த புஸ்தகம் ஒரு வெளிப்பாடாக உள்ளது. வெளிப்பாடு என்பது அதுவரை அறிவிக்கப்படாத ஒன்றை வெளிப்படுத்தலாகும். இப்பொழுது…நீங்கள் அதை மறவாதபடிக்கு, இதைக் கவனியுங்கள். “அது கடைசிகாலம் வரை அறிவிக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது”. பாருங்கள்? “அதில் அடங்கியுள்ள இரகசியம் முழுமையும் கடைசிகாலம் வரை அறிவிக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது”. அவ்வாறு வேதம் கூறுவதை நாம் இங்கே பார்க்கலாம்.

2751 இப்பொழுது முத்திரைகள் உடைக்கப்படும்போது அப்புஸ்தகத்தில் அடங்கியுள்ள இரகசியங்கள் வெளிப்படும். முத்திரைகள் முற்றிலும் உடைக்கப்பட்டுவிட்டால், மீட்பின் சமயம் முடிவடைந்து விட்டது ஏனெனில் அப்பொழுது ஆட்டுக்குட்டியானவர் தம் மத்தியஸ்த உத்தியோகஸ்த்தை விட்டுவிட்டு தம் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வந்து விடுவார். அதன் நடுவில் அவர் மத்தியஸ்தராய் இருந்தார். ஆனால் முத்திரைகள் உடைக்கப்படுவது ஆரம்பிக்கையில், அவைகளைக் குறித்த உண்மையான வெளிப்படுத்தல்கள் சம்பவிக்கும்பொழுது, ஆட்டுக்குட்டியானவர் பிரகாரத்தைவிட்டு முன் வருகிறார். அது வார்த்தையின்படியாய் உள்ளது. நாம் சென்ற இரவு அதை வாசித்தோம். அவர் புறப்பட்டு வந்து புஸ்தகத்தை எடுத்தார். அப்பொழுது அவர் மத்தியஸ்தரல்ல. ஏனென்றால் அவர்கள் அவரை சிங்கம் என்று அழைத்தனர். அப்படியானால் அவர் ராஜா. அப்பொழுது அவர் மத்தியஸ்தரல்ல.

2852 இந்த முத்திரைகளிலுள்ள நடிகர்கள் முதலாம் சபையிலேயே நடிக்க ஆரம்பிக்கின்றனர். இவைகளின் பின்னனியை நம்மால் முடியுமளவிற்கு அவைகளை நாம் முழுமையாகப் பெற்றுக்கொள்வோம் என்பதை இப்பொழுது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் தன் முகமூடிகளை மாற்றுவதினால்தான் நடிகன் எனப்படுகிறான். ஆகவே தான் “நடிகர்கள்” என்று நான் கூறுகிறேன். பாருங்கள்? 53 இன்றிரவு நாம் சிந்திக்கப்போகும் நாடகத்தில், சாத்தான் அவனது முகமூடியை மாற்றிக்கொண்டே போவதை நாம் காணப்போகிறோம். மற்ற நடிகர் அனைவரும் அவ்விதமே செய்கின்றனர். 54 கிறிஸ்து ஆவியின் ரூபமாயிருந்து மனிதரூபம் கொண்டபோது அவர் ஒரு நடிகனின் ஆடையை உடுத்திக் கொண்டார். அதாவது மனித உடல். அவர் மீட்கும் இனத்தான் ஆவதற்கு மனிதரூபம் கொண்டு இறங்கி வந்தார்.

2955 இப்பொழுது—இப்பொழுது, நீங்கள் பாருங்கள், அது ஒரு நடிகனின் ரூபம் மாத்திரமே. அதன் காரணமாகத்தான் எல்லாமே ஜீவன், மிருகம் போன்ற உவமைகளாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில் இது ஓர் நாடகமாகும். இந்த நடிகர்கள் முதலாம் சபையின் காலம் தொடங்கி நடிக்கின்றனர். ஏனெனில் கிறிஸ்து தம்மை ஏழு சபையின் காலங்களுக்கு வெளிப்படுத்துகின்றார். இப்பொழுது நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] சரி. பாருங்கள். கிறிஸ்து தம்மை ஏழு சபையின் காலங்களுக்கு வெளிப்படுத்துகின்றார். 56 இந்த ஏழு சபையின் காலங்கள்தோறும் ஒரு பெரிய குழப்பம் ஏற்படுகிறது. சபையின் கால முடிவில், ஏழாம் தூதனின் செய்தி சபையின் காலங்களில் வெளிப்படாத இரகசியங்களை சபைக்கு வெளிப்படுத்தித் தரும். பாருங்கள்? நாம் அதை இப்பொழுது காணலாம்.

3057 ஆனால் அவைகளின் உண்மைநிலை அப்பொழுது வெளிப்படவில்லை. வேதம் கூறும் காலங்களில் இரகசியங்கள் உண்டாயிருந்தன. அவர்கள் யாவரும் யோவான் கண்டவிதமாகவே இச்சம்பவங்களை அர்த்தங்கொண்டனர். இப்பொழுது யோவான் “வெள்ளைக் குதிரையின் மேல் சவாரிசெய்யும் ஒருவன்” என்றான். ஆனால் அதைக் குறித்த இரகசியம் என்னவென்றால், அந்த சவாரிசெய்பவனோடு ஒரு இரகசியம் செல்கிறது. இப்பொழுது அது என்னவாயிருந்தது என்பதை அவர்கள் அறியவில்லை, ஆனால் அது வெளிப்பட வேண்டும். ஆட்டுக்குட்டியானவர் இனத்தான் மீட்பராக மத்தியஸ்த ஊழியம் செய்து, பிதாவின் சிங்காசனத்தை விட்டு புறப்பட்ட பின்னர் இந்த இரகசியங்களின் அர்த்தம் வெளிப்படும்.

3158 நான் இப்பொழுது ஒன்றைக் கூறப்போகிறேன். இப்பொழுது யாராவது இந்த ஒலிநாடாக்களைப் பெற்றுக் கொண்டால்…எந்த மனிதனும் அவன் விரும்பியதைப் பேசலாம். சரியென்று அவனுக்குக் காணப்படுவதை அவன் பேசுவதற்கு உரிமையுண்டு. ஆனால்…ஒரு போதகர் இப்பொழுது நான் கூறப்போவதை தன் சபையோருக்கு அறிவிக்க விருப்பங்கொள்ளாமலிருந்தால், அதை அறிவிக்க வேண்டாம். நான் யாருக்கென்று அனுப்பப்பட்டேனோ, அவர்களுக்காக இதைச் சொல்லுகில்றேன். ஆகையால் சத்தியம் என்னவென்பதை நான் வெளிப்படுத்த வேண்டும். பாருங்கள்?

3259 இங்கே மத்தியஸ்த ஊழியத்தைச் செய்து கொண்டிருந்த ஆட்டுக்குட்டியானவருக்கு யார் யாருடைய பெயர் உலகத்தோற்றத்துக்கு முன் எழுதப்பட்டுள்ளது என்பது தெரியும். அப்பெயர் கொண்டவர்கள் உலகத்தில் தோன்றும் வரை அவர் மத்தியஸ்த ஊழியத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] முன் குறித்தலின் பரிபூரணம். பாருங்கள்? அது சரி. தேவன் எவர்களை நித்திய ஜீவனுக்கென்று நியமித்தாரோ, அவர்களுக்காக அவர் மரிக்க வந்தார். பாருங்கள்? பாருங்கள்? அவர் அவர்களைத் தம் முன்னறிதலினாலே கண்டார். அது அவருடைய சுய சித்தம் அல்ல. யாரும் கெட்டு போவது தேவனுடைய சித்தமல்ல. ஆனால் யார் கெட்டுப் போவார்கள், யார் கெட்டுப்போவதில்லை என்பதை அவர் முன்னறிந்திருந்தார். ஆகையால் பூலோகத்தில் தோன்றாத ஒருவரின் பெயர் அதில் இருந்தாலும் கூட, அந்த மனிதன் தோன்றி இரட்சிக்கப்படும்வரை கிறிஸ்து மத்தியஸ்த ஊழியத்தில் நிலைத்திருக்க வேண்டும். 60 கடைசி பெயர் வெண்மையாக்கும் திரவத்தில் (Bleach) விழுந்த மாத்திரத்தில், அவருடைய மத்தியஸ்த ஊழியம் முடிவு பெறும். “அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.” பாருங்கள்? அவர் மத்தியஸ்த பிரகாரத்தை விட்டு புறப்பட்டவுடன், அது நியாயசனமாக மாறுகின்றது. அப்பொழுது கிறிஸ்துவை விட்டு அப்பாற்பட்டிருப்பவர்களுக்கு ஐயோ!

3361 இப்பொழுது கவனியுங்கள். ஆட்டுக்குட்டியானவர் பிதாவினிடத்திலிருந்து தாம் மத்தியஸ்த ஊழியம் செய்த ஸ்தலத்தை விடும்பொழுது அது வெளிப்படும். இப்பொழுது, இது வெளிப்படுத்துதல் 5-ம் அதிகாரமாகும். அவர் முத்திரைகளின் புஸ்தகத்தை அல்லது முத்திரைகளுடன் முத்தரிக்கப்பட்ட புஸ்தகத்தை எடுத்து, அவைகளை உடைத்துக் காண்பிக்கிறார். கவனியுங்கள். இப்பொழுதுள்ள கடைசிக்காலத்தில் மத்தியஸ்த ஊழியம் முடியும் போது, சபை காலங்கள் யாவும் முடிவு பெறுகின்றன. 62 முதலாம் சபையாகிய எபேசு சபையின் காலத்தில், அவர் வருகை தந்து, வெளிப்பாட்டை அளித்து, தூதனை அனுப்பினார். 63 என்ன சம்பவிக்கிறது என்று, நாம் தொடர்ந்து பார்க்கையில் கவனிப்போம். இதோ அதனுடைய திட்டம் உள்ளது. ஒரு காரியம் முதலில் சம்பவிக்கும்போது அது பரலோகத்தில் முதலில் அறிவிக்கப்படுகின்றது. சம்பவிப்பது என்ன? ஒரு முத்திரை திறக்கப்படுகின்றது. அது என்ன? ஒரு இரகசியம் வெளியரங்கமாகிறது. பாருங்கள்? இரகசியம் வெளிப்படும்போது, எக்காளம் முழங்குகின்றது. அது போர் உண்டாகும் என்று அறிவிக்கிறது. ஒரு வாதை விழுகின்றது. சபையின் காலம் திறக்கப்படுகின்றது. பார்த்தீர்களா? 64 “போர்” எதற்காக? அந்தச் சபையின் தூதன், முழுவதும் வெளிப்படாத தேவரகசியத்தை பெற்றுக்கொள்கிறான். ஆனால் தேவரகசியத்தைப் பெற்றுக்கொண்டபின், தேவரகசியமானது அவனிடத்தில் அளிக்கப்பட்டபிறகு அவன் ஜனங்களிடையே செல்கிறான். அவன் ஜனங்களிடம் செல்கிறான். அவன் அங்கே என்ன செய்கிறான்? அவன் அந்த செய்தியைப் பிரகடனப்படுத்த ஆரம்பிக்கிறான். அது எதைத் தொடங்குகிறது? ஒரு யுத்தத்தை, ஒரு ஆவிக்குரிய யுத்தத்தைத் துவங்குகிறது.

3465 அதன் பின்னர் தேவன், அவருடைய செய்தியாளனையும் அக்காலத்தில் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் எடுத்துக் கொண்டு நித்திரையடையச் செய்கிறார். அதன்பின் அவர் செய்தியைப் புறக்கணித்தவர்கள் மீது வாதையை வரப்பண்ணுகிறார். தற்காலிக நியாயத்தீர்ப்பு. 66 அது முடிவடைந்த பின்னர், அவர்கள் ஸ்தாபனமாகி, ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக்கொண்டு, வெஸ்லி போன்ற மனிதனின் கிரியைகளில் முக்கியத்துவம் செலுத்தத் துவங்குகின்றனர். அப்பொழுது மறுபடியுமாக, எல்லாமே குழப்பமடைகின்றது. 67 பின்னர் வேறொரு தேவரகசியம் புறப்பட்டு வருகின்றது. அப்பொழுது என்ன சம்பவித்தது? மற்றுமொரு சபையின் காலத்திற்கென வேறொரு செய்தியாளன் பூமியில் தோன்றுகின்றான். பாருங்கள்? அவன் வரும்போது, எக்காளம் ஊதுகிறான். அவன் போரை அறிவிக்கிறான். பாருங்கள்? அப்பொழுது என்ன சம்பவிக்கிறது? முடிவாக அவன் எடுக்கப்படுகிறான். அவன் மரித்தப்பின்பு, வாதை விழுந்து அவர்களை அழிக்கிறது. ஆவிக்குரிய மரணம் சபையைத் தாக்குகிறது. அவன் அந்த குழுவோடு அழிகிறான். இது ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்கின்றது. ஓ, அது ஒரு மகத்தான திட்டம்!

3568 கடைசிதூதன் தோன்றும்வரை இது சம்பவிக்கின்றது. கடைசிதூதன் வெளிப்படுவதற்கு ஒரு பிரத்தியேகமான இரகசியம் அளிக்கப்படவில்லை. ஆனால் அவன், அவனுக்கு முன்பிருந்த காலங்களில் உண்மையாக வெளிப்படாத சகல சத்தியங்களையும் திரட்டி அவனுக்கு வெளிப்பாடு அவ்வப்போது அவைகளை அவன் தன் காலத்தில் எடுத்துரைக்கிறான். அதைக்குறித்து அறிய வேண்டுமானால் வெளி 10:1-4 வரை படியுங்கள். அதை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். அது சரி. பாருங்கள்? “புஸ்தகத்தை எடுத்து அதன் முத்திரைகளை உடைத்து”, அதனுள் அடங்கிய இரகசியத்தை ஏழாம் தூதனுக்குக் காண்பிக்கிறார். தேவ ரகசியத்தை வெளிப்படுத்துவது மாத்திரமே ஏழாம் தூதனின் ஊழியமாக அமைந்திருக்கிறது. ஏழு சபையின் காலங்களைக் குறித்து வேதத்தில் கூறப்பட்டவைகள் நிறைவேறியுள்ளன என்பதை நாம் சரித்திரப்பூர்வமாய் சில நாட்களுக்கு முன்பு நிரூபித்து காண்பித்தோம். பாருங்கள்? அது ஏழாம் சபைக்கு, ஏழாம் தூதன் அளித்த செய்தியாகும். சரி. கடந்த காலங்களில் தேவரகசியமாயிருந்தவைகளை ஏழாம்தூதன் அவன் காலத்தில் வெளிப்படுத்துகிறான். வெளி 10:1-7, அவ்விதம் கூறுகின்றது. “ஏழாம்தூதன் தன் நாட்களில் சுவிசேஷ எக்காளத்தை பலமாய் முழங்கி, எல்லா தேவரகசியத்தை நிறைவேற்ற வேண்டும்” என்பதை இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள்.

3669 ஆதிசபையின் காலங்களில் இது இவ்விதம் வந்தது. அந்த உபதேசத்தைக் குறித்து நாம் சிறிது நேரத்தில் காண்போம். முதலாவதாக அது பேசப்பட்டு, அதன்பின் உபதேசமானது. அது பின்னர் உபதேச சட்டமாக மாறி, பின் ஒரு சபையாகி, இருளின் காலகளுக்குள் சென்றது. 70 அதன் பின்னர் இருளின் காலங்களில் லூத்தர் தோன்றி, முதல் சீர்த்திருத்தத்தை உண்டுபண்ணினார். அவர், அவருடைய சபையின் காலத்தில், அதற்கு முன்பு மறைவாயிருந்த இரகசியங்களை வெளிப்படுத்தினார். ஆனால் எல்லா இரகசியங்களையும் அவர் வெளிப்படுத்தி முடிக்கவில்லை. 71 அதன் பின்னர் வெஸ்லி தோன்றி, ‘பரிசுத்தமாக்கப்படுதல்’ (Santification) என்பதைப் பிரசங்கித்தார். அவர் சிலவற்றை அதிகமாய்ப் பெற்றுக் கொண்டார். ஆயினும் அவர் எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்த முடியவில்லை. ஆங்காங்கே தவறான போதகத்தை அவர்களிருவரும் கைக்கொண்டனர். உதாரணமாக வெஸ்லி முழுக்கு ஞானஸ்நானத்திற்குப் பதிலாக தெளிக்கப்படுதலைக் கைக்கொண்டார். அவ்வாறே லூதர் “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம்” என்பதற்குப் பதிலாக “பிதா, குமாரன், பரிசுத்தஆவியை” ஏற்றுக்கொண்டார். அவர்கள் இவ்விதமாக வித்தியாசமானவைகளைப் பெற்றிருந்தனர்.

3772 பின்னர் பெந்தேகொஸ்தே காலம், பரிசுத்தஆவியின் அபிஷேகத்துடன் தோன்றியது. அவர்கள் அதை ஆதாரமாகக் கொண்டு ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அதன் பின்னர் வேறொரு சபை காலமிராது. அத்துடன் அது முடிவடைகிறது. அது பிலதெல்பியா சபை…இல்லை, இப்பொழுது, லவோதிக்கேயா சபை. ஆனால் அதன் பின்… 73 ஒவ்வொரு சபையின் செய்தியாளனும் அந்த சபையின் காலம் முடிவடையும்போது தோன்றுகிறான் என்பதை நாம் வேதாகமத்தை ஆராயும்போது, அறிந்துகொண்டோம். பவுல் அவன் சபையின் காலத்தின் முடிவில் தோன்றுகிறான். அவ்வாறே, ஐரினேயஸ், சபையின் காலம் முடிவடையும் நேரத்தில் தோன்றினார். மார்டினும் சபையின் காலத்தின் முடிவில் தோன்றினார். லூதர், கத்தோலிக்க சபையின் கால முடிவில். என்ன? வெஸ்லி, லூதரன் கால முடிவிலும் தோன்றினர். பேந்தேகொஸ்தே, பரிசுத்தமாக்கப்படுதல் போதிக்கப்பட்ட காலத்தின் முடிவில் தோன்றி பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து போதித்தது. 74 பேந்தேகொஸ்தே சபையின் கால முடிவில், நாம் ஒரு செய்தியைப் பெறப்போகிறோம் என்பதாக தேவனுடைய வார்த்தையின்படி இன்றிரவு தேவ ஒத்தாசையைக் கொண்டு உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். கடைசிகால செய்தியாளன் அதுவரை தளர்ந்து விடப்பட்டுக் காணப்பட்ட பாகங்களையெல்லாம் நேராக்கி, சபை எடுக்கப்படுவதற்கென, தேவனைக் குறித்த முழு இரகசியத்தையும் வெளிப்படுத்துவான்.

3875 பின்னர் வேதத்தில் எழுதப்படாத ஏழு இரகசியமான இடிமுழக்கங்கள். அது சரி. ஆகவே எடுத்துக் கொள்ளப்படுவதற்கான விசுவாசத்திற்காக மணவாட்டியை ஒன்று சேர்ப்பதற்கென்று, இந்த கடைசிநாட்களில் அந்த ஏழு இடிமுழக்கங்களின் மூலமாக வெளிப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் இப்பொழுது நம்மிடம் உள்ளதைக் கொண்டு, நாம்—நாம் எடுக்கப்படுதலில் செல்ல முடியாது. அங்கே ஏதோ ஒன்றுள்ளது. நாம் இன்னும் தூரம் செல்ல வேண்டியவர்களாய் இருக்கிறோம். நமக்கு, இப்பொழுது தெய்வீக சுகமளிப்புக்கும்கூட போதிய விசுவாசம் நமக்கில்லை. ஒரு இமைப்பொழுதில் நம் சரீரம் மாறி நாம் இப்பூமியிலிருந்து எடுக்கப்படுவதற்கு, நமக்குப் போதிய விசுவாசம் இருக்க வேண்டும். சற்று கழித்து கர்த்தருக்கு சித்தமானால், அது எங்கு எழுதப்பட்டுள்ளது என்பதை நாம் கண்டறியலாம்.

3976 அதன்பின், பொல்லாங்கு செய்த இவர்களுடைய நியாயத்தீர்ப்புகளைக் குறித்து இப்பொழுது பாருங்கள். இந்தக் கடைசி முத்திரை இப்பொழுது உடைக்கப்படும் வரையிலும், காலங்கள் முழுவதும் இம்முத்திரைகள் உடைக்கப்பட்டே வந்தன. அவர்கள் இப்போது போலவே, அப்பொழுதும் முத்திரைகளைக் கவனித்து வந்தனர். அவர்கள் செய்வது என்ன என்பதை ஊகிக்க மட்டும் செய்தனர். இப்பொழுது காலங்கள் முடிவில், சபைகாலங்களின் முடிவில் இந்த ஏழு முத்திரைகளில் உள்ள இந்த பொல்லாப்பு செய்பவர்கள் சபையில் மர்மமான முறையில் கிரியை செய்தவர்கள். இப்பொழுது சபை காலங்களின் முடிவில் இப்பொல்லாங்கர் அனைவரும் உபத்திரவத்தில் முடிவுறுவர். 77 ஒரு சபையின் பெயரால் அதைச் செய்தவர்களை இன்னும் ஒரு நிமிடத்தில் நாம் கண்டறியலாம். அவர்கள் தான் உண்மையான “சபை” என்றும் தங்களைக் கூறிக்கொண்டனர். நான் கூறுவது உண்மைதான் என்பதை நீங்களே கண்டுகொள்ளலாம். ஆகையால் நான் ஸ்தாபனங்களுக்கு விரோதமாய் இருப்பதைக் குறித்து வியப்படைவதற்கில்லை. என்னை அறியாமலே அவைகளுக்கு விரோதமாய் நான் இருந்து வந்திருக்கிறேன். பாருங்கள்? பாருங்கள்? 78 அவர்கள் இவ்விதமாக முடிவுறுகின்றனர். அது ஆதியிலே தீவிரமில்லாத (mild) ஒன்றாகத் தொடங்கி, காலங்கள்தோறும் மோசமாகிக் கொண்டே வந்திருக்கிறது. ஜனங்களும் “ஓ, ஆம் இது மிகவும் நன்றாயிருக்கிறது எனக் கூறி அதை ஏற்றுக் கொண்டனர். ஆனால் கடைசிகாலங்களில் இக்காரியங்கள் யாவும் வெளியாக்கப்படுகின்றன. அவர்கள் கடைசிகாலத்தில் மிகவும் மோசமான ஒரு நிலையடைந்து, அதன் விளைவாக உபத்திரவ காலத்திற்குள் செல்வர்.

4079 கிறிஸ்துவின் மணவாட்டி உபத்திரவ காலத்திற்குள் செல்கிறாள் என்று எப்படி ஒரு மனிதன் கூறமுடியும்? என்னால் அதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. பாருங்கள்? அவள் உபத்திரவ காலத்திற்கு முன்பு எடுக்கப்படுகிறாள். சபையானது ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டிருந்தால், மணவாட்டி இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை ஏற்றுக்கொண்டு அதன் மூலம் நியாயந்தீர்க்கப்பட்டிருந்தால், தேவன் பரிபூரணமாக முற்றிலும் பாவமில்லாத ஒருவனை எங்ஙனம் நியாயந்தீர்க்க முடியும்? “அவ்விதமான நபர் ஒருவரும் இல்லை” என்று நீங்கள் கூறலாம். 80 மறுபடியும் பிறந்த விசுவாசி, உண்மையான விசுவாசி ஒவ்வொருவனும் தேவனுக்கு முன்பாக பரிபூரணமாக, முற்றிலுமாக பாவமில்லாதவனாயிருக்கிறான். அவன் தன் கிரியைகளில் சார்ந்திராமல், பாவங்களை அறிக்கையிட்டு பாவங்கள் நீங்கப்பட இயேசுவின் இரத்தத்தின் பேரில் சார்ந்திருக்கிறான். வேதம் அவ்வாறே கூறுகின்றது. பாருங்கள்? “தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான்” ஏனெனில் அவன் பாவம் செய்ய முடியாது. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என்னும் வெண்மையாக்கும் திரவம் ஒரு மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே இருக்கும்போது, அம்மனிதனைப் பாவி என்று நீங்கள் எவ்வாறு அழைக்க முடியும்? அந்த வெண்மையாக்கும் திரவம் பாவத்தைச் சிதறடித்து, அதை ஒன்றுமில்லாமல் செய்யும். பாருங்கள்? கிறிஸ்துவின் சுத்த இரத்தம் பாவத்தை அதன் வழியாகக் கடந்து செல்ல எவ்வாறு அனுமதிக்க முடியும்? அவரால் ஒருக்காலும் அனுமதிக்க முடியாது. 81 “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல நீங்களும் பூரண சற்குணராயிருக்ககடவீர்கள்” என்று இயேசு சொன்னார். நாம் சற்குணராயிருக்க வேண்டுமென்ற அந்த எண்ணம் கூட நாம் மனதில் எப்படி உதிக்க முடிந்தது. ஆனால் இயேசு அதை விரும்பினார். நாம் சற்குணராயிருக்க வேண்டுமென்று இயேசு விரும்பினால், அதற்கான வழியையும் அவர் உண்டாக்க வேண்டும். அவர் தமது சொந்த இரத்தத்தின் மூலம் அவ்வழியை நமக்கு வகுத்துள்ளார்.

4182 இப்பொழுது கடந்த காலங்களிலிருந்த இரகசியங்கள் யாவும் வெளிப்படுகின்றன. அநேக காலங்களுக்கு முன்பாக ஆரம்பித்த இந்த இரகசியங்கள் சபைக்காலங்கள் முழுவதுமாக இருந்து வந்து, முத்திரைகள் உடைக்கப்படுகின்ற இக்கடைசிக்கலங்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும். அந்த சமயத்தில் மத்தியஸ்த ஊழியம் ஏறக்குறைய முடிவடைந்திருக்கும். 83 பிறகு பின்னால் இருப்பவர்களுக்கு நியாயத்தீர்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் அதற்குள் செல்வார்கள். அது மணவாட்டியானவள் காட்சியிலிருந்து எடுக்கப்பட்ட பின்னர் சம்பவிக்கும் ஒன்றாகும்.

4284 ஓ, நாம் ஒரு வேதவசனத்தை சற்று வாசிப்போம். நீங்கள் அனைவரும் வேதவசனத்தைக் குறித்துக் கொள்ள விரும்புகிறீர்கள் அல்லவா? நாம் 2தெசலோனிக்கேயர் புஸ்தகத்தை ஒரு கணம் எடுத்துக் ஒரு நிமிடம் அதை இங்கே நோக்குவோமாக. நாம் அதைப் பார்ப்போம். ஆம், இரண்டு தெசலோனிக்கேயர் இரண்டாம் அதிகாரம் 7-வது வசனத்தை நாம் காண்போம். 2தெசலோனிக்கேயர் 2:7 அது சரி என்றே இப்பொழுது நான் எண்ணுகிறேன். நான் எழுதும்போது எனக்கு நடுக்கம் பிடித்தது. “அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியை செய்கிறது; ஆனாலும் தடை செய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது”. 85 தடை செய்கிறவன் யார்? பாருங்கள்? பாருங்கள்?, “அக்கிரமத்தின் இரகசியம்” முதலாம் சபையின் காலத்திலேயே கிரியை செய்தது “அக்கிரமத்தின் இரகசியம்” என்று பவுல் இங்கே எழுதுகிறான். அக்கிரமம் என்பது என்ன? நாம் செய்யக்கூடாது என்று அறிந்தும், அக்காரியத்தைச் செய்வது தான் அக்கிரமம். இன்றைக்கு உலகத்தில் அக்கிரமச் செய்கைக்காரர் உள்ளதாக பவுல் கூறியிருக்கிறான். ஓ, நீங்கள்…நாம் …நாம் 3-ம் வசனத்திலிருந்து வாசிப்போம். அதை நாம் ஒரு நிமிடம் வாசிப்போம்.

43எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் (ம-னு-ஷ-ன்) வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. அது சரி. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல் உட்கார்ந்து தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். பாவங்களை மன்னித்தல். நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா? 86 இது போதிக்கப்பட்டபோது, நானும் அப்பொழுது அமர்ந்திருந்து கேட்டிருக்க எனக்கு விருப்பமுண்டு, நீங்கள் அவ்வாறு விரும்பவில்லையா? அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடை செய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே . 87 பாருங்கள்! அக்காலத்திலல்ல, ஆனால், “அவனுடைய காலத்தில்,” பாருங்கள். அந்த முத்திரை உடைக்கப்படும்போது, அது என்னவென்று நாமெல்லாரும் அறிந்துகொள்வோம். இந்த அக்கிரமக்காரன் யார்? அக்கிரமம் செய்து, தன் காலத்தில் வெளிப்படும் இந்த பாவ மனுஷன் யார்? “ஆனால் அவன் தன் காலத்தில் வெளிப்படுவான்”.

44அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது: (வஞ்சிக்கிறவர்கள், ஜனங்களைத் தவறான ஒன்றில் வழி நடத்தி அவர்களை ஏமாற்றுகிறவர்கள். பாருங்கள்) ஆனாலும் தடை செய்கிறவன் (சபை-கிறிஸ்து மணவாட்டி) நடுவிலிருந்து (தேவனால்) நீக்கப்படுமுன்னே அது வெளிபடாது. நீக்கப்படும்போது அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான். 88 முத்திரை உடைக்கப்படும்போது “என் காலத்திலல்ல”, “அவன் வெளிப்படும் அந்த காலத்தில்” என்று பவுல் கூறுகிறான். பாருங்கள்? அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, 89 அதைப் பற்றி சிறிது நேரத்தில் நாம் சிந்திக்கப் போகிறோம். “தம்முடைய வாயின் சுவாசாத்தினாலே”, அது என்னவென்பதைப் பார்க்கலாம். தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம் பண்ணுவார். அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி… 90 அவன், “அவன்”, ஒரு மனிதன், அவன் கிரியை சாத்தானின் செயலைப் போன்றிருக்கும். சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப் போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் ஜனங்களை அநீதியினால் வஞ்சிப்பான்…இருக்கும் …(ஆனால் மணவாட்டியை அவன் வஞ்சிக்க முடியாது), அதைப் போன்ற காரியத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களை அவன் வஞ்சிப்பான். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின் மேலுள்ள அன்பை அவர்கள் அங்கீகரியாமற் போனபடியால்… 91 கிறிஸ்துதான் சத்தியம். கிறிஸ்துதான் வார்த்தை ஆனால் அவர்கள் சத்தியத்தை ஏற்பதைக் காட்டிலும் ஸ்தாபனங்களின் பிரமாணங்களை ஏற்பர். ஊம்! பாருங்கள்? அவர்கள் இரட்சிக்கப்படத்தக்கதாய்ச்… ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு அவர்கள் பொய்யை விசுவசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார். 92 நான் ‘லெக்சிகன்’ அகராதியில் கண்டபோது, அது அங்கே இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டிருந்தது, அது “அந்த பொய்”. “ஒரு பொய்” அல்ல. “அந்த பொய்” ஏவாளிடம் அதையே அவன் சொன்னான் ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளக்கப்படும்படிக்கு

4593 என்னே ஒரு அறிவிப்பு! என்னே! எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் இந்த பாவமனுஷன் தன்னை வெளிப்படுத்துவான். 94 அவள், கிறிஸ்துவின் உண்மையான மணவாட்டியே ஒவ்வொரு சபை காலத்திலும் தெரிந்தெடுக்கப்பட்டுவிட்டவளாய் இருக்கிறாள். 95 இப்பொழுது “மணவாட்டி தன் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படுவதை அநேகர் அறியவே மாட்டார்கள்” என்று அன்றொரு நாள் நான் உங்களிடம் கூறினேன். அது உண்மை. 96 ஒருவர் என்னிடம், “சகோ.பிரான்ஹாம்! அப்படியானால் மணவாட்டி மிகச் சிறிய கூட்டமாக இருக்குமே” என்றார்.

4697 இயேசு, “நோவாவின் நாட்களில் நடந்ததுபோல” என்று கூறினார். நீங்கள் அவரிடம் அதைக் குறித்து கேட்டுப் பாருங்கள். “அக்காலத்தில் எட்டுப்பேர் தண்ணீரினால் காப்பாற்றப்பட்டனர். மனுஷக்குமாரன் வரும் நாளிலும் அவ்விதமாகவே இருக்கும்.” இன்றிரவு 800 பேர் எடுக்கப்பட்டால், நாளை அல்லது அதற்கு அடுத்த நாள் அல்லது எப்பொழுதுமே அதைக் குறித்து ஒரு வார்த்தையும் கூட நீங்கள் கேள்விப்படாமல் இருக்கலாம். அவர்கள் போய்விட்டு இருப்பார்கள். நீங்கள் அதைக் குறித்து அறியாமல் இருக்கலாம். பாருங்கள். அது அவ்விதமாக மட்டுமே இருக்கும். 98 நான் உங்களுக்கு என்ன கூற முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்? நான் உங்களைப் பயப்படுத்தவோ அல்லது உங்களில் கவலையுண்டாக்கவோ முயற்சித்துக்கொண்டிருக்கவில்லை. நீங்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென்று நான்—நான் விரும்புகிறேன். விழித்துக் கொண்டிருந்து ஒவ்வொரு நிமிடமும் ஆயத்தமாயிருங்கள். அர்த்தமற்ற யாவையும் அகற்றுங்கள். தேவனுடன் அலுவலில் ஈடுபடுங்கள். ஏனெனில் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகி விட்டது.

47இப்பொழுது உண்மையான மணவாட்டி உண்டு என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். 99 இப்பொழுது தவறான மணவாட்டி ஒன்று உண்டு என்பதை அறியவும். நாம் அதை வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தில் பார்க்கலாம். அவள், “நான் ஒரு விதவை, எனக்கு ஒரு குறைவுமில்லை” என்று சொல்லிக் கொள்கிறாள். அவள் சிவப்பு மிருகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறாள் என்பதை நீங்கள் பாருங்கள். 100 இப்பொழுது, ஆனால் உண்மையான மணவாட்டியோ, ஒவ்வொரு சபையின் காலத்திலும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை ஒருங்கே கொண்ட ஆயிரமாயிரம் பேராயிருக்கும். ஒவ்வொரு முறையும் ஒரு செய்தி புறப்பட்டுச் சென்றபோது, அதை விசுவாசித்து, அதன் முழு வெளிச்சத்தையும் ஏற்றுக் கொண்ட ஜனங்களே மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரிக்கப்பட்டிருந்தனர். 101 இயேசு அதேக் காரியத்தை போதிக்கவில்லையா? அவர், “ஏழாம் ஜாமத்திலே சத்தம் உண்டானது” என்று கூறவில்லையா? அதுதான் கடைசி சபைக் காலம். பாருங்கள்? “இதோ மணவாளன் வருகிறார். அவருக்கு எதிர்கொண்டு போகப் புறப்படுங்கள்” என்னும் சத்தம் உண்டானது. 102 அப்பொழுது புத்தியில்லாத கன்னிகைகள் உறக்கத்தினின்று எழுந்து, கண்களைத் துடைத்தவாறு, “நாங்களும் எண்ணெயைப் பெற வேண்டும். நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்” என்று கூறுவர். 103 ஆனால் அங்குள்ள உண்மையான மணவாட்டி புத்தியில்லாத கன்னிகைகளை நோக்கி, “நாங்கள் எங்களுக்கு போதுமானதை வைத்துள்ளோம். உ—ஊ. நாங்கள் உள்ளே செல்வதற்குப் போதிய எண்ணெய் மாத்திரமே எங்களிடம் உள்ளது. உங்களுக்கு எண்ணெய் கொடுக்க எங்களால் இயலாது. எண்ணெய் வேண்டுமானால், நீங்கள் போய் ஜெபியுங்கள்” என்பார்கள்.

48104 புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய் வாங்கச் சென்ற சமயம், மணவாளன் வந்துவிட்டார். மணவாட்டி உள்ளே பிரவேசித்தாள். அப்பொழுது முற்றிலும் உத்தமமான மீதியானவர்கள், அதாவது சபை, வெளியே விடப்படுகின்றனர். “அங்கே அழுகையும், புலம்பலும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்று” அவர் கூறினார்.

49105 பாருங்கள், இப்பொழுது அதுதான் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். “மணவாளன் வருகிறார்” என்னும் சத்தம் எழுந்தவுடன் சபையின் காலங்கள்தோறும் நித்திரையடைந்திருந்த ஒவ்வொருவரும் உயிரோடெழுகின்றனர். பாருங்கள், இக்காலத்திலுள்ள சில ஆயிரம் பேரை மாத்திரம் தேவன் தேடிப் பிடித்து அவர்களை எடுத்துச் செல்வார் என்று நாம் நினைப்பது சரியல்ல. ஒவ்வொரு சபையின் காலத்திலும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் எடுக்கப்படுவர். தெரிந்து கொள்ளப்பட்ட கடைசிநபர் கடைசிகாலத்தில் உட்பிரவேசிக்கும் வரை, கிறிஸ்து மத்தியஸ்த ஸ்தானத்தை வகிக்க வேண்டும். இத்தகைய வெளிப்பாடு ஜனங்களுக்கு அளிக்கப்படும்போது, அவர்கள் என்ன நிகழ்ந்துள்ளது என்று புரிந்து கொள்கின்றனர். பாருங்கள்? உங்களுக்கு இப்பொழுது புரிகின்றதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அது சரி.

50106 கவனியுங்கள், “மரணமடைந்த மற்றவர்கள்” ஸ்தாபன சபை அங்கத்தினர்கள், “ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.” சபையின் அங்கத்தினர்கள் கிறிஸ்தவர்கள், சபை, ஆயிரம் வருடங்கள் முடியும் வரையிலும் உயிரோடிருப்பதில்லை. அதன் பின்பு அவர்கள் உயிரோடெழுந்து மணவாட்டிக்கு முன்பாக ராஜாவுக்கும் ராணிக்கும் முன்பாக நிற்கின்றனர். அது உண்மை. ஓ மகிமை! சில ஸ்தாபன சபைகள் தங்களைப் “பரலோகத்தின் ராணி” என்று அழைத்துக் கொள்கின்றன.

51107 ஆனால் தேவனால் தெரிந்து கொள்ள்ப்பட்ட கிறிஸ்துவின் மணவாட்டிதான் உண்மையில் பரலோகத்தின் ராணியாவாள், அவள் அவருடன் புறப்பட்டு வருகிறாள். தானியேல் இக்காட்சியைக் கண்டு, “ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள்” என்றான். இப்பொழுது நீங்கள் தானியேலின் புஸ்தகத்தை கவனித்துப் படித்தால், “அப்பொழுது நியாயசங்கம் உட்கார்ந்தது, புஸ்தகங்கள் திறக்கப்பட்டன” என்று நாம் பார்க்கலாம். அவர் வரும்போது தம் மணவாட்டியுடன் கூட வருகிறார் என்பதை ஞாபகங்கொள்ளுங்கள். மனைவி தன் கணவனுக்குச் சேவை செய்வாள். ஆயிரமாயிரம்பேர் அவருக்குச் சேவை செய்தனர். நியாயசங்கம் உட்கார்ந்தது. புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. அது ஜீவ புஸ்தகம். மணவாட்டி என்பதே இங்கு இல்லை. மணவாட்டி அவருடன் சென்று மறுபடியும் வந்து தங்கள் தங்கள் தலைமுறைகளில் சுவிசேஷ செய்தியை ஏற்றுக் கொள்ள மறுத்தவர் அனைவரையும் நியாயந்தீர்ப்பாள். 108 “தென் தேசத்து ராஜஸ்திரீ நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த சந்ததியாரோடெழுந்து இவர்கள் மேல் குற்றஞ்சுமத்துவாள்” என்று இயேசு கூறவில்லையா? “அவள் சாலோமோனுடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள். இதோ சாலோமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறாள்”. தென் தேசத்து சேபாவின் ராஜஸ்திரீ நியாயத்தீர்ப்பு நாளிலே அங்கு நின்று கொண்டு தன் சாட்சியைக் கூறுவாள்.

52109 அந்த சந்ததியிலே யூத மார்க்கத்தைக் கடைபிடித்த ஒருவனும் கூட இல்லை. ஏனெனில் அவர்கள் குருடராயிருந்து அவரைக் கண்டுகொள்ளத்தவறினர். ஏனென்றால், அவர்கள் அவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் எளிமையில் தோன்றிய காரணத்தால் அவர்கள் குப்புற விழுந்தனர். 110 ஆனால் அந்த புகழ்வாய்ந்த ராணியோ தன்னைத் தாழ்த்தி செய்தியை ஏற்றுக்கொண்டான். “அவள் நியாயந்தீர்ப்பின் நாளில் நின்று அந்த சந்ததியின்மேல் குற்றம் சுமத்துவாள்” என்று அவர் கூறினார்.

53111 இங்கே மூன்று சாரரை எப்பொழுதுமே நீங்கள் காணலாம். புஸ்தகம் திறக்கப்பட்டது. மரித்தோர் நியாயத்தீர்ப்படைந்தனர். வேறொரு புஸ்தகம் ஜீவபுஸ்தகம், ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவர்கள். 112 அவர்கள், “உங்கள் பெயர் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தால் எல்லாம் சரியாயிருக்கிறது” என்கிறார்கள். இல்லை ஐயா! 113 யூதாஸ்காரியோத்தின் பெயரும் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதே என்று கவனித்துப் பாருங்கள். அது தவறு என்று நீங்கள் கூறுகிறீர்களா? மத்தேயு பத்தாம் அதிகாரத்தில் இயேசு சீஷர்களுக்கு பிசாசுகளைத் துரத்தவும், பிணியாளிகளை சொஸ்தப்படுத்தவும், குஷ்டரோகிகளை குணமாக்கவும், மரித்தோரை உயிர்க்கவும் அதிகாரம் கொடுத்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று, திரும்பி வந்தனர். யூதாஸ்காரியோத்தும் அவர்களோடு இருந்தான். அவர்கள் பிசாசுகளைத் துரத்தி, எல்லாவிதமாக அற்புதங்களைச் செய்து திரும்பி வந்து அவரிடம், “ஆண்டவரே, பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகின்றன” என்றனர். 114 அதற்கு இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, “பிசாசுகள் உங்களுக்குக் கீழ்ப்படிவதனால் நீங்கள் சந்தோஷப்படாமல், பரலோகத்தில் உங்கள் பெயரெழுதப் பட்டிருப்பதற்காக சந்தோஷப்படுங்கள்” என்றார். அப்பொழுது யூதாஸும் அவர்களோடு இருந்தான். ஆனால் என்ன நேர்ந்தது? தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் பெந்தேகொஸ்தே நாளன்று பரிசுத்தஆவியைப் பெறவேண்டிய சமயம் வந்தபோது, யூதாஸ் தன் உண்மையான ரூபத்தைக் காண்பித்தான். அவனும் அங்கே நியாயத்தீர்ப்பில் இருப்பான்.

54115 ஆகவே, புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. ஜீவ புஸ்தகமும் திறக்கப்பட்டது. ஒவ்வொரு மனிதனும் இவ்விதம் நியாயந்தீர்க்கப்பட்டான். மணவாட்டியோ கிறிஸ்துவுடன் நின்று கொண்டு உலகத்தை நியாயந்தீர்க்கிறாள். பவுல், மணவாட்டியிடம் “உங்களுக்குள்ளே வழக்குண்டானால் வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல் அநீதிகாரரிடத்தில் போகத் துணிகிறதென்ன? பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா?” என்றான். பாருங்கள்? அங்குதான் உங்கள் காரியம் உள்ளது. பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்த்து அதைக் கைப்பற்றுவார்கள். அது உண்மை. 116 நீங்கள் ஒருக்கால், “இந்த சிறு மணவாட்டியின் குழு எவ்வாறு அங்ஙனம் செய்யமுடியும்?” என்று கேட்கலாம். அது எப்படி செய்யப்படப் போகிறது என்று அவர் கூறிவிட்டார், எனவே என்னைப் பொறுத்தமட்டில் அதுவே இதற்கு தீர்வாகிறது.

55117 இப்பொழுது பாருங்கள். இப்பொழுது கவனியுங்கள். “மரணமடைந்த மற்றவர்கள்”, அதாவது மரித்துப்போன ஸ்தாபன சபையின் அங்கத்தினர்கள் “ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.” ஆயிரம் வருஷம் முடிவடைந்த பின்பு, இரண்டாம் உயிர்த்தெழுதல் நிகழ்கின்றது. அப்பொழுது இவர்கள் உயிரோடெழுந்து ஒன்று சேர்க்கப்படுகின்றனர். கிறிஸ்துவும் சபையும், மணவாட்டி, ஸ்தாபன சபையல்ல; மணவாட்டி, கிறிஸ்துவும், ராணியும், ஸ்தாபன சபை அல்ல, கிறிஸ்துவும் மணவாட்டியும் அங்கு நின்று கொண்டிருக்கின்றனர். 118 அதன்பின்பு அவர்கள் வெள்ளாடுகள் செம்மறியாடுகளிலிருந்து பிரிக்கப்படுவது போன்று, இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றனர். அது சரி. அங்கே ஸ்தாபன சபை அங்கத்தினர்கள் காணப்படுகின்றனர். அவர்கள் சத்தியத்தைக் கேட்டு அதைப் புறக்கணித்தவர்கள். அவர்கள் அதைக்குறித்து எண்ணிய அவர்களுடைய சொந்த எண்ணங்களெல்லாம் வானத்தின் விரிவுகளிலே எழுதப்பட்டிருக்கும்போது, அவர்கள் எப்படி தப்பித்துக் கொள்ள முடியும்? அது வானத்தின் விரிவுகளிலே எழுதப்பட்டிருக்கும்போது, நீங்கள் எப்படி அதற்கு தப்பித்துக்கொள்ளப் போகிறீர்கள்? தேவனுடைய மகத்தான தொலைக்காட்சி அங்கே உள்ளது. அதில் உங்கள் சொந்த எண்ணங்களெல்லாம் திரையிடப்படும். அச்சமயம் உங்கள் சொந்த சிந்தனைகளே உங்களுக்கு விரோதமாக சாட்சி பகரும். 119 ஆகையால் நீங்கள் ஒரு காரியத்தைப் பேசிவிட்டு, வேறுவிதமாக எண்ணும் இயல்புடையவர்களாயிருந்தால், அதை உடனடியாக நிறுத்திவிடுங்கள். உங்கள் சிந்தனைகளெல்லாம் தேவனையே நோக்கி இருக்கட்டும். அவைகளைச் சுத்தமாக வைத்துக் கொண்டு அதில் நிலைகொண்டிருங்கள். எப்பொழுதும் அதே காரியத்தைப் பேசுங்கள். பாருங்கள்? “நல்லது. நான் விசுவாசிப்பதாய் தற்பொழுது சொல்லி விடுகிறேன். ஆனால் அது சரியா, தவறா என்பதை நான் போய் பிறகு கண்டறிவேன்” என்று கூறாதீர்கள். நீங்கள் அதை விசுவாசியுங்கள். ஆமென்.

56120 இந்த சாரரைப் பாருங்கள். அவர்கள் மரிக்கும் காரணம் உபத்திரவ காலத்தில் நேரிடும் சோதனையில் அவர்கள் பங்கு கொண்டு சுத்திகரிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் இரத்தத்தின் கீழ் இல்லை! அவர்கள் இரத்தத்தின் கீழ் உள்ளதாக சொல்லிக் கொள்கின்றனர். ஆனால் உண்மையாக அவர்கள் இல்லை. அவர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் கீழ் இருந்திருப்பார்களானால், அந்த (வெண்மையாக்கும் திரவம்) பாவத்தின் லட்சணம் அனைத்தையும் அவர்களிடத்திலிருந்து போக்கியிருக்கும். அப்படியானால் அவர்கள் சுத்திகரிக்கப்படுவதற்கு உபத்திரவக்காலம் போன்ற ஒரு சோதனையினூடாக எப்படி செல்ல முடியும்? “நீங்கள் ஏற்கனவே மரித்து, உங்கள் ஜீவன் கிறிஸ்துவின் மூலமாய் தேவனுக்குள் மறைந்து கிடந்து, பரிசுத்த ஆவியினால் நீங்கள் முத்திரிக்கப்பட்டிருக்கிறீர்கள்”. நீங்கள் என்னத்திற்காக நியாயந்தீர்க்கப்பட வேண்டும்? உங்கள் சுத்திகரித்தலை எங்கே பெற்றுக் கொள்ளப்போகிறீர்கள்? நீங்கள் கிறிஸ்துவுக்கும் பாவமில்லாமல் பரிபூரணப்பட்டிருந்தால், உங்களுக்கு சுத்திகரிப்பு அவசியமேது? உங்களுக்கு எப்படி…நியாயந்தீர்ப்பு எதற்கு? ஆனால் உறங்கிக் கொண்டிருக்கும் கூட்டம், அந்த ஜனங்கள் உபத்திரவத்திலிருந்து தப்பிக்க முடியாது.

57121 இப்பொழுது அநேக வருடங்களாக அதை அவர்கள் செய்யவில்லை என்பதை நீங்கள் பாருங்கள். ஆனால் இது வெளிப்பாட்டின் வேளையாய் உள்ளது. பாருங்கள், பாருங்கள், மணவாட்டி வருகின்ற வேளையிலே வெளிப்படுத்தப்படுகின்றது. முடிவான காரியங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எல்லாம் முடிவுக்கு வருகின்றன. நண்பனே, அது முடிவுக்கு வருகிறது என்று நான் நம்புகிறேன். எப்பொழுது? அதை நானறியேன். என்னால்—என்னால் அதை உனக்கு கூறமுடியாது. ஆனால் ஏதாவது…இன்றிரவு அது ஒருக்கால் நேர்ந்தால், அதற்கு நான் ஆயத்தமாயிருக்க வேண்டும். பாருங்கள்? ஒருக்கால் இன்றிரவு அவர் வரலாம். இல்லையேல் அவர் இன்னும் இருபது வருடத்திற்கு வராமலும் இருக்கலாம். அவர் எப்பொழுது வருவார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது எப்பொழுது இருந்தாலும்…ஒருக்கால் என் வாழ்க்கை இன்றிரவு முடிவடையலாம். நான் செய்த அனைத்தும் அச்சமயத்தில் முடிவுபெறும். நான் வாழ்ந்த ஜீவியத்திற்காக நான்—நான் அவரை நியாயத்தீர்ப்பில் சந்திக்க வேண்டியவனாயிருக்கிறேன். “ஒரு மரம் எப்பக்கம் சாய்கிறதோ, அப்பக்கத்திலே அது விழும்”.

58122 நினைவுகொள்ளுங்கள். அவர்கள் எண்ணெய் வாங்கச் சென்றபோது… ஓ, “இப்பொழுது ஒரு நிமிடம் பொறுத்திருங்கள். சகோ.பிரான்ஹாமே, அதைப் பற்றி எனக்குத் தெரியாது” என்று நீங்கள் கூறலாம். அவர்கள் எண்ணெய் வாங்கச் சென்று திரும்பி வந்தபோது, மணவாட்டி ஏற்கனவே சென்று விட்டாள். கதவும் அடைபட்டுவிட்டது. அவர்கள் கதவைத்தட்டி, “எங்களை உள்ளே அனுமதியும், எங்களை உள்ளே அனுமதியும்” என்று கூக்குரலிட்டனர். [சகோதரன் பிரான்ஹாம், பிரசங்க பீடத்தை அநேக முறைகள் தட்டுகிறார்—ஆசி.] ஆனால் அவர்கள் புறம்பான இருளில் இருந்தனர். 123 அதற்கு ஒரு முன்னடையாளம் உங்களுக்கு வேண்டுமானால், “நோவாவின் காலத்தில்”, இயேசு அதைக் குறிப்பிட்டுச் சொன்னார். இப்பொழுது நோவாவின் காலத்தில் அவர்கள் பேழைக்குள் சென்றனர். ஆனால் நியாயத்தீர்ப்பின் காலத்தில் அவர்கள் நியாயத்தீர்ப்புக்குத் தப்பினர். ஆனால் அவர்கள் கிறிஸ்துவின் மணவாட்டிக்கு முன்னடையாளமல்ல. 124 ஏனோக்குதான் மணவாட்டிக்கு முன்னடையாளமாய் இருந்தவன். ஏனோக்கு! நோவா உபத்திரவ காலத்திற்குள் பிரவேசித்து, துன்பப்பட்டு, குடிவெறித்து மரித்துப்போனான். ஆனால் ஏனோக்கு ஐநூறு வருடங்களாக தேவனுடன் சஞ்சரித்து, எடுக்கப்படுதலுக்கேற்ற விசுவாசம் கொண்டவனாய் “தேவனைப் பிரியப்படுத்தினான்” என்ற சாட்சியைப் பெற்றிருந்தான். அவன் நடந்து சென்று வானத்தைக் கடந்து, மரணத்தை ருசிபாராமல் தன் பரலோக வீட்டை அடைந்தான். அவன் மரிக்கவேயில்லை.

59125 “உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை” என்பதற்கு அது முன்னடையாளமாயிருக்கிறது. நித்திரையடைந்தவர்கள் வயது சென்ற காரணத்தாலும் சரீர நிலையின் காரணத்தாலும் நித்திரையடைந்தனர். அவர்கள் அங்கே மரித்தார்கள். ஆனால் அவர்கள் மரிக்கவில்லை அவர்கள் நித்திரையடைந்திருக்கின்றனர். ஆமென். அவர்கள் நித்திரையடைந்திருக்கின்றனர். அவர்கள் மரிக்கவில்லை. மணவாளன் வந்து அவர்களை நித்திரையினின்று எழுப்ப வேண்டும். ஆம், “உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை. ஏனெனில் தேவ எக்காளம் முழங்கும்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். உயிரோடிருக்கிற நாம் அவர்களோடுகூட எடுக்கப்பட்டு கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்போம்.” 126 “மரணமடைந்த மற்றவர்கள் ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. அங்குதான் காரியம் அவர்கள் உபத்திரவ காலத்தினூடாகவே சென்றனர்.

60127 அது என்ன? ஏனோக்கைப் போல, நோவா ஏனோக்கை கவனித்துக் கொண்டேயிருந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏனெனில் ஏனோக்கு காணப்படாமற்போனபடியால், நியாயத்தீர்ப்பின் சமயம் நெருங்கிவிட்டது என்பதை அவன் அறிந்திருந்தான். நோவா பேழையின் அருகில் இருந்து கொண்டிருந்தான். 128 ஆனால் நோவா வானத்திற்கு எடுக்கப்படவில்லை. அவன் ஒரு துண்டு மரத்தை உயர்த்தி, உபத்திரவத்தின்மேல் சவாரி செய்தான். அவன் உபத்திரவ காலத்தினூடாக கொண்டு செல்லப்பட்டு, பின்பு மரித்துப்போனான். பாருங்கள்? ஆனால் நோவா உபத்திர காலத்தினூடாக கொண்டு செல்லப்பட்டான். 129 ஆனால் ஏனோக்கு மரணமின்றி எடுக்கப்பட்டான். சபையானது நித்திரையடைந்தவர்களுடன்கூட எடுக்கப்பட்டு கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்பதற்கு, ஏனோக்கின் சம்பவம் ஒரு முன்னடையாளமாக அமைந்துள்ளது. ஆனால் கைவிடப்பட்ட சபையோ உபத்திரவ காலத்திற்குள்ளும் பிரவேசித்து, எனக்கு இதைத்தவிர வேறொன்றும் செய்யத் தெரியவில்லை. ஏனோக்கு, மரணமடையாமல் எடுத்துக் கொள்ளப்பட்டான்.

61130 இப்பொழுது நாம் நம்முடைய பாடத்தைக் குறித்து சற்று ஆராயத் துவங்குவோம். நாம் மற்றவைகளை சொல்லிக்கொண்டே போனால் முத்திரைகளைச் சிந்திப்பதற்கு நமக்கு சமயமிராது. இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது நாம் எடுத்துக்கொள்வோம், ஏனென்றால் நாம் முத்திரைகளை நீண்ட நேரம் பார்க்கப்போகிறோம். ஒருகால் நாளை இரவு அல்லது அதற்கு அடுத்த இரவு அவ்வப்போது எக்காளத்தைக் குறித்தும் ஆராய்வோம். ஏனெனில் முத்திரைகள் உடைக்கப்படும் அதே சமயத்தில் எக்காளமும் முழங்குகின்றது. அவையிரண்டும் ஒன்றாகும். சபையின் காலம் தொடங்குகின்றது. அவையிரண்டும் ஒன்றாகும். பாருங்கள்?

62131 கவனியுங்கள், இப்பொழுது எக்காளம் எப்பொழுதும் போரை அல்லது அரசியல் சம்பந்தமாக நேரிடும் தகராறைக் குறிக்கிறது. எக்காளம் அரசியல் தகராறை உண்டாக்கும். அது போருக்குக் காரணமாயிருக்கும். இப்பொழுது நம்மிடையில் உள்ளது போன்று, அரசியல் குழப்பம் உண்டானால் யுத்தம் நெருங்கிவிட்டது என்பது அதன் அர்த்தம். இராஜ்யம் இப்பொழுதும் சாத்தானுக்குத்தான் சொந்தமாயிருக்கிறது. அவன் இன்றும் இப்பங்கை தன் கரத்தில் வைத்திருக்கிறான். 132 காரணம் ஏன்? அது கிறிஸ்துவினால் மீட்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் இனத்தான் மீட்பரின் பாகமான ஊழியத்தைச் செய்து, தம் பிரஜைகளை சேர்த்துக்கொண்டு வருகிறார். புத்தகத்தில் (பெயர்) எழுதப்பட்ட கடைசிநபர் அவரை ஏற்றுக்கொண்டு முத்திரிக்கப்படும்வரை அவர் அவ்வூழியத்திக் நிலைகொள்ள வேண்டும். இப்பொழுது நீங்கள் அதைப் புரிந்துகொண்டீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 133 அதன் பின்பு அவர் அவருடைய சிங்காசனத்திலிருந்து, தம்முடைய பிதாவின் சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வந்து, சிங்காசனத்தில் வீற்றிருக்கின்ற தேவனுடைய வலதுகரத்திலிருந்து புத்தகத்தை எடுத்து, தம் உடமைகளைப் பெற்றுக்கொள்கிறார். அவர் செய்யும் முதலாவது செயல் மணவாட்டியை அழைத்துக் கொள்வதாகும். ஆமென்! அதன் பின்னர் அவர் என்ன செய்கிறார்? அதன் பின்னர் அவனைப் பின்பற்றின அனைவரையும் அக்கினியில் தள்ளுகிறார். 134 இப்பொழுது நீங்கள் நினைவுகொள்ளுங்கள். அது ருஷியா அல்ல. இல்லை. அந்திக்கிறிஸ்து மிகவும் மிருதுவானவன். அவன் எவ்வளவு மிருதுவானவன் என்பதைக் கவனித்துப் பாருங்கள். அவன் தந்திரமுள்ள ஒருவன். ஆம் ஐயா. பரிசுத்த ஆவி மாத்திரமே அவனை மேற்கொள்ள முடியும். வெளிப்புறத்தில் நல்லவனைப் போல் காணப்படுவான்.

63135 கவனியுங்கள், எக்காளம் அரசியல் தகராறை யுத்தங்களை எடுத்துக் காட்டுகிறது. மத்தேயு 24-ம் அதிகாரத்தில் இயேசு “நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது…அது கடைசி வரையிலும் கேட்கும்…” என்கிறார். உங்களுக்கு அது நினைவிலிருக்கின்றதா…இயேசு அதைக் கூறுகின்றார். “யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும், யுத்தங்களின் செய்திகளும் யுத்தங்களும் கடைசி வரையில் அது இருக்கும்”. இப்பொழுது அதுதான் எக்கள முழக்கமாகும். 136 இப்பொழுது நாம் எக்காளத்தைக் குறித்து சிந்திக்கும்போது, கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ள யுத்தங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த சபையின் காலங்களைப் பின் தொடர்ந்தன என்று பார்க்கலாம். அவை இந்த முத்திரைகளையும் பின் தொடர்ந்தன என்று உங்களுக்கு காண்பிக்க முடியும். “யுத்தங்களும், யுத்தங்களின் செய்திகளும்”. ஆனால், எக்காளம் என்பது அரசியல் தகராறைக் குறிக்கிறது. 137 ஆனால் முத்திரை என்பது மத சம்பந்தமாக நேரிடும் குழப்பத்திற்கு எடுத்துக்காட்டாயிருக்கிறது. பாருங்கள்? ஒரு முத்திரை திறக்கப்படும்போது ஒரு செய்தி அளிக்கப்படுகிறது. சபையானது எப்பொழுது தன் சொந்த அரசியல் முறைகளைக் கையாடி, கௌரவம் கொண்ட அநேகர்களை அங்கத்தினர்களாய்க் கொண்டதாய் குழப்பமுற்றிருக்கிறது. அப்பொழுது, தூதன் அங்கு தோன்றி அந்த உண்மையான செய்தியை அறிவித்து, அவர்களை சின்னாபின்னப்படுத்துகிறான். அது சரி. முத்திரை திறக்கப்படுதல் மதசம்பந்தமான தகராறுக்கு அறிகுறியாகும். சம்பவித்ததும் அதுவே ஆகும். ஆம்.

64138 அவர்கள் அனைவரும் சீயோனைக் குறித்து அசட்டை கொண்டனர். சபையானது அமைதி கொண்டது. “நாங்கள் ஸ்தாபிக்கப்பட்டு அமைதி கொண்டிருக்கிறோம்” என்று கூறிக்கொண்ட இங்கிலாந்து சபையைப்போல, சபை அமைதி கொண்டது. கத்தோலிக்க சபை இவ்விதம் நினைத்துக்கொண்டிருந்தபோது, லூத்தர் அங்கு தோன்றினார். அப்பொழுது மதசம்பந்தமான தகராறு நேரிட்டது. ஆம், ஐயா. நிச்சயமாக! நல்லது. அவ்வாறே சபையானது ஸ்விங்லியோடு சென்றது. ஸ்விங்லியிலிருந்து பல்வேறுபட்டவர்களும், கால்வினும் தோன்றினார். சற்று கழித்து ஆங்கிலிக்கன் சபை அமைதி கொண்டிருந்தபோது, வெஸ்லி அங்கு தோன்றினார். அதன் விளைவால் மதசம்பந்தமான தகராறு நேரிடுகிறது. அது சரி. பாருங்கள். முத்திரை எப்பொழுதுமே மதசம்பந்தமான தகராறுக்கு அறிகுறியாகும்.

65139 இப்பொழுது, முத்திரை இப்பொழுது நாம் அதைச் சிறிது படிப்போம். நான் இந்தப் பொருளை எடுக்க விரும்புவதால், நாம் அதப் படிப்போம். நான் பேசிக்கொண்டே இருந்துவிடுகிறேன். நான்… ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். (என்ன நேர்ந்தது?) அப்பொழுது…இடிமுழக்கம் போன்ற சத்தமாய் சொல்லக் கேட்டேன். 140 ஓ! அதைக்குறித்து சில நிமிடங்கள் தியானிக்க எவ்வளவு ஆவல் கொண்டுள்ளேன்! கர்த்தருடைய ஆறுதலுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் மக்கள் இவையாவும் அறிந்து நன்கு ஆராய முற்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். ஒலிநாடாக்களைக் கேட்கிற நீங்களும்கூட இதனைக் குறித்து சிந்தியுங்கள். 141 ஆட்டுக்குட்டியானவர் முதலாம் முத்திரையை உடைத்தபோது, நிகழ்ந்த முதல் காரியம், ஒரு இடிமுழக்கம் உண்டானது. இப்பொழுது அதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அது…அது முக்கியத்துவமானது. இதற்கு ஒரு அர்த்தம் உண்டு. இதுதான் அந்த அர்த்தம். அர்த்தமில்லாமல் எதுவும் நேரிடுவதில்லை. சரி. ஒரு இடிமுழக்கம் உண்டானது. அந்த இடிமுழக்கம் என்னவாயிருந்தது என்று வியப்புற்றேன்.

66142 இப்பொழுது நாம் சிறிது படிப்போம். மத்தேயுவிற்கு திருப்புவோம்…இல்லை. நாம் பரிசுத்த யோவான் முதலாம் அதிகாரத்திற்கு திருப்புவோம். பரிசுத்த யோவான் 12-ம் அதிகாரத்தை எடுத்து, அங்கு ஒரு நிமிடம் நிறுத்திக்கொள்வோம். பரிசுத்த யோவான் 12ம் அதிகாரம். இப்பொழுது பரிசுத்த யோவான் 12-ம் அதிகாரத்தை நாம் எடுத்து 23-ம் வசனத்திலிருந்து வாசிக்கத் துவங்குவோம். இப்பொழுது நீங்கள் உன்னிப்பாய்க் கவனியுங்கள். அதன்பின் அது என்ன என்று நீங்கள் அதிசயிக்க வேண்டியதில்லை. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது. 143 பாருங்கள், இங்கு ஒரு காலம் முடிவடையும் ஒரு தருணத்தைக் காண்கிறோம். இயேசுவின் ஊழியம் முடிவடைந்து கொண்டிருக்கிறது. பாருங்கள்? “மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது.” 144 அப்படியானால் “மணவாட்டி எடுக்கப்படும்படியான சமயம் வரும்போது,” அல்லது “இனி காலம் செல்லாது” என்று சொல்லப்பட வேண்டிய சமயம் வரும்போது என்ன நேரிடும்? பலமுள்ள தூதன் ஒரு பாதத்தைச் சமுத்திரத்தின் மேலும் ஒரு பாதத்தை பூமியின் மேலும் வைத்து, சிரசின்மேல் வானவில் கொண்டவனாய் கைகளை வானத்து நேராக உயர்த்தி, “காலம் கடந்து விட்டது” என்கிறான். அது மட்டுமல்லாமல் இது சம்பவித்தபொழுது, அவன் தன் கரங்களை உயர்த்தி, “இனி காலம் செல்லாது” என்று ஆணையிட்டான். சபைக்கு அளிக்கப்பட்ட ஒரு சத்திய வாக்குமூலம், எவ்வளவு—எவ்வளவு பரிபூரணமாய் உள்ளது. “மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்: இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது,…

67145 அவர் தம் பாதையின் முடிவை அடைந்ததால் அவர் கலங்குகிறார்” என்று நீங்கள் கூறலாம். அவ்விதமாகவே ஆவிக்குரிய ஏதோ ஒன்று நிகழ்ந்து உங்களைக் கலக்கும்போது உங்களுக்கு எப்படி தோன்றுகிறது? ஓ, என்னே! உ—ஊம்! இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன்? பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. அங்கே நின்று கொண்டிருந்து, அதைக்கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள்…

68146 ஆட்டுக்குட்டியானவர் புஸ்தகத்தை வாங்கி முதலாம் முத்திரையை உடைத்தபோது, தேவன் தம் நித்திய சிங்காசனத்திலிருந்து பேசி, அம்முத்திரையில் அடங்கியுள்ள இரகசியங்களை வெளிப்படுத்துகிறார். ஆனால் அது யோவானுடைய முன்னிலையில் ஒரு அடையாளமாகவே (symbol) இருந்தது. யோவான் அதைக் கண்டபோது, அது இன்னும் இரகசியமாகவே இருந்தது. ஏன்? ஏனெனில் அச்சமயம் அந்த இரகசியம் வெளிப்படவில்லை. “கடைசிகாலத்தில்” என்று அவர் சொன்ன இந்தக் கடைசிகாலம் வரும்வரை அது வெளிப்பட முடியாது. ஆனால் அது ஒரு அடையாளமாக அளிக்கப்படட்து. 147 “இடிமுழக்கம்” உண்டானபொழுது…பலத்த இடிமுழக்கம் என்பது தேவனுடைய சத்தம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேதம் அவ்வாறே கூறுகின்றது, பாருங்கள் “இடி முழக்கம்”. அவர்கள், “ஒரு இடிமுழக்கமுண்டானது” என்று நினைத்தனர், ஆனால் அது தேவனாகும். அது அவருக்கு வெளிப்பட்டதனால், அவர் அதைப் புரிந்து கொண்டார். பாருங்கள்? அது ஒரு இடிமுழக்கமாகும்.

69148 முதலாம் முத்திரை திறக்கப்பட்டதை கவனியுங்கள். முதலாம் முத்திரை அடையாள ரூபமாக திறக்கப்பட்டபோது இடிமுழக்கமுண்டாயிற்று. அப்படியானால் அதன் உண்மையான இரகசியம் வெளிப்படுவதற்கென அது திறக்கப்படும்போது எவ்வாறிருக்கும்? என்னே… ஆட்டுக்குட்டியானவர் முத்திரையை உடைத்த மாத்திரத்தில் இடிமுழக்கமுண்டானது. அது எதை வெளிப்படுத்தினது? அதன் அர்த்தம் எல்லாமே அப்பொழுது வெளிப்படவில்லை. முதலாவது, அது தேவனிடத்திலிருந்தது. பின்பு அது அடையாளமாக அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் அது வெளிப்படுத்தப்படுகிறது. மூன்று காரியங்கள் பாருங்கள். அது சிங்காசனத்திலிருந்து வருகிறது. 149 முதலாவதாக, அதை காணவோ, கேட்கவோ முடிகிறதில்லை. அது முத்திரிக்கப்பட்டுள்ளது. அதைப் பெற்றுக்கொள்ள ஆட்டுக்குட்டியானவரின் இரத்தம் கிரயமாக செலுத்தப்பட்டது.

70150 அவர் பேசினபோது, இடிமுழக்கம் உண்டாயிற்று. ஆகவே அவர் அவ்வாறு செய்தபோது, வெள்ளைக் குதிரையின்மேல் வீற்றிருக்கிறவன் புறப்பட்டுச் செல்கிறான். அப்பொழுதும் அது அடையாளமாகவே இருந்தது. இப்பொழுது கவனியுங்கள். அதன் அர்த்தம் கடைசிகாலத்தில் வெளிப்படும் என்பதாய் அவர் கூறியுள்ளார். அது ஒரு சபையின் அடையாளத்தில் வருகின்றது. சபையே, உனக்கு அது புரிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அங்கு ஒரு முத்திரை உண்டென்றும், அது ஒரு—ஒரு சபையின் அடையாளத்தில் வருகிறதென்றும் அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் அதன் அர்த்தம் என்னவென்பதை அவர்களால் இதுவரை அறிந்துகொள்ள முடியவில்லை. வெள்ளைக்குதிரையின் மேல் வீற்றிருக்கிறவன் புறப்பட்டுச் செல்கிறான் என்று மாத்திரம் அவர்கள் அறிவார்கள். 151 இக்கடைசி காலத்தில் முத்திரை உண்மையாக உடைக்கப்படும்போது மாத்திரமே அது வெளிப்படும். அந்த முத்திரை யாருக்கு மாத்திரம் உடைக்கப்படுகிறது? கிறிஸ்துவுக்கல்ல, சபைக்கு. இப்பொழுது இதைக் கவனியுங்கள். ஓ, என்னே, அது எனக்கு நடுக்கத்தையளிக்கிறது. நான்—நான்—நான் கூறுவதன் அர்த்தத்தை சபை உண்மையாக புரிந்துகொள்ளும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அதைப் புரிந்து கொள்வீர்கள் என்பதால் நான் உங்களை மணவாட்டி என்று அழைக்கப் போகிறேன். பாருங்கள்.

71152 சத்தம் என்பது ஒரு இடிமுழக்கமாயுள்ளது. அந்த சத்தம் எங்கிருந்து வந்தது? ஆட்டுக்குட்டியானவர் மத்தியஸ்த ஊழியத்தைச் செய்து முடித்து, புறப்பட்ட அதே சிங்காசனத்திலிருந்து, இப்பொழுது, அவர் தம் ஸ்தானத்தை வகித்து, உடைமைகளைப் பெற்றுக்கொள்ள அங்கு நின்றுகொண்டிருக்கிறார். ஆனால் இடிமுழக்கமோ சிங்காசனத்தினுள்ளிருந்து புறப்பட்டு வெளிவந்து முழங்கினது. ஆட்டுக்குட்டியானவர் இங்கு நின்று கொண்டிருக்கிறார். அந்த இடிமுழக்கமானது அவர் விட்டு வந்த ஸ்தலத்திலிருந்து புற்ப்பட்டு வருகிறது. அவர்தம் சொந்த சிங்காசனத்திலிருந்து அமருவதற்கென்று பிதாவின் சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறார். மகிமை! இப்பொழுது, இப்பொழுது நண்பர்களே, அதை இழந்து போக வேண்டாம். 153 தேவன் கிறிஸ்துவை எழுப்பி, தம் சிங்காசனத்தில் அவரை அமரச் செய்து, நித்தியமான இராஜ்யத்தை பூமியில் அவருக்கு அளிப்பதாக அவர் தாவீதுக்குச் செய்த வாக்குத்தத்தத்தை கிறிஸ்துவர்களாகிய நாமெல்லாரும் அறிவோம். அவர் தம் வாக்குத்தத்தத்தின்படியே செய்தார். 154 இயேசுவும், “அந்திக்கிறிஸ்துவையும், உலகத்திலுள்ளவைகளையும் ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ, நான் ஜெயங்கொண்டு என் பிதாவின் சிங்காசனத்தில் அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன்” என்றார். பாருங்கள்?

72155 என்றாவது ஒருநாள் அவர் பிதாவின் சிங்காசனத்தை விட்டு எழுந்து, தம் சொந்த சிங்காசனத்தில் வீற்றிருக்க வருவார். 156 இப்பொழுது தம் பிரஜைகளை அழைத்துக்கொள்ள அவர் வருகிறார். எங்ஙனம் அவர்களைப் பெற்றுக்கொள்வார்? அவர் ஏற்கனவே மீட்பின் புத்தகத்தை தம் கையில் வைத்துக்கொண்டிருக்கிறார். மகிமை! ஓ, நான் ஒரு பாடலை பாட வேண்டும் என்பது போன்று உணருகிறேன். “விரைவில் ஆட்டுக்குட்டியானவர் தம்முடைய மணவாட்டியைக்கொண்டு செல்வார் அவள் எப்பொழுதும் தமது பக்கத்தில் இருக்க, வானத்தில் சேனைகள் அனைத்தும் அங்கு கூடியிருப்பார் (அதைக் காண) ஓ, அது மகத்தான ஒரு காட்சியாயிருக்கும், எல்லா பரிசுத்தவான்களும் கரையற்ற வெண்மையுடன் இருப்பர்; நாம் இயேசுவுடன் நித்தியமாக விருந்துண்போம். 157 ஓ! என்னே! “இப்பொழுது நாம் உன்னதங்களில் வீற்றிருப்பதை” குறித்துப் பேசுகிறோமே? அது எவ்விதம் இருக்கும்? எடுக்கப்படுதல் நிகழும் முன்பு, பூமியில் நாம் இருந்து கொண்டு, நாம் இப்பொழுது உள்ள நிலைமையில் இருந்துகொண்டே இந்தவிதமாக நம்மால் உணர முடிந்தால், சுவர்களில் சாய்ந்து கொண்டு, மழையில் நனைந்து இவ்வளவாக அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியுமானால், அவர் அங்கு உட்கார்ந்திருப்பதை நாம் கண்கூடாகக் காணும்போது, இதைக் காட்டிலும் எவ்வளவாக நாம் மகிழ்ச்சிகொள்ள முடியும் என்பதைப் பாருங்கள். ஓ, என்னே! ஓ, அது ஒரு மகிமையான நேரமாயிருக்கும்.

73158 குமாரன் பிதாவின் சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டு தாவீதின் குமாரனாகிறார். அவர் அப்பொழுதே தாவீதின் குமாரனாக வருவாரென்று இஸ்ரவேல் ஜனங்கள் எதிர்பார்த்திருந்தனர். சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயும், குருடனான பர்த்திமேயுவும் அவரைத் “தாவீதின் குமாரனே” என்று அழைத்து நினைவிருக்கிறதா? உ—ஊ! இயேசு, அவரைக் குறித்த திட்டம் என்னவென்பதை அறிந்திருந்தார். அதேசமயத்தில் அவர்களோ அதை அறிந்து கொள்ளவில்லை. அவரை இராஜாவாக்கி சிங்காசனத்தில் அமர்ந்த அவர்கள் பலவந்தப்படுத்தினர். பிலாத்துவும்கூட அவரை அந்தவிதமாகவே கேட்டான். 159 ஆனால் அவரோ, “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால், என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே! என் ராஜ்யம் பரலோகத்திலுள்ளது” என்றார். ஆனால் அவர், “நீங்கள் ஜெபம் பண்ணும்போது, ‘உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுவது போல் பூமியிலேயும் செய்யப்படுவதாக’ என்று ஜெபியுங்கள்” என்றார்: ஆமென்! உ—ஊம்! இந்தக் காரியம் எத்தனை மகத்துவமுள்ளதாயிருக்கிறது!

74160 அவர் பிதாவின் சிங்காசனத்தை விட்டு சொந்த சிங்காசனத்தில் வீற்றிருக்க வருகிறார். இப்பொழுது அவர் தம் மத்தியஸ்த ஊழியத்தை விட்டுவிட்டு, தம் சொந்த சிங்காசனத்தையும், அவர் மீட்ட பிரஜைகளையும் உரிமையாக்கிக்கொள்ள வருகிறார். அவர் அதைச் செய்யவே சிங்காசனத்தை விட்டு முன்னே வருகிறார். அப்பொழுதுதான் சிங்கம் போன்ற முகத்தையுடைய ஜீவன் யோவானிடத்தில் “வந்து பார்” என்றது. கவனியுங்கள். நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா? …முத்திரைகளில் ஒன்றை… அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி:…வந்துபார் என்று…இடிமுழக்கம் போன்ற சத்தமாய்ச்… 161 அந்த ஜீவன்கள் யாரென்று உங்களுக்குத் தெரியும். நாம் அவைகளை ஏற்கனவே செய்தியில் பார்த்துள்ளோம். “ஒன்று சிங்கத்திற்கொப்பாகவும், வேறொன்று காளைக்கொப்பாகவும், வேறொன்று மனுஷமுகம் கொண்டதாயும், மற்றொன்று கழுகுக்கு ஒப்பாகவும் இருந்தன”. இப்பொழுது, முதலாம் ஜீவன் சொல்லிற்று…ஒவ்வொரு முறையும் வெவ்வேறு ஜீவன் வந்து வெவ்வேறு குதிரைகளின் மேல் சவாரி செய்பவர்களைக் காண அழைப்பதை நாம் காணலாம். ஆக மொத்தம் நான்கு ஜீவன்களும், வெவ்வேறு குதிரைகளின்மேல் சவாரி செய்யும் நால்வரும் உள்ளனர். 162 கவனியுங்கள். அவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறை அறிவிக்கின்றன. அவைகள் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பவைகளாகும். நாம் மறுபடியுமாய் அவைகளைக் கண்டு, அவைகள் ஒவ்வொன்றும் அறிவித்தபோது அவைகளில் மத்தேயு எதுவென்றும், மாற்கு, மாற்கு—மாற்கு எதுவென்றும், யோவான் எதுவென்றும் நிரூபிப்போம் …?…

75ஜீவன்களில் ஒன்று வந்து…பார்…என்றது. 163 யோவான் ஒரு இடிமுழக்கம் போன்ற சத்தத்தைக் கேட்டான். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று, அவனிடத்தில், “வந்து பார்” என்றது. 164 நாம் வேறுவிதமாக கூறுவோமானால், இப்பொழுது இங்கே ஆட்டுக்குட்டியானவர் நிற்கிறார். என்ன சம்பவிக்கின்றது என்பதை யோவான் அங்கே நின்று கவனித்துக் கொண்டிருக்கிறான். ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்ட வண்ணமாய் இரத்தம் தொய்ந்தவராய் சிங்காசனத்திலிருந்து முன்னே வருகிறார். அவர் ஒருவர்தான் பாத்திரவானாகக் காணப்பட்டார். அவர் அங்கு சென்று புஸ்தகத்தை எடுத்த பொழுது, மீட்பின் கிரயம் செலுத்தப்பட்டு விட்டதை யாவரும், அங்கு யாவும் சத்தமிட்டு களிகூர ஆரம்பித்தனர். நீங்கள் பாருங்கள். 165 இப்பொழுது அவர் தமக்குச் சொந்தமானவைகளைப் பெற்றுக்கொள்ள வந்துவிட்டார்.

76ஆகையால், அவர் புஸ்தகத்தை எடுத்து, யோவான் முன்பாக நின்று, புஸ்தகத்தை இழுத்து, முத்திரையை உடைக்கிறார். அவர் முத்திரை உடைக்கிறார். அவர் முத்திரையை உடைத்தபோது, அந்த இடத்தினூடாக இடிமுழக்கம் உண்டாயிற்று. இடிமுழக்கம், கர்ஜனை உண்டானபோது யோவான் ஆகாயத்தில் (air) குதித்திருப்பான் என்பதில் சந்தேகம் இல்லை. 166 அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று யோவானை நோக்கி, “முத்திரையின் கீழ் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்ன என்பதைக் காண இப்பொழுது வா” என்று அழைக்கிறது. ஓ, என்னே! “யோவானே, நீ காண்பவைகளை ஒரு புஸ்தகத்தில் எழுது”. அது என்னவென்பதைக் காண யோவான் அங்கு செல்கிறான். இடிமுழக்கம் கூறினதென்ன எபதை அறிய யோவான் அங்கு செல்லும்போதுதான் அந்த ஜீவன், “முதலாம் முத்திரையின் கீழ் அடங்கியுள்ள இரகசியத்தை வந்து பார்” என்று அவனை அழைக்கிறது. [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தின்மேல் நான்கு முறைகள் தட்டுகிறார்—ஆசி.] அந்த இடிமுழக்கம், அந்த சிருஷ்டிகரின் சத்தம் அதைச் சொன்னது. இப்பொழுது, அது என்னவென்பதை அவன் அறிந்ததாக வேண்டும். பாருங்கள்? ஓ என்னே! ஆனால் யோவான் இதை எழுதினான் என்பதை இப்பொழுது சிந்தியுங்கள்.

77167 ஆனால் அவன் மற்ற ஏழு இடிகளைப் பற்றி எழுத ஆரம்பித்த பொழுது, அவர் “அதை எழுதாதே” என்றார். அவன் கண்டயாவையும் எழுதவேண்டுமென்ற கட்டளை அவனுக்கு உண்டாயிருந்தது. ஆனால் வெளிப்படுத்தின விசேஷம் 10-ம் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை “எழுத வேண்டாம்” என்று அவர் கூறினார். அவை இரகசியமானவைகளாய் இருந்தன. அவையென்னவென்பதை நாம் இதுவரை அறியோம். ஆனால் சரியாக இப்பொழுதே அது வெளிப்படும் என்பது என்னுடைய கருத்து. அது வெளிப்படும்போது அந்தச் சபையானது அசைந்து செல்லும்படியாக, அந்த எடுத்துக்கொள்ளப்படும் கிருபைக்கான விசுவாசத்தை அது அளிக்கும். பாருங்கள்? 168 நாம் இதுவரை அறிந்த எல்லாவற்றையும் ஆராய்ந்திருக்கிறோம். ஒவ்வொரு சபையின் காலங்களிலும் நிகழ்ந்தவைகளை நாம் கண்டிருக்கிறோம். கடைசி நாட்களில் மணவாட்டியின் மகத்தான ஒன்று கூடுவதின் தோன்றுதலை குறித்து நாம் அறிந்திருக்கிறோம். ஆயினும் அதே சமயத்தில் நம்மை தெளிவுபடுத்திக்கொள்ள அவசியமான ஏதோ ஒன்று இன்னமும் வெளிப்படாமல் உள்ளது. மற்ற ஏதோ ஒன்று உண்டு. 169 ஆனால் அந்த இரகசியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக யோவான் காலத்தில் வெளிப்பட்டபோது, தேவன் அவனிடம், “யோவானே, அதை மறைத்து வை. ஒரு நிமிடம் பொறுத்துக்கொள். நான் அந்த நாளிலே அதை வெளிப்படுத்துவேன். அதை எழுத வேண்டாம். ஏனெனில் அவர்கள் அதன்பேரில் தடுமாறி விழுவார்கள். அவர்கள் அதைப் புரிந்து கொள்ளும் தன்மையைப் பெற்றிருக்கும் நாளில் நான் அவர்களுக்கு அதை வெளிப்படுத்துவேன்” என்று சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். 170 அவ்விடி முழக்கங்கள் காரணமின்றி உரைக்கவில்லை. அந்தத் துளி மையைப் போன்று, எல்லாவற்றிற்கும் ஒரு நோக்கமுண்டு என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். ஆனால், கவனியுங்கள். சிருஷ்டிகர் மொழிந்தார். யோவான் இந்த சத்தத்தைக் கேட்டு காணச் சென்றான்.

78171 ஆட்டுக்குட்டியானவர் யோவானுக்கு அடையாளங்களில் காண்பித்துக் கொண்டு…சபையானது அறிந்து கொள்ளும்படியாக, சபைக்காக எழுத வேண்டிய வசனம் என்ன என்பதை அவர் யோவானுக்குக் காண்பிக்கிறார். அவர் யோவானிடம், “இது என்னவென்று யாருக்கும் அறிவிக்க வேண்டாம். நீ கீழே இறங்கிச் சென்று, ஏழாம் முத்திரையின் கீழ் அடங்கியுள்ள இரகசியம் இதுதான் என்று சொல்ல வேண்டாம். நீ கீழேச் சென்று, அதைச் சொல்லாதே. நான் யோவானாகிய உனக்கு அப்படிக் கூறினால் காலங்கள்தோறும் வைத்திருக்கும் என் திட்டம் வெளியரங்கமாகிவிடும். அது ஓர் இரகசியமாக இருக்க வேண்டும்” என்றார். பாருங்கள்? அவர் மேலும்…“என் வருகையின் நேரத்தை யாரும் அறிய முடியாது. நான் வருகிறேன் என்று மாத்திரம் அவர்கள் அறிந்தால் போதுமானது” என்றார். பாருங்கள்? பாருங்கள்? அவ்வளவுதான். அவர் எப்பொழுது வருகிறார் என்று நான் அறிய வேண்டிய அவசியம் இல்லை. அவர் எந்நேரம் வரினும் நான் அதற்கு ஆயத்தமாயிருக்க வேண்டும். ஆகையால் அப்பொழுது அவன் கூறினான்…

79யோவான் அதைக் காண முன் சென்று, “நான் அதை இப்பொழுது பார்க்கப் போகிறேன்” என்று நினைத்தான். 172 யோவான் சென்ற போது, அவன் என்ன செய்தான்? அவன் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? இப்பொழுது அவன் இதை சபைக் காலத்திற்கு எழுதவேண்டும். அதைத்தான் அவன் செய்யவேண்டும், அதை சபையின் காலங்களுக்கு எழுத வேண்டும். முதலில் “நீ கண்ட ஏழு பொன் குத்து விளக்குகளின் எழுது. விவரணத்தை சபைகளுக்கு இதை எழுதி, அவைகளைத் தெரியப்படுத்து”. அது சரி.

80173 ஒரு இடிமுழக்கம் உண்டானது. அது தேவனுடைய சத்தம் என்பதை யோவான் அறிந்திருந்தான். சிங்கத்திற்கொத்த ஜீவன், “நீ வந்து அது என்னவென்று பார்” என்று சொல்ல, யோவானும் அதைக் கண்டு எழுதுவதற்கென்று தன் எழுதுகோலுடன் புறப்பட்டுச் செல்கிறான். 174 இப்பொழுது, அவன் கண்டகாட்சியின் அர்த்தத்தை அவனால் ஒருபோதும் சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. அவன் கண்டது தேவன் சபைகளுக்கு “ஒரு குறிப்பிட்ட காலம்” வரைக்கும் அனுப்பிய காட்சிக்களாம். அவர் எப்பொழுதுமே அதைச் செய்கிறார். அதன் அர்த்தத்தை வெளிப்படுத்த வேண்டிய தருணம் வரும்போது, அவர் அதை வெளிப்படுத்துவார். ஆனால் அப்பொழுது அதை அவர் வெளிப்படுத்தவில்லை. ஏன்? ஏனெனில் அவர் அதை கடைசிக்காலம் வரைக்கும் ஒரு இரகசியமாக வைத்திருந்தார். ஆனால் கடைசிசபை தூதனின் செய்தி முழக்கமானது இந்த இரகசியங்களை ஒன்று சேர்ப்பதாகும். பாருங்கள்?

81175 அவர் யோவானுக்கு அதை தெளிவுபடுத்தவில்லை. ஆனால் யோவான் என்னத்தைக் கண்டான் என்றால், “ஒரு வெள்ளைக்குதிரை செல்வதையும், அதன்மேல் ஒருவன் வீற்றிருக்கிறதையும் காண்கிறான்.” அவன் என்ன செய்தானோ அதையே அவன் எழுதி வைத்தான். பாருங்கள். நான்கு ஜீவன்களில் ஒன்றுஅவனிடம் “வந்து பார்” என்றது. 176 ஆகவே, அவன் சென்று இந்தக் காட்சியைக் கண்டு. அவன், “ஒரு வெள்ளைக்குதிரையைக் காண்கிறான். அதன் மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான் அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது. அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்” என்பதையேக் கண்டான் …இதை மாத்திரமே யோவான் கண்டான், எனவே அவன் அதை எழுதி வைத்தான். இப்பொழுது பாருங்கள், அது ஒரு அடையாளமாக இருக்கிறது. அந்தவிதமாகவே சபை அதை ஏற்றுக்கொண்டுள்ளது.

82177 ஆனால் கடைசி காலத்தில் அவர் அதை வெளிப்படுத்துவார் என்றும், அது என்ன என்று காண்பிப்பார் என்றும் வாக்களிக்கப்பட்டுள்ளது. அதைப் புரிந்துகொள்ள தேவன் நமக்கு உதவிசெய்வாராக. சபைக்காலங்கள், ஆனால் இந்த கடைசி சபைக் காலத்தில் ஏழாவது செய்தி வரைக்கும். சபையின் காலங்களில் அது முற்றிலுமாக தெரிவிக்கப்படவில்லை. கவனியுங்கள், அவன் ஆரம்பிக்கிறான்… 178 இந்த ஏழாம் சபையின் செய்தியாளனை நீங்கள் கூர்ந்து கவனித்தால், அவன் மற்றவர்கள் செய்தது போல, அவன் ஒரு ஸ்தாபனம் உண்டாக்கவில்லையென்பதை அறியலாம். அவன் ஸ்தாபனத்தை ஆரம்பிக்கவில்லை, இல்லை, அவன் அவைகளுக்கு எதிராக இருக்கிறான் என்பதை நீங்கள் காணலாம். எலியா ஸ்தாபனங்களின் விரோதியாயிருந்தானா? நிச்சயமாகவே அவன் எதிராயிருந்தான். ஆம். எலியாவின் ஆவியைக் கொண்ட யோவான் ஸ்நானன் ஸ்தாபனங்களை எதிர்த்தவனா? 179 எலியா எவ்விதமான ஆவியை தன்மேல் கொண்டிருந்தான்? அவன்…அவனைக் குறித்து யாருமே அதிகம் அறியவில்லை, அவன் ஒரு சாதரண மனிதன்தான். ஆனால் அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் வெறுக்கப்பட்டான். என்னே! அவன் எப்பொழுது தோன்றினான்? இஸ்ரவேல் ஜனங்களின் செல்வாக்கு ஓங்கி, அவர்கள் தேவனை விட்டு அகன்று உலகப்பிரகாரமாக இருந்த சமயத்தில் அவன் தோன்றினான். அவன் அதை வெளிக்கொணர்ந்தான். அவன் ஸ்திரீகளை வெறுத்தான், ஊ—ஊம், ஆம், ஐயா, நிச்சயமாக. அவன் வனாந்திரத்தை விரும்பினான். அதுதான் அவன் இயல்பு.

83180 எலியா பெற்றிருந்த அதே ஆவியைக் கொண்டவனாக யோவான் தோன்றினதை அந்த மக்கள் அறிந்திருக்க வேண்டும். நான் நேற்று இரவு கூறினதுபோல, ஒரு முக்கியஸ்தனைப் போல் அவன் ஆடை உடுத்தியிருக்கவில்லை. அவன் மேட்டுக்குடியினர் போல, குழந்தைகளை முத்தமிடுவதும், விவாக, அடக்க ஆராதனைகளையும் மற்றவைகளையும் செய்யவில்லை. ஆனால் இந்த மனிதன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு வந்த ஒரு மனிதனாயிருந்தான். அவன் என்ன செய்தான்? அவன் வனாந்திரத்தை நேசித்தான். அவன் செய்த வெறொன்று ஸ்தாபனங்களை வெறுத்தான். அவன், “நாங்கள் இதைச் சார்ந்தவர், அல்லது அதைச் சார்ந்தவர் என்று கூறிக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தேவன் இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்” என்றான். 181 அவன் சத்தியத்தை விட்டுக்கொடுக்காத ஒருவன். அவர்கள்…இயேசு அவனைக் குறித்து, “காற்றினால் அசையும் நாணலைப் பார்க்க்கவா வனாந்திரத்திற்குச் சென்றீர்கள்? யோவான் அப்படிப்பட்டவன் அல்ல” என்றார். இல்லை, ஐயா.

84182 யோவானும் என்ன செய்தான்? எலியா யேசபேலிடம் தவறுகளை எடுத்துரைத்தது போன்று, யோவான் ஸ்நானன் ஏரோதியாளின் தவறை உணர்த்திக் காண்பித்தான். அவன் ஏரோதின் முகத்தை நோக்கி, “நீர் அவளை வைத்துக் கொள்வது நியாயமல்ல” என்று தைரியமாய்க் கண்டித்தான். எனவே அதற்காக அவன் அவனுடைய தலையைத் துண்டித்தாள். பாருங்கள். அவள் எலிசாவைப் பிடிக்க முயற்சித்தாள். யேசபேலுக்குள்ளிருந்த அதே ஆவிதான் ஏரோதியாளுக்குள்ளும் இருந்தது. 183 அதே ஆவிதான் இன்றைய யேசபேல் சபைகளிலும் காணப்படுகின்றது. இப்பொழுது அதைக் கவனியுங்கள். இதில் இங்கே நான் ஒரு பெரிய பாடத்தைக் கண்டறிகிறோம். 184 இப்பொழுது, அக்காலத்து ஜனங்கள் அந்த ஆவியை அறிந்து கொண்டிருக்க வேண்டும். யோவான் அங்கு நின்று ஜனங்களைக் கண்டித்தபோது, அது எலியாவின் ஆவியாயிருந்தது என்று அவர்கள் புரிந்துகொண்டிருந்தது போன்று காணப்பட்டது. அது எலிசாவின் ஆவி என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவன் அந்த ஆவியாய் இருந்தான்.

85185 இப்பொழுது, நாம் சபை காலங்கள் முழுவதும் பார்த்தபோது, வேதவாக்கியத்தின்படி அந்த எலியாவின் ஆவி முடிவு காலத்திற்கு சற்று முன்பு திரும்பவும் வரவேண்டும் என்று நமக்கு வாக்களிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் இப்பொழுது கண்டறிகிறோம். அது உண்மையல்லவா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 186 இப்பொழுது கவனியுங்கள். அதை ஆவியின் இயல்பை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இப்பொழுது, எலிசாவின் ஆவியைக் கொண்டவன். லூத்தர், வெஸ்லி மற்றவர் செய்ததைப் போன்று வேறொரு சபை காலத்தை உண்டாக்க மாட்டான். அவன் வேறொரு சபையை உண்டாக்கமாட்டான். ஏனெனில் வேறொரு சபை காலம் வரப்போவதில்லை. பாருங்கள்? வேறொரு சபை என்பது இனிமேல் இராது. ஆகையால் ஸ்தாபனத்தை அவன் எதிர்க்க வேண்டும். ஏனெனில் அவனுடைய ஆவி, அங்கே முன்பு அவர்களிடமிருந்த அதே ஆவியாயிருக்கும். 187 அதே ஆவி, நான் கடந்த இரவு உங்களிடம் கூறினவாறு, அந்த ஆவியை மூன்று வித்தியாசமான சமயங்களில் உபயோகிக்க தேவன் பிரியம் கொண்டார். மூன்று என்பது தேவனுடைய எண்ணிக்கையாகும். இரண்டல்ல, மூன்று. அவர் ஏற்கனவே அதை இருமுறை உபயோகித்துவிட்டார். இப்பொழுது அதை மறுபடியும் உபயோகிக்கப் போகிறார். அவ்விதம் செய்யப்போவதாக அவர் வாக்களித்துள்ளார். இப்பொழுது கவனியுங்கள், அவன்…

86188 அவர் செய்தபொழுது, இப்பொழுது கவனியுங்கள். அவன் வேறொரு ஸ்தாபனத்தை உண்டாக்கப் போவதில்லை. ஏனெனில் லவோதிக்கேயா சபையின் காலம்தான் கடைசி சபையின் காலம். ஏழாம் சபைக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஏழாம் செய்தியாளன் பரிசுத்தஆவியின் உதவியைக் கொண்டு சகல இரகசியங்களையும் வெளிப்படுத்துவான். அது செய்யப்போவது…சென்ற இரவு உங்களில் எத்தனைபேர் இங்கே இருக்கிறீர்கள்? நாங்கள் உங்களை கரங்களைக் காணட்டும். அது வேதத்தில் எங்கு காணப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். வெளிப்படுத்தின விசேஷம் 10-ம் அதிகாரம் ஆகையால் அதைப் படிக்கவேண்டிய அவசியமில்லை. பாருங்கள். அது சரி. அது சரி.

87189 சீர்திருத்தக்காரர் தங்களுக்கு முன்பிருந்த நிலைகுலைந்த சபையைச் சீர்படுத்த வந்தனர். பிறகு, அந்த சீர்திருத்தக்காரர்கள் வந்தபிறகு, சபையை அதனுடைய நிலையிலிருந்து சீர்படுத்தினப் பிறகு, அவர்கள் மறுபடியும் உலக வழிகளில் சென்று ஒரு புதிய சபையின் காலத்தை உண்டாக்கிக் கொண்டனர். அவர்கள் எப்பொழுதும் அதைச் செய்தனர், எப்பொழுதும். இப்பொழுது நாம் அதை முன்னமே பார்த்திருக்கிறோம். 190 பாருங்கள்? வேறு வார்த்தைகளில் கூறினால், ரோமன் கத்தோலிக்க சபையினுடைய கத்தோலிக்க சபைக்காலம் இங்கிருந்தது. அப்பொழுது சீர்திருத்தக்காரராகிய லூத்தர் தோன்றினார். அவர் சீர்திருத்தக்காரர் என்று அழைக்கப்பட்டார். அவர் என்ன செய்தார்? அதை அப்பொழுதே ஆணித்தரமாக எதிர்க்க ஆரம்பித்தார். அவர் சபையின் முறைகளை ஆட்சேபித்தார். அதன்பின் அவர் செய்த முதற்காரியம் என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா? அவர் எவைகளை ஆட்சேபித்தாரோ, அவைகளின் மேலேயே வேறொரு சபையைக் கட்டினார். 191 அதன் விளைவாக வேறொரு சபையின் காலம் தோன்றியது. அதன்பின்னர், முதல் காரியம் உங்களுக்குத் தெரியுமா, இங்கே உண்டானது…சபை மறுபடியும் குழப்பமுற்ற நிலையில் இருந்தது. மற்றொரு சீர்திருத்தக்காரராகிய ஜான் வெஸ்லி தோன்றினார். அவ்வாறே வேறொரு சபையின் காலத்தை உண்டாக்கினார். பாருங்கள்? நான் கூறுவதன் அர்த்தம் உங்களுக்கு விளங்குகின்றதா? மற்றொரு சபைக்காலம் உண்டானது. அவர்களெல்லாருமே சீர்திருத்தக்காரர்கள்.

88192 கவனியுங்கள், ஆனால் கடைசி சபையின் காலத்து கடைசிகால செய்தி ஒரு சீர்திருத்தம் அல்ல. அவர் ஒரு தீர்க்கதரிசி, சீர்திருத்தக்காரர் அல்ல. எந்த ஒரு தீர்க்கதரிசியாகிலும் ஒரு சபையின் காலத்தை உண்டாக்கியதாக எனக்குக் காண்பியுங்கள்! அவன் ஒரு சீர்திருத்தக்காரன் அல்ல, அவர் ஒரு தீர்க்கதரிசி. 193 மற்றவரெல்லாம் சீர்திருத்தக்காரர், ஆனால் அவர்கள் தீர்க்கதரிசிகளல்ல. கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் மாத்திரமே வருகிறது. அந்தகாரணத்தினால், அவர்கள், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானம், மற்றும் இன்னும் வேறு காரியங்களில் நிலைத்திருந்தனர், ஏனென்றால் அவர்கள் சீர்திருத்தக்காரர்கள், தீர்க்கதரிசிகளல்ல. ஆயினும் அவர்கள் மகத்தான தேவமனிதர்களாய் இருந்தனர். அவர்கள் வாழ்ந்த காலத்தில் தேவைகளை அவர்கள் அறிந்திருந்தனர். தேவன் அவர்களை அபிஷேகித்திருந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று தவறான முறைகளுக்கு விரோதமாய்ப் பிரசங்கித்து அவைகளை சின்னாபின்னப்படுத்தினர். ஆனால் தேவனுடைய வார்த்தையின் முழுமை அவர்களிடத்தில் ஒருபோதும் வரவில்லை, ஏனென்றால் அவர்கள் தீர்க்கதரிசிகள் அல்ல. அவர்கள் சீர்திருக்காரர்களாயிருந்தனர்.

89194 தீர்க்கதரிசிகளால் மட்டுமே இரகசியங்கள் அறியப்படுவதால், இக்கடைசி நாட்களில், தேவனுடைய இரகசியங்களை ஒன்று சேர்த்துக் கொண்டு வர தீர்க்கதரிசியே இருக்க வேண்டும். ஆகவே, இவன்தான் அந்த நபராயிருக்க வேண்டும். நான் இப்பொழுது என்ன கருதுகிறேன் என்பதை நீங்கள் காண்கிறீர்களா? அவன் சீர்திருத்தக்காரனாய் இருக்க முடியாது. தேவனுடைய வார்த்தையை கிரகித்துக்கொள்ள அவன் வரம் பெற்ற ஒரு தீர்க்கதரிசியாய் இருக்க வேண்டும். 195 இப்பொழுது சீர்திருத்தக்காரர், ஏதோக்காரியம் தவறாயிருந்தது என்பதை அறிந்திருந்தனர். நற்கருணையில் கொடுக்கப்படும் அப்பம் கிறிஸ்துவின் சரீரமல்ல என்பதை லூத்தர் நன்கு அறிந்திருந்தார். எனவே அவர், “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” என்று பிரசங்கித்தார். அதுதான் அவருடைய செய்தியாய் இருந்தது. அவ்வாறே, ஜான் வெஸ்லியும் தோன்றி, பரிசுத்தமாகுதல் என்பதை அவர் கண்டு, அந்த பரிசுத்தமாகுதலை அவர் பிரசங்கித்தார். அவருடைய செய்தி அதுவாக இருந்தது. பாருங்கள்? பெந்தேகொஸ்தேகாரர் பரிசுத்த ஆவியைக் குறித்த செய்தியைக் கொணர்ந்தனர். 196 ஆனால் கடைசி நாட்களில், இந்தக் கடைசி காலத்தில், இந்த செய்தியாளன் ஒரு சீர்திருத்தத்தை உண்டாக்குவதில்லை சீர்திருத்தக்காரர் விட்டு விட்ட எல்லா தேவரகசியங்களையும் அவன் ஒன்று சேர்த்து, ஜனங்களுக்கு அதை வெளிப்படுத்துவான். நான் அதை மறுபடியும் படிக்கட்டும். அது எனக்கு மிகவும் நல்லதாய் தொனிக்கிறது. நான்—நான் அதைப் படிக்க விரும்புகிறேன்.

90…பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது. அவனுடைய சிரசின் மேல் வானவிலிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப் போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது. 197 இப்பொழுது அவர் கிறிஸ்து என்பதை நாம் ஏற்கனவே கண்டோம். கிறிஸ்துதான் எப்பொழுதுமே சபைக்குரிய செய்தியாளனாக இருக்கின்றார் என்பதை நாம் அறிந்துள்ளோம். சரி. அவர் அக்கினி ஸ்தம்பம் என்றும், உடன்படிக்கையின் தூதன் என்றும் அழைக்கப்படுகிறார். திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது. 198 இப்பொழுது, இங்கே முத்திரைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. நாம் இப்பொழுது அவைகளை உடைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது, அந்த முத்திரை (Thing) திறக்கப்பட்டிருக்கின்றது. தன் வலது பாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடது பாதத்தைப் பூமியின் மேலும்வைத்து, சிங்கம் கெர்ச்சிக்கிறது போல மகாசத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது, ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின. (என்னே! அந்த முழுமை!) அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் யோவான் எழுத வேண்டுமென்றிருந்தேன். (எதை எழுதுவது? அவைகள் சொன்னவைகளை) அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரை போடு என்று வானத்திலிருந்து (தேவன்) ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன். அவைகளை எழுத வேண்டாம். (பாருங்கள்?) சமுத்திரத்தின் மேலும்…பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்டதூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி; வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான்.

91199 கவனியுங்கள்! நாம் படிக்கும் இந்நேரத்தில், இதை நீங்கள் மறக்க வேண்டாம். ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே (நாட்கள்)… 200 அந்த கடைசி தூதன், பூமியிலுள்ள தூதன் ஆவான். இந்த தூதன் வானத்திலிருந்து இறங்கி வருகிறார். அது அவரல்ல; அவர் வானத்திலிருந்து இறங்கி வருகிறார். ஆனால் அவர் இங்கே ஏழாம் தூதனின் சத்தத்தைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். அது… தூதன் என்பவன் “செய்தியாளன்” என்றும், சபைக்காலத்திற்குச் செய்தியைக் கொண்டு வருபவன் என்பதை அனைவரும் அறிவர். இனி காலம் செல்லாது; தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும். (ஏழு முத்திரைகள், எல்லா, இரகசியங்களும்).

92201 முழு இரகசியமும் வெளிப்படுகிறது. அதுவே இந்தத் தூதனின் ஊழியமாயிருக்கும். பாருங்கள்? அது எளிமையாய் இருப்பதால், ஜனங்கள் குப்புற விழுவார்கள். ஆனால் அதே சமயத்தில் அந்த ஊழியம் பரிபூரணமாக ரூபகாரப்படுத்தப்படும். அது பரிபூரணமாக அறியப்படும். பாருங்கள்? காண விரும்புவர் யாவரும் அதைக் காணமுடியும். பாருங்கள். அது சரி. ஆனால் அவர்கள்… 202 ஆனால் இயேசு, “கண்களிலிருந்தும் காணாதவர்களாகவும், காதுகளிலிருந்தும் கேளாதவர்களாயும் இவர்கள் இருதயம் கொழுந்திருக்கிறது என்று ஏசாயா உங்களைக் குறித்து நன்றாய் சொன்னான்” என்பதாய் அவர் வந்தபோது கூறியுள்ளார். பாருங்கள்? இப்பொழுது, நாம் அதைக் காண்கிறோம்… 203 அது என்னை திடுக்கிடச் செய்தது. நான் அந்த கடிகாரத்தை அங்கே நோக்கியபொழுது, பத்து மணி ஆயிற்று என்று நினைத்தேன். ஆனால், அது, நான்—நான்…இன்னும் ஒன்பது மணியே ஆகவில்லை. பாருங்கள்? அது சரி. ஓ, என்னே! இப்பொழுது நாம் இதைப் பெற்றுக் கொள்வோம். கவனியுங்கள். நான் இதை விரும்புகிறேன்.

93204 மற்றவர் சீர்திருத்தக்காரர். ஆயினும் அவர்கள் தேவனுடைய மகத்தான மனிதராயிருந்து காலத்தின் தேவைகளை அறிந்து சீர்திருத்தம் உண்டாக்கினார். 205 ஆனால் வெளிப்படுத்தின விசேஷம் 10-ல் கூறப்பட்டுள்ள கடைசிகாலத்து தூதன் சீர்திருத்தம் உண்டாக்குபவனல்ல. அவனுடைய செய்தி இரகசியங்களை வெளிப்படுத்துவதாயிருக்கும், இரகசியங்களை வெளிப்படுத்துதல். அது அம்மனிதனுக்குள் இருக்கும் வார்த்தையாகும். தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், உருவக்குத்துகிறதாயும் இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருப்பதாய் எபிரேயர் 4-கூறுகிறது. பாருங்கள்? இந்த மனிதன் சீர்திருத்தக்காரன் அல்ல. அவன் வெளிப்படுத்திகிறவனாய் இருக்கிறான். அவன் (எதை) வெளிப்படுத்துகிறான்? தேவனுடைய இரகசியங்களை வெளிப்படுத்துகிறான். சபைகள் அதையும் (வார்த்தை) மற்றவற்றையும் தேக்க நிலைக்கு கொண்டு வந்த நேரத்தில், அவன் தேவனுடைய வார்த்தையுடன் வந்து, அந்த காரியத்தை வெளிப்படுத்துவான்.

94206 அது ஏனெனில், அவன், “பிள்ளைகளுடைய விசுவாசத்தைப் பிதாக்களின் விசுவாசத்திற்கு திரும்பக் கொண்டுவர” (Restore) வேண்டியவனாய் இருக்கிறான். மூல வேத விசுவாசமானது ஏழாம் தூதனால் திரும்பக் கொண்டு வரப்பட வேண்டியதாயுள்ளது. ஓர் இது எனக்கு எவ்வளவு பிரியம்! சீர்திருத்தக்காரர் முழுவதும் புரிந்து கொள்ள முடியாத முத்திரைகளின் இரகசியங்கள் வெளியரங்கமாக வேண்டும் பாருங்கள்? மல்கியா 4-ம் அதிகாரத்தை ஒரு நிமிடம் அப்படியே சற்று நோக்குவோம். நல்லது நீங்கள் அதை அப்படியே குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதில் கூறப்பட்டவன் ஒரு தீர்க்க்கதரிசி. அவன், “பிதாக்களின் மூல விசுவாசத்திற்குத் திரும்ப கொண்டு வாருவான்.” இப்பொழுது அந்த மனிதன் காட்சியில் தோன்றுவதற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். அவன் தாழ்மையுள்ளவனாய் இருப்பதன் காரணத்தால், கோடிக்கணக்கான பேர் அவனை அறிந்து கொள்ளமாட்டார்கள். ஒரு சிறு குழு மாத்திரமே அவனைப் புரிந்துகொள்ளும். 207 கிறிஸ்துவுக்கு முன்பாக ஒரு செய்தியாளன் வருவானென்றும் அவன் “வனாந்திரத்திலிருந்து புறப்படுகிற சத்தமாயிருப்பானென்றும்” யோவானின் வருகை முன்னறிவிக்கப்பட்டது என்பதை நீங்கள் ஞாபகங் கொள்ளுங்கள். மல்கியா அவனைக் கண்டான். கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக வரும் எலியாவைக் குறித்து மல்கியா 3-ம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ளதைப் பாருங்கள். 208 “ஓ, இல்லை, இல்லை, சகோதரன் பிரான்ஹாம். அது 4-ம் அதிகாரம்” என்று நீங்கள் கூறலாம். நான் உங்களுடைய மன்னிப்பை வேண்டுகிறேன்.

95209 இயேசுவே அது 3-ம் அதிகாரத்தில் உள்ளதாகக் கூறுகிறார். இப்பொழுது பரிசுத்த…நீங்கள் இப்பொழுது பரிசுத்த மத்தேயு 11-ம் அதிகாரம் 6 வசனத்தை எடுங்கள். அவர்—அவர் இதை அங்கே கூறுகிறார். அது 11-ம் அதிகாரம் 6-ம் வசனம் என்று நான் நம்புகிறேன். 4-வது, 5வது அல்லது 6-வது…சரியாக அவ்விடத்திலே…அங்கே உள்ளது. அவர் யோவானைக் குறித்து பேசும் போது, “நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதிருந்தால்…‘இதோ நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்,’ என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்” என்றார். இப்பொழுது மல்கியா 3-ம் அதிகாரத்தைப் படித்துப் பாருங்கள். சிலர் அதை மல்கியா 4-ம் அதிகாரத்தில் கூறப்பட்டதுடன் பொருந்துகின்றனர். இல்லை ஐயா, அதுவல்ல அது. 210 கவனியுங்கள், மல்கியா 4-ல் கூறப்பட்ட தூதன் சென்றவுடன், உலகம் முழுவதும் எரிந்து விடுகிறது. அப்பொழுது ஆயிர வருட அரசாட்சியில் நீதிமான்கள் துன்மார்க்கரின் சாம்பலின் மேல் நடப்பார்கள். ஆகவே, நீங்கள் பாருங்கள், இதை நீங்கள் யோவான் ஸ்நானனுடைய வருகையுடன் பொருந்தினால், அக்காலத்தில் நடவாத ஒன்றை வேதம் கூறியிருப்பதாக அர்த்தமாகிறது. இரண்டாயிரம் வருடம் கடந்தபோதும், இவ்வுலகம் இன்னும் எரிந்து சாம்பலாகவில்லை. நீதிமான்கள் அதில் வாழ்கின்றனர். ஆகையால் அது எதிர்காலத்தில், இனிமேல் நிகழவிருப்பதை உரைக்கிறது. ஓ…என்னே! [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை ஒருமுறை கொட்டுகிறார்—ஆசி.] 211 நீங்கள் இங்கே வெளிப்படுத்தின விசேஷத்தில் கடைசிகாலச் செய்தியாளன் செய்ய வேண்டியது என்ன என்பதைக் காண்பீர்களேயானால், அப்பொழுது அவன் யார் என்பதை நீங்கள் காணமுடியும். அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். இந்த சீர்திருத்தக்காரர் காணமுடியாத முனைகளை அவன் கிரகித்து, அதை அங்கே பொருத்துகிறான்.

96212 தேவனுடைய ஆவிக்குரிய வெளிப்பாடின்றி மத் 28:19-ம், அப்போஸ்தலர் 2:38-ம் ஒன்று என்று எங்ஙனம் அறியமுடியும்? அற்புதங்களின் நாட்கள் முடிவடைந்து விட்டது என்று ஜனங்கள் அந்தவிதமாக தேவ வெளிப்பாடில்லாமல் எப்படி கூற முடியும்? (ஹூ!) வெளிப்பாடு இருந்தால் மாத்திரமே அவர்களால் எது தவறு, எது சரியென்று அறிந்து கொள்ள முடியும். பாருங்கள்? ஆனால் அவர்கள் வேதப் பள்ளிகளினூடாக வந்துள்ளனர். அந்த பொருளுக்குள் வர நமக்கு நேரம் உள்ளது என்று நான் நம்புகிறேன். 213 நான் துரிதப்பட விரும்புகிறேன். ஏனெனில் இந்த முத்திரைகள் திறக்கப்பட, நான் உங்களை ஒரு வாரத்திற்கு மேலாக வைத்திருக்க விரும்பவில்லை. நான் என்ன கருதுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனக்கு ஒருநாள் மட்டுமே உண்டு. என்னால் முடிந்தால் நான் அந்த நாளில் பிணியாளிகளுக்காக ஜெபிக்கவே விரும்புகிறேன்.

97214 இப்பொழுது மல்கியா 4-ம் அதிகாரத்தை சற்று நோக்குவோம். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்து, “பிதாக்களின் மூல விசுவாசத்திற்குத் திரும்பக் கொண்டு வருவான்.” 215 கடைசி காலத்தில், உபத்திரவ காலம் தொடங்கும்போது, இப்பொழுது அந்த மூன்றரை வருடங்கள் எங்குள்ளது என்பதை, நாம் ஒரு நிமிடம் திரும்பிக் காண்போம்…மூன்றரை வருடகாலம் …அல்லது தானியேலின் எழுபது வாரங்கள், தானியேல் மொழிந்த எழுபது வாரங்களின் பிற்பகுதி மூன்றரை வருடங்கள். சபையின் காலங்களிலிருந்து எத்தனை பேருக்கு இது ஞாபகமுள்ளது? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] பாருங்கள்? “எழுபது வாரங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.” எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது என்று பாருங்கள். “மேசியா வந்து அப்பொழுது சங்கரிக்கப்படுவார். அவர் வாரத்தின் பாதியில் பலியையும், காணிக்கையையும் ஒழியப் பண்ணுவார்.” ஆகவே, யூதர்களுக்காக மேசியாவின் போதகத்திற்காக, இன்னும் மூன்றரை வருடங்கள் அங்கே உள்ளன.

98216 தேவன் ஒரே சமயத்தில் யூதர்களிடமும், புறஜாதிகளிடமும் ஈடுபடுவதில்லை. அவர் இஸ்ரவேலரை ஒரு நாடாக நடத்துகிறார். ஆனால் புறஜாதியாரிடம் தனிப்பட்ட நபராக ஈடுபடுகிறார். அவர் புறஜாதியார் அனைவரையும் மணவாட்டியாக எடுத்துக் கொள்வதில்லை. புறஜாதியார் மத்தியிலிருந்து ஒரு கூட்ட ஜனத்தை அவர் மணவாட்டியாக எடுத்துக் கொள்கிறார். பாருங்கள்? இப்பொழுது இஸ்ரவேலரை ஒரு நாடாக வழி நடத்திக் கொண்டு வருகிறார். அவள் இப்பொழுது ஒரு நாடாக ஆகி விட்டாள். 217 பால் பாயிட் எனக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் “சகோதரன் பிரான்ஹாமே, இது எவ்வளவு உண்மையாயுள்ளது! அதாவது என்ன நேரிட்ட போதிலும் யூதர்களுக்கு இன்னமும் புறஜாதியாரிடம் ஒரு வெறுப்பு உணர்ச்சி காணப்படுகின்றது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நிச்சயமாக அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டியதாயிற்று.

99218 மார்டின் லூத்தர் யுதர்கள் அந்திக் கிறிஸ்துவென்றும், அவர்கள் எல்லோரும் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வீடுகள் எரிக்கப்பட வேண்டுமென்றும் அறிக்கை விடுத்தது தெரியுமா? பாருங்கள்? லூத்தர் தானே அதை தம்முடைய எழுத்து மூலம் அறிவித்தார். மார்டின் லூத்தர் கூறியதை ஹிட்லர் நிறைவேற்றினார். மார்டின் லூத்தர் ஏன் இவ்வாறு கூறினார்? ஏனெனில் அவர் ஒரு சீர்திருத்தக்காரர், ஒரு தீர்க்கதரிசியல்ல. 219 தேவன், “என் தீர்க்கதரிசி இஸ்ரவேலை ஆசீர்வதித்தான். அவன், ‘உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான். உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டிருப்பான்’” என்றான். ஒரு தீர்க்கதரிசி கூறியுள்ளதை எப்படி மற்றொரு தீர்க்கதரிசி மறுக்க முடியும்? அவன் அதை மறுக்கவே முடியாது. அவை ஒன்றுக்கொன்று இசைந்திருக்க வேண்டும், பாருங்கள்.

100220 அந்த காரணத்தினால்தான் அவர்கள்…பாருங்கள், ஜெர்மானிய தேசம் ஒரு கிறிஸ்தவ நாடாகக் கருதப்படுகிறது. ஆனால் அவர்கள் யூதர்களுக்கு இழைத்த தீங்கிற்குப் பிரதிபலன் அவர்களுக்குக் கிடைக்கும். ஆனால் நீங்கள் அவர்களை குறைகூற முடியாது. சற்று ஞாபகங் கொள்ளுங்கள். இக்கூட்டத்தில் யூதர்கள் யாராவது இருப்பார்களாயின், நீங்கள் எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். அந்த நாள் வந்துகொண்டிருக்கிறது! தேவன் அவர்களை ஒருபோதும் மறக்கவே முடியாது. அவர்கள் நமது நிமித்தமாக குருடாக்கப்பட்டனர். 221 அவர் இதை தீர்க்கதரிசியிடம் கூறினார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்…தீர்க்கதரிசி ஒருவன், “நீர் இஸ்ரவேலை மறப்பீரோ?” என்று கதறினான். 222 அவர் அவனிடம். “உன் அளவுகோலை எடுத்து வானம் எவ்வளவு உயரமென்றும், சமுத்திரம் எவ்வளவு ஆழமாய் இருக்கிறது என்றும் அளந்து சொல்” என்றார். அவன் “அவைகளை அளக்க இயலாது” என்றான். 223 “அவ்வாறே நானும் இஸ்ரவேலை மறக்கவே முடியாது” என்று பதிலளித்தார். ஆம், அது அவருடைய ஜனங்கள், அவருடைய ஊழியக்காரர்கள். 224 ஆனால் ஒரு சிலர் மாத்திரமே புறஜாதியாரிலிருந்து அவருடைய மணவாட்டியாகத் தெரிந்து கொள்ளப்பட்டுள்ளனர். அது முற்றிலும் சரி. அது மணவாட்டியாகும்.

101225 இப்பொழுது, இந்த எழுபது வாரங்கள் பரிபூரணமாய் நியமிக்கப்பட்டுள்ளன. தானியேல் கூறியவண்ணம், மேசியா வந்து வாரத்தின் பாதியில் சங்கரிக்கப்படுவார். இயேசு மூன்றரை வருடகாலமாக தீர்க்கதரிசனம் உரைத்தார். இப்பொழுது தானியேலின் இந்த வாரத்தின் பாதியில்தான் மேசியா சங்கரிக்கப்பட்டார். இந்த வாரத்தின் பிற்பகுதிதான் உபத்திரவ காலம், அப்பொழுது மணவாட்டி சபை. ஓ! இது மிகவும் மகத்தானது! இப்பொழுது இதை தவறவிடவேண்டும். மணவாட்டி மணவாளனுடன் செல்கின்றாள். அதன்பின்னர் ஆயிர வருட அரசாட்சிப் பிறகு, துன்மார்க்கரின் சாம்பலின்மேல் நடப்பார்கள்.

102226 காம் இப்பொழுது இதை மனதில் கொண்டிருக்கும் இந்நேரத்தில் நான் ஒன்றை இங்கே உங்களுக்கு காண்பிக்கட்டும். அது என்ன கூறுகின்றது என்றும், வேதம் என்ன கூறுகின்றது என்றும் நான் உங்களுக்கு சற்று காண்பிக்கட்டும். இது தேவனுடைய வார்த்தையல்ல என்று நாம் மறுதலிக்க முடியாது. நாம் அதை மறுதலித்தால் அப்பொழுது நாம் அவிசுவாசிகளாய் இருக்கிறோம். பாருங்கள்? அதை நாம் விசுவாசித்தே ஆகவேண்டும் “என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று நீங்கள் கூறலாம். எனக்கும் அது புரியவில்லை. ஆனால் அவர் அதை வெளிப்படுத்தும்படியாய் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். பாருங்கள்! இதோ சூளையைப் போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் (அமெரிக்கர்களைப் போன்றவர் யாவரும்) ஆம்…அக்கிரமஞ் செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்: வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; (அவர்கள் எரிந்து விடபோகின்றனர்) அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற் போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

103227 அப்படியானால் நித்தியமான நரகம் எங்கிருக்கிறது? பாருங்கள்? இந்தக் கடைசி நாட்களில் இவையாவும் வெளிப்படுகின்றன. பாருங்கள்? நரகம் நித்தியமானதென்று வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. நரகத்தில் நித்தியமாக வாசம் செய்ய வேண்டுமானால் அதற்கு நித்திய ஜீவன் அவசியமாயிருக்குமே! ஒரே வகை நித்திய ஜீவன் தான் உண்டு. அதைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். தொடக்கம் உண்டாயிருக்கும் எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு. நரகம் எனப்படுவது “பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டது”. ஆகையால் அது எரிந்து சாம்பலாகிவிடும். அது உண்மை. பாருங்கள்? ஆனால் அது நிகழும்போது, அது வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும். ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள். துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும் நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின் கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 228 உபத்திரவ காலத்திற்குப் பின்பு துன்மார்க்கர் எங்கிருப்பார்கள்? சாம்பலாய்ப் போவார்கள். ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள். இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்தில் எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.

104229 ஆமென்! பழைய ஏற்பாடு இதைக் கூறிவிட்டு முடிவு பெறுகிறது. புதிய ஏற்பாடு அது போன்றே முடிவு பெறுகிறது. அங்ஙனமாயின், இதை நீங்கள் எப்படித் தள்ளிவிடமுடியும்? அவ்விதம் முடியாது. பாருங்கள், “அந்த நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்தில் எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்”. நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதப்படிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான். (ஊ!)

105230 எங்குதான் காரியம். அது கர்த்தருடைய வார்த்தையாகும். அவர் அனுப்புவதாக வாக்களித்துள்ளார். அது வந்தாக வேண்டும். அது இப்பொழுது எவ்விதம் சம்பவிக்கிறது என்பதை நீங்கள் கவனிப்பீர்களேயானால், நலமாயிருக்கும். தேவன் அதை எப்படிச் செய்கிறார் என்பது காண்பதற்கு அழகாயுள்ளது. முதலாவது மணவாட்டி மணவாளனுடன் செல்கிறாள். அதன் பின்னர் துன்மார்க்கர் அவியாத அக்கினியில் எரிந்து போவார்கள். உலகம் சுத்திகரிக்கப்பட்ட பின்னர், அது மறுபடியும் உண்டாகிறது. அனைத்தும் அப்பொழுது சுத்திகரிக்கப்படும். ஒவ்வொரு காரியமும் ஒரு சுத்திகரிப்பு நிலையினூடாகச் செல்ல வேண்டும். 231 மகத்தான அந்த கடைசி தருணத்தில் எரிமலைகள் குழம்பைக் கக்கும்; உலகமே பிளந்து போகும். பாவமென்னும் சாக்கடைக்குழியும், பூமியின் மேல் காணப்படும் யாவும் ஒன்றுமில்லாமல் உருகிப்போகும். ஒரு துளி மையின் நிறம் வெண்மையாக்கும் திரவத்தில் விழும்போது எவ்வாறு மறைந்து மூல நிலைக்குத் திரும்புகிறதோ, அவ்வாறே அது அப்பேர்ப்பட்ட கருமையான தீயினால் எரிந்துபோம். தேவனிடத்திலிருந்து வரும் அக்கினி மிகவும் உக்கிரமாயிருந்து அசுத்தமாயிருக்கும் எல்லா பொருட்களும் எரிந்துபோய் அதனதன் மூல நிலைக்குத் திரும்பும். அப்பொழுது சாத்தானும் பாவத்துடன் கூட எரிந்து போவான். அப்பொழுது இவ்வுலகம் புதுப்பிக்கப்பட்டு, ஏதேன் தோட்டத்தின் அழகைப் போன்று விளங்கும். சரி, ஓ, அந்த மகத்தான நேரம் நம் முன்னால் காத்துக்கொண்டிருக்கிறது.

106232 உபத்திரவ காலத்தில், இப்பொழுது நான் இங்கே கூறப்போவதை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். எடுக்கப்பட்ட பின்பு சபையானது உபத்திரவ காலத்திற்குள் பிரவேசிக்கும் சமயத்தில், வெளிப்படுத்தின விசேஷம் 11-ல் கூறப்பட்ட இரண்டு சாட்சிகள் 1,44,000 பேரை அழைப்பார்கள். இப்பொழுது கவனியுங்கள். இவ்விரண்டு சாட்சிகளும் இரட்டுத்தி, ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்கள் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள்.

107233 ரோமரால் உண்டாக்கப்பட்ட கால அட்டவணையில் (calendar) 28,30,31 நாட்கள் மாறி மாறி வருகின்றன. ஆனால் உண்மையான கால அட்டவணையில் ஒவ்வொரு மாதத்திற்கும் முப்பது நாட்கள் மாத்திரமே உண்டு. சரி. ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்கள் முப்பதால் வகுத்தால் சரியாக மூன்றரை வருடம் கிடைக்கின்றது. என்ன கிடைத்தது என்று பார்த்தீர்களா. மேசியாவின் செய்தி இஸ்ரவேலுக்குப் பிரசங்கிக்கப்பட அளிக்கப்பட்ட சமயம், அதுதான் முன்பு இருந்ததுபோலவே அவர் வந்து தம்மை ஒரு அடையாளமாக வெளிப்படுத்தும்போது நிகழும் காரியம்.

108234 யோசேப்பு ஒரு ஆவிக்குரிய மனிதன் என்னும் காரணத்தால், தன் சகோதரரால் புறக்கணிக்கப்பட்டு வேறு தேசத்திற்குக் கொண்டு செல்லப்பட்டான். அவனால் தரிசனம் கண்டு, சொப்பனத்தின் அர்த்தத்தை வியாக்கியானிக்க முடிந்தது. அவன் அவ்வாறே செய்தபடியால், ஏறக்குறைய முப்பது வெள்ளிக்காசுக்கு விற்கப்பட்டு வேறு தேசத்திற்குக் கொண்டு செல்லப்பட்டான். கிறிஸ்துவின் ஆவி அவனுக்குள் வாசம் செய்தால், அவன் கிறிஸ்துவுக்கு சரியான முன்னடையாளமாயிருந்தான். 235 அதன்பின் என்ன நிகழ்ந்தது என்பதைக் கவனியுங்கள். அதைக் கவனியுங்கள், அவன் சிறையிலிடப்பட்டான். அங்கு ஒருவன் இரட்சிக்கப்பட்டான், மற்றவன் கைவிடப்பட்டான். அவ்வாறே இயேசுவும் சிலுவையாகிய சிறையில் இருந்தபோது, சரியாக ஒரு கள்ளன் இரட்சிக்கப்பட்டான், மற்றவன் கைவிடப்பட்டான். சரியாக. 236 யோசேப்பு மரித்தவனைப்போல குழியிலே வீசப்பட்டு, பின்னர் தூக்கியெடுக்கப்பட்டு, பார்வோனின் வலது பாரிசத்தில் வீற்றிருந்தான். எவரும் யோசேப்பை முதலில் காணாமல் பார்வோனைக் காணமுடியாது. அவ்வாறே இயேசு தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். குமாரனின் மூலமேயன்றி எந்த மனிதனும் பிதாவினிடத்தில் வரமுடியாது. சரி.

109237 யோசேப்பு சிங்காசனத்தின் வலது புறத்தை விட்டு எழுந்த ஒவ்வொரு முறையும் …கவனியுங்கள். மகிமை! யோசேப்பு பார்வோனின் வலதுபாரிசத்தில் வீற்றிருந்தான். அவன் சிங்காசனத்தை விட்டு எழுந்தபோது, “யோசேப்பு வருகிறார், எல்லோருடைய தெண்டனிட்டுப் பணியுங்கள்” என்று எக்காளம் முழங்கினது. 238 ஆட்டுக்குட்டியானவரும் மத்தியஸ்த ஊழியத்தை முடித்து, சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டு மீட்பின் புஸ்தகத்தை எடுத்துக் கொண்டுவரும்போது முழங்கால் யாவும் அவருக்கு முன்பாக முடங்கும். அதோ அவர் அங்கே இருக்கிறார். கவனியுங்கள்.

110239 தன்னுடைய சகோதரரால் புறக்கணிக்கப்பட்ட யோசேப்புக்குப் புறஜாதி மனைவி அளிக்கப்பட்டாள். போத்திபிரா அவனுக்கு அளிக்கப்பட்டாள்…அல்லது பார்வோன் அவனுக்கு புறஜாதி மனைவியை அளித்தான். யோசேப்பு பாதி புறஜாதியும், பாதி யூதனுமாகிய இரண்டு புறஜாதிப் பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் ஒரு பெரிய அடையாளத்தை அளிக்கின்றனர். யோசேப்பின் குமாரராகிய எப்பீராயிம், மனாசே இவர்கள் யாக்கோபினிடத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, அவன் கைகளைக் குறுக்கிட்டு இளையவனுக்கு ஆசீர்வாதத்தை அளித்தான். இவ்விருவரும் பன்னிரண்டு கோத்திரத்தில் சேர்க்கப்பட்டனர். ஏனெனில் அப்பொழுது பத்து கோத்திரங்கள் மட்டுமே இருந்தன. யாக்கோபு தன்னிலே அவர்களை ஆசீர்வதித்தான். யோசேப்பு அங்கு நின்று கொண்டு, “தகப்பனே, நீர் தவறு செய்துவிட்டீர், உம் வலது கர ஆசீர்வாதத்தை மூத்தவனுக்கு அளிப்பதற்குப் பதிலாக இளையவனுக்கு அளித்து விட்டீர்” என்றான். 240 அதற்கு யோசேப்பு, “என் கைகள் குறுக்கிடப்பட்டதை நான் அறிவேன். ஆனால் தேவன் அவைகளை குறுக்கிடப்பண்ணினார்” என்றான். ஏன்? இஸ்ரவேலர் மணவாட்டியாகும் உரிமையைப் பெற்றிருந்தபோது அதை அவர்கள் நிராகரித்து தங்கள் சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுபோட்டனர். ஆசீர்வாதம் மூத்தவனான இஸ்ரவேலரை விட்டு, சிலுவையின் மூலம் இளையவனான புறஜாதிக்கு வந்தது.

111241 ஆனால் அதற்குப் பின், பாருங்கள், அவன் மணவாட்டியைப் பெற்றுக் கொண்ட பின்பு, நடந்ததென்ன என்று கவனியுங்கள். பாருங்கள்? யோசேப்பின் சகோதரர் தானியம் வாங்க அவனிடத்தில் வந்தபோது: 242 ஓ…இது மிகவும் ஒரு அழகான காட்சியாய் உள்ளது. முத்திரைகளை விட்டு சிறிது விலகுகிறேன். நீங்கள் இதன் காட்சியை மிக நன்றாகப் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புவதால் நான் அதைக் குறித்து உங்களிடம் கூறியே ஆக வேண்டும். பாருங்கள். கவனியுங்கள். 243 இப்பொழுது யோசேப்பின் சகோதரன் தானியம் வாங்க அவனிடம் வந்தபோது, யோசேப்பு அவர்களை உடனே கண்டு கொண்டான் என்று நீங்கள் அறிவீர்கள். யோசேப்பு செழிப்பின் குமாரனாய் இருந்தான். அவன் எங்கு சென்றாலும் அங்கு செழிப்பு உண்டானது. 244 அவர் மீண்டும் பூமிக்கு வரும்வரை நீங்கள் காத்திருங்கள்; நம்முடைய யோசேப்பு வரும்வரை காத்திருங்கள். பாருங்கள்? “அப்பொழுது வனாந்திரம் ரோஜாக்களைப் போன்று செழிப்படையும். நீதியின் சூரியன் தம் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் கொண்டவராய் உதிப்பார்” ஓ, என்னே! அரிஸோனாவில் (Arizona) காணப்படும் முட்செடிகளும் அழகான மரங்களாக மாறும். அது ஓர் அழகான காட்சியாயிருக்கும்.

112245 கவனியுங்கள், யோசேப்புக்கு அங்கு வந்து, அவர்களிடம் ஒரு சிறு தந்திரத்தைக் (Trick) கையாண்டு, “உங்கள் தகப்பனார் இன்னும் உயிரோடிருக்கிறாரா?” என்று கேட்டான். பாருங்கள்? அவன் தகப்பனார் உயிரோடிருக்கிறாரா என்று அறிய அவன் விரும்பினான். அவர்கள் “ஆம்” என்றனர். அவர்கள் அவனுடைய சகோதரர் என்று யோசேப்பு அறிந்து கொண்டான். ஆனால் அவன் தன்னுடைய சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்த எப்பொழுது ஆயத்தமானான் என்று நீங்கள் கவனித்தீர்களா? 246 யோசேப்பு சிறிய பென்யமீனைக் (Little Benjamin) கண்டான். யோசேப்பு புறஜாதியாரிடத்தில் விற்கப்பட்டுச் சென்ற பிறகு பென்யமீன் பிறந்தான். இயேசு சென்ற பிறகு 1,44,000 பேர் ஒன்று கூடுவதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு. அவர் திரும்ப வந்தபோது…அவன் பென்யமீனைக் கண்டபோது அவன் இருதயம் வெடித்துவிடும் போலிருந்தது.

113247 நினைவில் கொள்ளுங்கள்…அவர்கள்…அவன்…யோசேப்புக்கு எபிரேயமொழி தெரியும் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர். அவன் ஒரு மொழிப்பெயர்ப்பாளனை வைத்துக் கொண்டு எகிப்தியனைப் போல பாவனை செய்தான். பாருங்கள்? யோசேப்பு அவன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்த விரும்பினபோது, அவன் சிறிய பென்யமீனையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனைவியை அனுப்பிவிட்டான் என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். அவன் தன் சகோதரருக்கு தன்னை வெளிப்படுத்தினபோது அவள் மாளிகையில் இருந்தாள். 248 இயேசுவும் தம் சொந்த ஜனங்களால் புறக்கணிக்கப்பட்டு, புறஜாதி மணவாட்டியை, மனைவியை தெரிந்து கொண்டார். அவர் அவளை இங்கிருந்து கலியாண விருந்துக்காக மகிமையுள்ள தம் பிதாவின் மாளிகைக்குக் கூட்டிச் சென்று திரும்பவும் வந்து தம் சகோதரராகிய 1,44,000 பேருக்குத் தம்மை வெளிப்படுத்துவார் …?… அந்த நேரம்

114249 அவர் அங்கே நிற்கிறார். நினைவிருக்கட்டும், அந்த பரிபூரண அடையாளத்தை நோக்கிப் பாருங்கள். இவ்விதமாக யோசேப்பு திரும்பி வந்து, தன் சகோதரரை நோக்க ஆரம்பித்தான். அப்பொழுது அவர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். அவர்கள், “இப்பொழுது ரூபன், நமக்கு இது வேண்டியதாயிருக்கிறது. பாருங்கள். ஏனெனில், நாம் என்ன செய்தோம் என்பதை அறிந்திருக்கிறோம். நாமும் அந்த இளைஞனை அவ்விதம் நடத்தினோம். நாம் நம் சகோதரனை விற்றுப் போட்டிருக்கக் கூடாது,” என்றனர். அவர்கள் சகோதரனாகிய யோசேப்பு அங்கு வல்லமையுள்ள அரசகுமாரனாக நின்று கொண்டிருந்தபோது, அவன் சகோதரர் அவனை அறிந்துகொள்ளவில்லை. 250 அந்த காரணத்தினால் தான் இஸ்ரவேலரால் அவரை இன்றைக்கு அறிந்துகொள்ள முடியவில்லை. அவரை அறிந்துகொள்ள வேண்டிய சமயம் இன்னும் வரவில்லை. 251 அப்பொழுது யோசேப்பிற்கு எபிரெய மொழி புரியாது என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் அவனோ அவர்கள் பேச்சை சரியாய் கவனித்துக் கொண்டிருந்தான். “நமக்கு இது வேண்டியதாயுள்ளது”, என்று அவர்கள் கூறினர். யோசேப்போ அவர்களை நோக்கினபோது, அவனால் அடக்கிக் கொள்ள முடியாதிருந்தது.

115252 இப்பொழுது அவனுடைய மனைவியும், பிள்ளைகளும் அந்த நேரத்தில் அரண்மனையில் இருந்தனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதுபோல பரிசுத்தவான்கள் அவருடைய பிரசன்னத்திலிருந்து சென்றுவிட்டிருப்பர். 253 யோசேப்பு, “நான் தான் யோசேப்பு, உங்கள் சகோதரன்” என்று கூறினான். அவன் பென்யமீனின் கழுத்தில் விழுந்து கதறி, அழத்துவங்கினான். பாருங்கள். அவன் தன்னை அவர்களுக்குத் தெரியப்படுத்தினான். 254 அப்பொழுது அவன் சகோதரர், “இப்பொழுது நாம் அவனை விற்றுப்போட்டதால், நமக்கு இது வருகிறது என்பதை அறிவோம். நாம் தான் அவனை விற்றுப்போட்டோம். நாம் அவனைக் கொல்ல முயன்றோம். ஆனால் அவனோ இப்பொழுது நம்மைக் கொல்லுவான் என்பதை நாம் அறிந்துள்ளோம்” என்றான். 255 ஆனால் யோசேப்பு, “நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். உங்கள் ஜீவனைக் காப்பதற்கென தேவன் என்னை முன்கூட்டி அனுப்பினார்” என்றான். 256 நாம் கண்டவிதமாக, வேதம் கூறுகின்றபடி அவர் தம்மை அவர்களுக்குத் தெரியப்படுத்தும்போது, இயேசு 1,44,000 பேரான இன்றுள்ள சிறிய பென்யமீனுக்கு அங்கு விடப்பட்ட மீதியான யூதர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும்போது, அவர்கள், “உம் கைகளில் இருக்கிற இந்த வடுக்களை எங்கிருந்து பெற்றுக் கொண்டீர்? ஏன் அவைகள் உங்கள் உங்கள் கைகளில் உள்ளது?” என்று கேட்பார்கள்.

116257 அப்பொழுது அவரோ, “ஓ, இவை என் சிநேகிதரின் வீட்டில் உண்டானவை” என்பார். பாருங்கள்? அப்பொழுது அவர்கள் மேசியாவை தாங்கள் கொன்றதை உணருவார்கள். ஆனால் அவர் என்னக் கூறுவார்? யோசேப்பு கூறியது போன்று கூறுவார். “ஊழியஞ் செய்யவே இதைச் செய்தீர்கள், அல்ல…ஜீவனை இரட்சிக்கவே இதைச் செய்தீர்கள். உங்களுக்குள்ளே வேதனை அடைய வேண்டாம்” என்பார். ஏனெனில் யூதர்கள் குருடராக்கப்படாமலிருந்தால், புறஜாதிகள் காணியாட்சிக்குள் பிரவேசித்திருக்க இயலாது. ஆகவே, அவர்களது கிரியைகளின் மூலம் அவர் சபையின் ஜீவனைக் காத்தார். அங்குதான் காரியம் அதன் காரணத்தினாலேயே இன்று அவர்கள் இதை அறிந்து கொள்ள முடியாது. அதற்கேற்ற தருணம் இன்னும் வரவில்லை.

117258 நாமும் இதைப் புரிந்துகொள்ள வேண்டிய தருணம் வரும் வரையில் இந்த காரியங்களை ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியாது. ஓ, என்னே! வெளிப்படுத்தின விசேஷத்தின் ஏழு இடிமுழக்கங்கள் மறுரூபமடையதற்கு ஏற்ற ஆயத்தமாகும் பெரிய விசுவாசத்தை மணவாட்டிக்கு அளிக்க தேவன் தாமே வழிகாட்டுவாராக! 259 இப்பொழுது, நமக்கு இன்னும் பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள்கூட இராததால், நாம் துரிதமாகச் செல்வோம். 260 இப்பொழுது இந்த வெள்ளைக்குதிரையின் அர்த்தமென்ன? அதை நான் மறுபடியும் படிக்கட்டும்…என் பொருளுக்கு அப்பாற்பட்ட காரியங்களை பிரசங்கித்ததற்கு மன்னிக்கவும். ஆனால் நான் மறுபடியும் அந்த இரண்டு வசனங்களை வாசிக்கவுள்ளேன். ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன்.அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்;… 261 நாம் இப்பொழுது இரண்டாம் வசனத்தை வாசிக்கப் போகிறோம். …இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன். அதின் மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது. (அதற்கு முன்பு அவனுக்குக் கிரீடம் இல்லாதிருந்தது) அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.

118262 அவ்வளவுதான், அது தான் முத்திரை. இந்த அடையாளச் சின்னம் என்னவென்பதைப் பார்ப்போம். 263 இடிமுழக்கம் எதைக் குறிக்கிறது என்று நாம் ஆராய்ந்து அறிந்தோம். நாம் பரிபூரணமாய் அதை அறிவோம். பாருங்கள். முத்திரை திறக்கப்பட்டபோது உண்டான அந்த இடிமுழக்கம் தேவனுடைய சத்தமாயிருந்தது. 264 இப்பொழுது வெள்ளைக்குதிரையின் அர்த்தமென்ன? இப்பொழுது, இங்குதான் நமக்கு வெளிப்பாடு வருகிறது. இது தான் வார்த்தை என்பதை அறிந்தவனாய் நான் இப்பொழுது இங்கு நின்று கொண்டிருப்பது எவ்வளவு உறுதியோ, அவ்வாறே நான் கூறப்போவதும் சத்தியமென்பது உறுதி. 265 அதைக் குறித்து எனக்குக் கிடைத்த எல்லாப் புத்தகங்களையும் நான் படித்திருக்கிறேன்…நான்… முப்பது வருடங்களுக்கு முன்னால், ஏழாம் நாளை ஆசரிக்கும் கூட்டத்தாருக்கு இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி மற்றவர்களைக் காட்டிலும் அதிக வெளிப்பாடு உண்டு என்று ஒருவர் என்னிடம் கூறினார். ஆகையால் அவர்களிடமிருந்த சில நல்ல புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன். ஸ்மித் (smith) என்பவர் எழுதிய தானியேலின் வெளிப்பாடு என்னும் புத்தகத்தைப் படித்தேன். அதில் வெள்ளைக் குதிரையைப் பற்றி ஒரு நல்ல விவரணம் கொடுக்கப்பட்டிருந்தது. வெள்ளைக் குதிரையானது ஜெயங்கொள்ளுகிறவனுக்கு அடையாளமாய் இருந்தது என்று அவர் அந்தப் புஸ்தகத்தில் கூறியிருந்தார். இந்த ஜெயங்கொள்ளுதலில்…ஏழாம் நாளை ஆசரிக்கும் கூட்டத்திலுள்ள சகோதரர்களில் அநேகர் அந்தப் புஸ்தகத்தைப் படித்துள்ளதால் அதை அறிந்துள்ளனர். நான் இன்னும் இருவர் இல்லை மூவர் எழுதிய புஸ்தகங்களைப் படித்துள்ளேன். அவர்கள் இருவருமே இதுவே சரி என்று ஒத்துப்போயினர். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தின்மேல் ஐந்து முறைத் தட்டுகிறார்—ஆசி.] அவர்கள் அன்றிருந்த வெளிச்சத்தையுடைய சிறந்த போதகர்களாக கருதப்பட்டனர். “எனக்கு ஒன்றும் அப்பொழுது தெரியாததால், அவர்கள் சொல்வதையே நானும் சொல்வதென்று” தீர்மானித்தேன்.

119266 அவர்கள் அது உண்மையாக எதைப் பொருட்படுத்தினது என்பதைக் குறித்த ஒரு அழகான ஆர்த்தெழுந்துரைத்த சொற்களால் நிறைந்த வியாக்கியானத்தை அளித்திருந்தனர். அவர்கள் இவ்வாறு கூறியிருந்தனர். “இப்பொழுது, இங்கே ஒரு வெள்ளைக் குதிரை இருக்கிறது. ஆகவே, வெள்ளைக் குதிரை என்பது வல்லமைக்கு அடையாளமாகும். ஊக்கத்தால் செறிவூட்டி நிரப்புவதற்கு (charger) அடையாளமாகும்”. “அந்த வெள்ளைக் குதிரையின் மேல் வீற்றிருக்கும் மனிதன் ஆதிகாலத்தில் தேவனுடைய ராஜ்யத்திற்கென்று அந்த காலத்தை (thatage) ஜெயித்த பரிசுத்த ஆவியானவர். அவர் தன் கையில் ரோம காதல் தெய்வமான க்யூபிட் (cupid) யைப் போன்று வில்லை வைத்துக் கொண்டு அன்பின் அம்புகளை (arrow of love), தேவ அன்பின் அம்புகளை அவர்கள் இருதயங்களில் எய்து அவர்களை தன் வசப்படுத்தி ஜெயித்தார்” என்ற ஒரு நல்ல விளக்கத்தை அளித்திருந்தனர். 267 இப்பொழுது கேட்பதற்கு இவ்விரணம் மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் அது சத்தியம் அல்ல. இல்லை, ஐயா. ஆம். அதுவல்ல. வெள்ளை நிறம் நீதிக்கு அறிகுறியாயிருக்கிறது. நாம்—நாம் அதை அறிவோம். வெள்ளை நிறம் நீதியைக் குறிக்கிறது. முதலாவது காலத்தில் ஜெயிக்கும்படி சென்றவர் பரிசுத்த ஆவியானவர் என்றே போதகர்கள் போதித்திருந்தனர். ஆனால் பரிசுத்த ஆவியானவரால் அளிக்கப்பட என்னுடைய வெளிப்பாடு, அவ்விதமாக இல்லை. 268 பரிசுத்த ஆவியினால் என்னுடைய வெளிப்பாடு என்னவெனில், கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியானவரும் ஒருவரே. ஆனால் வித்தியாசமான ரூபங்களில் காணப்படுகிறார். ஆகவே, இங்கு கிறிஸ்து, ஆட்டுக்குட்டியானவர் நிற்கிறார். அவர்தான் ஆட்டுக்குட்டியானவர் என்று நாம் அறிவோம். அவர் கையில் புஸ்தகத்தை வைத்துக் கொண்டு இங்கே நின்று கொண்டிருக்கிறார். அங்கே வெள்ளைக் குதிரையின் மேலிருக்கிறவன் புறப்பட்டுச் செல்கிறான். ஆகையால் அது பரிசுத்த ஆவியானவராய் இருக்க முடியாது. பாருங்கள்?

120269 இப்பொழுது, கிறிஸ்து ஒருவரில் மூவராக எப்படியிருக்க முடியும் என்னும் இரகசியம் இக்கடைசி நாட்களில் வெளிப்பட வேண்டும். பிதா, குமாரன், பரிசுத்தஆவி என்னப்படுவதை திருத்துவக்காரர் நமக்கு அதைக் கூறுவது போன்று மூன்று ஆட்கள் அல்லது மூன்று தேவர்கள் அல்ல. ஒரே ஆள் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் காணப்படுகிறார். அல்லது நீங்கள் அதை மூன்று உத்தியோகங்கள் என்று அழைக்கலாம். நீங்கள் போதகர்களிடம் பேசும்போது, உத்தியோகம் என்ற பதத்தை உபயோகிக்க முடியாது. ஏனெனில், சரி…இது ஒலிநாடாவில் பதிவாகிறது என்பதை நான் அறிவேன். ஆகவே நான் உங்களுக்குச் சொல்வேன். கிறிஸ்துவும், “என் உத்தியோகத்தினிடத்தில் வேண்டிக் கொள்வேன். அப்பொழுது அவர் வேறொரு உத்தியோகத்தை அனுப்புவார்” என்று கூறியிருக்க முடியாது. நாம் அதை அறிவோம். உங்களுக்கு விருப்பமானால் ஒரே தேவனின் மூன்று தன்மைகள் (attributes) என்று கூறலாம். பாருங்கள்? மூன்று தேவர்கள் அல்ல. மூன்று தன்மைகள் உள்ள ஒரு தேவன்! பாருங்கள்? 270 ஆகையால் கிறிஸ்து எவ்வாறு புத்தகத்தைக் கையில் வைத்து இங்கே நின்று கொண்டு அதே சமயத்தில் அங்கே வெள்ளைக் குதிரையின் மேலேறி சென்று ஜெயிக்க முடியும்? அது முடியாது. ஆகவே வெள்ளைக் குதிரையின் மேலுள்ளவன் கிறிஸ்துவல்ல.

121271 இப்பொழுது கவனியுங்கள். பரிசுத்த ஆவியானவர் (வெளிப்படுத்தின விசேஷத்தில்) கிறிஸ்து, அதாவது கிறிஸ்துவின் வேறொரு ரூபம் தான் பரிசுத்த ஆவியானவர், சரி. 272 கவனியுங்கள். ஆட்டுக்குட்டியானவர்தான் புஸ்தகத்தைத் திறந்தார். ஆட்டுக்குட்டியானவர் கிறிஸ்துவே. அதோடு கிறிஸ்து காணப்படவில்லை, மறுபடியும் வெளிப்படுத்தின விசேஷம் 19-ம் அதிகாரத்தில் அவர் வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்து கொண்டு வருகிறார். 273 நீங்கள் அதை வாசிக்க விரும்பினால், நாம் வெளிப்படுத்தின விசேஷம் 19:11 க்கு திருப்புவோம், ஆறு… அதை மிகத் துரிதமாக நமக்கு நேரம் உள்ள போதே வாசிப்போம். நமக்கு போதிய நேரம் உண்டென்றே நான் நம்புகிறேன், அது நமக்கு இன்னும் அதிக நன்மையளிக்கும். 19, 19:11, 11-வது வசனத்திலிருந்து துவங்கி கீழே 16-வது வசனம் வரை வாசிப்போம். பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது; (அது பூமியல்ல, பரலோகத்தில், பாருங்கள்) அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும்…சத்தியமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம் பண்ணுகிறார். அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தன. அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; (அந்த கிரீடங்களைப் பாருங்கள்) அவருக்கேயன்றி வேறோருவருக்குந் தெரியாத ஒரு நாமும் எழுதியிருந்தது.

122274 இதைக் குறித்து சற்றுநேரம் நிறுத்தி தியானிக்க எனக்கு எத்தனை விருப்பம்! [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஒரு முறை தட்டி, சிறிது நேரம் அமைதியுடன் இருக்கிறார்—ஆசி.] ஓ, என்னே! எனக்கு ஒரு எண்ணம் உதித்திருக்கிறது. ஒருக்கால்… [சபையோர், “தொடர்ந்து பிரசங்கியுங்கள்” என்று கூறுகின்றனரே!] 275 பாருங்கள், யாரும் அதை அறியார்கள், “யேகோவா” என்னும் நாமம் சரியல்ல என்பதை நீங்கள் அறிவீர்களா? யாராவது அறிவீர்களா? டாக்டர் வேயில் (Dr.vayle) அது உண்மை என்பது உமக்குத் தெரியும். மொழிபெயர்ப்பாளர்கள் அதை சரிவர மொழிபெயர்க்க இயலவில்லை. அது ஆங்கிலத்தில் J—U—H—V…J—v—h—u, என்று எழுத்து கூட்டப்பட்டுள்ளது. அது “யேகோவா” அல்ல. அதை யாராலும் உச்சரிக்க (touch) முடியவில்லை. அது என்னவென்பதை யாராலும் அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் அதை “யேகோவா” என்று அழைத்தனர். ஆனால் அது அவருடை நாமமல்ல. 276 வெற்றி உண்டான ஒவ்வொரு முறையும் அல்லது வெறொன்று நிகழும்போது ஒரு பெயரானது மாற்றப்படுகிறது.

123277 ஆபிரகாமின் நாட்களைப் பாருங்கள். அவன் முதலில் ஆபிராம் என்று அழைக்கப்பட்டான். அவன் ஆபிரகாம் என்று அழைக்கப்படும் வரை, அவனுக்கு குமாரன் பிறக்கவில்லை. சாராவின் (s—a—r—r—a) பெயர் சாராள் (s—a—r—a—h) என்று மாற்றப்படும் வரை அவளுடைய கர்ப்பம் செத்திருந்தது. 278 யாக்கோபு என்பதற்கு “எத்தன் ஏமாற்றுபவர்” என்று அர்த்தம், அவன் செய்ததும் அதுவே. அவன் ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டு தீர்க்கதரிசியாகிய தன் தகப்ப்னை ஏமாற்றி சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற்றுக் கொண்டான். அவன் புன்னை கொப்புகளை வெட்டி இடையிடையே வெண்மை தோன்றும்படி பட்டையை உரித்து தண்ணீரில் போட்டு, ஆடுகள் பொலிந்தபோது அவைகளை பயமுறுத்தி புள்ளியுள்ள குட்டிகளை ஈனும்படி செய்தான். அவன் எத்தனன்றி வேறொருவனுமல்ல. 279 ஆனால் ஒரு இரவில் அவன் உண்மையான ஒருவரை இறுகப் பிடித்துக் கொண்டான். அது உண்மையென்று அவன் அறிந்திருந்தான். அவன் மேற்கொள்ளும்வரை அதில் நிலைத்திருந்தான். அவன் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்பட்டது. அதற்கு, “தேவனுக்கு முன்பாக வல்லமையுள்ள ஒரு ராஜகுமாரன்” என்று அர்த்தமாம். 280 அது உண்மை அல்லவா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஜெயங்கொண்ட ஒவ்வொருவருமே! 281 சீமோன் மீன் பிடிக்கும் செம்படவனாயிருந்தான். அவர் அவனிடம் தாமே மேசியா என்றும், அவனுடைய பெயர் என்னவென்றும், அவனுடைய தந்தையின் பெயர் என்னவென்றும் பகுத்தறிந்து கூறியபொழுது, அவனுடைய விசுவாசம் அதைக் கண்டு, அவர் இயேசு என்று அறிந்தபோது, அவன் ஜெங்கொண்டு, சீமோன் என்ற பெயரிலிருந்து பேதுரு என்னும் பெயருடையவனானான். 282 சவுல் என்பது ஒரு நல்ல பெயர். சவுல் என்பவன் ஒரு காலத்தில் இஸ்ரவேலின் ராஜாவாயிருந்தான். ஆனால் அவன், ஒரு சவுல், அது ஒரு அப்போஸ்தலனுக்குப் பொருந்தும் பெயரல்ல. அது ஒரு அப்போஸ்தலனுக்குப் பொருந்தும் பெயரல்ல. அது ஒரு ராஜாவிற்கு ஏற்ற பெயராய் இருக்கலாம். ஆனால் ஒரு அப்போஸ்தலனுக்கும் பொருந்தும் பெயரல்ல. ஆகையால் இயேசு அந்த அப்போஸ்தலனின் பெயரை (எதினின்று) சவுல் என்பதிலிருந்து பவுல் என்பதாக மாற்றினார். யாக்கோபு, யோவான் இவ்விருவரும் ‘இடிமுழக்கத்தின் மக்கள்’ என்று அழைக்கப்பட்டதைக் கவனியுங்கள்.

124283 இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, “மீட்பர்” என்னும் நாமமுடைய யாவராயிருந்தார். அவர் பூமியில் வாழ்ந்தபோது, அந்த மீட்பர் என்ற பெயருடையவராயிருந்தது உண்மைதான். அவர் மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்து, அவைகளை மேற்கொண்டு, உன்னதத்திற்கு ஏறிச்சென்றபோது, ஒரு புதிய நாமத்தைப் பெற்றுக் கொண்டார். ஆகையால் தான் அவர்கள் எவ்வளவாக கூக்குரலிட்டாலும், ஒன்றும் பெற்றுக் கொள்வதில்லை.

125284 அது இடிமுழக்கங்களில் வெளிப்படும். ஊ—ஊம். பாருங்கள்? இங்கு இரகசியங்களைப் பாருங்கள். அவர் வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்து கொண்டு வருகிறார்…இச்சபையை மறுரூபப்படுத்த ஏதோ ஒன்று அவசியமாயிருக்கிறது. அதை நீங்கள் அறிவீர்கள். ஏதோ ஒன்று இருக்க வேண்டும். கவனியுங்கள். “அவரைத் தவிர வேறு எந்த மனிதனும் அறியான்”. கவனியுங்கள், “அவரைத் தவிர வேறு எந்த மனிதனும் அறியான்.” இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. ஓ, என்னே, கவனியுங்கள்! பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

126285 அதோ, மேசியா அங்கு வருகிறார்! அவர் அங்கே இருக்கிறார்; வில்லைக் கையிலேந்தி வெள்ளைக் குதிரையில் மேலேறி வருபவன் அல்ல. இவ்விருவருக்குமுள்ள வேறுபாட்டைக் கவனியுங்கள். அவர் புஸ்தகத்தைக் கையில் ஏந்தியவராய் அங்கு நின்று கொண்டிருக்கிறார். மீட்பின் ஊழியம் அப்பொழுது தான் முடிவடைந்துள்ளது. இன்னமும் அவர் தம் ஸ்தானத்தை வகிக்கவில்லை. ஆகையால் வில்லைக் கையிலேந்தி வெள்ளைக்குதிரையின் மேல் சென்றவன் கிறிஸ்துவாகிய பரிசுத்த ஆவியானவரல்ல. 286 பெரிய மனிதர்களுடன் நான் இணங்காதிருக்க வேண்டும் என்பது என் எண்ணமல்ல. இல்லை, ஐயா, நான் அதைச் செய்வதில்லை. நான் அவ்விதம் செய்ய விரும்பவில்லை. ஆனால் அதைக் குறித்த என்னுடைய வெளிப்பாடு இதுவே, பாருங்கள்? நீங்கள் வித்தியாசமான கருத்து கொண்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் அது எனக்கு உடன்பாடல்ல. நீங்கள் பாருங்கள். இவ்விதம்தான் நான்—நான் அதை விசுவாசிக்கிறேன். இப்பொழுது பாருங்கள், அது என்னவென்பதை நீங்கள் அறிவீர்கள். புரிகிறதா?

127287 அதன் பின்னர் கிறிஸ்து காணப்படவில்லை என்பதை கவனிக்கவும், பாருங்கள். ஆனால் அவர் வெள்ளைக்குதிரையின் மேல் ஏறியிருக்கிறார். ஆகவே, இந்த மனிதன் வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தால், அவன் கிறிஸ்துவைப்போல் நடித்து ஆள்மாறாட்டம் செய்கிறான் என்று அர்த்தமாகிறது. பாருங்கள்? நீங்கள் அதை கிரகித்துக் கொண்டீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 288 கவனியுங்கள், வெள்ளைக்குதிரையின் மேல் சவாரி செய்பவனுக்கு, எவ்வித பெயருமில்லை. அவன் இரண்டு அல்லது மூன்று பட்டங்களை உபயோகித்துக் கொள்ளலாம். பாருங்கள், ஆனால் அவனுக்குப் பெயர் கிடையாது. 289 ஆனால் கிறிஸ்துவுக்கோ ஒரு நாமம் உண்டு! அது என்ன? தேவனுடைய வார்த்தை. அதுவே அவருடைய பெயராகும். “ஆதியிலே வார்த்தையாயிருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது”. அந்த வார்த்தை மாம்சமானார். பாருங்கள்? குதிரை மேல் சவாரி செய்பவனுக்கு பெயர் எதுவும் இல்லை. ஆனால் கிறிஸ்துவோ “தேவனுடைய வார்த்தை” என்று அழைக்கப்படுகிறார். அவர் வார்த்தையாகவே இருக்கிறார். அவர் அவ்வாறு அழைக்கப்படுகிறார். இப்பொழுது எந்த ஒரு மனிதனும் அறியாத ஒரு பெயரை உடையவராயிருக்கிறார்; ஆனால் அவர் “தேவனுடைய வார்த்தை” என்று அழைக்கப்படுகிறார். இவனோ எந்தப் பெயரினாலும் அழைக்கப்படவில்லை, பாருங்கள், ஆனால் இவன் வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்கிறான்.

128290 குதிரையின் மேல் சவாரி செய்கிறவனுக்கு அவன் வில்லில் அம்பு இல்லை. அதை கவனித்தீர்களா? அவன் கையில் ஒரு வில் இருந்தது. ஆனால் அம்புகளைக் குறித்து ஒன்றும் சொல்லப்படவில்லை. ஆகவே, அவன் ஒரு பொய்க்காரனாயிருக்க வேண்டும். சரி. ஒருக்கால் அவனிடம் அநேக இடிகள் இருக்கலாம். ஆனால் மின்னல் இல்லை. ஆனால் கிறிஸ்துவினிடம் இடியும் மின்னலும் ஆகிய இரண்டு முண்டாயிருந்தன. அவருடைய வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள கூர்மையான பட்டயம் புறப்பட்டது. அதனைக் கொண்டு அவர் தேசங்களை வெட்டுகிறார். ஆனால் இந்த நபரிடம் வெட்டுவதற்கு ஒன்றுமில்லை. பாருங்கள், ஆனால் அவன் மாய்மாலக்காரனின் பாகத்தை ஏற்று நடித்துக்கொண்டிருக்கிறான். அவன் வெள்ளைக் குதிரையின் மேலேறி ஜெயிப்பதற்குப் புறப்படுகிறான்.

129291 கிறிஸ்துவினிடம் கூர்மையான பட்டயம் உள்ளது, கவனியுங்கள், அது அவர் வாயிலிருந்து புறப்படுகிறது. ஜீவனுள்ள வார்த்தை அது தான், தம் ஊழியக்காரருக்கு வெளிப்படும் தேவனுடைய வார்த்தையாகும். அவர் மோசேயிடம், “உன் கையிலுள்ள கோலை நீட்டி வண்டுகளை வரவழைப்பாயாக” என்றார். அப்பொழுது வண்டுகள் பறந்து வந்தன. நிச்சயமாக. அவன் சொன்ன யாவற்றையும், அவர் செய்தார். அப்பொழுது அது சம்பவித்தது. அவரே ஜீவனுள்ள வார்த்தை. தேவனும் வார்த்தையும் ஒருவரே. தேவனே வார்த்தையாயிருக்கிறார். 292 முதலாம் சபையின் காலத்தில் காணப்படும் இந்த மர்மமான குதிரை சவாரிக்காரன் யார்? அவன் யார்? அதை நாம் சிந்திப்போம். முதலாம் சபையின் காலத்தில் சவாரி செய்யத் தொடங்கி கடைசிவரை சவாரி செய்யும் இந்த மர்ம மனிதன் யார்?

130293 இரண்டாம் முத்திரை தொடங்கி கடைசிவரை செல்கின்றது. அவ்வாறே மூன்றாம் முத்திரை, நான்காம் முத்திரை, ஐந்தாம், ஆறாம், ஏழாம் முத்திரைகள் அனைத்தும் கடைசிவரை செல்கின்றன. இதுவரை சுருட்டப்பட்டு இரகசியங்களைக் கொண்ட இப்புஸ்தகம் கடைசி காலத்தில் உடைக்கப்படுகின்றது. அப்பொழுது இரகசியங்கள் வெளிப்பட்டு அது என்னவென்பது நமக்கு புரியும். ஆனால் உண்மையில் இது முதலாம் சபையின் காலத்திலேயே தொடங்கினது. ஏனெனில் முதலாம் சபை, முதலாம் சபைக்காலம் இதைப்போன்று செய்தியைப் பெற்றுக் கொண்டது. [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று முறை தட்டுகிறார்—ஆசி.] 294 “வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருக்கிறவன் புறப்பட்டுச் செல்கிறான்.” பாருங்கள்? அவன் யார்? அவன் ஜெயிக்கும் வல்லமை கொண்டவன். அவன் ஜெயிக்கும் வல்லமையில் பெரியவன். அவன் யாரென்று நான் கூறிட விருபுகிறீர்களா? அவன்தான் அந்திக்கிறிஸ்து நிச்சயமாக அவன் அந்திக்கிறிஸ்துதான். இப்பொழுது, ஏனென்றால், நீங்கள் பாருங்கள், அந்திகிறிஸ்துவானால்; இவ்விரண்டும் வித்தியாசம் அறியக்கூடாதபடி ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் இருக்குமென்றும், கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய (மணவாட்டியும்) வஞ்சிக்கப்படலாம் என்று இயேசு சொன்னார். அந்திக்கிறிஸ்து! அது அந்திக்கிறிஸ்துவின் ஆவியாகும்.

131295 நினைவில் கொள்ளுங்கள். நாம் முதலாம் சபையைக் குறித்து பேசும்போது, அச்சபையின் காலத்தில் ஆரம்பமான ஒரு செயலுக்குப் பரிசுத்த ஆவியானவர் விரோதமாயிருந்தாரென்று நாம் கண்டோம். அது “நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள்” என்று அழைக்கப்பட்டது. உங்களுக்கு அது நினைவிருக்கிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நிக்கொ என்பது ஜெயங்கொள்ளுதல் என்றும், லையிட்டி என்பது சபை என்றும் பொருள்படுகிறது. நிக்கொலாய் என்னும் பதம் “சபையின் மேல் ஜெயங்கொள்ளுதல்” என்று பொருள்படும். அதாவது “பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலை நிராகரித்து, அப்பொறுப்பை பரிசுத்த மனிதன் என்று அழைக்கப்படும் ஒருவனுக்கு அளித்தல். அவன் எல்லாவற்றிற்கும் தலைவனானான்”. நீங்கள் அதைக் கடந்து வந்திருக்கிறீர்கள், பாருங்கள், நிக்கொலாய். கவனியுங்கள், நிக்கொலாய் ஒருகாலத்தில் ஒரு சபையில் “ஒரு—ஒரு பேச்சாக” இருந்து, அது மற்றொரு சபையின் காலத்தில் “ஒரு போதகமாக” மாறினது. மூன்றாம் சபையின் காலத்தில் அது “ஒரு கட்டாயமாக்கப்பட்டது,” அவர்கள் நிசாயா ஆலோசனை மாநாட்டைக் கூட்டினர். அப்பொழுது அது சபையில் ஒரு—ஒரு போதகமாக ஆக்கப்பட்டது. அப்பொழுது முதலாவதாக என்ன நேர்ந்தது? அதன் விளைவாக அதிலிருந்து ஒரு ஸ்தாபனம், இப்பொழுது உண்டானது. நான் கூறுவது சரியா? [“ஆமென்”]

132296 ஸ்தாபிக்கப்பட்ட முதலாம் சபை எங்கிருந்து தோன்றினது என்று எனக்குச் சொல்லுங்கள். ரோமன் கத்தோலிக்க சபை வெளிப்படுத்தல் 17-ம் அதிகாரத்தில் “அவள் வேசியென்றும், அவள் குமாரத்திகள் வேசிகளென்றும் அழைக்கப்படவில்லையா?” அவளுடன் ஸ்தாபனங்கள் உண்டாக்கிக் கொண்ட அனைவரும் “வேசிகள்தாம்!” “அவர்கள் தங்கள் வேசித்தனத்தின் அருவருப்புகளை போதகமாக ஆக்கிக் கொண்டனர்.” “மனிதருடைய பாரம்பரியங்களைக் கற்பனைகளாகப் போதித்தனர்.” கவனியுங்கள்.

133297 கவனியுங்கள். அவன் ஜெயிப்பதற்குப் புறப்படுகின்றான். கவனியுங்கள். அவனுக்கு கிரீடம் இல்லை. வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்தவனைக் குறித்து நான் இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன். பாருங்கள்? “ஒரு வில்; பின்னர் அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது”. பாருங்கள்? ஆரம்பத்தில் அவனுக்கு கிரீடம் இல்லை. பின்னர் அவனுக்குக் ஒரு கிரீடம் அளிக்கப்பட்டது. கவனியுங்கள் பின்னர் அவனுக்கு ஒரு கிரீடம் அளிக்கப்பட்டது. மூன்று கிரீடங்கள்—ஒருவன் மேல் மூன்று கிரீடங்கள். 300 வருடங்கள் கழித்து நிசாயா மாநாட்டில் அவனுக்கு கிரீடம் அளிக்கப்பட்டது. ஆம். அவன் நிக்கொலாய் கொள்கையின் ஆவியாகத் தொடங்கி, ஜனங்களிடையே ஸ்தாபம் உண்டு பண்ணினான். அது தொடர்ந்து சென்று, நிக்கொலாய் “கொள்கையிலிருந்து” பின்னர் “போதகமாக” மாற்றினது.

134298 கிறிஸ்து முதலாம் சபையின் காலத்தில், “நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய்” என்று சொன்னது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவன் ஜெயிக்கிறவனாகப் புறப்பட்டு, பரிசுத்த ஆவியை அகற்றி, ஆதிக்கத்தை, ஒரு மனிதனுக்களித்தான். பாவங்களை மன்னிக்க அம்மனிதன் அதிகாரத்தை இவனிடமிருந்து பெற்றுக் கொள்ளுகிறான். 299 பவுலும் இதைக் குறித்து, “கேட்டின் மகனாகிய பாவமனுஷன், தேவன் போல் உட்கார்ந்து கடைசிநாளில் வெளிப்படுவான்” என்று கூறியிருக்கிறான். சற்று முன்பு நாம் படித்தோம். “தடை செய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்பட்டு பரிசுத்தாஆவி எடுபடும்போது, அவன் தன்னை வெளிப்படுத்துவான்.” 300 இன்றைக்கு அவன் மாறுவேடத்தில் வெள்ளைக் குதிரையின் மேல் இருக்கிறான். அவன் வெள்ளைக் குதிரையிலிருந்து மாறுவதை சில நிமிடங்களில் நாம் காணலாம். அவன் வெள்ளைக் குதிரையிலிருந்து மாறுவது மாத்திரமல்ல; அவன் அநேக தலைகளும் கொம்புகளுமுள்ள மிருகமாகவும் மாறுகிறான். பாருங்கள்? பாருங்கள்? வெள்ளைக் குதிரை; இப்பொழுது அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவனாயிருக்கிறான். அதன் காரணத்தினால்தான், இதுவரை ஜனங்கள் இந்த உண்மையை அறிந்து கொள்ளவில்லை. அதைக் குறித்து அவர்கள் சிந்தித்தனர். ஆனால் இப்பொழுது அது இங்குள்ளது. அது வேத வாக்கியங்களின் மூலம் வெளிப்பட இருக்கின்றது. கவனியுங்கள்.

135301 முடிவில் நிக்கொலாய், அந்திக்கிறிஸ்து ஒரு மனிதனுக்குள் வாசம் செய்கிறான். பாருங்கள், அப்பொழுது அவனுக்குக் கிரீடம் சூட்டப்படுகின்றது. ஆரம்பத்தில் நிக்கொலாய் சபையில் ஆவியாக அவன் இருந்தான். நீங்கள் ஒரு ஆவிக்கு கிரீடம் சூட்ட முடியாது. ஆனால் 300 வருடங்கள் கழித்து, அவன் போப்பாண்டவராகிறான். அப்பொழுது அவர்கள் அவனுக்கு முடிசூட்டப்படுகின்றனர். தொடக்கத்தில் அவனுக்குக் கிரீடம் இல்லை. ஆனால் அந்த ஆவி மனிதனுக்குள் வாசம் செய்யும்போது, அவனுக்குக் கிரீடம் சூட்டப்படுகின்றது. பாருங்கள்? அவன் மனிதனாக வருகிறான். நிக்கொலாய் போதகமே ஒரு மனித உருவை அடையும்போது, ஜனங்கள் அதற்கு முடிசூட்டப்படுகின்றனர். ஆனால் அது ஒரு போதகமாக மாத்திரம் திகழ்ந்தபோது, அவர்கள் அதற்கு மூடிசூட்டப்பட முடியாது. 302 மகிமை! கவனியுங்கள்! நாம் பெற்றுள்ள இந்த பரிசுத்த ஆவி, இப்பொழுது நம் மத்தியில் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் உள்ள அவர், இயேசு கிறிஸ்து என்ற நபராக நமக்கு மாம்சத்தில் வரும்போது, அவரை நாம் ராஜாதி ராஜாவாக முடிசூட்டுவோம். அது சரி. பாருங்கள்?

136303 இப்பொழுது ஞாபகங் கொள்ளுங்கள்; கிறிஸ்து சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் சமயம் அந்திக்கிறிஸ்துவும் சிம்மாசனத்திலிருக்கிறான், யூதாஸ். கிறிஸ்து உலகத்தை விட்டுச் சென்றபோது, யூதாஸூம் உலகை விட்டுச் சென்றான். பரிசுத்த ஆவியானவர் மறுபடியும் வந்தபோது, அந்திக்கிறிஸ்துவும் மறுபடியும் வருகிறான். 304 யோவான், “பிள்ளைகளே அந்திக்கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. அவன் ஏற்கனவே உலகில் தோன்றி கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் கிரியைகளை நடப்பிக்கிறான்” என்றான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்திக்கிறிஸ்து அங்கே நிக்கொலாய் ஆவியாக ஸ்தாபனத்தை உண்டாக்குகிறான். 305 நான் அந்தக் காரியத்தை வெறுத்ததில் வியப்பு ஏதுவுமில்லை. பாருங்கள்? பாருங்கள்? அங்குதான் காரியம். நான் அதை வெறுக்கவில்லை. அது இங்கு எனக்குள் இருக்கிறவராய் உள்ளது. அது வெளிப்படுகிறது. நீங்கள் அதைக் காண்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] நான் ஸ்தாபனங்களால் சூழப்பட்டிருப்பினும், இதுவரை நான் அவைகளை வெறுக்கும் காரணத்தை என்னால் சரிவர அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. அதுதான் காரியம். அந்த நிக்கொலாய் ஆவியை தேவன் வெறுத்தார். 306 இப்பொழுது, நிக்கொலாய் ஆவி மனிதனுக்குள் வாசம் செய்யும்போது, அவர்கள் அதற்கு முடிசூட்டப்படுகின்றனர். அவர்கள் அவ்விதம் செய்வார்கள் என்று வேதம் எவ்வளவு சரியாக எடுத்து வைக்கின்றது! அது ஓ, என்னே! மனிதனுக்குள் வாசம் செய்தல்! அவன் மனிதனானான். அப்பொழுது அவர்கள் அவனுக்கு முடிசூட்டினர்.

137307 கவனித்து வாசியுங்கள். இல்லையேல் சரியாகக் கூறினால், எப்படி கைப்பற்றுவான் என்று தானியேலும் கூறியுள்ளான் என்பதை நீங்கள் வாசியுங்கள். நீங்கள் அதை வாசிக்க விரும்புகிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நாம் அதை வாசிக்கும்படி நமக்கு போதிய நேரம் உண்டல்லவா? [“ஆமென்”] அது சரி. கவனியுங்கள். நாம் இப்பொழுது சிறிது நேரத்திற்கு தானியேல் புஸ்தகத்தைத் திருப்புவோம். நாம் தானியேலின் புத்தகத்திற்கு திருப்பி, சிறிது நேரம் அதைப் படிப்போம். நாம் இன்னும் பதினைந்து, இருபது அல்லது முப்பது நிமிடங்களுக்கு மேல் இங்கே காத்திரோம். சரியா? [“ஆமென்”] 308 நாம் தானியேல் 11-ம் அதிகாரம் 21-ம் வசனத்தை எடுத்துக்கொள்வோம். இதோ தானியேல், தானியேல் இப்பொழுது இந்த நபர் எப்படி கைப்பற்றப் போகிறான் என்பதைக் குறித்து தானியேல் சொல்கிறான். அவன் ஸ்தானத்தில் அவமதிக்கபட்டவன் ஒருவன் எழும்புவான்; (ரோமாபுரியைக் குறித்து சொல்லுகிறான்) , இவனுக்கு ராஜ்யபாரத்தின் மேன்மையைக் கொடாதிருப்பார்கள்; (இப்பொழுது கவனியுங்கள்) ஆனாலும் இவன் சமாதானமாய்…சமாதானமாய் நுழைந்து, இச்சகம் பேசி, ராஜ்யத்தைக் கட்டிக்கொள்ளுவான்.

138309 அந்திக்கிறிஸ்து என்ன செய்வான் என்று தானியேல் கூறினது சரியாக அப்படியே நடந்தது. அவனைச் சார்ந்த ஜனங்களிடையே அவன் சரியாக பொருந்துவான். ஆம். அவன் அளிக்கும் ஆகாரம் இக்காலத்து சபைகளுக்கு அருசுவையாயிருக்கும். ஏனெனில் இச்சபையின் காலத்தில், ஜனங்களுக்கு வார்த்தையாகிய கிறிஸ்து அவசியமில்லை. அவர்களுக்கு சபைதான் வேண்டியதாயிருக்கிறது. முதல் காரியமாக, நீங்கள் கிறிஸ்தவரா? என்று உங்களை யாரும் விசாரிப்பதைல்லை. எடுத்தவுடன் “நீங்கள் எந்தச் சபையைச் சேர்ந்தவர்கள்? எந்த சபை?” என்று கேட்கின்றனர். அவர்களுக்குக் கிறிஸ்து, வார்த்தை அவசியமில்லை. நீங்கள் போய், அவர்கள் திருத்தப்பட வேண்டுமென்று தேவனுடைய வார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்தால், அவர்கள் அதை ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் தங்கள் விருப்பம்போல் வாழ்க்கையை நட்த்தி அதே சமயத்தில் சபையின் அங்கத்தினராயிருந்து அதன் நற்சாட்சி பெறவேண்டுமென்ற ஒன்றை விரும்புகின்றனர். பாருங்கள்? பாருங்கள்? ஆகையால் அந்திக்கிறிஸ்து அளிக்கும் ஆகாரம் அவர்கள் விருப்பத்திற்கேற்ப சரியாக அமைந்துள்ளது. முடிவில் அந்திக் கிறிஸ்து “அவள்” என்று வேதத்தில் அழைக்கப்படுவதைப் பாருங்கள். அவள் வேசியாயிருந்தாள். அவளுக்குக் குமாரத்திகள் இருந்தனர். அது இக்காலத்து ஜனங்களிடையே சரிவர பொருந்துகிறது. அதுதான் அவர்களும் விரும்புகின்றனர். அது இங்கே இருக்கின்றது.

139310 தேவன் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். வார்த்தை புறக்கணிக்கப்படும்போது, அவர்கள் தங்களுடைய இருதயத்தின் வாஞ்சைகளுக்குத் திரும்புவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். நாம் தெசலோனிக்கேயர் நிரூபத்தை மறுபடியும் படிப்போம். இருக்கட்டும்…நீங்கள் ஒரு நிமிடம் இங்கே கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஆம், நாம் அதை சற்று முன் வாசித்தோம். 2தெசலோனிக்கேயர் 2:9-11. அவர்கள் செய்யப்போவது அதில் கூறப்பட்டுள்ளது. “அவர்கள் சத்தியத்தைப் புறக்கணித்த காரணத்தால், அவர்கள் பொய்யை விசுவாசிக்கும்படி செய்து ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவர்”. இப்பொழுது அதைத்தான்—அதைத்தான் பரிசுத்த ஆவியானவரே உரைத்திருக்கிறார் 311 இப்பொழுது இன்றைய சபை ஸ்தாபனத்தின் விருப்பமும் அதுவல்லவா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நீங்கள் இதைச் செய்ய வேண்டும். அதை மற்றதைச் செய்யவேண்டுமென்று நீங்கள் ஜனங்களுக்கு எடுத்துக் கூற முயன்றால், உடனே அவர்கள், தாங்கள் மெதோடிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் என்று சொல்லி, “நீங்கள் கூறுவதைக் கேட்டு, அதன்படி நடக்க அவசியமில்லை” என்பார்கள். பாருங்கள்? நிச்சயமாக, அவர்கள் அதை விரும்புகின்றனர்.

140312 ஆகையால் தேவன், “அவர்கள் அதை விரும்பினால், அதை நான் அனுமதிப்பேன். அது சத்தியம் என்று உண்மையாகவே அவர்களை விசுவாசிக்கச் செய்வேன். ஏனெனில் நான் சத்தியத்தை குறித்து கேடான சிந்தையை அவர்களுக்குக் கொடுப்பேன்” என்கின்றார். இப்பொழுது வேதம் என்னக் கூறுகிறது என்பதை இங்கே கவனியுங்கள். “யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல …இவர்களும் இக்கடைசி காலத்தில் சத்தியத்தைக் குறித்து கேடான சிந்தையுடையவர்களாய், நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, நம் கர்த்தராகிய தேவனை மறுதலிப்பார்கள்.” 313 அது எங்குள்ளது என்பதை நீங்கள் இப்பொழுது காணலாம். கத்தோலிக்கர்கள் மாத்திரமல்ல, ஆனால் பிராடெஸ்டெண்டுகளும் கூட இவ்விதம் செய்வார்கள், இவ்வனைவரும் அதை செய்வார்கள். அது…ஸ்தாபனங்கள் அனைத்தும் அவ்வாறு செய்யும். அதுதான் அந்த வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்பவன் (வெள்ளை) நீதிக்கு அடையாளம், சபையில் சவாரி செய்தான், ஆனால் அவன்தான் அந்திகிறிஸ்து. அது காண்பதற்கு ஒன்றைப் போலவே தோன்றினது. கிறிஸ்து குதிரையின் மேல் வருவதைப் போலவே அவனும் வருகை புரிந்தான். பாருங்கள்? ஓ, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக எதிராயிருந்தான். அவன் இங்குள்ளான். அவன்தான் அந்த அந்திக்கிறிஸ்து.

141314 அவன் முதலாவது சபையில் சவாரி செய்ய ஆரம்பித்தான். அவன் ஒவ்வொரு சபையின் காலத்திலும் சவாரி செய்து கொண்டே செல்கிறான். இப்பொழுது அவனை உற்றுநோக்குங்கள். “அப்போஸ்தலர் காலத்தில் கூடவா?” என்று நீங்கள் கேட்கலாம். அப்பொழுது அவன் “நிக்கொலாய்” என்று அழைக்கப்பட்டான். அடுத்த சபையின் காலத்தில் அவன் நிக்கொலாய் மதஸ்தரின் “ஒரு போதகமானான்”. முதலாவது அவன் “ஒரு பேச்சு வழக்கமாக” இருந்தான். அதன்பின் அவன் “ஒரு போதகமானான்”. 315 பெருமையான அழகான ஆடைகள் அணிந்து அதிக கல்வி கற்று, நாகரீகம் பொருந்திய முக்கியஸ்தர்கள் தங்கள் சபைகளில் பரிசுத்த ஆவியின் போதகத்தை விரும்பவில்லை. இல்லை. அவர்கள் ஒரு ஸ்தாபன சபையாயிருக்க மாத்திரம் விரும்பினர். நாம் ரோமபுரியில் நடைபெற்ற நிசாயா ஆலோசனை மாநாட்டினூடாக அவைகளைக் காணலாம். நிசாயாவின் மகாநாட்டில் சபை அஞ்ஞான மார்க்கத்தைக் கிரகித்துக் கொண்டது. ரோமன் கத்தோலிக்க சபை அஞ்ஞான முறைகளையும் மூடநம்பிக்கைகளையும் கையாண்டு, பரலோகத்தின் ராணி என்று அழைக்கப்பட்ட அஸ்தரோத்தை இயேசுவின் தாயாகிய மரியாள் என்ற பெயரினால் சபையில் புகுத்தி, மரித்தவர்களை மத்தியஸ்தர்களாக்கினது. வட்டவடிவில் அமைந்த ரொட்டியை, அது “பரலோக மாதாவிற்கு பிரதிநிதித்துவம் அளிப்பதால்” கிறிஸ்துவின் சரீரமென அழைத்தது. ஒரு கத்தோலிக்கன் அவன் ஆலயத்தைக் கடந்து செல்லும்போது, சிலுவை அடையாளத்தைப் போட்டுக் கொள்கிறான். ஏனெனில் அங்கு பீடத்தில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு குருவானவரின் வல்லமையினால் தேவனாக மாற்றப்படுகின்றதாம். இவையெல்லாம் வெறும் அஞ்ஞான பழக்கவழக்கங்களேயன்றி வேறல்ல. பாருங்கள்? அது சரி.

142316 அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. நல்லது. ஆம், இப்பொழுது நான் அதைப் புரிந்து கொண்டுள்ளேன். ஆம், நான் அதை புரிந்துகொண்டுள்ளேன். ஆம், ஐயா! தேவனுடைய கிருபையால் அதை நான் புரிந்து கொள்கிறேன். நிச்சயமாக. 317 இப்பொழுது கவனியுங்கள். ஓ, என்னே, அவர்களால் அதை எப்படி செய்ய முடிகின்றது? பாருங்கள். அவர்களுடைய இருதயத்தின் வாஞ்சை அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அது உண்மை. நீ செய்ய வேண்டிய அவசியம் உனக்கில்லை. அது உண்மை. இல்லை, ஐயா. உனக்கு அதைச் செய்ய விருப்பமில்லாவிடில், அதைச் செய்யும்படி நீ கட்டாயப்படுத்தப்படுவதில்லை. தேவன் அமைத்திருக்கும் ஜீவப் பாதையைப் பின்பற்றி அவரை ஆராதிக்க நீ விருப்பங்கொள்ளாவிடில், நீ அதைச் செய்ய வேண்டியதில்லை. தேவன் அதைச் செய்யும்படி யாரையுமே நிர்பந்தம் செய்கிறதில்லை. 318 ஆனால் நான் ஒன்றை மாத்திரம் கூற விரும்புகிறேன். உன் பெயர் உலகத்தோற்றத்துக்கு முன்னே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்குமானால், தேவன் அமைத்த முறைகளை அனுசரிப்பதற்கு நீ பெருமகிழ்ச்சி கொள்வோம். ஒரு நொடிப்பொழுதும்கூட நீ அதற்குத் தாமதிப்பதில்லை. 319 இங்கே பாருங்கள். “நான் உங்களை புரிந்துகொள்ளும்படி செய்வேன். அதாவது நான் உங்களைப்போலவே பக்தியுள்ளவனாயிருக்கிறேன்” என்று நீ சொல்லலாம், சரி, அது உண்மையாயிருக்கலாம். 320 பாருங்கள், கர்த்தராகிய இயேசுவின் காலத்திலிருந்த ஆசாரியர்கள் பக்தி கொண்டவராயில்லை என்று யார் கூற முடியும்? அவ்வாறே வனாந்திரத்தில் இருந்த இஸ்ரவேல் ஜனங்கள் பக்தியாயிருக்கவில்லை என்று யார் கூற முடியும்? அவர்களும் கூட…

143“தேவன் என்னை அதிகமாய் ஆசீர்வதிக்கிறார்” என்று நீ கூறலாம். 321 ஆம், அவர்களையும்தான் அவர் ஆசீர்வதித்தார். இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் ஜீவனத்திற்கு உழைக்க வேண்டிய அவசியம் கூட இருக்கவில்லை. கர்த்தர் அவர்களை வானத்தின் மன்னாவால் போஷித்தார். ஆனால் “அவர்கள் ஒவ்வொருவரும் அழிந்து மாண்டு போனார்களென்று” இயேசு கூறினார். 322 அவர்கள், “எங்கள் பிதாக்கள் வனாந்திரத்திலே நாற்பது வருஷம் மன்னாவைப் புசித்தார்கள்”. என்றனர். 323 இயேசுவாவோ, “அவர்கள் ஒவ்வொருவரும் மரித்துவிட்டனர். நித்திய பிரிவினையை அடைந்தனர்”, என்றார். பாருங்கள்? “தேவனிடத்திலிருந்து பரலோகத்தை விட்டு வந்திருக்கின்ற ஜீவ அப்பம் நானே. இந்த அப்பத்தை ஒருவன் புசித்தால் அவன் ஒரு போது மரிப்பதில்லை” என்றார். பாருங்கள்? அவர்தான் ஜீவவிருட்சமயிருக்கிறார்.

144324 இயேசு எவ்விதமாக, எப்பொழுது வந்தார் என்பதைக் கவனியுங்கள். இயேசுவின் காலத்திலிருந்த ஆசாரியர்கள் பக்தி வைராக்கியம் கொண்டிருந்தனர். பையனே, அவர்கள் நல்லவரல்ல என்று யாரும் கூற முடியாது. என்னே! அவர்கள் பிரமாணத்தின்படி சரியாக நடந்தனர். அவர்களுடைய சபை செய்யக் கூறின யாவையும் அவர்கள் செய்தனர். அவர்கள் அதைச் செய்யாவிடில், அவர்கள் கல்லெறியுண்டனர்; அவர் வெளிநடந்தார்…இயேசு அவர்களை என்ன கூறினார் என்று நீங்கள் அறிவீர்களா? யோவான் அவர்களை, “புல்லின் கீழ்பதுங்கிக் கொண்டிருக்கும் பாம்பின் கூட்டமே, அந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்திருக்கும் காரணத்தால் நீங்கள் தேவனுடையவர்கள் என்று உங்களை எண்ணிக் கொள்ள வேண்டாம்” என்றான். இயேசுவும் அவர்களை நோக்கி, “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டாயிருக்கிறீர்கள்” என்று கூறினார். மேலும் அவர், “ஒவ்வொரு முறையும் தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினபோது, என்ன சம்பவித்து? நீங்கள் அவனைக் கல்லெறிந்து கொன்று கல்லறைகளில் அடக்கம் செய்தீர்கள். இப்பொழுது கல்லறைகளைச் சுத்தம் செய்து மெருகேற்றுகிறீர்கள்.” என்றார்.

145325 “கத்தோலிக்க சபையும் அதையல்லவா செய்தது! ஜோன் ஆப் ஆர்க் (John of Arc), பரி. பாட்ரிக் (St.Patrick) இன்னும் மற்றவர்களையும் பாருங்கள். அவர்கள் தாம் இவர்களைக் கல்லறைகளில் அடக்கம் செய்தனர். ஆனால் சில நூற்றாண்டுகள் கழித்து அவர்கள் ஜோன் ஆப் ஆர்க்கின் உடலைத் தோண்டியெடுத்து, நதியில் எறிந்து, அவளை மந்திரவாதியென்றைழைத்து சுட்டெரித்தனர். 326 “நீங்கள் உங்கள் பிதாவகிய பிசாசினால் உண்டாயிருக்கிறீர்கள். அவனுடைய கிரியைகளை நீங்களும் செய்கின்றீர்கள்”. அது சரியாகவே இருக்கிறது. உலகம் பூராவும் இவ்வாறே சம்பவிக்கும். பாருங்கள்? சரி! இயேசு கூறினதும் அதுவே. 327 அந்த வெள்ளைக்குதிரை காண்பதற்கு மிக அழகாகவும், அது உண்மையாகவும் இருப்பதாக நினைக்கிறீர்களா? ஆனால் நீங்கள் என்னே பெற்றிருக்கிறீர்கள் என்று கவனியுங்கள். குதிரையின் மேல் உண்மையாகவே சவாரி செய்பவன் அவன்தான். இப்பொழுது அவர்கள் அதைச் செய்ய விரும்பினார்கள் என்று அவர் கூறினதினால், அவர் கொடிய வஞ்சகத்தை அவர்களுக்கு அனுப்புவார்.

146328 நினைவில் கொள்ளுங்கள். வெளிப்படுத்தல் 17-ல் கூறப்பட்ட “வேசி, மகா பாபிலோன் இரகசியம், வேசிகளுக்குத் தாய்”. யோவான் அவளைக் கண்டு ஆச்சரியப்பட்டான். இந்த மனிதனைப் போலவே…பாருங்கள், பொறுத்திருங்கள். நாம் இங்கு வந்து, இங்குள்ள இந்த வெள்ளைக் குதிரையை கவனிக்கின்ற அந்த மனிதனை கவனிக்கிறோம். பாருங்கள்? ஆனால் நீங்கள் அதை கவனித்தீர்கள்…அங்கு என்ன சம்பவித்ததென்றால், “அவன் மிகுந்த ஆச்சரியத்துடன் அவளைக் குறித்து வியப்படைந்தான்”. ஆனால் இரகசியம் என்னவெனில், “அவள் கிறிஸ்துவினுடைய பரிசுத்தவான்களின் இரத்தத்தால் வெறி கொண்டிருந்தாள்”. இரத்தாம்பரத்தினாலும் பொன்னினாலும் அலங்கரிக்கப்பட்ட அழகான சபை, “ஆனால் வேசித்தனமும் அருவருப்பும் நிறைந்த பாத்திரம் அவள் கையில் இருந்தது.”

147329 “வேசித்தனம்” என்பது என்ன? அது “அநீதியான வாழ்க்கை நடத்துவது” என்று பொருள்படும். அதுதான் அவள் அளித்த போதகம். தேவனுடைய வார்த்தையை அவள் அவமாக்கி, “மரியாளே வாழ்க” போன்ற முறைகளை சபைக்கு அளித்தாள். “பூமியின் ராஜாக்கள் அவளுடன் வேசித்தனம் பண்ணினர்.” நல்லது. “கத்தோலிக்க சபைதான் அவ்விதம் செய்கின்றது” என்று நீங்கள் கூறலாம். 330 ஆனால், அவள் “வேசிகளுக்குத் தாய்” என்பது நினைவிருக்கட்டும் பாருங்கள்? அவள் இருந்த விதமாகவே இருக்கிறாள். அவ்விதமே. 331 நடந்தது என்ன? சீர்திருத்தக்காரன் மரித்து அவன் செய்தியையும் மரித்துபோன பிறகு, நீங்கள் ஸ்தாபனத்தை ஏற்படுத்தி பழையபடி அங்கு ரிக்கிகள் (Rickys) குழுக்களை வைத்தீர்கள். உங்கள் விருப்பப்படி வாழத் தொடங்கினீர்கள். தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருக்க நீங்கள் விருப்பங் கொள்ளவில்லை. வார்த்தையுடன் செல்வதற்குப் பதிலாக நீங்கள் ஸ்தாபனத்தில் நிலைத்து நின்று “ இதுதான் அது” என்று கூறுகிறீகள். ஹூம்! நீங்கள் அதைச் செய்யாதீர்கள். அது அவர்தான், பாருங்கள், அங்கேயும் அவரே!

148332 கவனியுங்கள். இது ஒரு காரியம். ஆனால் நாம் முடிக்கும் முன்பாக இன்னும் சில இடங்களிலிருந்து விளக்கிட விரும்புகிறோம். 333 அவன் தானியேலின் ஜனங்களை அழிக்கும் பிரபு. நீங்கள் அதை நம்புகிறீர்களா? இப்பொழுது நான் இதை கூறப் போகிறேன், ஒரு சில நிமிடங்கள் பொறுத்துக் கொள்ள, நீங்கள் உதவினால், என்னால்—என்னால் முடிந்தவரை, நான் துரிதமாக முடிக்கிறேன். ஆனால் இது உண்மையன்று உங்களிட கூற விரும்புகிறேன். ஏனெனில் நான்…பரிசுத்த ஆவியானவர் தாமே இதை எனக்கு அளித்திருக்கிறார் என்பது நான் இங்கு நிற்பது போல உறுதியானதாகும். பாருங்கள்? பாருங்கள்?

149334 இப்பொழுது கவனியுங்கள். நாம் ஒரு நிமிடம் மறுபடியும் தானியேலுக்குத் திருப்புவோம். நான் உங்களுக்கு ஒன்றை வாசிக்க விரும்புகிறேன்…உங்களால் அதைத் திருப்ப முடியவில்லையெனில்…பரவாயில்லை. நான் தானியேல் 9, தானியேல் 9-ஐ வாசிக்க விரும்புகிறேன். நான் தானியேல் 9: 26,27 வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். தானியேலின் ஜனங்களை அழிப்பவன் இவன்தானா, அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை நீங்கள் கவனியுங்கள். அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்;… 335 பாருங்கள், எழுபது வாரங்களில் அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பிறகு… …ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற (வரப்போகிற) பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போவார்கள் (அதுதான் அந்த குருக்களாட்சி—heirarchy) அதின் முடிவு ஜலப்பிரவாகம் போல் இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.

150336 ஜனங்களே நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன், மூன்றரை வருட அவருடைய ஊழியத்திற்குப் பிறகு, கிறிஸ்து சங்கரிக்கப்பட்டார். அதன் பின் ‘ஆலயத்தை அழித்தவன் யார்? யார் அதை அழித்தது? ரோமாபுரி! நிச்சயமாக. கான்ஸ்டாட்டின் அல்லது…இல்லை. மன்னிக்கவும். ரோம தளபதியாகிய தீத்து என்பவன். அவன் பிரபுவை அழித்தான்.இப்பொழுது கவனியுங்கள். இவனைச் சற்று கவனியுங்கள். அவன் இந்த சுவர் வரை வந்தான்.

151337 இயேசு பிறந்த போது…வானத்திலுள்ள சிவப்பான வலுசர்ப்பம் அந்த ஸ்திரீ பிள்ளை பெற்றவுடனே அவளுடைய பிள்ளையைப் பட்சித்து போடும்படிக்கு அவளுக்கு முன்பாக நின்றது. அது சரியா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] குழந்தை பிறந்தபோது அதைப் பட்சிக்க முயன்றது யார்? [“ரோமாபுரி”] ரோமாபுரி! பாருங்கள்? அதுதான் அந்த சிவப்பான வலுசர்ப்பம்! இங்கே அந்தப் பிரபு. இங்கே அந்த மிருகம். பாருங்கள்? அவர்களனைவரும் “பிள்ளையைப் பட்சித்துப் போட” நின்று கொண்டிருக்கின்றனர். ஆனால் தேவன் பிள்ளையைப் பரலோகத்திற்கு எடுத்துக் கொண்டு, சிங்காசனத்தில் வீற்றிருக்கும்படி செய்தார். குறிப்பிட்ட காலம்வரை கிறிஸ்து அங்குதான் இருப்பார். பாருங்கள்? இப்பொழுது, அவன் என்ன செய்வான் என்பதைக் கவனியுங்கள்.

152338 இப்பொழுது, ஓ, இப்பொழுது, அன்றைக்கு நான் யாரோ ஒருவரிடம் இங்கே பேசிக்கொண்டிருந்தேன். அது சகோதரன் ராபர்ஸன் அல்லது யாரோ ஒருவரிடத்தில் இதைக் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். இங்கே இதைக் குறித்து அல்ல, ஆனால் கிட்டத்தட்ட இதேக் காரியம்தான். அதைப்பற்றி நான் சிறிது காலம் முன்பு இங்கே உங்களிடையே இந்த பொருளாதார நிலையின் பேரில் இந்த ஐக்கிய நாடுகளுக்கு என்ன சம்பவிக்கும் என்று பிரசங்கித்திருக்கிறேன் என்று நம்புகிறேன். பாருங்கள்? நாம் நமது கடன்களை, வரிப்பணத்தைக் கொண்டு அடைத்து வருகிறோம். கடன் அடைத்துத் தீர்க்க இன்னும் நாற்பது வருடங்கள் செல்லும். நாம் அந்த அளவிற்கு பின் தங்கியுள்ளோம். நீங்கள் எப்போதாவது கெயர் (KATR) அல்லது லைப்லைன் (Life Line) வானொலி நிலையங்களில் அறிவிப்பை வாஷிங்டனிலிருந்து வானொலியில் கேட்டதுண்டா? நாம் பயங்கரமான நிலையில் உள்ளோம். அவ்வளவே. 339 அதற்கு என்ன காரணம்? தங்கம் எல்லாம் வங்கியில் செலுத்தப்பட்டு, அதற்குரிய பத்திரங்களை யூதர்கள் வைத்துக் கொண்டிருக்கின்றனர்…அது ரோமபுரியாயிருக்கப்போகின்றது. இப்பொழுது கவனியுங்கள், இந்தப் பெரிய மாடிக் கடைகள் (apartment stores…) யாருக்குச் சொந்தம் என்பதை நாம் அறிவோம். ஆனால் பெரும்பான்மையான உலகத்தின் செல்வம் ரோமபுரியின் வசமுள்ளது. எஞ்சியவை யூதர்களிடத்தில் இருக்கிறது. இப்பொழுது இதைக் கவனியுங்கள். இப்பொழுது இதைக் கவனியுங்கள். பரிசுத்த ஆவியானவர் இதை எனக்கு எவ்வாறு வெளிப்படுத்தினார் என்று பாருங்கள்.

153அவர் ஓரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி (இப்பொழுது கவனியுங்கள்) அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான். நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன் மேல் தீருமட்டும் சொரியும். 340 கவனியுங்கள்! ஓ! அது எவ்வாவு சாமார்த்தியமுள்ள காரியம்! அவன் இங்கே இருக்கிறான். இப்பொழுது அந்த காட்சி என்ன என்றும், இது ரோமாபுரி தான் என்று நாம் அறிந்து கொண்டோம். அவன் வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்பவன் என்று அறிந்தோம். அவன் ஒரு போதகமாகப் புறப்பட்டான் என்று நாம் அறிவோம். அஞ்ஞான ரோம மார்க்கம், போப்பாண்டவரின் ரோமன் கத்தோலிக்க மார்க்கமாக மாறி, அதற்கு முடிசூட்டப்பட்டது.

154341 இப்பொழுது கவனியுங்கள்! “கடைசி காலத்தில்”. கிறிஸ்து பிரசங்கித்த காலத்திலல்ல, ஆனால் “கடைசி காலத்தில்”, வாரத்தின் பிற்பகுதியில், நாம் இப்பொழுது தானியேலின் எழுபது வாரங்களைக் குறித்து சிந்தித்தோம். கிறிஸ்து மூன்றரை வருடங்கள் தீர்க்கதரிசனம் உரைத்தார். இன்னமும் மூன்றரை வருடகாலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான் கூறுவது சரியா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அச்சமயம் இந்த பிரபு தானியேலின் ஜனங்களுடன் அதாவது யூதர்களுடன் உடன்படிக்கை செய்வான். அது மணவாட்டி எடுக்கப்பட்ட பிறகு சம்பவிக்கும். அவள் அதைக் காணமாட்டாள்.

155342 கவனியுங்கள், தானியேலின் வாரத்தின் பிற்பகுதியில், ஜனங்கள் ஒரு உடன்படிக்கை செய்கின்றனர். இந்த பிரபு ரோமாபுரியுடன் ஒரு உடன்படிக்கை செய்கிறான், அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்கிறான். செல்வத்திற்காக என்பதில் சந்தேகமேயில்லை, ஏனெனில் கத்தோலிக்க மார்க்கத்தாரும், யூதர்களும் உலகத்தின் செல்வம் முழுமையுமே கைப்பற்றியுள்ளனர். 343 நான் வாடிகனில் இருந்தபோது, அங்குள்ள மூன்று கிரீடங்களையும் கண்டேன். நான் போப்பாண்டவரை ஒரு புதன்கிழமை பகல் 3.00 மணிக்குப் பேட்டிக் காண பாரன் பான் ப்ளூம் பெர்க் (Baron von Blurnberg) ஒழுங்கு செய்திருந்தார். 344 நான் ராஜாவிடம் அழைத்துச் செல்லப்பட்டபோது, என் கால் பட்டையிலுள்ள முன்கவசத்தை (cuffs) வெட்டிவிட்டார்கள். அது பரவாயில்லை. ஆனால் நான் அவரைக் கண்டு திரும்பி வரும்போது, என் முதுகைக் காண்பித்து வரக்கூடாதாம். அதுவும் பரவாயில்லை. ஆனால், அந்த மனுஷனுக்கு முன்பாக நான் என்ன செய்ய வேண்டும்?” என்று நான் கேட்டேன். 345 அப்பொழுது அவர்கள், “நல்லது, நீங்கள் உள்ளே சென்று முழங்காற்படியிட்டு, அவருடைய விரலை முத்தம் செய்யுங்கள்” என்று கூறினார். 346 நான், “அது முடியாது. அது முடியாது. இல்லை, ஐயா,” என்றேன். நான், “சகோதரன் என்று அழைக்கப்பட விரும்புகிறவர்களை நான் சகோதரன் என்று அழைப்பேன். சங்கை (Revend) என்னும் பட்டப்பெயரால் ஒருவன் அழைக்கப்பட விரும்பினாலும் நான் அவனை சங்கை என்று அழைப்பேன். ஆனால் ஒரு மனிதனைப் பணிந்து ஆராதனை செய்யமாட்டேன். ஏனெனில் ஆராதனை யாவும் இயேசுகிறிஸ்துவுக்கே உரியது” என்று கூறினேன். பாருங்கள்? இல்லை, இல்லை, ஐயா. ஒரு மனிதன் கரத்தை முத்தம் செய்வது என்பது என்றால் முடியாது. ஆகவே, நான் அதைச் செய்யவில்லை.

156347 ஆனால் வாடிகனை நான் சுற்றிப் பார்த்தேன். கோடி, கோடி, கோடிக்கணக்கான டாலர்கள் கொடுத்தாலும் அதை வாங்க முடியாது. நல்லது…“உலகத்தின் செல்வங்களை அனைத்தும் அவளிடத்தில் காணப்பட்டதென்று” வேதம் உரைக்கிறது. அதை சற்று சிந்தித்துப் பாருங்கள். ஓ, கோடிக் கணக்கான மடங்கு பெருமானமுள்ள விலைமதிக்க முடியா அந்த பெரிய ஸ்தலங்களைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்… 348 ருஷியாவில் கம்யூனிஸம் ஏன் தலையெடுத்தது? இன்று அநேக போதகர்கள் கம்யூனிஸத்துக்கு விரோதமாய் பிரசங்கிப்பதைக் கேட்கும்போது எனக்கு வயிறு குமட்டுகிறது. அவர்கள் எதைக்குறித்து காக்கையைப் போன்று கரைந்து கொண்டிருக்கின்றனர் (crowing) என்பதை அறியாமல் உள்ளனர். அது சரி. கம்யூனிஸம் என்பது ஒன்றுமில்லை. அது இப்பூமியில் சிந்தப்பட்ட பரிசுத்தவான்களின் இரத்தத்திற்காக பழிவாங்குவதற்கென்று தேவன் உபயோகிக்கும் ஒரு கருவியாக உள்ளது. அது சரி.

157349 சபை எடுக்கப்பட்ட பின்னர், ரோமபுரியும் யூதரும் ஒருவரோடொருவர் உடன்படிக்கை செய்து கொள்வர். பரிசுத்த ஜனங்களோடு அவர்கள் உடன்படிக்கை செய்வார்களென்று வேதம் கூறுகிறது. அவர்கள் அதை செய்வார்கள், (ஏன்) காரணம் இந்த தேசம் பொருளாதார சீர்குலைவு அடையும் நிலை அடைந்துவிட்டது. உலகத்தின் ஏனைய நாடுகளும் பொருளாதார சீர்குலைவை அடைந்துவிட்டன. நீங்கள் அதை அறிவீர்கள். நம் கடனைத் தீர்க்க இன்னும் நாற்பது வருடகாலம் நம் வரிப்பணத்திலிருந்து செலுத்தப்படவேண்டுமானால், நமது நிலையென்ன? 350 நாணயங்களை வாங்கிக் கொண்டு பத்திரங்களைச் செலுத்துவதுதான் இதற்கு விமோசனம். நாம் அவ்வாறு செய்ய முடியாது. வால் ஸ்ட்ரீட் (Wall Street) தன் பணத்தையெல்லாம் சேமித்து வைத்துள்ளது. யூதர்கள்தான் வால் ஸ்ட்ரீடில் ஆதிக்கம் கொண்டுள்ளனர். அதன் எஞ்சிய பாகம் வாடிகனில் உள்ளது. அவர்கள் உலக வாணிபத்துறையில் ஈடுபட்டுள்ளனர். மீதியான செல்வம் அனைத்தும் வால் ஸ்ட்ரீட்டிலுள்ள யூதரிகளிடம் உள்ளது. நாம் அவ்வாறு செய்ய முடியாது.

158351 ஆகவே அவர்கள் அதைச் செய்வார்களானால் நீங்கள் நினைக்கின்றீர்கள்… இப்படிப்பட்ட மதுபான மற்றும் புகையிலை வியாபாரிகள், வருடத்திற்கு கோடிக்கணக்கான டாலர்கள் சம்பாதித்து, பழைய ஆபாச புகைப்படங்களிலும், அதைப் போன்ற காரியங்களிலும் வருமானவரி ஏய்ப்பு செய்து விடுகிறார்கள். ஆகவே அங்கே அரிசோனாவிற்கு சென்று ஆயிரக்கணக்கான அல்லது இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி ஐம்பதாயிரம் டாலர்களுக்கு பெரிய கிணறுகளை வெட்டி அதை வருமான வரியில் சேர்த்து கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்கின்றனர். நீங்கள் உங்கள் வரியை செலுத்தாவிட்டால் உங்களை சிறையில் தள்ளி விடுவார்கள். ஆனால் அவர்கள் வரி ஏய்ப்பு செய்து, கிணறுகளை வெட்டி, பிறகு நிலத்தை சமன்படுத்தும் கருவிகளை (bulldozers) கொண்டு வருகின்றனர். ஆகவே அவர்கள் என்ன செய்வார்? தாங்கள் சம்பாதித்த பணத்தின் மூலம் அடுத்த காலகட்டத்தில் அங்கே வீடுகள் கட்டும் திட்டங்களைக் கொண்டு வருவர். அவர்கள் ஒரு முதலீட்டைச் செய்தாக வேண்டும். வீடுகள் கட்டும் திட்டங்களை அங்கே செயல்படுத்தி அவைகளை லட்சக்கணக்கான டாலர்களுக்கு விற்று விடுவார்கள். ஆகவே அப்படிப்பட்ட நபர்கள் பணத்தை மாற்றுவதற்கு உடன்படுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

159352 இந்த நபர் செய்ததுபோல…அவன் பெயர் என்ன? காஸ்ட்ரோ ஒரே ஒரு புத்தியுள்ள காரியத்தைச் செய்தான். அவன் பணத்தை திரும்பவும் அளித்து, பாண்டு பத்திரங்களைக் கிழித்துப்போட்டான். 353 கவனியுங்கள், ஆனால் நம்மால் அதைச் செய்ய முடியாது. இந்த நபர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். ஐஸ்வரியமுள்ள பூமியின் வர்த்தர்கள் அதை வைத்துள்ளனர். 354 அப்படியானால் அதைச் செய்ய ஏதோ காரியம் மாத்திரமே உண்டு. கத்தோலிக்க சபை அவ்வாறு செய்ய முடியும். அவளிடம் மாத்திரமே போதிய பணம் உண்டு. அவர்களால் அதைச் செய்ய முடியும். அவள் அதை கண்டிப்பாக செய்வாள். அதற்கென்று அவள் அவன் யூதருடன் தன்னை ஒப்புரவு செய்து கொள்வாள். இந்த உடன்படிக்கை அவள் யூதருடன் செய்யும்போது…இப்பொழுது ஞாபகங் கொள்ளுங்கள். இதை நான் வேத ஆதாரம் கொண்டு சொல்லுகிறேன் …இந்த உடன்படிக்கையை அவள் செய்யும்போது, “அவன் உபாயத்தினால் கைக்கூடி வரப்பண்ணுவான்” என்று தானி 8:23,25 உரைக்கின்றது என்பதை நாம் கவனிக்கலாம். அவன் யூதர்களுடன் இந்த உடன்படிக்கையைச் செய்கிறான்.

160355 ஆனால் யூதர்களின் செல்வம் அவன் கையில் சிக்கிக்கொண்ட பிறகு அந்த மூன்றரை வருடகாலத்தின் மத்தியில் அவன் உடன்படிக்கையை முறிக்கிறான். அவ்வாறு செய்யும்போது…ஓ…என்னே! ஓ…என்னே! 356 அவன் அந்திக்கிறிஸ்துவென்று முடிவுகாலம்வரை அழைக்கப்படுகிறான். ஏனெனில் அவனும் அவன் பிள்ளைகளும் கிறிஸ்துவுக்கும் அவர் வார்த்தைக்கும் விரோதமாய் இருக்கிறார்கள். அந்த மனிதன் அந்திகிறிஸ்து என்று அழைக்கப்படுகிறான். 357 இப்பொழுது, அவன் பணத்தை உடையவனாய் இருக்கப் போகிறான். அது அங்கிருந்துதான் வரும் என்று நான் நினைக்கிறேன். ஒரு நிமிடம் மட்டும், நான் இதைக் கூறும்பொழுது, நான் இன்னும் ஒரு நிமிடத்தில் அதைக் குறித்து பின்நோக்கி செல்ல விரும்புகிறேன். 358 அவன் அந்திக்கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறான். கடைசி காலம் வரையிலும் தேவனுடைய பார்வையில் அவன் அந்திக்கிறிஸ்து என்றே அழைக்கப்படுவான். இப்பொழுது, ஆனால் அவன் அப்பொழுது வேறொரு பெயரால் அழைக்கப்படுவான்.

161359 இப்பொழுது, செல்வத்தில் ஆதிக்கம் அவன் கையில் வந்தவுடன் யூதர்களுடன் அவன் செய்த உடன்படிக்கையை அவன் எழுபதாவது வாரத்தின் பாதியின் மத்தியில் முறிப்பானென்று தானியேல் கூறுகிறான். அதன்பின், சகோதரனே, அவன் என்ன செய்வான். அச்சமயம், உலகத்தின் செல்வமனைத்தும் அவன் தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுள்ளதால் உலகிலுள்ள வாணிபமெல்லாம் அவன் கைக்குள் இருக்கும். அந்த சமயத்தில் இரண்டு தீர்க்கதரிசிகள் காட்சியில் எழும்பி 1,44,000 பேரை அழைப்பர். அதன் பின்னர் என்ன நேரிடும்? வெளிப்படுத்தின விசேஷம் 13-ல் கூறியுள்ள மிருகத்தின் முத்திரை போடப்படும். ஏனெனில் உலக வாணிபமெல்லாம் அவன் அதிகாரத்தில் இருக்கும். அதன்பின் என்ன சம்பவிக்கும்? “அந்த முத்திரையிடப்பட்டவன் அல்லது வேறு யாரும் விற்கவோ கொள்ளவோ முடியாது”, என்ற மிருகத்தின் முத்திரை உள்ளே வரும். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று முறை தட்டினார்.—ஆசி.] 360 தேவனுக்கு ஸ்தோத்திரம். அவ்வமயம் சபையானது மகத்தான மூன்றரை வருடகாலம் மகிமையில் சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும். இது நிகழும்போது, நாம் இவ்வுலகில் இருக்க மாட்டோம்.

162361 இப்பொழுது கவனியுங்கள்…சபைக்காலம் கடைசியில் அவன்…அவனும் அவள் பிள்ளைகளும் அந்திக்கிறிஸ்துவென அழைக்கப்படுகின்றனர். ஏனெனில் கிறிஸ்துவுக்கு விரோதமாயுள்ளவன் அந்திக்கிறிஸ்துவாவான். வார்த்தைக்கு விரோதமாயுள்ள எவனும் கிறிஸ்துவுக்கு விரோதமாயுள்ளான். ஏனெனில் கிறிஸ்துதான் வார்த்தை. இப்பொழுது அவன் அந்திக்கிறிஸ்துவாயிருக்கிறான். 362 வெளிப்படுத்தின விசேஷம் 12:7-9ல் குற்றம் சாட்டுகிறவனாகிய சாத்தான் கீழே தள்ளப்படும்போது, நீங்கள் வேண்டுமானால் அதைக்குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை படிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, நமக்கு நேரமில்லை. பத்து மணிக்கு இன்னும் 20 அல்லது 15 நிமிடங்கள் உள்ளன. பாருங்கள். “நம் சகோதரர் மேல் குற்றஞ்சாட்டுகிறவனாகிய”, “பிசாசாகிய” அந்த ஆவி, “சாத்தான்”, சபை எடுக்கப்பட்ட பின்னர் தாழத்தள்ளப்பட்டான் என்று வெளி 12:7-9 கூறுகின்றது. அது சரி. 363 சபை எடுக்கப்படும்போது, சாத்தான் தாழத்தள்ளப்படுகிறான். சபை மேலே போகும்போது, சாத்தான் கீழே வருகிறான், பின்பு அவன் அந்திக்கிறிஸ்துவுக்குள் வாசம் செய்து “மிருகம்” என்று அழைக்கப்படுகிறான். வெளிப்படுத்தின விசேஷம் 13-ல் அவன் மிருகத்தின் முத்திரையைப் போடுகிறான். பாருங்கள்?

163364 “தடை செய்கிற அவனால்” மட்டுமே கிறிஸ்தவமானது தன் பரிசுத்தத்தில் இப்பொழுது பூமியின் மேல் விடப்பட்டுள்ளது, “தடைசெய்கிறவன்”. 365 “தேவனுடைய ஆலயத்தில் அவள் உட்கார்ந்து, தேவன் போல் தன்னைக் காண்பித்து, உலகில் மனிதருடைய பாவங்களை மன்னிப்பான்” என்று தெசலோனிக்கேயர் நிரூபத்தில் கூறப்பட்டுள்ளதை நினைவில் கொள்ளுங்கள். அவன் வெளிப்படும் சமயம் வரும்வரை இது தொடர்ச்சியாக நடைபெற்று, “அக்கிரமம் உலகில் மிகுதியாகும்”. காரணம் அதுவரை அது அறியப்படாது. 366 அப்பொழுது சபையானது எடுக்கப்படும். அது எடுக்கப்பட்ட பின்னர், அவன் இப்பொழுதுள்ள அந்திக்கிறிஸ்துவிலிருந்து மாறுகிறான், ஓ, என்னே, “சபை, அந்த மகத்தான சபை”, அவன் அந்திக்கிறிஸ்துவினின்று மாறி “மிருகமென்று” அழைக்கப்படுகிறான். ஊ—ஊ இதை ஜனங்களுக்குப் புரிய வைக்க எனக்கு எத்தனை ஆவல்!

164367 அந்திக்கிறிஸ்து என்பதும், மிருகம் என்பதும் ஒரே ஆவிதான் என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். அங்கே தரித்துவம் காணப்படுகிறது. ஆம், ஐயா. பிசாசின் வல்லமை மூன்று கட்டங்களில் வெளிப்படுகின்றது. நிக்கொலாய் ஆவி கிரீடம் சூட்டப்படுவதற்குமுன் அது மனிதனுக்குள் வாசம் செய்ய வேண்டும் என்பது நினைவிருக்கட்டும். பாருங்கள்? இப்பொழுது இதைக் கவனியுங்கள்! மூன்று கட்டங்கள் முதலாவது கட்டத்தில் அவன் அந்திக்கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறான். இரண்டாவது கட்டத்தில் அவன் கள்ளத் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுகிறான். மூன்றாவது கட்டத்தில் அவன் மிருகம் என்று அழைக்கப்படுகிறான்.

165368 கவனியுங்கள், நிக்கொலாய் மதஸ்தரின் போதகம், அந்திக்கிறிஸ்துவின் போதகம், பவுலின் காலத்தில் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக எழும்பினது, அந்திக்கிறிஸ்து. 369 பின்பு அந்த போதகம் மனிதனானபோது கத்தோலிக்க சபையின் குருக்களாட்சி (heirerchy) யைக் குறித்து பிரசங்கிக்கும் தீர்க்கதரிசியாக அவன் விளங்குகிறான்—கள்ளத்தீர்க்கதரிசி. போப்பாண்டவர்தான் தவறான போதகத்துக்குத் தீர்க்கதரிசி, ஆகவே அதன் காரணமாக அவன் கள்ளத் தீர்க்கதரிசியாகிறான். 370 மூன்றாம் கட்டத்தில் அவன் மிருகம் என்னும் பெயர் கொள்கிறான். அஞ்ஞான ரோமமார்க்கம் பெற்றிருந்த எல்லா வல்லமையும் ஒரு மனிதன் பெற்று முடிசூட்டப்படுகிறான். ஏனென்றால் ஏழு தலைகளுள்ள மிருகம்—வலுசர்ப்பம், பரலோகத்திலிருந்து தாழதள்ளப்பட்டு, இந்த கள்ள தீர்க்கதரிசிக்குள் வாசம் செய்கிறது. அந்த வலுசர்ப்பம் ஏழு தலைகளில் ஏழு கிரீடங்களைச் சூடியிருந்தது அது பூமியிலும், சமுத்திரத்திலும் தள்ளப்படுகிறது. அது சரி. 371 நாம் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறோம்? யார் இந்த வெள்ளைக்குதிரையின் மேல் இப்பொழுது சவாரி செய்பவன்? அது யார் என்று அறிகிறீர்களா? அவன்தான் சாத்தானின் பராக்கிரமசாலி.

166372 ஒரு இரவு நான் இங்கு உட்கார்ந்திருக்கும் சகோதரன் நார்மன், சகோதரன் பிரட் என்று நான் நினைக்கிறேன். இவ்விருவருடன், ஒரு மனிதன் அந்திக்கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கிப்பதைக் கேட்கச் சென்றிருந்தேன். அவர் அசெம்பிளீஸ் ஆப் காட் (Assemblies of God) என்னும் ஸ்தாபனத்தின் தலைசிறந்த போதகர். அந்திக்கிறிஸ்துவைப் பற்றிய அவருடைய வியாக்கியானம் இவ்வாறு இருந்தது. அதாவது, “அவர்கள் ஒருவிதமான வைட்டமினை மனிதனிலிருந்தெடுத்து அவனிலுள்ள அந்த ஜீவனை ஒரு பெரிய சொரூபத்திற்குள் மாற்றுவார்கள். அப்பொழுது அது ஒரு பட்டிணம் பூராவும் நிரப்பும் அளவிற்கு ஒரு பெரிய சொரூபமாக மாறும்”. பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக உரிமை பாராட்டும் ஒரு மனிதன் இவ்வித தவறான நம்பிக்கை கொண்டிருக்கலாமா?

167373 வேதம் அந்திக்கிறிஸ்து யாரென்பதை இங்கே தெளிவாக எடுத்துக் கூறுகின்றதே! அது ஒரு…இல்லை…அவன் ஒரு மனிதன். கவனியுங்கள். வெள்ளைக்குதிரையின் மேல் சவாரி செய்பவன் சாத்தானின் பராக்கிரமசாலியல்லாமல் வேறு யாருமில்லை. பிசாசு அவனுக்குள் வாசம் செய்யும் ஒருவன். அவன் கல்வியறிவு படைத்த நிபுணன். இப்பொழுது உங்கள் செவிகள் திறக்கப்பட்டிருக்கின்றன என்று நான் நம்புகிறேன். ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவிருக்கின்ற, அந்த பதவிக்கு அந்த அடுத்த மனிதனைக் காட்டிலும், இந்த மனிதன் நுண்ணறிவு பெற்றவனா என்று காண்பதற்காக அவர்கள் சில நாட்களுக்கு முன்பு பிசாசின் பிள்ளைகளில் ஒருவனை தொலைக்காட்சியில் சோதித்துக் கொண்டிருந்தார்கள்? பாருங்கள்? ஆனால் அவனிடம் மிகுந்த ஞானமுண்டு. சாத்தானும் அப்படித்தான் இருக்கிறான். அவன் ஞானத்தை விற்க முயல்கிறான். அதை ஏவாளுக்கு அவன் விற்றான். நமக்கும் அதை அவன் விற்றுப்போட்டான். அதன் விளைவாக நாம் விரும்பியிருந்த பராக்கிரமசாலியை நாம் பெற்றுக்கொண்டோம். சரி. முழு உலகமே ஒரு பராக்கிரமசாலி வேண்டுமென்று விரும்புகிறது. அவர்கள் அவனைப் பெற்றுக்கொள்ளப் போகிறார்கள். சபை எடுக்கப்பட்டு சாத்தான் கீழே தள்ளப்படும்வரை சற்று காத்திருங்கள். சாத்தான் மனிதனுக்குள் வாசம் செய்வான். அது சரி. நன்கு பணிபுரிய அவர்களுக்கு ஒருவன் தேவைப்படுகிறது. அவர்கள் விருப்பப்படி அவன் செய்வான்.

168374 கல்வியறிவு பெற்றவன்! சாத்தானின் பராக்கிரமசாலி கல்வியறிவு படைத்த, ஞானமுள்ளவனாய், தனக்குச் சொந்தமான சபை தத்துத்தை உண்டாக்கிக்கொண்டான். அவன் ஜனங்களை வஞ்சிக்கும்படி வெள்ளைக்குதிரையின் மேல் சவாரி செய்கிறான். அவன் உலகிலுள்ள எல்லா மதங்களையும் ஜெயிப்பான். ஏனெனில் அவர்களெல்லாரும் உலக சபை மாநாட்டின் அங்கத்தினர்களாகிவிடுவர். ஏற்கனவே அதற்கென்று அவர்கள் கட்டிடங்கள் கட்டி, எல்லாம் ஆயத்தப்படுத்திவிட்டனர். இனி செய்ய வேண்டியது வேறொன்றுமில்லை. எல்லா சபை ஸ்தாபனங்களும் அந்த மாநாட்டில் புகுந்து விட்டன. அதற்கு ஆதரவளிப்பது யார்? அதற்கு ரோமபுரிதான். இப்பொழுது போப்பாண்டவர், “நாமெல்லாரும் ஒன்று. ஆகையால் நாம் ஒன்றுபட்டு ஒன்றாக நடப்போம்” என்று அறைகூவுகிறார்.

169375 முழு சுவிசேஷத்தைப் பின்பற்றுபவரும்கூட அதில் சேர்வதற்கென தங்கள் சுவிசேஷ போதகங்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் ஸ்தாபனத்தின் காரியங்களைக் காணக் கூடாதவாறு குருடராகி இருக்கின்றனர். அவர்கள் சத்தியத்தைப் புறக்கணித்து விட்டனர். சத்தியம் அவர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது. ஆனால் அவர்களோ—அவர்களோ அதை விட்டகன்றனர். இப்பொழுது “பொய்யை விசுவாசிக்கத்தக்கதாக அவர்கள் கொடிய வஞ்சகத்தால் பீடிக்கப்பட்டு ஆக்கினைக்குள்ளாகின்றனர்”. அவர்கள் சரியாக அவ்விதமே உள்ளனர். 376 அந்திக்கிறிஸ்து அவர்களெல்லாரையும் தன் அதிகாரத்திற்குட்படுத்துகிறான். “உலகத்தோற்றத்துக்கு முன்னால் இந்த முத்திரைகளின் புத்தகத்தில் பெயரெழுதப்படாத பூமியின் குடிகள் எல்லோரையும் அவன் ஏமாற்றினான்” என்று வேதம் கூறுகின்றது. [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை ஒருமுறை கொட்டினார்—ஆசி.] ஹூம்! அவன் ஏமாற்றினான் என்று வேதம் கூறினால், அவன் நிச்சயமாக ஏமாற்றினான் என்பதாகும். 377 நான் இன்னின்ன ஸ்தாபனத்தை சேர்ந்தவன் என்று அவர்கள் சொல்லுகின்றனர். ஆம், அது தான் சரியாக. வேசியின் ஸ்தாபனம். அது தொடங்கப்பட்ட நாள் முதற்கொண்டு முழுவதும் அந்திக்கிறிஸ்துவின் ஆதிக்கத்தில் உள்ளது. 378 நான் அதனின்று கேள்விப்படுவேன். ஆனால் அது…அது சத்தியமாயிருக்கின்றது. நான் எதிர்ப்பார்க்கிறேன். ஆமென்.

170379 இப்பொழுது கவனியுங்கள், அவன் ஜெயிப்பான். அவன் மிருகமாக மாறுமுன்பே, இப்பொழுதே அவன் ஜெயித்து எல்லாவற்றையும் தன் ஆதிக்கத்தில் வைத்துள்ளான் என்பதை பாருங்கள். கொடூர தண்டனை என்னவென்பதைக் காணவேண்டுமானால் சற்றுப் பொறுங்கள். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை நான்கு முறைத் தட்டுகிறார்—ஆசி.] பூமியில் கைவிடப்பட்டவர்கள் என்னவிதமான கொடூரத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்பதை அப்பொழுது காணலாம். உ—ஊ. “அங்கே அழுகையும் புலம்பலும், பற்கடிப்பும் உண்டாகும். தெரிந்துகொள்ளப்பட்ட மணவாட்டி எடுக்கப்பட்ட பின்பு, வலுசர்ப்பம், ரோமபுரி, தன் வாயிலிருந்து வெள்ளத்தை கைவிடப்பட்ட ஸ்திரீயின் சந்ததியின் மேல் ஊற்றி, அவளுடன் போர் செய்கின்றது. வலுசர்ப்பம் கைவிடப்பட்டவர்களோடு போர் புரிந்தது, அவள் உள்ளே பிரவேசிக்க விருப்பங் கொள்ளவில்லை. ஆகையால் அவள் மிருகத்தை போன்று வேட்டையாடப்படுவாள்”. 380 ஆனால் உண்மையான சபையோ கிறிஸ்துவின் கிருபையினால் இரத்தத்தின் கீழ் இருந்ததால் அவள் எந்த உபத்திரவத்தினூடாகவும் செல்லவேண்டிய அவசியமில்லை. அவளுக்கு எந்த உபத்திரவ காலமும் கிடையவே கிடையாது. இனிமேல் சபைக்கு அடுத்ததாக நிகழ வேண்டியது எடுக்கப்படுதலாகும். ஆமென்! ஆமென்! தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. ஓ! இது எனக்கு எவ்வளவு பிரியமாயிருக்கிறது!

171381 நான் உங்களுக்குக் கூறட்டும். அந்திக்கிறிஸ்து எத்தகைய ஜெயங்கொள்ளப்போகிறான் என்று நாம் பார்த்தோம். அவன் உண்மையாகவே ஜெயங்கொள்ளப்போகிறான். அவன் ஏற்கனவே ஜெயங்கொண்டுவிட்டான். அவன் இனிமேலும் ஜெயிப்பதற்கு எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, அவ்வளவுதான். அவர்கள் பணத்தை, இழிவான ஆதாயத்தை இச்சிக்கின்றனர். அது சரியானதாகும். தேவனைக் காட்டிலும் பணத்தை அதிகமாய் அவர்கள் நேசிக்கின்றனர். இப்பொழுது அவர்களுடைய எண்ணமெல்லாம் அவர்களிடம் எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது என்பதாகும். அது என்ன? 382 “சபைக்கு பணத்தைக் கொடுத்தால், அவள் உலக முழுவதையும் புரட்சிக்குள்ளாக்குவாள். சபைக்கு பணத்தைக் கொடுத்தால், அவள் உலகம் பூராவும் சுவிசேஷகரை அனுப்புவாள். அவள் என்ன செய்வாள்? அவள் உலகத்தை கிறிஸ்துவுக்காக மாற்றிவிடுவாள்” என்று அநேகமுறை சொல்லப்பட்டிருக்கிறதை நீங்கள் அறிவீர்கள். 383 பரிதாப நிலையிலுள்ள என் குருட்டு நண்பனே, நான் உனக்கு ஒன்றைக் கூறட்டும். உலகம் பணத்தின் மூலம் ஜெயிக்கப்படாது. இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக மாத்திரமே அது ஜெயிக்கப்படும். மரித்தாலும் பரவாயில்லையென்று தேவனுடைய வார்த்தையில் உறுதியாக நிற்கும் வீரமுள்ள மனிதர்களை தேவனுக்கென்று அனுப்புங்கள். உ—ஊம். உலகத்தோற்றத்துக்கு முன்பு ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் தங்களுடைய பெயரெழுதப்பட்டவரே ஜெயிப்பார்கள். அவர்களே அதைக்கேட்பார்கள். பணத்திற்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமில்லை. பணம் அவர்களை மேலும் ஸ்தாபனங்களின் பாரம்பரியத்தில் தான் ஆழ்த்தும்.

172384 இப்பொழுது கவனிப்போம். ஆம், அவன் கல்வியறிவு படைத்த நிபுணனாய் இருப்பான். அவன் சாமர்த்தியம் கொண்டவானாய் இருப்பான். என்னே, என்னே, என்னே! அவளைச் சூழ்ந்துள்ள அவள் பிள்ளைகளும் PH.d., L.L.D, இரட்டை L.D, Q.S.D., A.B.C.D.E.F. முதல் Z வரை ஆன அநேக வேத தத்துவப்பட்டங்களை பெற்றிருப்பார்கள். அவர்கள் எல்லாரும் சாமர்த்தியமுள்ளவர்களாயிருப்பார்கள். ஏன்? அதுதான் சாத்தானின் முறைமையாகும். வேதத்துக்கு விரோதமாய் அமைந்திருக்கும் சாமர்த்தியமான உபாயம் ஒவ்வொன்றும் சாத்தானால் உண்டானதாகும். 385 ஏவாளை அதன் மூலமாகத்தான் அவன் வசியப்படுத்தினான். ஏவாள் அவனிடம், “இதைச் செய்ய வேண்டாமென்று தேவன் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்” என்றாள். 386 அவன், “ஆனால் சற்று பொறு. நிச்சயமாக, தேவன் அப்படிச் செய்யமாட்டார் என்றாலும் நான் உன் கண்களைத் திறந்து ஞானத்தைச் சிறிது அளிக்கிறேன்” என்றான். அவள் அதைப் பெற்றுக் கொண்டாள்.

173387 நாம் அவனை விரும்பிக் கொண்டே வந்துள்ளோம். நாம் அதைப் பெற்றுக் கொண்டோம், இந்த தேசமும் அதைப் பெற்றுக்கொண்டது. கவனியுங்கள். அவன் உலகிலுள்ள எல்லா மதங்களின் மேலும் ஜெயங்கொள்ளுவான். கடைசி வாரத்தில், தானியேலின் ஜனங்களாகிய யூதர்களுடன் அவன் உடன்படிக்கை செய்வான். இங்கு புறஜாதியாரென்றும், தானியேலின் ஜனங்களென்றும் பாகுபாடு உண்டாகிறது. அதை நான் கரும்பலகையில் எழுதி உங்களுக்கு முன்னமே விவரித்திருக்கிறேன். நீங்கள் அதை பரிபூரணமாக காண்கிறீர்கள், அது அங்குதான் உள்ளது. தேவனுக்கு ஸ்தோத்திரம். அவன் அங்கு இருக்கிறான். ஸ்தாபனங்களின் முறைமை பிசாசினால் உண்டானது. அதன்மேல் வேறேந்த போர்வையும் போட முடியாது. பாருங்கள் சரியாக. அது பிசாசின் வேராக அமைந்துள்ளது. 388 இப்பொழுது நான் ஸ்தாபனங்களிலுள்ள ஜனங்களை குறித்து சொல்லவில்லை. அவர்களில் அநேகர் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கின்றனர். ஆனால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, அடுத்தமுறை நான் வரும்போது, நாம் எக்காளங்களைப் பற்றி ஆராயும்போது; மூன்றாம் தூதன் தோன்றி, “என் ஜனங்களே அவளைவிட்டு வெளியே வாருங்கள்” என்று சொல்லும் போது …தூதன் முழங்கும்போது கடைசி எக்காளத்திற்காக செய்தி விழுகிறது …கடைசி தூதனின் செய்தியின்போது, கடைசி முத்திரை திறக்கப்படுகிறது. இவையெல்லாம் ஒரே நேரத்தில் சம்பவிக்கிறது. ஆம் ஐயா, எல்லாம் ஒருங்கிணைந்து, நித்தியத்திற்குள் போகின்றது.

174389 இப்பொழுது என்ன? அதே சமயத்தில் இவன் ஜெயித்துக் கொண்டு செல்லும்போது, …தேவனும் ஏதாவது ஒன்றைச் செய்வார் நான் முடித்து விடுகிறேன். சாத்தானுக்கே நாம் எல்லா புகழையும் அளிக்க வேண்டாம். அவனைப் பற்றியே நாம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பாருங்கள்? இந்த பெரிய காரியம் அங்கே நிகழ்ந்துகொண்டே வந்து, இந்த பெரிய ஸ்தாபனங்களெல்லாம் ஒன்று சேர்ந்து கம்யூனிஸத்தை எதிர்க்கும்போது, அவர்களை ஜெயிப்பதற்காகவென்றே தேவன் கம்யூனிஸத்தை எழுப்பியுள்ளாரென்பதை அவர்கள் அறியார்கள். நிச்சயமாக. 390 ருஷியால் கம்யூனிஸம் எழும்பக் காரணம் என்ன—என்ன—என்ன? அங்குள்ள ரோமசபையும், மற்றவைகளும் அசூசிப்பட்டிருந்த காரணத்தால்தான். ருஷியாவில் அவர்கள் பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் அவர்களை சாகும்வரை பட்டினி கிடத்தினர். அதற்குப் பதிலாக உலகிலுள்ள மற்றவரைப் போல் வாழ்ந்தனர்.

175391 நான் சமீபத்தில் மெக்ஸிக்கோவுக்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள ஏழைபிள்ளைகளைக் கண்டேன். எந்த கத்தோலிக்க தேசமும் தங்கள் ஜீவனாம்சத்துக்கு வேண்டியவைகளை போதுமான அளவுக்குப் பெற்றிருக்கவில்லை. அவைகளில் ஒன்றும் அவ்வாறு இல்லை. எங்கே என்று கேட்கிறீர்களா? அவைகள் எங்கே என்று எனக்குக் காண்பியுங்கள். எந்த ஒரு கத்தோலிக்க தேசமும் தனக்கு வேண்டியவைகளைப் பெற்றிருக்கவில்லை. பிரான்சு, இத்தாலி, அவைகள் யாவும், மெக்ஸிக்கோ போன்றவை. நீ எங்கே சென்று பார்த்தாலும், அவைகளுக்கு சுய உதவியே இல்லை. ஏன்? சபையானது அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு விடுகிறது. ஆகையால்தான் ருஷியா கிறிஸ்தவ மார்க்கத்தை உதைத்து தள்ளிற்று. என்ன சம்பவித்தது என்பதைக் கவனியுங்கள்.

176392 நானே இதை அறிவேன். நான் அங்கு நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது ஆலயமணி அடிப்பதைக் கேட்டபோது, ஏதோ பொன்விழாதான் அங்கு கொண்டாடப் போகின்றனர் என்று நினைத்தேன். ஆனால், ஒரு ஏழ்மையான பெண்மணி காலை இழுத்து இழுத்து நடந்துவர அவளது தகப்பனார் அவள் குழந்தைகளைச் சுமந்து கொண்டு வந்தார். அக்குழந்தைகள் இரண்டோ அல்லது மூன்றோ அழுது கொண்டிருந்தன. மரித்த ஒரு ஸ்திரீக்கு அங்கே அந்தப் பெண்மணி நோன்பு செய்துகொண்டிருந்தாள். அதன் மூலம் அவள் பரலோகத்துக்கு செல்லலாம் என்று எண்ணிக்கொண்டாள். ஓ, என்னே ஒரு பரிதாபமான செயல்! 393 அப்பொழுது நான் அங்கு நின்று கவனித்துக் கொண்டிருந்தேன்…கத்தோலிக்க நாடுகளிலுள்ள சபை எல்லாவற்றையும் பறித்துக் கொள்வதால், ஜனங்களின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாயுள்ளது. இங்கே பாஞ்சோப்ராங் (Pancho Frank) என்னும் எளியவன் இருக்கலாம். அவன் ஒரு கொத்தனார் பணி செய்து, வாரத்திற்கு 20 பீசோக்கள் சம்பாதிக்கிறான். அவன் ஒரு ஜோடி பாதரட்சை வாங்க வேண்டுமென்றால் 20 பீசோக்கள் எல்லாம் தேவைப்படும். அதுதான் அவர்கள் பொருளாதார நிலையாகும். அங்கு கொத்தனார் பணி செய்கிற அவன் வாரத்திற்கு 20 பீசாக்கள் வாங்குகிறான் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அவன் எவ்வளவு வாங்குகிறான் என்று எனக்குத் தெரியாது. அத்தகைய பொருளாதாரநிலை இங்கிருந்தால் என்னாவாயிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். கவனியுங்கள், இப்பொழுது, அவன் வாரத்திற்கு இருபது பீசாக்கள் சம்பாதித்தால் எப்படியிருக்கும்.

177394 அங்கு சிக்கோ (chico) என்னும் புனைப்பெயர் கொண்டவன் வாரத்திற்கு 5 பீசாக்கள் சம்பாதிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்குப் பத்துக் குழந்தைகள் இருப்பார்கள். ஆனால் யாரோ ஒருவர் கதவைத்தட்டி, [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை அநேக முறைகள் தட்டுகிறார்—ஆசி.] அவன் பாவ நிவர்த்திக்கென்று பீடத்தின் மேல் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க வேண்டுமென்று சொல்லி, அவன் சம்பாதனையில் 4 பீசாக்கள் வாங்கிக்கொண்டு செல்வார். அந்தப் பீடம் லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்பு கொண்ட பொன்னினால் செய்யப்பட்டிருக்கும். அங்குதான் காரியம். அதுதான் அவர்களுடைய பொருளாதார நிலைமை. அந்தவிதமாகத்தான் தேசங்கள் இருக்கின்றன.

178395 அது எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறது. சபை எல்லாவற்றையுமே பிடுங்கிக் கொள்கிறது. ரோமன் கத்தோலிக்க சபை, அனைத்தையும் தன் கரங்களில் கொண்டுள்ளது. அவ்வளவே. அத்துடன் வேதம் கூறுகிறபடி யூதரின் செல்வமும் அவர்கள் செய்யும் உடன்படிக்கையின் மூலம் ஒன்று சேரும். 396 அப்பொழுது அந்திக்கிறிஸ்து மிருகமாக மாறுகிறான். அவன் உடன்படிக்கையை முறித்து பலாத்காரன் செய்கிறான். அவன் ஸ்திரீயின் சந்ததியில் மீதியாயுள்ளவர்களை பீறிட்டு, வாயினின்று வெள்ளத்தை ஊற்றிவிட்டு, அவர்களுடன் போரிடுவான். அப்பொழுது அழுகையும் புலம்பலும் உண்டாயிருக்கும். 397 அதே சமயத்தில் மணவாட்டி மகிமையில் கலியாணம் செய்து கொள்கிறாள். பாருங்கள்? நண்பனே! அதை இழந்துவிட வேண்டாம். நான்—நான் அங்கு இருப்பதற்குத் தேவன் தாமே ஒத்தாசை செய்வாராக. அதற்காக நான் என்ன கிரயம் செலுத்த வேண்டுமானாலும் பரவாயில்லை. எவ்வாறாயினும் நான்—நான் அங்கு இருக்க விரும்புகிறேன்.

179398 இப்பொழுது கவனியுங்கள். அந்திக்கிறிஸ்துவின் துன்புறுத்தல் யாவும் யாவும் பூமியில் நிகழ்வதற்கு சற்று முன்பு, தேவன் வாக்குத்தத்தம் செய்துள்ளார்… எல்லா ஸ்தாபனங்களும் மனவுறுத்தல் காரணமாக தங்களிடையேயுள்ள சபை பிரமாணங்களைக் குறித்த வித்தியாசத்தைப் பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், சத்தியமான வார்த்தையைக் கொண்ட ஒரு உண்மையான தீர்க்கதரிசியை ஒரு செய்தியுடன் அனுப்புவதாக தேவன் வாக்களித்துள்ளார். அவன் ஜனங்களை தேவனுடைய மூலவார்த்தைக்கும், “பிதாக்களின் விசுவாசத்திற்கும்” திருப்புவதனால், பரிசுத்த ஆவியின் வல்லமை பரலோகத்திலிருந்து அவர்கள் மத்தியில் இறங்கி, அவர்களுக்கு எடுக்கப்படுதலுக்கேற்ற வல்லமையை அளித்து, அவர்களை உட்பிரவேசிக்கச் செய்யும். ஆம். இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை அந்த வார்த்தை உறுதிப்படுத்தும் “இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன். நான் செய்த கிரியைகளையே நீங்களும் செய்வீர்கள். நான் உங்களுடனே இருப்பேன். இன்னும் கொஞ்சக் காலம், அதன் பிறகு அவர்கள் என்னைக் காணமாட்டார்கள்”. ஏனெனில் அவர்கள் ஸ்தாபனங்களை ஏற்படுத்திக்கொண்டு சிதறிப் போவார்கள். “ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் முடிவுபரியந்தம் உங்களோடுகூட இருக்கிறேன். உங்களுக்குள் இருப்பேன்”. முடிவில் தேவகோபாக்கினை ஊற்றப்படும் என்று அவர் கூறினார். அங்குதான் காரியம். ஓ, தேவனே.

180399 அந்த வெள்ளைக்குதிரையின் மேல் சவாரி செய்பவன் யார்? நீங்கள் இப்பொழுது குருடராயில்லை. அவன் யாரென்பதை உங்களால் இப்பொழுது காணமுடிகிறது. அவன் தான் அந்திக்கிறிஸ்து. ஏமாற்றும் அந்த ஆவி புறப்பட்டு ஸ்தாபனங்களில் நுழைந்துவிட்டது. தேவன் இவைகளை என் மூலம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்பதைப் பாருங்கள். ஒரு மனிதன் வெள்ளைக் குதிரையின் மேலேறி கையில் வில்லைப் பிடித்துக்கொண்டு, அம்புகளின்றி செல்வதை அவர் நமக்குக் காண்பித்தார். அவன் ஒரு பொய்க்காரன். அவனுக்கு வல்லமை எதுவுமில்லை, நீங்கள் “சபையின் வல்லமை” என்று கூறுகின்றீர்கள். அந்த வல்லமை எங்கே? அவர்கள் வல்லமை காணப்படும்படி என்ன செய்கின்றனர்? அவர்கள், “நாங்கள்தான் ஆதிசபை” என்கின்றனர். ஆதிசபை பிசாசுகளைத் துரத்தி, பிணியாளிகளை சொஸ்தமாக்கி, மரித்தோரை உயிரோடெழுப்பினது. அது தரிசனங்களைக் கண்டது. அவையெல்லாம் இப்பொழுது எங்கே? பாருங்கள்? பொய்க்காரன். அம்புகளில்லாமல் வில்லைப் பிடித்திருக்கிறான். ஊம்! அது உண்மை.

181400 ஆனால் கிறிஸ்து வெள்ளைக்குதிரையின் மேல் வரும்போது, அவர் வாயிலிருந்து மின்னல் வேகத்தில் ஒரு பட்டயம் புறப்பட்டுச் சென்றது என்பதை நீங்கள் பாருங்கள். அது அவர் விரோதிகளை அழித்து, பிசாசைக் கீழே தள்ளிற்று. அது எல்லாவற்றையும் வெட்டி வீழ்த்தியது. அவர் வஸ்திரம் இரத்தத்தில் தோய்க்கப்பட்டிருந்தது. அவர் தொடையில் “தேவனுடைய வார்த்தை” என்று எழுதப்பட்டிருந்தது. ஆமென். அவர் பரலோகத்திலிருந்து தம் சேனைகளுடன் இதோ அவர் வருகிறார்.

182401 ஆனால் வெள்ளைக்குதிரையின்மேல் சவாரி செய்யும் மற்றவனோ, எக்காலத்தும் பூமியில்தான் இருக்கிறான். அவன் அந்திக்கிறிஸ்துவாயிருந்து மாறுவான். அவன் அவ்வாறு மாறும்போது, ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாக மாறுவான். பாருங்கள்? அவன் முதலில் அந்திக்கிறிஸ்துவாக, ஆவியாக துவங்கினான். பின்னர் அவன் ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாக மாறுகிறான். அதன் பின்னர் பிசாசு கீழே தள்ளப்படும்போது, அவன் பிசாசாகவே மனிதனுக்குள் குடிகொள்கிறான். மூன்று கட்டடங்கள்—முதலாவதாக அவன் பிசாசின் ஆவியாயிருக்கிறான். பின்னர் கள்ளப்போதகத்தைப் போதிக்கும் கள்ளத்தீர்க்கதரிசியாக அவன் ஆகிறான். அடுத்ததாக அவன் பிசாசாகவே மனிதனுக்குள் குடிகொண்டு வருகிறான் பாருங்கள்? அவன் அவ்விதமாக இருக்கிறான். 402 இந்த பிசாசு பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டு ஒரு மனிதனுக்குள் குடிகொள்ளும் அதே சமயத்தில், பரிசுத்த ஆவியானவரும் மேலே சென்று மனிதருக்குள் வாசம செய்ய வருகிறார். ஆமென், ஓ. என்னே! என்னே ஒரு தருணம்!

183நாளை இரவு, தேவனுக்குச் சித்தமானால், நாம் இரண்டாம் முத்திரையைப் பார்ப்போம். 403 நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர். சகோதரன் பிரான்ஹாம் சிறிது நேரம் நிறுத்துகிறார்—ஆசி.] நான் கூறினதை இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [“ஆமென்”] 404 நான் இப்பொழுது ஒலிநாடாவை நிறுத்திவிட்டேன். நான் அதைக் கேட்கப் போகிறேன். நீங்கள் அதை அறிவீர்கள், பாருங்கள். ஆனால் நான் அதை எதிர்ப்பார்க்கிறேன்.

184405 சகோதரனே நான் ஒரு காரியத்தை உங்களுக்கு கூறட்டும். பரிசுத்த ஆவியானவர் எதற்காக எப்பொழுதும் ஸ்தாபனங்களுக்கு விரோதமாக என்னை எச்சரித்துக் கொண்டே வந்தார் என்பதை என் வாழ்நாளில் இன்று முதன் முறையான நான் நன்றாகப் புரிந்து கொண்டேன். இவைகளை தேவனாகிய கர்த்தர் எனக்கு காண்பித்ததற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன். அது சத்தியம் என்பதை நான் அறிவேன். இதோ இந்த இரகசியம் வெளிப்பட்டு விட்டது. அவன் காலங்கள்தோறும் சவாரி செய்து கொண்டே வந்து முடிவில் அவன் யாரென்பதை முற்றிலுமாக வெளிப்படுத்துகிறான். பாருங்கள், அது அவன்தான். இப்பொழுது நாமோ அதன் பேரில் வஞ்சிக்கப்படுகிறதில்லை. உங்கள் கண்கள் இப்பொழுது திறக்கப்பட்டுள்ளன. அவ்விதமான காரியங்களை விட்டு அகன்று செல்லுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரில் அன்புகூறுங்கள். அவரோடு நிலைத்திருங்கள். ஆம் ஐயா, பாபிலோனை விட்டு வெளியே வாருங்கள்! 406 [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.] மூன்று காரியங்கள்: வார்த்தையினால் நிரூபிக்கப்பட்டு, ஒரு புகைப்படத்தின் மூலம் காண்பிக்கப்பட்டு, ஆவியின் கிரியைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டு, அது வார்த்தையாயிருக்கிறது என்று ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது. 407 கர்த்தாவே, இந்த உறுமால்களின் மீது அந்த வார்த்தை வரட்டும். வியாதியஸ்தரை குணப்படுத்தும். கர்த்தாவே இப்பொழுது இங்கே சுகவீனமாயிருக்கிற ஒவ்வொரு நபரையும், அங்கே வெளியிலிருந்துகொண்டு கடிதம் மூலம் எழுதுபவர்களையும், தொலைபேசி மூலம் தொடர்பு கொள்பவர்களையும் குணப்படுத்தும். 408 பிதாவே இந்த வேளையில் நாங்கள் சுகமளிக்கும் ஆராதனையை தொடர்ந்து நடத்துகையில், இப்பொழுது சுகமாக்கப்பட வேண்டிய மற்றொரு சுகமளித்தல் உண்டு. ஆனால் கர்த்தாவே அது ஆத்துமாவாய் உள்ளது, அது ஒழுங்குடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். கர்த்தாவே, இந்தக் காரியங்கள் நிகழ வேண்டும். 409 தேவனே, கூறப்பட்டுள்ள இந்த வார்த்தைகளை இப்பொழுதே நீர் எடுத்து அவைகளை ஜனங்களுக்கு உண்மையாக்கித்தர வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, அவர்கள் அதைக் காணட்டும். பிதாவே நெருக்கப்பட்டிருக்கிற இந்த நேரத்திற்காக கூறப்பட்டுள்ள போதுமானவற்றை பரிசுத்த ஆவியானவர் தாமே எடுத்து அதை அவர்களுடைய இருதயங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். வேதவாக்கியங்களை குறித்துக்கொண்டிருக்கிறவர்கள் அவைகளை ஆராய்ந்து படிப்பார்களாக. செய்தியை ஒலிப்பதிவு செய்துகொண்டிருப்பவர்கள் அல்லது—அல்லது—அல்லது ஒலிநாடாக்களில் செய்தியை கேட்பவர்கள், அதை கூர்ந்து கவனித்துக் கேட்பார்களாக. மேலும் அதற்கு தங்களுடைய சொந்த வியாக்கியானத்தை அளிக்காமல் வார்த்தையை நன்கு ஆராய்ந்து படிப்பார்களாக. பிதாவே, இதை அருளும். நான் இவை எல்லாவற்றையும் உம்மிடத்தில், உம்முடைய மகிமைக்காக இயேசுவின் நாமத்தில் சமர்ப்பிக்கிறேன். ஆமென். 410 [ஒரு சகோதரன் தீர்க்கதரிசனமுரைக்கிறார். சபையோர் களிகூருகின்றனர்—ஆசி.] ஆமென். ஓ, உங்களுக்கு நன்றி. [சபையோர் தொடர்ந்து களிகூருகின்றனர்.] ஓ! 411 அவரை அறியாத எவரேனும் இங்கிருந்தால், இப்பொழுது அவரை ஏற்று மன்னிப்பை பெற்றுக்கொள்ளுங்கள். நேரடியான, கடுமையான கடிந்துகொள்ளுதலுக்கு செவிகொடுங்கள். நீங்கள் எப்போதாவது அவரண்டை நெருங்கி சேரவேண்டும் என்று எதிர்பார்த்தால், இதற்குப்பின் வரும் நாட்களுக்காக அதை இப்பொழுதே செய்யுங்கள். 412 அந்த முத்திரை உடைதலாய் அது இருந்திருந்தால் என்னவாகும்? அன்றொருநாள் அங்கே நின்றுகொண்டிருந்தபோது, அந்த மூன்று சாட்சிகளும் அருகில் நின்றுகொண்டிருக்க, அங்கே அனுப்பின தூதன், அந்த வெடிசத்தம் என்னை பூமியிலிருந்தே உயரத்தூக்கிச் சென்றது. “என்னை மேலே தூக்கிச் செல்லும் ஒரு வெடி சத்தம் உண்டாகும்” என்று நான் அங்கு போவதற்கு முன்பே அதை உங்களிடத்தில் நான் கூறினேன். எனவே நான் ஏழு தூதர்களால் மேலே தூக்கிச் செல்லப்பட்டு, கிழக்கே வந்தேன். அந்தக் காரியம் என்னை பூமியிலிருந்து தூக்கி குலுக்கியது போன்றிருந்தது. 413 டூசானில் அது நிகழ்ந்தபோது என்னோடு அப்போது நின்றுகொண்டிருந்த சகோதரன் நார்மன், சகோதரன் பிரட் சாத்மன் அவர்களோ அது சரிதானே? அங்கே…தரிசனத்தில் கூறப்பட்ட விதமாகவே நான் என்னுடைய துணியில் ஒட்டிக்கொண்டிருந்த ஒட்டு முள்ளை எடுத்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது டூசானில்…அது உண்மையானால் சகோதரன் பிரட், சகோதரன் நார்மன் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். அவர்கள் அங்கிருக்கிறார்கள். நீங்களும் அங்கிருந்த சாட்சிகள் என்பதை ஜனங்கள் காணும்படியாக உங்களுடைய காலூன்றி எழும்பி நில்லுங்கள். நான் என் ஜீவியத்தில் அதைப் போன்ற எந்தக் காரியத்தையுமே கேட்டதேயில்லை. 414 உடனே அதற்கு பின்னர் அவர்கள் அந்நாள் முழுவதுமே வேட்டையாடவில்லை. அதற்கு அடுத்தநாள் காலையில் நான் பிரட் அவர்களை வேண்டினேன். அவர் இதை அறிந்திருக்கவில்லை. நான் அவரை வேட்டையாடச் செல்லும்படி தொடர்ந்து வேண்டிக்கொண்டேயிருந்தேன், “போய் வேட்டையாடுங்கள், போய் வேட்டையாடுங்கள்” என்று தொடர்ந்து கூறிக்கொண்டேயிருந்தேன். 415 ஆனால் தேவன் கூறியிருந்தார், “அவர் வேட்டையாட செல்லமாட்டார் என்றும், நீயோ அப்பொழுது கிழக்கு நோக்கி போய்க்கொண்டிருப்பாய்” என்று முன்பே அவர் என்னிடத்தில் கூறியிருந்தார். 416 அந்த ஏழு தூதர்கள். முதலில் வெடிசத்தம் உண்டானது. ஆம். அது என்ன? நாம் கடைசி மணிவேளையில் இருக்கிறோம். பார்த்தீர்களா? நான் நேசிக்கிறேன்… நாம் அவரை ஆராதிப்போமாக. நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் என்னை முதலில் நேசித்தார். நாம் எழுந்து நிற்போம். சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தினாலே. 417 சகோதரர்களே, நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், இப்பொழுது நம்முடைய இருதயங்களை நாம் சுத்திகரிப்போமாக. என் சகோதரிகளே, நான் உங்களிடத்தில் பயபக்தியுண்டாக பேசியிருக்கிறேன். ஆனால் நான் அதை தேவ அன்போடு செய்துள்ளேன். நான் உங்களை நேசிக்கின்ற காரணத்தால் நீண்ட தலைமுடியை வைத்துக்கொள்ளுதல், சரியாக உடை உடுத்துதல், சரியாக செயல்படுதல் போன்றவற்றைக் குறித்துப் பேசியிருக்கிறேன். தேவ அன்பின் நிமித்தமாகவே நான் அதை செய்துள்ளேன். தேவனுடைய வெண்மையாக்கும் திரவம் இருக்கும்போதே நாம் நம்முடைய மனசாட்சியை சுத்தமாக்கிக்கொள்வோமாக. 418 இன்று காலையே ஒருகால் மிகவும் தாமதமானதாயிருக்கலாம். அவர் புறப்பட்டு வரலாம். சகோதரர்களே, இந்தக் காரியங்கள் இந்தவிதமாக நிகழும்போது, அது மத்தியஸ்த ஊழியத்தின் முடிவாயிருக்கலாம். அதைக் குறித்து நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? அதுதான் என்று எனக்குத் தெரியாது. அதுதான் என்று நான் கூறுகிறதில்லை. ஆனால் அப்படி இருந்தால் என்னவாகும்? அப்படியிருந்தால் என்னவாகும்? அதைக் குறித்து என்ன? அப்பொழுது மீட்பே இனிமேல் இருக்காது, அந்த நேரத்தில் அது போய்விட்டிருக்கும். அது முடிந்துவிடவில்லை என்று நான் நம்புகிறேன். ஆனால் அது உள்ளது என்ற ஒரு சாத்தியம் உண்டு. நான் அவரை நேசிக்கிறேன், நான்… கர்த்தாவே, எங்களை சுத்திகரியும். [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.] …அவரை நேசிக்கிறேன், ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார். சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே. 419 கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! தேவனுக்கு மகிமை! நான் அந்த இனிமையான உணர்வை விரும்புகிறேன். நீங்கள் அதை உணருகிறதில்லையா? பரிசுத்த ஆவியானவர் உங்களை அபிஷேகித்து, அந்த இனிமையான உணர்வோடு சுற்றி வருகிறார். ஓ, எவ்வளவு அற்புதமானது! ஓ, அவருடைய இரக்கத்தைக் குறித்து சிந்தியுங்கள். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார். சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே. 420 நண்பனே, அதை மறந்துவிடாதே. அதை மறந்துபோகாதே. அதை வீட்டிற்கு உன்னோடு கொண்டு செல். அதனோடு தரித்திரு. அதை உன்னுடைய தலையணையின்மேல் படுத்திருக்கும்போதும் நினைவில் வைத்து பற்றிக்கொண்டிரு. அதை மறந்துவிடாதே. அதனோடு தரித்திரு. இப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய போதகர் சகோதரன் நெவில். 