1 மாலை வணக்கம், நண்பர்களே, நீங்கள் விரும்பினால், நாம் எல்லோரும் ஜெபத்திற்காக சற்று நேரம் எழுந்து நிற்போமாக. 2 எங்கள் பரமபிதாவே, நாங்கள் மறுபடியும் கர்த்தருடைய ஊழியத்தில் இன்றிரவு பயபக்தியுடன் இக்கூடாரத்தில் கூடியுள்ளோம். எங்களில் இருவர் அல்லது மூவர் எங்கு கூடினாலும், அவர்கள் மத்தியில் பிரசன்னராய் இருப்பதாக நீர் வாக்களித்திருக்கிறீர். உமது நாமத்தில் நாங்கள் கூடிவந்திருக்கிறபடியால் எங்கள் மத்தியில் நீர் இருக்கிறீர் என்ற நிச்சயம் எங்களுக்குண்டு. 3 இப்பொழுது பிதாவே, இன்றிரவு நீர் வந்து எங்களுக்கு இந்த இரண்டாம் முத்திரையை உடைத்துத் தருமாறு நாங்கள் ஜெபிக்கிறோம். அந்தப் புலவன், தான் காலமாகிய திரைக்குப் பின்னால் இருப்பதை காண விரும்பியதுபோல, கர்த்தாவே, நாங்களும் காலத்தின் திரைக்குப் அப்பால் என்ன உள்ளது என்பதை காண வேண்டுமென்பதே எங்கள் வாஞ்சையாக உள்ளது. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் தாமே இப்பொழுது எங்கள் மத்தியில் வந்து, முத்திரையை உடைத்து, நாங்கள் அறிந்துகொள்ள வேண்டியவைகளை எங்களுக்கு வெளிப்படுத்தித் தருமாறு வேண்டுகிறோம்.
24 கிறிஸ்துவின் இந்த மகத்தான ஐக்கியத்தில் இதுவரை பிரவேசிக்காத யாராவது இன்றிரவு இங்கிருந்தால், கர்த்தாவே, அவர்கள் இன்றிரவு நித்தியத்திற்கேற்ற அந்த தீர்மானத்தைச் செய்து, தேவஆவியினால் நிறையப்பட வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். 5 பிதாவே, வியாதியஸ்தர் யாராவது இங்கிருந்தால், நீர் அவர்களை சுகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இங்கு அநேக உறுமால்கள் வைக்கப்பட்டுள்ளன. பரிசுத்த பவுலின் காலத்தில் அவனுடைய தேகத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் எடுத்து பிசாசு பிடித்தவர்களின் மேல் போட, அசுத்த ஆவி அவர்களை விட்டு நீங்கிப்போய் அவர்கள் சுகமடைந்ததாக நாங்கள் வேதத்திலிருந்து அறிகிறோம். அதை நினைவுபடுத்திக்கொண்டு என் கைகளை இவ்வுறுமால்களின்மேல் வைக்கிறேன். 6 கர்த்தருடைய வருகை வெகு சீக்கிரத்தில் உள்ளது என்பதை நாங்கள் காண்கிறோம். அந்த நேரம் அருகாமையில் வந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் அறிகிறோம். ஆயிரத்து தொள்ளாயிரம் வருடங்களுக்குப் பின்பு இவையாவும் மறுபடியும் சபைக்குத் திரும்ப வந்துள்ளது. 7 இப்பொழுதும் பிதாவே, நாங்கள் கேட்கிறவைகளை நீர் அருளிச் செய்ய வேண்டுமாய் நாங்கள் உம்மிடம் மன்றாடுகிறோம். கர்த்தாவே, உம் தாசனைப் பலப்படுத்தும். எல்லாவிடங்களிலுமுள்ள உமது ஊழியக்காரர்களுக்கு ஒத்தாசை செய்யும். முக்கியமாக, விசேஷமாக இன்றிரவு இங்கு கூடி வந்திருக்கிற எங்களைப் பலப்படுத்தி, நாங்கள் வார்த்தையை ஏற்றுக்கொள்ள உதவி செய்யும். நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.
38 இன்றிரவு கர்த்தருடைய வீட்டுக்கு மறுபடியும் வந்திருப்பது மிகவும் நல்லது. அநேகர் நின்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதை நான் அறிவேன். நான்—நான் அதற்காக வருந்துகிறேன். ஆனால் இதைக் குறித்து நாங்கள் வேறொன்றும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். முன்னூறு அல்லது நானூறு பேர் அதிகம் கொள்ளத்தக்கதாய், இக்கூடாரத்தை நாங்கள்—நாங்கள் விஸ்தரித்தோம். ஆனால் இத்தகைய விசேஷித்த கூட்டங்கள் நடைபெறும்போது, கூட்டம் சற்று அதிகமாகவே உள்ளது.
49 இப்பொழுது, ஓ, முத்திரைகளைக் குறித்துப் படித்து, ஜெபிப்பதனால் எனக்கு இது ஒரு நல்ல தருணமாக அமைந்துள்ளது. உங்களுக்கு அது அவ்வாறே இருக்கும் என்று நான் நம்புகிறேன். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அது உங்களுக்கு அவ்வாறே இருக்கிறது என்று நான்—நான் நிச்சயமுள்ளவனாய் இருக்கிறேன். இது எனக்கு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமாக உங்களுக்கும் இருக்கும் என்று கருதுகின்றேன். ஆகையால் இது உங்களுக்கு ஒரு மகத்தான தருணம். நான் ஒரு… 10 ஆராதனை முடிந்தவுடன் என்னுடைய பெண் சிநேகிதி ஒருவளை முன்னால் வரும்படி அழைக்க விரும்பிகிறேன். இன்று அவளுடைய பிறந்தநாள். அவள் தான் என் மகள் சாராள், அவளுக்கு இன்று பன்னிரண்டாவது பிறந்தநாள். அதன்பின்னர் அடுத்தபடியாக நாளை கழித்து பெக்கியின் (Becky) பிறந்தநாள். அவளையும் நான் முன்னால் வர அழைக்க வேண்டும்.
511 இன்றிரவு நாம் இந்த இரண்டாம் முத்திரையைப் படிக்கப்போகிறோம். முதல் நான்கு முத்திரைகளுக்கு, குதிரை சவாரி செய்யும் நால்வர் உண்டு. இன்று சம்பவித்த ஒன்றை நான் உங்களுக்கு மறுபடியும் எடுத்துக்கூற விரும்புகிறேன். அநேக வருடங்களுக்கு முன்பு நான் செய்தியளித்த பழைய குறிப்புகளை ஆசனத்தில் அமர்ந்துகொண்டு நோக்கியவாறு, “என்னால் முயன்றவரை அப்பொழுது நான்—நான் செய்தியளித்தேன்” என்று நினைத்துக்கொண்டேன். புத்தகங்களை எழுதிய அநேக ஆசாரியர்களையும், மற்றவைகளையும் குறித்து, “நல்லது, நான் சிறிது நேரம் படித்து, ஆராய்ந்து, இதையும், அதையும் பார்ப்பேன்”, என்று நான் எண்ணினேன். அப்பொழுது முதல் காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அப்பொழுது ஒரு காரியம் சம்பவித்தது. அது முற்றிலும் வித்தியாசமாயிருந்தது. அது வித்தியாசமாக வருகின்றது. நான் உடனே ஒரு பென்சிலை எடுத்து அவர் அங்கு இருக்கும்போதே என்னால் முடிந்தளவு வேகமாக எழுதத் தொடங்கினேன்.
612 ஓ! அரைமணி நேரத்துக்கு முன்பு முக்கியமான ஒன்று சம்பவித்தது. நான் இங்கு வரும்போது சகோதரன் உட் (Bro.Wood) என்பவரிடம் சில நிமிடங்களுக்கு முன்பாக அதைக் கூறிக்கொண்டிருந்தேன். ஆனால் ஏதோ ஒன்று, நீங்கள் அறிவீர்களா? நான் உங்களுக்கு எடுத்துரைக்கக்கூடாத அநேக காரியங்கள் சம்பவிக்கின்றன என்று நீங்கள் அறிவீர்கள். ஆனால் சம்பவித்த ஏதோவொன்று எனக்கு அதிகமாக உதவினது. 13 இக்கட்டிடத்தில் இங்கே என் நண்பர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். நீங்கள் எல்லாருமே என் நண்பர்கள்தான். நான் குறிப்பிடும் இந்த நண்பர் சகோதரன் லீவேயில் (Bro.Lee vayle), அவர் ஒரு விலையேறப்பெற்ற சகோதரன், மேலும் அவர் வேதத்தை மிகவும் நன்றாகப் படித்தவர். டாக்டர் வேயில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்ற பாப்டிஸ்ட். அவர் ஒரு…நான்: இதை வெறும் புகழ்ச்சியாகக் கூறவில்லை. உண்மையாக நான் அவ்வாறு கருதுவதனால் இதைக் கூறுகிறேன். நம் வரிசையில், நான் அறிந்தவரையில், அவர் வேதத்தில் அதிநிபுணத்துவம் பெற்றவர்களில் ஒருவராக இருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். அவர் ஒரு சிறு குறிப்பு எழுதி பில்லியின் (Billy) மூலம் எனக்கனுப்பினார். ஆனால் பில்லியோ எனக்கு சிறிதளவும் படித்துக் காண்பிக்க முடியாதவனாய் இருந்தான். நான் நினைக்கிறேன்…நான் இதை இன்னும் படிக்கவில்லை ஆனால் அவர் என்ன எழுதியுள்ளார் என்பதை உங்களிடம் கூற விரும்புகின்றேன். அவர் இங்கிருப்பாரானால், சகோதரன் லீவேயில், நான் அதை ஆறு மாதங்களுக்கு முன்பே படித்திருக்கிறேன்.
714 சகோதரன் வேயில் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். “எனக்குத் திட்டவட்டமாய் தெரியாது. பாலிகார்ப் (Polycarp) பரிசுத்த யோவானின் மாணாக்கன் என்று நினைக்கிறேன்.” அது உண்மைதான். “ஐரினேயஸ் (Irenaeus) பாலிகார்ப்பின் மாணாக்கன் என்றும் நினைக்கிறேன்.” அது மிகவும் சரியே. “ஐரினேயஸ் ‘தெரிந்து கொள்ளப்பட்ட கிறிஸ்துவின் சரீரத்தின் கடைசி அங்கத்தினர் அதில் உட்பிரவேசித்த பிறகு, இயேசு மறுபடியும் வருவார்’” என்று கூறியுள்ளார். 15 கிறிஸ்துவின் மரணத்திற்குப் பிறகு ஏறக்குறைய நானூறு வருடங்களுக்குப் பின்னர் ஐரினேயஸ் இவ்வாறு கூறியிருந்தார். அவர் “முடிவு காலம் வரும்போது…” என்றார், இப்பொழுது, அது நிசாயா மாநாட்டுக்கு முன்பு (Pre Nicaea Council) என்னும் தலைப்பு கொண்ட புஸ்தகத்தில் உள்ளது. வேதத்தை ஆராய்கின்ற இங்குள்ளவர்களுக்கு…வேத வரலாற்றை ஆராய்கின்றவர்களை நான் என் கருத்தில் கொண்டு கூறுகிறேன் …நீங்கள்—நீங்கள் இதை நிசாயாமா நாட்டுக்கு முன்பு (Pre Nicaea Council) என்னும் தலைப்பு கொண்ட புத்தகத்தில் முதலாம் அல்லது இரண்டாம் பகுதியில் காணலாம். இப்பொழுது ஐரினேயஸ் அநேக வருடங்களுக்கு முன்பு அதைக் கண்டு, “தெரிந்து கொள்ளப்பட்ட கடைசி அங்கத்தினன் உட்பிரவேசிக்க வேண்டுமென்று” சொல்லியிருக்கிறார்.
816 தெரிந்து கொள்ளப்படுதல், அழைக்கப்படுதல் என்பது சமீப காலத்தில் எழுந்த ஒரு போதகமென்று ஜனங்கள் நினைக்கின்றனர். என்னே! உண்மையாக, தெரிந்து கொள்ளப்படுதல், அழைக்கப்படுதல் என்பது, பழமையான போதகங்களில் ஒன்றாகும். உண்மையான வேத மாணாக்கர் ஐரேனியஸ் தெரிந்து கொள்ளுதல் என்பதில் எப்பொழுதும் விசுவாசம் கொண்டிருந்தார். 17 நாம் ஆராய்ந்ததுபோல, ஐரேனியஸ் சபையின் தூதர்களில் ஒருவர் என்பதை நாம் பார்த்தோம். நாம் விசுவாசிக்கிறோம். இப்பொழுது, அவைகள் யாவும் உண்மையாகவே இரகசியங்களாயிருந்தன. நீங்கள் பாருங்கள்? தேவ இரகசியங்கள் யாவும் இந்த முத்திரைகளின் கீழ் மறைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் பாருங்கள். கடைசி நாட்களில் அவைகள் முழுமையாக வெளிப்பட வேண்டும். அவைகள் பவுலின் காலத்தில் ஆரம்பித்து, ஐரினேயஸ், மார்டின் இன்னும் மற்றவர் வழியாய் வந்து, இந்தக் கடைசிக் காலத்திற்கு வந்துள்ளது.
918 இப்பொழுது நமது முயற்சியைக் கர்த்தர் இன்றிரவு ஆசீர்வதிப்பாரென்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். முதலாம் முத்திரை—நான் நிச்சயமாகவே அதை கண்டு அதிக மகிழ்ச்சியுற்றேன். முதலாம் முத்திரை, அது எனக்கு ஆசீர்வாதத்தையும் அளித்தது. 19 ஆகவே, இப்பொழுது நான் நீண்ட நேரம் உங்களைப் பிடித்து வைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் சில நாட்கள் கழித்து இக்கூட்டங்கள் முடிவுபெற்ற பின்னர்—இன்னும் சில இரவுகள் கழித்து நான் மீண்டும் இங்கிருந்து போய்விடப் போகிறேன். நீங்கள் பாருங்கள், ஆகையால் நீங்கள் சிறிது கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. நான் மெச்சுகிறேன்…
1020 சகோ.ஜூனியர் ஜாக்ஸன் அங்கு நின்று கொண்டிருப்பதைக் காண்கிறேன். நான்… சில வினாடிகளுக்கு முன்பு இங்கு எங்கோ சகோதரன் ரடலைக் (Bro.Ruddell) கண்டேன் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் நம்முடன் ஐக்கியங்கொண்ட சபைகளின் போதகர்கள். அவர்கள் தங்கள் ஆராதனைகளை விட்டு வந்து இங்கு கலந்து கொள்வதை நான் உண்மையாகவே பாராட்டுகிறேன். சகோதரன் ஹுப்பர் சுவற்றில் சாய்ந்த வண்ணம் அங்கு நின்று கொண்டிருக்கின்றார் என்று நான் நினைக்கிறேன். அவர் ஊடிகா (Utica) சபையினின்று வந்திருக்கிறார். இதற்கான உங்களுடைய அருமையான ஒத்துழைப்பை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
1121 இப்பொழுது, நாம் சபையின் காலங்களைக் குறித்து போதித்தவாறே, கடந்த மாலையிலிருந்து ஏழு முத்திரைகளைக் குறித்து போதித்துக் கொண்டிருக்கிறோம். சென்றமுறை நான் சபையின் காலங்களைப் போதித்து முடித்த பின்பு, பிரசங்க பீடத்திலிருந்து அதை விவரிக்க கரும்பலகையில் இங்கே வரைந்து காண்பித்தபோது, என்ன நிகழ்ந்தது என்பது உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? அவர் இறங்கி வந்து ஒரு ஒளியின் ரூபத்தில் சுவற்றண்டை சென்று, சுவற்றில் அவர் தாமே நாம் எல்லோருக்கும் முன்பாக அதை வரைந்து காண்பித்தார். கர்த்தருடைய தூதன் அச்சமயம் இங்கு நூற்றுக்கணக்கான ஜனங்களுக்கு முன்பாக நின்றார். 22 இப்பொழுதும்கூட இயற்கைக்கு மேம்பட்டவைகளை அவர்—அவர் செய்துக் கொண்டு வருகிறார். ஆகையால் மகத்தான காரியங்கள் சம்பவிக்குமென்று நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அடுத்தபடியாக என்ன நிகழவிருக்கிறது என்பதை நாமறியோம்…ஆனால் அதற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது நமக்கு அவர் எவ்வளவு மகத்தான தேவனாயிருக்கிறார். எவ்வளவு அதிசயமானவர்! நாம் அவரை அவ்வளவாய் பாராட்டிட கடமைப்பட்டுள்ளோம்.
1223 இப்பொழுது நான் முதலிரண்டு வசனங்களைப் படிக்கிறேன். அதன் பின்பு நாம் இரண்டாம் முத்திரையைக் குறித்த மூன்றாம், நான்காம் வசனங்களைப் படிக்கலாம். அதன்பின் ஐந்தாம், ஆறாம் வசனங்கள் மூன்றாம் முத்திரையைப் பற்றியவை. பிறகு ஏழாம், எட்டாம் வசனம்…குதிரை சவாரி செய்யும் ஒவ்வொருவனுக்கும் இரண்டு வசனங்கள். இப்பொழுது இந்த நபர்கள் எப்படிப்பட்டவர்கள்…என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மங்கின நிறமுள்ள குதிரையின் மேலேறியிருப்பவனை நீங்கள் கவனியுங்கள். குதிரையின் மேலிருக்கிறவன் குதிரைகளை மாற்றிக் கொண்டே வருகிறான்.
1324 அதன்பின்பு, தேவனுக்கு சித்தமானால், அடுத்த ஞாயிறு இரவு அந்த மகத்தான திறக்கப்பட வேண்டிய ஏழாம் முத்திரையே! அப்பொழுது நிகழ்ந்த ஒரே சம்பவம் “பரலோகத்தில் அரைமணி நேர அமைதலாகும்”. அதை நாம் அறிந்துகொள்ள தேவன் உதவி செய்வாராக! 25 இப்பொழுது நான் மூன்றாம் வசனத்தைப் படிக்கிறேன். அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக் கேட்டேன். அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது… (நான்காம் வசனம்) … அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப்போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
1426 இப்பொழுது ஜீவனானது யோவானிடம், “நீ வந்துபார்” என்று சொன்னது. அது ஒரு இரகசியமான காரியம். அது என்னவாயிருந்தது என்று யோவான் காணவில்லை. யோவான் ஒரு அடையாளத்தை மட்டும் கண்டான். அந்த அடையாளம், அதன் காரணம்…“வந்துபார்” என்று அவர் சொன்னார். ஆனால் அவன் ஒரு அடையாளத்தைக் கண்டான். அவன் அந்த அடையாளத்தை அவர்கள் கவனிக்கும் வகையில் சபைக்கு அறிவிக்க வேண்டும். கடைசி காலத்தில் முத்திரைகள் திறக்கப்படும்போது, இதன் இரகசியம் வெளியாக வேண்டும்.
1527 இப்பொழுது முத்திரைகள் யாவும் திறக்கப்படும் என்பது உங்களுக்கெல்லாருக்கும் புரிகின்றதா? பாருங்கள்? இக்காலத்தில் வாழ்வதற்காக நீங்கள் மகிழ்ச்சியுறுகிறீர்கள் அல்லவா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] நண்பர்களே, அது மாத்திரமல்ல. பாருங்கள்? அனைத்துமே எளிமையை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று கடந்து ஞாயிறு காலை செய்தியை நீங்கள் எப்பொழுதும் ஞாபகங்கொள்ள வேண்டும். பாருங்கள்? எல்லாம் எளிமையில், தாழ்மையில் நிகழ்வதால் ஜனங்கள் அதைக் கடந்து சென்று அது நிகழ்வதை அறியாமற் போகின்றனர். 28 நாம் கர்த்தருடைய வருகையை எதிர்நோக்கியிருக்கிறோம் என்பது நினைவிருக்கட்டும். அவர் எந்த நேரத்திலும் வரக்கூடும். எடுக்கப்படுதலும் அவ்விதமாகவே சம்பவிக்கும் என்று நான் உங்களிடம் கூறினேன். அது சம்பவித்ததை யாருமே அறியமாட்டார்கள். அது அவ்விதமாகவே வரும். பாருங்கள்? சாதாரணமாக…நாம் வேதத்தின் வாயிலாக அது எவ்விதமாக நிகழ்கிறது என்பதைக் கண்டு கொள்ளலாம். பாருங்கள்? 29 கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இவ்வுலகில் தோன்றிய அப்பெரிய நிகழ்ச்சியும் அவ்வாறே நிகழ்ந்தது. அவர் யாரென்பதை யாருமே கண்டு கொள்ள முடியவில்லை. “அவர் பைத்தியக்காரரெனென்று” ஜனங்கள் கருதினர். சபைகள் அவரை, “ஒரு மதவெறியன்…உண்மையாகவே ஒரு பைத்தியக்காரன்” என்கின்றனர். “அவர் ஒரு புத்தி சுயாதீனமில்லாதவர்” என்றனர். மேலும், “நீ புத்தி சுயாதீனமில்லாதவன் என்று நாங்கள் சுயாதீனமில்லாதவர்” என்றனர். பைத்தியம் என்றால் “அறிவிழந்தவன்” என்று அர்த்தம். வேறு சிலர், “உனக்குப் பிசாசு பிடித்திருப்பதால் நீ பைத்தியக்காரனாயிருக்கிறாய். நீ எங்களுக்கு போதிக்க முயற்சிக்கிறாயா? தவறான முறையில் பிறந்துள்ளாய். நீ வேசித்தனத்தில் பிறந்தாய். நீயா தேவாலயத்தின் ஆசாரியர்களாகிய எங்களுக்குப் போதிப்பது?” என்றனர். நல்லது, என்னே…அதை அவர்கள் நிந்தையாகக் கருதினர்.
1630 ஏசாயா தீர்க்கதரிசி தொடங்கி மல்கியா தீர்க்கதரிசி வரை எழுநூற்று பன்னிரண்டு வருட காலமாக யோவான் ஸ்நானன் வருவான் என்பதைக் கண்ட தீர்க்கதரிசிகள் அவ்விதமே அவனைக் குறித்தும் தீர்க்கதரிசனம் உரைத்தனர். அவனுடைய வருகையை அவர்கள் எந்நேரமும் எதிர்நோக்கியிருந்தனர். ஆனால் அவனோ வந்து, பிரசங்கித்து, ஊழியம் செய்து மகிமையில் பிரவேசித்தான். 31 அப்போஸ்தலர்களும்கூட அவன் யாரென்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் அவனைக் குறித்துக் கேட்டனர். “மனுஷகுமாரன் எருசலேமுக்குச் சென்று பாடுபட வேண்டுமென்று” இயேசு கூறினபோது, அவர்கள் இயேசுவிடம் “‘எலியா முந்தி வரவேண்டுமென்று’ வேதம் உரைக்கின்றதே?” என்று கேட்டனர். 32 அதற்கு, இயேசு “எலியா முந்தி வந்தாயிற்று. ஆனால் நீங்கள் அவனை அறிந்துகொள்ளவில்லை. அவன் என்ன செய்வானென்று வேதம் கூறுகின்றதோ, அதை அவன் அப்படியே செய்தான்” என்றார். “அவனுக்கு என்ன செய்ய வேண்டுமென்று குறிக்கப்பட்டிருந்ததோ, அவர்கள் அதை அவனுக்குச் செய்தார்கள்” பாருங்கள்? அவர்கள் அது யாரென்று அறிந்துகொள்ள இயலவில்லை. இயேசு, “அவன்தான் யோவான் ஸ்நானன்” என்றார்.
17“ஓ!” அப்படியா, என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர். உடனே அவர்கள் விழித்தெழுந்தனர். அவர்கள்… 33 அவ்வாறே இயேசுவும் அநேக அற்புதங்களைச் செய்த போதும், மக்கள் அவரைக் கண்டு கொள்ளத்தவறினர். அவர் அவர்களிடம் “என்னிடம், பாவம் அவிசுவாசம் உண்டென்று உங்களில் யார் சொல்லக்கூடும்? நான் உலகில் வரும்போது என்னுடைய உத்தியோகம் இவ்வாறு செய்யும் என்று வேதம் உரைத்துள்ள செயல்களை நான் செய்யாமலிருக்கிறேனோ? அப்படியானால் நான் எதில் பாவம் செய்துள்ளேன் என்பதைக் காண்பியுங்கள். பாருங்கள்? இப்பொழுது நீங்கள் யாரென்பதை நான் பகுத்தறிந்து சொல்லுகிறேன். அப்பொழுதாவது நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா அல்லது இல்லையா என்று பார்ப்போம்” என்றார். பாருங்கள். அவர், “நான் வரும்போது நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியவராய் இருந்தீர்கள்”, என்று அவர் கூறியிருப்பார். ஆனால் அவர்களோ அவரை விசுவாசிக்கவில்லை. பாருங்கள்? அவர் புரிந்த செயல்களை அவருடன் இணைந்து நோக்கி, அவர் யாரென்பதை அறிந்து கொள்ள அவர்கள் முயலவில்லை. ஆனால் அவரோ, “என்னில் பாவம் உண்டென்று யாரால் குற்றஞ்சாட்டக்கூடும்? பாருங்கள்? அது என்ன கூறிற்றோ, அதை நான் செய்யாமல் போனேனா?” என்றார்.
1834 அப்போஸ்தலர்களும்கூட அவருடைய செயல்களைக் கண்டு இடறினர். வேதம் எப்படி அதைக் கூறுகின்றது என்பதை நாம் அறிவோம். ஆனால் அதன்பின்னர் “இப்பொழுது நாங்கள் விசுவாசிக்கிறோம். நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், எந்த மனிதனும் உமக்குப் போதிக்க வேண்டிய அவசியமில்லையென்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்றனர். 35 இப்பொழுது, நான் அவருடைய முகத்தைப் பார்த்திட விரும்பியிருப்பேன். அவர் அவர்களை நோக்கி, “நல்லது, இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கடைசியில் அது உங்கள் மேல் உதித்துவிட்டது”, என்று கூறியிருக்க வேண்டும். நல்லது, அந்த வேளை வரையில் அது அவர்…தேவன் எல்லாவற்றையும் நன்மைக்கேதுவாக நடத்துகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான்—நான் அதற்காக அவரை நேசிக்கிறேன்.
1936 ஆனால் நாம் இப்பொழுது நம்முடைய காலத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இவைகளையெல்லாம் குறித்துப் பேசிக்கொண்டே போனால், முத்திரைகளைப் பற்றி சிந்திக்க நமக்கு சமயமிராது. 37 இப்பொழுது நினைவிருக்கட்டும், வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டுமென்று அநேக விண்ணப்பங்களை நான் பெற்றுக்கொண்டிருக்கிறேன். எனக்கு வருகின்ற ஒவ்வொரு விண்ணப்பத்திற்காகவும் நான் எல்லா நேரங்களிலும் ஜெபித்துக்கொண்டு வருகிறேன். உறுமால்களையும் ஜெபித்து அனுப்புகிறேன். நாம் இந்த முத்திரைகளில் கடைசி முத்திரைவரையில் நாம் முடித்துவிட்டால், ஞாயிறு காலையில்… கர்த்தருக்குச் சித்தமானால் நாம் பிணியாளிகளுக்காக நல்ல பழமைகால பாணியிலான சுகமளிக்கும் ஆராதனை ஒன்று நடத்தலாம். காலை முழுவதையும் அவர்களுக்காக ஜெபிப்பதில் நாம் செலவிடலாம். அது ஒரு விநோதமான சுகமளிக்கும் ஆராதனையாக இருக்கும் என்று நான்—நான் அதிக நிச்சயமுடையவனாயிருக்கிறேன். பாருங்கள்? நான் அவ்வித உணர்வு உடையவனாயிருக்கிறேன். நீங்கள் பாருங்கள். அது விநோதமாக இராது. அது சற்று விசித்திரமாக ஒரு சிலருக்குத் தோன்றலாம் என்று நான் கருதுகிறேன். பாருங்கள்.
2038 இப்பொழுது இந்த நாளில் அவருடைய இரகசியங்களை நமக்கு வெளிப்படுவதற்கு தேவனுடைய கிருபை எவ்வளவு மகத்துவமுள்ளதாயிருக்கிறது! இப்பொழுது, நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமென்று நாமெல்லாரும் விசுவாசிக்கிறோம். நாம் அதை விசுவாசிக்கிறோம். இந்த கடைசி நாட்களில்தான் இரகசியங்கள் வெளிப்பட வேண்டும் என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். அவர் தமது வார்த்தையை தமது இரகசியங்களை எவ்விதம் வெளிப்படுத்துகிறா? வேதம் கூறியுள்ளது. அவர் எங்கே அதைக் கூறுகிறார் என்பதை வாசிக்க நீங்கள் விரும்புகிறீர்களா? நாம் சற்று திரும்பி அவர் தமது இரகசியங்களை எவ்விதம் வெளிப்படுத்துகிறார் என்று பார்ப்போம். 39 நீங்கள் ஆமோஸைப் படிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஆமோஸ் புஸ்தகத்திற்கு வேதத்தைப் திருப்பி, ஆமோஸ் 3-ஆம் அதிகாரம், 7-ஆம் வசனத்தை வாசிக்க நான் விரும்புகிறேன். அது சரி. நான் 6-ஆம் வசனத்தையும்கூட வாசிக்க விரும்புகிறேன். ஊரில் எக்காளம் ஊதினால், ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ? கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.
2140 இப்பொழுது இக்கடைசி நாட்களில் ஒரு—ஒரு தீர்க்கதரிசி எழும்புவானென்று தீர்க்கதரிசனம் நமக்கு முன்னறிவிக்கப்பட்டுள்ளது. 41 இப்பொழுது, பலவிதமானவைகள் நம்மிடையே இருந்தன என்று நமக்குத் தெரியும். இப்பொழுது, நான் இன்றிரவு இங்கு சுற்றிலும் பார்த்தபிறகு, அநேக வேதமாணாக்கர் அமர்ந்துள்ள இடத்தில் நான்—நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று அறிகிறேன். என்னை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று நான்—நான் விரும்புகிறேன். இந்த ஒலிநாடாக்களும் (tapes) ஏறக்குறைய உலகத்தின் எல்லா பாகங்களுக்கும் செல்கின்றன. பாருங்கள்? நம் மத்தியில் காணப்படும் எலியாவின் சால்வைகள் அல்லது அங்கிகள் போன்ற மனிதத் தத்துவம் (cult) ஒன்றை நானும் எவ்விதத்திலும் உங்களுக்கு புகுத்த முனைகிறேன் என்று நினைக்க வேண்டாம். அந்த எல்லாக் காரியங்களிலும், நம்மிடையே ஏராளமாக இருந்தன. இவையாவும் வரப்போகும் உண்மையான செயலுக்கு முன்பே நிகழ்ந்து, ஜனங்களை வழி தவறச் செய்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள்.
2242 கிறிஸ்து வருவதற்கு முன் போலியான—போலியான வழிகாட்டியின், கள்ள மேசியாக்கள் நம்மிடையே எழும்பியிருந்தனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? அப்போஸ்தலர்களை அடித்துத் துன்புறுத்த வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டபோது, அக்காலத்தில் யூதமார்க்கத்தின் போதனைகளில் தலைசிறந்து விளங்கிய கமாலியேல் அவர்களிடம், “இவர்களை விட்டுவிடுங்கள். இது தேவனால் உண்டாயிருந்தால் நீங்கள் தேவனோடு போர் செய்கிறவர்களாய் காணப்படுவீர்கள். இது தேவனால் உண்டாகவில்லையெனில்…” என்றான். மேலும் அவன், “ஒரு மனிதன் சில நாட்களுக்கு முன்பு 400 பேரை வனாந்தரத்துக்குக் கொண்டு செல்லவில்லையா?” என்றான். இவ்விதமாக காரியங்கள் நம்மிடம் உண்டு என்றான். அது என்னவாயிருந்தது? உண்மையான ஒன்று வருவதற்கு முன்னால் நிகழும் சம்பவங்கள்.
2343 இப்பொழுது, பாருங்கள், சாத்தான் அவர்களை எழுப்புகிறான். நாம் இங்கே பேசிக்கொண்டிருக்கிற இந்த நபருடைய புத்திநுட்பத்தை கவனியுங்கள். சாத்தான், நாம், அவன் யார் என்பதை படிப்படியாக வெளிக்கொணர்கிறோம். வேதத்தின் வாயிலாக முகத்திரையைக் கிழித்து, அவன் யார் என்பதை நீங்கள் காணும்படியாகச் செய்து கொண்டிருக்கிறோம். செய்யப்பட வேண்டிய காரியமும் அதுதான். 44 அவன் ஒரு கம்யூனிஸ்டாக இருக்க முனையவில்லை என்பதை நீங்கள் ஞாபகங் கொள்ளுங்கள். சாத்தான் அவ்விதம் இருக்கவில்லை. அவன் ஒரு அந்திக்கிறிஸ்து. “அவன் போதகம் சத்தியத்தைப் போன்று காணப்படுவதால்”, உலகத் தோற்றத்துக்கு முன் ஜீவ புஸ்தகத்தில் முத்திரைகளில் மறைக்கப்பட்டு பெயரெழுதப்பட்டுள்ள “தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் கூட வஞ்சிக்கப்படலாம்” என்று இயேசு கூறினார்.
2445 அவன் மிக சாமார்த்தியமுள்ள புத்தி நுட்பம் வாய்ந்தவன். உண்மையான ஒன்று வருவதை அவன் காணும்போது அது வருவதற்கு முன்னால் அதை தன்னால் முடிந்த ஒவ்வொன்றையும் அங்கே எறிகிறான். கடைசி நாட்களில் கள்ளக் கிறிஸ்துக்கள் எழும்புவார்களென்று உங்களுக்குத் தெரியுமல்லவா? எலியாவின் ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, உண்மையாகவே வரவிருக்கின்ற இந்த சகோதரன் இந்த மகத்தான செய்தியை பேசினவுடனே இவர்கள் பின்தொடர வேண்டும். 46 ஜனங்கள் அவனை தவறாக புரிந்துகொள்வர். ஜனங்களில் சிலர் அவனை மேசியா என்று தவறாக எண்ணக்கூடும். ஆனால் அவனோ, யோவான் ஸ்நானனைப் போல், “நான் அவரல்ல” என்று திட்டவட்டமாக கூறுவான். ஏனெனில் அவன் யோவானைப் போலவே வரவேண்டியவனாயிருக்கிறான். 47 யோவான் ஸ்நானனுடைய நேரத்தில், அவன் அங்கே பிரசங்கிக்க வந்தபோது, ஜனங்கள், அவனிடம் “நீ மேசியாவல்லவா? நீ அவரல்லவா?” என்று கேட்டனர். 48 அதற்கு அவன், “நான் மேசியா அல்ல. அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல, நான்—நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன். அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்” என்றான். அச்சமயம் இயேசு பூமியில் இருந்தாரென்பதை யோவான் நிச்சயமாக அறிந்திருந்ததனால் “அவர் இப்பொழுது உங்கள் மத்தியில் இருக்கிறான்” என்று கூறினான். 49 ஆனால் அந்த அடையாளம் அவர் மேல் இறங்கி வரும் வரையிலும் அவன் அவரை அறியாதிருந்தான். ஒளியானது புறாவைப் போல் செட்டைகளை விரித்து, அவர் மேலிறங்கி, அவரைப் பிரகாசிக்கச் செய்தபோது, “அவர் அங்கே இருக்கிறார், அதோ அவர்” என்றான். யோவான் மாத்திரமே அதைக் கண்டான் என்று நீங்கள் அறிவீர்கள். அவன் மாத்திரமே, அப்பொழுது உண்டான சத்தத்தைக் கேட்டான். அங்கு கூடியிருந்தவர்களில் வேறு யாரும் அதைக் கேட்கவில்லை.
2550 உண்மையான ஊழியக்காரன் எழும்பும் முன்பு, அநேகக் கள்ள ஊழியக்காரர்களைச் சாத்தான் தோன்றச் செய்து, ஜனங்களின் மனதைக் குழப்பச் செய்கிறான். சாத்தான் அதைச் செய்கிறான். சரியானது எது, தவறு எது என்பதைப் பகுத்தறிய முடியாதவர்கள் இடறுவதில்லை. ஏனெனில் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் வஞ்சிக்கப்பட முடியாதென்று வேதம் கூறுகிறது. கிறிஸ்துவின் வருகைக்கு முன்பு “அநேகக் கள்ளக் கிறிஸ்துக்கள் எழும்பி தங்களைக் கிறிஸ்து என்று அழைத்துக் கொள்வார்களென்று வேதம் சொல்லுகின்றது. ‘இதோ, அவர் வனாந்தரத்தில் இருக்கிறார் என்று ஜனங்கள் சொன்னால்’ அதை நம்பாதேயுங்கள். ‘இதோ, அவர் அறைவீட்டுக்குள் இருக்கிறார்’ என்று சொன்னால் நம்பாதேயுங்கள்”.
2651 “ஏனெனில் சூரியன் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறது போல மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்”. பாருங்கள்? ஆம், அவர்—அவர்—அவர் பிரசன்னமாவார். அது உலகம் பூராவும் காணக்கூடிய ஒரு சம்பவமாய் இருக்கும். இப்பொழுது ஏதோ ஒன்று சம்பவித்துவிட்டது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்போது, நீங்கள் பாருங்கள்… இப்பொழுது ஞாபகங்கொள்ளுங்கள்…சபையானது தன் வீட்டிற்குச் சென்றவுடனே, எடுக்கப்படுதல் நிகழ்ந்தவுடன் இத்தகைய ஆள் மாறாட்டம் இருக்கும். 52 இப்பொழுது எல்லாக் காலத்திலும் இந்த போலியான ஆள் மாறாட்டங்கள் இருக்கும். ஆனால் நமக்கும் அதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இல்லை ஐயா. 53 முன்னறிவிக்கப்பட்ட அந்த ஒருவன் வரும்போது, அந்த மனிதன் ஒரு தீர்க்கதரிசியாயிருக்க வேண்டும் என்றே நான் விசுவாசிக்கிறேன். நான் அதை உங்களுக்கு வேத வசனங்களினால் காண்பித்துக் கொண்டிருக்கிறேன். அவன் நிச்சயமாகவே தீர்க்கதரிசியாக இருப்பான். தேவனுடைய வெளிப்பாட்டை அவன் பெற்றிருப்பான். ஏனெனில் கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடத்தில் மாத்திரமே வரும். அது முற்றிலும் சரி. அதாவது…தேவன் தம் செயல்களை மாற்றுவது கிடையாது. நீங்கள் பாருங்கள். அவருக்கு வேறொரு சிறந்த முறை இருந்திருந்தால், அவர்—அவர் அதையே உபயோகித்திருப்பார். ஆனால் அவர்—அவர்…அவர் ஆரம்பத்திலேயே தலைசிறந்த முறையைத் தெரிந்து கொள்வதனால் அவர் அதை ஒரு போதும் மாற்றுவதில்லை.
2754 சுவிசேஷத்தை பிரசங்கிக்க அவர் வேண்டுமானால் சூரியனை தெரிந்துகொண்டிருக்கலாம். அவர் சந்திரனை தெரிந்து கொண்டிருக்கலாம். அவர் காற்றை தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவர் மனிதனைத் தெரிந்து கொண்டார். அவர் இதற்கென்று குழுக்களைத் தெரிந்து கொள்வதில்லை. தனிப்பட்ட நபரையே அவர் தெரிந்து கொண்டார். பாருங்கள்? 55 ஒரே சமயத்தில் இரண்டு பெரிய தீர்க்கதரிசிகள் பூமியில் எப்பொழுதும் இருக்கவில்லை. பாருங்கள் ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமானவனாய் இருக்கிறான். மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்பட்டவன். ஆகையால் தேவன் ஒரே ஒரு மனிதனைத் தெரிந்துக் கொள்ளுகிறார். அவருக்கு ஒருவன் போதும். அவனை அவர் கரத்தில் ஏந்தி அவர் விருப்பத்திற்கேற்ப எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். அவருக்கு ஒருவனே. நேவாவின் நாட்களிலே; எலியாவின் நாட்களில்; மோசேயின் நாட்களில் இருந்ததுபோலவேயாகும். 56 மோசேயின் காலத்தில் அநேகர் எழுந்தனர். அவர்கள் எவ்விதம் செய்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். “எங்களிடையே நீ, மோசே ஒருவன் மாத்திரம் பரிசுத்தவானல்ல’ என்று கூற விரும்பினர். தாத்தானும், கோராகும் விரோதமாக எழும்பினர். 57 அப்பொழுது தேவன், “நீங்கள் அவர்களை விட்டுப்பிரிந்து போங்கள். நான் பூமியைப் பிளந்து அவர்களை விழுங்கிப் போடுவேன்” என்றார். நீங்கள் பாருங்கள்? ஆகையால்… 58 ஜனங்கள் முறுமுறுத்தபோது, அவர், “நான்—நான் எல்லாரையும் அழித்துப் போடுவேன்” என்று சொன்னார். 59 ஆனால் மோசே, கிறிஸ்துவின் ஸ்தானத்தை வகித்து, அவர்களிருவரிடையே நின்று, “ஆண்டவரே, இதைச் செய்யாதிரும்” என்று மன்றாடினான். பாருங்கள்? உண்மையாகவே…மோசே இம்மத்தியஸ்த ஊழியத்திற்கென்று நியமிக்கப்பட்டிருந்தால், அவர் மோசேயைக் கடந்து இஸ்ரவேல் ஜனங்களை அழித்துப்போடவில்லை. அவன் கிறிஸ்துவின் பாகத்தை அப்பொழுது ஏற்றிருந்தான். கிறிஸ்து மோசேக்குள் வாசம் செய்திருந்தார் என்பது முற்றிலும் உண்மையாகும்.
2860 இப்பொழுது, தேவன் தம்மை இக்காலத்தில் நமக்கு வெளிப்படுத்துகிறபடியால் நாம் மிகவும் மகிழ்ச்சி கொண்டிருக்கிறோம். அந்த மகத்தான நாள் உதயமாக, இப்பொழுது விடிய ஆரம்பித்துக் கொண்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். வெளிச்சம் விட்டு விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கிவிட்டது. பரதீரியிலுள்ள பறவைகள் பரிசுத்தவான்களின் இருதயங்களில் பாடத் தொடங்கிவிட்டன. அந்த நாள் சமீபித்துவிட்டது என்பதனை அவர்கள் அறிவார்கள். ஏதோ ஒன்று வெகு விரைவில் நிகழவிருக்கிறது. அது நிகழ்ந்ததாக வேண்டும். “அவர் ஒன்றையும் செய்யாவிடில்…” 61 இப்பொழுது, வேதவாக்கியங்கள் யாவும் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கின்றன. வேதவாக்கியங்கள் முற்றிலும் சத்தியமாகவும் இருக்க வேண்டும். வேறு வழியே இல்லை. ஆகவே தான் நம்முடைய கத்தோலிக்க சபையின் நண்பர்களுடன் எனக்கு வேறுபாடு உண்டு. வேதம் மனிதனால் எழுதப்படவில்லை. அது தேவ ஆவியினால் ஏவப்பட்டது என்று நான் விசுவாசிக்கிறேன், சிறு சிறு விஷயங்கள் அதனுடன் சேர்க்கப்பட்டன. அதனுடன் சேர்க்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் தேவனுடைய வார்த்தையை ஒன்றோடொன்று சம்பந்தப்படுத்தி நோக்கும்போது, சேர்க்கப்பட்டவைகளில் முரண்பாடு காணப்படுவதால், அவை தாமாகவே அகன்று விடுகின்றன.
2962 இந்த தத்ரூபமும் சத்தியமுமான வேதவாக்கியங்கள் யாவும் ஒன்றுடன் ஒன்று எங்கேயும் முரண்பாடின்றி, ஒன்றுடன் ஒன்று சரியாகப் பொருந்துகின்றன. எழுதப்பட்ட வாக்கியங்களில் முரண்பாடு எதுவுமில்லாத ஒரு இலக்கியத்தையாவது எனக்குக் காண்பியுங்கள். ஆனால் வேதத்தில் எங்கேயும், எவ்வித முரண்பாடும் இல்லை. வேத விமர்சகர்கள் வேதத்தில் முரண்பாடு உள்ளதாகக் கூறியுள்ளனர். அவ்வித முரண்பாடுகளைச் சுட்டி காண்பிக்க நான் அவர்களுக்கு அவ்வித அழைப்பு விடுத்துள்ளேன். ஆனால் இதுவரை அவர்கள் எதையும் காண்பிக்கவில்லை. காண்பிக்கத்தக்கவாறு எவ்வித முரண்பாடும் வேதத்தில் கிடையாது. மனித சிந்தை குழப்பமுற்றிருக்கும் காரணத்தால் முரண்பாடு உள்ளதாகத் தோன்றுகிறது. தேவன் குழப்பமற்றவர். அவர் என்ன செய்கிறாரென்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் அறிவார். 63 கத்தோலிக்க சபை கூறுவதுபோன்று தேவன் உலகத்தை ஒரு சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரென்றால், எந்த சபையைக் கொண்டு அவர் நியாயந்தீர்க்கப்போகிறார்? நம்மிடையேயுள்ள சபைகளைப் பாருங்கள். நாம் தொள்ளாயிரம் வித்தியாசமான ஸ்தாபன சபைகளை பெற்றுள்ளோம். இப்பொழுது எப்படி…ஒரு ஸ்தாபனம் ஒருவிதம் போதிக்கின்றது. வேறொரு ஸ்தாபனம் வேறுவிதம் போதிக்கின்றது. அவர்களிடையே என்ன ஒரு குழப்பம்! யார் என்ன வேண்டுமானாலும் செய்து அதே சமயத்தில் உள்ளே பிரவேசிக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். நியாயந்தீர்க்க தேவனுக்கு ஒரு நியமம் (standard) அவசியம், அதுதான் அவருடைய வார்த்தை.
3064 கத்தோலிக்க சபையை மட்டும் நான் குறைகூறுகிறேனென்று நினைக்க வேண்டாம். பிராடெஸ்டெண்டுகளும் அதேநிலையில்தான் இன்றுள்ளனர். ஆனால் என்னோடு பேசின ஒரு கத்தோலிக்க பாதிரி என்னிடம், “திரு.பிரான்ஹாம் அவர்களே தேவன் தம்முடைய சபையிலிருக்கிறார்,” என்று கூறினார். 65 அதற்கு நான், “ஐயா, தேவன் தமது வார்த்தையில் இருக்கிறார். அவர் வார்த்தையாய் இருக்கிறார்,” என்றேன். ஆம் ஐயா. அவர், “நல்லது. அவர் அதில்…சபை பிழையற்றது,” என்றார். 66 நான், “அவர் அவ்விதம் கூறவில்லை. ஆனால் வார்த்தைதான் பிழையற்றது என்று அவர் கூறியிருக்கிறார்” என்றேன். 67 அவர், “நாங்கள் அந்த ஞானஸ்நானத்தை அந்த வழியில் எடுக்க போதித்து வந்தோம். இன்னும் மற்றவற்றையும்…” என்றார். நான், “எப்பொழுது?” என்றேன். “முன்பு ஆதி நாட்களில்” என்றார். அப்பொழுது நான், “அதுதான் அந்த கத்தோலிக்க சபையாயிருந்தது என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?” என்றேன். அவர், “ஆம்” என்றார். 68 “அப்படியானால் நான் கத்தோலிக்கன், பழமையான நாகரீகம் கொண்ட கத்தோலிக்கன்”, என்று பதிலுரைத்தேன். மேலும் நான், “நான் ஆதி சபை கொண்டிருந்த பழமையான முறைகளில் விசுவாசம் கொண்டுள்ளவன். நீங்கள் எல்லாவற்றையும் குழப்பியுள்ளீர்கள். நீங்கள் வேதத்திலுள்ள ஒன்றையும் போதிப்பதில்லை. ஸ்திரீகள் மரித்தவர்களுடன் பரிந்து பேசுதல் இந்த எல்லா மற்ற காரியங்கள், ஓ, என்னே, மாமிசம் உண்ணாமலிருத்தல், ஓ, அவை எல்லாம் எனக்குத் தெரியாது. பாருங்கள்” என்று கூறினேன். மேலும் நான், “நீங்கள் அதை வேதத்திலிருந்து எனக்குக் காண்பியுங்கள்” என்று கேட்டேன். 69 அதற்கு அவர், “அவை வேதத்தில் காணப்பட வேண்டுமென்ற அவசியமில்லை. சபை அவ்வண்ணமாகக் கூறும்வரை அது தான் சரி. அது கூறுகிறதில் எந்த வித்தியாசமும் உண்டுபண்ண முடியாது. அதுதான் சபை” என்றார். 70 நான் உடனே, “வேதம் ‘யாராவது வேதத்திலுள்ளவைகளில் ஏதாவது ஒன்றைக் கூட்டினால் அல்லது குறைத்தால், அவனுடைய பாகத்தை தேவன் ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப் போடுவார்’ என்று கூறியிருக்கிறதே! ஆகையால் தேவனுடைய வார்த்தை முக்கியம் வாய்ந்தது. நான் அந்த வார்த்தையை விசுவாசிக்கிறேன்,” என்று பதிலுரைத்தேன்.
3171 இப்பொழுது, ஆமோஸ் தீர்க்கதரிசியின் புஸ்தகமும் மற்றைய வேத வாக்கியங்களும் அவ்வாறு கூறினால்… 72 இதைக் குறித்து ஞாபகங் கொள்ளுங்கள். நாம் இப்பொழுது அதன் விசேஷித்த பாகங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். சற்று நான்…நான் அந்த அறைக்குள் சென்று அபிஷேகம் என் மேல் வரும் போது அங்கு நடைபெறுவதையெல்லாம் என்னால் எழுத முடிந்தால், நான் ஒவ்வொரு முத்திரையைக் குறித்தும் மூன்று மாத காலம் செய்தி கொடுக்க முடியும். ஆகையால் ஜனங்களை திணறச் செய்யாதபடிக்கு, அது என்னவாயிருக்கின்றது என்பதைக் காணும்படியாக முக்கியமான பாகங்களை மாத்திரமே நான் பிரசங்கித்துக் கொண்டு வருகிறேன். ஆனால், இருந்த போதிலும், நாங்கள் அவர்களைப் புண்படுத்தாததால், ஜனங்கள் இதை விசுவாசிக்கும்போது பக்குவப்படுவார்கள். நான் என்ன கருதுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
3273 இப்பொழுது, இப்பொழுது இதை கவனியுங்கள். “தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளாகிய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்” என்று ஆமோஸ் கூறியுள்ளான். அவர் என்ன செய்துக்கொண்டிருக்க்கிறார் என்று நாம் காண்கிறோம். ஆகையால் இப்பொழுது அவர் வெளிப்படுத்திக் கொண்டு வருபவைகளை, ஏதோ ஒன்றைச் செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் என்பதாய் அது இருக்க வேண்டும். நியாயம்தீர்க்க வருவதற்கு தேவன் ஆயத்தமாயிருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவர் ஏதோ ஒன்றைச் செய்ய ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார் என்று நான் நம்புகிறேன். மீண்டும் ஒரு காரியம் என்னவென்றால், நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். நாம் காலத்தின் முடிவில், லவோதிக்கேயா சபையின் காலத்தில் இருக்கிறோம் என்று அவை நிச்சயமாக சாட்சி பகருகின்றன. ஏனெனில் இந்தக் காரியங்கள் கடைசி நாட்களில் மட்டுமே வெளிப்பட வேண்டும்.
3374 இப்பொழுது, அதைச் சற்று யோசித்துப் பாருங்கள், நாம் அறிய வேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் விரும்புவதாக நாம் விசுவாசிப்பதை நன்றாகக் கிரகித்துக் கொள்ள முயற்ச்சிப்போமாக. 75 “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்கு இரகசியங்களை வெளிப்படுத்தாமல் யாதோன்றையும் செய்யார்.” என்பதை இப்பொழுது ஞாபகங் கொள்ளுங்கள். அவர் ஒன்றைச் செய்யுமுன்பு, அதை அவர் அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். அவர் அங்ஙனம் அதை வெளிப்படுத்தும்போது, ஏதோ ஒன்று சம்பவிக்கவிருக்கிறது என்பது அதன் அர்த்தம். பாருங்கள், அது வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.
3476 நாம் இப்பொழுது பேசிக்கொண்டிருக்கும் யாவும் கடைசி நாட்களில் கடைசி எக்காளம் தொனிக்கும் முன்பு, கடைசி சபையின் காலத்தில் அளிக்கப்படும் செய்தியின் முடிவில் வெளிப்பட வேண்டும். அது சரி. அதை நீங்கள் படிக்க வேண்டுமானால் வெளி: 1-7 வசனங்களைப் படியுங்கள். சென்ற இரவு, மூன்று முறை அதை நான் குறிப்பிட்டேன், “ஏழாம் தூதனுடைய செய்தியின் சத்தத்தின் நாட்களில், அவன் எக்காளம் ஊதப்போகிறபோது, தேவரகசியம் வெளிப்படும் நிறைவேறும்”. ஒரே ஒரு காரியம்தான் விடப்பட்டுள்ளது. ஏழு முத்திரைகள் கொண்ட புஸ்தகம் திறக்கப்படும்போது தேவரகசியம் முழுவதும் வெளியரங்கமாகும். 77 அநேக வருடகாலமாக, அதில் அடங்கியுள்ள இரகசியங்கள் என்னவென்று ஜனங்கள் ஆராயத் தலைப்பட்டனர். வேதத்தின் பிரகாரமாக, அப்பொழுது, நாம்…ஆனால் அவை கடைசிகாலம் வரைக்கும் மறைக்கப்பட்டிருப்பதால் அவைகளை அவர்கள் புரிந்துகொள்ள வகையில்லை. நாம் அடையாளங்களாகவே பார்த்திருக்கிறோம். அடையாளங்களாக அவை அளிக்கப்பட்டுள்ளதால் அவைகளின் அர்த்தமென்னவென்பது சரியாக வெளிப்படுத்தப்படவில்லை. பாருங்கள்? அவைகளின் இரகசியம் இப்பொழுது வெளிப்படுவதன் காரணத்தால் நாம் கடைசி காலத்தில் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
3578 இப்பொழுது, அவர் தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தாமல் யாதொன்றையும் செய்யமாட்டார் என்பதை நினைவுகூருங்கள். நீங்கள் அதை இப்பொழுது மறவாதீர்கள். அவர் அதை எளிமையான விதத்தில் நிகழ்த்துவதால் “புத்திமான்களும் கல்விமான்களும் அதைக் காணக்கூடாமல் போகின்றனர்” என்பதையும்கூட நீங்கள் மறக்கவேண்டாம். வேண்டுமாயின் மத் 11:25—26 —ஐக் குறித்து கொள்ளுங்கள். “அவர் அதை வெளிப்படுத்தாமல் ஒன்றையும் செய்யார்” என்பதை ஞாபகங்கொள்ளுங்கள். அவர் அதை எளிய வழியில் வெளிப்படுத்துவதால், நுண்ணறிவாளர்களும், கல்விமான்களும் அதை இழந்து விடுகின்றனர். ஞாபகங் கொள்ளுங்கள். பாவம் முதன் முதலாக இவ்வுலகில் கிரியை செய்தபோது, வார்த்தைக்குப் பதிலாக ஞானம் விரும்பப்பட்டது. அதை இப்பொழுது மறந்து போகவேண்டாம். ஓ, அதை நினைத்துப்பார்த்து, நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
3679 இப்பொழுது சம்பவிக்கும் காரியங்களை சற்று நோக்குங்கள். அவர் நமக்கு கூறியிருக்கிற காரியங்களை சற்று நோக்குங்கள். இக்கூடாரத்திலுள்ள ஜனங்களே, இந்தக் கூடாரத்துடனே வளர்ந்தவர்களே, நோக்கிப் பாருங்கள். இப்பொழுது நான் ஒலிப்பதிவு செய்பவர்களைக் கேட்கப் போகிறேன்…நல்லது, இதைத் தொடர்ந்து ஒலிப்பதிவு செய்யுங்கள். ஆனால், பாருங்கள், இதை நான் என் கூடாரத்தின் மக்களுக்கு, இங்கு இருந்துவருகிற உங்களுக்கு சொல்லப் போகிறேன். இங்கு தீர்க்கதரிசனமாக அறிவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான காரியங்களில் ஏதாவது ஒன்று நிகழவில்லை என்று உங்களால் சுட்டிக் காண்பிக்க முடியுமானால் செய்யுங்கள் என்று கர்த்தராகிய இயேசு இயேசுவின் நாமத்தில் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். அவர் எனக்கு இந்த மேடையின் மீதோ, வேறெங்கோயோ அளித்தவைகளில் யாதொன்றாவது நிகழாமல் போகவில்லையென்று யாராவது என்னிடத்தில் சொல்லுங்கள். எப்படி? ஒரு மனித சிந்த அந்த விதமாக அமைந்திருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது.
3780 முப்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு ஜூன் மாதம் அவர் நதியினருகில் ஒளியின் ரூபத்தில் தோன்றினபோது, நான் சிறு பையனாயிருக்கும் முதற்கொண்டு எனக்குத் தேவனுடைய சத்தம் கேட்பதையும், அந்த ஒளி தோன்றுவதையும் நான் கூறியிருக்கிறேன் என்பதை உங்களில் வயது சென்றவர்கள் அறிவீர்கள். எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று ஜனங்கள் எண்ணினர். உண்மையிலேயே யாராவது என்னிடம் இவையெல்லாம் சம்பவிக்கின்றன என்று கூறியிருந்தால் நானும் அவ்வாறே நினைத்திருப்பேன். ஆனால், இப்பொழுது அதைக்குறித்து வியப்படைய அவசியமில்லை. ஆனால் சபையோ 1933-ம் வருடம் முதற்கொண்டு அதைக்குறித்து வியப்படையவில்லை. அன்று நான் நூற்றுக்கணக்கானவருக்கு அந்த நதியில் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருக்கும் சமயம். 81 அப்பொழுது மார்ரா (Marra) என்னும் பையன் என்னிடம், “பில்லி, ஜனங்களை நீர் தண்ணீரில் அமிழத்தவா (Duck) கொண்டு செல்கிறீர்?” என்று பரிகாசமாகக் கேட்டான் என்பதை நான் நினைவுகூருகிறேன். அந்த ஜிம் மார்ரா மரித்துவிட்டார் என்று நினைக்கிறேன். அவன் அங்கே கொல்லப்பட்டான் என்றும், யாரோ ஒரு பெண் அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டதாக நான் கேள்விப்பட்டேன். ஆனால் அவன்—அவன் “நீர் அந்த ஜனங்களைத் தண்ணீரில் அமிழத்தப் போகிறீரா?” என்று என்னிடத்தில் கேட்டான். 82 அதற்கு நான், “இல்லை ஐயா, நான் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப் போகிறேன்” என்று கூறினேன்.
3883 ஞானஸ்நானம் பெறுவதற்கென குழுமியிருந்தவர்களில் ஒரு பெண்மணி இருந்தாள். அவர் மற்றொரு பெண்மணியிடம் “நான் தண்ணீரில் அமிழ்க்கப்பட்ட்டால் பரவாயில்லை” என்றும், “அதைக் குறித்து எனக்குக் கவலையில்லை” என்றும் அலட்சியமாகச் சொன்னாள். 84 நான் அவளிடம், “நீ அவ்விதம் கூறினதால், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள நீ தகுதியற்றவள். நீ மனந்திரும்பி, திரும்பவும் வா” என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டேன். பாருங்கள்? 85 அது விளையாட்டுக்குரியதல்ல. இது ஒரு கட்டளையால் வெளிப்படுத்தப்பட்ட கிறிஸ்துவின் சுவிசேஷமாகிய வார்த்தையாகும். நீங்கள் அதை “அர்த்தமற்றவையென்றும், மூடத்தனம்” என்றும் இப்பொழுது சற்று கூறுவீர்களானால், அதை வேறெங்காவது பொருத்திக் கொள்ளுங்கள். ஆனால் இது சம்பவிக்கும் என்றும், அது சரியாக என்னவாக இருக்கும் என்றும் வார்த்தையில் வாக்களிக்கப்பட்டுள்ளது என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். அவ்விதமே அது இங்கே உள்ளது.
3986 ஜனங்கள் ஞானஸ்நானம் பெற நதியின் கரையில் அன்று நின்று கொண்டிருந்தபோது, கர்த்தருடைய தூதன் இறங்கி வந்தார். தூரத்தில் அவன் வருகை ஒரு—ஒரு நட்சத்திரத்தைப் போல் தோற்றமளித்தது. அவன் அருகாமையில் வந்தபோது அந்த ஒளி மரகதம் போன்ற நிறம் கொண்டதாயிருந்தது என்றெல்லாம் நான் உங்களிடம் முன்பே கூறியுள்ளேன். நான் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தபோது அது இறங்கி வந்து நதியின் மேல் நின்றது. 87 அப்பட்டணத்திலுள்ள வியாபாரிகள், “இதுவென்ன?” என்று கேட்டனர். 88 அதற்கு நான், “அந்தக்காட்சி எனக்காக அல்ல. அது உங்களுக்காக அளிக்கப்பட்டது” என்று நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள்? “நான் சத்தியத்தை அறிவித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை உங்களுக்கு அறிவுறுத்தவே தேவன் இது நேரிடச் செய்தார். அது உங்கள் நிமித்தமாகவே அவ்வாறு செய்தார்.” என்றேன். அப்பொழுது ஏறக்குறைய இருபத்தியொரு வயது நிறைந்த வாலிபனாயிருந்தபடியால் அவர்கள்—அவர்கள் அதை விசுவாசிக்காமற்போயினர். நீங்கள் பாருங்கள், ஏனெனில் ஒரு வாலிபனுக்கு இது நேரிடுவது மிகையான காரியமாகும். அதன்பின் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்…
4089 இங்கு அமர்ந்திருக்கும் நம் தர்மகர்த்தாக்களில் ஒருவரான சகோதரன் ராய்ராபர்ஸன் அவர்களை நான் இங்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கண்டேன். ஹூஸ்டன் பட்டிணத்தில் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டபோது அவர் அங்கிருந்ததை அவர் என்னிடத்தில் அன்றொருநாள் சொல்லிக்கொண்டிருந்தார். நீங்கள் பாருங்கள், அன்று நடந்த விவாதத்தின் போது நானும் அங்கிருந்தேன். அன்றொரு இரவு நான் அதைக் குறித்து ஏதோ ஒன்றைக் கூறத் துவங்கினேன். சகோதரன் ராயும் அவருடன் கூட வேறொருவர் மாத்திரமே அன்று ஒலிப்பதிவு கருவிகளை வைத்திருந்தனர். அவை பழைய காலத்து மின்சார ஒலிப்பதிவு கருவிகள் சகோதரன் ராய் ராபர்ஸனும் அவர் மனைவியும் இப்பொழுது, அங்கு அமர்ந்திருப்பதை காண்கிறேன். அப்பொழுது திருமதி ராபர்ஸன் வியாதிப்பட்டிருந்தார். 90 சகோதரன் ராய் போரில் அனுபவம் வாய்ந்த ஒருவர். அவர் இரண்டு கால்களும் போர்களத்தில் காயப்பட்டன. அவர் மரித்தவர்போல கிடத்தப்பட்டார். அவர் இராணுவத்தில் ஒரு அதிகாரியாக இருந்தார். ஜெர்மானிய படைகள் அவர் உபயோகித்திருந்த பீரங்கி வண்டியைத் தாக்கி, அவரைக் காயப்படுத்தி குத்துயிராக்கினர். அவர் மரித்தவரைப்போல் அநேக காலம் கிடந்திருந்தார். நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் இனி ஒருக்காலும் நடக்க முடியாது என்று கூறினார்கள். ஆனால் இப்பொழுதோ அவர் என்னைக் காட்டிலும் வேகமாக நடக்கிறார். 91 ஆனால் அது என்ன? அவர் ஹுஸ்டனில் முக்கியமான ஒன்றைக் கண்டு கொண்டார். அவர் தன் மனைவியைக் குறித்து என்னிடம் கூறிக் கொண்டிருந்தார். அன்று அவர் பதிவு செய்த ஒரு ஒலிநாடாவை போட்டுக் காண்பிப்பார். இங்கே ஆராதனைகள் முடிவுற்றவுடன், அவர் அதை உங்கள் எல்லோருக்கும் போட்டுக் காண்பிக்கப் போகிறார் என்று நான் நம்புகிறேன். ஹுஸ்டனில் நடைபெற்ற என்னுடைய ஆராதனையை அவர் தன்னுடைய பழைய மின்சார ஒலிநாடாவில் பதிவு செய்துள்ளார். வியாதியாயிருந்த அவர் மனைவி ஹுஸ்டனில் நடந்த அந்த ஆராதனைக்குக் கொண்டுவரப்பட்டாள். அவர் அன்றொருநாள் அதை கேட்கும் வரை அதை ஒருபோதும் கவனிக்கவேயில்லை. 92 அவள் வியாதிப்பட்டு, ஓ அதிக விசனமுள்ளவளாய் இருந்தாள். அவள் ஜெபவரிசையில் வரவேண்டுமென்று விரும்பினாள். அவர்கள் என்னை ஒருபோதும் அறியாதவர்களாயிருந்தனர். நானும் என்னுடைய ஜீவியத்தில் அவர்களை ஒருபோதும் கண்டதில்லை. எனவே அவள் அந்த நாளில் ஒரு—ஒரு ஜன்னல் அருகே அமர்ந்துகொண்டு, ஒரு ஜெப அட்டையைப் பெற்றுக்கொண்டு ஜெப வரிசையில் வரவேண்டுமென்று மிகுந்த ஆவலாயிருந்தாள், அவள் மிகுந்த துக்கமும், நிலைகுலைந்தும் காணப்பட்டாள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 93 அன்றிரவு அல்லது அடுத்தநாள் இரவு அல்லது வேறொரு நாளிலோ, அது அன்றிரவுதான் என்று நான் நம்புகிறேன். அவ்வரிசையில் அவள் கலந்து கொண்டாள். அவள் மேடைமீது ஏறினவுடன் பரிசுத்த ஆவியானாவர் அவளிடம், “நீ இந்த பட்டிணத்தைச் சேர்ந்தவளல்ல, நியூ அல்பனி (New Albany) என்னும் பட்டிணத்திலிருந்து வந்திருக்கிறாய். இன்று ஜன்னலின் அருகில் நீ உட்கார்ந்தவாறு, எப்படியும் ஜெப அட்டைக் கிடைக்க வேண்டுமே என்று கவலை கொண்டிருந்தாய்” என்று என் மூலம் அறிவித்தார். அநேக வருடங்களுக்கு முன்பு நடந்த இச்சம்பவம் அந்த ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
4194 அந்தக் கூட்டத்தின் துவக்கத்தில் பரிசுத்த ஆவியானவர் அங்கே…அப்பொழுது நிகழ்ந்த அந்தக் கூட்டங்களில் முதலாம் நாளன்று 3,000பேர் மாத்திரமே வந்திருந்தனர். அது பின்பு 8,000 பேராகப் பெருகி, முடிவில் 30,000பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆகையால் அப்பொழுது…நான் முதல் கூட்டத்தில் பேசினபோது, “நான் ஏன் இதைச் சொல்லுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை”. அதுவும் ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. “ஆனால் இது என் வாழ்க்கையில் நேர்ந்த முக்கியமான காரியங்களில் ஒன்றாக இருக்கும். இக்கூட்டத்தில் இதுவரை யாரும் காணாத ஒரு மகத்தான சம்பவம் நிகழப்போகிறது” என்று கூறினேன். 95 எட்டு, அல்லது ஒன்பது, பத்து நாட்களுக்குப் பின்னர், 30,000 பேருக்கு முன்பாக கர்த்தருடைய தூதன் தோன்றினான். அப்பொழுது புகைப்படம் எடுக்கப்பட்டது. அது இப்பொழுது வாஷிங்டனில் தனி பிரசுர உரிமையைப் (cpoyrigt) பெற்றிருக்கிறது. உலகிலேயே தெய்வீகமான ஒன்றைப் புகைப்படம் எடுத்தது இதுவே முதல்முறையாகும்.
4296 உங்களுக்குத் தெரியும், நான் சில நேரங்களில், “ஒருவர் மரணத்தினால் நிழலிடப்பட்டிருக்கிறார். ஒரு கருத்த முகமூடி அவர் மேலிருக்கிறது. அவர் மரிக்கும் தருவாயிலிருக்கிறார்” என்று பகுத்தறிந்து கூறுவதை நீங்கள் கேட்டதுண்டு. 97 நான் கிழக்கு பைன்ஸ் அல்லது தெற்கத்திய பைன்ஸ் (Pines) என்னும் இடத்தில் கடைசி நாள் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த சமயம் என்று நான் நம்புகிறேன். அப்பொழுது நான் ஒரு பெண்மணியிடத்தில் பகுத்தறிந்து கூறிக்கொண்டிருந்தபோது, அப்பொழுது அருகில் இருந்த பெண்மணியிடம் “அதைப் புகைப்படம் எடு, சீக்கிரம்” என்று ஏதோ ஒன்று கூறிற்று. அதோ அது அங்குள்ளது அந்த அறிக்கைப் பலகையில் தொங்கவிடப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்; சிறிது காலமாகவே அது அங்கே இருக்கின்றது. அந்தப் படத்தில் அவள் தலையை கருமை நிறமுள்ள நிழல் மூடியிருப்பதை நீங்கள் காணலாம். 98 பரிசுத்த ஆவியானவர் அதை அறிவித்தவுடனே அவள் மற்றொரு புகைப்படம் எடுத்தாள். அப்பொழுது அந்த முகமூடி மறைந்துவிட்டிருந்தது. அப்பொழுது அவர், “நீ சுகமடையப் போகிறாய். கர்த்தர் உன்னை குணப்படுத்திவிட்டார். புற்றுநோய் போய்விட்டது” என்று கூறினார். அதோ அங்கே அது உள்ளது. அவள் குணமடைந்தாள். பாருங்கள்? அங்குதான் காரியம். பாருங்கள்? 99 அந்த நாளின் நாழிகை என்னவாய் இருக்கிறது என்பதை தேவன் அறிவார் என்பதையே இது காட்டுகிறது. நாமோ அதை அறியோம். நாம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டியவர்களாய் மாத்திரமே இருக்கின்றோம். 100 இவ்விதம் பேசிக்கொண்டே போகலாம். ஆனால் முதலாம் முத்திரையை பற்றி அறிந்துள்ளதை இப்பொழுது நாம் ஒரு சில நிமிடங்கள் விமரிசனம் செய்து, இதனுடன் ஒருங்கிணைப்போம்.
43101 முதலாம் முத்திரை உடைக்கப்பட்டபோது, சாத்தான் மத சம்பந்தமான ஒரு—ஒரு பராக்கிரமசாலியைக் கொண்டிருந்தான் என்று நாம் கவனித்தோம். அந்த வெள்ளைக் குதிரையின்மேல் சவாரி செய்தவனை நீங்கள் கவனித்தீர்களா? அவ்விதம் சென்றது ஆதி சபையாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் ஓ, என்னே, வருடங்கள் முழுவதுமாக அது அவ்விதமாகவே போதிக்கப்பட்டு வந்தது. ஆனால் அது அவ்விதம் இருக்க முடியாது. மீதியுள்ளவைகளையும், நீங்கள் சற்று கவனியுங்கள். நாம் இவைகள் யாவையும் ஒன்றாய் பிணைக்கும்பொழுது, அது எங்கே உள்ளது என்பதை நீங்கள் அப்பொழுது நோக்கிப் பாருங்கள், பாருங்கள். இப்பொழுது, எல்லா முத்திரைகளின் இரகசியங்களும் என்னவென்பதை இதுவரை அறியேன். ஆனால் ஒன்று மாத்திரம் அறிவேன். அவையாவும் தேவனுடைய சத்தியமாயிருப்பதால், எல்லாம் பரிபூரணமாய் பொருந்த வேண்டும். அது சத்தியமாயிருக்கிறது. வெள்ளைக்குதிரையின் மேலேறியிருப்பவன் ரோம குருக்களாட்சியின் சபை என்பது சரியே.
44102 யூதர்கள் அந்திக்கிறிஸ்து என நம்புகிறவர்கள் உண்மைக்கு அநேக மைல்கள் அப்பாற்பட்டவராயிருக்கின்றனர். யூதர்களை அந்திக்கிறிஸ்துவாக நீங்கள் ஒருபோதும் கருத வேண்டாம். நாம் மனந்திரும்பி காணியாட்சிக்குள் உட்பிரவேசிக்கத் தருணம் அளிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அவர்கள் கண்கள் குருடாக்கப்பட்டன. 103 ஆனால் அந்திக்கிறிஸ்து புறஜாதியாயிருக்கிறான். சத்தியத்தைப் போலியாக ஆள்மாறாட்டம் செய்யும் ஒருவனாயிருக்கிறான். நிச்சயமாக. Anti என்ற ஆங்கிலபதத்திற்கு “எதிரான” என்று பொருள். வெள்ளைக்குதிரையின் மேலிருக்கிறவன். பராக்கிரமசாலியாய் மாறி, கடைசியில் சிங்காசனத்தில் அமர்த்தப்படுகிறான். அதன்பின் அவன் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டபின், முடி சூட்டப்படுகிறான். இப்பொழுது, அதன்பின், அவன் தேவனுக்கு பதிலாக ஆராதிக்கப்படுகிறான். 104 இப்பொழுது, நோக்கிப் பாருங்கள், அது வருவதற்கு முன்பாகவே நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். யார் அவன்? ஒரு மனிதன் தோன்றுவானென்று பவுல் 2 தெசலோனிக்கேயர் 2:3-ல் உரைத்த அவன் யார்? அவன் ஏன் காலங்களின் வழியாய் எதிர் காலத்தில் நடக்கப் போவதைக் கண்டான்? பவுல் தேவனுடைய தீர்க்கதரிசியாக இருந்தான். நிச்சயமாக. ஏன்…
45105 பவுல், “ஆவியானவர் வெளிப்படையாய் சொல்லுகிறபடி பிற்காலங்களில் சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்குச் செவி கொடுத்து விசுவாசத்தை விட்டு விலகிப் போவார்கள்” என்று கூறினான். வஞ்சிக்கிற ஆவி என்பது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அதுதான் சபையில் காணப்படும் வஞ்சக ஆவி, அதுதான் குருவானவர்கள். குருவானவர்களின் வஞ்சக ஆவி, பிசாசின் கிரியைகள் சபையில் காணப்படும் மாய்மாலம். 106 “துணிகரமுள்ளவர்கள் இறுமாப்புள்ளவர்கள்” ஞானம், நீங்கள் பாருங்கள், சாமார்த்தியமுள்ளவர்கள், அறிவுபடைத்தவர்கள், “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து”, (“நாங்கள் கிறிஸ்தவர்கள், நாங்கள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்” என்பவர்கள்.) “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, பரிசுத்த ஆவியின் வல்லமையையும், கிரியையும், வெளிப்பாடுகளையும் மறுதலிப்பவர்கள், இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு” பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள். மேலும் பவுல், “இப்படிப்பட்டவர்கள் பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண் பிள்ளைகளுடைய வீடுகளில் நுழைந்து…” பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கும் பெண் பிள்ளைகள் அல்ல. “பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, சுற்றித்திரிந்து உணராதவர்களாயிருக்கிற பெண் பிள்ளைகளுடைய வீடுகளில் நுழைந்து அவர்களை வசப்படுத்திக் கொள்வார்கள்” என்றான்.
46107 பற்பல இச்சைகள்! அப்படிப்பட்ட பெண் பிள்ளைகள் எல்லா வித சமுதாயத்திலும் நுழைந்து, விருப்பம் போல் வாழ்க்கை நடத்தி, “நாங்கள் சபைக்கு செல்லுகிறோம். ஆகையால் மற்றவர்களைப் போல் நாங்களும் நல்லவர்கள்” என்று கூறிக்கொள்வார்கள். நடன கச்சேரிகள், களியாட்ட விருந்துகள், முடியை கத்தரித்தல், வர்ணம் தீட்டிக் கொள்ளுதல், விருப்பம் போல் உடைஉடுத்திக் கொள்ளுதல் போன்ற காரியங்களில் வாஞ்சையாயிருக்கின்றனர்; என்றாலும், “நாங்கள்—நாங்கள் பெந்தேகொஸ்தேக்காரர். நாங்கள்—நாங்கள் மற்றவர்களைப்போல நல்லவர்கள்” என்று கூறுகின்றனர். ஓ! உங்கள் சொந்த கிரியைகளே உங்களை அடையாளம் காண்பிக்கின்றது. உண்மை. கவனியுங்கள்.
47108 மேலும் பவுல், “இவர்கள் துர்புத்தியுள்ள மனுஷர், சத்தியத்துக்கு எதிர்த்து நிற்பவர்கள்” என்றான். சத்தியம் என்பது என்ன? அதுதான் கிறிஸ்துவாகிய வார்த்தை, “சத்தியத்தைக் குறித்து”. 109 “ஓ, நீர்…நீர் பெண்களை வசைபாடுபவர், நீர் பெண்களை வெறுக்கிறவன் என்று அநேகர் சொல்லுகின்றனர். நீங்கள் இதைச் செய்கிறீர்கள். அதைச் செய்கிறீர்கள்” என்று கூறுகிறீர். 110 இல்லை, ஐயா. அது உண்மையன்று. அது வெறும் ஒரு—ஒரு பொய். நான் பெண்களை வெறுக்கிறதில்லை. இல்லை, ஐயா. அவர்கள் என் சகோதரிகள், அவர்கள் சகோதரிகளாய் இருந்தால். ஆனால் எனக்கு அந்தக் காரியம். என்னவென்றால்… 111 அன்பு கண்டித்து சீர்படுத்துகிறது. அது அவ்வாறு திருத்தாவிடில் அது அன்பல்ல. அது மாம்சப் பிரகாரமான (Phileo) அன்பு, தெய்வீக அன்பு (agapao) அல்ல. நான் அதை உங்களுக்கு கூறுவேன், அதாவது ஒரு அழகான பெண்ணைக் காணும்போது, மாம்சப்பிரகாரமான அன்பு ஒருக்கால் உங்களில் உண்டாகக்கூடும். ஆனால் தெய்வீக அன்பு வித்தியாசப்பட்டது. அந்த அன்பு கோணலானவைகளை நேராக்கி, தேவனை சந்திக்கச் செய்து, நாம் அவருடன் நித்திய காலமாக வாழச் செய்கிறது. பாருங்கள்? அது தொனிக்க வழியில் நான் அதைக் கருதாமல் இருக்கலாம். ஆனால் நான்…நான் என்ன…நீங்கள் அறிவீர்கள்…நீங்கள் புரிந்து கொண்டீர்களென்று நான் நம்புகிறேன். அது சரி.
48112 ஆனால், இப்பொழுது, ஞாபகங்கொள்ளுங்கள். மேலும் பவுல், “யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள். ஆனால் இவர்களுடைய மதிகேடு சீக்கிரத்தில் வெளிப்படும்” என்கிறான். 113 ஏன்? முக்கியமான ஒன்றைச் செய்ய கர்த்தர் மோசேக்குக் கட்டளை கொடுத்திருந்தார். ஆனால், அவனால் கூடியமட்டும் உத்தமமாக அங்கு சென்றான். அவன் தன் கோலைத் தரையில் போட்டால் அது சர்ப்பமாக மாறுமென்று தேவன் அவனிடம் கூறினார். அப்பொழுது என்ன சம்பவிக்கும் என்று அவனுக்குக் காண்பிக்கும்படி தேவன் அதைச் செய்தார். அவனும் உத்தமமாக அதைப் பின்பற்றி பார்வோனின் முன்னிலையில் தேவன் கட்டளையிட்டபடிச் செய்ய அங்கு நின்று, தன்னுடைய கோலைப் போட, அப்பொழுது அது சர்ப்பமாக மாறினது.
49114 அப்பொழுது பார்வோன், “இது மலிவான மந்திரவாதியின் தந்திரம்” என்று சொன்னான் என்பதில் சந்தேகமே இல்லை. அவன் தன்னுடைய யந்நேயையும் யம்பிரேயையும் வரவழைக்கிறான். “நாங்களும் கூட இக்காரியங்களைச் செய்கிறோம்” என்று கூறி, அவர்களும் தங்கள் கோல்களைத் தரையில் போட அவை சர்ப்பமாக மாறின. இப்பொழுது, மோசேயினால் என்ன செய்ய முடியும்? 115 அது என்ன? தேவனுடைய உண்மையான கிரியை ஒவ்வொவன்றுக்கும் சாத்தான் அதற்கு ஒப்பான ஒரு போலியான ஒன்றை வைத்திருக்கிறான் என்பதையே அது காண்பித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் போலித்தனம் செய்து, ஜனங்களை வழித்தவறச் செய்கின்றனர். 116 அப்பொழுது மோசே, “நான் தவறு செய்துவிட்டேன் என்று நான் யூகிக்கிறேன். ஆகையால் நான் போய்விடுவது நல்லது” என்று கூறினானா? அவன் தேவனுடைய கட்டளைக்கு முற்றிலும் எழுத்துக்கு எழுத்து கீழ்ப்படிந்தவனாய் அங்கு அசையாமல் நின்றான். 117 அதன்பின், நீங்கள் அறிந்து கொள்ளுகிற முதற்காரியம் என்னவென்றால், மோசேயின் சர்ப்பம் மற்ற சர்ப்பங்களை விழுங்கியது. பாருங்கள்? அந்த மற்ற சர்ப்பத்திற்கு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறீர்களா? அது எவ்விடத்திற்குச் சென்றது? மோசே தன் கோலை எடுத்து, அதனுடன் வெளியே சென்றான். அக்கோலைக் கொண்டு அவன் அநேக அற்புதங்கள் செய்தான். இந்த கோலுக்குள் அந்த சர்ப்பம் இருந்தது. பாருங்கள்? அதுதான் அற்புதம். அது அற்புதமல்லவா? ஆம், ஐயா.
50118 இப்பொழுது அந்திக்கிறிஸ்து படிப்படியாக வெளியரங்கமாகிறான். நீங்கள் இதைக் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, நீங்கள் கேள்விப்படும் பொழுது… 119 இப்பொழுது என் கத்தோலிக்க நண்பர்களே, ஒரு நிமிடம் அமைதியாயிருங்கள். பிராடெஸ்டெண்டுகள், மற்றும் நாம் எல்லோருமே எங்கிருக்கிறோம் என்பதை நாம் காணப்போகிறோம். பாருங்கள். 120 முதலாம் சபையைக் கவனியுங்கள். கத்தோலிக்க சபை தங்களை முதலாம் சபை, மூல சபை என்று அழைத்துக் கொள்வது ஒரு விதத்தில் முற்றிலும் சரியே. அவர்கள் அவ்விதமே இருந்தனர். அவர்கள் பெந்தெகொஸ்தே நாளில்தான் ஆரம்பித்தனர். அங்குதான் கத்தோலிக்க சபை துவங்கினது. சபையின் சரித்திரம் அவர்கள் பெந்தெகொஸ்தே காலத்தில் ஆரம்பித்தது உண்மைதான் என்று நான் படித்து கண்டுபிடிக்கும் வரை என்னால் அதை நம்பமுடியவில்லை. அவர்கள் பெந்தெகொஸ்தே நாளில் துவங்கினர். ஆனால் அவர்கள் அகன்று போகத் தொடங்கினர். அவர்கள் எங்கேயுள்ளனர் என்பதை நீங்கள் காணலாம். 121 பெந்தெகொஸ்தே ஸ்தாபனமும் தற்போதைய வேகத்தில் அகன்று செல்லுமானால், கத்தோலிக்க சபையைப் போன்று அதற்கு இரண்டாயிரம் வருடகாலம் அவசியமில்லை. இன்றிலிருந்து நூறு வருடங்களுக்குள்ளாக அவர்கள் கத்தோலிக்க சபையைக் காட்டிலும் மிகுதியாக அகன்று சென்றிடுவார்கள். அது உண்மை.
51122 ஆனால், இந்த வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்பவன் எப்படி என்று கவனியுங்கள். இரண்டாம் முத்திரையை தியானிப்பதற்கு அவசியமான சூழ்நிலையை உண்டாக்குவதற்கு இவைகளைக் கூறுகிறேன். இப்பொழுது வெள்ளைக் குதிரையின் மேலிருப்பவன் புறப்பட்டுச் சென்றபொழுது கவனியுங்கள். அவன்—அவன் மூன்று கட்டங்களில் கிரியை செய்கிறான். நான் நேற்று இரவு உங்களுக்கு நிரூபித்துக் காண்பித்ததுபோல, பிசாசும், தேவனைப்போன்று ஒரு திரித்துவத்தில் மூன்று கட்டங்களில் காணப்படுகிறான். ஆனால், அந்த மூன்று கட்டங்களிலும் அதே பிசாசுதான். அவனுடைய மூன்று கட்டங்களையும் கவனியுங்கள். முதல் கட்டத்தில் அவன் வருவது… 123 பரிசுத்த ஆவியானவர் ஜனங்களின் மேல் ஊற்றப்பட்ட பின்னர், அவர்கள் எல்லாவற்றையும் பொதுவாக அனுபவித்தனர். தேவனுடைய ஆவியானவர் அவர்கள் மேல் தங்கியிருந்தார். அப்போஸ்தலர்கள் வீடுகள்தோறும் சென்று அவர்களுடன் அப்பம் பிட்டனர். அநேக அடையாளங்களும் அற்புதங்களும் அப்போஸ்தலர்களால் அக்காலத்தில் செய்யப்பட்டன. 124 அப்பொழுது முதலாவது நீங்கள் அறிவது என்னவெனில், சாத்தான் அவர்களிடையே ஒரு முறுமுறுப்பை உண்டுபண்ண ஆரம்பித்தான். 125 அதன் பின்னர் தேசத்தில் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்த எளியவரும் அடிமைகளும் வெவ்வேறு இடங்களுக்கு சென்று சாட்சி பகர்ந்தனர். அவர்கள் எஜமான்களுக்கு அவர்கள் சாட்சி பகன்றனர்.
52126 ஓ, சிலகாலம் கழிந்த பிற்கு இராணுவத் தலைவர்களும், வித்தியாசமான ஜனங்களும் வருகை தர ஆரம்பித்தனர். மற்றும் பல கௌரவம் வாய்ந்தவர்களும் இந்த மனிதர்கள் நிகழ்த்தும் அடையாளங்களையும், அற்புதங்களையும் காணத்துவங்கி, அவர்களும் கிறிஸ்தவ மார்க்கத்தை ஏற்றுக்கொண்டனர். 127 நல்லது. அதன்பின், நீங்கள் பாருங்கள், அவன் கிறிஸ்தவ மார்க்கத்தை தழுவிக்கொண்டபொழுது, கிறிஸ்தவர்கள் எங்கு கூடினார்களோ அங்கே, பழைய இருளடைந்த அறைகளில் தங்கள் கைகளைத் தட்டி சத்தமிட்டு, அன்னியபாஷையில் பேசி, செய்திகளைப் பெற்றுக் கொண்டார்களோ அங்கே சென்றான். ஏன், அவன் தன்—தன் சக வியாபாரி, போட்டியாளன். (Competition) “அவன் இதை, இதைப் போன்றதை ஒருபோதும் விசுவாசிக்கமாட்டான்” என்பதால், அதை அவனால் அவர்களிடம் ஒருபோதும் கொண்டு செல்லவும் முடியாமல் போயிற்று. உண்மையாகவே முடியவில்லை. ஆகவே, அவன் அம்முறையை மாற்றி அமைக்க எண்ணினான். அதனால், அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, “இப்பொழுது நாம் சிறிது வித்தியாசமான ஒன்றை உருவாக்குவோம்” என்று யோசிக்க ஆரம்பித்தனர்.
53128 இயேசுவும் சரியாக தாமதமில்லாமல் வெளிப்படுத்தல் 2-ம் அதிகாரத்தில் முதலாம் சபைக்குச் செய்தியை அளிக்கும்போது, “நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளின் நிமித்தமாக, நான் உங்களை சற்று எதிர்க்கிறேன்” என்று கூறினார். 129 நிக்கொலாய் என்பது “சபையின் மேல் ஜெயங்கொள்ளுதல்” எனப் பொருள்படும். அதாவது, நாம் அனைவரும் ஒருவர் என்பதற்குப் பதிலாக, அவர்கள் “பரிசுத்த மனிதன்” என்னும் ஒருவனை சபையில் ஏற்படுத்த முயன்றனர். அவர்கள் ஒரு விதமாக…ஏற்படுத்த விரும்பினர்… அவர்கள் விட்டு வந்த அஞ்ஞான மதத்தின் மாதிரியின்படி கிறிஸ்தவ மார்க்கத்தையும் அமைக்கத் தலைப்பட்டனர். அதைச் செய்து முடித்தனர். 130 இப்பொழுது கவனியுங்கள். முதலாவதாக “நிக்கொலாய்”. நிக்கொலாய் என்பது வேதத்தில் “அந்திக்கிறிஸ்து” என்று அழைக்கப்படுகின்றது, ஏனெனில் அது கிறிஸ்துவின் மூல உபதேசங்களுக்கும் அப்போஸ்தலர் உபதேசங்களுக்கும் விரோதமாயிருந்தது.
54131 சில வருடங்களுக்கு முன்னால் ஒரு புகழ்வாய்ந்த மனிதன் நடத்தும் கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். அவருடைய பெயரை அறிவிக்க நான் விரும்பவில்லை. அவருடன் நான் கைகுலுக்கினேன்! ஆகையால் நான் கூட்டத்திலிருக்கிறேன் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர், “ஓ, உங்களுக்குத் தெரியுமா, தங்களை பெந்தெகோஸ்தேகாரர் என்று அழைத்துக்கொள்பவர்கள் இன்று நம்மிடையே உள்ளனர்” என்று கூறினார். மேலும் அவர், “அவர்கள்—அவர்கள் அப்போஸ்தலருடைய நடபடிகளின் புஸ்தகத்தை ஆதாராமாகக் கொண்டுள்ளனர். நீங்கள் பாருங்கள், ஆனால் அது சபை கட்டப்படுவதற்கென தற்காலிகமான சாரமாய் அமைந்த ஒன்றாகும்” (Scaffold Work) என்றார். 132 வேதத்தை நன்கு படித்து அறிந்திருந்த அந்த தீரமுள்ள வயோதிபர் இவ்வாறு குறிப்பிடுவதைப் பற்றி நம்மால் கற்பனை செய்தும் பார்க்க முடியுமா? அதன் கருத்து அந்த சொற்கள் பரிசுத்த ஆவியினால் உண்டானவையல்ல. நல்லது. அது எங்கேயும் பொருந்தாது.
55133 ஏனெனில் சாதாரண அறிவைப் பெற்றிருக்கும் மனுதனும்கூட அப்போஸ்தலர் செய்த கிரியைகள், அவை அப்போஸ்தலருடைய கிரியைகள் அல்லவென்றும், அவை அப்போஸ்தலர்களுக்குள் இருந்த பரிசுத்த ஆவியானவர் நடப்பித்த கிரியைகள் என்றறிவான். சபையின் காலங்களைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, எவ்வாறு நான்கு ஜீவன்களான மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பவரின் சுவிசேஷ புஸ்தகங்கள் சூழநின்று மத்தியிலுள்ள அப்போஸ்தலருடைய நடபடிகளின் புஸ்தகத்தைக் காவல் காக்கின்றன என்று உதாரணப்படுத்தினோமல்லவா? மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், எழுதின சுவிசேஷங்களின் விளைவினால் அப்போஸ்தலருடைய நடபடிகள் உண்டாயின. 134 அதுதான் மரத்தில் தோன்றிய முதல் கிளைகளாகும். சம்பவித்ததும் அதுவேயாகும். அம்மரத்தில் வேறொரு கிளை தோன்றுமாயின், அப்பொழுது நடைபெறும் கிரியைகள் அப்போஸ்தலருடைய நடபடிகளின் புஸ்தகத்தைப் போன்ற வேறொரு புஸ்தகத்தில் எழுதப்படும். ஏனெனில், நீங்கள் பாருங்கள், ஒரேவகையான ஜீவன்தான் அவைகளில் காணமுடியும்.
56135 ஆனால் இன்றைக்கு நாம் இந்த ஸ்தாபன சபைகளை நோக்கும்போது, மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், லூத்தரன், கிறிஸ்துவின் சபை, பெந்தெகொஸ்தே சபை என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஸ்தாபனங்களில் இந்த ஜீவன் காணப்படுகின்றதா? அதை ஒருக்காலும் நீங்கள் இத்தகைய ஸ்தாபனங்களில் காணமுடியாது. 136 பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தில் இது சிறிதாகிலும் காணப்படுகின்றது என்பதை நான் ஒப்புகொள்ளுகிறேன், ஏனென்றால் அவர்கள் லவோதிக்கேயா சபையின் காலத்தில் தோன்றினவர்கள். அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடித்திருந்தனர். ஆனால் இப்பொழுதோ அதைப் புறக்கணித்துவிட்டனர். அவர்கள் வெதுவெதுப்பாக ஆனபடியால், தேவன் அவர்களைத் தம் வாயிலிருந்து வாந்திப்பண்ணிப் போட்டார். அது சரியாக வேதத்தின்படியாய் உள்ளது. 137 உங்களால் வேதத்தை பொய்யுரைக்கச் செய்ய முடியாது. பாருங்கள். அவைகள் எப்பொழுதுமே சத்தியமாயிருக்கப் போகிறவைகளாகும். வேதம் உங்கள் சிந்தனைக்கு இணங்க வேண்டுமென்று நீங்கள் எண்ண வேண்டாம். அதற்கு மாறாக உங்கள் சிந்தனை எப்பொழுதும் வேத வாக்கியங்களுடன் ஒத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் தேவனுடன் நடைபோட முடியும். அதற்காக உங்கள் சிந்தனையை நீங்கள் எவ்வளவாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. உங்கள் சிந்தனை வேதத்துடன் இணைந்திருக்கட்டும். பாருங்கள்?
57138 பரிசுத்த ஆவி முதன்முறையாக மக்களின் மேல் விழுந்தபோது என்ன நிகழ்ந்ததென்று பாருங்கள். நல்லது. தேவன் முதன்முறை என்ன செய்தாரோ, அவ்வாறே இரண்டாம் முறையும் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் அவர் அதையே செய்ய வேண்டும். இல்லையெனில், அவர் முதலில் தவறு செய்தார் என்று அர்த்தமாகிறது. பாருங்கள்? நாம் மானிடராயிருக்கின்ற காரணத்தால், நம்மால் தவறுகள் செய்ய முடியும். தேவனால் தவறுவது கூடாத காரியம். 139 தேவனின் முதல் தீர்மானம் பரிபூரணமானது. அவர் செய்யத் தீர்மானித்திருக்கும் முறையைக் காட்டிலும் சிறந்த முறை இருக்க முடியாது. அதன்மேல் அவர் திருத்தல்கள் செய்ய முடியாது. ஏனெனில் அது ஆரம்பத்திலேயே பரிபூரணமாயிருக்கின்றது. இல்லையெனில், அவர் முடிவற்றவர் (infinite) அல்ல. அவர் முடிவற்றவராயிருந்தால், அவர் எல்லாமறிந்தவராயிருத்தல் வேண்டும் (Omniscient). அவர் எல்லாமறிந்தவராயிருந்தால், அவர் சர்வ வல்லமை பொருந்தினவராய் (Omniscient) இருத்தல் வேண்டும். ஆமென்! அவர் தேவனாயிருப்பதற்கு இத்தகைய தன்மைகளைப் பெற்றிருத்தல் அவசியம். பாருங்கள். அவர் பின்னர் “அதிகம் அறிந்து கொண்டார்” என்று நீங்கள்—நீங்கள் சொல்ல முடியாது. ஏனெனில் “அவர் அறிந்திருப்பதைக் காட்டிலும்” அதிகம் அறிந்து கொள்ள முடியாது. அவரே—அவரே எல்லா ஞானத்திற்கும் ஊற்றாவார். பாருங்கள்? 140 நம்முடைய ஞானம் இங்கே சாத்தானிடத்திலிருந்து தோன்றினது. நாம் அதை ஏதேன் தோட்டத்திலிருந்து சுவீகரித்துக்கொண்டோம். அங்கேதான் நாம் விசுவாசத்திற்கு பதிலாக ஞானத்தை மாற்றிக்கொண்டோம். ஏவாள் அதைச் செய்தாள்.
58141 இப்பொழுது அவன் முதலில் அந்திகிறிஸ்து என்று அழைக்கப்படுகிறான். இரண்டாம் கட்டத்தில் அவன் கள்ளக்கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறான். ஏனெனில் அதுவரை மக்களிடையே காணப்பட்ட ஆவி அப்பொழுது ஒரு மனிதனுக்குள் வாசம் செய்கிறது. 142 வெள்ளைக்குதிரையின் மேலேறியிருந்தவன் புறப்பட்டுச் சென்றபோது அவனுக்குக் கிரீடமில்லை என்பது நினைவிருக்கிறதா? பின்பு, அவனுக்குக் ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது. ஏன்? அவன் தொடக்கத்தில் நிக்கொலாய் (Nicloaitane Spirit) ஆவியாயிருந்து, பின்னர் ஒரு மனிதனுக்குள் வாசம் செய்து, பின்னர் அவன் கிரீடம் சூட்டப்பட்டு, ஒரு சிம்மாசனத்தில் வீற்றிருந்தான். அச்சிம்மாசனத்தில் அவன் வெகுகாலம் வீற்றிருந்தான் என்பதை முத்திரைகள் உடைக்கப்படுவதில் நாம் பார்க்கலாம். 143 வெகுகாலம் கழிந்த பின்னர், சாத்தான் பரலோகத்திலிருந்து வெளியே உதைத்துத் தள்ளப்பட்டான். அவன் வேதவாக்கியங்களின்படியாய் கீழேவந்து, அரியணையில் தன்னை அமர்த்திக்கொண்டான். அவன் அந்த மனிதனுக்குள் தன்னை அரியணையிலமர்த்திக் கொண்டு (enthroned himself) மிருகமாகிறான் என்பதைச் சற்று சிந்தியுங்கள். அவன் மிகுந்த வல்லமை கொண்டவனாய், மேலான வல்லமை கொண்டவனாய், அவன் செய்தது போன்றே எல்லா அற்புதங்களை செய்து, யுத்தத்தில் அநேகரைக் கொன்றுபோடுவேன். ரோமாபுரி தன்னாலியன்றவரை இவை அனைத்தையும் செய்யும். அது உண்மை. அவன் கொடூரமான ரோம தண்டனையை அநேகருக்கு விதித்து அவர்களைக் கொன்றான். ஓ, இப்பொழுது இங்கே சில வேத வாக்கியங்களைப் படிக்க முடிந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்!
59144 இயேசு கிறிஸ்துவும் சிலுவையில் அறையப்படுதல் என்னும் ரோம தலையாய தண்டனை விதிக்கப்பட்டு மரித்தார் என்பதை ஞாபகங்கொள்ளுங்கள். 145 அடுத்த பெரிய வெள்ளிக்கிழமை பிறபகலன்று நான் பிரசங்கிக்க என் இருதயத்தில் தீர்மானித்திருக்கும் செய்தி, “அங்கே அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்” என்னும் தலைப்பைக் கொண்டதாயிருக்கும். பாருங்கள் “அங்கே” —உலகத்திலேயே பரிசுத்தமான, மதசம்பந்தமான காரியங்களில் ஈடுபட்டிருந்த ஸ்தலம் எருசலேம் “அவர்கள்”,—உலகிலேயே மிகவும் பரிசுத்தமுள்ளவரென்று (கருத்தப்பட்ட) யூதர்கள், அவர்கள் “ சிலுவையிலறைந்தார்கள் ” ரோமாபுரி கொண்டிருந்த மிகக் கொடூரமான தண்டனை அங்கே அவர்கள் “ அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்” என்னே? இதுவரை வாழ்ந்தவர் எல்லாரிலும் மிகவும் மகத்தானவர். “அங்கே அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தனர்”. ஓ, என்னே! 146 வியாபாரிகளின் சங்கத்தில் நான் இச்செய்தியை அளிக்கும்போது, தங்கள் நிலையை அவர்கள் அறிந்துகொள்ள தேவன் எனக்கு உதவி செய்வாராக! சரி. இப்பொழுது, வித்தியாசப்பட்டவர்கள் என்பதற்காக அல்ல. அவர்களைத் தாக்க வேண்டுமென்பதற்காக அல்ல. அவர்கள் பிரசுரிக்கும் வியாபாரிகளின் பத்திரிகை (Bussiness Men’s Journal) யில் பரித்த பிதாக்களைக் குறித்தும், முக்கியஸ்தர்களைக் குறித்தும் அவர்கள் எழுதுபவை அனைத்தும் அர்த்தமற்றவை என்பதை அறிவுறுத்தவே. கிறிஸ்தவர்கள் எந்த ஒரு மனிதனையும் “பிதா” என்று அழைக்கக்கூடாது. அவர்கள் அதைத் தொடங்கினர். என்னால் முடிந்தவரை அவர்களுக்கு நான் ஒவ்வொரு காரியத்திலும் உதவி செய்ய முயன்றிருக்கிறேன். இந்த பிரசங்கம் பதிவு செய்யப்பட்டுள்ள ஒலிநாடாக்கள் அங்கு செல்கின்றன என்பதை நீங்கள் கவனிக்கவும். நான் அதை முடித்து விட்டேன். ஆகையால் இனிமேல் அவர்களுக்கு நான் நிச்சயமாக புத்திமதி கூறப்போவதில்லை. அது உண்மை. முதலாவது, கிறிஸ்துவை நினைவுகூறுங்கள்.
60147 முதலாவதாக, நிக்கொ…நிக்கொலாய், அந்த நிக்கொலாய் காலம் கேட்டுக்கொண்டது என்ன? அக்காலத்தில் மக்கள் கூச்சலிட்டு, கைகளைத் தட்டிப் பாடி, பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு, இகழ்ச்சிக்குரியவர்போல் காணப்பட்டு, பெந்தேகோஸ்தே நாளில் நிகழ்ந்தது போன்று, குடிகாரரைப் போல நடந்து கொண்டே கூட்டத்திலிருந்து விலக வேண்டுமென்று கூறினது. இதை கௌரவம் வாய்ந்த அவர்கள், இதைச் சகிக்க முடியாமல் அவர்களிடமிருந்து பிரிந்துபோக விழைந்தனர். அவர்கள் குடிகாரரென்று அவர்கள் அழைத்தனர். அந்த மேட்டுக்குடியினர்…கவனியுங்கள். இதைத் தவறவிட வேண்டாம். இது உங்களுக்கு முட்டாள்தனமாக தொனித்தாலும், இது சத்தியமாய் உள்ளது. அந்த கௌரவம் வாய்ந்தோர் அங்கு வர ஆரம்பித்தபொழுது, அவர்களால் தங்களைத் தாழ்த்திக் கொண்டு அங்ஙனம் பணிந்து நடந்து கொள்ள முடியவில்லை. 148 தேவன் தம்மைப் பணிவான நிலைக்குத் தாழ்த்துவதனால் அது அவரை மிகப்பெரியவராக்குகிறது. அதுதான் அவரை மகத்தானவராக்குகின்றது. அவரைக் காட்டிலும் மகத்தானவர் யாருமில்லை. ஆனால் எந்த மனிதனும் தன்னைத் தாழ்த்திக் கொள்ளமுடியாத அவ்வளவு பணிவான நிலைக்கு அவர் தம்மைத் தாழ்த்திக் கொண்டார். அவர் பரலோகத்தின் ராஜாவாயிருந்தார். ஆனால் பூமியிலேயே மிகவும் எளிமையான பட்டிணமாகிய எரிகோவுக்கு அவர் வந்தார். அங்கு பட்டிணத்தில் மிகவும் குள்ளனான சகேயுவும்கூட கீழே குனிந்து தம்மைக் காணத்தக்கவாறு அவர் தம்மை அந்த நிலைக்குத் தாழ்த்திக் கொண்டார். அது சரிதானா? சகேயு, அது சரி. அவர் “மந்திரவாதி என்றும், பிசாசு என்றும், பெயல்செபூப்” என்றும் மிகவும் மோசேப் பெயர்களால் அழைக்கப்பட்டார். உலகம் அவரை அவ்வாறு தான் எண்ணியிருந்தது. அவர் கொடூரமான மரணம் எய்தினார். அவருக்குத் தலைசாய்க்க இடமில்லாமல் இருந்தது. எல்லா ஸ்தாபனங்களாலும் அவர் புறக்கணிக்கப்பட்டார்.
61149 ஆனால் தேவன் அவரை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தினதால் இப்பொழுது அவர் பரலோகத்தைக் காண, குனிந்து பார்க்க வேண்டியதாயிருக்கிறது. தேவன் எவ்வளவாய் எளிமையில் உள்ளார் என்பதைக் காணுங்கள். பாருங்கள்? தேவன் அவருக்கு மகத்தான நாமத்தையளித்து, அவர் இப்பொழுது வானோர், பூதலத்தோர் இவர்களின் நாமக்காரணராயிருக்கிறார். வானோரின் குடும்பங்களும் பூதலத்தோரின் குடும்பங்களும் “இயேசு” வென்று பெயரிடப்பட்டுள்ளன. முழங்கால்கள் யாவும் அவருக்கு முன்பாக முடங்கும்படிக்கும் நாவுகள்யாவும், இங்குள்ளவரும், பாதாளத்திலுள்ளவரும் அவரை கர்த்தர் என்று அறிக்கை பண்ணும்படிக்கும், அவர் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தைப் பெற்றிருக்கிறார். பாதாளம் அவருக்கு முன்பாக முழங்காற்படியிட வேண்டும். எல்லாமே அவருக்கு முன்பாக பணிய வேண்டும். பாருங்கள்? முதலில் அவர் எளிமையுள்ளவராயிருந்து, பின்னர் மகத்தான ஸ்தானத்திற்கு தேவனால் உயர்த்தப்படுகிறார். பாருங்கள்? தேவன் உயர்த்தட்டும். “தன்னைத் தாழ்த்துகிறவனெவனும் உயர்த்தப்படுவான்”. பாருங்கள்.
62150 இப்பொழுது இந்த நிக்கொலாய் ஆவி ஞானத்தைப் பெற்று சாமர்த்தியமுள்ளதாய் இருக்க விரும்பியது என்று நாம் காண்கிறோம். ஏதேனில் நடந்தது போன்று இந்த ஆவியும் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் ஞானத்தினால் ஆலோசனை செய்தது. அதில்தான் சபை வீழ்ச்சியுற்றது. அது என்னவாயிருந்தது? 151 இப்பொழுது, நம் சபையை ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அதேபோல, நம்மில் சிலர் உண்மையாகவே ஆவியினால் நிரப்படாதவர்களைப் போன்றவர்களாக இருப்பதாக உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். இப்பொழுது நாம் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ள…இப்பொழுது, நம்முடைய நகராண்மைக் கழகத் தலைவரிடம் நமக்கு எந்த விரோதமும் கிடையாது. எனக்கு திரு. பாட்டார்ப் அவர்களைத் தெரியாது என்று நினைக்கிறேன். திரு.பாட்டார்ப் அவர்கள் இன்னமும் நகராண்மைக் கழகத் தலைவராக இருக்கின்றாரா? பாருங்கள், திரு.பாட்டார்ப் என்னுடைய அருமையான ஒரு நண்பர். பாருங்கள். ஆனால் இந்தப் பட்டிணத்தின் நகராண்மைக் கழகத் தலைவரும், (Mayor) காவல்துறை அதிகாரிகளும், இராணுவ உயர் அதிகாரிகளும் இங்கு வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். முதலாவது சம்பவிக்கும் காரியம் என்னெவென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் செயற்குழுவையும் மற்ற அங்கத்தினரையும் சந்தித்து, “இப்பொழுது, என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இவையெல்லாம் வித்தியாசமாயிருக்க வேண்டும்” என்று சொல்லுவதற்கு அவர்களுக்கு எண்ணம் தோன்றும். நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படாமல் இருந்து, பிரசங்க பீடத்தின் பின்னாலுள்ள மனிதன் உண்மையாகவே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தாலும், நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முதல் காரியம் என்னவெனில் அவர்களுடைய விருப்பத்திற்கு இணங்க நேரிடும். ஒரு வேளை இது இந்தத்தலைமுறையில் இல்லாவிடினும், அடுத்த தலைமுறையில் ஒருவேளை நேரிடலாம்.
63152 அவ்வாறே முதலாம் சபையின் காலத்திலும் தொடங்கினது. பாருங்கள்? ஏன்? அவர்கள், “இங்கே பாருங்கள். அது நியாயமாய்த் தோன்றுகின்றது” என்று கூறிக்கொண்டிருந்தனர். நீங்கள், நீங்கள் செவிகொடுப்பீர்கள். 153 ஒரு மனிதன் இங்கு வந்து, “இந்த சபை சிறியதாயிருக்கிறது. நாம் இங்கு ஒரு பெரிய சபையைக் கட்டுவோம். நான் உங்களுக்கு ஒன்றை இங்கு கட்டித் தருகிறேன், அது…அதன் மதிப்பு ஐந்து இலட்சம் டாலர்களாக இருக்கும். அது இவ்விடத்தில் கட்டப்படும். அதற்கு பணம் சேமிப்பதற்கென நான் வானோலி மூலம் அறிக்கை விடுக்கிறேன்” என்று கூறினார் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அதைச் செய்யும்பொழுது, அவர்கள் வெட்டுவதற்கு ஒரு கோடாரியைப் பெற்றுக் கொண்டது போலாகும். அங்ஙனமாயின், தொண்ணூறு சதவிகிதம் அவர் தன்னயமான சிரத்தை கொண்டுள்ளர் என்பதை முதற்காரியமாக நிங்கள் அறிந்து கொள்கிறீர்கள். முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அப்பொழுது அவர் அதைச் செய்யும்பொழுது, அவர் தனக்கு ஏற்புடையதாக அமைத்துக் கொள்கிறார். எனவே “உங்களால் அவருக்கு விரோதமாக ஒன்றுமே சொல்ல முடியாது, ஏனென்றால அங்கே பின்னால் உள்ள ஜான் டோயி, அவர் இந்த சபையில் நிதிஉதவியாளராய் இருக்கிறார்”. பாருங்கள்? அதன்பின்னர் நீங்கள் தேவனைக் குறித்து ஒன்றுமே அறியாத ஒரு ரிக்கி (Ricky) வேத பள்ளியிலிருந்து கொண்டு வரப்பட்டு போதகனாக நியமிக்கப்படுவான். எப்படி ஒரு ஹாட்டன்டாட் என்ற தென் ஆப்பிரிக்கா பழங்குடி இன வகையைச் சார்ந்த ஒருவன் எகிப்தில் உள்ள அரசகுமாரனைப் பற்றி அறியாதிருக்கின்றானோ, அதே போன்று இப்போதகன் அம்மனிதனின் விருப்பத்திற்கிணங்குவான். ஏனெனில் அவர் போதகனுக்கு ஒரு புதிய கார் வாங்கிக் கொடுப்பார். மேலும் அவர் அங்குமிங்கும் சென்று அவருக்கு இதை, அதை, மற்றவை வாங்கிக் கொடுப்பார்.
64154 இப்பொழுது அது சரியாக இவ்விதமாகவே ஆரம்பித்தது. சரி. ஞானம், சாமார்த்தியம்! அவர்கள், “இப்பொழுது, இங்கே கவனியுங்கள், இது மெச்சத்தகுந்ததல்லவா? நம்முடைய பெண்மணிகள் இப்பொழுது அவர்களுடைய தலைமுடியை எப்படி வைத்திருந்தால் என்ன? அதில் என்ன வித்தியாசமுள்ளது?” என்று கேட்டனர். ஆனால் வேதம் அதில் வித்தியாசம் உள்ளதாகக் கூறுகிறது. நூற்றுக்கணக்கானவைகள் இருந்த போதிலும், இந்த ஒரு காரியத்தைப் பாருங்கள்? அதில் வித்தியாசம் உண்டு. தேவன் அதில் வித்தியாசம் உண்டு என்றால், அதில் நிச்சயமாக வித்தியாசமுண்டு. 155 ஆனால், நீங்கள் பாருங்கள். அவ்விதமான வித்தியாசம் சபையில் தர்மகர்த்தாக்களின் குழு, உதவியாளர்கள், இன்றும் மற்றவரால், ஆரம்பிக்கப்பட்டால் முதலில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், போதகன் அதை ஆட்சேபித்து வெளியேற வேண்டும். அல்லது அதை ஆமோதித்து அங்கு நிலைத்திருக்க வேண்டும். அவ்வளவுதான். பாருங்கள், சபையின் மக்கள் தாம் அதற்கு சம்மதம் தெரிவித்து அதை சபையில் நுழைந்தனர். சரி.
65156 இப்பொழுது கவனியுங்கள். இந்த நிக்கொலாய் ஆவி, கௌரவம் வாய்ந்தவர்கள் அங்கத்தினராயிருந்த சபை அசைவாடத் தொடங்கினது. அதிக பணமும் அவர்களால் சபைக்கும் கிடைத்தது. ஆகையால் மக்கள் இவர்கள் சொற் கேட்டு பணிந்தனர், பிசாசின் குரூரத் தன்மை. 157 ஏவாளும் இதைத்தான் ஏதேன் தோட்டத்தில் செய்தாள். இப்பொழுது, நீங்கள் அதைக் கேளுங்கள். அது உண்மை. கவனியுங்கள். ஆதாமின் சரீரப்பிரகாரமான மணவாட்டியான ஏவாள் ஆதாமின் மனைவியாவதற்கு முன்பு பிசாசின் உபாயத்திற்குப் பணிந்தாள். அவள் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் ஞானத்தை உபயோகித்தாள். ஆதாம் ஏவாளுடன் கணவணும் மனைவியுமாக வாழ்வதற்கு முன்னமே சாத்தான் அவனைத் தோற்கடித்தான். அது உண்மை. நான் பிரசங்கித்த மணவாட்டி மரம் (The Bride Tree) என்னும் என் செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது இதைப் போதிக்கிறது. பாருங்கள். சரி. இப்பொழுது கவனியுங்கள். அங்கே ஏவாள் ஞானத்திற்குப் பணிந்தாள். இப்பொழுது அவன், சாத்தான் அதை காரணிக்க முயற்சித்தான். அவள் சாத்தானிடம், “கர்த்தர் இவ்விதம் உரைத்திருக்கின்றாரே…” என்றாள். 158 அவன், “ஓ, உனக்குத் தெரியுமா, கர்த்தர் நிச்சயமாக அவ்விதம் சொல்லியிருக்கவே மாட்டார். பாருங்கள்? நீ, நீ ஞானத்தைப் பெற விரும்புகிறாய். சிலவற்றை அறிந்து கொள்ள நீ விரும்புகிறாய். ஏன்? நீ ஒரு ஊமைக் குழந்தையேயல்லாமல் வேறொன்றுமில்லை. பார்த்தாயா? நீ சிலவற்றை அறிந்து கொள்ள வேண்டும்” என்றான். அது சாத்தானே அல்லவா! ஓ, என்னே! 159 அது இந்த நாகரீகமான சிலவற்றைப் போன்றதல்லவா? பாருங்கள், அவர்கள், “ஓ…அவர்கள் பரிசுத்த உருளையர் கூட்டம். அவர்கள்மேல் எந்த கவனமும் செலுத்த வேண்டாம். நீங்கள் பாருங்கள். அங்கு போக வேண்டாம். பாருங்கள்?” என்கின்றனர்.
66160 இப்பொழுதும் மானிடவர்க்கத்தின் முதலாம் மணவாட்டி, தேவன் அவளை அரணாக்கப்பட்ட தம்முடைய வார்த்தைக்குப் பின்னே வைத்திருந்த பிறகும், அவனுடைய கணவன் அவளோடு சேருவதற்கு முன்பு சாத்தானின் பொய்க்குச் செவிகொடுத்து கிருபையினின்று விழுந்து போனாள். தேவனுடைய வார்த்தையின் பின்னால் மறைந்திருந்தால், அவள் ஒருக்காலும் விழுந்திருக்கவே மாட்டாள். இது மாம்சப் பிரகாரமான மணவாட்டிக்கு நேரிட்டது என்பதைக் கவனியுங்கள். 161 அவளுக்குக் கொடுக்கப்பட்ட சாபமென்ன? தேவனுடைய வார்த்தையின் பின்னிருந்து வெளியே வந்ததற்காக, அவளுக்கு கொடுக்கப்பட்ட உண்மையான சாபம் என்ன? 162 அவள் தேவனுடைய வார்த்தையை தொண்ணூற்றெட்டு சதவிகிதம் விசுவாசத்தாள். இதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் ஒரு காரியத்தை விட்டுவிட்டால், பாருங்கள்? அவள் முதலில் கர்த்தர் கூறிய அனைத்தையுமே விசுவாசித்தாள். ஓ, நிச்சயமாக அவர் கூறின யாவையும் அவள் சாத்தானுக்குத் தெரிவித்தாள். சாத்தானும் அது சரியென்று ஆமோதித்தான். குறி வைத்து சுடும்போது துப்பாக்கி சற்று அகன்று போனால் எவ்வாறு குறிதவறிவிடுமோ, அதுபோன்று சாத்தானும் உங்களை ஏதாவது ஒன்றில் மடக்கி வார்த்தையிலிருந்து சற்று அகலும்படி செய்கிறான். பாருங்கள்? அவன் விரும்புவதெல்லாம் அது ஒன்றே. அவ்வளவே. இப்பொழுது ஏவாள் தேவன் கூறின வார்த்தையைப் பெரும்பாலும் விசுவாசித்தாள் என்றாலும் அவள் தவறிவிட்டாள்.
67163 இப்பொழுது, சிறிது வேகத்தை ஏற்றுக் கொண்டு ஏவாள் தேவனுடைய வார்த்தையைப் புறக்கணித்தன் விளைவு. 164 நல்லது…“ஸ்திரீகளைக் குறித்து என்ன?” அல்லது “நீர் ஏன் பெண்களைக் குறித்து எப்பொழுதுமே குறைகூறிக்கொண்டிருக்கிறீர்?” என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் ஏதாவது ஒரு சிறிய காரியமாயிருந்தாலும், “அது முதல் அடையாளமாயிருந்தாலும், அதில் என்ன வித்தியாசமுள்ளது?” என்றும் நீங்கள் கேட்கலாம். உண்மையாக அதில் வித்தியாசமுண்டு. நீங்கள்… 165 அவையெல்லாம் இக்காலத்தில் சரிபடுத்தப்பட வேண்டும். ஏழுசபையின் காலங்கதோறும் இவையனைத்தும் யூகிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் தேவனே அதைப் பேசுகின்ற நேரம் வந்துள்ளது. அவர் அதைப் பேசுவது மட்டுமல்ல, தேவனே உண்மையை விளக்கிக் காண்பித்து அதை உறுதிபடுத்தி நிரூபிக்கிறார். அது உண்மை. அவ்வாறு செய்யாவிடில் அவர் தேவனல்ல. அவ்வளவுதான். தேவன் தம் வார்த்தையை ஆதரிக்கிறார். 166 இப்பொழுது கவனியுங்கள். மாம்ச பிரகாரமான ஸ்திரீகள்தான் தேவனுடைய வார்த்தையின் பின்னால் நின்று கொண்டிருப்பதற்கு பதிலாக, தேவன் அவளுக்குச் செய்யக் கூறினதைச் செய்வதற்குப் பதிலாக, அவள் தான் ஞானமடைய விரும்பி, சாத்தானுடைய விவேகத்திற்குச் செவி கொடுத்தாள். மானிடவர்க்கத்துக்கு மரணத்தை இழைத்தாள். அவள் ஞானத்தை விரும்பினாள். ஞானமாயிருக்க அவள் விவேகத்திற்கு செவி கொடுத்ததால், முழுமானிடவர்க்கத்தையே இழந்தாள். பாருங்கள்?
68167 இப்பொழுது இந்த நேரத்திலே, ஆவிக்குரிய ஸ்திரீயும், கிறிஸ்துவின் மணவாட்டி ஆதி அப்போஸ்தல சபையுடன் பெந்தெகொஸ்தே நாளில் தோன்றி நிசாயாவின் மாநாட்டில் தேவனுடைய வார்த்தையை இழந்து போனாள். லீ! (Lee) அது சரியென்று உமக்குத் தெரியும். நிசாயா மாநாட்டில் அவள் தன்னுடைய ஆவிக்குரிய பிறப்புரிமையை விற்றுப்போட்டு கான்ஸ்டன்னடன் அரசின் பிரம்மாண்டமான ஆலயங்களையும், அவன் அவர்களுக்கு அளித்த காரியங்களையும், ரோமபுரி ஏற்படுத்தின கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டாள். நான் கூறுவது கத்தோலிக்கர்களை புண்படுத்தும். ஆனால் பிராடெஸ்டெண்டுகளும், அதையே செய்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் வேசியின் குமாரத்திகளென வேதத்தில் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் சரியாக அப்படியே உள்ளனர். எவ்வித சாக்குபோக்கும் கிடையாது. 168 ஆனால் அவர்களைச் சேராத ஒரு சிறு கூட்டம் மணவாட்டியின் ஸ்தானத்தை எப்பொழுதும் வகித்து வந்துள்ளது. 169 கவனியுங்கள். அவள் கணவன் அவளை சேரும் முன்பு, பிறப்புரிமைகளை இழந்தாள், பாருங்கள், அவளும் கலியாணம் ஆகும் முன்பு, அவள் தன் கற்பை இழந்துபோனாள், பாருங்கள்?
69170 லவோதிக்கேயா சபையின் காலத்தில் அவள், “நான் அரசியைப் போல் இருக்கிறேன். எனக்கு ஒன்றும் தேவையில்லை. நான் திரவியசம்பன்னன். எனக்கு ஒரு குறைவுமில்லை” என்று சொல்வது உங்களுக்கு நினைவிருக்கலாம். “ஓ…முழு உலகமே என்னை நோக்கிப் பார்க்கிறது. நான் தான் மிகப்பெரிய பரிசுத்த சபை. நாங்கள் இந்த வழியாய் இருக்கிறோம்” என்று அவள் கூறுகின்றாள். முழுகாலமே அவ்விதம் கூறுகிறது. 171 ஆனால் தேவனோ அவளை நோக்கி, “நீ நிர்பாக்கியமுள்ளவளும், பரிதபிக்கப்படத்தக்கவளும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருப்பதை அறியாமல் இருக்கிறாய்” என்கிறார். அதுதான் அவளது நிலைமை. இக்கடைசி நாட்களில் அவளுடைய நிலைமை அவ்வாறாக இருக்கும் என்று பரிசுத்த ஆவியானவர் கூறியிருப்பதால், அது நிச்சயமாக அவ்வாறு இருக்க வேண்டும். வேறு எந்த விதத்திலும் அதைக் காணமுடியாது. அது அவ்விதமே இருக்கின்றது. 172 இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, அவள் ஆதியிலே அங்கே தன்னுடைய பிறப்புரிமைகளை, தேவனுடைய வார்த்தையின் கற்பின் உரிமையை விற்றுவிட்டபோது, அவள் என்ன செய்தாள்? ஏவாள் பாவத்தில் விழுந்தபோது, அவள் சிருஷ்டியை இழந்தாள். சர்வ சிருஷ்டியுமே அவளுடன் பாவத்தில் விழுந்தது. 173 இப்பொழுது கவனியுங்கள். சபையும், தேவனுடைய வார்த்தையையும் அவருடைய ஆவியையும் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, ரோம சபையின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டபோது, முழு ஸ்தாபன முறைமைகளையும் அது சத்தியத்திற்குட்படுத்தினது. அன்று முதல் நிறுவப்பட்ட எல்லா ஸ்தாபனங்களும் இனி இருக்கப்போவதும் அதனுடன் பாவத்தில் விழுவதைத்தவிர வேறு வழியில்லை.
70174 ஒரு கூட்டம் மக்கள் ஒரு விஷயத்தைக் குறித்து ஆலோசிக்கும்போது, ஒருவன் ஒரு விதமாகவும் வெறொருவன் வேறு விதமாகவும் சிந்திப்பான். இன்னொருவன் மற்றவிதமாகவும் சிந்திப்பான். இவையெல்லாவற்றையும் ஒன்றுபடுத்தும்போது, அதன் விளைவு குழப்பம்தான். அந்தவிதமாகத்தான் நீங்கள் அதைக் குழப்பத்தோடு பெற்றுக்கொள்வீர்கள். 175 அதைத்தான் சரியாக நிசாயா மாநாட்டில் அவர்கள் செய்தனர். அதுவே தான் மெதோடிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், கிறிஸ்துவசபை ஸ்தாபனத்தார், இன்னும் ஏனைய ஸ்தாபனத்தார் அனைவரும் செய்தனர். ஸ்தாபனத்தைச் சேர்ந்த எந்த ஒரு மனிதனும், தேவன் அவனுக்கு வெளிப்படுத்தினாலும் அதைப் பொருட்படுத்தாமல், அவனுடைய ஸ்தாபனத்தின் கொள்கைகள் கூறுவதையே பிரசங்கிக்க வேண்டும். இல்லையேல் அவன் வெளியே உதைத்துத் தள்ளப்படுவான். இப்பொழுது நான் கூறுவது தவறு என்று நீங்கள் எனக்குக் கூறாதீர்கள். நான் ஸ்தாபனத்தில் இருந்திருக்கிறேன். பாருங்கள் நான் அதை அறிவேன்.
71176 அது சரியாக அவ்விதமே சம்பவித்ததால் அவை யாவுமே சபிக்கப்பட்டுள்ளது. “என் ஜனங்களே, அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமல் இருக்கும்படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள்” என்று தூதன் உரைத்ததில் வியப்பொன்றுமில்லை. ஏனெனில் அவள் சபிக்கப்பட்டிருக்கிறாள். அவளுடைய பிறப்புரிமையையும், கற்பையும் அவள் விற்றுப்போட்ட காரணத்தால் தேவனுடைய சாபத்தின் கோபாக்கினை அவள் மேல் தங்கியுள்ளபடியால், அவள் துன்பப்பட வேண்டும். பாருங்கள்? ஆனால்…ஓ, என்னே! 177 ஆனால் ஞாபகங் கொள்ளுங்கள். ஆயினும் இத்தகைய நிலைமையிலும் கூட, “கடைசி காலத்தில் அவளுக்கு எல்லாவற்றையும் திரும்ப அளிப்பதாக” கர்த்தர் யோவேல் 2:25-ல் வாக்களித்துள்ளார். உங்களுக்கு வேண்டுமானால் அவ்வசனத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 178 “பச்சைப் புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது. வெட்டுக்கிளி விட்டதை பச்சைக்கிளி தின்றது. பச்சைக்கிளில் விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது”. இவ்விதம் ஒவ்வொரு பூச்சியும் சபையைத் தின்று போட்டு முடிவில் அடிமரம் மாத்திரம் மீந்திருக்கிறது. கவனியுங்கள்! ரோமர்கள் விட்டதை லூத்தரன் ஸ்தாபனத்தார் தின்றனர். லூத்தரன் விட்டதை மெத்தோடிஸ்ட் ஸ்தாபனத்தார் தின்றனர். மெதொடிஸ்டுகள் விட்டதை பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தார் தின்று முடிவில் அடிமரம் மாத்திரமே எஞ்சியுள்ளது. பாருங்கள்.
72179 நீங்கள் அது என்ன என்று அறிவீர்களா? முசுக்கட்டைப் பூச்சி, வெட்டுக்கிளி இவையாவும் ஒரே பூச்சி தன் வளர்ச்சியில் வித்தியாசமான நிலையை அடைவதலாகும் என்று நாம் புத்தகங்களின் வாயிலாக அறியலாம். 180 அந்த குறிப்பை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, முத்திரைகளுக்கு வாருங்கள். ஒரே பூச்சிதான் வித்தியாசமான நிலைகளில் காணப்படுகிறது என்பதை நாம் முத்திரைகளை ஒன்றன்பின் ஒன்றாக சிந்திக்கும்போது அறிந்து கொள்ளலாம். ஒரே பூச்சி தன் வளர்ச்சியில் நான்கு வித்தியாசமான நிலைகளை அடைகின்றன. முத்திரைகளிலும் ஒரே ஆவி தின்னாமல் விட்டதை, மற்றொன்று தின்று, முடிவில் அடிமரம் மாத்திரம் உள்ளது. 181 ஆனால் யோவேல், “நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப்புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் உரைக்கிறார்” என்கிறான்.
73182 அது என்ன? கர்த்தர் எவ்விதம் செய்யப் போகிறார்? அது கிறிஸ்துவின் போதனைகளுக்கு விரோதமான அந்திக்கிறிஸ்துவாகத் தோன்றி, தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக ஸ்தாபனத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டது. காலங்கள் கடந்து போகுந்தோறும், வேதம் கூறியவாறு சீர்திருத்தக்காரரும் அதில் ஈடுபட்டனர். 183 “ஆனால் கடைசி நாட்களில் எக்காளம்…” வெளிப்படுத்தின விசேஷம் 10;1-7-ல் அவர், “ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களில் அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும்” என்றார். “சூளையைப்போல் எரியும் பயங்கரமான நாள் வருவதற்கு முன்னே கர்த்தர் எலிசா தீர்க்கதரிசியை அனுப்புவாரென்றும் மல்கியா 4-ம் அதிகாரத்தில் அவர் கூறினார். அவன் பிள்ளைகளுடைய இருதயத்தை பிதாக்கள் கொண்டிருந்த மூல அப்போஸ்தல—பெந்தெகொஸ்தே—விசுவாசத்திற்கு திரும்பக் கொண்டு வருவான்”. இப்பொழுது வேதம் அதை கூறுவது அவ்வளவு தெளிவாக உள்ளது. இப்பொழுது அது வாக்களிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நாம் வாழ்வது கடைசி நாட்களாயிருக்குமானால், ஏதோ ஒன்று இப்பொழுது சம்பவித்தாக வேண்டும். பாருங்கள்? அது இப்பொழுது நிகழ்ந்து கொண்டு வருவதை நாம் கண்கூடாகக் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
74184 சாத்தானின் திரித்துவத்தைக் கவனியுங்கள். ஒரே ஆள் ஒன்றன்பின் ஒன்றாக மனிதனுக்குள் வாசம் செய்கிறான். சபையைத் தின்ற பூச்சிகளும் அவ்வாறே ஒன்றன் பின் ஒன்றாக மாறுகிறது. நிக்கொலாய், “அந்திக்கிறிஸ்துவின் ஆவி”. போப்பாண்டவர், “கள்ளத்தீர்க்கதரிசி,” “மிருகம்” பிசாசே மனுதனுக்குள் வாசம் செய்தல். அவனால் செய்ய முடியாததோ… 185 இப்பொழுது, இதை நீங்கள் மனதில் கொண்டால், குதிரையின் மேல் சவாரி செய்பவர்களும் ஒன்றன் பின் ஒன்றாக அந்நிலையையடைவதைக் காணலாம். பாருங்கள்! நான் உங்கள் முன்னிலையில் இதை ஒரு பாடமாக சித்தரிக்க முயல்கிறேன். கரும்பலகையில் வரைந்தால், இதை நீங்கள் இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ளலாம். பாருங்கள். நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
75186 முதலாவதாக, இப்பொழுது, இதை ஞாபகங்கொள்ளுங்கள். அவன் “அந்திக்கிறிஸ்துவின் ஆவியாய்” இருக்கிறான். யோவானும், “பிள்ளைகளே, அந்திக்கிறிஸ்துவின் ஆவி இப்பொழுதே கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் கிரியை செய்துக் கொண்டு வருகிறது” என்றான். பாருங்கள்! அப்பொழுதே வித்து முளைக்கத் தொடங்கினது. அடுத்த சபையின் காலத்தில் “அது வழக்காக” பேச்சாக, அதற்கு அடுத்த சபையின் காலத்தில் அது “போதகமாக” மாறி, அதற்கடுத்த சபையின் காலத்தில் அவள் “முடிசூட்டப்பட்டாள்.” இப்பொழுது இதை வாசிக்கிற உங்களுக்கு இது மிகவும் வெளிப்படையாய் அமைந்திருக்கவில்லையா? பாருங்கள்? பாருங்கள், அவ்விதமே அவன் வருகிறான். 187 இப்பொழுது முதலாவதாக, அவன் (என்னெவென்று) “அந்திக்கிறிஸ்துவின் ஆவி” என்று அழைக்கப்பட்டான். ஏனெனில் அவன் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் இருந்தான். அதுதான் அதைத் துவக்கியது. அந்திக்கிறிஸ்துவின் ஆவி தேவனுடைய வசனத்துக்கு விரோதமாய் முழுமையாய்க் கிரியை நடப்பித்து, மக்களை வசனத்திலிருந்து விலகும்படிச் செய்தது. ஏவாள் காயீனை கண்டிக்காததனால் இது ஏற்படவில்லை. பாருங்கள்? அதைச் செய்தது அதுவல்ல. முதலாவதாக, ஏவாள் வார்த்தையினின்று திருப்பப்பட்டாள். அவள் வார்த்தையிலிருந்து திரும்பினாள். அதுதான் எல்லாவற்றிற்கும் ஆரம்பம். தேவனுடைய வார்த்தையை விட்டகன்று ரோமபுரியின் தத்துவங்களை ஏற்றுக் கொண்டதன் விளைவாக ஜீவனுள்ள தேவனுடைய சபை கிறிஸ்துவின் மணவாட்டி—ஆவிக்குரிய விபச்சாரம் செய்தாள். ஒவ்வொரு ஸ்தாபனத்திற்கும் சம்பவித்தது என்ன? எல்லா ஸ்தாபனங்களும் அவ்விதமே செய்தன.
76188 இப்பொழுது, ஆனால் கடைசி நாட்களிலே திரும்ப அளிப்பதற்கு ஒரு வழி உண்டாக்குவேன் என்று அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளார். ஓ, அப்படியே “வார்த்தைக்கு எதிரானதிலிருந்து” (என்னத்திற்கு) ஆதி நிலைக்குத் திருப்புவார். தேவனுடைய ஆவியினாலே அபிஷேகம் பெற்ற இந்த மனிதன் என்ன செய்ய வேண்டியவனாயிருக்கிறான்? அவன், “பிள்ளைகளின் விசுவாசத்தை பிதாக்களின் விசுவாசத்திற்குக் கொண்டு வருகிறான்” அவன் இவ்விதமாகத்தான் திரும்ப அளிப்பான். தேவனுடைய வார்த்தையை அது இங்கு உள்ளபடி அதன் ஸ்தானத்தில் பொருந்தும்போது, அது முன்பு செய்த கிரியைகளையே இப்பொழுதும் செய்யும். 189 “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” என்று இயேசு கூறியுள்ளார். சில கிரியைகளை நடப்பிக்க அவர்கள் அவரிடம் கேட்டுக்கொண்டபோது, அவர், “பிதாவானவர் காண்பிக்கிறதை மாத்திரம் நான் செய்கிறேன். அதை நான் முதலில் காணாமல் எதையும் செய்வதில்லை. பிதாவானவர் செய்யக் காண்கிறதெதுவோ அதையேயன்றி வேறொன்றையும் நான் செய்ய மாட்டேன். பிதாவானவர் எவைகளைச் செய்கிறாரோ அவைகளை நானும் அந்தப்படி செய்வேன்” என்று சொல்லியிருக்கிறார். பாருங்கள்? நீங்கள் அதைக் காணவில்லையா? ஒரு பத்திரிகையைப் படிப்பது போன்று அவ்வளவு தெளிவாய் இது காணப்படுகிறதல்லவா? பாருங்கள்?
77இப்பொழுது, இப்பொழுது அவன் ஆரம்பத்தில் “அந்திக்கிறிஸ்துவின்” ஆவியாயிருந்தான். 190 இப்பொழுது, அவன் ஆவியில் மட்டும் அந்திக்கிறிஸ்துவாய் இருக்க முடியாது. அதன்பின் அவன் அந்திக்கிறிஸ்துவாகிறான். அந்திக்கிறிஸ்துவின் ஆவி போதிப்பதையே போதிக்கும் ஒரு மனிதனை அந்த ஆவி ஆட்கொண்டு, அந்த அந்திக்கிறிஸ்துவின் ஆவிக்கு, அவன் “கள்ளத்தீர்க்கதரிசியாகிறான்.” அப்படியானால் ஸ்தாபனத்தில் அங்கத்தினனாயிருப்பவனைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்களே யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். அதைக் குறித்து நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. அது சரி. 191 இப்பொழுது முடிவாக அவன் “மிருகமாக” மாறுகிறான். இப்பொழுது பொறுத்திருங்கள், நாம் சிறிது நேரத்திற்குப் பிறகு, அதைக் காணப் போகிறோம். பாருங்கள். அது சரி. 192 இப்பொழுது, சாத்தானின் திரித்துவம் இவ்வாறு உள்ளது. எல்லா நேரத்திலும் அது சாத்தானேதான். சாத்தான், “அந்திக்கிறிஸ்துவின் ஆவி”. அந்திக்கிறிஸ்துவின் ஆவி “கள்ளத்தீர்க்கதரிசி” க்குள் குடிகொள்ளுதல். அதன்பின் அவன் “மிருகமாக” வருகிறான். பாருங்கள்? அந்திக்கிறிஸ்துவுக்குள் ஒரு பிசாசாக அல்ல, (demon) சாத்தான் தாழத்தள்ளப்படும்போது, அந்தப் பிசாசு இருந்த இடத்தை அவன் எடுத்துக்கொள்ளுகிறான். அதன்பின் அந்த பிசாசு (devil) மனிதனுக்குள் குடிகொள்ளுகிறான். அது மீண்டும் மீண்டும் தன்னையே காண்பித்துக் கொள்கிறது.
78193 யூதாஸ் காரியோத்தும் அப்படிப்பட்டவனாய் இருந்தான். அவன் என்ன செய்தான்? அவன் கிறிஸ்துவுக்கு விரோதமாயிருந்தவர்களில் ஒருவனா? ஏன்? அவன் பொக்கிஷதாரியாக இருந்தான். அவருடன் அவன் நடந்து சென்றான். நிச்சயமாக, அவர்களுடனேயே அவன் நடந்து சென்றான். அவர்கள் செய்தது போன்று அவனும் பிசாசுகளைத் துரத்தினான். 194 தேவன் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்தார். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு இம்மானுவேலானார். யூதாஸ் கேட்டின் மகனாயிருந்தான். இயேசு தேவகுமாரனாயிருந்தார். ஒன்று தேவன் வாசம் செய்தல், மற்றொன்று பிசாசு வாசம் செய்தல். 195 சில ஜனங்கள் அந்த நேரத்தில் இருந்த மூன்று சிலுவைகளை மாத்திரமே காண்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்பொழுது நான்கு சிலுவைகள் இருந்தன. கொல்கொதாவில் மூன்று சிலுவைகள் இருந்தன என்று காண்கிறோம். மத்தியில் இயேசு தொங்கினார். அவர் வலது பாரிசத்தில் ஒரு கள்ளனும் இடது பாரிசத்தில் வேறொரு கள்ளனும் தொங்கினர். 196 கவனியுங்கள், ஒரு கள்ளன் மற்ற கள்ளனிடத்தில் இல்லை இயேசுவிடம், இயேசு வார்த்தையென்பது உங்களுக்குத் தெரியும். “நீர் வார்த்தையாயிருந்தால், உம்மை ஏன் நீர் இரட்சித்துக் கொள்ளக்கூடாது? அதைக் குறித்து ஏதாவது ஒன்று நீர் செய்யக்கூடாதா?” என்று கேட்டான்.
79197 இன்றைக்கும் அதுவே சம்பவிக்கிறது. அந்த பழைய பிசாசுகள் வந்து, “நீர் தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கை கொண்டிருந்தால், இங்குள்ள குருடனின் கண்களை ஏன் திறக்கக்கூடாது?” “கூடுமானால் என்னை குருடாக்கும், கூடுமானால் என்னை குருடாக்கும்” என்று கூறுவதை நீங்கள் கேட்டதில்லையா? அதே பழைய பிசாசுதான் அது. பாருங்கள்? “நீர் சிலுவையிலிருந்து இறங்கி வாரும். அப்பொழுது நாங்கள் விசுவாசிப்போம்” என்றும், “நீர் தேவனுடைய குமாரனானால், இந்த கல்லுகள் அப்பங்களாகும்படி செய்யும்” என்றும் சொன்ன அதே பிசாசுதான் இதுவும். 198 அவர்களை விட்டு அகன்று செல்லுங்கள். பாருங்கள்? இல்லை. இயேசுவும் அதையே செய்தார். அவர்களுக்காக அவர் கோமாளித்தனம் செய்யவில்லை. 199 அவர் முகத்தை அவர்கள் ஒரு கந்தைத் துணியால் மூடி, விலைமதிக்க முடியாத அவர் கண்களை இவ்விதமாக மறைத்து ஒரு கோலினால் அவர் தலையில் அடித்து, “நீர் தீர்க்கதரிசியினால் உம்மை அடித்தது யாரென்று இப்பொழுது எங்களுக்குச் சொல்லும்” என்றனர். அவர்கள் கோலை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டனர். “உம்மை அடித்தது யாரென்று எங்களுக்குச் சொன்னால், அப்பொழுது நீர் தீர்க்கதரிசியென்று நாங்கள் விசுவாசிப்போம்” என்றனர். அவர் தம்முடைய வாயைத் திறவாமலிருந்தார். அவர் அங்கே அமர்ந்திருந்தார். பாருங்கள்? அவர் அப்பொழுது கோமாளித்தனம் செய்யவில்லை. பிதாவானவர் காண்பிப்பதை மாத்திரமே அவர் செய்கிறார். நீங்கள் பாருங்கள், பாருங்கள்? அவர்கள் என்ன செய்தாலும் செய்யட்டும். அவர்களுடைய நேரம் வந்துகொண்டிருக்கிறது. ஆகையால் கவலை கொள்ள வேண்டாம். ஆம், ஐயா. இப்பொழுது அவர்கள் இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டார்கள். ஆனால் அவர்கள் எந்த வல்லமையையும் உணரவேயில்லை.
80200 ஆனால் ஒரு ஏழை ஸ்திரீ சுகமாக வேண்டுமென்று கருதி அவர் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். அப்பொழுது அவர் திரும்பிப் பார்த்து, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். உ—ஊம். அது என்னே? ஒரு வித்தியாசமான தொடுதல்! நீங்கள் எவ்வாறு அவரைத் தொடுகிறீர்கள். நீங்கள் பாருங்கள்? பாருங்கள்? நீங்கள் எத்தகைய விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அது சார்ந்தது. இப்பொழுது நீங்கள் காண்கிறீர்கள். 201 இப்பொழுது, சாத்தான்…அவனே அந்திக்கிறிஸ்துவின் ஆவியிலிருந்து இப்பொழுது கள்ளத்தீர்க்கதரிசிக்குள் குடிகொள்கிறான். யூதர்களின் காலத்தில் ஆதிசபையின் மத்தியில் அவன் “அந்திக்கிறிஸ்து” வாயிருந்தான். இருண்ட காலங்களில் அவன் உலகத்திற்கு “கள்ளத்தீர்க்கதரிசியாக” வருகிறான். “அவளுடைய அக்கிரமத்தின் கோப்பையுடன்” அவனை அங்கே காண்கிறீர்களா? இப்பொழுது, அது சபையின் காலத்திற்கு ஆகும்.
81202 ஆனால் சபையானது வீட்டிற்குச் சென்றபிறகு, அவன் ஒரு மிருகமாகிறான். அந்த வலுசர்ப்பமாகிய பிசாசே மிருகமாகிறான். ஓ, என்னே! நான் என்ன கருதுகிறேன் என்று உங்களால் காணமுடிகின்றதா? அவன் அப்பொழுது தன் ஜனங்களுக்குள் குடிகொள்கிறான். அவன் தன் வல்லமையினால் கட்டப்பட்ட ஜனங்களைக் கொண்டிருக்கிறான். அந்தக் கள்ளத் தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனம் அவர்களைச் சரியாக அதற்குள் கொணர்கிறது. “அவர்கள் பொய்யை விசுவாசித்து ஆக்கினைத்தீர்ப்படையும்படி கொடிய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்குக் கொடுப்பார்”. “தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து தேவனுடைய வார்த்தையை மறுதலிப்பார்கள்”. 203 தேவனும் தம் ஸ்தலத்தில் திரித்துவத்தில் கிரியை செய்கிறார். நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் அவர் ஜனங்களுக்குள் வாசம் செய்தல். 204 கிறிஸ்துவைப் போலவே, சாத்தானும் தன்னை திருத்துவத்தில் வெளிப்படுத்துகிறான். ஓ, சாத்தான் தானே வாசம் செய்தல்…இப்பொழுது கவனியுங்கள். சாத்தான்…
82205 இயேசு தம்முடைய ஜனங்களுக்குள் வாசம் செய்யும்போது கிறிஸ்துவுக்குள்ளிருந்த அதே ஜீவன் அப்பொழுது அந்த நபருக்குள் வருகிறது. 206 ஒரு திராட்சைக் செடியிலுள்ள ஜீவனையெடுத்து அதை பூசனிக்காய்க் கொடியில் புகுத்தினால் என்னவாகும்? அதில் இனி ஒரு போதும் பூசனிக்காய் காய்க்காது. அது திராட்சைப்பழங்களைக் கொடுக்கும். ஒரு பீச் மரத்தின் ஜீவனையெடுத்து அதை பேரிக்காய் மரத்தில் புகுத்தினால் என்னவாகும்? அது பேரிக்காய் அளிக்குமா? இல்லை. அது ‘பீச்’ பழத்தையே கொடுக்கும். உங்களிலுள்ள ஜீவன் யாரென்பதை வெளிப்படுத்துகிறது. பாருங்கள்? 207 ஜனங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாகக் கூறிக்கொண்டு அதே சமயத்தில் இந்த வார்த்தையை மறுதலிப்பார்களானால் அவர்களில் ஏதோ தவறுண்டு என்று அர்த்தமாகிறது. பரிசுத்த ஆவியானவர்தாமே அந்த வார்த்தையை எழுதினார். 208 இயேசு, “ஒரு மனிதன் என்னுடைய ஆவியை அவனுக்குள் பெற்றிருந்தால், என் கிரியைகளை அவனும் செய்வான்” என்று கூறினார். நீங்கள் அதை வாசிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் அதை குறித்துக் கொள்ள விரும்பினால், அது யோவான் 14:12-ல் காணப்படுகின்றது. ஆம். அது சரி. “நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் அதிகமான கிரியைகளையும் செய்வான்”. பாருங்கள்? அவர் அம்மனிதனைப் பரிசுத்தமாக்கி, சுத்திகரித்து, தேவனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவானாகும்படி செய்கிறார். அந்தத் துளி மை வெண்மையாக்கும் திரவத்தில் விழுந்து, பிளவின் மற்ற எல்லைக்கு அவனைக் கொண்டு செல்கிறது. பாருங்கள்?
83209 இப்பொழுது கவனியுங்கள், சாத்தான் தன் பிரஜைகளுக்குள் குடிகொள்ளும்போது, அவன் செய்த கிரியைகளை அவர்களும் செய்கின்றனர். உங்களுக்குப் புரிகின்றதல்லவா? அவன் என்ன செய்தான்? ஒன்றும் அறியாத பெண்ணிடம் அவன் வந்து அவளை வஞ்சித்தான். அதைத்தான் சில பிசாசுகள் இன்றைக்கும் செய்கின்றன. ஊழியத்தை அப்பொழுதுதான் தொடங்கியிருக்கும் ஒரு போதகனிடம் அவர்கள் சென்று, “எங்களுடன் சேர்த்துவிடுங்கள்” என்று அழைப்பு விடுக்கின்றனர் ஊம்! ஊம்! அதே பிசாசின் கிரியைதான் அது. இப்பொழுது, அதுதான் உண்மை. சாத்தான் தன் சபைக்குள் பிசாசாக குடிகொள்ளும்போது, அவர்கள்தான் கொலைகளைச் செய்ய ஆரம்பிக்கின்றனர். ஏனெனில் சாத்தான் ஆதிமுதல் கொலைகாரனும் பொய்யனும், கள்ளனுமாயிருக்கிறான். பாருங்கள்? அது சரி. 210 சாத்தான், அவன் ஜனங்களிடையே வாசம் செய்யும்போது, அவன் வாசம்செய்யும்போது, சாத்தான் என்ன செய்கிறான்? அவன் சாமார்த்தியமாய் புத்தி நுட்பமாய் இருப்பது அவனுடைய கடமை ஆகும். அவர் சாமார்த்தியசாலியாய் இருக்கிறான். கூர்மையான அறிவு படைத்தவர்களுடன் தேவன் எப்போதாவது தொடர்பு கொண்டிருந்தார் என்பதை நீங்கள் வேதத்தை ஆராய்ந்துபார்த்து, அதிலிருந்து எனக்கு காண்பியுங்கள். அறிவுபடைத்தவர்கள் தாம் பிசாசினால் பிடிக்கப்படுகின்றனர் என்பதை ஆராய்ந்து கண்டுபிடியுங்கள். இது உத்திரவாதமுள்ள ஒரு பெரிய வார்த்தைதான். ஆனால் அது முற்றிலும் உண்மையாகும். ஆபேலின் சந்ததியையும், காயீனின் சந்ததியையும் நீங்கள் எடுக்கும்படிக்கு நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். அந்த பதினான்கு சந்ததிகளை நீங்கள் ஆராய்ந்து, எது ஞானம் படைத்த சந்ததியென்றும், எது தாழ்மையுள்ள சந்ததியென்றும் கண்டுகொள்ளுங்கள். உ—ஊம்
84211 இயேசு ஏன் புத்திமான்களைத் தெரிந்து கொள்ளவில்லை? அவர் மீன் பிடிப்பவர்களையும், தங்களுடைய சொந்த பெயரைக் கூட கையெழுத்தாய் போட அறியாதவர்களையும் தன்னுடைய சபையின் தலைவராகத் தெரிந்துகொண்டார். அது சரி. ஞானம் என்பது ஒன்றுமற்றது. அது—அது கிறிஸ்துவுக்கு விரோதமாய் அமைந்துள்ளது. உலகஞானம் எப்பொழுதும் கிறிஸ்துவுக்குப் பகையாயிருக்கிறது. வேதபள்ளிகளை நிறுவ இயேசு ஒருக்காலும் நம்மிடம் கூறவில்லை. வேதபள்ளிகள் வைத்திருக்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. அவர், “தேவனுடைய வார்த்தையை பிரசங்கியுங்கள். சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்” என்று மாத்திரமே கூறினார். “விசுவாசிகளை பின் தொடரும் அடையாளங்களாவன” என்று அவர் கூறி, பாருங்கள், என்னென்ன அடையாளங்கள் காணப்படுமென்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது வேறுவிதமாகக் கூறினால், “நீங்கள் எல்லா தேசங்களிலும் தேவனுடைய வல்லமையை இவ்வடையாளங்களின் மூலம் நிரூபித்துக் காண்பியுங்கள்” என்று அவர் சொன்னார். 212 இப்பொழுது கவனியுங்கள். தேவனுடைய வார்த்தைக்கு தாறுமாறாக அர்த்தம் அறிந்து, ஜனங்கள் வார்த்தையை நிராகரிக்கச் செய்து, ஞானத்தை மக்களிடையே புகுத்துவதே சாத்தானுடைய கடமையாகும். ஓ, என்னே! ஓ! அதன் பின்னர் மூல தேவ வசனத்தைப் புறக்கணித்த தன் பிரஜைகளுக்கு அவன் அடையாளம் போடுகிறான். இப்பொழுது அதை… 213 இதை புரிந்துகொள்ள நீங்கள்—நீங்கள்—நீங்கள் எனக்காக சற்றுநேரம் பொறுத்துக் கொள்வீர்களா? நீங்கள் இதை தவற விட்டுவிட நான் விரும்பவில்லை. நீங்கள் அதை புரிந்து கொள்ளும்படியாய் நான் உங்களுக்கு ஒரு மாதிரியைக் காண்பிக்கட்டும். எல்லா மாதிரிகளும் வார்த்தையில் உள்ளன. நீங்கள்—நீங்கள்…எனவே நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் குழப்பமுற்றுச் செல்லக்கூடாது.
85214 பழைய ஏற்பாட்டின் காலத்தில் அடிமைத்தனத்திற்கு விற்கப்பட்ட ஒருவன்…ஐம்பது வருடங்களில் ஒரு முறை யூபிலி வருகின்றது. நாற்பத்தொன்பதாவது வருஷம், அதன்பின் யூபிலி வருஷம் வருகின்றது. ஒரு அடிமையானவன் இதைக்கேட்டு விடுதலை பெற விருப்பங் கொண்டால் விடுதலையாகலாம், சுதந்தரமாவதற்கு எதுவும் அவனைத் தடைசெய்ய முடியாது. அவன் தான் வேலை செய்யும் கருவியை எறிந்துவிட்டு, “இவ்வளவு நாட்கள் அடிமையாயிருந்தேன்,” நான் என் வீட்டிற்குப் போகிறேன் என்று கூறலாம். அந்த யூபிலி வருடத்தில் எக்காளம் முழங்கும். அது சரி. 215 ஆனால் அடிமையானவன் விடுதலையாவதற்கு விருப்பங்கொள்ளாமல் தன் எஜமானனுடன் திருப்தி கொண்டிருந்தால், அவனை அவர்கள் ஆலையத்திற்குக் கொண்டு செல்வர். அவன் எஜமானன் ஒரு கம்பியை (Awl) எடுத்து, எது என்னவென்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த கம்பியை அவர்கள் எடுத்து அவன் காதைக் குத்தி ஒரு துவாரத்தைப் போடுவார்கள். அவன் இனி ஒருபோதும் விடுதலையாக முடியாதென்றும், அவன் வாழ்நாள் முழுவதும் தன் எஜமானைச் சேவிக்க வேண்டுமென்பதற்கும் அதுவே அடையாளம். அது சரியல்லவா? அதன் பிறகு எத்தனை யூபிலி வருடங்கள் தோன்றி எது நிகழ்ந்த போதிலும் எக்காளம் முழங்கினாலும் அவன் விடுதலையாக முடியாது, அவன் கால முழுவதும் இந்த எஜமானுக்கு சேவை செய்தாக வேண்டும். ஏனெனில் விடுதலையின் பிறப்புரிமையை அவன் விற்றுப் போட்டு விட்டான்.
86216 அவ்வாறே, ஒருவன் சுவிசேஷமாகிய சத்தியத்தைப் புறக்கணிக்கும்போது, சாத்தான் அவனுக்கு அடையாளமிடுகிறான். (எங்கே?) அவன் காதில் சத்தியத்தைக் கேட்கக் கூடாதவாறு அவனைச் சாத்தான் செவிடாக்குகிறான். அத்துடன் அவன் முடிவடைந்துவிடுகிறான். அவன் சத்தியத்தைக் கேட்க மறுத்தால், சாத்தானுடைய குழுவில்தான் அவன் நிலைத்திருக்க வேண்டும். இல்லை. 217 “சத்தியத்தையும் அறிவீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” பாருங்கள், சத்தியமே விடுதலையாக்குகிறது. 218 அவர்கள் வரும்போது தேவன் தம்முடையவர்களை அடையாளமிடுகிறார். தேவன் தாம் வாக்குத்தத்தம் செய்த வார்த்தையை அவர்கள் மூலம் நிரூபிப்பதால் அவர் தம்முடையவர்களை அடையாளமிடுகிறார். அது சரியாக, யோவான் 14:12 ஆகும். இன்னுமொன்றை நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால் அது மாற்கு 16 ஆகும். “விசுவாசிக்கிறவர்களைப் பின்தொடரும் அடையாளங்களாவன” என்று இயேசு சொன்னார்.
87219 நாம் ஒரு நிமிடம் அதை எடுப்போம். அவர் அதைக் கேலியாகக் கூறிக்கொண்டிருந்தாரா? [சபையோர், “இல்லை” என்கின்றனர்.—ஆசி.] அல்லது சிலர் கூறுவது போன்று, அவர் அப்போஸ்தலர்களுக்கு மாத்திரம் அதை அளிக்கிறாரா? [“இல்லை”.] 220 அதன் முன் வசனத்தைச் சற்று கவனியுங்கள். “நீங்கள் சென்று…” எங்கே? [சபையோர், “உலகமெங்கிலும்” என்கின்றனர்.—ஆசி.] “உலகமெங்கிலும்” “இந்த சுவிசேஷத்தை…” என்ன? [“சர்வ சிருஷ்டிக்கும்”] “சர்வ சிருஷ்டிக்கும்” அந்தக் கட்டளையில் மூன்றில் ஒரு பாகத்தைக் கூட நாம் இதுவரை நிறைவேற்றி முடிக்கவில்லை. “இந்த சுவிசேஷம் உலகின் எல்லா பாகங்களிலும் சர்வ சிருஷ்டிக்கும் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இவ்வடையாளங்கள் பின் தொடரும்” என்பதாகும். விசுவாசிக்கிறவர் அனைவருமே இவ்வடையாளங்களைச் செய்வார்கள்—ஒரு சிலருக்கு மாத்திரமல்ல. 221 ஒருமுறை ஒருவர் என்னிடம், “சுகமாக்கும் வரங்களை தேவன் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுக்கு மாத்திரமே அருளினார்” என்றார். ஓ! அவர் எழும்பி நின்று அதைச் சொல்லக் கேட்டவர்கள் இங்கு அநேகருண்டு, பாருங்கள். ஆனால் சில நிமிடங்களுக்குள்ளாக போதுமான அளவுக்கு அவருக்குப் பதிலளிக்கப்பட்டது. 222 ஆகவே, “உலகின் எல்லா பாகங்களிலும் சர்வசிருஷ்டிக்கும் இவ்வடையாளங்கள் காணப்படும்” என்பதை இப்பொழுது கவனியுங்கள்.
88223 அவிசுவாசமென்னும் சாத்தானின் அடையாளத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளாதீர்கள். இப்பொழுது அவனும் செய்ய முடிந்தால், அவன் அதை இன்றிரவே உங்கள் மேல் போடுவான். அவன் உங்களை சுவற்றிற்கு நேராக நிறுத்தி, உங்கள் காதுகளைக் குத்திப்போடுவான். நீங்கள் கூட்டத்திற்கு வெளியே சென்று, “அதைப் பற்றி எனக்குத் தெரியாது” என்று சொல்லுவீர்கள். 224 நீங்கள் வீட்டிற்குச் சென்று அதைப் பாருங்கள், அதன்பின்னர் உத்தம இருதயத்துடன் ஜெபம் செய்யுங்கள். ஏனெனில் இந்த காலத்திலேயே, இந்த புனித நேரத்தில் எல்லாமே வேதபூர்வமாக பரிபூரணமாய் அமைந்துள்ளன. அநேக வருடங்களாக நிகழ்ந்தவை நிரூபிக்கப்பட்டு, சரியாக இங்கு வந்துள்ளது. இதுவே இந்த நேரம். இதுதான் அந்தக் காலம். 225 ஆகவே இப்பொழுது அவன் உங்கள் காதுகளைத் துளைத்து அவிசுவாசமென்னும் தன்னுடைய அடையாளத்தைப் போட அனுமதிக்க வேண்டாம். பாருங்கள்? காரணம், ஆரம்பமுதல் அவிசுவாசியாயிருக்கிறான். அவன் ஆதியிலே சந்தேகங் கொண்டான். சரி. ஓ, விட வேண்டாம்…அவன் வேத வாக்கியங்களை எடுத்து தன்னுடைய அறிவினால் புரட்டவும், தாறுமாறான அர்த்தம் அளிக்கவும் அனுமதிக்க வேண்டாம். நீங்கள் தாழ்மையுள்ளவர்களாய், “தேவன் இவ்விதம் உரைத்துள்ளார். அத்துடன் அது முடிவுபெற்றுவிட்டது” என்று சொல்லுங்கள். இப்பொழுது, ஓ… 226 நமக்கு நேரம் மிகவும் தாமதமாவதால், நாம் இங்கே நிறுத்தி துவக்குவோம்.
89227 இப்பொழுது நாம் இரண்டாம் முத்திரையைக் கவனிப்போமாக. அடிக்கப்பட்டு உயிரோடெழுந்த ஆட்டுக்குட்டியானவர் இரண்டாம் முத்திரையைத் திறந்தபோது, காளைக்கொப்பான இரண்டாம் ஜீவன், ‘முத்திரையினுள் அடங்கிய இரகசியம் என்னவென்று வந்து பார்’ என்றது. பாருங்கள்? இப்பொழுது நாம் அதைப் பெறுகிறோம். ஆட்டுக்குட்டியானவர் மாத்திரமே ஒவ்வொரு முத்திரையையும் திறக்க வேண்டும் என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். இரண்டாம் ஜீவனானது… 228 வரிசைகிரமமாக நாம் பார்க்கும்போது, இதை நாம் சபைக்காலங்களில் இதையே கண்டோம். இரண்டாம்…முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாக இருந்தது; அடுத்தது ஒரு—ஒரு ஜீவன் காளைக் கொப்பானது என்று அறியலாம். 229 ஆட்டுக்குட்டியானவர் முத்திரையைத் திறந்தவுடனே காளைக்கொப்பான ஜீவன், “வந்து பார்” என்றது. யோவானும் அதைக் காணச் சென்றான். அவன் சென்றபோது என்ன சம்பவித்தது? அவன் இப்பொழுது என்ன கண்டான் என்று நாம் காண்போம். அது “வந்து பார்” என்றது. அங்கு ஒரு இரகசியமானது. ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களாக முத்திரிக்கப்பட்டதாய் இருக்கின்றது. அது என்ன என்று நாம் காண்போம்.
90230 அவன் சென்றபோது ஒரு சிகப்பான குதிரை புறப்பட்டதைக் கண்டான் என்பதை நாம் இங்கே கண்டறிகிறோம். (என்ன?) எனக்குத் தெரிந்தவரை அவன் கையிலிருந்த பெரிய பட்டயம்… இன்னும் அடுத்த பதினைந்து, இருபது நிமிடங்களில் நாம் மூன்று காரியங்களைப் பார்க்க வேண்டும். நாம் இங்கு படித்து அவர் இங்கே என்ன கூறுகிறார், வேதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்ப்போம். “சென்றபோது…” 4-ம் வசனம். அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது. (முதலாம் குதிரை வெள்ளை நிறமுடையதாயிருந்தது) அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
91231 இது அடையாளச் சின்னமாயுள்ளது. அதை நாம் உண்மையாகவே உற்று நோக்க வேண்டும். ஆனால், எனக்குத் தெரிந்தவரை, நான் இப்பொழுது அறிந்துள்ள மட்டும், நீங்கள் பாருங்கள்? இயேசுவும் மத்தேயு 24-ல் இதையே முன்னுரைத்தார். அவர், “பாருங்கள்? யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் நீங்கள் கேள்விப்படுவீர்கள் …ஆனாலும் முடிவு உடனே வராது பாருங்கள்…முடிவு உடனே வராது” என்றார். பாருங்கள். அவர்கள் இயேசுவை மூன்று கேள்விகள் கேட்டனர். பாருங்கள்? அவரும் அந்த மூன்று கேள்விகளுக்கும் பதிலுரைத்தார். 232 இங்குதான் நம்முடைய ஏராளமான சகோதரர்கள் மற்றும் ஏழாம் நாளை ஓய்வுநாளாக ஆசரிப்பவர்கள், “அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ! நீங்கள் ஓடிப்போவது ஓய்வுநாளில் சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள், ஏனெனில் பட்டிணத்தின் வாசல்கள் ஓய்வு நாளில் மூடப்பட்டிருக்கும்” போன்ற இயேசுவின் சொற்களைப் படித்து குழப்பமுறுகின்றனர். என்னே, அதற்கும், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு இயேசு உரைத்த இப்பதிலுக்கும் யாதொரு தொடர்புமில்லை. பாருங்கள்?
92233 அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். ஆனால் அவர் கூறின பதில் யாவும் கடைசி காலத்திற்குரியவையல்ல. “நீங்கள் யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்” என்றார். நாம் இங்கு இந்த ஒன்றின் மேல் இங்கே ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும் சில இரவுகளில், நாம் மற்றவற்றிற்கு வருவோம். கவனியுங்கள், “நீங்கள் யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். இது யாவும் முடிவல்ல… பாருங்கள். அதன்பின் அவர்கள் மறுபடியுமாக திரும்பி…உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து உங்களைக் கொலை செய்வார்கள்” என்றும் அவர் கூறினவை கடைசிகாலத்தைப் பற்றியவையல்ல. 234 அவர்கள் “உலகத்தின் முடிவைக் குறித்து” அவரிடத்தில் கேட்டிருந்ததைப் பற்றி அவர் அவர்களிடத்தில் அந்த நேரத்தைக் குறித்துப் பேசப்போவதாயிருந்தபோது… 235 பாருங்கள், அவர்கள் மூன்று கேள்விகள் கேட்டனர்—“இவை எப்பொழுது சம்பவிக்கும், ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடி அழிக்கப்படும் நாள் எப்பொழுது வரும்? அதற்கு அடையாளம் என்ன? உம்முடைய வருகை எப்பொழுது இருக்கும், உலகத்தின் முடிவு எப்பொழுது வரும்?” “உலகத்தின் முடிவைக்” குறித்த கேள்விக்கு அவர் பதிலுரைக்கும் போது… 236 “அத்திமரம் துளிர்விடும்போது…நேரமானது சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறது என்று அறியுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே இந்த சந்ததி ஒழிந்து போகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். இதைக் குறித்த வெளிப்பாடில்லாத ஒரு அவிசுவாசி இதை வித்தியாசமாக அர்த்தங் கொள்கிறான். பாருங்கள்? “இந்தச்சந்ததி” என்ற அவர் சொற்கள் அவர் காலத்திலிருந்து அந்த சந்ததியல்ல; “அத்திமரம் துளிர்விடுவதைக் காணும் சந்ததி” என்று பொருள்படும்.
93237 இப்பொழுது நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். உங்கள் முன் சரியாக உள்ள இதைச் சற்று பாருங்கள். கடந்த இரண்டாயிரத்து ஐநூறு வருட காலத்தில் முதன்முறையாக இஸ்ரவேல் இப்பொழுது ஒரு நாடாக ஆனது. உலகத்திலேயே மிகவும் பழமையான கொடி தற்பொழுது எருசலேமில் பறந்து கொண்டிருக்கிறது. இஸ்ரவேல் தன்னுடைய தாய்நாட்டிற்குத் திரும்பிவிட்டான். 238 இங்குள்ள ஒரு சகோதரன் ஒரு சமயம் யூதர்களிடையே சென்று மிஷினரியாக சுவிசேஷ ஊழியம் செய்ய விருப்பங் கொண்டார். அப்பொழுது நான் அவரிடம், “ஒரு வேளை இங்கொன்றும் அங்கொன்றுமாக யாராவது இரட்சிக்கப்படலாம்” என்றேன். ஓ! முழுதேசமே இரட்சிக்கப்படும் என்று ஜனங்கள் நினைக்கின்றனர். இல்லை ஐயா. 239 இஸ்ரவேல் ஒரு தேசமாக மனந்திரும்புகிறது, தனிப்பட்ட நபராயல்ல. “ஒரே தேசம் ஒருநாளில் பிறக்கும்”. அதுதான் இஸ்ரவேல் தேசம். “இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்” அதை சற்று நினைவில் கொள்ளுங்கள். “இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்” என்று பவுல் கூறினான். இப்பொழுது கவனியுங்கள், “இஸ்ரவேலரெல்லாரும்”. அது முற்றிலும் உண்மை.
94240 இப்பொழுது இதைக் கவனியுங்கள். “ஆனால்” அவர், “அத்திமரங்களையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள். அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது” என்று சொன்னார். இப்பொழுது கவனியுங்கள். நாம் நமது இரண்டாயிரத்து ஐநூறு வருட காலத்தில் முதன்முறையாக இஸ்ரவேல் தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளது. நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள் என்னும் யூதரைக் குறித்த படக்காட்சி நம்மிடமுண்டு. அவள் ஒரு நாடாக ஆகி, ஆறுமுனை நட்சத்திரம் கொண்ட தாவீதின் கொடி இப்பொழுது அங்கு பறந்து கொண்டிருக்கிறது. 241 கடந்த சில வருடங்களாக ஸ்தாபனங்களில் எழுந்துள்ள எழுப்புதல் போன்று முன்பு எப்பொழுதாவது நிகழ்ந்துள்ளதா? இப்பொழுது அதை ஆராய்ந்து பாருங்கள். நாம் நமது ஸ்தானத்தில் உள்ளோம். 242 மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட் போன்ற ஸ்தாபனங்கள் பில்லி கிரஹாமின் ஊழியத்தில் இப்பொழுது எழுப்புதலடைந்துள்ளது போன்று, எப்பொழுதாவது ஒரு மனிதனுடைய ஊழியத்தில் மலர்ச்சி பெற்றதா? முன்பு எப்பொழுதாவது ஒரு மனிதன் H—A—M என்ற எழுத்துக்களுடன் முடிவடையும் ஒரு பெயரைக் கொண்டு மாம்சப்பிரகாரமான சபைக்கு ஊழியம் செய்துள்ளானா என்று உங்கள் சரித்திரத்தை ஆராய்ச்சி செய்யுங்கள். நீங்கள் கேட்டுப் பாருங்கள். A—b—e… 243 A—b—r—a—h—a—m இப்பொழுது பாருங்கள், ஆபிரகாம் என்னும் பெயர் ஆங்கிலத்தில் A—b—r—a—h—a—m என்ற ஏழு எழுத்துக்களைக் கொண்டதாயுள்ளது. 244 ஆனால் நம்முடைய சகோதரன் பில்லி கிரகாம் ஆறு எழுத்துக்களைக் கொண்டவராயிருக்கிறார், (GRAHAM). ஏழல்ல. அவர் உலகில் மாம்சப்பிரகாரமான சபையில் ஊழியஞ் செய்துக் கொண்டு வருகிறார்.
95245 சோதோமிலிருந்த லோத்து மாம்சபிரகாரமான சபைக்கு எடுத்துக்காட்டாயிருக்கிறான். இருதூதர்கள் அங்கு சென்று பிரசங்கித்து, சுவிசேஷத்தின் மூலமே அவர்களைக் குருடராக்குகின்றனர். 246 ஆனால், ஒருவர் ஆபிரகாமுடன் தங்கிவிட்டார். அவரை ஆபிரகாம், “ஏலோயீம், ஆண்டவர்” என்றழைத்தான். மூன்று பேர் வருவதை ஆபிரகாம் கண்டபோதும், அவன், “என் ஆண்டவரே” என்றான். 247 இதற்கு மாறாக லோத்து இருவர் வருவதைக் கண்டு, “என் ஆண்டவர்மார்களே,” என்று பன்மையில் அழைத்தான். அதுதான் வித்தியாசம். உங்களுடைய திரித்துவ கிரியைப் பாருங்கள்? பாருங்கள்? 248 “லோத்தின் நாட்களில் நடந்தது போல…” என்று இயேசு கூறியுள்ளார். இப்பொழுது உங்களுக்குப் புரிகின்றதா? கவனியுங்கள். அதை எண்ணுங்கள்.
96249 கவனியுங்கள், ஒரு நபர் ஆபிரகாமிடம், ஆவிக்குரிய சபையாகிய மணவாட்டியிடம் வருகிறார். ஆபிரகாம் ஆரம்பமுதல் சோதோமில் இருக்கவேயில்லை. அவர் என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். அவனிடம் வந்தவர் சோதோமுக்குச் சென்ற மற்றிருவர் போன்று பிரசங்கம் செய்யவில்லை. அவர் அவர்களுக்கு போதித்தார். ஆனால் ஒரு அடையாளத்தை அவர்களுக்கு முன்பாக காண்பித்தார். அவர் மேசியாவின் அடையாளத்தை செய்து காண்பித்தார். அவர் பின்புறம் கூடாரத்தை நோக்கியவாறு இருந்தது. அவர் ஆபிரகாமே என்று சொன்னார். இப்பொழுது ஞாபகங் கொள்ளுங்கள். சில நாட்களுக்கு முன்பாக அவனுடைய உண்மையான பெயர் ஆபிராம் என்பதாகும். ஆனால் அவரோ, “ஆபிரகாமே, உன் மனைவியாகிய சா ரா ள் எங்கே? என்று கேட்டார். சில நாட்களுக்கு அவன் சா ரா ய் என்று அழைக்கப்பட்டாள். ஆபிரகாம் மாறுத்தரமாக, “அவள் உமக்குப் பின்புறத்தில் கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். 250 அவர், “ஆபிரகாமே, நான்…” நான் என்று தனிப்பட்ட பிரதிப்பெயரில் கூறுவதைக் கவனியுங்கள் “நான் உனக்கு வாக்களித்துள்ளபடி உன்னிடத்தில் திரும்ப வருவேன்” என்றார். அது என்னவென்று உங்களால் காண முடிகின்றதா? பாருங்கள்? ஒரு மனிதன். அவருடைய ஆடைகள் தூசியுடன் இருந்தன. இளங்கன்றை புசித்தார். பசுவின் பாலைக் குடித்தார். அப்பத்தைப் புசித்தார். ஆம், ஐயா. தேவன், ஏலோயீம் மாம்சத்தில் வெளிப்பட்டார்! 251 கடைசி நாட்களிலும் அவர் தம்மை மாம்சத்தில் மறுபடியும் வெளிப்படுத்தப்போவதாக வாக்களித்துள்ளார்! கவனியுங்கள். “ஆபிரகாம், உன் மனைவி, சாராள் எங்கே? “அவள் உமக்குப் பின்புறத்தில் கூடாரத்தில் இருக்கிறாள்” “நான் உன்னிடத்தில் திரும்ப வருவேன்”. என்றார்.
97252 சாராள் ஏறக்குறைய நூறுவயது சென்றவளாயிருந்தாள். அவள் இதைக் கேட்டபோது, “கிழவியாகிய எனக்கோ?” என்று சொல்லி கூடாரத்தில் திரைக்குப் பின்னாலிருந்து நகைத்தாள். அவள், “நான் முதிர்வயதான ஸ்திரியாயிற்றே” என்றாள். அவர்களிருவரும் முதிர்வயதானபடியால் கணவனும் மனைவியுமாக அவர்கள் தொடர்புகொள்வது ஏற்கனவே நின்று போயிருந்தது. ஆபிரகாம் அப்பொழுது நூறுவயது சென்றவனாயிருந்தான். சாராளுக்கு அப்பொழுது தொண்ணூறு வயதாயிருந்தது. எனவே “அது ஒருபோதும் நடைபெறாது” என்றாள். 253 அவர் உடனே, “சாராள் ஏன் நகைத்தாள்?” என்று கேட்டார். வ்யூ! அவர் முதுகுப்புறம் அச்சமயம் கூடாரத்தை நோக்கியிருந்தது. “‘இந்தக் காரியங்கள் எப்படி ஆகும்’ என்று ஏன் சாராள் நகைத்தாள்?” என்றார். பாருங்கள், அவர் ஒரு அடையாளத்தை அவனுக்குக் காண்பித்தார். 254 இப்பொழுது கடைசி காலத்தில் இது மறுபடியும் சம்பவிக்கும் என்று அவர் வாக்களித்துள்ளார். 255 இரண்டுபேர் சோதோமுக்குச் சென்று லோத்துக்கு வார்த்தையை பிரசங்கித்தனர். அந்த ஸ்தலம் தீக்கிரையாக்கப்படுமென்றும், அவர்கள் அவ்விடமிருந்து வெளியேற வேண்டுமென்றும் கூறினர். அது அவ்விதமே சம்பவித்தது. லோத்தும் தடுமாறிக் கொண்டே வெளியேறினான். மாம்சப்பிரகாரமான சபை பாவச் சேற்றில் உழன்று கொண்டு, அதேசமயத்தில் ஸ்தாபனங்களின் திட்டங்களை அனுசரித்துத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் மணவாட்டியோ… 256 அந்த மனிதன் சோதோமுக்குச் செல்லவில்லை. அவர் சென்று, மணவாட்டியை மாத்திரமே அழைக்கிறார். இப்பொழுது நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள்.
98“நீங்கள் ‘தேவன் அங்கு ஆபிரகாமிடம் மாம்சத்தில் வெளிப்பட்டார்’ என்றா கூறினீர்கள்?” 257 இயேசுவும் தம்மைப்பற்றி, “நீங்கள் எவ்விதம் என்னைக் குற்றம் சாட்டலாம்?” என்றார். அவர், “தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடம் வருகிறதென்று உங்கள் வேதாகமத்திலே, நியாயப்பிரமாணத்திலே எழுதப்பட்டுள்ளதல்லவா?…” என்றார். அவர் எல்லாவற்றிலேயும், வசனத்தின்படியே இருந்ததால், “தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடம் வருகிறது” என்றார். இப்பொழுது வார்த்தை கூறுவதென்னவென்றால் “தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடம் வருகிறது. அவ்வாறு தேவ வசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை நீங்கள் தேவர்களென்று அழைத்திருக்க, நான் என்னைத் தேவகுமாரன் என்று சொன்னபடியால் என்மேல் ஏன் நீங்கள் குற்றஞ் சாட்ட வேண்டும்?” என்று கேட்டார். அவர்கள் சொந்த நியாயப்பிரமாணத்தினாலேயே, அவர்கள் வாயைத் தைத்தார். அங்குதான் காரியம். பாருங்கள்?
99258 நாம் இப்பொழுது எங்கிருக்கிறோம்? நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். இப்பொழுது உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள். 259 யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும் உண்டாகுமென்று நாம் கண்டறிந்தோம். அல்லாமல், அத்திமரமும் துளிர்விட்டாயிற்று. அதனுடன் மற்ற மரங்களும் மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள் போன்றவர், பிரிஸ்பிடேரியன் துளிர்விடத் தொடங்கிவிட்டன. அவர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுப்புதல் உண்டாகியிருக்கிறது. 260 இச்சமயத்தில் தேவன், தாம் தெரிந்து கொண்ட மணவாட்டியை அந்த மகத்தான சம்பவத்திற்காக ஒன்று சேர்க்கிறாரென்று நான் விசுவாசிக்கிறேன். ஓ, என்னே! இப்பொழுது கவனியுங்கள்.
100261 யோவான் கண்டது என்னவென்பதை இப்பொழுது பார்ப்போம், அவன் கண்ட இந்தக் காரியங்களைக் குறித்துப் பார்ப்போம். “சிவப்பான குதிரையின் மேலேறி ஒருவன் புறப்பட்டுச் செல்கிறான். ஒரு பெரிய பட்டயத்தினால் ஜனங்களைக் கொன்று போடும்படி அவனுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.” இப்பொழுது இதோ அதைக் குறித்த என்னுடைய வெளிப்பாடு. இது மறுபடியும் சாத்தான் ஆகும். பிசாசு மறுபடியும் வேறொரு ரூபத்தில் காணப்படுகின்றான். இப்பொழுது நான் அன்றிரவு முத்திரைகள் எதைக் குறிக்கின்றன என்று உங்களிடம் கூறினவாறு, எக்காளத் தொனி ஜனங்களிடையே அல்லது தேசங்களிடையே நேரிடும் உள்ளநாட்டுப் போர்களைக் குறிக்கிறது. நீங்கள் பாருங்கள், இவன் கையில் பட்டயம் ஒன்றை ஏந்தியிருப்பதால், அது சபை அரசியலில் நேரிடும் யுத்தத்தைக் குறிக்கிறது என்பதை நாம் இங்கே காண்கிறோம். இப்பொழுது நீங்கள் அதை நினைக்கக்கூடாது. ஆனால் ஒரு நிமிடம் மாத்திரம், சில நிமிடங்கள் மாத்திரம் அதைக் கவனியுங்கள். 262 இந்த குதிரைகளின் நிறங்கள் மாறிக்கொண்டே வருவதைக் கவனியுங்கள். ஆனால் அவைகளின் மேல் சவாரி செய்பவன். அதே ஆள் தான். குதிரைகளின் நிறம் மாறுகிறது. குதிரை என்பது ஒரு மிருகம். வேதத்தில் மிருகம் வல்லமைக்கு அறிகுறியாக இருக்கிறது. அதே முறைமை வேறொரு நிறமுள்ள குதிரையின்மேல், அதிகாரத்தின் மேல் சவாரி செய்கிறது, களங்கமற்ற வெள்ளை நிறத்திலிருந்து இரத்த சிவப்பு நிறத்திற்கு மாறுதல். பாருங்கள்? அவன் எவ்வாறு வருகிறான் என்பதை இப்பொழுது கவனியுங்கள்.
101263 அவன் தொடக்கத்தில் நிக்கொலாய் மதஸ்தரின் ஒரு சிறு கொள்கையாக விளங்கினான். அப்பொழுது உண்மையாகவே அவன் யாரையும் கொன்று போடவில்லை. நீங்கள் குறித்துக்கொள்ள விரும்பினால், அது வெளி 2:6-ல் உள்ளது. அவன் ஒன்றையும் கொன்று போடவில்லை. அது ஒரு போதகம் மட்டும். அவன் மக்களிடையே ஒரு ஆவியாக மாத்திரம் திகழ்ந்தான். அந்த ஆவி யாரையும் கொன்று போடவில்லை. ஓ, அவன் களங்க மற்றவனைப் போல் வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்தான். இன்றைக்கு ஜனங்கள் “நல்லது, நாம் மிகப்பெரிய உலகளாவிய ஒரு சபையை நிறுவி, அதை உலகமெங்கும் பரவியுள்ள சபை என்று அழைக்கலாமே” (Universal church) என்கின்றனர். அவர்கள் அதை இன்னும் செய்கின்றனர். சரி பாருங்கள்? இப்பொழுது, “நாம் பெற்றுக் கொள்ளக்கூடும்…” என்று சொல்கின்றனர். ஓ, அது களங்கமற்றது போல் காணப்படுகிறது. “அது ஒரு மனித குழுவாயிருக்குமே. நாமெல்லாரும் ஒன்றுகூடி ஐக்கியங்கொள்ளலாமே!” என்றெல்லாம் அவர்கள் கூறுகின்றனர். பாருங்கள்? அது மிகவும் களங்கமற்றது போல் தென்படுகிறது; அது வெள்ளை, வெள்ளைக் குதிரையாயிருந்தது. பாருங்கள்?
102264 ஆகையால் கௌரவம் வாய்ந்தவர்களும், விலையுயர்ந்த ஆடை அணிந்தவர்களும், ஒரே கூட்டப் பறவைகள் போல், “நல்லது, நாம்—நாம் எல்லோரும் ஒன்று சேருவோம்! ஏன் அந்த ஏழைக்கூட்டம் இடறவிரும்பினால் இடறலடையட்டும். நல்லது, அது சரி, நாமோ—நாம் நற்குடிமக்கள் வருகை புரியும் சபையை பெற்றுக் கொள்வோம். நாம் இங்கிருந்து வெளியேறினால்,” அவர்கள் உள்ளது போல, ஒன்று சேர்ந்து மேசன்ஸ் (Masons) என்றும், விநோதமாக நபர்களின் விடுதி (Odd Fellows Lodge) என்றும் நம்மை அழைத்துக் கொள்ளலாம். ஆகவே அதன்பின்…இப்பொழுதுள்ள விநோதமான நபர்களின் விடுதி அல்ல, நான் என்ன கருதுகிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். ஆகையால் அது உண்மையான விசுவாசிக்கு விநோதமாகத்தான் இருக்கிறது. இப்பொழுது, நாம் அதை வேறு வகையில் கூறுவோமானால், “எங்களுக்குச் சொந்தமானது என்று அழைத்துக் கொள்கின்ற ஒரு சிறு கூட்டம் எங்களுக்கு வேண்டும்” என்றனர். அது ஒரு உபதேசம். மிகவும் களங்கமற்றதுபோல இருந்தது. வேறுசிலர் ஒன்றுகூடி, சகோதரரே, “எங்களுக்கு உங்கள் பேரில் எவ்வித விரோதமுமில்லை. நிச்சயம் அவ்விதம் இல்லை. நீங்கள் செய்வதெல்லாம் சரிதான். ஆனால் எங்களுக்கு வியாபாரத்தொடர்பு இருப்பதனால், ஒரு குழுவை நாங்கள் அமைத்துக்கொண்டால் நல்லது என்று எங்களுக்குத் தோன்றுகிறது” என்கின்றனர். பாருங்கள்? அது முடிவாக ஒன்று சேரும் வரையில் தொடர்ந்து சென்றது. ஆம், ஐயா.
103265 ஆனால் இத்தகைய கொள்கைகளை உண்டாக்கின அந்த வஞ்சக ஆவி (ஓ, மனிதன்!) ஒரு மனிதனுக்குள் வாசம் செய்தது. இந்த உபதேச ஆவி, ஒரு மனிதனுக்குள் வாசம் செய்து, அந்த மனிதன் கிறிஸ்துவின் ஸ்தானத்தைப் பறித்துக் கொண்டு, இப்பொழுது கிறிஸ்துவைப் போல் ஆராதிக்கப்படுகிறான். வேறு வகையில் கூறினால், வாடிகனில்…நான் அங்கு சென்றுள்ளேன். அது “VICARIVS FILII DEI” என்ற ரோம எண்களில் எழுதப்பட்டுள்ளது. இப்பொழுது நீங்கள் அந்த ரோம எண்களுக்கு கீழ் கோடிட்டால், “தேவனுடைய குமாரனுக்குப் பதிலாக” என்று அர்த்தமாகிறது. வேறுவிதமாகக் கூறினால் அவன் பிரதிகுரு (vicar) என்று அர்த்தம். பிரதிகுரு (vicar) என்பவன் யார் என்று நீங்கள் அறிவீர்கள். அதாவது அவன் வேறொருவருடைய ஸ்தானத்தை வசிக்கிறான். தேவ குமாரனின் ஸ்தானத்தை அவன் பறித்துக் கொண்டான். “தேவனுடைய குமாரனுக்கு பதிலாக” இருப்பவனே அந்த பிரதிகுரு.
104266 “அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுள்ளவன் கணக்குப் பார்க்கக்கடவன். அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது. அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு” என்று வேதம் கூறியுள்ளது. வாடிகனின் எழுதப்பட்ட VICARIVS FILII DEI என்று காணப்படும் ரோம எழுத்துக்களின் எண்ணிக்கையை, உதாரணமாக “V” என்பதை 5 என்றும், “I” என்பதை 1 என்றும் கூட்டினால் 666 என்ற எண் கிடைக்கின்றது.
105267 “அவன் தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல் உட்காருவான் என்றும், அவன் தேவனைப் போன்று ஆராதிக்கப்படுகிறான்” என்று வேதம் கூறியுள்ளது. சிறு கொள்கையளித்த அந்த ஆவி ஒரு மனிதனுக்குள் வாசம் செய்தபோது, அவன் ஒரு பிரதி குருவாகிறான். “தேவகுமாரனுக்குப் பதிலாக”. பாருங்கள்? ஓ, என்னே! பயங்கரமான அந்த வஞ்சக ஆவி! நீங்கள் அதைப் படிக்க வேண்டுமானால் 2தெசலோனிக்கேயர் 2:3 படியுங்கள். அது எங்கேயுள்ளது என்பதை நீங்கள் காணலாம். 268 சாத்தான் எல்லா தேசங்களிலும் காணப்படும் அரசியல் வல்லமைக்குத் தலைவனாக விளங்குகிறா என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும். அது எத்தனை பேருக்குத் தெரியும்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நீங்கள் அதைக் குறித்துக் கொள்ள விரும்புகிறீர்களா? மத்தேயு 4:8-ல் “இயேசுவை சாத்தான் ஒரு உயர்ந்த மலையின்மேல் கொண்டு சென்று, முன்பிருந்ததும் இனி வரப்போவதுமான உலகத்தின் இராஜ்யங்கள் அனைத்தையும் ஒரு நொடிப் பொழுதில் அவருக்கு காண்பித்தான்.” அவனைக் குறித்து பேசுகிறோமே! “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்து கொண்டால், இவைகளையெல்லாம் நான் உமக்குத் தருவேன்” என்று அவன் கூறினான். இந்த இராஜ்யங்கள் அனைத்தும் ஒருநாள் அவர் அதிகாரத்தின் கீழ் வரும் என்பதை இயேசு அறிந்திருந்தார்.
106269 அவ்வாறே அவர்கள் இன்றைக்கும் “என்ன, நீங்கள் பரிதாபமுள்ள பரிசுத்த உருளைகளே” (holy rollers) என்கின்றனர். 270 ஏன், உலகமே நம்முடைய கரங்களிலுள்ளது. “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்”. அப்படித்தான் இயேசு கூறியுள்ளார். பாருங்கள்? பாருங்கள்? 271 கவனியுங்கள், இந்த இராஜ்யங்கள் அனைத்தும் அவர் ஆதிக்கத்தின் கீழ்வரும் என்று இயேசு அறிந்து, “அப்பாலே போ சாத்தானே! உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்று கடிந்து கொண்டார். மறுபடியும் வார்த்தையுடன் சரியாக நின்றார். பாருங்கள்? 272 இப்பொழுது வேதம் முன் உரைத்தவாறே தலைமைப் பிசாசாகிய அவன் மத சம்பந்தமான மனிதனான இந்த பராக்கிரமசாலியினுள் குடிகொள்ளும்போது, அவன் சபையையும் அரசாங்கத்தையும் ஒன்றாக இணைக்கிறான். அவன் ஆதிக்கம் கொண்டிருந்த இவ்விரண்டும் ஒன்றாகிவிடுகின்றன. பாருங்கள்?
107273 அந்திக்கிறிஸ்துவின் ஆவி புறப்பட்டுச் சென்றபோது, அது ஆவியாக இருந்தது. அதன்பின் அது என்னவாயிற்று? அதன்பின் அது…இப்பொழுது இந்த முத்திரையை கவனியுங்கள். அந்திக்கிறிஸ்துவின் ஆவி புறப்பட்டுச் சென்று கிறிஸ்துவின் போதனைக்கு விரோதமாய் செயல்புரிந்தது. அது சரி. அது செய்த அடுத்த காரியம்…கிறிஸ்து தமது சபை என்ன செய்வதற்காக துவக்கினார். அது பாவத்திற்கு விரோதமாக இருக்கும்படியாக, “ஓ, கிறிஸ்து சொன்னதற்கு இதுவல்ல அர்த்தம். அதுவல்ல அர்த்தம். அவர் கூறியுள்ளது நமக்காக அல்ல. நூறுவருடங்களுக்கு முன்பிருந்தவர்களுக்கு, ஆதிகாலத்தவருக்கு” அது நமக்கு அல்ல, என்றெல்லாம் விரோதமாக அது போதிக்கிறது. பாருங்கள்? அது, பாருங்கள், ஆங்கிலத்தில் anti என்பது “விரோதமான” என்பதாகும். அதன்பிறகு… 274 வெள்ளைக் குதிரையின் மேலிருந்தவன் புறப்பட்டுச் சென்றபோது, அவனுக்கு கிரீடம் இல்லாமல் இருந்தது. பின்னர் அவனுக்குக் கிரீடம் அளிக்கப்படுகிறது. அவனிடம் வில்லிருந்தது. ஆனால் அம்புகள் இல்லை. பாருங்கள்? ஆகவே அவன் புறப்பட்டுச் சென்றபோது… 275 சில காலங்களுக்குப் பின், அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது. ஏனெனில் ஒரு ஆவிக்கு கிரீடம் சூட்ட முடியாது. ஆனால் இந்த ஆவி ஒரு மனிதனுக்குள் வாசம் செய்து, அந்திக்கிறிஸ்து ஆவியின் கிரியைக்கு கள்ளத்தீர்க்கதரிசி என்னும் தன்னுடைய இரண்டாவது இரகசியமான உத்தியோகத்தை அவன் மேற்கொள்ளும்போது, அவன் முடிசூட்டப்படுகிறான். இப்பொழுது, நாம் இப்பொழுது அவனைக் காண்கிறோம். இப்பொழுது, அவன் அதைப் பெற்றுக்கொள்ளும்போது அவன் அவ்விதமாகிறான். அவன் ஏற்கனவே உலக அரசியல் வல்லமையை ஆதிக்கத்திற்குள் வைத்திருக்கிறான்.
108276 இப்பொழுது அவன் மதசம்பந்தமான ஆதிக்கம் கொண்டவனாய் உலகசபை ஒன்றை நிறுவத்தலைப்படுகிறான். அமெரிக்காவைக் குறித்து சொல்லப்பட்டிருக்கும் வெளிப்படுத்தல் 13-ம் அதிகாரத்தில் ஒரு சிறு மிருகம் ஆட்டுக்குட்டிக் கொப்பாக இரண்டு கொம்புகளை உடையதாயிருந்தது என்று எழுதப்பட்டிருப்பதை என் சகோதரரே, நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? ஒரு கொம்பு அரசாங்க ஆதிக்கத்தையும், மற்றொரு கொம்பு மதசம்பந்தமான ஆதிக்கத்தையும் குறிக்கின்றது. அவனுக்கு முன் அந்த மிருகம் என்ன செய்ததோ, அதே காரியத்தை அவனும் செய்தான். 277 அமெரிக்க நாட்டின் எண்ணிக்கை பதின்மூன்று. அது ஒரு ஸ்திரீயின் நாடாகும். அது விநோதமல்லவா? அதைக்குறித்து வெளிப்படுத்தல் 13-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது மிக அதிசயமல்லவா? நம் கொடியில் பதிமூன்று கோடுகளும், பதிமூன்று நட்சத்திரங்களும் உள்ளன. எல்லாமே “பதிமூன்று, பதிமூன்று, பதிமூன்று, பதிமூன்று” என்பதாக அமைந்துள்ளது. அவ்வாறே எல்லாமே தொடர்ச்சியாக “ஸ்திரீ, ஸ்திரீ, ஸ்திரீ” என்பதாக அமைந்துள்ளது.
109278 முடிவில் ஒரு ஸ்திரீ ஆதிக்கம் கொள்வாள் என்று முப்பது வருடங்களுக்கு முன்னமே (நான் அதை முன்னறிவித்தேன்) என்பது நினைவிருக்கட்டும். அப்பொழுது நான் முன்னறிவித்த ஏழு காரியங்களில், ஐந்து ஏற்கனவே நிறைவேறிவிட்டன. அவளை ஆதிக்கத்திற்குக் கொண்டுவரவிருக்கும் அந்த மனிதனை நீங்கள் அரசியலில் தேர்தெடுத்திருக்கிறீர்கள். ஆம். ஊம். அது சரி. 279 ஆகவே, சொல்ல வேண்டிய காரியங்கள் அநேகமுண்டு. அப்படி கூறினால் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியதை புரிந்துகொள்ள முடியாது. இப்பொழுது கவனியுங்கள். அப்படிச் சொல்லிக்கொண்டே நாளை இரவு வரை போனால், நாம் நம்முடைய பொருளுக்கு வர முடியாது. உங்களை அதிக நேரம் தாமதிக்கமாட்டேன்.
110280 பாருங்கள், கவனியுங்கள். சாத்தான் உலகத்திலுள்ள எல்லா அரசியல் வல்லமைகளின் பேரிலும் ஆதிக்கம் கொண்டிருக்கிறான் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அவரே அதைச் சொன்னார். மத்தேயு 4-ம் அதிகாரம் 8-ம் வசனத்தில் நீங்கள் அதைக் காணலாம். எல்லா இராஜ்ஜியங்களும் அவனுக்கு சொந்தமானவை. அதன் காரணமாகவே அவர்கள் சண்டையிடுகிறார்கள், யுத்தம் செய்கிறார்கள், கொல்லுகின்றனர். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். 281 அது விநோதமாயில்லையா? ஒருவரையொருவர் கொல்லத்தக்கதாக அவர்களுக்கு இந்தப் பட்டயம் அளிக்கப்பட்டது. ஓ, ஓ, ஓ. என்னே! இப்பொழுது கவனியுங்கள். 282 இப்பொழுது, அவன் அதைச் செய்தபொழுது, அவன் தொடக்கத்தில் மதசம்பந்தமான ஆதிக்கம் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவன் பிசாசினாலான கள்ளப் போதனைகளோடு துவக்கினான். அது பிறகு அந்த உபதேசம் ஒரு கோட்பாடாக மாறியது. பின்னர் அந்த கோட்பாடு மனிதனுக்குள் வாசம் செய்து ஒரு கள்ளத் தீர்க்கதரிசியென்னும் உத்தியோகத்தை மேற்கொண்டது. 283 அதன்பின் அவன் சரியான இடத்திற்குச் சென்றான். அவன் ஒருபோதும் இஸ்ரவேலுக்குச் செல்லவில்லை. அவன் ரோமபுரிக்குச் சென்றான். நிசாயா, ரோமபுரி.
111284 அங்கு நிசாயாவில் ஒரு மாநாடு கூட்டப்பட்டு, அத்தியட்சகர் ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதன் விளைவாக சபையும், அரசாங்கமும் ஒன்றாக இணைக்கப்பட்டது. அப்பொழுது அவன் தன் கையிலிருந்த வில்லை கீழே போட்டுவிட்டு, வெள்ளைக் குதிரையிலிருந்து கீழேயிறங்கி சிவப்பு குதிரையின் மேலேறுகிறான். தன்னுடன் இணங்காத யாவரையும் அவன் அப்பொழுது கொன்று போடுகிறான். அதுதான் உங்களுடைய முத்திரை. அதே ஆள்தான்! அவன் கடைசிவரையிலும் அதனுடன் சவாரி செய்வதைக் கவனியுங்கள். பாருங்கள். அவன் அந்த இரண்டு வல்லமைகளையும் இணைக்கிறான்.
112285 இன்றைக்கும் அதையே செய்ய முயல்கின்றனர். ஒரு விநோதமான காரியம், ஒருவேளை உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாமலிருக்கலாம். இன்றைக்கு லூயிவில் (Louisville) பட்டிணத்திலுள்ள பாப்டிஸ்ட் குழுவினர், நீங்கள் வானொலியில் கேட்டிருக்கலாம், எத்தனை பேர் அதைக் கேட்டீர்கள். ஒரு பேச்சாளர் இவ்வாறு கூறினார். எத்தனை பேர் அதைக் கேட்டீர்கள்? சரி. பாருங்கள்? சரி. அங்குதான் காரியம். நாம் கத்தோலிக்க சபையுடன் உண்மையில் சேரவேண்டிய அவசியமில்லையென்றும், ஆனால் ஆராதனையில் நாம் அவர்களுடன் ஐக்கியங்கொள்ளுதல் அவசியமென்றும் கூறுகின்றனர். லூயிவில் பட்டிணத்தில் இது நிகழும் தருணம், தேவன் முத்திரைகளின் இரகசியங்களைத் தம் மக்களுக்கு வெளிப்படுத்தி “அவ்வாறு செய்ய வேண்டாமென்று” காண்பிக்கிறார். இரண்டும் ஒரே நேரத்தில் கிரியை செய்கின்றதைப் பார்த்தீர்களா? காகமும் புறாவும் பேழையின் மேல் ஒரே கம்பத்தின் மேல் உட்கார்ந்தன என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நிச்சயமாக. ஞாபகங்கொள்ளுங்கள்.
113286 இப்பொழுது, அவன் தன்னுடைய ஆதிக்கத்தினால், சபையையும், அரசாங்கத்தையும் அந்த இரு வல்லமைகளையும் ஒன்றாக இணைக்கிறேன் என்பதை நாம் கண்டறிகிறோம். அதன்பின் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அவன் தன் சொந்த மார்க்கம் ஒன்றை அமைக்கிறான். இப்பொழுது அவன் விருப்பத்திற்கேற்ப என்ன வேண்டுமானாலும் செய்கிறான். அப்பொழுது அவனுடன் இணங்காத அனைவரையும் கொல்வதற்கு அவன் உரிமை பெறுகிறான். அவன் முற்றிலுமாக அதையே செய்தான். அவன் அதைத்தான் செய்தான். அவன்—அவன்…தேவனுடைய வார்த்தையைக் கைக்கொண்ட ஜீவனுள்ள தேவனின் உத்தம பரிசுத்தவான்கள் அவனுடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தால் அவர்களை அவன் கொன்றுபோட்டான்.
114287 இப்பொழுது, ஆதிசபையின் காலத்தைப் பற்றியும், நிசாயாவின் காலத்தைப் பற்றியும் நன்கு பிடித்திருக்கும் சகோதரன் லீவேயில், மற்றும் இங்குள்ள போதகர்களே, நீங்கள் இதைப் படித்தீர்களோ என்னவோ எனக்குத் தெரியாது. நீங்கள் அதைப்படிக்க வேண்டும் என்று விரும்பினால், ஸ்மக்கர் (schmucker) என்பவர் எழுதியுள்ள “ மகிமையுள்ள சீர்திருத்தம் ” (Glorious Reformation) என்னும் புஸ்தகத்தில் நீங்கள் படிக்கலாம். 288 ஹிப்போ நாட்டைச் சேர்ந்த பரிசுத்த அகஸ்டின் ரோமசபையின் குருவானவராக ஆனபோது, ஒருமுறை பரிசுத்த ஆவியானவர் அவரை அபிஷேகிக்க முயன்றபோது, அவர் அதைப் புறக்கணித்து விட்டார் என்பதை நீங்கள் அதில் கண்டறியலாம். போதகர் என்ற முறையில், இதை எத்தனைப் பேர் அறிவீர்கள்? ஆகையால், அவர் பரிசுத்த ஆவியைப் புறக்கணித்தார். இன்றைக்கு பிராடெஸ்டெண்ட் சபைகளும் அவ்வாறே பரிசுத்த ஆவியை நிராகரித்து விட்டதற்கு அது ஒரு மாதிரியில் உள்ளது. அகஸ்டின் ஹிப்போ நாட்டிற்குச் சென்று, “ரோமன் கத்தோலிக்க சபையில் விசுவாசங் கொள்ளாத அனைவரும் கொலை செய்யப்படுவது தேவனுக்குப் பிரீதியாயுள்ளது என்னும் வெளிப்பாட்டை அவர் தேவனிடமிருந்து பெற்றிருப்பதாக ஒரு சாசனத்தில் எழுதி, அதற்குக் கையொப்பமிட்டார்”.
115289 இப்பொழுது கவனியுங்கள். இரத்தச் சாட்சிகள் என்னும் புஸ்தகத்திலிருந்து இதை நான் எடுத்துக் கூறுகிறேன்: “ஹிப்போ நாட்டைச் சேர்ந்த பரிசுத்த அகஸ்டின் காலத்திலிருந்து 1586 வரை ரோமன் கத்தோலிக்க சபை 6,80,00,000 பிராட்டெஸ்டுகளை கொலை செய்துள்ளது”. அப்படியானால் அவன் பட்டயம் சிவப்பாயிருந்ததா? அவன் சிவப்பு நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்துகொண்டிருந்தானா? அது என்ன? அதே ஆதிக்கம்! அதே சவாரி செய்பவன்; அதுதான் இந்த முத்திரையின் இரகசியம். இரத்தசாட்சிகளாக மரித்தவர் மாத்திரம் 6,80,00,000 பேர் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். அதுவல்லாமல், கொலை செய்யப்பட்டவர் இன்னும் எத்தனையோ பேருண்டு. ஓ, இரக்கம்! இருளின் காலங்களில் கத்தோலிக்கர் கொள்கைகளை ஏற்காத லட்சக்கணக்கானவர் சிங்கங்களுக்கு இரையாயினர்! அல்லாமலும் இன்னும் அநேக விதங்களில் அவர்கள் கொலை செய்யப்பட்டனர். நீங்கள் அதை அறிவீர்கள்.
116290 இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது? [சபையோர், “அதிகமான நேரம். முழு இரவுமே உள்ளது” என்கின்றனர்.—ஆசி.] சரி. நான் உங்களுக்கு ஒன்றை வாசிக்கட்டும். என்னோடு கூட வேதத்தை கூட திருப்புங்கள். நான் உங்களுக்கு ஒன்றை காண்பிக்கட்டும். ஒரு நிமிடத்தில், அதை நாம் படம் பிடித்துக் காண்பிக்கட்டும். அது எனது எண்ணத்திற்குள் சற்று தோன்றியது, நாம் அதைப் படிப்போம். நாம் வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்திற்குத் திருப்புவோம். நமக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் மீதம் இருக்கின்றன. அது சரி. இப்பொழுது, நாம் படிக்கையில், மிகவும், மிகவும் கூர்ந்து கவனியுங்கள். வேதாகமம் வைத்துள்ளோருக்கு, நீங்கள் அதைத் திருப்ப நான் உங்களுக்கு சற்று நேரம் தருகிறேன். எனவே நீங்கள் அந்த பாகத்தை எடுத்துவிடலாம். 291 சகோதரன் லீ நீங்கள் அதைப் படித்துள்ளீர்களா? ஸ்மக்கர் (Schmucker) எழுதிய மகிமையுள்ள சீர்திருத்தம் என்னும் புஸ்தகத்திலிருந்து இரத்தசாட்சிகளின் பட்டியலை நான் எடுத்தேன். இந்தப் பட்டியல் வாடிகனில் ரோமாபுரியின் இரத்தசாட்சிகள் என்பதிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டது.
117292 பரிசுத்த பாட்ரிக்கைச் சார்ந்தவர்கள் இரத்தசாட்சியாய் மரிக்கும் வரையுள்ள எண்ணிக்கை தான் அது. இவையனைத்தும் செய்துவிட்டு அவர்கள் பரிசுத்த பாட்ரிக்கை தங்கள் சபையின் பரிசுத்தவான்னென்று அழைக்கின்றனர். ஹூம்!. பரிசுத்த பாட்ரிக் எவ்வளவாக கத்தோலிக்கராக இருந்தாரோ, அவ்வளவாக நானும் கத்தோலிக்கனாக இருக்கிறேன். நான் எவ்வளவாக கத்தோலிக்கனாயிருக்கிறேனென்று நீங்கள் நன்கு அறிவீர்கள். பாருங்கள்? அவர்—அவர் ரோமன் கத்தோலிக்க சபையின் போதகங்களை வெறுத்தார். போப்பாண்டவரிடம் செல்ல அவர் மறுத்தார். ஆம், ஐயா, பரிசுத்த பாட்ரிக் வேதப்பள்ளிகள் நடத்திய வட ஐயர்லாந்துக்கு (Northern Ireland) நீங்கள் சென்றதுண்டா? அவர் முதலில் பாட்ரிக் என்று அழைக்கப்படவில்லை. உங்களில் எத்தனைபேர் அதை அறிவீர்கள்? அவர் சுக்காட்டிஸ் (Sucatus) என்னும் பெயர் கொண்டிருந்தார். அது சரி. அவரது சகோதரியை அவர் இழந்துவிட்டிருந்தார். நீங்கள் ஞாபகங்கொள்ளுங்கள்…பாருங்கள்? அது சரி.
118293 இப்பொழுது. கவனியுங்கள், வெளிப்படுத்தல் 17-ம் அதிகாரத்தைப் படிப்போம். இப்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இருதயங்களைத் திறக்க முயலுங்கள். இப்பொழுது பரிசுத்த ஆவியானவரே உங்களுக்குப் போதிக்க அனுமதியுங்கள். ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடம் வந்து… 294 இப்பொழுது, இங்கே ஏழு கலசங்களைப் பாருங்கள். நாம் ஏழு என்னும் எண்ணிக்கையுடையவைகளைச் சிந்தித்துக் கொண்டு வந்திருக்கிறோம். சபையின் காலங்களுக்குப் பிறகு இவையெல்லாம், கொள்ளை நோய்கள் மற்ற யாவும் ஒரே நேரத்தில் சம்பவிக்கின்றன. அந்த ஒரே புஸ்தகத்தில் இவை முத்தரிக்கப்பட்டு வைக்கப்படுள்ளன. இவை ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்து, ஒன்றோடொன்று, ஒன்றோடொன்றாய் இணைக்கின்றன. இரண்டு ஆவிகள் கிரியை செய்து கொண்டு வருகின்றன; ஒன்று தேவன், மற்றொன்று பிசாசு. பாருங்கள்? …என்னோடே பேசி, நீ வா, திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற மகாவேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;… உனக்குக் காண்பிப்பேன் .
119295 “தண்ணீர்கள்” என்பதை இப்பொழுது இங்கே கவனியுங்கள். 296 “வேசி” அவள் யார்? அது ஒரு பெண். அது ஒரு ஆணாக இருக்கமுடியாது. வேதத்தில், ஸ்திரீ சபைக்கு அடையாளமாயிருக்கிறான். சபை. ஏன்? கிறிஸ்துவின் மணவாட்டியும் ஒரு ஸ்திரீயாகவே சித்தரிக்கப்படுகிறாள். நீங்கள் பாருங்கள். சபை என்பது ஸ்திரீயாகும். 297 இப்பொழுது, “தண்ணீர்கள்” என்பது எதைக் குறிக்கிறது? இங்கு கவனியுங்கள். அதைக் குறித்த 15-ம் வசனத்தை அங்கே படியுங்கள். பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம். 298 இந்த சபை உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது, பாருங்கள், “அந்த வேசி தண்ணீர்களின்மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்”. மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே (நிக்கொலாய் போதகத்தைப் பின்பற்றி ஆவிக்குரிய வேசித்தனம் செய்தார்கள்). அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே. 299 பையனே, நீ குடிகாரக் குழுவைப் பற்றிப் பேசுகிறாயே! நீ… …ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான்…ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக்கண்டேன்.
120300 அது என்னவென்று நீங்கள் அறிவீர்களா? இது கத்தோலிக்க சபையைச் குறிக்கிறது என்று கத்தோலிக்க புஸ்தகங்களே சம்மதிக்கின்றன. எத்தனைபேர் அதை அறிவீர்கள்? அவர்களுடைய சொந்த புஸ்தகத்திலேயே உள்ளது. எங்கள் விசுவாசத்தின் உண்மைகள் என்னும் புஸ்தகத்தை நான் வைத்துள்ளேன். அதில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, இப்பொழுது, பாருங்கள்; அது கத்தோலிக்க மதகுருவிற்கு சொந்தமான புஸ்தகம். அது சரி, அது சரி. ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன். 301 இப்பொழுது, இந்த அடையாளத்தை, “ஏழு தலைகளையுடைய மிருகம்” சற்று கவனியுங்கள். “அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழுமலைகளாம்” என்று இங்கே கூறப்பட்டுள்ளது என்பதை நீங்கள் பாருங்கள். ரோமபுரி ஏழு மலைகளின் மேல் கட்டப்பட்டுள்ளது என்பது நிச்சயமாகும். பாருங்கள்? “ஏழு தலைகள்”, “பத்து கொம்புகள்” பத்து கொம்புகள் பத்து இராஜ்ஜியங்களைக் குறிக்கின்றன. அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள். 302 அந்த அந்திக்கிறிஸ்துவின் ஆவி, “வேசித்தனம்”, பாருங்கள், “உபதேசம்”, அதாவது தேவனுக்கு விரோதமாக விபச்சாரம் செய்தல். பாருங்கள்? மணவாட்டியெனக் கருத்தப்படுகிறவள், பாருங்கள், விபச்சாரம் செய்தல். பாருங்கள்? ஏவாள் செய்தது போன்று, சபையும் வேசித்தனம் செய்கின்றது. பாருங்கள்?
121மேலும், இரகசியம், மகா பாபிலோன்… 303 ரோமபுரியின் “பாபிலோன்” என்று அனைவரும் அறிவர். வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. 304 ஆறாவது வசனத்தைக் கவனியுங்கள். அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தினத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறி கொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். 305 சிலுவைகள் இன்னும் மற்றவைகளால் அலங்கரிக்கப்பட்டு அவள் மிகவும் அழகானவளாய் காணப்பட்டாள். “பரிசுத்தவான்களுடைய இரத்தத்தைக் குடித்த குற்றத்திற்கு பாத்திரமாக அவள் எவ்வாறு இந்த உலகத்தில் இருந்திருக்க முடியும்?” அது யோவானை குழப்பமுறச் செய்துவிட்டது. அப்பொழுது தூதன் அவனிடம் என்ன கூறுகிறான் பாருங்கள். அப்பொழுது தூதனானவன் என்னை நோக்கி; ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையுமுடையதாய் இவைகளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன். 306 இது முத்திரைகளில் அடங்கியுள்ள இரகசியமல்ல. இது வேறொன்று, பாருங்கள். அவன் கூறினான்… ஏழு தலைகளும், பத்து கொம்புகளும். நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, (அதற்கு அஸ்திபாரம் இல்லை, போப்பாண்டவர்) நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் (அதுதான் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், பாருங்கள்) பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். 307 எவ்வாறு, உங்கள் பெயர் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டது? நீங்கள் சென்றிருந்த அந்த எழுப்புதல் கூட்டத்தின் போதா? அல்லவே அல்ல. “உலகத்தோற்றத்துக்கு முன்னால”. இருந்ததும், இராமற்போனதும், இனிஇருப்பதுமாயிருக்கிற மிருகம். 308 அந்த மிருகத்தைப் “பாருங்கள்”. ஒன்று சாகும். மற்றொன்று அதன் ஸ்தானத்தை வகிக்கும். “இருந்ததும் இராமற்போனதும் இருந்ததும்; இராமற்போனதும், இருந்தான், இராமற்போனான்”,… முடிவில் அது அவ்வழியில் நாசமடையப் போகிறது. பாருங்கள்? சரி.
122ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். 309 ஆவிக்குரிய வரங்கள் ஒன்பதென்றும், அதில் ஞானம் ஒரு வரம் என்றும் எத்தனை பேர் அறிவீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அது உண்மை! அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம். 310 ஓ! இதைப் புரிந்துகொள்ளாதவன் முற்றிலும் குருடனாயும் செவிடனாயும், ஊமையனாகவும் இருத்தல் வேண்டும். பாருங்கள்? சரி. அவைகள் ஏழு இராஜ்ஜியங்களாம்; இவர்களில் ஐந்து பேர் விழுந்தார்கள். ஒருவன் இருக்கிறான் (நீரோ), மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்க வேண்டும். 311 நீரோ என்ன செய்தான் என்பது நினைவிருக்கிறதா? அவன் பட்டிணத்தை எரித்துப்போட்டு, கிறிஸ்தவர்கள் மேல் பழியைச் சுமத்தினான். அவன் தன் தாயை ஒரு சிறிய மரக்கிளையில் உட்காரவைத்து அதை குதிரையைக் கொண்டு வீதிகள் முழுவதும் இழுக்கச் செய்தான். ரோமபுரி எரியும் போது அவன் நரம்பிசைக் கருவியை வாசித்துக் கொண்டிருந்தான். அது சரி. இருந்ததும், இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும்… 312 அந்திக்கிறிஸ்துவின் ஆவி மனிதனுக்குள் வாசம் செய்து கிரீடம் சூட்டப்பட்டபோது, அஞ்ஞான ரோம மார்க்கம் போப்பாண்டவரின் ரோம மார்க்கத்துடன் இணைந்து அவன் சபைக்கும் அரசாங்கத்துக்கும் முடிசூட்டப்பட்ட அரசனாக விளங்கினான். ஓ, சகோதரனே! பாருங்கள். அது முழுவதும் அசுத்தத்தால் நிறைந்துள்ளது. பாருங்கள்? …அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும் நாசமடையப் போகிறவனுமாயிருக்கிறான் (எவ்வளவு காலம் அவன் நீடித்திருக்கிறான்? நாசமடையும் வரை அவர்கள் தங்கள் முறைமைகளை மாற்றப்ப்போவதில்லை.) நீ கண்ட பத்து கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை. இவர்கள் மிருகத்துடன் கூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள் போல அதிகாரம் பெற்றுக் கொள்ளுகிறார்கள். 313 அவர்கள் சர்வதிகாரிகளாக ஆகின்றனர். உண்மையாகவே, நீங்கள் பாருங்கள், “இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்”, இப்பொழுது இங்கு கவனியுங்கள். அது கம்யூனிஸ்ட்டுகளைக் குறித்துப் பேசவில்லை. பாருங்கள்? இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள். இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடு கூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான். பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.
123நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக்கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து (நாம் சென்ற இரவு கூறினது போன்ற அந்த உடன்படிக்கை முறிக்கப்படும்போது) அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள். 314 பூமியின் வர்த்தகர்கள், “ஐயோ! ஐயோ, பாபிலோன் மாநகரமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே!” என்று புலம்புவார்கள் என்று வேதம் கூறியுள்ளதை நிங்கள் அறிவீர்கள் அல்லவா? பாருங்கள்? தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார். நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.
124315 இந்த ஒன்றை எனக்கு சொல்லுங்கள். ருஷ்யா தேசம் எல்லா தேசங்களின் ஆளுகை செய்வதில்லை. நாமும் எல்லார் மேலும் ஆளுகை செய்வதில்லை. நேபுகாத்நேச்சர் சொப்பணத்தில் கண்ட சிலையின் உருவம் கைகளில் தொடங்கி பாத விரல்களில் முடிவது போன்று, உலகம் முழுமையையும் அரசாட்சி செய்வது ஒன்றே ஒன்றாகும். அதுதான் ரோமாபுரி. ரோமாபுரி தேசம் அரசாட்சி செய்வதில்லை. ரோமாபுரி சபைதான் அவ்விதம் செய்கிறது. வானத்தின் கீழ் காணப்படும் எல்லா தேசங்களும் ரோமாபுரியின் ஆதிக்கத்தில் உள்ளது. 316 “அவனுடன் யாரால் யுத்தம் செய்ய முடியும்?” என்று அவர்கள் கூறியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. கத்தோலிக்க சபை ‘சமாதானம்’ என்று அறை கூவும்போது, அங்கு சமாதானம் ஏற்படுகிறது. [சகோதரன் பிரான்ஹாம் தன் விரல்களை ஒரு முறை சொடுக்கிறார்—ஆசி.] ஒவ்வொரு கத்தோலிக்கனும், “அது தான், அது ‘சண்டையிடாதிருங்கள்’ என்றால், சண்டையிடுவதை அவர்கள் நிறுத்திவிடுகின்றனர். அவ்வளவு தான். அவன் செய்வதை வேறு யாரால் செய்ய முடியும்? யாராலும் முடியாது. அது உண்மை. அவன் செய்யக் கூடிய அற்புதங்களைக் கண்டு அவர்கள் வியந்தனர்”. அவன் யுத்தத்தை நிறுத்த முடியும். [சகோதரன் பிரான்ஹாம் தன் விரலை ஒரு முறை சொடுக்கிறார்—ஆசி.] “நிறுத்துங்கள்” என்று அவன் சொன்னால் போதும். அப்பொழுது யுத்தம் நின்றுவிடும். ஆனால் அவன் அவ்விதம் சொல்லி யுத்தத்தை நிறுத்துவான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை.
125317 “அவர்கள் ஒருவரையொருவர் கொல்லத்தக்கதாக, அவர்கள் ஒருவரையொருவர் கொல்லத்தக்கதாக அதிகாரம் பெற்றுள்ளனர்” என்பதைக் கவனிக்கவும். தொடக்கத்தில் அவன் வில்லைப் பிடித்திருந்தான். ஆனால் அவனிடம் அம்புகள் இல்லை. பிறகு அவன் வெள்ளைக் குதிரையிலிருந்து சிவப்பு நிறமுள்ள குதிரைக்கு மாறி, தன் கையிலுள்ள “பெரிய பட்டயத்தினால்” கொலைபுரிகிறான், பிசாசின் கைகளில் பட்டயம். 318 இயேசு என்னக் கூறினார்? இயேசு, “பேதுரு பட்டயத்தை உருவி பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினபோது, பட்டயத்தை எடுக்கிறார்கள் யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்” என்றார். நீங்கள் எதிர்த்துப் போரிட வேண்டாம். பாருங்கள்? அவர் செய்தது போலவே நீங்களும் செய்யுங்கள். அதைத் தொடர்ந்து செய்யுங்கள்.
126319 இப்பொழுது ஞாபகங்கொள்ளுங்கள். அவனிடம் பட்டயம் இருந்தது. சிவப்பு குதிரையின் மேலிருக்கிறவன் பட்டயத்தை வைத்துக் கொண்டு, தன்னுடன் இணங்காத அனைவரையும் கொன்று அதனால் ஏற்பட்ட இரத்தப் பெருக்கின் வழியாகச் செல்கிறான். 320 இப்பொழுது நீங்கள் இந்த முத்திரையின் அர்த்தத்தை புரிந்து கொள்ளுகிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] இந்த முத்திரையின் அர்த்தம் இப்பொழுது எத்தனை பேருக்குப் புரிகின்றது? [“ஆமென்.”] அது சரி. இப்பொழுது இயேசு, என்ன கூறினார்? “பட்டயத்தை எடுக்கிறவர்கள் யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்” என்று இயேசு உரைத்தார். அது உண்மை அல்லவா? அது சரி. அது சரி. காலங்கள் தோறும் பரிசுத்தவான்களாகிய இரத்தச் சாட்சிகளின் இரத்தம் சிந்தினவனாகிய இக்குதிரையின் மேல் சவாரி செய்பவனும், அவனுடைய இராஜ்ஜியத்தின் பாஷைகளும் இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய பட்டயத்தால் கொல்லப்படுவர். “பட்டயத்தை எடுக்கிறவர்கள் யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்”. அவர்கள் அந்திக்கிறிஸ்துவின் கொள்கையாகிய பட்டயத்தைக் கொண்டு காலங்கள்தோறும் தேவனை உண்மையாக வழிபட்ட லட்சக்கணக்கானவர்களைக் கொன்று போட்டனர். ஆகையால் கிறிஸ்து பட்டயத்துடன் வரும்போது, அவருடைய வார்த்தை அவருடைய வாயிலிருந்து புறப்பட்டுச் செல்கிறது, அவருக்கு முன்னால் வரும் ஒவ்வொரு சத்துருவையும் அவர் கொன்று போடுவார். அதை நீங்கள் நம்புகிறீர்களா? “சத்துருவைக் கொன்று போடுவார்.”
127321 இன்னும் ஒரு நிமிடத்தில் நாம் அதைப் பார்ப்போம். வெளிப்படுத்தின விசேஷம், நானாகவே இதைச் சொல்லுகிறேனா அல்லது தேவனுடைய வார்த்தை இவ்விதம் உரைக்கிறதா என்று நாம் இப்பொழுது பார்ப்போம். வெளி 19:11 பின்பு பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்… (ஆமென்) இதோ ஒரு வெள்ளைக் குதிரை காணப்பட்டது. அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுள்ளவரெனப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தன. அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன. 322 ஓ சகோதரனே! பாருங்கள், அவருடைய பரிசுத்தவான்கள் அவருக்குக் கிரீடம் சூட்டியுள்ளனர். நீங்கள் பாருங்கள். அவருக்கேயன்றி வேறொருவருக்கும் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. 323 நாம் இன்னும் அந்த நாமத்தை அறிந்து கொள்ளவில்லை, ஞாபகங் கொள்ளுங்கள், நம்மால் முடியாது “அவர் தரித்திருந்தார்…” நாம் அதை காணட்டும். இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. (அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது என்றல்ல. ஆனால் அவ்வாறு அழைக்கப்பட்டார்.) 324 ஏனெனில் அவரும் அவருடைய வார்த்தையும் ஒன்றே. பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள். அவருடைய “நாமங்கள்” என்று பன்மையில் கூறப்படவில்லை, உ—ஊ! “அவருடைய நாமம் ‘தேவனுடைய வார்த்தை’ என்று அழைக்கப்படுகிறது”. அவர் ஒரே நாமத்தை மாத்திரம் அறிந்திருந்தார்; வேறெந்த நாமத்தையும் அல்ல. பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின் மேல்ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள். (வெண்மை வஸ்திரம் பரிசுத்தவான்களின் நீதியாகும்). பாருங்கள்?
128325 இப்பொழுது கவனியுங்கள். இயேசு என்ன சொன்னார்? “பட்டயத்தை எடுக்கிறவர்கள் பட்டயத்தால் மடிய வேண்டும்…” சரி. சிவப்பு குதிரையின் மேலிருக்கிறவன் வருகிறான். “பட்டயத்தை எடுக்கிறவன்…” நீங்கள், ஒருக்கால் காலங்கள்தோறும் 6,80,00,000 பேரை அல்லது அதைக் காட்டிலும் அதிகமான வரைக் கொன்றிருக்கலாம் என்று கூறலாம். ஆனால் இயேசு, “பட்டயத்தை எடுத்தவர்கள் யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்” என்று சொல்லியிருக்கிறார். கவனியுங்கள். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது;… 326 “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலு கருக்கானதாயும்…கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும் இருக்கிறது” என்று எபிரெயர் 4-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. தேவனுடைய வார்த்தை வேறெதைச் செய்கிறது? “அது இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாய் இருக்கிறது”. சரி. புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின் மேலும், தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்தது.
129327 தேவனுடைய வார்த்தைக்கு எதிராக இருக்கும் போலியாட்கள், அவர்கள் உடன்படமாட்டார்கள். ஆகவே இந்தக் காரியமானது…சாத்தான் தன் ஆதிக்கத்தின் கீழிருந்த அரசாங்க அதிகாரத்தையும் ஆவிக்குரிய அதிகாரத்தையும் ஒன்றாக இணைத்து, உலகெங்கும் எல்லா தேசத்திலும் பரவியுள்ள ஒரு சபையை உண்டாக்கினான். வெள்ளைக் குதிரையிலிருந்து இறங்கி சிவப்பு நிறமுள்ள குதிரையின் மேலேறிப் புறப்பட்டுச் சென்று, கோடிக்கணக்கானவர்களைப் பட்டயத்தால் கொன்று போட்டான். 328 ஆனால் தேவன், “அவன் எந்த வார்த்தையை புரட்டினானோ, கள்ள உபதேசத்தினால் போதித்தானோ, அதே வார்த்தை இயேசுகிறிஸ்துவின் உதடுகளிலிருந்து வல்லமை பொருந்தியதாய் புறப்பட்டு, அவனையும் அவனைச் சார்ந்தவர் அனைவரையும் கொன்றுபோடும்” என்று கூறினார். ஆமென்!
130329 அதுதான் இரண்டாம் முத்திரையின் இரகசியம். நீங்கள் அவரில் அன்புகூருகிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஓ, என்னே! இது கர்த்தர் உரைக்கிறதாவது . [சபையோர், மிகவும் களிகூறுகின்றனர்.] தேவனுக்கு ஸ்தோத்திரம்! அநேக தரிசனங்களைக் கண்டு, வெளிப்பாடுகளைப் பெற்று, அவ்விதம் சம்பவிக்கும் என்று நான் கூறின ஒவ்வொன்றும் அதே போன்று நிகழ்ந்தது. இதையறிந்தவர் எத்தனை பேர்? உங்கள் கைகளை உயர்த்துங்கள். நூற்றுக்கணக்கானவர், இங்குள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய கரங்களை உயர்த்தியுள்ளனர். அது உண்மை. இது அப்படியே இருக்கட்டும். அது அவ்வண்னமே இருக்கிறது என்பதை ஞாபகங்கொள்ளுங்கள். ஓ! நண்பனே! இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றண்டைக்கு வாருங்கள்; அங்கே பாவிகள் அந்த இரத்த வெள்ளத்தில் மூழ்கி, தங்களுடைய எல்லாப் பாவக் கறைகளையும் போக்குகின்றனர். 330 நீங்கள் ஒருபோதும் வரவில்லையெனில், அவரை விசுவாசித்து இப்பொழுதே வாருங்கள். வேறொரு தருணத்திற்காகக் காத்திராதேயுங்கள்; வேண்டாம், வேண்டாம், நண்பர்களே, உங்கள் ஜீவியத்தில் ஏதாவது காணப்பட்டால். 331 நாங்கள் உதவிசெய்யவே இங்கிருக்கிறோம். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தின் மேல் நான்கு முறை தட்டுகிறார்—ஆசி.] ஏதோ ஒன்று சம்பவிக்கவிருக்கிறது. ஏனென்று எனக்குத் தெரியவில்லை. அது எப்பொழுது சம்பவிக்குமென்றும் எனக்குத் தெரியாது. என்ன நேரிடப் போகிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால் எப்பொழுது சம்பவிக்கப் போகிறது என்று நான் அறியேன். அது கண்டிப்பாக நிகழுமென்பது எனக்குத் தெரியும். ஏனெனில் அவர் இப்பொழுது எனக்கு அதை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். தீர்க்கதரிசிகளுக்கு முதலாவது அதை வெளிப்படுத்தாமல் அவர் செய்வதில்லை. ஆமோஸ் 3. அவர் முதலில் அதை வெளிப்படுத்துகிறார். இவையாவும் கடைசிநாட்களில், ஏழாம் சபையின் காலமுடிவில் அக்காலத்து செய்தியாளன் தோன்றும்போது நிறைவேறும் என்பதாய் அவர் வாக்களித்துள்ளார். முத்திரைகளின் இரகசியம் அப்பொழுது வெளிப்படும். இப்பொழுது அது வெளிப்படுத்தப்படுகிறது என்று கர்த்தரின் நாமத்தைக் கொண்டு சொல்லுகிறேன். நண்பனே, நான் சொல்வதை நம்புங்கள். ஆம், ஐயா பாபிலோனை விட்டு வெளியே வாருங்கள்.
131332 நான் முடிப்பதற்குமுன் ஒன்றைக்கூறிட விரும்புகிறேன். ஏனெனில்…இப்பொழுது ஒன்பதரை மணியாகின்றது. இப்பொழுது இது சரியான நேரமாயுள்ளது. 333 நானும் பில்லியும் விமானத்தை விட்டு இறங்கி இந்தியாவை அடைந்தோம். அதுதான் அங்கு நாங்கள் சென்ற கடைசி பயணம். அப்பொழுது அவர்கள் கொண்டுவந்த ஒரு—ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையை நான் படித்துக் கொண்டிருந்தேன். அதில் “பூகம்பம் நின்றுவிட்டிருக்க வேண்டும். பறவைகள் திரும்பி வருகின்றன” என்ற விவரம் அச்சிடப்பட்டிருந்தது. ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது.
132334 இந்தியாவில் நாம் வைத்திருப்பது போன்று கம்பிகளினால் செய்யப்பட்ட வேலிகள் கிடையாது. அவர்கள் அடைப்புக்காகக் கற்பாறைகளை உபயோகிக்கின்றனர். அவர்கள் தங்களுடைய வீடுகளையும் கற்பாறைகளைக் கொண்டே கட்டுகின்றனர். இந்தியாவில் எங்கும், நீங்கள் மலைகளின் மேல் வசித்தாலொழிய, அங்கு ஓ எல்லாவிடத்திலும் உஷ்ணமாகவே உள்ளது. ஓ…கல்கத்தா முழுவதிலும் ஜனங்கள் தெருக்களில் வாழ்ந்து மரிக்கும் அளவிற்கு பட்டினி கிடக்கின்றனர். 335 இப்பொழுது, ஆகவே அவர்கள் மதில்களை தங்களுடைய வீடுகளின் பக்கத்தில் கட்டுகின்றனர். அவர்கள் தங்கள் வீடுகளைச் சுற்றிலும் கற்பாறைகளினால் மதில்சுவர்களைக் கட்டுகின்றனர். தங்கள் வீடுகளுக்காக மதிற்சுவரை கட்டி, தங்களுக்கு கிணறையும் தோண்டுகின்றனர். ஆடுமாடுகளுக்கென்று அவர்கள் கிணறுகளை வெட்டி, அதை சுற்றிலும் மதில்கள் கட்டுகின்றனர்.
133336 ஏதோ ஒன்று, திடீரென்று சம்பவிக்கத் துவங்குகின்றது. சிறு பறவைகள் இம்மதில்களில் காணப்படும் இடைவெளிகளில் கூடுகட்டி குஞ்சு பொறித்து குஞ்சுகளை வளர்க்கின்றன. ஏதோ ஒன்று சம்பவிக்கத் துவங்குகிறது. 337 ஒவ்வொரு நாளும், உஷ்ணம் அதிகமாகும் போது ஆடுமாடுகள் மதிலின் அருகிலுள்ள கிணறுகளின் கீழ் நிழலுக்காக வந்து நிற்கும். 338 அந்தச் சிறு பறவைகள் யாவும் அந்த இடங்களில் வசிக்கின்றன. சடுதியாக ஏதோ ஒரு காரணத்தால் பறவைகள் பறந்து சென்று கூடுகளுக்குத் திரும்புவதில்லை. நான் சிறு பறவைகளைக் குறித்து அன்று கூறினேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள்? ஏதோ சில காரணங்களால் அவைகள் பறந்து விடுகின்றன. வெளியே சென்ற அவைகள் தங்கள் கூடுகளுக்கு திரும்புவதில்லை. அவை வயல்வெளிகளில் அல்லது மரங்களில் அமர்ந்து கொள்கின்றன. அவைகள் போக முடிந்த இடங்களுக்கு போகின்றன. 339 அதுபோன்று ஆடுமாடுகளும் திரும்பி வருவதில்லை. ஆடுகளும் திரும்பி வருவதில்லை. அவைகள் வயல்வெளிகளில் தரித்திருந்து, ஒன்றையொன்று தழுவிக்கொண்டு நிற்கும். அவை தங்கள் ஸ்தலங்களுக்குத் திரும்புவதில்லை. அதுதான் செய்வதற்கான சரியான வழியாகும். ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகின்றது என்று அவைகளுக்குத் தெரியும். 340 அப்பொழுது திடீரென்று பூகம்பம் உண்டாகி, கற்பாறை மதில்கள் பூகம்பத்தினால் அசைந்து விழுந்து போகின்றன. 341 பூகம்பம் நின்றவுடன், மூன்று நான்கு நாட்களாக திரும்பிவராத பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்புகின்றன. “அவைகள் கூடுகளுக்குத் திரும்புவதால் பூகம்பங்கள் நின்று போயிருக்க வேண்டும்” என்று ஜனங்கள் கூறினர்.
134342 ஏன்? நோவாவின் காலத்தில் ஆடுமாடுகளையும் பறவைகள் பேழைக்குள் போகச் செய்த அதே தேவன் பாதுகாப்பான ஸ்தலத்துக்கு அவைகளை இன்று பறக்கச் செய்ய முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் அல்லவா? அது சரிதானே? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 343 சகோதரரே, இப்பொழுது நான் ஒன்றை சொல்லட்டும். முக்கியமான ஒரு சம்பவம் நிகழப்போகின்றது. மதசம்பந்தமான இந்த பெரிய பழைய மதில்கள் யாவும் விழுந்து, நான் இங்கு நிற்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அவர்கள் “மிருகத்துக்கு ஒரு சொரூபத்தை உண்டாக்க இணங்குவார்கள்”, உண்மையாகவே அவர்கள் நான் இங்கு நின்று கொண்டிருப்பது எவ்வளவு உறுதியோ அவ்வளவு உறுதியாக அதற்கு இணங்கப் போகிறார்கள். இந்த தேசம் முழுவதுமே கர்த்தருடைய வார்த்தையின்படியே அதை அங்கீகரிக்கும். கவனியுங்கள், ஒரு விசித்திரமான உணர்ச்சி உங்களில் தோன்றும்போது, அந்த மதில்களை விட்டு நீங்கள் அகன்று போங்கள். இல்லாவிடில் நீங்கள் அங்கேயே மரித்துப்போவீர்கள். அதைச் செய்யாதீர்கள். அதிலிருந்து வெளியே வாருங்கள். இந்த எல்லா முறைமைகளையும் விட்டு அகன்று போங்கள். உங்களால் முடிந்தவரை துரிதமாக தப்பியோடுங்கள். தேவனிடத்தில் இரக்கத்திற்காக மன்றாடுங்கள். 344 “என் தாயார் மெதோடிஸ்டாக இருந்தால் நானும் மெதோடிஸ்டாக இருப்பேன் என்றோ, அல்லது என் தகப்பனார் பாப்டிஸ்டாக இருந்தால் நானும் பாப்டிஸ்டாக இருப்பேன்” என்றோ நீங்கள் கூற வேண்டாம். நீங்கள் அதைச் செய்ய வேண்டாம். நீங்கள்—நீங்கள் இதை தற்செயலாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 345 இது எவ்வளவு சாதாரணமாகவும் தாழ்மையாகவும் காணப்பட்டாலும் நான் கவலைப்படுகிறதில்லை. இது கர்த்தருடைய வார்த்தையாயுள்ளது. உங்களால் முயன்றவரை இயேசுகிறிஸ்துவினிடம் ஓடிச்சென்று தேவன் உங்களைப் பரிசுத்த ஆவியால் நிரப்பும் வரை அவரில் நிலைத்திருங்கள். ஏனெனில் நீங்கள் பரிசுத்த ஆவியைத் தேடியும் அது கிடையாமற் போகும் தருணம் வரப்போகிறது. ஆகையால் இப்பொழுதே கண்டிப்பாக பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
135இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை சற்றுநேரம் தாழ்த்துவோமாக. 346 பாலோகப் பிதாவே, ஓ, சில நேரங்களில் நான்—நான் இங்கே நிற்கும்போது, நடுங்குகிறேன். நெருங்கி வந்துகொண்டிருக்கிற அந்த பயங்கர நேரத்தைக் குறித்து நான் நினைத்துப் பார்க்கிறேன். அது வராமல் நிறுத்த எந்த வழியும் இல்லை. அது வருமென்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. “ஜனங்கள் ஏன் வந்து செய்திக்கு செவிகொடுப்பதில்லை? அவர்கள் வந்து செய்தியை ஏற்றுக்கொள்ளமாட்டார்களா?” என்று நான் எண்ணுவதுண்டு. ஆனால் உண்மையாகவே, அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதாக நீர்—நீர் உரைத்திருக்கிறீர் என்பதை நான் அறிவேன். ஆகவே தான் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். 347 ஆனால் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்டுள்ள சிலர் உண்டு. முத்திரைகள் திறக்கப்படும்போது, அவர்கள் தங்கள் பெயரை அங்கே காண்கின்றார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்களிடத்தில் பேசுகிறார். ஆகையால் அவர்கள் வந்து ஏற்றுக்கொள்கிறார்கள். நீர் அவர்களை விலக்க முடியாது. எவரும் அவர்களை அதினின்று விலக்க முடியாது. ஆடுமாடுகளையும் பறவைகளையும் பூகம்பகாலத்தில் நீர் வழி நடத்துவது போன்று அவர்களையும் நீர் வழி நடத்துகிறபடியால், எப்படியோ அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். நீரே தேவன். மிருகங்களுக்குள்ள உணர்ச்சியைப் போன்று, ஸ்தாபனங்களினின்று விலக வேண்டுமென்ற உணர்ச்சி அவர்களுக்குள்ளும் இருக்கிறது. மிருகங்களுக்குள்ளே ஓர் உணர்ச்சி வரப்போகும் ஆபத்தைக் குறித்து அவைகளை எச்சரித்து தப்பியோடச் செய்யுமாயின், பரிசுத்த ஆவியினால் நிறையப்ப்பட்டதாக கூறிக் கொள்ளும் சபைக்கு அந்த பரிசுத்த ஆவியானவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? 348 தேவனே, எங்களிடத்தில் இரக்கமாயிரும். எங்கள் குற்றங் குறைகளை கர்த்தாவே, எங்கள் எல்லோருக்கும் மன்னியும். நாங்கள் இந்த பிரசங்க பீடத்தில் நின்றுகொண்டு கைகால்கள் வலிக்கும்படி பிரசங்கிக்க, இந்த ஜனங்கள் ஆராதனையில் நின்று கொண்டிருந்து, பின்பு வீடுகளுக்குச் சென்று “செய்தி நன்றாகத்தான் இருந்தது” என்று கூறி அத்துடன் நிறுத்தி விட நாங்கள் விரும்பவில்லை. கர்த்தாவே அதற்கு நீர் ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்புகிறோம். எங்கள் இருதயங்களை நீர் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம். தவறு ஏதாகிலும் இருந்தால், கர்த்தாவே அதை எங்களுக்குத் தெரியப்படுத்தியருளும். காலதாமதமான பிறகு, அந்த பயங்கரமான நேரத்தை நாங்கள் அடைய தயவுகூர்ந்து நீர் அனுமதிக்க வேண்டாம். என்னை ஆராய்ந்து பாரும். கர்த்தாவே என்னைச் சோதித்துப்பாரும்.
136349 முத்திரைகள் உடைக்கப்பட்டு வெளிப்படும் இரகசியங்களை நான் தேவகிருபையினால் இங்கு நின்றுகொண்டு இவர்களுக்கு அறிவிக்கிறேன். இவ்விதம் நிகழுமென்று சில வரங்களுக்கு முன் நீர் எனக்கு அறிவித்தீர். பிதாவே, இப்பொழுது எங்களுக்கு முன்பாக அந்த இரகசியங்கள் வெளியரங்கமாக்கியுள்ளன. 350 இப்பொழுதும் கர்த்தாவே என்னை சோதித்தறியும், என்னை ஆராய்ந்து பாரும். என் இருதயத்தை ஆராந்து பாரும். கர்த்தாவே,…நீர் எங்கள் ஜீவியத்தைக் காணவேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். எங்கள் ஜீவியத்தில் தவறு காணப்பட்டால், கர்த்தாவே அதைக் குறித்து எங்களிடத்தில் பேசும். நாங்கள் அதை இப்பொழுதே சரிபடுத்திக்கொள்ள விரும்புகிறோம். இரத்தம் நிறைந்த ஊற்று உள்ளபோதே, எங்கள் பாவங்களையும், அவிசுவாசத்தையும், போக்கும், வெண்மயாக்கும் திரவம் இருக்கும்போதே, நாங்கள் அதைச் சரிபடுத்திக்கொள்ள விரும்புகிறோம். எங்கள் ஆத்துமாக்களை அதில் மூழ்கவைத்து எங்களுடைய எல்லா அவிசுவாசத்தைப் போக்கிக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம். தேவனே, எங்கள் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும். கர்த்தாவே, அதை எங்களை விட்டு எடுத்துப் போடும்.
137351 எடுத்துக்கொள்ளப்படுதலுக்கேற்ற கிருபையை நாங்கள் பெற்றுக்கொள்ள விரும்புகிறோம். அந்த இரகசியமான இடிகள் அங்கு முழங்கி சபை எடுக்கப்படும்போது அந்த இரகசியங்களை நாங்கள் பெற்றுக் கொள்ள ஆயத்தமாயிருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். கர்த்தாவே அதை அருளும். 352 கர்த்தாவே, உம்முடைய வார்த்தையைக் கொண்டு எங்களை சோதித்தறியும். நாங்கள் அந்த வார்த்தையை நோக்கிப்பார்ப்போமாக. நாங்கள் தவறுசெய்துள்ளதை நாங்கள் கண்டால்,… கர்த்தாவே பட்டப்பெயர்களினால் ஞானஸ்நானம் பெற்று உண்மையான ஞானஸ்நானம் எதுவென்று அறியாதவர் இருந்ததால், பவுல் செய்தது போல நானும் உண்மையுள்ளவனாக…அவ்வாறு செய்வேனாக. 353 அவன் எபேசு பட்டிணத்தின் மேற்குக்கரைக்குச் சென்றபோது, கூச்சலிட்டு, சத்தமிட்டு, மகத்தான ஓர் சமயத்தை அனுபவித்துக் கொண்டிருந்த சீஷர்களிடம், “நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்க, அவர்கள் பரிசுத்த ஆவி உண்டென்று கேள்விப்படவேயில்லையென பதிலுரைத்தனர். அப்பொழுது அவன், “அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான். அவர்கள் மகத்தான அந்த தீர்க்கதரிசியினால், அந்த பரிசுத்த தீர்க்கதரிசியினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைப் பெற்றிருந்தனர். அப்பொழுது அவர்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று பவுல் அவர்களுக்குக் கட்டளையிட்டான்.
138கர்த்தாவே உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் இருக்கும்படிச் செய்யும்! 354 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறாத யாவரும் உங்களுக்கு ஒரு தருணமுள்ளபோதே தண்ணீரைத் துரிதமாய் அடைந்து அந்நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளும்படி நான் ஒவ்வொரு நபருக்கும் கட்டளையிடுகிறேன். 355 பரித்த ஆவியினால் நிறையப்படாதவாரே, இப்பொழுதே நீங்கள் முழங்கால் படியிட வேண்டுமென்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன். பரிசுத்த ஆவியானவர் உங்களைப் பரிசுத்தப்படுத்தி, அவருடைய அன்பினாலும் நற்பண்பினாலும் நிறைத்து, தேவனுடைய சமூகத்தில் உங்கள் ஆத்துமாக்கள் திருப்தியடைந்து, அவரைச் சேவிக்கவும், அவரோடு சஞ்சரிக்கவும், இனி உங்கள் ஜீவியகாலமெல்லாம் அவருக்காக உழைக்க உங்களுக்கு வாஞ்சை தோன்றும் வரை, நீங்கள் முழங்காலிலிருந்து எழுந்திருக்க வேண்டாம். 356 இது அருளப்படுவதாக தேவன் இதை உங்களுக்கு அருள நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார். நீங்கள் உண்மையாகவே அவரை நேசிக்கிறீர்களா? இப்பொழுது உங்கள் கரங்களை உயர்த்துங்கள். சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே.
139357 [சகோதரன் பிரான்ஹாம் நான் அவரை நேசிக்கிறேன் என்ற பாடலை மௌனமாகப் பாடத் துவங்குகிறார்—ஆசி.] தண்ணீரினால் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று, அல்லது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற வேண்டுமென்ற தங்களுடைய அவசியத்தை இன்றிரவு இங்கு அமர்ந்திருக்கும் யாராவது இன்றிரவு உணர்ந்திருந்தால், உங்கள் தேவைகளை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அது இப்பொழுது உங்களுக்கு வெளிப்பட்டுள்ளது. ஜெபத்தில் நினைவுகூர வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், எங்களில் எவருமே அதை உங்களுக்கு அளிக்க முடியாது. ஓ, நாங்கள் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க முடியும். ஆனால் அந்த ஒரு காரியத்தை, பரிசுத்த ஆவியை எங்களால் உங்களுக்குக் கொடுக்க முடியாது. தேவனே மாத்திரமே அதை அளிக்கிறார். ஆனால் தேவன் உங்களுடைய இருதயத்தில் பேசிக்கொண்டிருக்கிறார் என்றும், உங்களுக்கு அது தேவை என்றும், உங்களுடைய தேவையை நீங்கள் உணர்ந்திருந்தால், நாங்கள் உங்களை ஜெபத்தில் நினைகூர வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், நீங்கள் யாரென்று நாங்கள் அறிந்து கொள்ள தயவு செய்து எழுந்து நிற்ப்பீர்களாக! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஒரு தேவையுள்ளவர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!” 358 நூற்றைம்பதுபேர் எழுந்து நின்றிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன், என்னால் காண முடிந்தவரை அவ்வளவுதான் இருப்பதுபோன்று உள்ளது. அறைகளிலும் வெளிப்புறத்திலும் கைகளை உயர்த்தியுள்ளவர்கள் எத்தனை பேரோ எனக்குத் தெரியாது. ஆனால் உங்களெல்லாருக்கும் ஒரு தேவையுண்டு. நாம் இப்பொழுது ஜெபம் செய்வோம்.
140359 இப்பொழுது, உங்களுக்கு அருகில் நின்றுகொண்ருக்கிற அந்த ஜனங்களை காண்கிற உங்களைத்தான், அவர்கள் கிறிஸ்துவுக்கு முன்பாக ஒரு சாட்சியாக நின்றுகொண்டிருக்கிறார்கள், நிற்கிற நீங்கள் இவ்விதம் கூறுங்கள், “கர்த்தாவே, நீர் எனக்குத்—எனக்குத்—எனக்குத் தேவை, எனக்கு நீர் தேவை. உலகத்தோற்றத்திற்கு முன்னே முத்திரிக்கப்பட்ட புத்தகத்தில் என்னுடைய பெயர் எழுதப்பட்டிருப்பதை இன்றிரவு நான் காண்பேன் என்றும், நான்—நான் அவர்களில் ஒருவன் என்றும் நான்—நான் நம்புகிறேன். என் இருதயத்தில் ஏதோ ஓர் உணர்ச்சி ஏற்பட்டது. அதற்காகத்தான் நான் எழுந்து நிற்கிறேன். கர்த்தாவே, அது நானா? நீர் என்னை அழைக்கிறீரா? என் பெயர் அதில் எழுதப்பட்டிருப்பதை நீர் எனக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பரிசுத்த ஆவியினால் என்னை நிறைத்து, உமக்குள் முத்தரித்துக் கொள்ளும். ஏற்கனவே முத்திரிக்கப்பட்டவர்கள் எழுந்து நின்று, நிற்பவர்களின் மேல் கைகளை வைத்து இவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். [சகோதரன் பிரான்ஹாம் சிறிது நிறுத்துகிறார்.] இப்பொழுது நீங்கள் உத்தமமாக ஜெபியுங்கள். [முழு சபையுமே ஜெபிக்கத் துவங்குகிறது—ஆசி.]
141360 பரலோகப்பிதாவே, மகா பரிசுத்த ஆவியானவர் இந்த கூட்டத்தின் மேல் பலத்தக் காற்றைப்போல அசைவாடி ஒவ்வொரு இருதயத்தையும் அழைத்து, கர்த்தாவே, இந்த ஜனங்களின் மேல் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அனுப்பும்படியாய் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன். அங்கே தண்ணீர் காத்துக் கொண்டிருக்கிறது. 361 “பேதுரு இந்த வார்த்தைகள் பேசியபொழுது, வார்த்தையைக் கேட்டவர்கள் மேல் பரிசுத்த ஆவி இறங்கினதால், அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள்.” [முழு சபையும் தொடர்ந்து ஜெபிக்கின்றனர்—ஆசி.]