அவர் விசாரிக்கிறவராயிருக்கிறார் நீ கவலை கொள்கிறாயா

63-0721

சகதரன, உஙகளகக நனற. இபபழத நம ஜபததறகக சறற நரம நனற வணணமய தரததரபபமக. இபபழத நமமடய தலகள வணஙகயரபபதட, ஏதவத கறபபடட வணடகள இரககமனல அலலத உஙகளடய கரதத உயரததவதன மலம தரயபபடதத வணடம எனறல, நஙகள உஙகளடய கரதத இபபட உயரததனல, இபபழத உஙகளடய வணடகள, சர, அபபடய வததக களளஙகள.

அவர் விசாரிக்கிறவராயிருக்கிறார் நீ கவலை கொள்கிறாயா

63-0721ஜெபர்ஸன்வில் இந்தி1611963-07-21

அவர் விசாரிக்கிறவராயிருக்கிறார் நீ கவலை கொள்கிறாயா

63-0721ஜெபர்ஸன்வில் இந்தி1611963-07-21

1 சகோதரனே, உங்களுக்கு நன்றி. இப்பொழுது நாம் ஜெபத்திற்காக சற்று நேரம் நின்ற வண்ணமாய் தரித்திருப்போமாக. இப்பொழுது நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, ஏதாவது கூறப்பட்ட வேண்டுகோள் இருக்குமானால் அல்லது உங்களுடைய கரத்தை உயர்த்துவதன் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்றால், நீங்கள் உங்களுடைய கரத்தை இப்படி உயர்த்தினால், இப்பொழுது உங்களுடைய வேண்டுகோளை, சரி, அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

22 எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் மீண்டும் உம்மை அணுகிக்கொண்டிருக்கிறோம், இந்த வேண்டுகோள்களுக்காக…அவர்கள் தங்களுடைய கரங்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்தியுள்ளனர். கர்த்தாவே, இந்தக் காலையில், அவர்கள் அநேக காரியங்களில் தேவையுள்ளவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய இருதயத்தில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நீர் அறிவீர், ஏனென்றால் நீர் வார்த்தையாயிருக்கிறீர், அந்த வார்த்தை இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயிருக்கிறது. மிகுந்த கிருபையுள்ள தேவனே, அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய தேவைகளின்படி நீர் பதிலளிப்பீராக என்று நான் ஜெபிக்கிறேன், அவர்களுடைய விசுவாசத்தின்படியே நீர் அதைச் செய்வீர் என்பதை அறிந்திருக்கிறோம். கர்த்தாவே, உம்முடைய வார்த்தையை நாங்கள் பேசும்போது, எங்களுக்கு விசுவாசத்தைத் தாரும், அது அவர்களுக்கு விசுவாசத்தைக் கொண்டு வருவதாக. உம்முடைய வார்த்தையைப் பேச எனக்கு உதவி செய்யும், ஏனென்றால் உம்முடைய வார்த்தை சத்தியமாயுள்ளது, ஏனென்றால் இந்த விண்ணப்பங்களுக்கு பதில் அளிக்கும்படியாக அது விசுவாசத்தைக் கொண்டு வரும். கர்த்தாவே, அந்த இடுக்கமான வழியிலிருந்து விலகிப்போய், சத்தியத்தின் வழியில் நடக்காத இங்கே சிலர் இருக்கலாம்,. பிதாவே, இன்றைக்கு ஏதோ ஒரு காரியம் செய்யப்பட்டு, தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும், கிறிஸ்துவோடுள்ள அந்த ஐக்கியத்தின் பாதைக்கு அவர்கள் துரிதமாக திரும்பி வருவார்கள் என்றும் நாங்கள் ஜெபிக்கிறோம். நாட்கள் வேகமாக தாமதமாகிக்கொண்டிருக்கின்றன, ஒவ்வொரு பக்கத்திலும் பொல்லாங்கு உள்ளது, ஒரு பெரிய விழுந்து போகுதல் உண்டு. பிதாவே, எங்கள் மத்தியில் உள்ள வியாதியஸ்தரை சுகப்படுத்தி, அற்புதங்களை நிகழ்த்துவதன் மூலம், நீர் உம்மை இன்றைக்கு எங்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று, நாங்கள் ஜெபிக்கிறோம், கர்த்தாவே, நீர் தேவன் என்பதை நாங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு நீர் அதைச் செய்ய வேண்டும் என்றல்ல, ஆனால் நீர் அதைச் செய்வதாக வாக்களித்தீர். நாங்கள் மாத்திரம் அவைகளை உண்மையென்று அறிந்து, விசுவாசித்தால், உம்முடைய வாக்குத்தத்தங்களை நீர் எங்களுக்கு அருளுவீர் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் இந்த உதவியை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.

33 அமரலாம். நான் இங்கு வைக்கப்பட்டுள்ள சில வேண்டுகோள்களைப் படிக்க சிறிது நேரம் எடுத்துக் கொண்டிருந்தேன், இரண்டு அல்லது மூன்று, அவைகளில் ஒன்று ஜெபத்திற்கான ஒரு வேண்டுகோள். நிச்சயமாகவே, இங்கே வைக்கப்பட்டுள்ள அநேக கைக்குட்டைகளுக்கு பரிசுத்த ஆவியின் பிரசன்னம் அதனுடைய உச்சத்தில் இருப்பதை நாம் உணரும்போது, இன்னும் சிறிது நேரத்தில் அவைகளுக்காக ஜெபிக்க நாங்கள் மகிழ்ச்சியடைவோம். சபையார் யாவரும் அவருடைய பிரசன்னத்தினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கையில், அப்பொழுதுதான் நான் இதைக் குறித்து ஜெபிக்க முயற்சிக்கிறேன்.

44 அநேகர் நின்று கொண்டும், அவர்கள் அமருவதற்கு இடமில்லாமல், தொல்லைப்படுத்துவதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். மேலும்—மேலும் இந்த நாள் உஷ்ணமான காலநிலை அதன் உச்சக்கட்டத்தில் உள்ளது, நாம் ஏறக்குறைய நூறு சதவிகிதம் ஈரப்பசையுடனும், கிட்டத்தட்ட நூறு பாகையளவாகவும் இருந்து வருகிறோம், எனவே அது மிகவும் பிசுபிசுப்பாகவும், வெப்பமாகவும் இருக்கிறது. 5 நான் இந்தக் காலையில் சுகமளிக்கும் ஆராதனைகளை அறிவித்தேன், அல்லது இல்லை…நான் அந்த “சுகமளிக்கும்” ஆராதனையை அறிவிக்க காரணம், ஏனென்றால் அவர் வாக்குத்தத்தம் செய்ததில் நான் என்னுடைய விசுவாசத்தை வைத்திருக்கிறேன். பார்த்தீர்களா? இப்பொழுது, அவர் அதைச் செய்வார் என்று என்னால் கூற முடியாது, ஆனால் நான் அவருடைய வார்த்தையைக் கேட்ட பிறகு அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறதன் பேரில் நம்முடைய விசுவாசத்தை ஆதாரமாகக் கொண்டு நான் விசுவாசிக்கிறேன், அப்படியானால் நாம் அவருடைய இரட்சிப்பின் வாக்குத்தத்தங்களைச் உரிமை கோருவது போலவே, அவருடைய சுகமளிக்கும் வாக்குத்தத்தங்களை உரிமை கோருவதற்கு நமக்கு உரிமை உண்டு.

56 இந்த இரண்டு வேண்டுகோள்கள். அதற்கான ஒலிப்பதிவு கருவிகளை அவர்கள் வைத்திருக்கிறார்களா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. அது நல்லதாக இருக்கலாம். பாருங்கள், இதை வெளியில் உள்ளவர்கள், கேட்பது சரியாயிருக்கும் என்று நான் யூகிக்கிறேன், இது ஒரு வேண்டுகோள். அங்கே பத்து இலட்சம் கருப்பர் இன மக்கள் கொல்லப்படுவார்கள் என்று நீங்கள் தீர்க்கதரிசனம் உரைத்தீர்களா…அல்லது இது சம்பவிக்கும் என்று நீங்கள் இப்போது அறிவித்தீர்களா? 7 இப்பொழுது, பாருங்கள், நீங்கள் எதைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறித்து கவனமாயிருக்கும்படி நான் உங்களை எப்பொழுதுமே கேட்டுள்ளேன். பார்த்தீர்களா? மாம்சப்பிரகாரமான அதில் அதிகமான காரியங்கள் உள்ளன. ஆனால் எப்பொழுதுமே ஏதோ ஒரு காரியம் புறப்பட்டுச் செல்லுமானால், அது “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று அதைப் பேசும். தரிசனங்களுக்கும் அல்லது வேறெந்த காரியத்திற்கும் கூட. மேடையின் மேல், கூட்டத்தில் தரிசனங்கள், நீங்களாகவே அதை செய்து கொண்டிருக்கிறீர்கள்; அது தேவன் அல்ல, அது நீங்கள்தான். பார்த்தீர்களா? தேவன் அந்த தரிசனத்தை உண்டாக்குகிறதில்லை, ஒரு தெய்வீக வரத்தில் உள்ள உங்களுடைய விசுவாசத்தினால், நீங்களே அதை செய்கிறீர்கள். 8 அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டது போல, அவள் யாராயிருந்தாள் என்றும் அல்லது அவளோடு என்ன கோளாறு இருந்தது என்றும் அவர் அறியாதிருந்தார், ஆனால் அவளே அதைச் செய்தாள். பார்த்தீர்களா? இப்பொழுது, அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாய் இருக்கவில்லை. இயேசு திரும்பவும் பேசினபோது, அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருந்தது அவளுடைய விசுவாசம் அவளை இரட்சித்தது என்று அவளிடத்தில் கூறினார். ஆனால், பாருங்கள், நீங்கள் கவனிக்க வேண்டும்.

69 இல்லை, அந்த—அந்த கருப்பு நிறமுள்ள ஜனங்களோடு, அவர்கள் தெற்கில் அனுபவித்துக்கொண்டிருக்கும் இந்த பெரிய பேரழிவின் பேரில், நான் மார்டின் லூதர் கிங்கைக் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். நான், “அந்த ஜனங்கள் அடிமைகளாயிருந்தால், நான் என்னுடைய சபையை எடுத்துக்கொண்டு தெற்கே சென்று அந்த ஜனங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க உதவி செய்வேன்” என்றேன். நான் நிச்சயமாகவே செய்வேன், ஏனென்றால் மனிதன் அடிமைகளை உண்டாக்குகிறான், தேவன் அல்ல. நாம் யாவரும் ஒரே இரத்தம் கொண்டவர்களாயிருக்கிறோம். நாம் யாவரும் ஒரு மரத்திலிருந்து வந்தவர்கள், அது ஆதாமிலிருந்து வந்தது. தேவன், ஒரே இரத்தத்தினாலே, எல்லா ஜாதிகளையும் உண்டாக்கினார். நாம், நம்முடைய நிறங்கள் பழுப்பு நிறமாயிருந்தாலும், அல்லது கறுப்பு அல்லது மஞ்சள் அல்லது சிவப்பு அல்லது அது என்னவாயிருந்தாலும், நாம் யாவரும் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய சிருஷ்டிகளாயிருக்கிறோம், பாருங்கள், நமக்குள்ளாக எந்த வித்தியாசமும் இருக்கக்கூடாது.

710 அங்கே கீழே உள்ள கேள்வி “பள்ளியை வேறுபடுத்துதல்” என்பதாகும். இப்பொழுது, முதலாம் எழுச்சியின் போது நான் அங்கு இருந்தேன், நான் அதைக் கேட்டேன், நான் பேசுவதைக் குறித்து நான்—நான் அறிந்துகொள்கிறேன். கறுப்பு நிறமுள்ள ஜனங்கள் அருமையான பள்ளிகளை உடையவர்களாயிருக்கிறார்கள், சில சமயங்களில் மற்ற பள்ளிகளைக் காட்டிலும் மிகச் சிறந்ததாக இருக்கிறது. உதாரணமாக, ஷ்ரீவ்போர்ட்டில் வெள்ளையர் பள்ளியைக் காட்டிலும் அவர்கள் அருமையான பள்ளிகளை வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் போய் தங்களை ஒன்று சேர்த்து கலக்க வேண்டும் என்று யாரோ ஒருவரால் ஏவப்படும் எண்ணம் அவர்களுக்கு உள்ளது. அது சரியாயிருக்கும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் ஜனங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கும் வரையில், அந்த தென்பகுதி ஜனங்கள், அப்படியானால் அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? 11 மார்டின் லூதர் கிங் கம்யூனிசத்தால் ஏவப்பட்டவர் என்று நான் நினைக்கிறேன், அது ஏறக்குறைய பத்து இலட்சம் ஜனங்களை முற்றிலுமாக ஒரு மரண பொறிக்குள் வழிநடத்தப் போகிறது. பார்த்தீர்களா? கர்த்தர் அதை என்னிடம் கூறினார் என்று நான் கூறவில்லை. “நான்” விசுவாசிக்கிறேன், பாருங்கள். அது செய்யப்படக் கூடாது என்று நான் நினைக்கிறேன். ஜனங்கள் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், ஒருவரையொருவர் சகோதரர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். ஆனால் நான் நினைக்கிறேன், ஏனெனில்… 12 இந்த ஐக்கிய நாடுகள், அதாவது—அதாவது…தனிப்பட்ட முறையில் எனக்கு அளிக்கப்பட்ட ஒரு காசோலையில் கூட நான் கையொப்பமிட முடியாது என்று இப்பொழுது என்னிடத்தில் சொல்லுகிறது. பார்த்தீர்களா? அது என்னிடத்திலிருந்து அரசியல் சாசனப்படி பறிக்கப்பட்ட உரிமைகள், ஆனால் அதைக் குறித்து நான் என்ன செய்ய முடியும்? அப்படியே தொடர்ந்து செல்லுங்கள், அவ்வளவுதான். பார்த்தீர்களா? ஒரு ஐக்கிய நாடுகளின் குடிமகன் என்ற முறையில் நான் ஒரு காசோலையை பணமாக்குவதற்கு முன்னர் மற்றொரு முறைமையினூடாக செல்ல, இந்த சபையினூடாக வரவேண்டியதாயிருக்கிறது, என்னால் அதை பணமாக்க முடியாது. பார்த்தீர்களா? அது சரியல்ல. அது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. ஆனால் அதைக் குறித்து நான் என்ன—என்ன செய்ய முடியும்? ஒன்றுமே இல்லை. இங்குள்ள இந்த வரி வசூலிப்பவர் என்னிடம் அதைச் செய்ய முடியாது என்று என்னிடம் கூறினார், எனவே, பாருங்கள், அப்படித்தான் உள்ளது. அது அப்படியானால், அதைக் குறித்து என்ன. எனவே அதை அப்படியே விட்டுவிடுங்கள்.

813 அது அதே காரியமாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அதாவது…என் கறுப்பு நிறமுள்ள சகோதர சகோதரிகள் தெற்கில் தங்கள் சகோதரர்களுக்கு எதிராகவும், இதுபோன்ற சிறிய விஷயங்களுக்கு எதிராகவும் சண்டையிடக்கூடாது. என்னே, நீங்கள் எங்கே அல்லது எந்த பள்ளிக்குச் சென்றால் அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? அவர்கள் இருந்தபோது…அன்று காலை ஒரு அருமையான கருப்பு நிற பெண்மணியைப் பார்த்தேன், அவர்கள் அங்கு ஷ்ரெவ்போர்ட்டில் கிளர்ச்சியை நடத்தினர், ஒரு வயோதிக கறுப்பு நிற ஊழியக்காரன் அதை தொடர்ந்து போராட்டக் குழுவினரிடம் கூறிக்கொண்டிருந்தார். அவர், “நான் அவர்களிடத்தில் பேசட்டும்” என்றார். எனவே அவர் ஒரு தேவபக்தியுள்ள வயோதிக மனிதனாயிருந்தார். அவர் அங்கே எழும்பி நின்று, “நான் என்னுடைய நிறத்தைக் குறித்து ஒருபோதும் வெட்கப்பட்டதேயில்லை” என்றார். அவர், “என்னை சிருஷ்டித்தவர் என்னை உண்டாக்கினார். ஆனால், அதைக் குறித்து நான் ஒருபோதும் இந்தக் காலை வரையிலும் வெட்கப்பட்டதேயில்லை,” என்றார். ஆனால், “என்னுடைய ஜனங்களே, நீங்கள் இந்தவிதமாக செயல்படுவதை நான் காணும்போது,” என்றும், “அப்பொழுது நான் ஒரு கறுப்பு நிற மனிதனாயிருக்க வெட்கப்படுகிறேன்” என்றும் கூறினார். போராட்டக் குழுவினர் வந்து அவரைப் பேசவிடாமல் தடுத்துவிட்டனர்.

914 எனவே ஒரு அருமையான, படித்த, நேர்த்தியான தோற்றமுடைய கருப்பு நிறமுள்ள பெண்மணி, என்னே, உன்னதமான அறிவுத்திறனுடன் எழுந்து நின்றாள். அவள், “முதலாவது காரியம், என்னுடைய பிள்ளைகள் ஒரு வெள்ளை நிற ஸ்திரீயால் கற்பிக்கப்படுவதை நான் விரும்பவில்லை” என்றாள். அப்பொழுது, “ஏன்?” என்று கேட்கப்பட்டது. 15 “ஏனென்றால் என்னுடைய…ஒரு கறுப்பு நிற ஆசிரியரைப் போல அவள் என் பிள்ளைகளிடத்தில் அக்கறை கொள்ளமாட்டாள்” என்றாள். மேலும், “இங்குள்ள நம்முடைய பள்ளிகளைப் பாருங்கள். நீங்கள் எதைக் குறித்து கூச்சலிடுகிறீர்கள்?” என்றாள். மேலும், “எங்கள் பள்ளிகளில் நீச்சல் குளங்கள் மற்றும் அனைத்தையும் பெற்றுள்ளோம், அவர்கள் அதை அங்கு பெறவில்லை” என்றாள். அவர், “இப்பொழுது, ஜனங்களாகிய நீங்கள் எதைக் குறித்து கூச்சலிடுகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவளை கூச்சலிட்டு அமர வைத்தனர், பாருங்கள்.

1016 அது தவறான காரியத்தினால் ஏவப்பட்டிருக்கிறது, நீங்கள் பாருங்கள், பாருங்கள், அவர்கள், அந்த ஜனங்கள். அந்தக் காரணத்தினால்தான் நான் அதைக் கூறுகிறேன், அதைக் குறித்த எந்த—எந்த தீர்க்கதரிசனமும் இல்லை. அதன் பேரில் கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒன்றுமில்லை. இப்பொழுது நீங்கள் நிச்சயமுடையவர்களாயிருங்கள், நான் அதைப் போன்று கர்த்தரிடத்திலிருந்து ஏதாவது ஒன்றைக் கூறினால், அது எப்பொழுதுமே…நான் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் பேசும்போது, நான், “அது நானல்ல, அது கர்த்தர் உரைக்கிறதாவது” என்று கூறுகிறேன். அவர் என்னிடம் சொல்லுகிற வரையில் என்னால் அதைக் கூற முடியாது. மார்டின் லூதர் கிங்கைக் குறித்த என்னுடைய எண்ணத்தில் நான் முற்றிலும் தவறாக இருக்கக் கூடும். எனக்குத் தெரியாது, என்னால் கூற முடியாது. அது என்னுடைய கருத்து மாத்திரமேயாகும். தொல்லையை எழுப்புகிற எந்தக் காரியமும், அதுதான் கடைசி நாட்களில் இருக்க வேண்டியதாயுள்ளது. இவையனைத்தும் சாத்தானால் ஏவப்பட்டு, நம்முடைய பொதுவுடமைச் செல்வங்களை உடைத்தெறிந்து, நம்மிடம் உள்ள யாவற்றையும், அதைப் போன்று எழும்புகிற எந்தக் காரியத்தையும் உடைத்தெறிந்துள்ளது. எனவே அங்குள்ள அந்த ஜனங்களுக்காக நான் இருக்கிறேன், நான் இல்லை என்று நீங்கள் ஒருபோதும் நினைக்க வேண்டாம். நான்—நான் சுதந்திரத்திற்காகவும், ஒவ்வொரு காரியத்திற்காகவும் இருக்கிறேன், ஆனால் ஜனங்களுக்கு இப்பொழுது அந்த நிலைமை இல்லை. ஆனால் அது என்ன செய்யும், யாராவது அதை நிறுத்தவில்லையென்றால், அது மற்றொரு புரட்சியை உண்டாக்கும் என்று நான் நம்புகிறேன். பாருங்கள், அந்த ஜனங்களுக்கு மத்தியில் கம்யூனிஸ்டுகள் கிரியை செய்கின்றனர்.

1117 அவர்கள் அதேக் காரியத்தைச் செய்தபோது நான் ஆப்பிரிக்காவில் இருந்தேன். பார்த்தீர்களா? கம்யூனிஸ்டுகள் அங்கு வந்து அந்த கறுப்பு நிறமுடையவர்களிடம் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியும், “ஓ, நீங்கள் இதுவோ, அதுவோ அல்லது மற்றதோ . நீங்கள் இதுவோ, அதுவோ அல்லது மற்றதோ ” என்றனர். முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, அது ஆயிரக்கணக்கானோரை கொல்லக் காரணமாயிருந்தது. அவர்கள் எங்கிருந்து வந்தனர்? எங்கும், பாருங்கள், எங்கும் இல்லை.

1218 நான்—நான் மானிட ஜீவியத்தை நேசிக்கிறேன். நாம் கர்த்தரை சேவிப்போமாக. நம்முடைய இராஜ்யம் மேலே உள்ளது; இங்கே இந்தக் காரியத்தைக் குறித்து ஒன்றுமேயில்லை. நாம் புசித்து, பருக முடிந்த வரைக்கும், உங்களுக்கு வேறென்ன வேண்டும்? பார்த்தீர்களா? எனவே அது என்னவாயிருக்கும் என்பதை நான் அறிவேன். அது தொல்லையையே உண்டாக்குகிறது என்பதை நான்—நான் உணருகிறேன். இப்பொழுது, இங்கே மற்றொரு கேள்வி உள்ளது. யோவான் ஸ்நானன், இயேசுவை சந்தித்தபோது, பாருங்கள், அவர் ஏன், “எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” என்று கூறினார். அதன் பொருள் என்ன? 19 பாருங்கள், வேத பண்டிதர் ராய் டேவிஸ், தனிப்பட்ட என்னுடைய ஒரு—ஒரு—ஒரு நண்பர், நான் ஞானஸ்நானம் பெற்ற ஒரே தடவை எனக்கு ஞானஸ்நானம் கொடுத்தவர். மேலும் யோவான் அதை பொருட்படுத்தி கூறிக் கொண்டிருந்தான் என்று அவர் கூறினார், இது அவர்களின் பள்ளியில் எனக்கு நினைவிருக்கிறது, அவர், “யோவான் தான் ஒருபோதும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கவில்லை என்பதை அறிந்திருந்தான், எனவே அவன்…இயேசு. அவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்க யோவான் அனுமதி கொடுத்தான்” என்றார். பாருங்கள், அதாவது, அங்கிருந்த அந்த மகத்தான வேத பண்டிதரோடு நான்—நான் வேறுபட்டேன்.

1320 சர்ச்சைக்காக அல்ல, ஆனால் சத்தியத்தின் நிமித்தமாக நான் இதைக் கூற முடியும். இல்லை, இரண்டு மனிதர்கள் இருந்தனர், அந்த நேரத்தின் இரண்டு தலைவர்கள், மேசியாவும் அவருடைய தீர்க்கதரிசியும் தண்ணீரில் சந்தித்தனர். யோவான் பாவமன்னிப்புக்கல்ல, மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானங் கொடுத்துக் கொண்டிருந்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாவமன்னிப்புக்காக அல்ல, ஏனென்றால் பலி செலுத்தப்படவில்லை, பாருங்கள், பலி செலுத்தப்படவில்லை. பலி தண்ணீருக்குள் அவனிடத்தில் வந்தது. இப்பொழுது கவனியுங்கள். யோவான் மேலே நோக்கிப் பார்த்து இயேசுவைக் கண்டு, அவன், “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டும். நீர் ஏன் என்னிடத்தில் வருகிறீர்?” என்றான். 21 இயேசு, “இப்பொழுது இடங்கொடு” என்று கூறினார். அது என்னவாக இருந்தது. “இப்பொழுது இடங் கொடு, இப்படி எல்லா நீதியும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாய் இருக்கிறது,” என்றார். அப்பொழுது யோவான், கர்த்தருடைய வார்த்தை உண்டான ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியால், தீர்க்கதரிசியினிடத்தில் மாத்திரமே வருகிறார். யோவான், ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியால், அது பலியாயிருந்தது என்பதை புரிந்துகொண்டான். பலி செலுத்தப்படுவதற்கு முன்பு கழுவப்பட வேண்டியதாயிருந்த நியாயப்பிரமாணத்தின்படி, அந்தக் காரணத்தினால்தான் அவன் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். பார்த்தீர்களா? அவர், “இந்தவிதமாக எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” என்றார். பலியாக அளிக்கப்படுவதற்கு முன்னர், அவர் இருந்த பலி, தொட்டியில் கழுவப்பட வேண்டும். இயேசு பலியாயிருந்தார்; யோவான் அதை அறிந்திருந்தான், மேலும் அவர் அளிக்கப்படுவதற்கு முன்பு கழுவப்பட வேண்டும் என்பதை அவன் அறிந்திருந்தான். அதன்பின்னர் உடனடியாக, எல்லா மானிட ஜீவியத்திற்கும் அவர் வழக்கு விசாரணைக்காக பொதுமக்களுக்கு முன்பாக அளிக்கப்பட்டு, பலியாக இருந்தார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

1422 இப்பொழுது நாம் ஒரு சிறிய சுருக்கமான செய்தியைப் பார்க்கப் போகிறோம், கர்த்தர் அவருடைய ஆசீர்வாதங்களை நமக்கு அருளுவார் என்ற நம்புகிறோம். இப்பொழுது, அநேகமாக, நான் திரும்பி வந்தால்…அடுத்த வாரம் குழந்தைகளை ஒரு சிறு விடுமுறைக்காக மலைகளுக்கு அழைத்துச் செல்ல நான் புறப்பட்டுச் செல்கிறேன். அதன்பின்னர் நான்—நான் சரியான நேரத்தில் திரும்பி வந்தால், அடுத்த ஞாயிறு காலையில் நாம் பேச விரும்பினால், அது தேவனுக்கும், இங்குள்ள போதகருக்கும் அனுமதிக்கப்படுமானால் நலமாயிருக்கும். ஊருக்கு வெளியேயிருக்கிற உங்களுக்கு, கடிதம் மூலம், நாங்கள் இந்த வாரம் போகப்போக தெரியப்படுத்துவோம். கிறிஸ்துவைக் குறித்து நாம் விசுவாசிக்கின்ற காரியங்களை நாம் ஏன் சரியாக விசுவாசிக்கிறோம் என்ற ஒரு பொருளின் பேரில் நான் பேச விரும்புகிறேன். அது ஏன் இந்த விதமாக இருக்க வேண்டும், வேறு வழியில் இருக்க முடியாது. பார்த்தீர்களா? வேத வாக்கியங்களைக் கொண்டு அதை நிரூபியுங்கள். இப்பொழுது, கர்த்தருக்கு சித்தமானால். நான் அவ்வாறு செய்யவில்லையென்றால், இந்த குளிர்காலத்திலோ அல்லது அடுத்த கோடை காலத்திலோ, நாம் திரும்பி வரும்போது, கர்த்தர் வர தாமதித்தால், நான் உங்களைக் காண முயற்சிப்பேன். நாங்கள் இப்பொழுது அரிசோனாவிலுள்ள வீட்டிற்கு திரும்பிச் செல்லப் போகிறோம், எனவே நாங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க முடியும்.

1523 இப்பொழுது, இந்தக் காலையில், வியாதியஸ்தருக்கான ஜெபத்திற்கு சற்று முன்பு, நாம் தேவனுடைய வார்த்தையில் சிலவற்றை வாசிக்கப் போகிறோம். இது, இந்த வார்த்தையில்லாமல், அது கூடாத காரியம், ஒன்றுமே செய்யப்பட முடியாது என்பதை நாம் அறிவோம். வியாதியஸ்தருக்காகவும், தேவையுள்ளவர்களுக்காகவும் நாங்கள் வேண்டிக் கொண்டிருக்கிற இந்த ஆசீர்வாதங்களை வார்த்தை மாத்திரமே பிறப்பிக்க முடியும். நான் இப்பொழுது முதலாம் பேதுரு, 5-ம் அதிகாரம், 1-ம் வசனம் தொடங்கி சிலவற்றை வாசிக்க விரும்புகிறேன். அதன்பின்னர் எபிரெயர் புத்தகத்திலிருந்து நான் எபிரெயர் 2:2-4-ஐ வாசிக்க விரும்புகிறேன். உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்: உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும். சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள். அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள். அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

1624 எபிரெயர், 2-ம் அதிகாரத்தில், இந்த வார்த்தைகளை நாம் வாசிக்கிறோம். இப்பொழுது நான், “உங்களுடைய கவலையை வைத்து விடுங்கள்” என்ற ஒரு பாடப் பொருளைக் கொடுப்பதற்காக கவர்ந்துகொண்டிருக்கிறேன். நான்… அவர் விசாரிக்கிறார். நீங்கள் அக்கறை கொள்ளுகிறீர்களா? என்பதே என்னுடைய பாடப் பொருளாகும். நீங்கள் எபிரெயர் 2-ம் அதிகாரத்திற்குத் திருப்பிக் கொண்டிருக்கையில், இப்பொழுது இந்த பகுதியை வாசிக்க விரும்புகிறேன், இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் என்ன என்றும், அவைகள் என்ன பொருட்படுத்துகின்றன என்றும், இந்த பாடப்பகுதி என்ன அர்த்தப்படுத்துகிறது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவே. ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும். ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க, முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.

1725 “அவர் விசாரிக்கிறார்” என்ற பொருளையே நான் இங்கே உபயோகிக்க விரும்புகிறேன். மேலும், “நீங்கள் கவலைப்படுகிறீர்களா?” அவர் இங்கே பூமியின் மேலிருந்தபோது, அவர் ஜனங்களுக்காக அக்கறை கொண்டிருந்தார். வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்கு அல்லது பேசுவதற்கும் சற்று முன்பு அதைப்பற்றிய எண்ணம் என் மனதில் எழுகிறது. நாம் எந்த விதமான ஒரு—ஒரு ஜெப வரிசையை உடையவர்களாயிருப்போம் என்பதை அறியாமலிருக்கிறோம். 26 நான், நான்…முதலில் இதை அணுக, கூட்டத்தார் விசுவாசத்தினால் அபிஷேகிக்கப்பட வேண்டும். உங்களுக்கு—உங்களுக்கு விசுவாசம் இல்லையென்றால், அப்பொழுது ஜெபிக்கப்பட வேண்டிய அவசியம் கூட இல்லை, ஏனென்றால் அது உங்களுடைய விசுவாசத்தையும், என்னுடைய விசுவாசத்தையும் ஒருங்கே கொண்டு செல்லப் போகிறது; அவரை விசுவாசிக்க என்னுடைய விசுவாசம், அவரை விசுவாசிக்க உங்களுடைய விசுவாசம். எனவே நாம் இப்பொழுது இதை மறந்துவிடக் கூடாது. நாம் வெளிப்படையாக ஏதாவது பெற்றிருக்க வேண்டும், நாம் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்பதன் பேரில் நம்முடைய விசுவாசத்தை நாம் ஆதாரமாகக் கொள்ள முடியும் என்று, நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். ஏனென்றால் ஒரு மனிதன் போதிய விசுவாசமில்லாமல், அவன் செய்ய விரும்புகிற எந்தக் காரியத்தையும் அணுகினால், அவன் ஒரு தோல்வியடைந்தவனாயிருக்க வேண்டியவனாயிருக்கிறான். ஆனால் அவனால் அதை போதிய விசுவாசத்தோடு அணுக முடிந்தால், தேவனுடைய சித்தத்தின்படியும், அதைச் செய்யும் நோக்கத்தின்படியும் அது இருக்குமானால், அப்பொழுது அவன் வெற்றியடைய வேண்டியவனாயிருப்பான்.

1827 இப்பொழுது, அவர் விசாரிப்பதைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். நேற்று மாலை, எப்படியோ, விசித்திரமான முறையில், நான் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டேன். சகோதரன் உட் தன்னுடைய பாரவூர்தியின் பின்புறத்தில் ஒரு—ஒரு இணைப்பு வண்டியை பொருத்தும்படிக்கு உதவி செய்ய வருவதற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன். நான் ஏன் எனது நல்ல நண்பரான, சகோதரர் ஈவான்ஸைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை, நான் நெடுஞ்சாலையில், புறப்பட்டு சென்றேன். அது உண்மையென்று இங்கு பின்னால் அமர்ந்துள்ள என்னுடைய மனைவியும் குடும்பத்தினரும் அறிந்துள்ளனர். எப்படியோ, விசித்திரமான முறையில், நான் திரும்பி ஒரு இடத்திற்கு, ஒரு விடுதிக்குச் சென்றேன். 28 மேலும், ஓ, இரண்டு நிமிட நேரத்தில் என் நண்பர்கள் பலர் அங்கு கூடியிருப்பதைக் கண்டு என் இதயம் எப்படி சிலிர்த்தது, அது பாதையை அடைத்துக் கொண்டு, வாகனங்கள் செல்ல முடியாதபடியாயிருந்தது, ஒரு ஆராதனையைக் கேட்பதற்காகவே, ஜார்ஜியா, டென்னஸி மற்றும் அலபாமாவிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் காரோட்டி வரும் உண்மையான நண்பர்கள். அப்பொழுது அந்த எண்ணம் என் சிந்தையில் வந்தது, “அப்படியானால் நான் அவர்களுக்குச் சொல்லுகிறவைகளுக்காக நியாயத்தீர்ப்பின் நாளிலே பதில் சொல்ல வேண்டியதாயிருக்கும் என்பதை அறிந்து அந்த ஜனங்களுக்கு நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டேன். நானும் கூட வரப்போகும் இந்த மகத்தான ஜீவியத்தை விரும்புகிற ஒருவனாக—ஒருவனாக இருக்கிறேன், நானும்—நான் அங்கே இருக்க விரும்புகிறேன்.

1929 அதன்பின்னர் நான் விநோதமான முறையில் ஒரு இடத்திற்குச் சென்றேன், அங்கு நான் எதிர்பாராமல் திரும்பினேன். அங்கே வேறு பக்கமாக திரும்புவதற்குப் பதிலாக, நான் வேறு பக்கமாக திரும்பி விட்டேன். வாகனத்தின் வெளிச்சம் அழகான தம்பதிகளின் மேல் பட்டது, இரண்டு அருமையான வாலிபப் பெண்மணிகளை நான் இரண்டு வாலிப ஊழியக்காரர்களுக்கு திருமணம் செய்து வைத்திருந்தேன். சாத்தான், அவன் அந்த ஊழியக்காரனைக் கண்ட பிறகு, அவர்களில் ஒருவர் தன்னுடைய ஊழியம் அமைக்கப்பட்ட பிறகு, ஒரு—ஒரு வாழ்க்கையின் துணையை இங்கே, இந்த பீடத்தில் அவர் தெரிந்து கொண்டார். அவர்கள் தங்களுடைய தேனிலவில் மகிழ்ச்சியோடு புறப்பட்டுச் சென்றனர், சத்துரு இந்த வாலிப மனிதனை நோக்கி பாய்ந்தான். “அவர் விசாரிக்கிறாரா?” என்று நான் கூறிக்கொண்டிருப்பதை வெளிப்படுத்தவே நான் இதைக் கூறிக்கொண்டிருக்கிறேன். எப்படியோ, “இல்லை” என்று ஏற்றுக்கொள்ளாத விசுவாசத்தோடு, அவர்கள் திரும்பி இங்கே திரும்பி வந்து, அவர்கள் எல்லா வழிகளிலும் (கிழக்கில்) வந்த பிறகு அறிந்து இங்கே எங்கோ தங்களுடைய தேனிலவுக்காக, திரும்பி வந்து உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தனர். நான் உள்ளே நடந்து சென்றேன், அருமையான அழகான வாலிபன்; அவருடைய மனைவி வெளியே உட்கார்ந்து கொண்டு, அவளும் அவர்களுடைய சிறு துணையும் அழுதுகொண்டிருந்தனர். மற்றவனும் மற்ற சகோதரனும் ஓடி வருகிறார்கள், இது இந்த இளைஞனின் நண்பன், “ஓ, சகோதரன் பிரான்ஹாம், இன்னின்ன காரியம் சம்பவித்துள்ளது” என்று கூறுகின்றனர்.

2030 அங்கு சென்று இந்த அழகான வாலிபன் தன்னுடைய ஜீவியத்தின் உச்சக்கட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன், ஒரு வாலிப தலைவன் அங்கே அமர்ந்திருந்தான், சாத்தான் அவனை கட்டிப்போட்டான். அவன் அதை கவனிக்கவேயில்லை, ஆனால் நான் என்னுடைய கரத்தை (இடதுபுறம்) எடுத்து, அவன்டைய கரத்தோடு (வலதுபுறம்) கைகுலுக்கினேன், ஏதோ வியாதி அவனை பீடித்திருக்கிறதா என்று பார்க்கும்படியாகச் சென்றேன். ஆனால் அதிர்வுக்கான எந்த அடையாளமும் இல்லை. ஜெபத்திலிருந்தும், உபவாசத்திலிருந்தும், கர்த்தர் பேரில் காத்திருந்து விட்டு, அறையை விட்டு வெளியே வரும்போது, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அங்கிருந்தது. அதனால்தான் அது நம்மை வழி நடத்தினது, பாருங்கள். அதன்பின்னர் அவர் மேல் இந்த இருளின் நிழலைக் கண்டபோது, நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை நான் ஒருபோதும் கூறவில்லை, ஆனால் ஒரு சில நிமிடங்களுக்குள் அது யாவும் போய்விட்டது, அவனுடைய கரங்களின் குளிர்ச்சியானது போய்விட்டிருந்தது, அவன் சத்தமிட்டுக் கொண்டு தேவனைத் துதித்துக் கொண்டிருந்தான், ஒரு சில நிமிடங்களில் அவன் நினைவை அடைந்தான். இங்கே அவர்கள் இந்தக் காலையில் இங்கே உட்கார்ந்திருக்கிறார்கள், கூட்டத்தில் அமர்ந்துள்ளனர். மீண்டும் கட்டப்பட வேண்டிய சில வளாகங்களைக் குறிப்பிடுவதால், எப்படியாய் சாத்தான் அந்த வாலிபனை நிலைகுலையச் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான் என்பதைப் பாருங்கள், பரிசுத்த ஆவியானவர் அதை அறிந்திருந்தார், நான் கர்த்தருடைய தரிசனத்தின் மூலம் அதைக் கண்டேன். ஆனால் தேவன் அந்த மனிதனுக்காக அக்கறை கொண்டார். தேவன் அந்த வாலிபப் பையனுக்காக அக்கறை கொண்டார்.

2131 ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு, ஒரு—ஒரு பெண் உள்ளே வந்தாள், அவள் இங்கே நடைபாதையில் உட்கார்ந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன், எந்த…எங்கோ ஒரு இடத்தில் அவளுக்கு ஒரு இருக்கை கிடைத்து, அமர்ந்தாள். அவள், “ஒன்பது ஆண்டுகளாக, சகோதரன் பிரான்ஹாம், நான் உங்களைப் பற்றிப் பிடிக்க முயன்றேன்” என்றாள். மேலும் அவள், “நான் மிகவும் பதற்றமடைந்துள்ளேன்! நான் இங்கே காலதாமதமாக வந்துவிட்டேன், வரிசையில் இருப்பதற்காக ஒரு ஜெப அட்டையைக் கூட என்னால் வாங்க முடியவில்லை” என்றாள். 32 பில்லி, உண்மையாகவே, நான் தொல்லைக்குள்ளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவனுடைய கட்டளையாயுள்ளது, என்னை உள்ளேயும் வெளியேயும் அழைத்துச் செல்ல வேண்டும். பில்லியைத் தொல்லைப்படுத்த வேண்டாம், அவன் அதைச் செய்யும்படி இந்த தர்மகர்த்தாக் குழுவினால் கட்டளையிடப்பட்டிருக்கிறான். அவன் அவ்வாறு செய்யவில்லையென்றால், என்னால் ஜெப வரிசைக்கு வரமுடியாது, இங்கே செல்லுங்கள். நீங்கள் அதை உணர்ந்து கொள்ளுங்கள். பாருங்கள், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ, அதற்கு ஒரு முறைமை இருக்க வேண்டும். நாம்—நாம் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும், பாருங்கள். ஆனால் அவனோ, “அப்பா, சீக்கிரம் வாருங்கள்” என்று கூறுகிறான்.

2233 அந்தப் பெண்மணி பின்னால் நகர்ந்தாள். அப்பொழுது அவள், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, உங்களோடு ஒரு வார்த்தை” என்றாள். அங்கே நின்றுகொண்டிருந்தபோது, இந்த அருமையான தோற்றமுடைய வாலிபப் பெண்மணியின் பேரில் ஒரு தரிசனம் உண்டானது, அவளுடைய இருதயம் பாரமாயிருந்ததைக் காண்கிறேன். அவள் ஜீவனத்திற்காக வேலை செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பெற்றோரின் காலத்தில், ஒரு—ஒரு பெரிய காரியம் சம்பவித்து, இந்த பெரிய காரியம் அவளுக்கு சம்பவிக்க காரணமாயிருந்தது, கர்த்தராகிய இயேசு அதை வெளிப்படுத்தி, அது என்னவாயிருந்தது என்பதை காண்பித்தார். அங்கே, சிறிது நேரத்தில், அந்த ஸ்திரீயினிடத்திலிருந்து அதை எடுத்துவிட்டார். அவள் களிகூர்ந்து கொண்டே சுற்றித்திரிந்தாள். இப்பொழுது நம்மோடு இங்கே கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டு, கண்ணீரோடு களிகூருகிறாள், அவள் இப்பொழுது தன்னுடைய கண்களை துடைத்துக் கொண்டிருக்கையில், அந்தக் காரியத்தின் உண்மை அறியப்பட்டது என்பதை அறிந்திருக்கிறோம். அது, என்ன, அந்த பரிதாபமான சிறு நரம்பு தளர்ச்சி கொண்ட பெண், அவள் தன்னை என்ன செய்ய வேண்டும் என்று அறியாதவளாய் மிகவும் பதட்டமடைந்து, அவள் மரித்துப் போய்விட்டாள் என்றும், பரிசுத்த ஆவி இல்லை என்றும், இதுவே அவளுடைய கடைசி நாளாயிருக்கிறது என்றும் எண்ணிக் கொண்டிருந்தாள். அவள் ஒன்பது வருடங்களாக முயற்சித்து, அவள் விரக்தியின் முடிவில் இருந்தாள், யாருமே கவலைப்படாத அந்த சிறு பெண்மணிக்காக தேவன் அக்கறைப்பட்டார். பார்த்தீர்களா? என்னே ஒரு நேரம்! அவர் அக்கறை கொண்டிருக்கிறார்.

2334 அவர் இங்கே பூமியின் மேலிருந்தபோது, நான் கூறுவதுபோல, அவர் ஜனங்களின் வியாதியஸ்தரை சுகப்படுத்தும் வரைக்கும், அவர்களுடைய இருதயங்களைத் தேற்றினார், அவர் போய் அவர்களுக்காக ஒரு—ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணுவதாக அவர்களிடத்தில் ஒரு—ஒரு இடத்தைக் குறித்தும், அவர்களைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்ளும்படியாக மீண்டும் வருவதாக அவர்களிடம் சொன்னார். அவர் அவர்களுக்காக அக்கறை கொண்டிருந்தார். கவனியுங்கள், இந்த மகத்தான காரியத்தை நமக்கு கொண்டு வரும்படியாக அவர் இங்கிருந்து செல்ல வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தபோது, அவர், “நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன், ஆனால் நான் பரிசுத்த ஆவியை அனுப்புவேன், அவர் திரும்பி வரும் வரைக்கும் உங்களுக்காக என்னுடைய அக்கறையை அவர் தொடர்ந்து கொண்டிருப்பார்,” என்று கூறினார். இயேசுவைப் போல அக்கறையுள்ளவர்கள் யாருமில்லை. அவருடைய சரீரம், ஒரு பிரதான ஆசாரியராக, அவர் இப்பொழுது செய்து கொண்டிருக்கிற ஒரு மத்தியஸ்த ஊழியத்தில், சரீரம் எப்பொழுதும் தேவனுடைய பிரசன்னத்தில் பரிந்துபேச வேண்டும் என்றும், அதாவது பாவியினுடைய பாவத்தை தேவன் காண முடியாது என்றும் அறிந்திருக்கிறோம்; அவர் தம்முடைய சொந்த குமாரனின் இரத்தத்தை மாத்திரமே காண்கிறார். அதை அறிந்து, அவர் தம்முடைய ஜனங்களுக்கு தொடர்ந்து ஆறுதல் அளிக்கும்படியாக பரிசுத்த ஆவியை திரும்ப அனுப்பினார். அவர் கவலைப்படுகிறாரா? நிச்சயமாகவே, அவர் கவலைப்படுகிறார். இப்பொழுது, அவர் ஜனங்களுக்காகவும், பூமியிலுள்ள தம்முடைய ஜனங்களுக்காகவும், அவர் இங்கிருந்தபோது, அவர்களுக்காக அக்கறை கொண்டிருந்த அதேவிதமாகவே அவர் அதைச் செய்தார். ஏனென்றால் அவர் பரிசுத்த யோவானில், 15-ம் அதிகாரத்தில் கூறினார், நீங்கள் செய்ய வேண்டுமானால்…நான் இங்கே குறிப்புகளை வைத்துள்ளேன், பரிசுத்த யோவான் 15:26 மற்றும் 27-ல் உள்ள இந்த வேதவாக்கியங்களை நான் குறிப்பிடுகிறேன்.

2435 உங்களில் அநேகர் வேதவாக்கியங்களை எழுதிக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். எனவே நீங்கள் இதை அறிந்திருக்கவில்லையென்றால், நான் இதை அநேக சமயங்களில், வேதவாக்கியத்திற்கு குறிப்பிட்டுக் கூறலாம். நான் வேதவாக்கியங்களை எழுதுகிறேன், ஆகையால் இங்கிருந்து நான் என்ன பேசுகிறேன் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் அது எப்பொழுதும் கர்த்தருடைய வார்த்தையில் உள்ளது. பார்த்தீர்களா? 36 பிதாவானவர் தம்முடைய நாமத்தில் அனுப்பப்போகிற, பரிசுத்த ஆவியானவர் வரும்போது, அவரைக் குறித்து சாட்சி கொடுப்பார் என்று அவர் கூறினார். வேறு வார்த்தைகளில் கூறினால், அவர் செய்த அதே காரியத்தை அவர் செய்வார். அவர் பரிசுத்தமாக்கியிருந்த ஒரு கூடாரத்தினூடாக பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்து, அவர் செய்த அதே காரியத்தை செய்வார். இப்பொழுது, அது நமக்காக என்ன செய்ய வேண்டும்! அப்படியானால் இன்றைக்கு நமக்கு மத்தியில் அதே ஆறுதலான கர்த்தராகிய இயேசு பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம், தேவன் தாமே கிரியை செய்து கொண்டிருக்கிற மற்றொரு உத்தியோகம்.

2537 அவர் இஸ்ரவேலுக்கு ஒரு ஆறுதலாயிருந்தார், அப்பொழுது அவர்கள் மேலே நோக்கிப் பார்த்து, அக்கினி ஸ்தம்பத்தைக் காண முடிந்தது, தீர்க்கதரிசி உண்மையான வார்த்தைகளை பேசுவதையும், தேவன் அதை ரூபகாரப்படுத்துவதையும் கேட்டனர். அதுவே அவர்களுடைய ஆறுதலாயிருந்தது. 38 அவர் இங்கே பூமியின் ஒரு மனிதனாக, தேவன் மாம்சத்தில் இருந்தபோது, அவர் ஒரு ஆறுதலாக இருந்தார். தேவன் தம்மை பிரதிநிதித்துவப்படுத்தி, ஒரு—ஒரு மனிதன் மூலமாக தம்மை வெளிப்படுத்தி, கிறிஸ்து இயேசு, அதை வாக்களித்தவர், “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். நான் பிதாவினிடத்திற்கு சென்று, பரிசுத்த ஆவியை திரும்ப அனுப்பப் போகிறேன், அவர் ஆவியின் ரூபத்தில் இருப்பார். நான் உங்களோடு இருந்து, உங்களுக்குள் வாசம்பண்ணுவேன். நான் இங்கே செய்துள்ள அதே காரியங்களை, பரிசுத்த ஆவியானவர் மீண்டும் என் நாமத்தில், அவர் வரும்போது செய்வார்” என்றார். பார்த்தீர்களா? எனவேதான் அவர், “அதற்கு விரோதமாகப் பேசுவது” என்றார், பாவநிவிர்த்தி ஏற்கனவே செய்யப்பட்ட பிறகு, “பரிசுத்த ஆவியை தூஷித்தது” மன்னிக்க முடியாத பாவமாயிருந்தது.

2639 அவர் அதேவிதமாக அதைச் செய்வார், அப்பொழுது அது பூமிக்குரிய இடத்திலிருந்து ஒரு ஆறுதலாயிருந்ததா என்பதை நாம் அறிந்துகொள்ளும்படிக்கு, தங்களுடைய கரங்களை நம்மைச் சுற்றிப் போட்டுக் கொள்ள முடிந்த சில வயோதிக நபர்களிடமிருந்து ஒரு ஆறுதல் என்பதை நாங்கள் அறிவோமானால் நலமாயிருக்கும், எங்களை சற்று கட்டித் தழுவி, எங்களை நன்றாக உணரச் செய்து, அல்லது—அல்லது ஏதோ ஒரு ஸ்தாபனத்தின் வேத சாஸ்திர சொல், “இப்பொழுது நீங்கள் எங்களை சேர்ந்தவர்கள், நாங்கள் அதை பெற்றுவிட்டோம்; மற்றவர்களுக்கு சொந்தமாயிருக்கவில்லை, ஏனென்றால் அவர்கள் பெற்றிருக்கவில்லை” என்பதாகும்.

2740 அவர் இதை நேரடியாக உறுதிப்படுத்தினார், பாருங்கள், “அவர் என் நாமத்தில் பேசுவார். அவர் உங்கள் மேல் இருக்கையில், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.” பாருங்கள், அவர் அதேவிதமாக ஆறுதல் அளிப்பார், நம்முடைய எல்லா பாவங்களையும் மன்னித்து, நம்முடைய எல்லா வியாதிகளையும் சுகப்படுத்தி, வரப்போகும் ஒரு இராஜ்ஜியத்தைக் குறித்து நம்மிடத்தில் ஆறுதலாய் பேசிக்கொண்டிருக்கிறார். பாருங்கள், தேவன் தம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் நம் மத்தியில் நிரூபித்ததுபோல, தம்மை நம் மத்தியில் நிரூபித்தல். மேலும் உள்ளே—இரண்டாம் தீமோத்தேயுவில்…முதலாம் தீமோத்தேயு 3:16, இது இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. தேவனைக் குறித்து அறிந்து, “அப்படியானால் தேவபக்தியின் இரகசியம் மகத்தானது என்று முரண்பாடின்றி நாம் அதை தெளிவாக உணர்கிறோம், ஏனென்றால் தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்.” நாம் தேவனை மாம்சத்தில் கண்டோம். அவர் நம்மில் ஒருவராக மாறுமளவிற்கு அவர் வந்து (அவர் எங்களுக்காக அதிக அக்கறை கொண்டிருந்தார்) என்பதை அறிவது, அதுவே தேவனுடைய ஆறுதலாய் இருந்தது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். வேறொரு நபர் அல்ல, ஆனால் தேவன் தாமே! 41 இப்பொழுது இதை இன்னும் ஒரு படி நெருக்கமாக்கும்படியாக, அவர் நம்முடைய சௌகரியங்களை கவனித்துக்கொள்ள பரிசுத்த ஆவியை அனுப்புகிறார், அவர் நமக்குள் நிலைத்திருக்கிறார். ஓ, அவர் அக்கறை கொள்கிறார்!

2842 இப்பொழுது நாம் இங்கே வேதத்தின் மற்றொரு பகுதிக்கு செல்ல வேண்டும், அல்லது இதை ஆதரிக்க மற்றொரு பகுதிக்கு செல்ல வேண்டும். நான் செல்வதற்கு முன்னர், நான் இதைக் கூறலாம்: எல்லோருக்கும் இந்த தேற்றரவாளன் இல்லை. அவர்கள், அவர்களுக்கு இல்லை, அவர்கள் அதைப் பெற்றிருக்கவில்லை. எனவே அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ளாததற்குக் காரணம், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாததேயாகும். அது அவர்களுக்கானதாயுள்ளது, ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை. இப்பொழுது, நான் கூறுவதை வாசிக்கும்படி—நீங்கள் போதிய ஆவிக்குரியவர்களாய் இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். பார்த்தீர்களா? நான் ஒரு சில நிமிடங்களில் ஜெபிக்கப்பட வேண்டிய ஒரு குழுவினரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். நாம் தேற்றவாளனாக அனுப்பப்பட்டிருக்கிற பரிசுத்த ஆவியில் இந்த ஆறுதலைப் பெற்றுள்ளோம், ஆனால் எல்லா ஜனங்களும் அதைப் பெற மாட்டார்கள். அவர்கள் அதில் விசுவாசம் கொள்வதில்லை. பார்த்தீர்களா? அவர்கள், அதைச் செய்வதற்காக, அவர்கள் தங்களுடைய ஆறுதலை வேறு ஏதோ ஒரு ஆதாரத்திலிருந்து, வேறு ஏதோ ஒரு வழியிலிருந்து சேகரிக்கின்றனர். அவர்கள் தேவனால் அருளப்பட்டிருக்கும் தேற்றரவாளனை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், அப்பொழுது அவர்கள் வேறொரு ஆறுதலாளரை, பெற்றுக்கொள்ள வேண்டும், பாருங்கள், ஏனென்றால் நீங்கள் ஜீவிக்க ஏதாவதொன்றில்லாமல் வாழ முடியாது.

2943 நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பெற்றுக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன், குறிப்பாக ஜெபிக்கப்பட வேண்டிய ஜனங்களாகிய நீங்கள், அது இந்தக் காலையில் மிகவும் சங்கடமாக இருக்கிறது, ஒருகால் வைத்தியர்களால் தொட முடியாத தொல்லைகளோடு அது இருக்கிறது. 44 மருத்துவர்கள் ஜனங்களுக்கு உதவி செய்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தேவன் மருந்தினால் சுகப்படுத்துகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். தேவன் அறுவை சிகிச்சையின் மூலம் சுகப்படுத்துகிறார். தேவன் புரிந்துகொள்ளுதலின் மூலம் சுகப்படுத்துகிறார். தேவன் அன்பினால் சுகப்படுத்துகிறார். ஒரு சிறு அன்பு நீண்ட தூரம் செல்கிறது. யாராவது ஒருவர் வருத்தமடைந்து, நீங்கள் அவர்களுக்காக அக்கறை கொண்டிருக்கிறதை அவர்களுக்குக் காண்பியுங்கள். பார்த்தீர்களா? தேவன் அன்பினால் சுகப்படுத்துகிறார். தேவன் ஜெபத்தினால் சுகப்படுத்துகிறார். தேவன் அற்புதங்களினால் சுகப்படுத்துகிறார். தேவன் தம்முடைய வார்த்தையினால் சுகப்படுத்துகிறார். தேவன் சுகப்படுத்துகிறார்! அது என்னவாயிருந்தாலும், தேவன் அதன் மூலம் சுகப்படுத்துகிறார். தேவன் சுகப்படுத்துகிறார், ஏனென்றால் அவர், “உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நானே” என்றார். எனவே அவை யாவும் ஒன்று சேர்ந்து கிரியை செய்ய வேண்டும், வெவ்வேறு ஊழியங்களில் உள்ள மனிதன் அதற்காக ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். பார்த்தீர்களா? இப்பொழுது, ஆனால் அவர்கள் அதைச் செய்கிறதில்லை, ஏனென்றால் சில சமயங்களில் அவர்கள் தேவனுடைய வார்த்தையின் பேரில் குறிப்பிட்ட தீர்மானங்களை எடுக்க தடை செய்யப்பட்டிருக்கிறார்கள், ஏனென்றால் அவர்களுடைய குறிப்பிட்ட ஸ்தாபனங்கள் அதைச் செய்ய அவர்களை அனுமதிப்பதில்லை. ஆனால் அது சத்தியத்தை நிறுத்துகிறதில்லை, அதேவிதமாகவே உள்ளது, தேவன் அதே விதமாக சுகமளித்தலைச் செய்கிறார்.

3045 எனவே அவர்கள் வேறு ஏதோ ஒரு மூல ஆதாரத்திலிருந்து ஆறுதலைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றனர். நாம் முதலில் ஆத்துமாவைக் குறித்து பேசுவோம். 46 அநேக ஜனங்கள் குடிப்பதன் மூலம் ஆறுதல் கண்டடைய முயற்சிப்பதை நாம் கண்டறிகிறோம். இன்றைக்கு நம்மிடையே நன்கு அறியப்பட்ட ஒரு பழமொழி உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள், அநேக ஊழியக்காரர்கள் பிரசங்க பீடத்திற்கு செல்வதற்கு முன்பு சில நேரங்களில் குடித்துவிட்டு, ஒரு—ஒரு—ஒரு நல்ல போதை கொண்ட மதுபானத்தை அருந்துகின்றனர். போதகர்கள் மேடையின் மேல் மதுவின் போதையிலும் கூட தள்ளாடுவதைக் காண்பது தெரியவந்துள்ளது. அது—அது அப்படி இருக்கக் கூடாது. அது இருக்கக் கூடாது. பல சமயங்களில் நாம் அந்த மனிதனைக் கண்டிக்க நேரிடலாம், ஒருவேளை நாம் அதைச் செய்யக்கூடாது, தொல்லை என்ன என்பதை நாம் கண்டடைய வேண்டும். அவர்களில் அநேகர் மதுவிலிருந்து மனமாற்றமடைந்திருந்தனர். அவர்கள் அந்த நிலையில் இருந்தால், அது ஒரு அவமானமும், ஒரு நிந்தையுமாகும் என்பதை நாம் கண்டறிகிறோம். ஆனால் பொய்யுரைத்தல், திருடுதல் அல்லது ஸ்திரீகளை இச்சித்தல் போன்ற நிந்தனையை விட வேறொன்றுமில்லை, அல்லது கட்டளையில் உள்ள வேறெந்தக் காரியமாயிருந்தாலும் சரி. பார்த்தீர்களா? ஒருக்கால் ஒரு மனிதன் உயர்ந்த உணர்ச்சியோடு பிறந்திருக்கலாம், அவன் தெருவில் நடக்கும் இந்த நவீன அரை நிர்வாண ஆடை அணிந்தவர்களைக் காண்கிறான், அவன்—அவன் தொடர்ந்து தொல்லைக்குள்ளாகவே இருக்கிறான். பார்த்தீர்களா? அவன், அந்த, அந்த மனிதன் அந்த விதமாகப் பிறந்திருக்கிறான். இப்பொழுது, அவன் என்ன செய்ய வேண்டும், மது அருந்தும் ஊழியக்காரன்… 47 அல்லது—அல்லது புகைப்பிடிக்கும் பெண்மணி, அல்லது, ஒழுக்கங்கெட்ட விதத்தில் உடை உடுத்திக் கொண்டு, அவளை நன்றாக ஒன்றாக சேர்த்து ஒரு ஆறுதலடையச் செய்து, அதாவது மனிதன் அவளை நோக்கிப் பார்க்கும்படி அவள் விரும்புகிறாள். வேறெந்த காரணமும் இல்லை. அவள் ஓரளவுக்கு பைத்தியம் பிடித்தவள். பார்த்தீர்களா? புத்தியுள்ள எந்த ஸ்திரீயும் புருஷனுக்கு முன்பாக தன்னை களையத் துணியமாட்டாள், அது அவளுடைய சரியான எண்ணம். பார்த்தீர்களா? அதற்கு எந்த காரணமும் கிடையாது. அவள், ஆனால் அவள் முயற்சித்துக் கொண்டிருக்கிறாள், இன்றைக்கு வீதியில் செல்லும் இந்த வாலிபப் பெண்கள், அவர்கள் உண்மையாகவே… பாருங்கள், இப்படி கூறுவதற்கு நீங்கள் மன்னிக்கவும். நினைவிருக்கட்டும், இந்த ஒலிநாடா இங்குள்ள இந்த ஜனங்களுக்கு மாத்திரமல்ல, அது உலகம் முழுவதும் செல்கிறது. பார்த்தீர்களா?

3148 ஒரு—ஒரு ஸ்திரீ உஷ்ணமாயிருப்பதை அறிந்து, தன்னுடைய ஆடைகளை கழற்றி. அங்கே வெயிலில் நிர்வாணமாக நடந்து, அவள் அதன்பின்னர் சில ஆடைகளை அணிந்து வெளியே நடந்து செல்லும்போது, எது குளிர்ச்சியாக இருக்கும்? அங்குள்ள பாபகோஸ் மற்றும் நவஜோஸில் உள்ள இந்தியர்கள்; பாபகோஸ், குறிப்பாக, இடஒதுக்கீடு குறித்து, அந்தப் பெண்கள் தங்களைச் சுற்றிலும் பெரிய நூல் போர்வைகளோடு வெளியே வந்து, குளிர்ச்சியாக இருக்க வெயிலில் உட்கார்ந்து கொள்வார்கள். ஏன்? அவைகள் வியர்வையை ஏற்படுத்துகின்றன, அது ஒரு குளிர் சாதன அமைப்பைப்போல காற்று வீசுகிறது, நீங்கள் பாருங்கள். இந்த ஸ்திரீகளுக்கு வேறெந்த காரணமும் கிடையாது…அவர்கள் அதை அறியாதிருக்கிறார்கள், அவர்கள் அதை உணருகிறதில்லை. அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள் என்று நான் கூறவில்லை. அவர்களில் அநேகர் அருமையான பெண்மணிகளாயிருக்கிறார்கள். நான் அதை கடுமையாக கூறவில்லை. அவர்களை எழுப்ப முயற்சிப்பதற்காகவே நான் இதைக் கூறுகிறேன். பார்த்தீர்களா?

3249 அது சாத்தான் மாத்திரமே, பாருங்கள். மற்ற பாலினத்தவர், ஆண் பாலினம் அப்படிப்பட்டவர்களை நோக்கிப் பார்க்கின்றன என்பதை நீங்கள் உணருகிறீர்கள், அவர்கள்—அவர்கள் தங்களுடைய வாகன சக்கர தேய்மான ஒலியை எழுப்புமளவிற்கும், ஓநாயைப் போன்று ஊளையிடுவதற்கு அவர்களுக்கு அத்தகைய ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும்—மேலும்—மேலும் அவர்கள் எதற்காக அதைச் செய்கிறார்கள்? மனிதன் அவ்வாறு நடந்து கொள்வதற்காகவே ஸ்திரீகள் அதைச் செய்கிறார்கள். நீங்கள் ஏன் பகலின் உஷ்ணமான நேரத்தில், பிற்பகல் நான்கு மணிக்கு வெளியே சென்று, ஜனங்கள் தங்களுடைய வேலையிலிருந்தும், அதைப் போன்ற காரியங்களிலிருந்தும் வரும்போது புற்களை அறுக்க விரும்புகிறீர்களா? அது ஒரு பைத்தியக்கார ஆவி என்பதையே அது காண்பிக்கிறது. அவர்களில் அநேகர் என்னுடைய அறிவைக் காட்டிலும் பத்து இலட்சம் மைல்கள் அதிக அறிவுத்திறன் கொண்டவர்களாக இருக்கலாம் என்பதை நான் அறிவேன், ஆனால் நான் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு உங்களுடைய அறிவுத்திறனை பரிசோதித்து, அது எங்கே வெளிப்படுகிறது என்று பார்க்கிறேன். பார்த்தீர்களா? அதுதான் நவீன அறிவுத்திறன், ஆனால் வாழ்க்கையின் அத்தாட்சியும் கனிகளும் நிரூபிக்கின்றன. எனவே அவர்கள் அதைக் கொண்டு ஆறுதலைக் கண்டறிய முயற்சிக்கின்றனர். 50 அவர்களில் அநேகர், “சரி, நான் அதைச் செய்கிறதில்லை” என்று கூறுகின்றனர். ஆனால் நீங்கள் அப்படிப்பட்ட ஒரு கவர்ச்சியான ஆடையையே உடையவர்களாயிருந்து, அவர்கள் அடுத்த நாள் காலை சபையில் அவர்களுக்கு அருகில் அமரப் போவதாயிருக்கும் ஸ்திரீயைக் காட்டிலும் நவீனமானவர்களாயிருக்க முயற்சிக்கிறார்கள், ஒரு மேலான தொப்பியை அல்லது சற்று மேலான ஆடைகளை அணிகிறார்கள், ஏனென்றால் உங்களால் அதைச் செய்ய முடியும். பார்த்தீர்களா? பாருங்கள், பாவம் மிக ஆழமாக சென்றடைகிறது. அவர்கள் அவ்வாறு செய்வதன் மூலம் ஆறுதலைக் கண்டறிய முயற்சிக்கின்றனர். அவர்கள்…

3351 அது தேசம் முழுவதிலும் முற்றிலுமாக தாக்கப்படும் வரையில், அது தேசத்தை மாத்திரமல்ல, ஆனால் உலகம் முழுவதுமே. அநேக காரியங்களை என்னால் இங்கே கூற முடியும், ஆனால், நேரத்தை மிச்சப்படுத்தவே, சுகமளிக்கும் ஆராதனை வரப்போகிறது, என்னால்—என்னால் இதன் பேரில் விரிவாகப் பேச முடியும், ஆனால் நான் பேசமாட்டேன். நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் நிச்சயமாக புரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இது, அரசியல் உலகத்தையும், அரசியல் வாழ்க்கையையும், சமுதாய வாழ்க்கையையும், தேசத்தின் ஒழுக்கமான வாழ்க்கையையும், உலகத்தைச் சுற்றிலுமுள்ள ஜனங்களையும் பாதிக்கிறது. மனிதன் அரசியலில் பேர்பெற்று விளங்கும் ஒரு அரசியல்வாதியாக இருப்பதற்காக விரும்புகிற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான பணத்தை வைத்துக்கொண்டு, வாக்குகளைப் பெற்று, அதைச் செய்ய இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க முடியும், மற்றும்—மற்றும் இன்னபிற, பெயருக்காக, கோடிக்கணக்கான டாலர்கள் பெறுமானமுள்ளவர், பாருங்கள், ஒரு பெரிய அரசியல்வாதி என்ற பெயருக்காக. அதிலே போதுமானது சொல்லப்பட்டிருக்கிறது, நான் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

3452 சமுதாய வாழ்க்கையும்! ஜனங்கள் இந்த பைத்தியக்கார சமூக வாழ்க்கையில் ஒன்று சேர முயற்சிக்கின்றனர். உலகம் பைத்தியம் பிடிக்கவில்லை என்றும், அது செயல்படுகிறவிதமாக அதைச் செய்கிறது என்றும் என்னிடம் சொல்லாதீர்கள். அது நிச்சயமாக பைத்தியத்தில் உள்ளது. நிச்சயமாக. இது ஒரு நரம்புத் தளர்வுற்ற உலகம். தேவனுடைய கிருபையினால் மாத்திரமே நாம் அதிலிருந்து தப்பித்துக் கொள்வோம். கவனியுங்கள், இந்த சமுதாய வாழ்க்கையில், அவர்கள்—அவர்கள் சிறு குழுக்களை சமூகமயமாக்குகிற ஒரு இடத்திற்கு ஜனங்கள் வந்துள்ளனர், அவர்கள் அங்கு சென்று, “அடுத்த குழுவைக் காட்டிலும் நாங்கள் மேலானவர்கள்” என்று நினைக்கிறார்கள். பார்த்தீர்களா? அது, அது அந்தவிதமாகவே செய்யப்படுகிறது. நேர்மையான நண்பர்களே, அது நல்லொழுக்கங்கள், அது ஜனங்களின் ஒழுக்க நெறிமுறைகளை குலைத்துப்போடுமளவிற்கு உள்ளது, “ஒழுக்கம்” என்ற வார்த்தை இந்த தேசத்தில் உள்ள தொண்ணூறு சதவீத ஜனங்களிடையே அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று கூட (உலகத்தில்) நான் நம்பவில்லை. அவர்கள் “ஒழுக்கம்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று கூட (உலகம்) அறியாதிருக்கிறார்கள். அது—அது அவர்களிடத்திலிருந்து தப்பித்துவிட்டது. அது மிகவும் தந்திரமாக அதைச் செய்துள்ளது.

3553 சாத்தான் மிகவும் தந்திரமானவன், பாருங்கள், அவன் அதை மிக எளிதாக செய்கிறான், மிகவும்—மிகவும் நுட்பமாக, இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம், அதை அனுமதிக்கிறான். அவனுக்கு ஏராளமான நேரம் உள்ளது, எனவே அவன் சிறிது நேரம் இங்கேயும், சிறிது நேரம் இங்கேயும் செயல்படுத்த, முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, ஜனங்கள் படிப்படியாக அதற்குள் நகர்த்தப்படுகின்றனர். நான் பதினாறு வயது பையனாய் இருந்தபோது, ஒரு ஸ்திரீ இன்றைக்கு நடப்பது போன்று, இந்த அரை நிர்வாணமான ஆடையை அணிந்து தெருவில் நடந்து சென்றிருந்தால் அவளுக்கு என்ன சம்பவித்திருக்கும்? ஏன், அவர்கள் அவளை சிறையில் வைத்திருப்பார்கள். பாருங்கள், அப்பொழுது அது தவறாயிருந்தால், இப்பொழுதும் அது தவறாயுள்ளது. பார்த்தீர்களா? ஆனால், நீங்கள் பாருங்கள், சாத்தான் ஆடைகளை துண்டிக்கத் துவங்கினான், அவைகளை கீழே குறைத்து, மற்றும்—மேலும் யாரோ ஒருவர் மிகச் சிறிய குளியல் ஆடையைவிட ஒரு சிறிய ஆடையின் வடிவமைப்பை உருவாக்க, அல்லது நீங்கள் அதை என்னவென்று அழைக்கிறீர்களோ, அது ஒரு அத்தி இலை அளவுக்கு ஆக்கிவிடும். உங்களுக்கு நினைவிருக்கட்டும்! அது உண்மை, அது நேராக பின்னோக்கிச் செல்லும். அது, அது கிட்டத்தட்ட இப்பொழுது அங்கே உள்ளது.

3654 இப்பொழுது இந்தக் காரியங்கள் யாவும் ஜனங்கள் ஆறுதலைக் கண்டறிய முயற்சித்துக் கொண்டிருக்கிற காரணத்தால் என்று நாம் கண்டறிகிறோம். அவர்கள் ஏதோ ஒன்றைக் கண்டறிய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்…நினைவில் கொள்ளுங்கள், உங்களுடைய ஆறுதல் உங்களுடைய மார்க்கம், நீங்கள் அந்தக் காரியங்களை உங்களுடைய மார்க்கமாக்கிக் கொள்கிறீர்கள். பார்த்தீர்களா? மரணம் உங்களுக்கு முன்பாக உள்ளது என்பதை உணருவதில் என்ன ஒரு பரிதாபம். பார்த்தீர்களா? தேசத்தில் எந்தக் காரியத்தையும் கட்டியெழுப்ப ஒரு—ஒரு உறுதியான அஸ்திபாரம் இல்லை என்பது போன்று தென்படும் வரை இவை யாவும் சம்பவித்துள்ளன.

3755 நான் உங்களை ஒன்று கேட்கட்டும். நீங்கள் வேதத்தைத் தவிர வேறெதையும் விசுவாசிக்க முடியாது. நாம் இன்னமும் கிறிஸ்துவை உடையவர்களாயிருக்கிறோம்; தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். பார்த்தீர்களா? நீங்கள்—நீங்கள் வேறெதையும் நம்ப முடியாது. நீங்கள்…உதாரணமாக, நீங்கள் உங்களுடைய தொலைக்காட்சியை இயக்கும்போது, (அப்படிப்பட்டதை உடைய நீங்கள்), நீங்கள் உங்களுடைய தொலைக்காட்சியை இயக்கி, விளம்பரங்களைக் காணும்போது, பாருங்கள், ஒரு நபர் அந்த விளம்பரங்களில் நூறில் ஒரு பாகத்தை நம்பி வாழ முயற்சித்தால், நீங்கள் ஒரு வாரத்தில் மரித்துப் போவீர்கள். பாருங்கள், உங்களால் அதைச் செய்ய முடியாது. ஏதோ ஒரு நிறுவனம், ஒரு தயாரிப்பைப் போல, “ இதுதான் இங்குள்ள காரியம்,மேலும் இந்த ஒன்றை இங்கே வைத்திருக்க வேண்டாம்” என்பது போன்ற ஒரு தயாரிப்பை விளக்கிக் கூறி, அதே நிறுவனம் அதே பொருளை விற்பனை செய்கிறது. அதன்பின்னர் மற்றொரு விளம்பரம், இதை எடுத்துக் கொள்ளுங்கள், அதுவல்ல என்று அதே நிறுவனம் கூறும். முழு விஷயமும் அழுகும் வரை அமெரிக்க மக்கள் இது போன்ற விஷயங்களுக்கு விழுகிறார்கள், அங்கே எந்த நம்பிக்கையும் இல்லாதிருக்கும் வரை. என்ன விசுவாசிக்க வேண்டும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் கர்த்தருக்குச் சித்தமானால், உங்களுக்கு ஆறுதல் வேண்டுமானால், எதை விசுவாசிக்க வேண்டும் என்பதை சற்று கழித்து நான் உங்களுக்கு கூறப்போகிறேன்.

3856 நீங்கள் யாரோ ஒருவரிடமிருந்து ஐந்து டாலர்கள் கடன் வாங்குவதற்கு கிட்டத்தட்ட ஒரு பத்திரத்தை வைத்திருக்குமளவிற்கு, ஜனங்கள், அவர்கள் பொய்யுரைத்து, ஏமாற்றி, திருடுகிறார்கள். அது ஒரு…கடைசி நாட்களில் அன்பு இருக்காது என்று வேதம் உரைக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் ஆனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள் மத்தியில் இருக்கும். அது உண்மை. வேதம் அதைக் குறித்து பேசுகிறது, அதாவது கணவன் மனைவிக்கு விரோதமாகவும், மனைவி கணவனுக்கு விரோதமாகவும், பெற்றோர்களுக்கு எதிராக பிள்ளைகளும் இருப்பார்கள். கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மத்தியிலே மாத்திரம் அன்பு இருக்கும்.

3957 சபைகளும் சமுதாய வாழ்க்கையிலிருந்து அதே காரியத்திற்குள் நுழைந்துள்ளன. அவர்கள் அதை சபைக்குள்ளும், அவர்களுடைய சமூக வாழ்க்கையிலும், அவர்களுடைய அரசியலிலும் அவர்களுடைய மற்ற காரியங்களிலும் கொண்டு வந்து, அவர்கள் சபையை என்ன செய்ய வேண்டும் என்று அறியாத அளவிற்கு குழப்பமடைந்துள்ளனர். அவர்கள் சபைக்குள் அரசியலைக் கொண்டு வந்தனர். அவர்கள் சமுதாய வாழ்க்கை, சபையில் தங்களுடைய சமுதாய வாழ்க்கை, தங்களுடைய சமுதாய நடவடிக்கைகள், பிங்கோ அல்லது பன்கோ, அல்லது அவர்கள் அதை என்னவென்று அழைக்கிறார்களோ, இந்த இரவு விருந்துகள் மற்றும் நடனங்கள் போன்றவற்றை கொண்டு வந்துவிட்டனர், கர்த்தருடைய வீட்டில் ஏன். அது—இது ஒரு பரிதாபம். அவர்கள், “சரி, இப்பொழுது, அதுவல்ல, அது இணைப்பில் உள்ளது” என்கின்றனர். 58 நினைவிருக்கட்டும், இயேசு கயிற்றை உண்டுபண்ணி வர்த்தகர்களை அவர்களுடைய வர்த்தகப் பொருட்களோடு அடித்து, “‘என்னுடைய பிதாவின் வீடு ஜெப வீடு என்று எழுதியிருக்கவில்லையா,’ நீங்களோ அதை ஒரு கள்ளர் குகையாக்கினீர்கள் என்று எழுதியிருக்கிறதே,” என்றார். பார்த்தீர்களா? அது தவறானது, அது எங்கே இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. சபையானது…சபையானது என்பது கட்டிடம் அல்ல, அது கட்டிடத்தில் உள்ள மக்கள். அந்த ஜனங்கள் இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், ஏன், அது தவறாகும். அவர்கள் அந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளனர்.

4059 இப்பொழுது சபைகளும் கூட எப்பொழுதும் ஏதோ ஒரு காரியத்தை, தொலைக்காட்சி போல வாக்குத்தத்தம் செய்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் கண்டறிகிறோம், அதாவது அவர்கள் வாக்குத்தத்தம் செய்த காரியத்தை அவர்கள் ஒருபோதும் அடையவில்லை. நான் அடிக்கடி கூறியுள்ளதுபோல, ஒரு பழைய மேற்கோள், “மனிதன் எப்பொழுதுமே தேவன் செய்ததற்காக அவரைத் துதித்துக் கொண்டிருக்கிறான், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதற்காக தேவனைத் துதித்து (அவர் என்ன செய்வார் என்று எதிர்நோக்கியிருக்கிறான்), அதன்பின்னர் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைப் புறக்கணித்துக்கொண்டிருக்கிறான்.” பாருங்கள், அவர்கள்—அவர்கள்—அவர்கள் தோல்வியடைகின்றனர். அந்தவிதமாகத்தான் அவர்கள் சிறிது காலம் கழித்து, அசுத்தமாக்கப்பட்டவர்கள் சரித்திரமாகிவிட்டனர், பாருங்கள், ஏனென்றால் அவர்கள் இப்பொழுது அடையாளங்கண்டு கொள்ளத் தவறுகின்றனர். கிறிஸ்து ஒருமுறை அளித்த ஆறுதலைக் குறித்து நீங்கள் பேசலாம், அவர் வரப்போகும் காலங்களில் ஆறுதல் அளிப்பார் என்றும், ஆனால் இப்பொழுது அவர் உங்களுக்காக இங்கே பெற்றுள்ள ஆறுதலை மறுக்கின்றனர். பார்த்தீர்களா? நாம் அதை அதே அடிப்படையில் கண்டறிகிறோம். பாருங்கள், அது ஒரு மகத்தான காரியமாகிவிட்டது. அவர்கள்—அவர்கள் வந்து…

4160 அதுவே பெந்தெகொஸ்தேயிலும், சபைகளிலும் கூட ஆகிவிட்டது. அது பெந்தேகோஸ்தே மண்டலங்களுக்குள்ளாக மாறி, அவர்கள் எப்பொழுதுமே ஏதோ ஒரு காரியத்தை வாக்குத்தத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். அது எப்பொழுதுமே ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமான உணர்ச்சிவசப்படுதல் இருந்து கொண்டேயிருக்கிறது, அது வேதப்பிரகாரமானதாயிருந்தாலும் அல்லது இல்லையென்றாலும், அவர்கள் வாக்களிக்கின்ற ஏதோ ஒரு காரியத்தை அவர்கள் ஒருபோதும் பெற்றுக் கொள்ளமாட்டார்கள், எந்த உத்தமமும் இருப்பதாகத் தென்படாத அளவிற்கு அது ஒரு இடத்திற்கு வந்துவிட்டது போன்று தென்படுகிறது. ஜனங்கள் அந்த உண்மையான உத்தமமான கருப்பொருளை பெற்றுக் கொள்கிறதில்லை. அது இழந்துவிட்டது… உண்மை என்ற ஆங்கில வார்த்தையே ஜனங்களிடம் அதனுடைய—அதன் மதிப்பை இழந்து விட்டது. இல்லையென்றால், ஜனங்களுடைய வாழ்க்கை முறையினால், அது அவர்களுக்கான அதனுடைய உத்தமத்தை இழந்துவிட்டது. இப்பொழுது அவர்கள் அதைப் புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை.

4261 நம்முடைய அறிக்கைகளுக்கும் கூட! இப்பொழுது, இங்கே வந்து கொண்டிருக்கிற, அல்லது இங்கே வைத்திருக்கும்…ஒலிநாடாவில் கேட்கிறவர்கள் இந்த ஒலிநாடாவில் கேட்கப் போகிற ஜனங்களாகிய நீங்கள், இந்த மேற்கோளை நீங்கள் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது—அது… 62 நீங்கள் ஆழ்ந்த உத்தமமாய் இருந்தாலொழிய! நீங்கள் உறுதியாக புரிந்து கொள்ளும் வரையில் உங்களால் உத்தமமாக இருக்க முடியாது. நீங்கள் அவ்வாறு ஊகித்துக் கொண்டிருந்தால், அல்லது யூகித்துக் கொண்டிருந்தால் அல்லது அவ்வாறு நம்பிக்கொண்டிருந்தால், அப்பொழுது தேவன் கோருகிற உத்தமத்தின் ஆழம் இருக்க முடியாது. அது, விசுவாசம் என்பது ஒரு “நம்பிக்கை அவ்வண்ணமாய்” அல்லது “அது சரியாயிருக்கக் கூடும்” என்பதல்ல. அது முற்றிலும் “ஆமென்!” என்று இருக்க வேண்டும். அதுவே உங்களுடைய முடிவானது. அது—அது—அது உங்களுடையது—அது உங்களுடைய முற்றிலுமானதாயுள்ளது. அது நீங்கள் இணைக்கப்பட்டிருக்கிற காரியமாய் உள்ளது. பார்த்தீர்களா? நீங்கள் “அது சத்தியமாயிருக்கிறது, அங்கே…அது சத்தியமேயல்லாமல் வேறொன்றுமில்லை என்ற இறுதி நிலைக்கு வந்துவிட்டீர்கள், அது இவ்விதமாக இருக்க வேண்டும்!” அப்பொழுது நீங்கள் அதை உங்களுடைய சிந்தையில் உணரும்போது, அப்பொழுது நீங்கள் உங்களுடைய முழு ஜீவியத்தோடும் அதை அணுக வேண்டும், ஆத்துமா, சரீரம், உங்களுக்குள் உள்ள யாவற்றையும், அதனிடம் உள்ள எல்லாவற்றையும் முழுவதுமாக விற்றுப் போடுங்கள். இயேசு முத்துக்களை வாங்குகிற மனிதனின் பேரில் மிகவும் கிருபையாய் நமக்குப் போதித்ததுபோல, அவன் மிகுந்த விலையுயர்ந்த ஒன்றைக் கண்டான், அவன் அதைப் பெற்றுக்கொள்ள தன்னுடைய மற்ற யாவற்றையும் விற்றுப்போட்டான். எல்லா சத்தியங்களும், அவனுக்கிருந்த ஒவ்வொரு காரியமும், அவைகள் நல்ல முத்துக்களாயிருந்தபோதிலும், அவன்—அவன்…இந்த ஒருவரே அவனுக்கு எல்லாவற்றைக் காட்டிலும் மேலான தேவையாயிருந்தது. தேவனுடைய முடிவான, அவருடைய வார்த்தையை, ஒரு குறிப்பிட்ட காரியத்தின் பேரில் ஒரு வாக்குத்தத்தத்தை நீங்கள் கண்டறியும்போது, அது தேவனுடைய வார்த்தை என்றும், நீங்கள் காண்கிற காரியம் தேவனே என்றும் நீங்கள் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். அங்கே—அங்கே “ஒரு வேளை அவ்வாறு இருக்கலாம், அது அவ்வாறு இருக்கலாம், அது போன்று தோன்றலாம்” என்ற ஒன்றுமே இல்லை. “அது தேவன்!” அதன்பின்னர் நீங்கள் அந்த இடத்தை அடையும்போது, அப்பொழுது அது மகத்தான விலையுயர்ந்த முத்து, அதற்கு முரணாக வேறு யாராவது உங்களிடம் கூறுகிற எந்தக் காரியத்திலிருந்தும் நீங்கள் விலகியிருக்க வேண்டும். மனிதன் என்ன சாதித்திருக்கிறான் என்பதை நீங்கள் நோக்கிப் பார்க்கக் கூடாது. தேவன் என்ன கூறியிருக்கிறார் என்றும், அவர் என்ன வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்றும் நீங்கள் நோக்கிப் பார்த்து, அவர் அதைச் செய்வதைக் காண வேண்டும், அப்பொழுது அதுவே உங்களுடைய முடிவான காரியமாகும். அப்பொழுது நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, நீங்கள் இருந்த ஒவ்வொரு காரியத்தையும், நீங்கள் இருப்பீர்கள் என்று நம்புகிற ஒவ்வொரு காரியமும், அந்த நொடிப்பொழுதில் உங்களுக்கு மரணமும், ஜீவனுமாயிருந்தது போன்றே, இதன் மேல் வைக்கப்பட வேண்டும்.

4363 நம்முடைய ஜனங்கள் சுகமாக்கப்படுவதிலிருந்து தடுக்கிற காரியங்களில் ஒன்று, அறிக்கை செய்யாமலிருப்பது, உத்தமமான அறிக்கையின் குறைவுதான். இப்பொழுது, உதாரணமாக, இது சற்று மோசமாகத் தோன்றலாம், ஆனால் நான் இதை இந்தவிதமாக பொருட்படுத்திக் கூறவில்லை. ஆனால், இங்கே அமர்ந்துள்ள என் மனைவியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் இன்றைக்கு இங்கிருந்து வெளியே சென்று, என்னுடைய கரங்களை வேறொரு ஸ்திரீயை சுற்றிப் போட்டுக் கொண்டு, அவளிடத்தில் அன்பு கூர்ந்தால், நான் அதைச் செய்த பிறகு, நான் தவறாயிருந்தேன், மிகவும் தவறாயிருந்தேன் என்பதை நான் அறிந்து கொள்வேன். இப்பொழுது, நிச்சயமாகவே, என்னுடைய தேற்றரவாளன் அதைச் செய்வதிலிருந்து என்னைத் தடுப்பார். பார்த்தீர்களா? பார்த்தீர்களா? ஆனால் நான்—நான் அதைச் செய்திருந்தால், நான்…நான் அதைச் செய்ததாக அல்லது அதைப் போன்ற ஏதாவது காரியம் சம்பவித்திருந்தால். அதன்பின்னர் நான் தேவனிடம், “என்னை மன்னியும்” என்று கூறுவதற்கு முன்பு, முதலில் என் மனைவியிடம் சொல்ல வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் நான் அவளுக்கு எதிராக பாவம் செய்தேன். நீங்கள் பீடத்தண்டை வரும்போது, நீங்கள் சிலவற்றை வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வீர்களேயானால், நீங்கள் உங்களுடைய காணிக்கையை அளிக்கும் முன்பு, அதை முதலில் சரிப்படுத்திக் கொள்ளுங்கள். எனவே நான் அவளிடம் செல்ல வேண்டும். அறிக்கையானது நேராக்கப்படுதலும் கூட என்று நான் நம்புகிறேன். அது உண்மையாகவே அறிக்கை செய்தாலொழிய அது உண்மையான அறிக்கையல்ல.

4464 இப்பொழுது நான், “நான் தவறு செய்துவிட்டேன் என்று நான் அதை அறிக்கை செய்யப் போகிறேன், நான், ‘நல்ல கர்த்தாவே, ஓ என் சிநேகிதனே, நான் உம்மை உண்மையாகவே நன்கு அறிந்திருக்கிறேன் என்பதை நீர் அறிவீர். தேவனுக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா! நீர் ஒரு நல்ல வயோதிக நபர் என்று நான்—நான்—நான்—நான் நினைக்கிறேன். என்னை மன்னியும். உங்களுக்குத் தெரியுமா, பழைய, பழைய நண்பரே, நான்—நான் அதை அந்தவிதமாக பொருட்படுத்திக் செய்யவில்லை’” என்று கூறுவீர்களா? பார்த்தீர்களா? 65 இப்பொழுது, நீங்களோ, “அது தேவதூஷனமான காரியம்” என்று கூறலாம். அது அவ்வாறுதான் உள்ளது. அதைப் போன்ற ஒரு அறிக்கையை செய்வது, அதுதான். 66 ஆனால் நான், “கர்த்தாவே, நான்—நான் அதை அந்தவிதமாக செய்ய வேண்டுமென்று நினைக்கவில்லை, நீர் எனக்கு உதவி செய்தால், நான் அதை மீண்டும் செய்யமாட்டேன்” என்று கூறப்போனால் என்னவாகும்? நான் முதலில் சென்று என்னுடைய மனைவியோடு அதை சரிபடுத்தும் வரையில் அவர் என்னுடைய பலியை மறுத்துவிடுவார்.

4567 அப்பொழுது நான் அதே பயபக்தியுடன் அவளிடம் வந்து, “வயதான பெண்ணே, என்னுடைய பழைய சிநேகிதியே, என்னுடைய பிள்ளைகளின் வயோதிக தாயாரும், வயோதிக இனிய இருதயமே, நீண்ட காலமாகவே நாம் வயோதிக ஜோடிகளாக இருந்து வருகிறோம் என்பதை நீ அறிவாய். நான் என்னுடைய கரங்களை மற்றொரு ஸ்திரீயின் மீது போட்டுக் கொண்டால் என்னவாகும்? அதைக் குறித்து நீ என்ன கூறுகிறாய், வயோதிகப் பிள்ளையே, நீ என்னை மன்னிப்பாயா?” என்று கூறினால் என்னவாகும். 68 அவள் எப்படி காணப்படுவாள் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். அவள், “என் கணவருக்கு என்ன நேரிட்டது?” என்று நினைப்பாள். பார்த்தீர்களா? இப்பொழுது, முதலாவது காரியம், நான் கேலி செய்து கொண்டிருந்தேனா அல்லது நான் அப்படி செய்யவில்லையா என்பதை அவள் அறியமாட்டாள். 69 நீங்கள் உங்களுடைய சக மனிதனிடத்திலோ அல்லது தேவனிடத்திலோ அறிக்கையிட அந்த வழியில் செல்வதில்லை. நீங்கள் உத்தமத்தின் ஆழங்களோடும், உங்களுடைய பாவத்தின் தேவபக்தியான துக்கத்தோடும் செல்கிறீர்கள். முதலில், நீங்கள் வருத்தப்பட வேண்டும். நான் அவளிடம், “இனியவளே, இங்கே வா, அது நம்முடைய எஞ்சியுள்ள திருமண வாழ்க்கையை பொருட்படுத்தலாம். நான் வாழ்கிற அந்த பெண்மணி, அது என்னுடைய இனிய இருதயம், இத்தனை ஆண்டுகளாக நான் உன்னை நேசித்து வந்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது இது முதற்கொண்டு நீ என்னை விட்டுச் செல்லலாம், நீ என்னோடு தரித்திருக்காமல் போகலாம், நீ என்னை ஏற்றுக்கொள்ளாமலிருக்கலாம். நான் அதை அறிந்திருக்கிறேன். ஆனால் அதே சமயத்தில் அதைச் சரிப்படுத்த, நான் சரிப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று சொல்ல வேண்டும். என்னுடைய இருதயத்தின் ஆழத்தை நான் அவளிடம் கூற வேண்டும்.

4670 அப்படியானால் நான் அதே விதமாக தேவனிடத்தில் கூற வேண்டும். தேவனுடைய கிருபையினால், நான் அதை மீண்டும் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உத்தமத்தோடு அவளுக்கும் தேவனுக்கும் சொல்லுங்கள். பார்த்தீர்களா? உண்மையாகவே…இப்பொழுது, நான் அதை அவளிடத்தில் உத்தமமில்லாமல் கூறலாம், (புரிகிறதா?) அவள் அதைக் காணமாட்டாள். நான் அவளிடம் பேசும் பேச்சு அவளை நம்ப வைக்கலாம். ஆனால் என்னுடைய பேச்சு தேவனை நம்பச் செய்யாது. அவர் என் இருதயத்தை நோக்கிப் பார்க்கிறார், அவர் அறிந்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவளுடன் இன்னும் சில வருடங்களில், தேவன் அனுமதித்தால், நாம் இந்த உலகத்தை விட்டு வெளியே எடுக்கப்படுவோம். ஆனால் தேவனோடு, அது நித்தியமாய் உள்ளது, எனவே நான் தேவனோடு ஆழ்ந்த உத்தமமாய் இருக்க வேண்டும். நான் உத்தமமாயிருந்தால், அவர் எனக்கு செவி கொடுப்பார். ஆனால் நான் உத்தமமாய் இல்லையென்றால், நான் சொல்வதைக் கேட்க தேவனுடைய நேரத்தை எனக்காக வீணடிக்க வேண்டிய அவசியமில்லை. 71 அந்தவிதமாகத்தான் இன்றைக்கு, ஜனங்கள் மத்தியில், அவர்கள் பெற்றிருக்க வேண்டிய உத்தமத்தின் ஆழம் அங்கு இருப்பதாகத் தெரியவில்லை. 72 ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ ஜெபித்துக்கொள்ள வரும்போது, முதலாவதாக அவர்கள் செய்த எல்லாவற்றையும் அறிக்கையிட்டு, எல்லாவற்றையும் சரிபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால், நீங்கள் பாருங்கள், நீங்கள் அநேக முறை மேடையின் மேல் கவனிக்கிறீர்கள், நீங்கள் கவனியுங்கள், கர்த்தர் உரைக்கிறதாவது என்பது எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை கவனியுங்கள். பார்த்தீர்களா? பார்த்தீர்களா? ஜனங்களுக்கு அந்த தரிசனம் அவர்களுடைய விசுவாசத்தோடு உண்மையாகவே, நிறைவேறும், தேவன் அதை ஒரு வரத்தின் மூலம் வாக்குப்பண்ணினார். ஆனால் சுகமளித்தல் என்பது வித்தியாசமான ஒன்று, பாருங்கள்; அப்பொழுது தேவன் அதை அங்கீகரிக்கிறார், பாருங்கள்.

4773 இப்பொழுது, நாம் கவனிக்கிறோம், அதாவது ஜனங்கள் தங்களுடைய அறிக்கையிடுதலில், உத்தமத்தின் ஆழத்தோடு வரவேண்டும். நான் இங்கிருக்கிறேன், அதை வாசிக்க எனக்கு நேரமில்லை, ஆனால் அது நியூயார்க்கிலுள்ள பிங்காம்டனில் உள்ளது என்று நான் நினைக்கிறேன். அல்லது நான் அதை தவறாகப் பெற்றுள்ளேனா? ஆம், பிங்காம்டன், அது சரியென்று நான் நினைக்கிறேன். அந்த இடத்தில்தான் எண்டிகாட் காலணி நிறுவனம் உள்ளது. பிங்காம்டன், அது பிங்காம்டன், பிங்காம்டன் என்று அழைக்கப்படுகிறது என்று நான் நினைக்கிறேன், அது உண்மை, நியூயார்க். நாங்கள் அங்கே எண்டிகாட்-ஜான்சன் காலணிகளுக்கான இடத்தில் இருந்தோம், ஒரு பெரிய அரங்கம், நாங்கள் அங்கே ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தோம். ஒரு நாள் காலை, பில்லி பால் எனக்கு பக்கத்து வீட்டில் இருந்தான், உண்மையாகவே குளிரான காற்று வீசியது. ஜனங்கள் மத்தியில் உத்தமமின்மை இருப்பது போன்று தென்பட்டதை நான் கண்டறிந்தேன். ஏன் என்று நான்—நான் ஆச்சரியப்பட்டேன். இங்கே சுகமாக்கப்பட்ட ஒரு மனிதனை, ஒரு நோக்கத்தோடு அல்லது ஒரு மனிதனைக் குறித்து—குறிப்பாக நான் பேசிக்கொண்டிருக்கிறேன். அந்த மனிதனுக்கு ஒரு பெரிய துன்பம் உண்டாயிருந்தது, அவன் அங்கே நின்றுகொண்டு இந்த இரவு சுகமாக்கப்பட்டான். நாங்கள் புறப்பட்டுச் செல்வதற்கு முன், ஐந்து நாட்களுக்கு முன்னர், அந்த வேதனை மீண்டும் அவருக்கு உண்டானது. பார்த்தீர்களா? ஏனெனில், பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தில், அது அவரிடத்திலிருந்து அதை எடுத்துப் போட்டது. சற்று முன்னர் இங்கே முற்றத்தில் வாலிபப் பெண்ணுக்கு செய்தது போல, நேற்று இரவு அந்த அந்த வாலிபனுக்கு செய்தது போல, பாருங்கள். ஆனால் இப்பொழுது அதை உங்களிடத்திலிருந்து எடுத்துப் போடக்கூடியவர் தேவன் என்பதை நீங்கள் ஆழ்ந்த உத்தமத்தோடு அறிந்திருக்க வேண்டும், உங்கள் மீதுள்ள அதே அபிஷேகத்தை, உங்களிடத்திலிருந்து விலக்கி வைக்க முடியும். பார்த்தீர்களா? அதன்பின்னர் பரிசுத்த ஆவியானவர் ஒரு நாள் காலையில் பகல் வெளிச்சத்தைக் குறித்து என்னிடத்தில் பேசி, “மேடையின் மேல் அல்லது எங்காவது எழுந்து, இந்த ஜனங்களை அங்கே கொண்டு வந்து, அவர்கள் செய்த ஒவ்வொரு காரியத்தையும் நீ அவர்களுக்காக ஜெபிப்பதற்கு முன்பு, ஒப்புக்கொள்ளச் செய்” என்றார். பார்த்தீர்களா? உத்தமத்தின் ஆழம்!

4874 உலகம் மனந்திரும்பாவிட்டால், அது அழிந்துதான் ஆக வேண்டும். பார்த்தீர்களா? அறிக்கையிடுதலே இன்றைக்கு உலகத்திற்கு தேவையாயுள்ளது, அது நேர்மையான அறிக்கையிடுதலாய் உள்ளது. 75 அது நோய்க்கான மருந்து போன்றது. அது என்ன விதமான மருந்து என்றும், அது—அது குணப்படுத்துவதற்கான எந்த வியாதியென்றும் நாம் எல்லோருமே அந்த புட்டியின் மேல் வாசிக்கலாம். ஆனால், உங்களுக்குத் தெரியும், இந்த வழிகாட்டுதல்களை வாசிக்கையில், நான் அதை வேதாகமத்தில் பொருத்தப் போகிறேன், நம்முடைய பள்ளிகளும், வேதபாட கருத்தரங்குகளும் எல்லா வார்த்தையையும் வாசிக்க முடியும். ஆனால், உங்களுக்குத் தெரியும், வழிமுறைகளைப் படித்து, அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது, அது—அது நோயை குணப்படுத்தாது. பார்த்தீர்களா? அதற்கு—அதற்கு மருந்து உள்ளது, எனவே அது உட்கொள்ளப்பட வேண்டுமே! எனவே ஒரு மனிதன், “நான் ஒரு—ஒரு வேதபண்டிதன். இப்பொழுது, என்னிடத்தில் பேச வேண்டாம், நான்—நான்—நான்…இன்ன—இன்ன—நான் வேத வாக்கியங்களை அறிந்திருக்கிறேன். வேதம் இவ்விதமாக—இவ்விதமாக உரைக்கிறது என்பதை நான்—நான் அறிவேன்” என்று கூற முடியும். 76 உதாரணமாக, பரிசுத்த யோவான் 5:24-ல், “என் வசனத்தைக் கேட்டு. “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.” இல்லை, யாக்கோபு அரசனின் மொழிபெயர்ப்பு அதை “சதாக்காலம்” என்று குறிப்பிடுகிறது, அது “நித்தியமானது” என்று சரியாக கூறுகிறது. “அவன் விசுவாசித்திருக்கிறபடியால் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்.”

49அநேக ஜனங்கள் தாங்கள் விசுவாசிக்கிறோம் என்று கூறுகின்றனர். இப்பொழுது, அது உண்மை. வேதவாக்கியம் சரியே. நான்—நான் அந்த—அந்த மருந்து சீட்டைப் படித்துக் கொண்டிருக்கிறேன், மருந்து சீட்டு என்றால் என்ன என்பதையும், என்னுடைய பாவத்திற்கான மருந்துச் சீட்டையும் படித்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் நான் அதை எடுத்துக் கொள்ளலாமா? என்னால் விசுவாசிக்க முடியுமா? நான் “நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறலாம். ஆனால் நான் விசுவாசிக்கிறேனா? அதுதான் அடுத்த காரியம். அதை வாசித்து, வழிமுறைகளை அறிந்துகொள்வது, வியாதியை குணப்படுத்தாது. பிரச்சனை என்னவெனில், (நம்முடைய காரியத்தில்) பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறதோ அதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். நாம் பரிகாரத்தை வைத்துள்ளோம், ஆனால் நாம் அதை எடுத்துக்கொள்ளமாட்டோம். நாம் வாசிக்கிறோம் என்று கூறுகிறோம், ஏனென்றால் நம்மால் அதை வாசிக்க முடிகிறது; ஆனால் உண்மையாகவே அதை ஏற்றுக்கொள்வதற்கு, நாம் அதைச் செய்கிறதில்லை. பாருங்கள், இந்த விஷயத்தில் சுவிசேஷமும் அதே விதமாகவே, ஒரு மருந்தாய் உள்ளது. நோயாளி…அந்த மருந்து நோயாளியை குணப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது, நோயாளி இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டதைக் குறித்து எல்லாவற்றையும் படித்து, அதில் உள்ள ஒவ்வொரு வீசம் கல்லெடை அளவு மருந்துகளையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள், சால்க் தடுப்பு மருந்து போன்ற இந்த குறிப்பிட்ட மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயர்கள் யாவற்றையும் அவர்கள் அறிவர். நாம்—நாம் அதைக் குறித்த எல்லா வார்த்தையையும் அறிந்திருந்தும், அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அது நமக்கு உதவி செய்யாது. பாருங்கள், அது—அது நமக்கு உதவி செய்யாது.

5077 ஆனால், அதன்பின்னர் நாம் எப்படி, “ஆனால் நாம் அதை ஏற்றுக்கொண்டோம்” என்று கூறுகிறோம். நீங்கள் அதை எடுத்துக்கொண்டதாகக் கூறினால், அந்த நோயாளி எந்த பலனையும் காண்பிக்கவில்லையென்றால், அவர் அதை உட்கொள்ளவில்லை. அவ்வளவுதான். எப்படி, சுவற்றில் மாட்டப்பட்டிருக்கிற அந்த கடிகாரம் அவ்வளவு துரிதமாக இயங்கவில்லையென்றால், பாருங்கள். சுவிசேஷம் இந்த காரியங்களை நிரூபித்திருக்கிறபடியால், நான் இங்கேயே தரித்திருந்து, நம்முடைய—நம்முடைய ஜனங்களுக்கு உண்மையாகவே உறுதியாக ஆழமாக கொண்டு வர விரும்புகிறேன், அவர்கள் அதை எடுத்துக் கொண்டதாக அவர்கள் உரிமை கோருகின்றனர், அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை என்று அவர்கள் காண்பிக்கின்றனர்! குட்டையான தலைமுடியையுடைய மற்றும் குட்டை கால் சட்டை அணிந்துள்ள பெண்களைக் குறித்தும், அதைப்போன்று நான் பேசும் சிறு காரியத்தின் பேரில் எப்படி ஒரு நபரால் வேத வாக்கியங்களை வாசிக்க முடியும், மருந்து தானே அது வித்தியாசமாக இருக்கிறது என்று கூறும்பொழுது அவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று எப்படி அழைத்துக் கொள்ள முடியும்! பார்த்தீர்களா? எப்படி? நீங்களோ, “ஆனால் நான் ஆவியில் நடனமாடினேன், நான் அந்நிய பாஷைகளில் பேசினேன்” என்று கூறலாம். அது ஒரு காரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை. நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை உங்களுடைய சொந்த ஜீவியமே நிரூபிக்கிறதே! பார்த்தீர்களா? நீங்கள்—நீங்கள் அதை ஏற்றுக் கொண்டதாக கூறினீர்கள், ஆனால் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையே! ஏனென்றால் நீங்கள் இன்னமும் மருந்து குணப்படுத்த வேண்டிய எல்லா அறிகுறிகளையும் காண்பித்துக் கொண்டிருக்கிறீர்கள். சுவிசேஷ வரிசையில், மருந்து என்பது ஒரு உத்தரவாதமான சுகமளித்தலாயிற்றே! அது அப்படித்தான் இருக்க வேண்டும். இப்பொழுது, நீங்கள் பாருங்கள், நீங்கள் பலன்களைக் காண்பிக்க வேண்டும்.

5178 நீங்கள் ஒரு நபர், “நான் இருக்கிறேன். நான் ஒரு விசுவாசி. நான் விசுவாசிக்கிறேன்” என்று அவர்கள் கூறுகிற ஒரு நபரை எடுத்துக் கொள்ளுங்கள். சகோதரனே, சுவிசேஷ வெளிச்சம் அவர்கள் மீது படட்டும், அவர்கள் அதை இப்பொழுதே எடுத்துக் கொள்கின்றனர்! அவர்கள் பலன்களைக் காண்பிப்பார்கள். நிச்சயமாக. நீங்கள் அந்த மனிதனை இனிமேல் நீச்சல் குள அறைகளில் காணமாட்டீர்கள், நீங்கள் இங்கே தன்னுடைய கையில் ஒரு சிகரெட்டுடன் அவனைக் காணமாட்டீர்கள், அவன் குடிப்பதை நீங்கள் காணமாட்டீர்கள். ஓ, இல்லை. அவன் மற்ற பெண்களோடு சரசமாடுவதை நீங்கள் காணமாட்டீர்கள். இல்லை, இல்லை, இல்லை. அவர்கள் தங்களுடைய ஸ்திரீகளின் சரீரத்தை அவனுக்கு முன்பாக காண்பித்தாலும் எனக்குக் கவலையில்லை, அவன் தன்னுடைய தலையை ஆகாயத்தை நோக்கியவாறு திருப்பி, கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பான். அது என்ன? பரிகாரம் பலனளித்தது என்பதையே அது காண்பிக்கிறது. அது நடைமுறைக்கு வரவில்லையென்றால், நீங்கள், “பாருங்கள், நான் அதை ஏற்றுக்கொண்டேன் என்று எனக்குத் தெரியும்” என்று கூறலாம், சரி, அப்பொழுது நீங்கள் இன்றைக்கு எங்கே இருக்கிறீர்கள்? நீங்கள் மரித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதை காட்டுகிறீர்கள்! நீங்கள் இன்னமும் பாவத்தில் இருக்கிறீர்கள் என்று, வேதத்தின் மூலம் கண்டறியும் உங்கள் வழக்கை நான் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பாவத்தின் சம்பளம் மரணம். அது இன்னும் தெளிவாக்கப்பட வேண்டும் என்று நினைக்க வேண்டாம். பாருங்கள், உங்களுடைய சொந்த செயல்கள் நிரூபிக்கின்றன, நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை உங்களுடைய சொந்த செயல் நிரூபிக்கிறது. நீங்கள் ஏற்றுக் கொண்டதாக நீங்கள் நினைத்துக் கொண்டீர்கள். ஆமென். நீங்கள்—நீங்கள் உத்தமமாக அதைச் செய்திருக்கலாம், ஆனால் நீங்கள் அதைச் செய்யவில்லையே! ஏனென்றால் நீங்கள் அவ்வாறு செய்தால், அது உங்கள் மேல் பலனளிக்கும் என்று தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறார். பழைய பாவம் இன்னமும் அங்குள்ளது, பழைய ஆதாமின் சுபாவம் இன்னமும் அங்கே நீடிக்கிறது, பழைய அவிசுவாசம். அதே சமயத்தில் நீங்கள் உங்களுடைய சக மனிதனுக்கு முன்பாக, “சரி, நான் ஒரு விசுவாசி. ஓ, தேவனுக்கு மகிமை! ஆம், நான் ஒரு விசுவாசி” என்று உங்களைக் குறித்துக் கூற முயற்சிக்கிறீர்கள். ஆனால், நீங்கள் பாருங்கள், அது உங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. 79 ஒருகால் நோயாளியே மருந்துக்கு முன்குறிக்கப்படாமல் கூட இருக்கலாம். அப்படி செய்திருந்தால், அது ஒருபோதும் பலனளிக்காது. அது உண்மை. நீங்கள் பார்த்தீர்களா?

5280 ஆனால் அந்த சிறு ஒழுக்கக்கேடான பெண்ணைப் பாருங்கள், வெளிச்சம் அவளைத் தாக்கினபோது, அவளுடைய நிலைமையை கவனித்துக்கொள்ள அங்கே ஏதோ ஒன்று கிடந்தது. பார்த்தீர்களா? நாம் விசுவாசித்து, உத்தமமாக அறிக்கை செய்தால், தேவனுடைய வழியின் இந்த பரிகாரம் பலனளிக்கிறது. இந்தக் காரியங்களுக்காக தேவன் ஒரு வழியை அருளியிருக்கிறார். 81 இப்பொழுது, பாருங்கள், மனிதன் போய், “சரி, நான் சபையில் சேர்ந்து கொண்டேன். அது எனக்கு இதற்கான தீர்வை உண்டாக்குகிறது” என்பான். அது தேவனால் அளிக்கப்பட்ட வழியல்ல. 82 தேவனால் அருளப்பட்ட வழி மனந்திரும்புதல், அறிக்கை செய்தல், ஒரு பலனைக் காண்பித்தல், மனந்திரும்புதலுக்கேற்ற கனியைக் கொண்டு வந்து, உத்தமத்தைக் காண்பித்தலாய் உள்ளது. ஜனங்களாகிய நீங்கள் அதை இந்தக் காலையில் செய்தால், அதற்காக ஜெபிக்கப்படவுள்ளோம், இந்த ஒலிநாடாவை உலகம் முழுவதிலுமுள்ள ஜனங்களாகிய நீங்கள் கேட்கிறீர்கள், இந்த ஒலிநாடா ஒலிப்பதிவு செய்யப்பட்ட பிறகு, ஒரு சபையில் உள்ள ஊழியக்காரர் அல்லது அதை ஒலிபரப்புகிற நபர், காடுகளில் உள்ள குழுக்கள் அல்லது நீங்கள் எங்கிருந்தாலும், அதை போட்டுக் காண்பிப்பவர், முதலில் உங்களுடைய அறிக்கையை தெளிவுபடுத்துவார்கள், அதன்பின்னர் உங்களுடைய இருதயத்தில் விசுவாசத்தைத் தவிர வேறெந்த காரியமுமின்றி ஜெபிக்கப்பட வாருங்கள், அங்கே, மருந்து கிரியை செய்யும்.

5383 இயேசு, “நீங்கள் ஒவ்வொருவரும், மனந்திரும்புங்கள்!” என்றார். பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு செய்ததாக நான் கருதுகிறேன், “மனந்திரும்பி, பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” நீங்கள் முற்றிலுமாக மனந்திரும்பி, கர்த்தர் பேரில் விசுவாசித்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்படும்போது, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளவில்லையென்றால், நீங்கள் தேவனை ஒரு பொய்யராக்குகிறீர்கள். …இயேசு தம்முடைய சபைக்கு அளித்த கடைசி கட்டளையாக இதைக் கூறினார், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.” ஒரு விசுவாசியைத் தொடருகிற அந்த அடையாளங்களை நீங்கள் காணும்போது, நீங்கள் மேலே வரும்போது, அந்த விசுவாசி உங்கள் மீது கைகளை வைக்கும்போது, ஏதோ ஒன்று சம்பவிக்கவில்லையென்றால், அப்பொழுது உங்களுடைய விசுவாசத்தில் ஏதோ தவறுள்ளது. பார்த்தீர்களா? “விசுவாசி!” தேவன் ஒரு அளிக்கப்பட்ட வழியை வாக்களித்துள்ளார்.

5484 நாம், “நான் செவிகொடுக்க வேண்டியதில்லை” என்று கூறி ஆறுதல் கண்டடைய முயற்சிக்கிறோம். இல்லை, அது உண்மை, நீங்கள் செவிகொடுக்க வேண்டியதில்லை. 85 ஆனால் நீங்கள் நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டிருந்தால், நீங்கள் அதற்கு செவி கொடுப்பீர்கள், நீங்கள் அதைக் குறித்து களிகூருவீர்கள். அது உங்களுடைய ஆறுதல். அதுவே நீங்கள் உங்களுடைய வாழ்நாள் முழுவதும் வாஞ்சித்து வந்துள்ள காரியமாய் உள்ளது. இது—இது அந்த முத்து, அதாவது, நீங்கள்—நீங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட ஆயத்தமாயிருக்கிறீர்கள். பார்த்தீர்களா? அது உங்களுக்குத் தேவை, ஏனென்றால் அது உங்களுக்கான தேவனுடைய அன்பின் அக்கறை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அது பாவக் கேள்வியைத் தீர்க்க, அவிசுவாசத்தைத் தீர்க்க, நீங்கள் அதை விரும்பினால், எல்லாவற்றையும் உங்களுக்குத் தீர்க்கும்படியான ஏதோ ஒரு காரியமாய் உள்ளது. அது உண்மையாகவே சுகவீனமாயிருருக்கிறவன், தான் சுகவீனமாயுள்ளதை அறிந்து, வைத்தியரைத் தேடுகிறான். பார்த்தீர்களா? சுகவீனமாயிராதவனுக்கு, ஒன்றுமே தேவையில்லை என்று, இயேசு கூறினார். ஆனால் அது சுகவீனமாயிருக்கிறவர்கள். உங்களுடைய நிலைமையை உங்களால் உணர முடிந்தால், அப்பொழுது அவர் கூறினபடியே நீங்கள் செய்ய வேண்டும். அப்படியானால் அது சம்பவிக்க வேண்டும், இல்லையென்றால் ஏதோ தவறு இருப்பதாக தேவன் கூறினார். பார்த்தீர்களா?

5586 அநேக ஜனங்கள் சில சமயங்களில், சுகமளிக்கும் ஆராதனைகளை, நீங்கள் அதன் அடிப்பகுதியிலிருந்து துவங்குவதில்லை. நீங்கள் சுத்திகரிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையைப் பெற்றுக் கொள்ள வேண்டும், நீங்கள் அந்த நிலைமையில் இருக்க வேண்டும், நீங்கள் உண்மையாகவே, “ஆம், நான் அதை விசுவாசிக்கிறேன்,” என்று கூற வேண்டும், அது உங்களுடைய இருதயத்திலிருந்து வந்ததாக இருக்க வேண்டும். அப்பொழுது நீங்கள், யாரும் உங்களை தட்டிக் கொடுத்து, அதாவது, “இப்பொழுது, ஓ, அருமையான சகோதரன், அருமையான சகோதரியே, நீ இதைச் செய்ய வேண்டும், நீ அதைச் செய்ய வேண்டும்” என்று கூற வேண்டியதில்லை. நீங்கள் ஒரு விசுவாசியாயிருக்கிறீர்கள். உங்களிடத்திலிருந்து எதுவுமே அதை எடுத்துப் போட முடியாது. வேறு எவரும் என்ன கூறினாலும், எந்த ஆறுதல் கூறினாலும், எந்த ஆறுதல் அளிப்பவரானாலும், எந்த மருத்துவரானாலும் நான் கவலைப்படுகிறதில்லை, எந்த மருத்துவமனையும், எந்த நோய் கண்டறிதல் என்ன கூறினாலும், நீங்கள் இன்னமும் அதை விசுவாசிப்பதில்லை. நீங்கள் அதை அறிவீர்கள்! அதைக் குறித்து வேறொன்றும் கூற வேண்டிய அவசியமில்லை, நீங்கள் அதை அறிவீர்கள்! இப்பொழுது, அதுவே அசலான காரியமாகும்.

5687 எல்லாக் காரியங்களிலும் நமக்கு அதிகமான போலியான பாவனை உள்ளது. அது அந்தவிதமாகத்தான் இருக்க வேண்டும். அதைக் குறித்து மோசமாக எண்ண வேண்டாம். அது அங்கே இருக்க வேண்டும். அது எப்பொழுதும் இருந்து வந்துள்ளது, அது அவ்வாறே இருக்கும். ஆனால் சத்தியமும், உண்மைகளும் என்னவென்பதை இந்தக் காலையில் நான் உங்களுக்குக் கூறிக்கொண்டிருக்கிறேன். நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். நாம் இந்த காரியத்தை சத்தியத்தின் பேரில் கீழே வைக்க வேண்டும், பாருங்கள், அது சத்தியம் என்னவென்பதை அது அறிந்து கொள்ளச் செய்ய வேண்டும். 88 இப்பொழுது ஜனங்கள் அதைக் குறித்த தேவனுடைய வழியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை நாம் கண்டறிகிறோம். அவர்கள் விரும்புகிறார்கள், அவர்கள்…உங்களுடைய ஆறுதலுக்காக தேவன் ஒரு வழியை அருளியிருக்கிறார். இந்த எல்லாக் காரியங்களுக்கும் தேவன் ஒரு வழியை அருளியிருக்கிறார். ஆனால் ஜனங்கள் அதை விரும்புகிறதில்லை, ஜனங்கள் வேறு வழிகளில் செல்கின்றனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் தேவனுடைய வழியைத் தவிர வேறு வழியில் அதைச் செய்யும்போது, அவர்கள் ஒவ்வொரு முறையும் அதைச் செய்யும்போது தேவனுடைய கோபத்தை அவர்கள் மேல் கொண்டு வருகிறார்கள். சரி.

5789 நான் கூறியுள்ள இந்த எல்லாக் காரியங்கள் அனைத்தும், இது நம்மை இதற்குக் கொண்டுவருகிறது, உலகம், அனைத்து விஞ்ஞான சாதனைகளைப் பின்தொடர்ந்து, சபையின் சாதனைகளைப் பின்தொடர்ந்து, வித்தியாசமான காரியங்களின் பின்னே செல்வது நம்மை உலகத்தின் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. நாம் முடிவில் இருக்கிறோம். ஒரு நம்பிக்கையும் விடப்பட்டிருக்கவில்லை. நாம் பிழைத்திருப்பதற்கான ஒரு நம்பிக்கையில்லாமல் இருக்கிறோம். நாம் பிழைப்பதற்கான ஒரு வாய்ப்புக் கூட இல்லை. இப்பொழுது நான் இதை ஒரு சில நிமிடங்களுக்கு விவரித்து, அதை உங்களுக்கு நிரூபிக்கட்டும். 90 நீங்கள் ஒவ்வொருவரும், நீங்கள் பெற்று, நீங்கள் பெறவில்லையென்றால், நீங்கள் ஒரு மருத்துவப் பத்திரிக்கையைப் பெற்றுக்கொள்ள வேண்டும், நீங்கள் ரீடர்ஸ் டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையில் இந்த சாதனைகளைப் படிக்க வேண்டும். இப்பொழுது செய்ய…

5891 இங்குள்ள ஒரு ஊழியக்காரர் உலகம் முழுவதும் இந்த செய்தியை அனுப்புகிறார். அப்படி ஒரு அறிக்கையை வெளியிட, நாங்கள் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறோம், நாம் மீட்பதற்கு அப்பாற்பட்டவர்கள், அதாவது நாம் மீட்புக்கும், நியாயத்தீர்ப்புக்கும் இடையேயுள்ள கோட்டை நாம் கடந்துவிட்டிருக்கிறோம், இப்பொழுது இந்தக் கூற்றின் அடிப்படையில் நான் சபையோருக்கு சில ஆதாரங்களை கூற வேண்டும். ஒரு மனிதன் தன்னுடைய சரியான மனநிலையில் என்னைப் போல் இருப்பதாக நான் எண்ணிணால், அவருடைய தேசத்திற்குச் சொல்ல, அவருடைய சபைக்குச் சொல்ல, அப்படி ஒரு அறிக்கையை வெளியிட, அதற்கு சில காரணங்கள் இருக்க வேண்டும், முப்பது அல்லது நாற்பது வெவ்வேறு நாடுகளில் இது உலகம் முழுவதும் எங்கு செல்லும் என்பதை மக்களுக்குச் சொல்ல, ஒருவேளை, “நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம்” என்று உலகத்தைச் சுற்றிலும் உள்ள ஜனங்களுக்கும், பாஷைக்காரருக்கும் கூற, நாம் நமது காலைக்கான நம்முடைய முக்கிய பாடப் பொருளுக்கு வரும் வரையில் ஒரு அறிக்கையை அளிக்கவோ அல்லது—அல்லது—அல்லது அதைக் குறித்து சிறிது விளக்கவோ வேண்டியதாயுள்ளது.

5992 பாருங்கள், இப்பொழுது விஞ்ஞானமும், கல்வியும் நம்மை எந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்பதை நாம் பார்ப்போம், அதைத்தான் மனிதன் தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக விஞ்ஞான அங்கீகாரத்தை ஏற்றுக் கொண்டான். விஞ்ஞானம் எப்பொழுதுமே அவர்கள் கூறினதை திரும்பப் பெற வேண்டியதாயுள்ளது. சுமார் இருநூறு அல்லது முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரெஞ்சு விஞ்ஞானி கூறியதை நான் இங்கே சில காலத்திற்கு முன்பு படித்துக்கொண்டிருந்தேன், “பூமியைச் சுற்றி ஒரு பந்தை உருட்டினால்,” மேலும், “இந்த பந்து, இந்த வேகத்தில்…உலகத்தைச் சுற்றி வர குறைந்தபட்சம் மணிக்கு முப்பது மைல் வேகத்தில் பயணிக்கச் செய்ய, ஏதோ ஒன்றை,” உலகம் எப்போதாவது கண்டுபிடித்திருந்தால், அவர் அதை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்து, “அது பூமியிலிருந்து புவி ஈர்ப்பு விசையினால் அதனுடைய பாரத்தினால் தூக்கியெறியப்படும்” என்று கூறியிருந்தார். பார்த்தீர்களா? இப்பொழுது, விஞ்ஞானம் எப்போதாவது அந்த நபரைக் குறிப்பிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. அது அவர்களுக்கு கடந்த காலத்தில் உள்ளது.

6093 இப்பொழுது, நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போமாக, நாம் யாவரும், “நான் அதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க விரும்புகிறேன்” என்று கூற விரும்புகிறோம். அதைத்தான் இன்றைக்கு அநேக ஸ்தாபன மதத்தவர் கூறுகின்றனர். அவர்களுக்கு ஒரு விஞ்ஞான ஆதாரம் தேவை. பாருங்கள், நான் திரும்பி, “உங்களுடைய சபையில் உள்ள தேவனை, எனக்கு விஞ்ஞான ரீதியாக நிரூபியுங்கள். அது உண்மையென்று விஞ்ஞானப் பூர்வமாக எனக்கு நிரூபியுங்கள். நிரூபியுங்கள்…” 94 உண்மையானது என்ன? ஜீவியம். ஜீவியத்தின் அந்த பாகத்தைப் பெற்றுக் கொள்ள, நீங்கள் எனக்கு அதில் கால்பங்கு மதிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வாழ்க்கை உண்மையானதா? அது அவ்வாறு இல்லையென்றால், நாம் யாவரும் இங்கே எதற்காக இருக்கிறோம்? 95 ஜீவன், விசுவாசம், அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, சாந்தம், பொறுமை, விஞ்ஞானம் அதைத் தொட முடியாது. அது மாத்திரமே உண்மையான, நீடித்திருக்கும் காரியமாயுள்ளது. முழு கிறிஸ்தவ சர்வாயுதவர்க்கமும் காணமுடியாதவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் புலன்கள் அந்தக் காரியங்களை அறிவிக்கிறதில்லை, ஆனால் அவைகள் அங்குள்ளன. அந்தக் காரணத்தினால்தான் அதை விசுவாசிக்க விசுவாசம் தேவைப்படுகிறது, அங்கே விசுவாசம் பிரகடனப்படுத்தியிருக்கிறதை அது உங்களுக்குள் உற்பத்தி செய்கிறது. அது உங்களுக்கு தெய்வீக சுகமளித்தலையும் மற்ற காரியத்தையும் கொண்டு வருகிறது. எது தெய்வீக சுகமளிக்கிறது என்பதை அவர்களால் நிரூபிக்க முடியாது, ஆனால் ஒரு தெய்வீக சுகமளித்தல் உண்டு என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். நான்…பாவத்திலிருந்து எது இரட்சிக்கிறது என்பதை அவர்களால் நிரூபிக்க முடியாது, ஆனால் ஜனங்கள் பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே அது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட முடியாது, ஆனால் அது விஞ்ஞானப் பூர்வமாக தேவனுடைய வழியில் நோக்கிப் பார்க்கிறது.

6196 இப்பொழுது, விஞ்ஞானம் நமக்கு என்ன கொண்டு வந்துள்ளது? இப்பொழுது, நீங்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியடையலாம். விஞ்ஞானம் நமக்கு சுகவீனத்தையும், மரணத்தையும், வியாதிகளையும் கொண்டு வந்துள்ளது. இப்பொழுது, நீங்கள் காட்சியின் ஒரு பக்கத்தில் மாத்திரமே கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் அதற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. நீங்களோ, “விஞ்ஞானம் இதை, அதை, மற்றதைக் கண்டுபிடித்திருக்கிறது” என்று கூறலாம். பாருங்கள், நாங்கள் உங்களுக்கு அந்த சிலாக்கியத்தை அளிக்கப் போகிறோம். ஆனால் மறுபக்கத்தைப் பார்ப்போம். விஞ்ஞானம் நமக்கு சுகவீனத்தைக் கொண்டு வந்துள்ளது. விஞ்ஞானம் நமக்கு நோய்களையும், மரணத்தையும் கொண்டு வந்துள்ளது. 97 பாருங்கள்! விஞ்ஞான கலப்பினமானது இந்த தலைமுறைக்கு, உணவுகள் மற்றுமுள்ள காரியங்களுக்கு மரணத்தை கொண்டு வந்துள்ளது. அது ஜனங்களை மிகவும் மிருதுவாக்கி, புருஷனும், ஸ்திரீயும் ஒரு கூட்ட சேற்றிலிருந்து உண்டாக்கப்பட்டு, அதற்குள் எந்த அமைப்பும் இல்லை—அங்கே இல்லை—இல்லை. அது ஒரு மென்மையான மீன்களின் கூட்டமாக மாறியுள்ளது. குளிரூட்டும் இயந்திரம் இல்லாமல் அவர்களால் வாழ முடியாது, அவர்கள் அழிந்து போகிறார்கள். அவர்கள் ஒரு தளகட்டுப் பந்தாட்ட விளையாட்டை விளையாட முடியாது, அவர்களில் யாராவது எங்காவது தட்டப்பட்டால், அது அவரைக் கொன்றுவிடும், குத்துச்சண்டை வளையங்கள் மற்றும் இன்னும் என்னவெல்லாம் உள்ளன. அது புருஷரையும், ஸ்திரீகளையும் மிகவும் மிருதுவாக்குகிறது, பாருங்கள், அது அவர்களை தாறுமாறாக்கிக் கொண்டிருக்கிறது.

6298 அவர்கள் இந்த கலப்பினத்தை கால்நடைகளுக்குள் புகுத்துகிறார்கள், அது இப்பொழுது மனிதவர்க்கத்திற்குள்ளாக மீண்டும் வந்துள்ளது, விஞ்ஞானத்தின்படியே அவைகளை தாறுமாறாக்கிக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் ஒரு—ஒரு மாடு கலப்பினமாயிருக்கும்போது, அல்லது எந்த உணவும் கலப்பினமாயிருந்தாலும், அந்த உணவே இரத்த அணுவை உண்டாக்குகிறது, இரத்த அணுவே உங்களுடைய ஜீவனாயிருக்கிறது. அது என்ன செய்துள்ளது என்று பார்த்தீர்களா? அதன்பின்னர், இறைச்சியில், அவர்கள் இங்கே இந்த ஊசிகளை இறைச்சியில் செலுத்துகிறார்கள், இப்பொழுது இந்த ஊசிகள் மானிட வர்க்கத்தின் மேல் விளைவைக் கொண்டிருக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானப்பூர்வமானது! 99 அவர்கள் இந்த டிடிடி என்ற மருந்தை வயல்களில் தெளிக்கிறார்கள், நான் அன்றொரு நாள் கண்டேன், இப்பொழுது இந்த சமூகத்தில் முட்டைகளை புசிப்பதனால் சுகவீனமான எண்ணூறு பேர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அநேக ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் இங்கே ஒரு சிறு கட்டிட அமைப்பை உடையவர்களாயிருந்தபோது, நான் தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருந்தபோது, “கடைசி நாட்களில் அது சம்பவிக்கும், பள்ளத்தாக்கில் குடியிருக்க வேண்டாம், முட்டைகளைப் புசிக்க வேண்டாம்” என்று கூறப்பட்டது. நான் அதை என்னுடைய புத்தகத்தில் வைத்துள்ளேன். அதைக் குறித்து ஏதோ காரியம் இருப்பதாக நான் எண்ணினேன், நான் சென்று அதை நோக்கிப் பார்த்தேன். “முட்டையை சாப்பிட வேண்டாம்” அது 1933-ம் ஆண்டில் இருந்தது. முட்டைகள் இப்பொழுது அவைகளுக்குள் ஏதோ ஒன்றைப் பெற்றுள்ளன, அங்கே விஞ்ஞானம் கூறுகிறதை நான் காண்கிறேன் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஒரு மனிதன் ஒருபோதும் முட்டையை உண்ணக் கூடாது என்றும், ஏனென்றால் அது புசிக்கப்படக்கூடிய ஒரு இருதயத்திற்கு மிகவும் கடினமானதாயுள்ளது. வியாதிகள்!

63100 பால், பாலானது நம்முடைய மிகவும் சரிவிகித உணவாக முன்பு இருந்தது. இப்பொழுது மருத்துவர்கள் உங்களிடத்தில், “அதைப் பருகாதீர்கள்” என்று கூறுவார்கள். அது மூக்கெலும்பின் உட்புழை பாதிப்பையும் மற்ற ஒவ்வொரு காரியத்தையும் உண்டாக்குகிறது. இதைப் பருகி, பல ஆண்டுகளாக உயிர்வாழும் அதே மனிதர்களுக்கு மூக்கெலும்பின் உட்புழை பாதிப்பு ஒருபோதும் தெரியாது, ஆனால் இனக்கலப்பு போன்றவை மானிட வர்க்கத்தின் அமைப்பை உடைத்துவிட்டன ஒரு கழிவு, ஒரு உருண்டை—ஒரு சுகவீன உருண்டையைத் தவிர வேறொன்றுமில்லை. அதை செய்தது எது? விஞ்ஞானம்! 101 பாருங்கள்! அது மனிதனுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள மரபணுக்கள் பலவீனமடைய காரணமாக அமைந்தது, மானிட வர்க்கத்தின் சரீரப்பிரகாரமான பெலவீனமானது, மரபணுக்கள் மூலமாக, வலிப்பு நோய்க்குள்ளான பிள்ளைகளின் அதிகரிப்பு ஏறக்குறைய முப்பது சதவீதமாக உள்ளது. மங்கோலியர் பெரிய ஏறுவரிசையில் உள்ளனர். நாம் ஜீவனுக்காக புசித்துக்கொண்டிருக்கிற உணவுகளின் இனக்கலப்பு இந்த பலவீனம், சரீரத்தை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறது, அது புற்று நோயையும், மனநல கோளாறுகளையும், எல்லாவிதமான நோய்களையும் மனித சரீரத்தில் அதன் பலவீனம் காரணமாக அமைகிறது. விஞ்ஞான ரீதியாக, தங்களை அழித்துக் கொண்டு, தேவனுடைய திட்டத்திலிருந்து விலகிச் செல்கிறார்கள். அவர், “ஒவ்வொரு வித்தும் அந்தந்த விதமான விதைகளைப் பிறப்பிக்கக்கடவது” என்றார். உம்-ஹூம். 102 நாம் எங்கே இருக்கிறோம் என்று பார்த்தீர்களா? நான் கூறிக்கொண்டே போகலாம்; நம்முடைய நேரம் கடந்து கொண்டிருக்கிறது. ஆனால் கவனியுங்கள், அது என்ன செய்து கொண்டிருக்கிறது? விஞ்ஞானம் மரணத்தையும், வியாதியையும், அழிவையும் கொண்டு வந்துள்ளது.

64103 அன்றொரு நாள் நான் கண்டேன், இங்கே அமர்ந்துள்ள என்னுடைய நல்ல நண்பரான வேத பண்டிதர் வேயிலிடம் பேசிக்கொண்டிருந்தேன், அங்கே பென்சிலின் மருந்தினால் ஜனங்கள் கொல்லப்படுகின்றனர் என்ற ஒரு கட்டுரை இருந்தது. அது உண்மையாகவே பென்சிலின் அல்ல, அவர்கள் பென்சிலினை உற்பத்தி செய்யும்போது, அதில் கலப்படம் உள்ளது. அது ஒரு பணம் சம்பாதிக்கும், பேராசை திட்டம். ஆஸ்பிரின் மருந்தின் சூத்திரத்தைக் கூட அறியாத மருத்துவர்கள், அவர்களுடைய தகப்பனார் அவர்களை ஒரு—ஒரு நிபுணத்துவ மருத்துவரிடம் அனுப்பும்படி அனுப்புகிறார், ஆனால் அவர்களோ ஒரு குழந்தையின் வயிற்றுவலியை எப்படி குணப்படுத்துவது என்று கூட அறியாதவர்கள். ஆனால் நாம் என்ன பெற்றுள்ளோம்? பேராசை, சிலர் இழுத்தல் அல்லது ஒரு சிறு காரியம். பழங்காலத்து நாகரீகமான நாட்டுப்புற வைத்தியர்களை வழக்கமாகக் கொண்டு வந்து உங்களிடத்தில் பேசி, உங்களுக்கு ஆறுதல் கூறி, ஒவ்வொரு காரியத்தையும் வைத்தியம் செய்வது இனி அவர்களுக்குக் கிடையாது. அவர்கள் தேவனை காட்சியிலிருந்து விலக்கிவிடுகின்றனர், ஏனென்றால் அவர்கள் தங்களுடைய சொந்த வழியில் சென்றனர். தேவனை அந்த காட்சியிலிருந்து வெளியேற்றுவதற்காக, அவர்கள் அவரை முழுவதுமாக விளக்கினர். அங்குதான் நாம் இருக்கிறோம்.

65104 இனக்கலப்பு செய்வதன் மூலம் நாம் அதைத்தான் செய்துள்ளோம். நீங்கள் பாருங்கள், சரீரம்…ஒரு ஆரோக்கியமான செடி எப்படி உண்டாகிறது, ஒரு கிருமியினால் அரித்துத் தின்ன முடியாது. இது இந்த செயற்கை வெளிச்சத்தில் உள்ள தாவரங்கள், இந்த கலப்பின தாவரங்களுக்கு நீங்கள் தொடர்ந்து தெளிக்க வேண்டும். உங்களில் அநேகர் கலப்பின மார்க்கத்தின் பேரிலான என்னுடைய செய்தியை வாசித்திருப்பீர்கள், அதை தொடர்ந்து தெளித்து, குழந்தைப்போன்று வைத்துக் கொள்கிறார்கள். கவனியுங்கள், ஆனால் உண்மையான அசலான செடியானது தெளிக்கப்பட வேண்டியதில்லை, அதுவே அசலானது.

66105 மானிட சரீரத்தில் வியாதி வரக் காரணம் என்ன? சரீரம்…என்னுடைய விலையேறப்பெற்ற மருத்துவர் நண்பர் ஒருவர் என்னிடம் கூறியுள்ளபடி, அவருடைய பெயரை நான் இப்பொழுது கூற விரும்பவில்லை, ஆனால் அவர் ஒரு அருமையான சகோதரன், சமீபத்தில் ஒரு மருத்துவ இதழிலிருந்து எனக்கு வாசித்துக் காட்டிக் கொண்டிருந்தார், அவர் தன்னுடைய அலுவலகத்தில் இந்த சிறந்த புத்தகங்கள் மற்றும் மருத்துவம் குறித்த சமீபத்திய காரியங்கள் அனைத்தையும் வைத்திருப்பார். அது பலவீனம். உண்மையாக இருக்கும் எவரையும் நீங்கள் கவனிக்கிறீர்கள்…உங்களுடைய சரீரம் நலிவுற்றுள்ளது என்று நீங்கள் கூறினால், உங்களுக்கு உடனே ஜலதோஷம் பிடிக்கும். அது என்ன? உங்களுடைய சரீரத்தின் பலவீனமே உங்களுடைய சுரப்பிகளிலிருந்து ஒரு சளியை உற்பத்தி செய்கிறது. மேலும், அதில், ஜலதோஷ கிருமிகள் தங்கிவிடுகின்றன, அதனால் உங்களுக்கு ஜலதோஷம் பிடித்துவிடுகிறது. ஆனால் அந்த சரீரம் பலமுள்ளதாயிருந்தால், அது அந்த ஜலதோஷ கிருமியை மேற்கொள்ளும், அதனால் அதைத் தொட முடியாது. 106 ஆகையால், நீங்கள் பாருங்கள், தேவன் முதலில் ஒரு மனிதனை சிருஷ்டித்தபோது, அவன் எந்த வியாதியிலிருந்தும் பாதுகாக்கப்பட்டவனாயிருந்தான். பார்த்தீர்களா? ஆனால் அவிசுவாசம் மற்றும் விஞ்ஞானம், விஞ்ஞானம் மற்றும் கல்வி ஆகியவை முதன்மையான காரியமாயிருந்து அதுவே ஒரு மனிதனை தேவனிடத்திலிருந்து தூர விலக்கினது, அது இன்னமும் அவனை தூர எடுத்து சென்றுவிடுகிறது.

67107 சிகரெட்டுகள், மது அருந்துதல், அரை நிர்வாணிகள் போன்றவைகளைப் பாருங்கள், இந்த சந்ததியின் அழிவையே ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் எப்பொழுதுமே ஆச்சரியப்படுவீர்கள் என்று நான் யூகிக்கிறேன்…நான் இங்கே ஒரு அறிக்கையை அளிக்கப் போகிறேன். நான் அதைச் செய்யப்போவதில்லை, ஆனால் நான் செய்வேன் என்று நான் நம்புகிறேன். 108 பாருங்கள், அவர்கள் சில சமயங்களில் வியப்புற்று, அவர்கள் எப்பொழுதுமே, “சகோதரன் பிரான்ஹாம், அதுபோன்ற காரியங்களை நீங்கள் எப்பொழுதுமே தெரிந்து கொள்ளும்படி செய்கிறது எது—என்ன? நீங்கள் அதைக் கேட்கவில்லை…நீங்கள் ஒரு மனிதனுடைய சபைக்குச் செல்கிறீர்கள் என்று கூறினால், ஏன், நான் என்னுடைய ஸ்திரீகளை எல்லோரையும் அழைத்துச் செல்ல, நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் இடத்தில் அவர்களால் ஆறுதலாக உட்காரக்கூட முடியாது. அவர்களுடைய குட்டையான தலைமுடியைக் குறித்தும், மனிதனுக்குரிய ஆடைகளை அணிவதைக் குறித்தும், அதைப் போன்ற இந்த எல்லாக் காரியங்களையும். நீ ஏன் அதைச் செய்கிறாய்?” என்று கேட்டேன். இப்பொழுது நான்—நான்—நான்…

68109 அடுத்த கோடை காலம் வரையிலும் இதுவே என்னுடைய கடைசி செய்தியாக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்கள், ஆனால் நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன். இதோ அது உள்ளது. தேவனுக்கு முன்பாக சபிக்கப்பட்ட ஒரு காரியம் என்பதை அறிந்திருக்கிற, இந்தக் கடைசி நாட்களுக்கான பகுத்தறிதலின் ஆவியாய் இது உள்ளது. ஒரு ஊழியக்காரனுக்கு கடைசி நாட்களைக் குறித்து பகுத்தறிதல் உண்டா என்று சில சமயம் நான் யோசிக்கிறேன்? இங்கே மேடையின் மேல் உங்களுடைய நிலைமைகளையும், நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதையும் சொல்லுகிற அதே தேவன், நீங்கள் என்னவாக இருக்கப் போகிறீர்கள் என்றும், மேலும்—மேலும் உங்களுக்கு என்ன தொல்லைகள் இருக்கும் என்றும், உங்களுக்குள்ளிருக்கும் அதே ஆவியானது காலத்தின் அடையாளங்களை வகையறுக்கக் கூடும். அது பகுத்தறிதலின் ஆவியாயுள்ளது, ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர்தாமே அந்தக் காரியம் பாவம் என்று கூறுகிறார், அதில் பங்குபெறுகிறவன் அழிந்துபோவான். அப்படியானால் என் சகோதரிகளும் சகோதரர்களும் அந்த விதமான நிலையில் இருப்பதைக் காணும்போது, நான் எப்படி தேவனுடைய பார்வையில் நீதிமானாக்கப்பட முடியும், நான் அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லையென்றால்? அவர்கள் என்னோடு கோபங்கொண்டாலும் கூட, நான் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அது பகுத்தறிதல். சில சமயங்களில் அவர்கள் வார்த்தையிலும் மற்ற காரியங்களிலும் வேறுபடுகிறார்கள், அது பகுத்தறிவின்மை. வார்த்தையினால் அதை எதிர்கொள்ள வாருங்கள். பார்த்தீர்களா? பாருங்கள், அது சரியென்று நாம்—நாம் அறிவோம். பாருங்கள், அது உண்மையென்று அது அறிந்திருக்கிறது. அது கடைசி நாட்களின் பகுத்தறிதல்.

69110 இப்பொழுது நாம் விஞ்ஞானத்தைக் குறித்துப் பார்ப்போம், நான்—நான் அதன் பேரில் அதற்கு மேல் செல்ல விரும்பவில்லை, என்னுடைய நேரம் மிகவும் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பொழுது நாம் கல்வியைக் குறித்து இரண்டாவதாக ஒரு பார்வை எடுத்து, அது என்ன செய்யப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம். பார்த்தீர்களா? இப்பொழுது நமக்கு இரண்டு சபைகள் உள்ளன. 111 இப்பொழுது, இது அதுதான் என்பதை நாம் உணருகிறோம், அது தர்க்க அறிவாய் இருந்தது, பொதுவான சிந்தனைகளே முதலில் பாவத்தின் பந்தை உருளத் துவங்கின. அது என்ன தர்க்க அறிவாயிருந்தது? தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக தர்க்கம் செய்தல். தேவன் ஆதாமிடமும், ஏவாளிடமும், “நீங்கள் அதைப் புசிக்கும் நாளிலே நீங்கள் மரித்துப்போவீர்கள்” என்று கூறினபோது, அதுவே தீர்வு, அதைக் குறித்தது அவ்வளவுதான். அவர் தம்முடைய வார்த்தைக்குப் பின்னால், சத்துருவுக்கு எதிராக அவர்களை அரணாக அமைத்தார். ஆனால் ஏவாள், சாத்தானின் யோசனைகளுக்கு செவிகொடுக்கும்போது, பாருங்கள், கலாச்சாரம், புரிந்துகொள்ளுதல், கல்வி, முன்னேற்றம், பாருங்கள், அவள் அங்கே பின்னால் அடியெடுத்து வைத்து, சாத்தானின் யோசனைகளைக் கேட்டு, “செய்ய வேண்டாம்” என்று தேவன் கூறின காரியங்களைச் செய்தாள். வார்த்தைக்கு விரோதமான ஒரு யோசனைக்கு செவிகொடுப்பதனால் இந்த குழப்பம் உண்டானது என்றால், வார்த்தைக்கு விரோதமான ஒரு சிந்தனை உங்களை மீண்டும் அதே இடத்திற்கு கொண்டு செல்லாது, ஏனென்றால் தேவன் மனிதனை அனுப்பிய அதே அடிப்படையின் பேரில் திரும்பவும் கொண்டு வருவது எவ்வளவு மூடத்தனமாயிருக்கும். பார்த்தீர்களா? பார்த்தீர்களா? நீங்கள் கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தண்டைக்கு வரவேண்டும். உங்களுடைய ஸ்தாபனம் கிரியை செய்யாது, உங்களுடைய யோசனைகள் கிரியை செய்யாது. அது இரத்தமும் பிறப்பும் ஆகும், அதுவே உங்களுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாகிய கிறிஸ்து, கிறிஸ்துவின் சாயலின்படியே நீங்கள் ஜீவிக்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் உட்கொள்ளும் நஞ்சு அவிசுவாசத்தின் பாவத்தைக் கொல்லுகிறது, தேவனுடைய வார்த்தையைத் தவிர வேறெதற்கும் விரோதமாக உள்ளது.

70112 கல்வியை நமக்கு…அங்கே…இந்த காலையில் நமக்கு இரண்டு சபைகள் உள்ளன. அவைகளில் ஒன்று பெந்தேகோஸ்தே சபையில் பரிசுத்த ஆவியினால் ஸ்தாபிக்கப்பட்ட பெந்தேகோஸ்தே சபையாகும்; இரண்டாவதாக ரோமாபுரியிலுள்ள நிசாயாவில் ஸ்தாபிக்கப்பட்ட ரோமன் கத்தோலிக்க சபையாகும். அவைகளில் ஒன்று ஆவிக்குரிய பிறப்பு; மற்றொன்று ஒரு அறிவாற்றல் கொண்ட அங்கத்தினராகும். அந்த சபையிலிருந்துதான் எல்லா பிராடெஸ்டெண்டுகளும் தோன்றினர். எல்லா ஸ்தாபனங்களும் தோன்றின. அதுவே முதல் ஸ்தாபனமாயிருந்தது. எல்லா ஸ்தாபனங்களும் அந்த ஸ்தாபனத்திலிருந்து வந்தவைகள், வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரம் அவ்வண்ணமாய்க் கூறுகிறது, “அவள் ஒரு வேசியாயிருந்தாள், அவள் வேசிகளுக்குத் தாயானாள்.” அது உண்மை. எனவே அங்கு இல்லை…ஈயத்தைப் பார்த்து பித்தளை கூறினதுபோலவே, பாருங்கள், ஏனென்றால் அது—அது சரியாக, அது ஒன்றுதான். அது ஸ்தாபனமாக்கப்பட்டுள்ளது, அது போய்விட்டது, அது ரோமாபுரியில் உள்ளது. அது என்னவாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, அது போய்விட்டதே! வேதம், அதை நிரூபிக்க, நாம் அந்த சபைக் காலங்களினூடாக பார்த்தோம். ஒன்று ஆவிக்குரிய பகுத்தறிதலின் அடிப்படையில் அமைந்துள்ளது; மற்றொன்று கல்வி மற்றும் அறிவாற்றல் சார்ந்த கருத்தின் அடிப்படையிலானதாயுள்ளது.

71113 இப்பொழுது, அது நம்மை மீண்டும் ஏதேன் தோட்டத்தில், சரியாக அதே இடத்திற்கு திரும்ப வைக்கிறது. ஸ்திரீயே (சபை) செவி கொடுத்தாள், ஆதாம் அல்ல, ஸ்திரீ! இப்பொழுது அவர்கள் தாய் சபையாக இருக்க விரும்புகிறார்கள், தொடர்ந்து செல்லுங்கள்! அது முற்றிலும் சரியே. காலத்திற்கு புறம்பே ஒன்றுமேயில்லை. அவர்கள் தங்களுடைய சொந்த அறிக்கையை செய்கிறார்கள், பாருங்கள். பாருங்கள், தேவனுடைய வார்த்தையை அவிசுவாசிக்கும் அதேக் காரியத்திற்கு திரும்பிச் செல்லுதல்! ரோமாபுரியிலுள்ள நிசாயாவில், தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்தும், அதைப் போன்ற மற்ற காரியங்களைக் குறித்தும் கேள்வி எழும்பும்போது, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்தும், பேராயர்கள் ஒன்று சேர்ந்து, ரோமன் கத்தோலிக்க சபை, அது “ராஜரீக” ரோமன் என்று அழைக்கப்பட்டது. நேற்றைய வரலாற்றை எடுத்து, அதைக் கேட்டு, அதை மீண்டும் ஆராய்ந்து பார்த்தேன். அது ரோமாபுரிக்கு மாத்திரமே இருக்க வேண்டும் என்று மாத்திரமே இருந்தது, ரோமாபுரியில் ராஜரீக சபை இருந்தது. மற்றவை கத்தோலிக்கம் என்று அழைக்கப்பட்ட சிறிய சகோதரி சபைகளாக இருந்தன.

72114 எங்களுடைய சபையும் கூட கத்தோலிக்க, உலகளாவிய சபையாயுள்ளது, அது எல்லா விசுவாசிகளின் உலகளாவிய நம்பிக்கையாகும். அவைகளில் ஒன்று தேவனுடைய ஆவியினால் பிறந்து, தனக்குள் பரிசுத்த ஆவியை உடையதாயிருந்து, அது தன்னுடைய ஜீவனின் மூலம் நிரூபிக்கிறது, உபதேசத்திலும், செயலிலும், பரிசுத்த ஆவியானவர் அங்கே இருக்கிறார், ஏனென்றால் அது கிறிஸ்து—கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்த தேற்றரவாளன், தம்முடைய சபையில் கிரியை செய்து, அவர் ஆதியில் செய்த அதே காரியத்தை செய்து கொண்டிருக்கிறார். அந்தவிதமாகத்தான் கிறிஸ்துவின் இரட்சிப்பின் நஞ்சு ஆதியில் கிரியை செய்தது, அந்தவிதமாகவே அது இன்றைக்கும் கிரியை செய்கிறது, அதே காரியத்தையே பிறப்பிக்கிறது. 115 மற்றொன்று மனிதக் குழுவால் உண்டாக்கப்பட்ட ஒரு ஸ்தாபனத்தின் அறிவாற்றல் கொண்ட கருத்தாய் உள்ளது, தீர்க்கதரிசி நமக்கு கூறியதுபோல, “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, இந்த சத்தியத்தின் பெலனை மறுதலித்தது.” இப்பொழுது, அதை எப்படி செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரிந்தவரை அவ்வளவு தெளிவாக உள்ளது.

73116 இப்பொழுது, இரண்டு சபைகள் உள்ளன. அவர்களில் ஒன்று நிசாயாவில் பிறந்தது; மற்றொன்று பெந்தெகொஸ்தே நாளில் பிறந்தது. மேலும்—மேலும் ஒன்று எப்பொழுதுமே மற்றவருக்கு எதிராகவே இருந்து வருகிறது. நாம் சபைக் காலங்களினூடாக ஒன்றை நிரூபித்துக் கொண்டே வந்திருக்கிறோம், ஒன்று மற்றொன்றுக்கு விரோதமாயுள்ளது. அவைகளில் ஒன்று அருமையான, கன்னியமான, அறிவாற்றலுள்ள சபையைக் கொண்ட அருமையான பண்டிதர்களையும் கொண்டிருக்க; மற்றொன்று “பரிசுத்த உருளைகளின் கூட்டமாக” வகைப்படுத்தப்பட்டுள்ளது. அது ஆரம்பத்தில், “குடித்து வெறித்ததுபோல் காணப்பட்ட, படிப்பறிவில்லாத மீனவர்கள்,” இன்றைக்கும் அதேக் காரியம்தான் உள்ளது, அது இன்னமும் அதே வகையில் வகைப்படுத்தப்படுகிறது. அவைகளில் ஒன்று விஞ்ஞானப்பூர்வமானது; மற்றொன்று ஆவிக்குரியதாயுள்ளது. ஒன்று விஞ்ஞான ஏற்பாடு; மற்றொன்று வார்த்தையின் ஆவிக்குரிய பகுத்தறிதல். மனித குழுக்கள் கூறுகிறபடியே விஞ்ஞானப் பூர்வமாக வரிசைப்படுத்தப்பட்ட ஒன்று, அறிவாற்றல் வாய்ந்த பேராயர். மற்றொன்று முற்றிலுமாக தேவனுடைய ஆவியினால் பிறந்து, தேவனுடைய ஆவியினால் ஜீவிக்கிறது, அது தேவன் வாக்குத்தத்தம் செய்த வார்த்தைகளை நிறைவேற்றி நிறைவேறச் செய்கிறது. நீங்கள் எந்த நச்சுப் பொருளை உட்கொள்ளுகிறீர்கள் என்பதைக் காண்பிக்கிறது. நீங்கள் கல்வி என்ற நச்சுப் பொருளை பெற்றுள்ளீர்களா? பரிசுத்த ஆவியின் நச்சுத் தன்மையை நீங்கள் பெற்றுள்ளீர்களா? பார்த்தீர்களா? சரி.

74117 ஓ, சாத்தானின் அந்த தந்திரம்! அவனால் எப்படி அந்தக் காட்சியை சித்தரிக்க முடியும், தேவனுடைய ஆவியினால் பிறக்காத ஒரு மனிதனை அறிவுப்பூர்வமாக சுற்றித் திரியச் செய்ய முடியும்! அறிவாற்றல் ரீதியில் அதைக் கொண்டு அவர்களை வீழ்த்த வழியேக் கிடையாது. ஒரு வழியும் இல்லை. 118 அது விசுவாசத்தினால் ஒரு பகுத்தறிதல், பாருங்கள், ஒரு பகுத்தறிதல். வார்த்தை என்ன கூறுகிறது என்பதை நாம் காண்கிறோம், நாம் அதை விசுவாசிக்கிறோம். 119 “அப்படியானால், சகோதரன் பிரான்ஹாம், அவர்களுக்கு பகுத்தறிதல் உண்டு என்று அவர்கள் கூறுகிறார்கள்.” அப்படியானால் பரிசுத்த ஆவியானவர் சரியாக அவர் என்ன உற்பத்தி செய்வதாக வாக்குத்தத்தம் செய்ததை செய்யட்டும், அப்பொழுது நாம் அதை விசுவாசிப்போம். பார்த்தீர்களா? அதற்கு அத்தாட்சி இருக்கிறது. 120 அந்த நபரை தாக்கியபோது, அந்த நச்சு எப்படி செயல்பட்டது? அவர், “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன” என்றார். நச்சு அதைத் தாக்கியிருந்தால், அப்பொழுது பரவாயில்லை. பார்த்தீர்களா? எனவே அவர்கள் நம்மை…

75121 இது இப்பொழுது அடுத்த சில நிமிடங்களில், முடிக்கும் தருணத்தில் நம்மைக் கொண்டு வருகிறது. எனவே இது நம்மை ஆபேல் மற்றும் காயீனிலிருந்து நோவாவின் காலத்தில், நியாயத்தீர்ப்பு வரும் வரை நம்மைக் கொண்டு வருகிறது. இப்பொழுது, நாம் ஜெப வரிசையை உடையவர்களாயிருக்கிறோம், கூர்ந்து கவனியுங்கள் நான் இங்கே சில வேத வாக்கியங்களினூடாக ஒரு சிறு—ஒரு சிறு பாடப் பொருளைக் குறித்து ஆராய்கிறேன். 122 உலகமானது வார்த்தையைக் குறித்த தன்னுடைய அறிவாற்றல் கொண்ட கருத்தை எடுத்துக் கொண்ட பிறகு, அந்த மனிதர் மகத்தான மனிதனாகி, புகழ் வாய்ந்த மனிதனானான். வேதம் அவ்வண்ணமாய்க் கூறுகிறது, ஆதியாகமம் 6:4. நாம் முழு உலகத்தையும் உடையவர்களாயிருந்ததைப் போன்ற, புகழ்வாய்ந்த மனிதன் உண்மையான அழகான ஸ்திரீகள் மற்றும் மற்ற காரியங்களின் பின்னால் ஓடுகிறான். பிரகாசிக்கும் சிகப்பு விளக்குகள் என்ற தலைப்பில், நாம் அதைப் பற்றி அன்றொரு இரவு பேசினோம் எப்படி கடைசி நாட்களில் பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள் என்றும், எப்படி ஆண், புகழ்வாய்ந்த மனிதன், இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் நடந்த அவதூறு போன்றே. இந்நாட்களில் ஒன்றில் அது இன்னமும் கண்டுபிடிக்கப்படும். பாருங்கள், இவையனைத்தும் விபச்சாரிகள் என்று அழைக்கப்படுவதையும், மற்றெல்லாவற்றையும் குறித்தது என்னவென்றும் உங்களுக்குத் தெரியாது. பார்த்தீர்களா? உயர்நிலைப் பள்ளி அல்லது கல்லூரிப் பெண்களைக் காட்டிலும் மது அருந்தும் கடையில் பணிப்பெண்கள் மும்மடங்கு உள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிப் பெண்களைக் காட்டிலும் மது அருந்தும் கடையில் பணிப்பெண்கள் மும்மடங்கு உள்ளனர். ஒரு குறிப்பிட்ட சதவிகிதம், என்னால் அதை இப்பொழுது கூற முடியாது, ஏனென்றால் அது எனக்கு முன்பாக இல்லை, நான் அதை குறித்திருக்கவில்லை, ஆனால் தேசத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் ஒன்று ஒழுக்கக் கேடானதாக நிரூபிக்கப்பட்டதாகவோ அல்லது தாய்மார்களாயிருக்க வீட்டிற்கு செல்ல வேண்டியதாயிருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? பால்வினையை விரட்ட பென்சிலின் மருந்தை உட்செலுத்துவது ஜனங்கள் மத்தியில் ஒரு சீரழிவையே உண்டாக்கியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது மரித்துப் போகவில்லையா? ஆனால் அதே சமயத்தில், பாருங்கள், அது நான்காம் தலைமுறைக்கு வரும் என்று தேவன் கூறினார். அது மங்கோலியர்களுக்கும் மற்ற எல்லாக் காரியங்களுக்கும் காரணமாயிருக்கிறது, பிள்ளைகளும்…ஓ, எவ்வளவு பாவம், அது எவ்வளவு தந்திரமானது! எப்படி அந்த ஜனங்களுக்கு, வீதியில் உள்ள அந்த அரைநிர்வாணிகளுக்கு எதிராக அந்த ஊழியக்காரர்கள் நின்று கொண்டு பிரசங்கிக்காமல், அவர்களை பாடகர் குழுவில் பாட அனுமதித்து, அதைப் போன்ற ஒவ்வொரு காரியத்தையும் செய்ய அனுமதித்து, நம்முடைய தேசத்தை நரகத்திற்கு அனுப்பிய அதே காரியம் என்பதைப் பாருங்கள், நம்முடைய இனத்தை நரகத்திற்கு அனுப்பினர். அது உண்மை. ஆகையால் இப்பொழுது தேவன் அதைக் குறித்து போதுமானதாயிருந்த பிறகு, இன்றைக்கு அவர் வைத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்…

76123 இப்பொழுது நான் என்னுடைய பாடப் பொருளுக்கு வருகிறேன். நான் ஒரு விநோதமான வழியைக் கொண்டு வருகிறேன்…நான் அநேக காரியங்களை கூட்டிக் கூட்டி, அதன்பின்னர் என்னுடைய பாடப்பொருளை எடுத்துக் கூற விரும்புகிறேன். இப்பொழுது, நாம் நோவாவின் நாட்களில் அதை கண்டறிகிறோம், தேவன் உலகத்தை நியாயந்தீர்க்கப்போவதாயிருந்தபோது, அது இப்பொழுது உள்ளது போன்று வரும்போது, ஏனென்றால் இயேசு அதைக் கூறினார், அவர் விசாரித்தாரா? அவர் விசாரித்தாரா? அவர், நிச்சயமாகவே விசாரித்தார். அவர் எதற்காக அக்கறை கொண்டார்? இப்பொழுது, நியாயத்தீர்ப்பு வரப்போகிறது என்பதை அவர் ஏற்கனவே அறிந்திருந்த பிறகு, நியாயத்தீர்ப்பை அறிவித்த பிறகு, அக்கறை கொண்டிருந்தவர்களுக்காக அவர் அக்கறை கொண்டார். அது இன்றைக்கும் அதேவிதமாகவே உள்ளது. அக்கறை கொள்ள ஆயத்தமாயிருந்தவர்களுக்காக அவர் அக்கறை காட்டினார். அவர்களை வழிநடத்த அவர் ஒரு தீர்க்கதரிசியை தெரிந்து கொள்ளப்பட்ட தம்முடைய ஜனங்களை, அவர்கள் தப்பித்துக் கொள்வதற்கென அளிக்கப்பட்டுள்ள வழிக்கு அவர்களை வழிநடத்தும்படி அனுப்பினார் என்று நாம் அறிகிறோம். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். பார்த்தீர்களா? தேவன் தம்முடைய ஜனங்களுக்காக அக்கறை கொண்டிருந்தார் என்பதை நாம் கண்டறிகிறோம். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி] .

77124 நாம் முடிவில் இருக்கிறோம், நாம் முடிவில் இருப்பதை நாம் காண்கிறோம்! அந்த ஊழலைக் கட்டியெழுப்ப வழியேக் கிடையாது. சோதோம் கொமோராவின் எரிந்துபோன இடிபாடுகளின் மேல் நாம் எப்படி ஒரு நகரத்தைக் கட்ட முடியும்? நாம் எப்படி அதைச் செய்ய முடியும்? ஒரே ஒரு ஃபீனிக்ஸ் மட்டுமே உள்ளது, அது கர்த்தராகிய இயேசுவின் வருகையாகும்; ஓ, என்னே, உபத்திரவ காலத்தினூடாக ஒரு சுத்திகரிப்பு, ஒரு உலகத்தின் மறுசீரமைப்பை திரும்பக் கொண்டு வர, தேவனுடைய பார்வையில் நீதியுள்ளவர்களாயிருந்து, அவருடைய வார்த்தையினால் ஜீவிக்கிற ஒரு ஜனத்திற்காகவே இது உள்ளது.

78125 கவனியுங்கள், நோவாவின் நாட்களில் தப்பித்துக் கொள்ள கவலை கொண்டவர்களுக்காக அவர் அக்கறை கொண்டார், அவர் அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். இந்த தீர்க்கதரிசி தேவன் அருளிய வழியில் அவர்களை வழிநடத்தினான். இப்பொழுது, அது காரியங்களை செய்கிற தேவனுடைய வழியாயுள்ளது. பார்த்தீர்களா? தேவன் நோவாவிடம் பேசினார், அது வார்த்தையாயிருந்தது (அப்பொழுது அது எழுதப்பட்ட வார்த்தையாயிருக்கவில்லை), ஜனங்களின் இரட்சிப்பிற்காக ஒரு பேழையை ஆயத்தம் செய்யும்படி நோவாவிடம் கூறி, அவர் “இரட்சிப்பின் ஒரே வழியை” உடையவராயிருந்தார் என்று எல்லா ஜனங்களையும் எச்சரிப்பதற்கேயாகும். இந்த மனிதன் தப்பித்துக்கொள்ளும் வழியை அவர்களுக்கு நிரூபித்த ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியாயிருந்தான். கவனியுங்கள், தாழ்மையும் உத்தமமுமானவர்கள் இந்த மனிதனுடைய செய்தியைக் கேட்டு, இவனை விசுவாசித்தனர், அவர்கள் தப்பித்துக் கொண்டனர். அவர்கள் என்னத்திலிருந்து தப்பித்தார்கள்? அந்த நாளில் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த பாவ உலகத்தின் மரணத்திலிருந்து, அவர்கள் முழு உலகத்தின் மேலும் போடப்பட்டிருந்த மரணப் பாதையிலிருந்து தப்பினர். தேவன் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்! (ஓ தேவனே, இப்பொழுது ஜெப வரிசைக்கு முன்பாக இது ஆழமாகச் செல்ல உதவி செய்யும்.) தேவன் அக்கறை கொண்டாரே!

79126 அவர் இப்பொழுது இன்றைக்கு உலகத்தை நோக்கிப் பார்க்கிறார், அவர் அழைத்திருக்கிறார், அவர் அழைத்திருக்கிறார், அவர்கள் நிராகரித்து புறக்கணித்தனர். துவக்கத்தில் மனந்திரும்புவதற்கான ஒரு வாய்ப்பு இருந்தது. தேவன் ஏசாயாவிடம் போய்…எசேக்கியா மரிக்கப் போகிறான் என்று சொல்லும்படி கூறியபோது, எசேக்கியா மனந்திரும்ப, இரக்கம் உண்டானது. தேவன் யோனாவிடம் நினிவேக்குச் சென்று, கூக்குரலிடும்படி கூறினபோது, ஏனெனில் இன்னும் நாற்பது நாட்களில் அவர் அந்த நகரத்தை அழித்துவிடுவார், அவர்கள் இரக்கத்திற்காகக் கூக்குரலிட்டனர், அப்பொழுது மனந்திரும்புதல் உண்டாயிருந்தது. ஆனால் அவர்கள் அதை புறக்கணிக்கும்போது, நியாயத்தீர்ப்பைத் தவிர வேறொன்றும் விடப்பட்டிருக்கவில்லை! தேசம் கிறிஸ்துவைப் புறக்கணித்துவிட்டது. அவர்கள் அந்த அழைப்பிற்கு செவிகொடுக்கத் தவறியுள்ளனர், எனவே நாம் நியாயத்தீர்ப்பை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தவிர வேறொன்றும் விடப்பட்டிருக்கவில்லை.

80127 இப்பொழுது, மனந்திரும்பியவர்களைக் குறித்து தேவன் கவலைப்படுகிறாரா? அவர் அவர்களுக்காக ஒரு வழியை உண்டாக்கினாரா? இப்பொழுது அவர் கடந்த காலங்களில் என்ன செய்தார் என்பதை நாம் காணப்போகிறோம். 128 நோவாவின் காலம், அவர் கவலை கொண்டார்! அவர் தீர்க்கதரிசியை அனுப்பினார், அவர்—அவர் வழியைக் கொண்டு வந்தார், அவர் அவர்களுக்கு அந்த வழியைக் காண்பித்தார், அவர்கள் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள அவர் அவர்களுக்கு ஒரு வழியை உண்டுபண்ணினார். அவர் அவர்களுக்காகவும் கூட அக்கறை கொண்டார். கடைசி நாட்களில், அங்கு (அனைவருக்கும்) அவர் அவர்களை ஒரு இடத்திற்குக் கொண்டு வருகிறார் என்பதை நாம் காண்கிறோம், அந்த மகத்தான நியாயத்தீர்ப்பு வருவதற்கு முன்பு, அவர் அவர்கள் வரக்கூடிய ஒரு வழியை ஆயத்தம் செய்யும் வரையில் அவர் வரப்போகும் எல்லா நியாயத்தீர்ப்புகளிலிருந்தும் விடுதலையாக வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்காக அவ்வளவாய் அக்கறை கொண்டிருந்தார். 129 இப்பொழுது, அவர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு அதைச் செய்தார். இப்பொழுது, நாம் அதை அறிவோம். அவர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு அதைச் செய்தார், இப்பொழுது, தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு மாத்திரமே! அவர்கள்தான் இந்த ஜீவ அணுவை ஏற்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் தான் அதைக் காண முன்குறிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தான். நாம் யாவரும், நாம் வேதாகமத்தை விசுவாசிப்போமானால், நாம் முன்குறித்தலில் விசுவாசம் கொள்ள வேண்டும். பார்த்தீர்களா? அது உண்மை. எவரும் பாடுபட வேண்டும் என்று தேவன் சித்தமாயிருக்கவில்லை, ஆனால் யார் அதை ஏற்றுக்கொள்வார்கள், யார் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார்.

81130 அவர் எகிப்தின் அழிவின் நாட்களில் தெரிந்து கொள்ளப்பட்ட தம்முடைய ஜனங்களுக்காகவும் கூட அக்கறை கொண்டிருந்தார். அவர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர். மோசேயின் நாட்களில் அவர் ஜனங்களுக்காக அக்கறை கொண்டிருந்தார். அவர் அவர்களுக்கு எதை அனுப்பினார்? மீண்டும் ஒரு தீர்க்கதரிசி. அது சரியா? அவர் தம்முடைய ஜனங்களை அவிசுவாச உலகத்திலிருந்து, அந்த நாளின் நியாயத்தீர்ப்பிலிருந்து பிரித்தார். அவர் அதைச் செய்தாரா? தேவன் நியாயத்தீர்ப்பை அனுப்ப வேண்டிய அளவிற்கு எகிப்து தங்களுடைய பாவங்களை மிக அதிகமாக குவித்திருந்தபோது, அவர் கவலைப்பட்டார், ஏனென்றால் அவர் ஏற்கனவே ஆபிரகாமிடம் கூறியிருந்தார், “நான் அந்த தேசத்தோடு இடைபடுவேன்.” எனவே அவர்கள் எல்லோர் மேலும் தம்முடைய கோபாக்கினையை ஊற்றுவதற்கு பதிலாக, அவர் தம்முடைய அக்கறையை அவர்களுக்கு அனுப்பினார். அவர் தம்முடைய தேற்றரவாளனை அவர்களண்டை அனுப்பினார். அவர் தம்முடைய வார்த்தையை அவர்களுக்கு அனுப்பினார். நோவாவின் காலத்தில் அவர் செய்ததுபோல, அவர் எப்பொழுதுமே தம்முடைய தீர்க்கதரிசியின் மூலம் தம்முடைய வார்த்தையை அனுப்புகிறார். நோவாவின் நாட்களிலும் அவர் அதையே செய்தார். எலி…மோசேயின் நாட்களில், அவர் அதேக் காரியத்தைச் செய்தார் என்று நாம் கண்டறிகிறோம். அவர் தம்முடைய தீர்க்கதரிசியை அவர்களுக்கு அனுப்பினார், அவர்கள் அவிசுவாசத்திலிருந்து தங்களை பிரித்துக் கொண்டனர். இப்பொழுது, அந்தவிதமாகத்தான் வெளியே வந்தனர். அந்தவிதமானவர்கள் தான் அதை விசுவாசித்தனர். அவர்கள் மோசேயை விசுவாசித்தனர், அவன் ஒரு…பார்வோனின் பார்வையில், அவன் ஒரு மதவெறியன், அவன் ஒரு மந்திரவாதி, அவன் ஒரு மாய்மாலக்காரனாயிருந்தான், அவன் பயங்கரமான ஒருவனாயிருந்தான். ஆனால் தேவனுடைய வார்த்தையின்படி வெளியே வருகிற (“நான் அவர்களை வெளியே கொண்டு வருவேன்”) என்று தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களுக்கு, அவன் அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் தேவனால் அளிக்கப்பட்ட வழியாயிருந்தான். அவனும்…கவனியுங்கள், அவர்கள் அவனை விசுவாசித்து, அந்நாளின் நியாயத்தீர்ப்பிற்கு தப்பினர். அவர்கள் மோசேயை விசுவாசித்தனர்.

82131 அவர்களை வெளியே கொண்டு வரும்படியாக அவர் அவர்களுக்காகவும் கூட அக்கறை கொண்டிருந்ததாக அவர் கூறினார், அவர்கள் வெளியே வந்தப் பிறகான பயணத்தில் அவர் அவர்களுக்காக அக்கறை கொண்டதாக அவர் கூறினார். ஆமென். அது மாம்சப்பிரகாரமான முறையில் இருந்தது போல, இதுவும் ஆவிக்குரிய மண்டலத்தில் உள்ளது. அவர் அக்கறை கொண்டிருந்தார்! ஏன்? அவர்கள் பயணத்தில் இருந்தபோது அவர்களுக்கு தேவையாயிருந்த எல்லாவற்றையும் அவர் அளித்தார். அவர் செய்தாரா? அவர்கள் சுகவீனமாயிருந்தபோது அவர்களை அவர் சுகப்படுத்தினார். அவர் சுகத்தை அருளினார், அவர் அவர்களுடைய வியாதிக்கு ஒரு வழியை அருளினார். பாவத்தின் அடையாளமாயிருந்த அந்த வெண்கல சர்ப்பத்தை அவர்கள் நோக்கிப் பார்க்கவும், சுகமடையவும் அவர் ஒரு—ஒரு வெண்கல சர்ப்பத்தை அருளினார். அவர்கள் வழியில் இருந்தபோது, அப்பம் இல்லாதிருந்தபோது, அவர் அவர்களைப் போஷித்தார், அவர் வானத்திலிருந்து அப்பத்தைப் பொழிந்தார். அவர் அவர்களை போஷித்தார். அது மாத்திரமல்ல, ஆனால் அவர் அவர்களை உடுத்தினார், அக்கறையுள்ளவர்களுக்காக அவர் அக்கறையுள்ளவராயிருக்கிறார் என்பதைக் காண்பிக்கிறது.

83132 அவர்கள் அறிக்கையிட்டு, மனந்திரும்பி, விசுவாசித்து ஏற்றுக் கொள்ள ஆயத்தமாயிருந்தால், தேவன் விசாரிக்கிறார்! ஆனால் நீங்கள் முதலில் அக்கறை கொள்ள வேண்டும், அவர் உங்களுக்கு அனுப்பினதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்த தவறும் இருக்காது என்று அவர்கள் நிச்சயமுடையவர்களாயிருக்கும்படி அவர் அவர்களுக்காக அவ்வளவாய் அக்கறை கொண்டிருந்தார், ஒரு அக்கினி ஸ்தம்பத்தின் அடையாளத்தின் மூலம் இந்த மனிதன் இங்கு நடந்து சென்று கொண்டிருக்கவில்லை என்பதையும், அது அவனுக்கு மேலே தேவனாயிருந்தது என்பதையும் ஜனங்கள் அறிந்துகொள்ளும்படிச் செய்து, அவர் தம்முடைய தீர்க்கதரிசியை ரூபகாரப்படுத்தினார், அவரே வழி நடத்திக் கொண்டிருந்தவர். அக்கறையுள்ள ஜனங்களுக்காக தேவன் விசாரிக்கிறார். அவருக்காக அக்கறையுள்ளவர்களுக்காக தேவன் விசாரிக்கிறார். எனவே அவர் இந்த மனிதனை ரூபகாரப்படுத்தி, அவன் தேவனுடைய ஊழியக்காரன் என்பதை நிரூபித்து, ஒரு அக்கினி ஸ்தம்பத்தை அனுப்பி அவர்களை அதே தேசத்திற்கு வழி நடத்திச் சென்றார். இந்த அக்கினியின் அடையாளம் இருக்கும் வரை அவர்கள் பின் தொடர்ந்தனர். ஒரு மேக ஸ்தம்பமும் அக்கினி ஸ்தம்பமும் அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தன…அவர் “அக்கினி ஸ்தம்பத்தையும் மேகஸ்தம்பத்தையும் எடுத்துப்போடவில்லை” என்றார். அவர் அவர்களோடு அநேக வருடங்களாக வனாந்திரத்தில் நாற்பது வருடங்கள் இருந்தார். அது சரியா? அந்த அக்கினி ஸ்தம்பம் அவர்களை வழி நடத்தினதே! நாம் நம்முடைய முப்பத்தி மூன்றாம் ஆண்டில் இருந்து கொண்டிருக்கிறோம், இன்னும் ஏழு ஆண்டுகள் கழித்து அது அதே மாதிரியாக இருக்கும். சரி, ஒரு அக்கினி ஸ்தம்பம் அவர்களை வழிநடத்தியது. அவர் அவர்களுக்காக அக்கறை கொண்டிருந்தார். அது ஏதோ விஞ்ஞான பூர்வமான காரியம் அல்ல என்பதை—என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படிக்கு அவர் அவர்களுக்காக அதிக அக்கறை கொண்டிருந்தார். அது ஏதோ ஒரு தடுமாற்றம் அல்ல, ஆனால் அவர் செய்தியை ரூபகாரப்படுத்தி, அதை நிரூபித்தார்.

84133 ஒரு இஸ்ரவேலாயிராதத ஒரு அந்நிய பெண்ணிற்காக கூட அவர் அவ்வளவாய் அக்கறை கொண்டிருந்தார். அவள் அந்தக் குழுவைச் சேர்ந்தவள் அல்ல, ஆனால் அவள் ஒரு அந்நியராயிருந்தாள், பிரஸ்பிடேரியன், மெதோடிஸ்டு அல்லது ஏதோ ஒன்று, அவள் மற்றொரு பக்கத்தில் இருந்தாள். ஆனால் அவள் கேட்டபோது! அவளுடைய பெயர் ராகாப், அவள் ஜீவித்துக் கொண்டிருந்தாள்…அவள் ஒரு வேசியாயிருந்தாள். ஆனால் தேவன் எப்படியாய் ஒரு அக்கினி ஸ்தம்பத்தில் இருந்து அவர்களை வழி நடத்திக் கொண்டிருந்தார் என்று அவள் கேள்விப்பட்டபோது, அவள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, தேசத்தைக் கண்காணிக்க வந்திருந்த வேவுகாரர்களுக்கு அவள் இரக்கம் காட்டினாள். அவள் அவளுக்காகவும், அவளுடைய ஜனங்களுக்காகவும் அக்கறை கொண்டிருந்த காரணத்தால், தேவன் அவளுக்காக அக்கறைகொண்டார். இந்த விபச்சாரி தன்னுடைய ஜீவியத்தை கிறிஸ்துவுக்கு அளிக்குமளவிற்கு, அவள் இயற்கைக்கு மேம்பட்ட தேவனின் அடையாளத்தைக் கண்டிருந்தபடியால், அவள் தன்னுடைய சொந்த ஸ்தாபனத்திலேயே தன்னுடைய தேவர்களை சேவித்தாள். ஆனால் அவள் இந்த மகத்தான இயற்கைக்கு மேம்பட்ட அடையாளத்தைக் கண்டபோது, அவள் கதறி அழுது, இரக்கத்திற்காகவும், தன்னுடைய குடும்பத்திற்கான இரக்கத்திற்காகவும், தேவன் அவளுக்காக அவ்வளவாய் அக்கறை கொண்டதால், முழு நகரமும், ஒன்றன் மேல் ஒன்றாக மடிந்தது, ஆனால் அவளுடைய வீட்டின் மேல் ஒரு கல்லும் அசையவில்லை அவர் விசாரிக்கிறார்! அவள் ஒரு அந்நியராயிருந்தபோதிலும், அந்த நேரத்தில் அவள் குழுவில் இல்லை, ஆனால் அவர் அக்கறை கொண்டார். அவர் எப்பொழுதுமே அக்கறை கொள்கிறார். அவர் எலியாவுக்காக அக்கறை கொண்டபோது, அவன் மாத்திரமே தேவனுக்காக் அக்கறை கொண்டான்.

85134 அல்லேலூயா! அது அங்குதான் வருகிறது. “உங்களுடைய கவலைகளை அவர் மேல் வைத்து விடுங்கள், ஏனென்றால் அவர் உங்களை விசாரிக்கிறார்.” பேதுரு, தெரிந்து கொள்ளப்பட்ட மூப்பர்களிடமும், மூப்பர்களிடமும், சபையிலுள்ளவர்களிடமும் பேசினபோது, அவன், “உங்களுடைய கவலைகளை அவர் மேல் வையுங்கள், ஏனென்றால் அவர் உங்களுக்காக அக்கறை கொண்டிருக்கிறார். நீங்கள் தேவனுக்கு முன்பாக சுத்தமாயிருக்கிறபடியால், எல்லாவற்றையும் அங்கே வையுங்கள். நீங்கள்—நீங்கள் தேவனுடைய ஊழியக்காரர்களைப் போன்று நடந்து கொண்டிருக்கிறீர்கள்” என்றான். 135 எலியா தேவனுக்காக அக்கறை கொண்டிருந்த காரணத்தால் தேவன் எலியாவுக்காக அக்கறை கொண்டார். மற்ற பிரசங்கிமார்கள் யாவரும் அந்த நாளின் தரிசனத்தை இழந்து, தேவனுடைய சித்தத்தையும், அவருடைய வார்த்தையின் அன்பையும் இழந்துவிட்டிருந்தனர், அவை யாவுமே நவநாகரீகமாகிவிட்டன. ஆனால் தேசத்தின் முதல் பெண்மணியாகிய யேசபேல் அவைகளை எவ்வளவு நவீனமாக கொண்டிருந்த போதிலும், மற்ற பிரசங்கிமார்கள் பெண்களை எவ்வளவாக செயல்பட அனுமதித்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. எலியா கர்த்தரின் நாமத்தில், அதற்கு எதிராக சத்தமிட்டான். தேவன் கூறினவற்றிற்காக அவன் அக்கறை கொண்டிருந்தான், அப்பொழுது எலியா கூறினதற்கு தேவன் அக்கறை கொண்டார், ஏனென்றால் அவன் கர்த்தருடைய வார்த்தையைக் கூறினான். நீங்கள் அக்கரை கொள்ளும்போது, தேவன் விசாரிக்கிறார், ஆனால் நீங்கள் முதலில் அக்கறை கொள்ள வேண்டும். ஆம்.

86136 கவனியுங்கள், அவர் எலியாவை ஸ்தாபனங்களின் மத்தியிலிருந்து தம்முடைய வார்த்தையினால் அழைத்தபோது, அவர் அக்கறை கொண்டிருந்தார். அவனுக்கு தசமபாகமும் காணிக்கைகளும் வராதபடியால், அவன் பட்டினி கிடந்து மரிக்க வேண்டும் என்பது போன்று காணப்பட்டது. ஆனால் அவர் எலியாவுக்காக அவ்வளவாய் அக்கறை கொண்டிருந்தார், அவன் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்திருந்த நேரத்தில் அவன் பட்டினி கிடக்க அவர் அனுமதிக்கவில்லை. காகங்கள் அவனைப் போஷிக்கும்படி அவர் கட்டளையிட்டார். அவர் எலியாவுக்காக அக்கறை கொண்டிருந்தார், ஏனென்றால் எலியா அவருக்காக அக்கறை கொண்டிருந்தான், அவர் வார்த்தையாயிருக்கிறார்.

87137 தானியேல் உத்தமமாய் ஜெபிக்கத்தக்கதாக தேவனுடைய வார்த்தையின் பேரில் அக்கறை கொண்டிருந்தபோது, அவர் தானியேலை விசாரித்தார். “இனிமேல் நான் அதைச் செய்ய விரும்பவில்லை” என்று ராஜா என்ன கூறினாலும் கவலைப்பட வேண்டியதில்லை. எலியா கதவுகளைத் திறந்து எருசலேமை நோக்கிப் பார்த்து ஜெபித்தான். எலியா தேவனுக்காக அக்கறை கொண்டார், மேலும்—மேலும் தேவன் எலியாவுக்காக அக்கறை கொண்டார். தானியேல் தேவனுடைய வார்த்தைக்காகக் அக்கறை கொண்டான், தேவன் எலியாவுக்காகக் அக்கறை கொண்டான். அவர் ஒரு அக்கினி ஸ்தம்பத்தை அனுப்பினார், அது அந்த சிங்கத்தை பயமுறுத்தி, இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்தது. தானியேல் அக்கறை கொண்டிருந்த காரணத்தால் தேவன் விசாரித்தார். ஆம், ஐயா. ஸ்தாபன கட்டளைகளை கீழ்ப்படியாமல் போனால் சிங்கத்தின் குகையில் எறிந்து விட படுவான் என்பதை அறிந்திருந்தும் உத்தமமாக ஜெபித்தான். ஆனால் அவன் அந்த மனிதன் கூறினதற்கு பயப்படாமல், ஜன்னலின் அருகே முழங்காற்படியிட்டான். அவன் ஜன்னல்களைத் திறந்தான், ஏனென்றால் அது தேவனுடைய ஒரு கட்டளையாயிருந்தது, அவன் ஒவ்வொரு நாளும் தன்னுடைய தேவனிடத்தில் உத்தமமாகவும், நேர்மையாகவும் ஜெபித்தான். அவன் தேவனுக்காகவும், அவருடைய கட்டளைக்காகவும் அக்கறை கொண்டிருந்தான், தேவன் திரும்பி தானியேலுக்காகவும், அவனுடைய கட்டளைக்காகவும், அவனுடைய நிலைப்பாட்டிற்காகவும் அக்கறை கொண்டார். தானியேல் தேவனுக்காகவும், அவருடைய வார்த்தைக்காகவும் அக்கறை கொண்டிருந்தான். தேவனும் தானியேலுக்காகவும், வார்த்தைக்கான அவனுடைய நிலைப்பாட்டிற்காகவும் அக்கறை கொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு முறையும் அதைச் செய்வார். ஆமென்.

88138 எபிரெயப் பிள்ளைகள் தேவனுடைய வார்த்தையை, உத்தமமாய் மதித்து, அவர்களுக்காக ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காக அக்கறை கொண்டபோது, அவர் அவர்களுக்காகக் அக்கறை கொண்டார். அவர்கள் எக்காளம் ஊதுகிற வரையிலும் அவர் அவர்களுக்காக அவ்வளவாய் அக்கறை கொண்டிருந்தார்…அவர்கள் தேவனிடத்திலிருந்து வந்த ஒரு கட்டளையைப் பெற்றிருந்தனர், “எந்த அஞ்ஞான தெய்வத்துக்கு முன்பாகவும், எந்த சிலைகளுக்கு முன்பாகவும் பணிய வேண்டாம். அவைகளை வணங்கி தொழுதுகொள்ளாதே.” அதுவே கட்டளையாயிருந்தது. அவர்கள் எக்காளத்தை ஊதும்போது “அவ்வாறு பணியாதவர்களை நாங்கள் அக்கினி சூளையிலே தூக்கி எறிவோம்” என்றனர். அவர்கள் தங்களுடைய முதுகை அந்த சிலையை நோக்கியவாறு காட்ட மிகவும் கவலை கொண்டனர். அது உண்மை. தேவன் அவர்களுக்காக அவ்வளவாய் அக்கறை கொண்டிருந்தார், மிகவும் சூடாக்கப்பட்ட போது, அவர் நான்காவது மனிதனை அக்கினிச் சூளைக்குள் அனுப்பி அவர்களை குளிர்விக்கச் செய்தார். அவர்கள் அக்கறை கொண்டிருந்த காரணத்தால் அவர் அக்கறை கொண்டார்.

89139 நீங்கள் ஏதோ ஒரு கோட்பாட்டை பற்றிக்கொள்ள விரும்பினால், நீங்கள் என்ன செய்தாலும் தேவன் கவலைப்படுகிறதில்லை. நீங்கள் அதைச் செய்ய விரும்பினால், அவர் உங்களுக்காக ஒருபோதும் கவலைப்படமாட்டார், ஏனென்றால் நீங்கள் மனிதன் கூறினதையே செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் தேவனுடைய வார்த்தையை, உங்களுடைய உண்மையான உத்தமமான அறிக்கையை பற்றிக்கொண்டு, தேவன் ஒரு சுகமளிப்பவராயிருக்கிறார் என்று விசுவாசித்தால், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார், அவர் உங்களுக்காக அக்கறை கொள்வார். 140 அப்பொழுது அவர் அக்கறை கொண்டிருந்தார், அவர் எபிரெயப் பிள்ளைகளுக்காக அக்கறை கொண்டார், அவர்களை விடுவிக்க அவர் அவர்களுக்கு நான்காவது மனிதனை அனுப்பினார், அது கிறிஸ்து. நாம் அதை அறிவோம். 141 குஷ்டரோகியோ, “ஆண்டவரே!” என்று கூப்பிட்டபோது, பத்து குஷ்டரோகிகளும் வெளியே வந்து, “ஆண்டவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்” என்று உத்தமமாய் கதறினார்கள். அவர்கள் தங்களுடைய சொந்தக் குறைவைக் குறித்து கவலை கொள்ள போதுமானவர்களாய் இருந்தனர், அதனால் அவர்களுக்காக அக்கறை கொள்ளும்படியான ஒரு வல்லமையை அவர் உடையவராயிருந்தார். அவர் குஷ்டரோகிக்காக அக்கறை கொண்டார், ஏனென்றால் அந்த குஷ்டரோகிகள் தங்களுடைய அறிக்கையை செய்ய அக்கறை காட்டி, அவரை “ஆண்டவரே!” என்று அழைத்தனர்.

90142 அவர் அக்கறை கொண்டார், நூற்றுக்கு அதிபதி தன்னைக் குறித்து போதிய அக்கறை கொண்டிருந்தபோது, அவன் இயேசுவினிடத்தில் உதவிக்காக அனுப்பினான். நூற்றுக்கதிபதி தன்னுடைய ரோமாபுரியின் விக்ரங்களை எல்லாம் கண்டனம் செய்து, தன்னுடைய…விசுவாசத்தை காட்டி அக்கறை கொண்டவனாய் (பகிரங்க சாட்சியினால்) அவனுடைய குமாரனை சுகப்படுத்த வரும்படிக்கு அவனை அனுப்ப, இயேசு போய் அவனை சுகப்படுத்த போதுமான அக்கறை கொண்டிருந்தார். நீங்கள் அக்கறை கொள்ளும்போது அவரும் அக்கறை கொள்ளுகிறார். நீங்கள் முதலில் அக்கறை கொள்ள வேண்டும். அவர் அக்கறை கொண்டிருந்தார். 143 யவீரு இயேசுவைக் குறித்து போதிய அக்கறை கொண்டிருந்தபோது, அவர் அக்கறைகொண்டார். அவன் ஒரு இரகசிய விசுவாசியாயிருந்தான். அவன் சரியென்று நம்பினான். ஆனால் அவனுடைய ஸ்தாபன நிலைப்பாட்டின் காரணமாக அவனால் வெளியே வந்து அதை அறிக்கை செய்ய முடியவில்லை, ஆனால் அவனுடைய சிறிய மகள் சுகவீனமடைந்து மரித்தபோது, யவீரு தன்னுடைய மகளின் மரணத்தைப் பார்த்து, அல்லது தன்னுடைய கவலையை வெளிப்படுத்த, அவன் தன்னைச் சுற்றியிருந்த அவிசுவாசிகளைக் கண்டனம் செய்ய போதுமான அக்கறை கொண்டிருந்தான், தன்னுடைய சிறிய தொப்பியை அணிந்து சென்று, இயேசுவைக் கண்டான். யவீரு கவலையுள்ளவனாயிருந்ததைக் காண்பித்தபோது, இயேசு வந்து அவளை மரித்தோரிலிருந்து எழுப்ப போதுமான அக்கறை கொண்டிருந்ததைக் காண்பித்தார். உங்கள் கவலைகளை அவர் மீது வைத்து விடுங்கள், ஏனென்றால் அவர் விசாரிக்கிறார்! அது என்னவாயிருந்தாலும் பொருட்படுத்தாமல், அவர் விசாரிக்கிறார்!

91144 ஒரு கட்டளை கூட இல்லாதிருந்தபோது, அப்படி எதுவும் சொல்லப்படாமல் இருந்தபோது, அவர் போதிய அக்கறை கொண்டிருந்தார், அவர் அதைக் குறித்து ஒருபோதும் குறிப்பிடவில்லை, ஆனால் அந்த எளிய ஸ்திரீ ஜெப வரிசையில் வரமுடியாத காரணத்தால் அவர் அக்கறை கொண்டார், அவள், “அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை என்னால் தொட முடிந்தால், நான் அவரை விசுவாசிக்கிறேன்” என்றாள். அதன் பேரிலான அவளுடைய விசுவாசத்திற்காக அவர் அக்கறை கொண்டிருந்தார், எனவே அவர் திரும்பி அவளை கூட்டத்திலிருந்து அழைத்தார், அவளுடைய விசுவாசம் அவளை குணமாக்கினது என்று அவளிடத்தில் கூறினார். அந்த ஸ்திரீ அக்கறை கொண்டிருந்ததால் அவர் விசாரித்தார். 145 லேகியோன் என்றழைக்கப்பட்ட நரம்பியல் நோயாளி, எதிர்ப்பின் கீழ், அந்த பிசாசின் கல்லறைகளின் கீழிருந்து அசைந்து, இயேசுவை சந்திக்க புறப்பட்டுச் சென்று, சாஷ்டாங்கமாய் விழுந்து, போதுமான அளவு அக்கறை கொண்டபோது, அவர் அக்கறை காட்டினார். எப்பொழுது, லேகியோன்! அவரைச் சந்திக்க லேகியோன் தானாகவே அங்கு வந்திருக்கவில்லை யென்றால், அந்தப் பிசாசுகள் ஒருபோதும் வெளியே வந்திருக்காது. அவன் அந்த முயற்சியை மேற்கொள்ள போதுமான அக்கறை கொண்டிருந்தபோது, அது அவனுடைய விசுவாசத்தில் நிலைநிற்க, இந்த லேகியோன் பிசாசுகளை அவனை விட்டு துரத்த இயேசு போதிய அக்கறை கொண்டிருந்தார், அவனுடைய நரம்பு தளர்ச்சியும் போய்விட்டது. நீங்கள் கவலைப்படும்போது, அவரும் அக்கறை கொண்டார். ஆம், ஐயா. நீங்கள் கவலைப்படும்போது அவரும் அக்கறை கொள்ளுகிறார்.

92146 இப்பொழுது, அந்த பார்வையற்ற மனிதன் எரிகோ வாசலில், “ஓ இயேசுவே!” என்று கூக்குரலிட்டான். ஒரு யூதன், கட்டுப்பாடான, ஜெப ஆலயத்தில் நல்ல நிலையில் இருந்தான். ஆனால் அவன், “அந்த சத்தம் எதனால் உண்டாகிறது?” என்று கேட்டான். அவர்கள், “நாசரேயனாகிய இயேசு, ஒரு தீர்க்கதரிசி கடந்து போகிறார்” என்றனர். 147 “இயேசுவே, தாவீதின் குமாரனே!” என்றான். ஓ, அது அவனுடைய போதகருக்கும், அருகில் நின்ற குருமார்களுக்கும், அது என்ன ஒரு கடிந்து கொள்ளுதலாய் இருந்தது. ஆனால் அவன் போதகரோ, பாதிரியாரோ அல்லது வேறு எவருமே என்னக் கூறினாலும் கவலைப்படவில்லை, அவன் ஆர்வங்கொண்டவனாயிருந்தான்! அவன் தன்னுடைய பார்வையைப் பெற்றுக்கொள்ள போதுமான அக்கறை கொண்டிருந்தான், எனவே அவன் கூப்பிட்டான்! அந்த குருடான மனிதன் ஆயத்தமாயிருந்து, கூப்பிட போதிய அக்கறை கொண்டிருந்தபோது, இயேசு அவனை சுகப்படுத்த போதிய அக்கறை கொண்டிருந்தார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்! நீங்கள் கவலைப்படும்போது அவர் அக்கறை கொள்ளுகிறார், ஆனால் நீங்கள் முதலில் அக்கறை கொள்ள வேண்டும். நீங்கள் அக்கறை கொள்கிறீர்கள் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும்.

93148 ஆறு புருஷர்களோடு இருந்த ஒரு ஸ்திரீ, பகுத்தறிதலின் மேசியாவின் அடையாளத்தை அடையாளங்கண்டு, அறிந்துகொண்டதால், அவர் ஒவ்வொரு பாவத்தையும் மன்னித்து, அவள் மொண்டு கொள்ள வராத தண்ணீரை அவளுக்குத் தருமளவிற்கு போதிய அக்கறை கொண்டார், ஏனென்றால் அவள் அடையாளம் கண்டு கொண்டாள். அவள், “ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன்” என்றாள். அவளோடுள்ள கோளாறு என்னவென்பதை அவர் அவளிடத்தில் கூறியபோது, அவர்கள், அந்த நாள் வருவதற்காக அவள் காத்துக் கொண்டிருந்தாள், அவள் முழுவதுமே சபைக் குழுவோடு இருந்ததால், அதைச் செய்ய அவளுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவளோடுள்ள கோளாறு என்னவென்பதை அவளிடத்தில் கூற முடிந்த ஒரு மனிதனை அவள் கண்டபோது, அவள், “ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன். மேசியா வரும்போது அவர் இந்தக் காரியங்களைச் செய்வார் என்று நான் அறிவேன்” என்றாள். அவர், “நானே அவர்” என்றார். 149 அது போதும்! அவள் அக்கறை கொண்டாள். அவள் தன்னுடைய தண்ணீர் குடத்தை விட்டுவிட்டு, அவள் நகரத்திற்குள் சென்று, அவள், “நான் செய்திருக்கிற காரியங்களை என்னிடத்தில் கூறின ஒரு மனிதனை வந்து பாருங்கள். இது மேசியா அல்லவா?” என்றாள். அவள் ராகாப்பைப் போன்றிருந்தாள், அவள் முழு நகரத்தையும் பீதியடையச் செய்யும் வரை அவள் அக்கறை கொண்டிருந்தாள். ரூபகாரப்படுத்தப்பட்ட வேதவாக்கியத்திற்கு, ஏதோ ஒன்று செய்யப்பட்டிருந்த காரணத்தால் அவள் அக்கறை கொண்டாள் நிறைவேற்றப்பட்டு, உறுதி செய்யப்பட்டதற்கு, அவள் அக்கறை கொண்டாள்! அந்த மனிதர்கள் என்ன கூறினார்கள் அல்லது வேறு யாரோ ஒருவர் என்ன கூறினார் என்பதைக் குறித்து அவள் கவலைப்படவில்லை; அவள் அதைக் கண்டாள், அது சம்பவித்தபோது அவள் அங்கிருந்தாள். அவள் அக்கறை கொண்டாள். அவள் தன்னுடைய ஜனங்கள் ஒவ்வொருவரிடமும் சொல்லுமளவிற்கு அக்கறை கொண்டிருந்தாள், அது முழு நகரமும் இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் கொள்ளச் செய்தது. அவளும் அக்கறை கொண்டாள், அவரும் அக்கறை கொண்டார். நிச்சயமாக, அவர் அக்கறை கொண்டார்.

94150 இயேசு, அவர் கூறின அதே காரியங்களை நிறைவேற்ற இன்றைய செய்திக்காக போதிய அக்கறை கொண்டிருந்தார், அவர் மரித்து உயிர்த்தெழுந்து பரிசுத்த ஆவியினாலே அவர்களை அனுப்பும் வரை, அவர் இன்னமும் உயிரோடிருக்கிறார் என்பதை இன்றைக்கு அவருடைய ஊழியத்தை காண்பிக்கும்படியாக, தேற்றரவாளனாகிய. அவர் போதுமான அக்கறை கொண்டிருந்தார். நாம் அதைக் குறித்து அக்கறை கொள்ளமாட்டோமா? அதுதான் காரியம், நாம் கவலைப்படமாட்டோமா? அவர் இந்த ஊழியத்திற்காக மரித்தார். இந்தக் காரியங்களை காண்பிக்க பரிசுத்த ஆவியானவர் இந்நாளில் இங்கே இருப்பதற்காக அவர் மரித்தார். அவர் உங்களுக்காக அக்கறை கொண்டிருந்தார். அவர் அதை இங்கே கொண்டு வர அக்கறை கொண்டிருந்தார். அவர் அறிக்கையை அளிக்க அக்கறை கொண்டிருந்தார். அவர் உங்களை நேசித்த காரணத்தால் அவர் அக்கறை கொண்டார். பரிசுத்த ஆவியை இதற்காக அனுப்பும்படியாக, இந்த ஊழியத்தை இன்றைக்கு செய்ய அவர் போதுமான அக்கறை கொண்டிருந்தார். 151 அந்தவிதமாகவே அவர் அந்நாளில் அக்கறை கொண்டிருந்தார் என்பதை அவர் நிரூபித்தார், ஏனென்றால் அவர் என்னவாயிருப்பார் என்று தேவன் கூறினதை ரூபகாரப்படுத்தவே அவர் வந்தார். அந்தக் காரணத்தினால்தான் அந்த ஸ்திரீ அவரை அடையாளம் கண்டு கொண்டாள். அவள், “மேசியா வரும்போது, அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதை நான் அறிவேன். மேசியா வரும்போது, அவர் இந்தக் காரியங்களை எங்களுக்குச் சொல்லுவார்” என்றாள். பாருங்கள், அவர் தேவனுடைய வார்த்தையை அவளுக்கு ரூபகாரப்படுத்தும்படியாக அதைக் குறித்து போதுமான அக்கறை கொண்டிருந்தார். ஆமென்.

95152 இப்பொழுது அதே பரிசுத்த ஆவியின் மூலம் அவர் இன்னமும் மேசியாவாயிருக்கிறார் என்பதை நம் மூலமாக நிரூபிக்கும்படியாகவும், அதேவிதமாகவே அதை நிரூபிக்கும்படியாக, அதாவது அறிவாற்றல் கொண்ட கருத்தின் நாளில், அவர் பரிசுத்த ஆவியை அனுப்பினார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். இப்பொழுது கேள்வி என்னவெனில், நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது இங்குள்ளது. அது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதை விசுவாசிக்க போதுமான அக்கறை கொண்டுள்ளீர்களா? நீங்கள் தவறாயிருக்கிறீர்கள் என்று உங்களுடைய பாவங்களை அறிக்கையிட நீங்கள் போதிய அக்கறையுள்ளவராயிருக்கிறீர்களா? உங்களுடைய அவிசுவாசத்தை அறிக்கையிட்டு, அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அதை ஏற்றுக் கொள்ள நீங்கள் போதுமான அக்கறை கொண்டிருக்கிறீர்களா? அவர் மரித்து, மீண்டும் உயிரோடெழுந்து, அதை உங்களிடத்தில் கொண்டு வர போதுமான அக்கறை கொண்டிருந்தார். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள போதுமான அக்கறை கொண்டுள்ளீர்களா. அது நோவாவின் காலம் முதற்கொண்டு, ஆதியாகமம் முதற்கொண்டு எல்லா வழிகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றே நான் நினைக்கிறேன். அவை யாவற்றையும் அறிந்து கொள்ள நமக்கு நேரமில்லை. ஆனால் அவர் அக்கறை கொண்டுள்ளார், என்பதை நீங்கள் பாருங்கள், நீங்கள் அக்கறைப்படும்படிக்கு, நீங்கள் ஒரு வழியைப் பெற்றுக்கொள்ளும்படிக்கு அவர் மரித்தார். அவர் அந்தவிதமாக கொண்டு வந்திருக்கிறார். அந்த வழி என்ன செய்யும், செய்யும் என்று அவர் சரியாகச் சொன்னார், இப்பொழுது அவர் இங்கே அது சத்தியம் என்பதை இன்றைக்கு காண்பித்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த பொல்லாத நேரத்தில், உங்களுடைய முழு இருதயத்தோடும், அதை விசுவாசிக்கும்படியாக நீங்கள் அதைக் குறித்து போதுமான அக்கறை கொண்டிருக்கிறீர்களா?

96153 நீங்கள் ஒரு ஜெபவரிசையை வந்தாலும் அல்லது அது என்னவாயிருந்தாலும், அது அதுவல்ல, நீங்கள் அக்கறை கொள்ளுகிறீர்களா? உங்கள் கவலைகளை அவர் மீது வைத்துவிடுங்கள், அவர் உங்களுக்காக அக்கறை கொள்கிறார். அதைக் குறித்து உத்தமமாய் இருங்கள். நீங்கள் உத்தமமாய் இருக்க போதிய அக்கறை காட்ட வேண்டும், ஏனென்றால் அவர் கவலைப்படுகிறார் என்று ரூபகாரப்படுத்தப்பட்ட தம்முடைய வார்த்தையினால் அவர் நிரூபித்திருக்கிறார். அவர் அதை அனுப்புவதாக வாக்குப்பண்ணினார், அவர் அதை செய்துவிட்டாரே! அவர் வார்த்தையில் வாக்குத்தத்தம் செய்துள்ளார், இதோ அது உள்ளது! அவர் கவலைப்படுகிறார், இப்பொழுது உங்களைக் குறித்து என்ன? இது, அடுத்ததாக நீங்கள் கவனிக்க வேண்டும். 154 அவர் போதிய அக்கறை கொண்டிருந்தார், உங்களுக்காக ஒவ்வொரு சத்துருவையும் ஜெயங்கொள்ளும்படிக்கு அவர் போதுமான அக்கறை கொண்டிருந்தார், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உத்தமமாய் இருந்து, அதை விசுவாசிக்க வேண்டும். அவர் மரணத்தை ஜெயித்தார். நான் ஜெயிப்பதற்கு மரணம் ஒன்றுமில்லை; அது ஏற்கனவே ஜெயங்கொள்ளப்பட்டுவிட்டது. சுகவீனம் நான் ஜெயிப்பதற்காக அல்ல; அது கிறிஸ்து ஜெயங்கொள்ள வேண்டியதல்ல; அது ஏற்கனவே ஜெயங்கொள்ளப்பட்டுவிட்டது. நான் அதை விசுவாசிக்க போதுமான அக்கறை கொள்ள வேண்டியதாயுள்ளது. வேறு யாரோ ஒருவர் உங்களிடம் கூறியுள்ளதைக் குறித்து நீங்கள் பயப்படுகிறீர்களா? மருத்துவரின் நோயறிதலைக் குறித்து நீங்கள் பயப்படுகிறீர்களா? சபையானது உங்களிடத்தில் என்னக் கூறும் என்று நீங்கள் பயப்படுகிறீர்களா? நீங்கள் பிசாசினண்டையில், பாதத்தில் நிற்க பயப்படுகிறீர்களா? “நான் என்னுடைய பாவங்களை அறிக்கையிட்டிருக்கிறேன், நான் எல்லாவற்றையும் தள்ளி வைத்திருக்கிறேன். நான் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்திருக்கிறேன். கர்த்தாவே, இதோ நான் இருக்கிறேன். எனக்குள் ஒரு அக்கறையை சிருஷ்டியும். நான்…நீர் எனக்காக அக்கறை கொண்டீர், நானும் உமக்காக அக்கறை கொண்டுள்ளேன்” என்று கூறுங்கள்.

97155 அந்த அழகான பழைய பாடலை நினைத்துப் பார்க்கிறேன், “அவர் உங்களுக்காக விசாரிக்கிறார். சூரிய வெளிச்சங்கள் மூலமாகவோ அல்லது நிழல்களினூடாகவோ, அவர் உங்களுக்காக விசாரிக்கிறார்.” நாம் இப்பொழுது நம்முடைய தலைகளை வணங்குவோமாக, நாம் இனிமேல் தொடர்ந்து செல்ல முடியாது. அவர் உங்களுக்காக விசாரிக்கிறார், அவர் உங்களுக்காக விசாரிக்கிறார்; சூரிய வெளிச்சத்தினூடாகவோ அல்லது நிழலினூடாகவோ, அவர் உங்களுக்காக விசாரிக்கிறார். நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, நம்முடைய இருதயத்தோடும், நாம் அதை அவருக்குப் பாடுவோமாக. அவர் விசாரிக்கிறார்… அவர் என்ன செய்திருக்கிறார் என்று நாம் பார்ப்போம். அவர் உங்களுக்காக விசாரிக்கிறார், சூரிய வெளிச்சத்தினூடாகவோ அல்லது நிழலினூடாகவோ, அவர் உங்களுக்காக விசாரிக்கிறார். அவர் விசாரிக்கிறார்… இப்பொழுது, நீங்கள் கவலைப்படுவீர்களானால், நீங்கள் அதைப் பாடுகையில் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். அவர் உங்களுக்காக விசாரிக்கிறார்; சூரிய வெளிச்சத்தினூடாகவோ அல்லது நிழலினூடாகவோ, அவர் உங்களுக்காக விசாரிக்கிறார்.

98156 பரலோகப் பிதாவே, இந்த வேளையில் பிற்பகலில், நாங்கள் எங்களுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து அறிக்கை செய்து கொண்டிருக்கிறோம், நீர் எப்பொழுதும் உம்முடையவர்களுக்காகவே அக்கறை கொண்டிருக்கிறீர் என்பதை வார்த்தையினால் நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் கர்த்தாவே, தொல்லையென்னவெனில், நாங்கள் கவலைப்படுகிறோமா? நாம், “நான் ஒரு மருத்துவர் பட்டம் அல்லது—அல்லது எல்.எல்.டி பட்டம் பெற்றுள்ளேன்” என்று கூறும்படியான கல்வியைப் பெற விரும்புகிறோமா? அது மருந்துச்சீட்டை அறிந்துகொள்வதாகும், அது அதை எடுத்துக் கொள்ளவில்லை. 157 தேவனே, நாங்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் துயரங்களை எங்களுடைய சொந்த இருதயங்களுக்குள்ளாக எடுத்துக்கொண்டு, அவருடைய நாமத்தினிமித்தம் வரும் நிந்தைக்கு நாங்களும் கூட அவதியுற வேண்டும் என்றும், நாங்கள் பாடுபட வேண்டும் என்றும் உணரும்படியாக, அவருடைய பாடுகளை எங்கள் மேல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இன்றைக்கு நான் ஜெபிக்கிறேன். நாங்கள் பண்டைய சீஷர்களைப் போல் திரும்பி, அவருடைய நாமத்தின் நிந்தையைச் சுமக்கும்படிக்கு, நாங்கள் சிலாக்கியமானவர்களாக எண்ணப்பட்டதற்காக களிகூருவோமாக. பிதாவே, இதை அருளும். 158 கர்த்தாவே வியாதியஸ்தர் மேல் கரங்களை வைத்து, நான் ஜெபிக்கப் போகிறேன். அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கிறார்கள், அவர்களில் அநேகர், அநேகர் ஜெபிக்கப்படப் போகிறார்கள், ஜெப அட்டைகளை வைத்திருக்கிறார்கள். இங்குள்ள சிலர் ஜெப அட்டைகளைப் பெற சரியான நேரத்தில் வரவில்லை. ஆனால் கர்த்தாவே, அவர்கள்—அவர்கள்—அவர்கள் விசுவாசிக்கப் போகிறார்கள். அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தினது, முழு சபையுமே எனக்கு காண்பித்ததுபோல் இருந்தது. அவர்களில் அநேகர் சுகவீனமாயிருக்கிறார்கள். கர்த்தாவே, அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையினால் உம்முடைய தெய்வீக பிரசன்னத்தை உணருகிற இந்த உருமால்கள் இங்கே கிடக்கின்றன, கர்த்தாவே, அவர்களை சுகப்படுத்தும். அவர்களுடைய வேண்டுகோளுக்கு பதிலளிக்கும்படி அருள்புரியும்.

99159 இப்பொழுது உருமால்களிலிருந்து, கூட்டத்தார் வரை, அங்கே உட்கார்ந்து அவதியுற்றுக் கொண்டிருக்கிற மானிட வர்க்கம் வரை. ஓ, கர்த்தருடைய பிரசன்னம், பிதாவே, அது வந்து அவர்கள் எல்லோரையும் சுகப்படுத்தட்டும். கர்த்தாவே, இந்தக் காலையில் நாங்கள் அறிக்கை செய்யும்போது…தெய்வீக கிருபையில் நீர் இருப்பீரா? உம்முடைய ஊழியக்காரனாகிய நான் ஒரு இயலாமையை அறிக்கை செய்கிறேன். கர்த்தாவே, நான் உமக்கு ஒரு தகுதியாக அளிக்கக்கூடிய ஒரு காரியமும் கூட என்னிடம் இல்லை. நாங்கள் தகுதியற்றவர்கள். கர்த்தாவே, எங்களில் எவராலும் அதைச் செய்ய முடியாது. நாங்கள் கேட்கப்போகும் காரியங்களுக்கு நாங்கள் பாத்திரவான்கள் அல்ல. ஆனால், கர்த்தாவே, இயேசுவானவர் புறப்பட்டுச் சென்று, மகிமைக்குள்ளாக ஏறினார் என்பதையும், அவர் வந்து எங்களை தம்மிடம் ஏற்றுக் கொள்ள ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்துகிறார் என்பதையும் நாங்கள் அறிவோம். அவர் எங்களுக்கு ஒரு தேற்றரவாளனை அனுப்புவதாகவும், அது பரிசுத்த ஆவியானவராகவும், அவர் தம்முடைய ஊழியத்தைச் செய்து, எங்களோடு என்றென்றைக்கும் நிலைத்திருப்பார் என்றும் அவர் எங்களிடம் சொன்னார். 160 ஓ பரிசுத்த ஆவியே, தேவனுடைய ஆவியே, இந்தக் காலையில் எங்கள் மேல் புதியதாக வந்து, உம்முடைய பிரசன்னத்தை ரூபகாரப்படுத்தும், கர்த்தாவே, நீர் இங்கே பூமியின் மேல் சஞ்சரித்தபோது செய்த அதே விதமாகவே, இந்தக் கடைசி நாட்களில் உம்முடைய வார்த்தையை ரூபகாரப்படுத்த நீர் இங்கே இருக்கிறீர் என்பதை இந்தக் கூட்டத்தார் அறிந்துகொள்ளும்படியாகவும், “லோத்தின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்” என்பதை நிரூபிக்கவும், கர்த்தாவே, நாங்கள் எங்களுடைய அறிக்கைகளோடு எங்களையே உம்மிடத்தில் சமர்ப்பிக்கையில், நாங்கள் இதைக் கேட்கிறோம், இது உம்முடைய கனமும் மகிமையுமாகும். கர்த்தாவே, உம்முடைய இரத்தத்தினால் எங்களை சுத்திகரியும். வார்த்தையின் தண்ணீரினால் எங்களைக் கழுவி, இரத்தத்தினால் எங்களை சுத்திகரியும். கர்த்தாவே, அவிசுவாசமுள்ள உலகத்திற்கு, இந்தக் காலையில் வாசிக்கையில் பேதுரு கூறினதுபோல, “உதாரணங்களாக” எங்களை அளியும். நாங்கள் இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

100161 நான் இப்பொழுது அந்த சகோதரியிடம்…இசைப் பேழையை, சற்று நேரம் இசைக்கும்படி கேட்கப் போகிறேன். இன்றைக்கு நாம் சற்று தாமதமாக இருக்கலாம், ஆனால், ஓ, நான் அடிக்கடி வருவதில்லை. எங்களோடு பொறுமையாயிருங்கள், ஒவ்வொருவரும் இப்பொழுது ஒரு சில நிமிடங்கள் அப்படியே தரித்திருந்தால், நாங்கள் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கப் போகிறோம். பில்லி, பில்லி பால், அவன் இங்கே எங்கே இருக்கிறான்? நீங்கள் ஜெப அட்டைகளை எங்கே கொடுத்தீர்கள்? அது என்னவாயிருந்தது? பி, ஒன்று முதல் நூறு வரை. அவர் நமக்கு பகுத்தறிதலை அளிப்பாரா என்று நாம் ஒரு சில பி ஜெப அட்டைகளை எடுத்துப் பார்ப்போம். அது எப்படி? அவர் இங்கே நம்மோடு இருக்கிறாரா என்று பாருங்கள். அவரிடத்தில் கேளுங்கள், அவர் அதைச் செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் பிரசங்கித்திருக்கிறேன், நான்—நான் அபிஷேகம் பண்ணப்பட்டவனாயிருந்தேன், ஆனால் இப்பொழுது நான் பிரசங்கித்து முடித்துவிட்டேன், நீங்கள் பாருங்கள்.

101162 நாம் ஜனங்களை எழும்பி நிற்கச் செய்வோம். பாருங்கள், எப்படியாயினும் நாம் அவர்கள் எல்லோருக்காகவும் ஜெபிக்கப் போகிறோம், எண் ஒன்றிலிருந்து துவங்குவோம். யார் பி, எண் ஒன்றை வைத்திருக்கிறது? ஜெப அட்டை வைத்திருப்பவர், எழும்பி நில்லுங்கள். இல்லை, நான் அவர்களை இங்கு கொண்டு வரப் போகிறேன், அவர்கள் இந்த நடைபாதையிலிருந்து வெளியே வருவார்கள். பி, எண் ஒன்று என்று இருக்கட்டும், யார் அதை வைத்திருக்கிறார், ஜெப அட்டை எண் ஒன்றா? அது கட்டிடத்தில் இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா? சரி, நாம் துவங்குவோம்…ஓ, பெண்மணியே, நான் வருந்துகிறேன். சரி, சரி. பி, எண் இரண்டு, அப்படியானால் நாம் ஏற்கனவே ஒன்றிலிருந்து துவங்கியிருந்தால் நலமாயிருக்கும். பி, எண் இரண்டு. யார் அதை வைத்துள்ளது, நாங்கள் அதை காணும்படியாக நீங்கள் உங்களுடைய கரத்தை இந்தவிதமாக உயர்த்துவீர்களா? பெண்மணியே, இங்கே வாருங்கள். மூன்று, யார் மூன்று? இப்பொழுது நம்முடைய வரிசையை சுவற்றிற்கு கீழே கொண்டு செல்வோம், நாம் நகர்ந்து செல்வோம், அல்லது அந்த வழியாக எங்காவது திருப்புவோம். எனவே சரி, ஜெப அட்டை எண் மூன்று, யார் வருவார்? இந்தப் பெண்மணி இங்கே வருகிறாளா? நான் உங்களுடைய கரத்தைக் காணவில்லை, சகோதரியே, என்னை மன்னிக்கவும். எண் நான்கு, ஜெப அட்டை எண் நான்கை உடையவர் யார்? நீங்கள் யார் என்பதை நான் காணும்படியாக நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? அங்கே பின்னால் உள்ள மனிதன், கருப்பு நிற சகோதரன், ஐயா, எண் நான்கு, நீங்கள் இங்கே வருவீர்களாக. எண் ஐந்து, யார் எண் ஐந்து? அங்கே பின்னால் உள்ள மனிதர், நீங்கள்—நீங்கள் விரும்பினால், நீங்கள் இங்கு வருவீர்களா? எண் ஆறு, ஜெப அட்டை ஆறை வைத்திருப்பவர், நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? இங்கே, சரி, ஐயா, ஆறு. ஏழு. இப்பொழுது, இது உங்களை கூட்டமாக திரளாமல் தடுக்கச் செய்யும். ஏழு, சரி, ஏழு, இங்கே வாருங்கள். இப்பொழுது எண் எட்டு, நீங்கள்…ஐயா, நீங்கள் வருவீர்களா? எண் ஒன்பது. சரி, ஐயா. எண் பத்து. சரி, சிறு பையன்.

102163 நாம் அதை நினைத்துக்கொண்டிருக்கையில், மிகவும் இனிமையான காரியம், நான் அங்கே உள்ளே வந்தபோது, ஒரு சிறு பையன் அதைக் குறித்து சிந்திக்க கிட்டத்தட்ட அது என்னைக் கொல்லுகிறது, சற்று முன்னர் அங்கு நின்றிருந்த ஒரு சிறு பையன், “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் எனக்காக ஏதாவது செய்வீர்களா?” என்று கேட்டான். ஏறக்குறைய உருவத்தில் இந்த சிறு பையனைப் போன்றே இருப்பான். நான், “மகனே, அது என்ன?” என்று கேட்டேன். 164 அவன், “என் தாயாருக்காக ஜெபியுங்கள்” என்றான். மேலும், “அவள் தேவனுடைய நாமத்தை வீணாக கூறுகிறாள், அவள் அப்படிப்பட்ட ஒரு மோசமான வாழ்க்கையை உடையவளாயிருக்கிறாள்” என்றான். நான், “நீ எங்கே வசிக்கிறாய்? இங்கே நகரத்திலா?” என்று கேட்டேன். அதற்கு, “ஆம், ஐயா” என்றான். 165 அவன் தன்னுடைய தாய் ஒரு நல்ல பெண்ணாக இருக்க வேண்டும் என்று விரும்பினான். மேலும் “ஒரு பிள்ளை அவர்களை வழி நடத்தும்” என்று ஏசாயா கூறினதில் வியப்பொன்றுமில்லை.

103166 எண் பத்து எண், அது எண் பத்து அல்லவா? சரி, எண் பதினொன்று. சரி, எண் பன்னிரெண்டு, எண் பன்னிரெண்டு. சரி, எண் பதின்மூன்று, பதினான்கு. சரி, பதினைந்து. பதினைந்து, நான் அதைப் பார்க்கவில்லை, எண் பதினைந்து. பதினாறு. சரி, ஐயா, நீங்கள் விரும்பினால், அந்த வழியாக வாருங்கள். பதினாறு, பதினேழு, பதினெட்டு. பதினெட்டு, நான் அதைப் பார்க்கவில்லை. சரி, பெண்மணி, அல்லது சகோதரி, பதினெட்டு. சரி, இப்பொழுது அந்தப் பெண்மணியே, உனக்கு விருப்பமானால், அந்த வழியாகப் போ. இப்பொழுது பாருங்கள், ஜெப வரிசையாக, அவர்கள் ஒரு நேரத்தில் நிற்க அதுவே போதுமானதாயுள்ளது. 167 ஜெப வரிசை குறையத் துவங்குகையில், பாருங்கள், அப்பொழுது மேடையிலிருந்து பில்லி பால் அல்லது இன்னும் சிலரை… சகோதரன் நெவில், சகோதரன் நெவில், சற்று கழித்து சகோதரன் நெவில் அவர்களை, நீங்கள் அவர்களை காணும்போது… இப்பொழுது, நீங்கள் சகோதரன் நெவில் ஜெப வரிசை வருவதைக் காணும்போது…அவர் இந்தவிதமாக சைகை செய்வார், ஏனென்றால் நான் பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்கப் போகிறேன்…

104168 இப்பொழுது, இந்த மனிதன், ஐயா, நீங்கள் சக்கர நாற்காலியில், ஒரு ஜெப அட்டையை வைத்திருக்கிறீர்களா? அவர்—அவர்—அவர் தன்னுடைய ஜெப அட்டையை வைத்திருந்தார். சரி, இப்பொழுது நீங்கள் அவரை ஜெப வரிசையில் கொண்டு செல்லலாம். இப்பொழுது, உங்களால் எழுந்திருக்க முடியாதபடி இங்கு—அதாவது—அதாவது வேறு யாராவது இருக்கிறார்களா? யாராவது அவர்களுக்கு உதவி செய்தால்…அவர்களுடைய—அவர்களுடைய நேரம் வரும்போது, பாருங்கள். இப்பொழுது, நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள், ஏறக்குறைய பதினெட்டு அல்லது இருபது இடத்தில் நான் விட்ட இடத்திலிருந்து துவங்குங்கள், அதன்பின்னர் நீங்கள் இருபத்தி ஒன்று, இருபத்திரெண்டில் துவங்குகிறீர்கள், நீங்கள் வரும்போது உங்களுடைய இடத்தை நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.

105169 இப்பொழுது நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அவர் எப்பொழுதுமே அக்கறை கொண்டிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் இப்பொழுது அக்கறை கொள்ளுகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர்—அவர் ஒரு காலத்தில் அக்கறை கொண்டிருந்தால், அவர் எப்பொழுதும் அக்கறை கொள்வார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது ஒவ்வொருவரும் உண்மையான பயபக்தியோடு, உங்களுடைய ஸ்தானத்தை வைத்து ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, கூட்டத்தில் உள்ள நீங்களும் கூட ஜெபியுங்கள். இப்பொழுது, அவர் எப்படி அக்கறை கொண்டார்? ஏனென்றால் எந்த மனிதனும் அல்லது எந்த தீர்க்கதரிசியும், அவரைப் போல அதற்கு மேல் அக்கறை கொள்ள முடியாது, வேறு எவரும் தேவனுடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கிரியையின் எல்லைகளுக்கு அப்பால் செல்ல முடியாது. அது சரியா? இப்பொழுது, எனக்கு கவலையில்லை, நீங்கள் ஜெப வரிசையினூடாக நூறு முறை வந்திருக்கலாம், ஆனால் இப்பொழுது நின்றுகொண்டிருக்கிற நீங்கள், உட்கார்ந்துகொண்டிருக்கிற நீங்கள், உங்களுடைய வாழ்க்கையில் பாவம், அவிசுவாசம் இருக்குமானால், அதை இப்பொழுதே அறிக்கை செய்யுங்கள். அது இல்லாமல் இங்கே உள்ளே வர தைரியம் கொள்ள வேண்டாம். நீங்கள்—நீங்கள் இங்கு வர முடிந்தால், ஒரு மனிதன் எவ்வளவுதான் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தாலும், நின்று கொண்டு உங்கள் மீது கைகளை வைத்தாலும், நீங்கள் அதை விசுவாசித்தால் ஒழிய, நீங்கள் நிச்சயமாகவே அதை இழக்க நேரிடும். நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். நீங்கள் அதை அறிக்கை செய்ய வேண்டும். நீங்கள் செய்ய வேண்டும். பாருங்கள், அப்படியானால் நீங்கள் இங்கே நோக்கிப் பார்ப்பீர்களானால், அங்கே எப்படி…நீங்கள் அந்த காட்சியைப் பெற்றுள்ளீர்கள் என்று நான் நம்புகிறேன். பார்த்தீர்களா? நீங்கள் தேவனுக்கு அளித்த வார்த்தையைக் காத்துக்கொண்டால், தேவன் உங்களுக்கு அளித்த தம்முடைய வார்த்தையை கைக்கொள்ளாமல் இருப்பது முற்றிலும் கூடாத காரியம். பார்த்தீர்களா? நீங்கள் அதை உண்மையாக விசுவாசித்தால், அதை நீங்கள் சந்தேகப்பட வைக்க முடியாது. காலம், இடம், வேறு எதுவுமே அதை சந்தேகிக்க வைக்க முடியாது. நீங்கள் அதை விசுவாசியுங்கள்: நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?

106170 இப்பொழுது, இப்பொழுது நான் இந்த ஜெப வரிசையை கீழே பார்க்கப் போகிறேன். எனக்குத் தெரிந்தமட்டில், இங்குள்ள இந்த மனிதனைத் தவிர, நான் அவரை அறிவேன்; எனக்கு தெரியும், எனக்கு ஜீன் ஸ்லாட்டரைத் தெரியும், எனக்கு அவரைத் தெரியும்; அதற்கு வெளியே…அவர்கள் எதற்காக—எதற்காக அங்கே நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறியேன். அவர்கள் எதற்காக அங்கே இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. தேவன் அறிந்திருக்கிறார். இப்பொழுது உங்களைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை நீங்கள் யாவரும் அறிந்திருப்பீர்களானால், அங்கே நின்று கொண்டிருக்கும் நீங்கள், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். இப்பொழுது, உங்களைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை இந்தக் கூட்டத்தில் உள்ள எத்தனைபேர் அறிவீர்கள், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். இப்பொழுது இயேசு கிறிஸ்து உங்களைக் குறித்து அறிந்திருக்கிறார் என்பதை எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்?

107171 எத்தனை பேர் இதைக் கூற விரும்புவீர்கள்; “இயேசு கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்டபோது, அவர் என்னை சுகப்படுத்தினார் என்று நான் என் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன்” என்று கூறுவீர்களா? அது உண்மை. பார்த்தீர்களா? இப்பொழுது, அவர் அதை ஏற்கனவே செய்திருந்தால், அப்பொழுது அதை ஏற்றுக்கொள்வது உங்களுடைய விசுவாசமாயுள்ளது. இப்பொழுது, அதைச் செய்ய அவர் போதிய அக்கறை கொண்டிருந்தார், ஒவ்வொரு சந்தேகத்தையும் தள்ளிவிட்டு, அதை விசுவாசிக்க நீங்கள் போதிய அக்கறை கொண்டீர்களா? அவர் உங்களை விசாரிக்கிறபடியால், உங்களுடைய கவலைகளை அவர் மீது வைத்துவிடுங்கள். 172 இப்பொழுது, நீங்கள் சுகவீனமாயிருந்தால், நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், பரிசுத்த ஆவியானவர் செய்திருக்கிற பல்லாயிரக்கணக்கான காரியங்களை நான் கண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அதை அறிவீர்கள்; வலிப்பு, மரித்துப்போனவர்களையும் கூட உயிர்ப்பித்தார்.

108173 ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன்னர் ஒரு மனிதன் இங்கே மேடையின் மேல், சரியாக நமக்கு முன்னால் கீழே விழுந்து மரித்தார். அவருடைய மனைவி இங்கே பதிவு செய்யப்பட்டஒரு செவிலியராக இருக்கிறார். அந்த மனிதன் நேராக கீழே விழுந்தார். அவர் இங்கே எங்கோ அமர்ந்திருக்கிறார். இதோ அவருடைய மனைவி இப்பொழுது இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், மேலும்—மேலும் அவர் இப்பொழுது இங்கே எங்கோ இருக்கிறார். ஆம், இதோ அவர் இங்கே நின்று கொண்டிருக்கிறார். கண்கள் பின்னோக்கிச் சென்று, இந்தவிதமாக இருட்டாகி, சரியாக…விழுந்தார், நான் கீழே சென்றேன். அவள் அவரை பரிசோதித்தாள், இருதய துடிப்பும் இல்லை, நாடித்துடிப்பும் இல்லை. நான் என்னுடைய கரங்களை அவர் மீது வைத்து (அவர் போய்விட்டார்) அவருடைய ஆவியை அழைக்க, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவர் உயிர்த்தெழுந்தார். பார்த்தீர்களா? பார்த்தீர்களா? 174 அது என்ன? அவரே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார். அது நானல்ல. அந்த தேற்றரவாளன் செயல்பட்டார், பரிசுத்த ஆவியானவர் எங்களுக்காக பரிந்து பேசுகிறார். பார்த்தீர்களா? நாம் அவரை ஏற்றுக்கொண்டிருக்கிறோம், இப்பொழுது பரிந்துபேசுவது அவரைப் பொறுத்ததாயுள்ளது. அப்படியானால் நான் எவ்வளவு…உங்களுடைய சித்தத்திற்கு எதிராக தேவனால் உங்களை இரட்சிக்க முடியுமா? நிச்சயமாக இல்லை. உங்களுடைய சித்தத்திற்கு எதிராக அவரால் உங்களை சுகப்படுத்த முடியாது. நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும்.

109175 இப்பொழுது, இது என்னவாயிருக்கும், அவரால் நிரூபிக்க முடிந்தால், இயேசு கிறிஸ்து இங்கே நம்மோடு இருக்கிறார் என்றும், இந்த தேற்றரவாளன் இயேசு கிறிஸ்து என்றும், தேவன் ஒரு தெய்வீக வரத்தைக் கொண்டு உங்களுக்குக் காட்ட அனுமதித்தால், அவர் வார்த்தையாயிருக்கிறார். “ஆதியிலே வார்த்தை இருந்தது.” அது சரியா? “வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்.” வேதம் எபிரேயர் 4-ல், “தேவனுடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறதாயுமிருக்கிறது” என்று கூறியுள்ளது. அது சரியா? இயேசு அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை, மேசியா என்பதை நிரூபிக்க அதைத்தான் செய்தார். ஓ, என்னே! நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லையா? மேசியா என்றால் என்ன? அபிஷேகம் பண்ணப்பட்டவர். என்ன அபிஷேகம் பண்ணப்பட்டவர்? அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை! “வார்த்தையானது மாம்சமானது.” அவரே அந்த அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையாயிருந்தாரே! சகோதரன் வேயில், உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள், அவர் அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையாயிருக்கிறார்!

110176 இப்பொழுது நீங்கள் உங்களை அவரிடத்தில் சமர்ப்பிக்கும்போது, அப்பொழுது நீங்கள் அறிந்துள்ளவைகளுக்கு அப்பால் அவர் உங்களை உபயோகிக்கிறார், அவர் இன்னமும் அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையாயும், இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறவராயும் இருக்கிறார். ஓ, எப்படி, எப்படி யாராவது சந்தேகிக்க முடியும்? அப்படியே விசுவாசியுங்கள். சந்தேகப்படாதீர்கள். இப்பொழுது அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிற நீங்கள், நான்—நான் இந்தக் காலையில் அந்தப் பொருளைப் பற்றி பேசினேன். ஒரு சிறிய ஸ்திரீ தான் ஜெப வரிசையில் வரப் போவதில்லை என்று கவலைப்பட்டபோது, ஒருக்கால், ஆனால் அவள் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள், அவர் திரும்பிப் பார்த்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இன்றைக்கு அது மீண்டும் செய்யப்பட முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆம். இப்பொழுது, நீங்கள் அதை எப்படி தொடுவீர்கள்?

111177 அவர் பிரதான ஆசாரியர் என்றும், இப்பொழுது ஒரு பிரதான ஆசாரியர் என்றும், நம்முடைய அறிக்கையின் பேரில் பரிந்துபேச, மகத்துவமான தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்று வேதம் கூறியுள்ளது. நாம் அவரை விசுவாசிக்கிறோம் என்பதை அறிக்கையிட்டு, நாம் பிரதான ஆசாரியரைத் தொட விரும்புகிறோம். நாம் அவரைத் தொடும்போது, அவர் எப்படி செயல்படுவார்? அவர் இங்கே பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இருக்கிறார். அதன்பின்னர் அவர் திரும்பவும் பேசி, சரியாக உங்களுக்கு கூறுவார். அது சரியா? இப்பொழுது நீங்கள் அதை விசுவாசித்து, உட்கார்ந்துகொண்டிருங்கள், அமைதியாயிருங்கள், பயபக்தியோடும் விழிப்புடனும் இருங்கள். இப்பொழுது, அவர் அதை மூன்று முறைகளாவது செய்தால், அது போதுமானதாயிருக்கும், அது போதுமானதாயிருக்கும், இல்லையா? மூன்று முறை, அவர் அதைச் செய்வாரேயானால். ஒன்று, இரண்டு, மூன்று, அவர் அதைச் செய்தால் நலமாயிருக்கும். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? 178 இப்பொழுது, நாம் ஜெபிக்கையில் சற்று நேரம். பாருங்கள், இது, நான்…இது இப்பொழுது சற்று வித்தியாசமான ஒரு காரியமாய் உள்ளது; பிரசங்கித்துக் கொண்டிருந்து, அதன்பின்னர் இதற்குத் திரும்பினேன். இப்பொழுது, இதற்காக நான் நீண்ட காலமாக கர்த்தரை நோக்கிக் கூப்பிடவில்லை, ஆனால் தேவனாகிய கர்த்தர் என்னுடைய இருதயத்தை அறிந்திருக்கிறார், அவர் உங்களுடைய வேண்டுகோளை அருளுவாராக. அவர் அதைச் செய்வார் என்று நான் விசுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.

112179 இப்பொழுது, இங்கே ஒரு ஸ்திரீ நிற்கிறாள், நாங்கள் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம். எனக்குத் தெரிந்தமட்டில், நான் என்னுடைய ஜீவியத்தில் அவளை ஒருபோதும் கண்டதேயில்லை. அவள் எங்காவது கூட்டத்தில் அமர்ந்திருக்கலாம் அல்லது ஏதோ ஒரு புத்தகத்தின் மூலம் என்னை அறிந்திருக்கலாம், ஆனால் பரலோகப் பிதா அறிந்திருக்கிறார், எனக்குத் தெரிந்தமட்டில், என் வாழ்க்கையில் நான் அவளை பார்த்ததில்லை. அவள் ஒரு அந்நியர். 180 இப்பொழுது, அவர் மாறாதவராயிருந்தால், இயேசு ஒரு ஸ்திரீயை கிணற்றண்டையில் சந்தித்தது போன்று இங்கே ஒரு மனிதனும் ஒரு ஸ்திரீயும் சந்திக்கின்றனர், அதைக் குறித்து நான் சற்று நேரத்திற்கு முன்பு பேசினேன். அவர் அவளுக்காக அக்கறை கொண்டார். இப்பொழுது, இந்த ஸ்திரீ ஒரு வேளை அந்த ஸ்திரீ இருந்த அதே காரியத்தில் குற்றவாளியாயில்லாதிருக்கலாம், ஆனால் ஏதோ தவறு உள்ளது. ஆனால் அவர் அந்த ஸ்திரீயைக் குறித்து எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறாரோ, அவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார். பாருங்கள், அவர் விசாரிக்கிறார். இப்பொழுது, அவள் அதைக் கண்டபோது, அவள் அதை அடையாளம் கண்டு கொண்டாள். இப்பொழுது இங்கே நாம் இருவருமே இந்த விதமாக நின்று கொண்டிருக்கிறோம். இப்பொழுது, நான் அவளை ஒருபோதும் கண்டதில்லை.

113181 இப்பொழுது, மகத்தான பரிசுத்த ஆவியானவர், காணக்கூடாதவர், இப்பொழுது விசுவாச புலன்கள் அவரை எனக்கு அறிவித்தால் நலமாயிருக்கும். அவர் விசுவாசத்தின் புலன்களைக் கொண்டு வந்திருக்கிறார், அவருடைய வார்த்தை அதை இந்த கடைசி நாட்களில் மிக நெருக்கமாக கொண்டு வந்துள்ளது அவர் அதைக் குறித்த புகைப்படத்தை அங்கே வைத்திருக்கிறார். அவர் அதை நம்முடைய புலன்களுக்கு மிக நெருக்கமாக கொண்டு வந்திருக்கிறார், அபிஷேகிக்கப்பட்டவர், தூரமாய்ச் சென்று, அவர் இங்கே உள்ளே வருவதையும், அந்த அக்கினி ஸ்தம்ப ரூபத்தில் சுற்றி அசைவதையும் கண்டிருக்கிறார். அவர் அவ்வாறில்லையா? இப்பொழுது அவர் இங்கிருக்கிறார், அவர் இங்கிருக்கிறார் என்பதை நான் அறிவேன். அவர் இங்கிருக்கிறார் என்று என் விசுவாசம் கூறுகிறது. இப்பொழுது அவர் செய்வதாக வாக்குப்பண்ணியிருந்தபடியே, பாருங்கள், இந்த ஸ்திரீயின் ஜீவியத்தை கிரகித்துக்கொள்ள அவரால் போதுமான அளவு தம்மை இங்கே வெளிப்படுத்த முடிந்தால் நலமாயிருக்கும். பரிசுத்த ஆவியானவர் அவர் செய்த அதே பணியை செய்வார்.

114182 இப்பொழுது நான், நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறபடியால், நான் காணும்படியாக ஒரு நிமிடம் உங்களிடத்தில் பேச விரும்புகிறேன். 183 கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீக்கு அவர் செய்ததுபோல, அவர், “எனக்கு தண்ணீர் கொண்டுவா” என்றார். உங்களுக்குத் தெரியும், அவர்…அவர்கள் உணவு அருந்தச் செல்வதைக் குறித்து அவர் அங்கே உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருந்திருக்கலாம், அப்பொழுது அவர்—அவர் அவளிடத்தில் ஒரு நிமிடம் பேச வேண்டியதாயிருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். பிதா அவரை அங்கே அனுப்பியிருந்தார். அவர் செய்ய வேண்டியதாயிருந்தது. அவர் எரிகோவிற்கு சென்று கொண்டிருந்தார்; அவர் மலையின் மேல் உள்ள சமாரியாவுக்குச் சென்றார். அவர் “அங்கே செல்ல வேண்டியதாயிருந்தது.” 184 பாருங்கள், எப்படியோ அல்லது வேறுவிதமாக, எனக்குத் தேவை இருந்தது, பிதா என்னை அரிசோனாவிலிருந்து இங்கே அனுப்பினார், நீங்கள் உள்ளே வாருங்கள். எனவே அவை யாவுமே ஒரே காரியமாகவே உள்ளன. எந்தக் காரியமும் தற்செயலாக சம்பவிக்கிறதில்லை, அவையாவும் ஏதோ ஒரு காரணத்தினால் சம்பவிக்கிறது. தேவனுடைய கிருபையே சரியானது.

115185 இப்பொழுது, உங்களை அறியாதவர்களாய், நீங்கள் உண்மையாகவே ஆரோக்கியமாக காணப்படுகிறீர்கள், மேலும் நீங்கள் சுகமளித்தலுக்காக இங்கே இல்லாமல் இருக்கலாம். அது வேறு ஏதோ காரியமாயிருக்கலாம். அது அன்பார்ந்த யாராகிலும் இருக்கலாம், அது வீட்டுப் பிரச்சனையாகவோ, நிதி சார்ந்ததாக இருக்கலாம். நான் அதை அறிந்து கொள்ள வழியே இல்லை, நீங்கள் அதை அறிவீர்கள். ஆனால் நீங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதை அவர் எனக்கு விளக்குவாரானால், அது உண்மையா அல்லது இல்லையா என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அப்பொழுது கூட்டத்தார் ஒரே இருதயத்தோடு விசுவாசிப்பீர்களா? இப்பொழுது நாங்கள் பேசுவதை நீங்கள் கேட்பீர்கள், அது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது, நாங்கள் இங்கே மேடையின் மேல் நின்று கொண்டிருக்கிறோம். 186 அந்தப் பெண்மணி, அவள் தன்னுடைய தலையை இந்தவிதமாக உயர்த்திருப்பதை நான் காண்கிறேன். அவளுக்கு ஒற்றைத் தலைவலி போன்ற தலைவலிகள் அவளை தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அது எல்லா நேரத்திலும் தொடர்ந்து வரும் தலைவலியாயுள்ளது. அது உண்மை. அது உண்மையானால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். பார்த்தீர்களா? அது உண்மை. மற்றொரு காரியம், அவளுக்கு உடல் வளர்ச்சியை பாதிக்கும் கழுத்தில் உள்ள சுரப்பிக் [தைராய்டு—ஆசி] கோளாறு உள்ளது, அவள் எப்படியும், அது—அது உங்களை தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறது, அவர் கூறுவது சரியே, அது ஒரு உடல் வளர்ச்சியை பாதிக்கும் கழுத்தில் உள்ள சுரப்பியாகும். அதன்பின்னர் நீங்கள் சிக்கல்களை உடையவர்களாயிருக்கிறீர்கள், உங்களோடு அநேக காரியங்கள் கோளாறாக உள்ளன; நரம்புத்தளர்ச்சி, நிலைகுலைவு, படபடப்பு, “நான் எங்கே நின்று கொண்டிருக்கிறேன் என்றும், நான் உள்ளே இருக்கிறேனா அல்லது வெளியே இருக்கிறேனா என்று சில சமயங்களில் ஆச்சரியப்படுவது.” அது உண்மை. அது உண்மை. இப்பொழுது, அவர் உங்களை அறிந்திருக்கிறார், நீங்கள் மறைந்திருக்க வேண்டுமானாலும், உங்களால் இப்பொழுது மறைக்க முடியாது. பார்த்தீர்களா? நீங்கள் யாரென்று அவரால் என்னிடம் கூற முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பாருங்கள், வயோலா, நீங்கள் வீடு திரும்புங்கள், இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?

116187 எனக்குத் தெரியாது. இயேசு கிறிஸ்து எல்லாக் காரியங்களையும் அறிந்திருக்கிறார். இவர் எனக்கு மற்றொரு அந்நியர். தேவன் நம் இருவரையும் அறிந்திருக்கிறார். நீங்கள் என்னை அவருடைய தீர்க்கதரிசி என்றும், அவருடைய ஊழியக்காரன் என்றும் விசுவாசிக்கிறீர்களா? இந்த வார்த்தையிலிருந்து நான் பிரசங்கித்துள்ள இந்தக் காரியங்கள் சத்தியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் எதற்காக இங்கே இருக்கிறீர்கள் என்று கர்த்தராகிய இயேசு என்னிடம் கூறினால், நீங்கள் என்னை அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசியுங்கள். அவர் உங்களுக்காக அக்கறை கொண்டுள்ள காரணத்தால் அவர் இதைச் செய்து கொண்டிருக்கிறார். அவர், அவருடைய அக்கறை உங்களுக்காக உள்ளது, அவர் அதை செய்து கொண்டிருக்கிறார், ஏனென்றால் அவர் உங்களுக்காக அக்கறை கொள்கிறார். அவர் வரிசையில் வந்துள்ள இந்த மற்றவர்களுக்காக அக்கறை கொண்டிருக்கிறார். அவர் அவர்களுக்காக அக்கறை கொள்கிறார். உங்களுக்கு தொல்லை, ஒரு விபத்து, மோட்டார் வாகன விபத்து போன்றவை உண்டாயிருந்தன. நீங்கள் அதைக் குறித்து முழுவதும் கலக்கமடைந்துள்ளீர்கள். அது உண்மை. உங்களுடைய மூட்டுகளில் உங்களுக்கு கோளாறு உள்ளது. அது உண்மை. அது சுகமடையப் போகிறது, நரம்புத்தளர்ச்சி உங்களை விட்டுப் போகப் போகிறது, எனவே அப்படியே வீட்டிற்குச் செல்லுங்கள், கர்த்தருக்கு நன்றி செலுத்தி, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று கூறுங்கள். “நீ விசுவாசிக்கக் கூடுமானால், எல்லாம் கூடும்.” சரி.

117188 நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எனக்கு உங்களைத் தெரியாது, நீங்கள் எனக்கு ஒரு அந்நியர். ஆனால் தேவன் உங்களை அறிந்திருக்கிறார். நீங்கள் இங்கிருப்பதற்கான காரணத்தை அல்லது உங்களைக் குறித்த வேறெதையாவது அவரால் என்னிடம் கூற முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? [அந்த ஸ்திரீ, “ஆம்” என்கிறாள்—ஆசி.] அங்கே மற்றொரு பெண்மணி இருக்கிறாள். நீங்கள் அவ்வாறு இருக்கவில்லையா, பாருங்கள். இல்லை, அதுவல்ல. அது நீங்கள், நீங்கள் யாரோ ஒருவருக்காக இங்கே இருக்கிறீர்கள். நீங்கள் யாருக்காகவோ இருக்கிறீர்கள், அது உங்களுடைய தாய். அது உண்மை. அவளுடைய மூட்டுகளில் கூட ஏதோ கோளாறு உள்ளது. அது உண்மை. அவள் இங்கே இல்லை. அவள் ஒரு இடத்திற்கு அருகில் இருக்கிறாள், எனக்கு ஆங்கிலேயர்களை போல தெரிகிறது, இங்கே எங்கோ இருக்கிறாள். நீங்கள், அது உண்மை, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி, தொடர்ந்து செல்லுங்கள். அவள் குணமடைந்துவிட்டாள். அப்படியே செல்லுங்கள். 189 அங்கே இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் மிகவும் வயதானவர், எனவே அவர் எங்கேயிருந்தார் என்று நான்—நான் யோசித்தேன். அது எங்கே—எந்த இடத்தில் உள்ளது என்று நான் பார்த்தேன். தேவனாகிய கர்த்தர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், அவருக்குத் தெரியாதா? அவரால் எல்லாக் காரியங்களையும் செய்ய முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஆமென். அவர் அற்புதமானவரல்லவா? நான் அவரை நேசிக்கிறேன். அவரே, அவரே என் ஜீவன். நான் பெற்றுள்ள யாவும் அவர்தான். எனக்கு வேண்டியதெல்லாம் அவர்தான். அப்படியே தொடர்ந்து செல்லுங்கள், ஐயா, அவர் உங்களை குணமாக்கினார்.

118190 அபிஷேகம் அந்தப் பெண்மணியைத் தொடர்ந்தது. அங்கே நரம்புத் தளர்ச்சியினால் தொல்லைப்படுத்தப்பட்ட மற்றொரு பெண்மணி உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், அவள் தன்னுடைய கரத்தின் அடியில் ஒரு சதை வளர்ச்சியைப் பெற்றுள்ளாள். அது சரியா? அப்பொழுது அவள் தன்னுடைய கரங்களை உங்கள் மீது வைத்தபோது, நீங்கள் ஒரு உண்மையான வினோதமான உணர்வை உணர்ந்தீர்கள். அது சரிதானே? அப்பொழுதுதான் அவர் உங்களை சுகப்படுத்தினார். நீங்கள் நலமாக இருக்கப் போகிறீர்கள். இயேசு கிறிஸ்து. அவள் எங்கே இருக்கிறாள் என்று பாருங்கள். ஜெபித்துக் கொண்டிருந்த ஸ்திரீ, அல்லது இங்கே, பாருங்கள். அவள் ஜெபித்துக் கொண்டிருந்தபோது, நான் அவளுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தபோது, என்ன சம்பவித்தது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? பார்த்தீர்களா? நான் வேறொரு ஸ்திரீயைக் கண்டேன், நான் அந்த பக்கம் நோக்கிப் பார்த்தேன். ஒரு பெரிய உணர்வு உண்டானது. அவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருக்க வேண்டும், ஏதோ ஒன்றை, அல்லது அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும், ஏனென்றால் அந்த ஸ்திரீ இங்கே இந்த ஸ்திரீயின் மேல் ஒரு உணர்வு கொண்டிருந்தாள். இந்த ஸ்திரீ கீழே சென்று அவளைத் தொட்டபோது, நான் நோக்கிப் பார்த்தபோது, அவள் அங்கே நின்று கொண்டிருந்தாள். நான் அந்தப் பெண்ணை என் வாழ்க்கையில் கண்டதேயில்லை. பரலோகத்திலுள்ள தேவன் அதை அறிந்திருக்கிறார். ஓ, என்னே! நீங்கள் ஏன் சந்தேகப்படுகிறீர்கள்?

119191 உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால், அவரால் உங்களிடத்திலிருந்து பழக்க வழக்கங்களை கூட எடுத்துப்போட முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவர் உங்களை முழுமையாக குணமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தொடர்ந்து செல்லுங்கள், நீங்கள் அதை இப்பொழுதே நிறுத்திவிடுவீர்கள், மற்றொன்றை ஒருபோதும் புகைக்க மாட்டீர்கள். போய், உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். தேவனில் விசுவாசமாயிருங்கள். சந்தேகப்படாதீர்கள். 192 நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நமக்கு இன்னும் மூன்று உண்டா? தேவனில் விசுவாசமாயிருங்கள். சந்தேகப்படாதீர்கள். அப்படியே விசுவாசியுங்கள். அவருடைய அபிஷேகம் இப்பொழுது இங்கே உள்ளது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆமென். சந்தேகப்படாதீர்கள். விசுவாசியுங்கள்! 193 நான் உங்கள் மேல் கரங்களை வைத்து விசுவாசிக்கப் போகிறேன். நீங்கள் என்னோடு விசுவாசிப்பீர்களா? [அந்த சகோதரன், “ஆம், ஐயா” என்கிறார்.—ஆசி.] இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த சகோதரன் சுகமடையட்டும். ஆமென். இப்பொழுது விசுவாசமாயிருங்கள், சந்தேகப்படாதீர்கள். அப்படியே ஒரு நிமிடம்.

120194 அங்கே பின்னால் கூட்டத்தில் ஏதோ ஒன்று சம்பவித்தது, என்னால் அதைக் காண முடியவில்லை, அது இங்கே பின்னால் உள்ளது. அது இப்பொழுது எனக்கு மறைக்கப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். இதோ அது உள்ளது. நான் அதை ஒரு நிழலில் காண்கிறேன். அது ஒரு மனிதன், அவன் நரம்புத் தளர்ச்சியினால் அவதியுற்றுக்கொண்டிருக்கிறார். அவருக்கு வலிப்பு நோய் உள்ள ஒரு பையன் இருக்கிறான். ஐயா, உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவ்வளவுதான். சரி, அங்கே அந்த பையன் மேல் உன்னுடைய கரத்தை வையுங்கள். அவன் சரியாகிவிடுவான். ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 195 நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவனால் அதிலிருந்து மறைக்க முடியும் என்று அந்த பிசாசு நினைத்தான், ஆனால் அவன் அதை செய்யத் தோல்வியுற்றான். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அந்தப் பிசாசு இன்னமும் எங்கோ நகர்ந்து கொண்டிருக்கிறது. ஓ, என்னே, கிருபையும், அக்கறையுமே! இங்கே எங்கோ மற்றொரு காக்காய் வலிப்பு நோய் உள்ளது. ஆம், அது இங்கே சரியாக உள்ளது. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். தேவன் உங்களை அறிந்திருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? திரு. நெல்சன் டி. கிராண்ட் அவர்களே, நீங்கள் சுகமடைந்து ஓஹையோவிற்கு திரும்பிச் செல்லலாம். அதுதான் உங்களுடைய பெயர். நீங்கள் விசுவாசித்தால், அந்தக் காரியங்கள் உங்களை விட்டு நீங்கிப்போகும், இனி ஒருபோதும் உங்களை தொல்லைப்படுத்தாது. நான் என் ஜீவியத்தில் அந்த மனிதனைக் கண்டதேயில்லை, அவனைக் குறித்து ஒன்றுமே எனக்குத் தெரியாது. இப்பொழுது உங்களால் அதை மறைக்க முடியாது, பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார்.

121196 நாம் நம்முடைய தலைகளை அப்படியே வணங்கி தேவனுக்கு துதி செலுத்துவோமாக. கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர். கர்த்தாவே, உம்முடைய கிருபை ஒருபோதும் தவறிப் போவதில்லை, அது எல்லா நேரத்திலும் மாறாததாயிருக்கிறது. உம்முடைய மகத்தான இரக்கமும் நன்மையும் ஜனங்கள் மேல் தங்கியிருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, நீர் வந்து உம்மை ரூபகாரப்படுத்தும்படிக்கு போதுமான அக்கறை கொண்டிருந்தீர். நீர் தேவனாயிருக்கிறீர். நீர் மகத்தான பரிசுத்தர், மகத்தான பரிசுத்த ஆவியானவர். இப்பொழுதும் கர்த்தாவே, அவர்கள் இங்கே கடந்து செல்லும்போது, இந்த ஜனங்கள் விசுவாசிப்பார்களாக, அவர்கள் ஒவ்வொருவரும் சுகமடைவார்களாக. உம்முடைய அபிஷேகம் இங்கிருக்கிறபடியால், நான் என்னையே இந்த உருமால்களில் கிடத்துகிறேன். பிதாவே, கர்த்தாவே, நீர் இந்த விண்ணப்பங்களை அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அதை அருளும், இங்கே கூட்டத்தில் இருக்கும் இருவருக்குமே. 197 தெய்வீக பிரசன்னத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் கடைசி நாளில் உம்முடைய ஜனங்களின் மத்தியில் எழும்பி நிரூபித்துக் காண்பிக்கும்படி இப்பொழுது நீர் போதுமான அக்கறை கொண்டிருந்தீர் என்று விசுவாசிக்க போதுமான அக்கறை கொள்வார்களாக! கர்த்தாவே, நீர் அவர்களை சுகப்படுத்த முடியாது, நீர் ஏற்கனவே செய்துள்ளதை செய்ய முடியாது. நீர் ஏற்கனவே அவர்களை சுகப்படுத்திவிட்டீர். இந்த காரியம் மாத்திரமே அவர்களை விசுவாசிக்கச் செய்ய முடியும். நாங்கள் எவ்வளவாய் அவிசுவாசத்தினூடாக தடுமாறினாலும், நீர் போதுமான அளவு அக்கறை காட்டுகிறீர், நீர் எங்கள் மத்தியில் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து உயிரோடு இருப்பதைக் காண்பிக்கும்படிக்கு இன்னமும் போதுமான அக்கறை கொண்டிருக்கிறீர். எங்களுடைய கவலைகளை உம்மிடத்தில் வைத்து, தெய்வீக பிரசன்னத்தில் உள்ள ஒவ்வொரு நபரும், அவர்களுடைய ஆத்துமாவும் சரீரமும் சுகமடைவதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக. ஆமென்.

122198 சரி, இந்த ஒரு வழியினூடாக வாருங்கள், ஜனங்கள் இந்த வழியாக வரட்டும். சரி, பில்லி அவர்களைப் பிரிவு பிரிவாக அழைப்பான். வேண்டாம், இப்பொழுது நாம் ஒருபோதும் பேசாதிருப்போமாக, அபிஷேகம் என் மேல் உள்ளது, பாருங்கள். இது இங்கே இருக்கையில் நான் அவர் மீது கரங்களை வைக்க விரும்புகிறேன். பார்த்தீர்களா? அந்த பகுத்தறிதலோடு என்னால் நிறுத்த முடியாது. நான் செய்தால்…இங்கே எத்தனைபேர் ஜெபிக்கப்பட இருக்கிறீர்கள், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். ஏறக்குறைய எழுபது சதவிகிதம். பார்த்தீர்களா? இப்பொழுதே மணி ஒன்றுக்கு பத்து நிமிடங்கள் உள்ளன. இதற்குப் பிறகு ஞானஸ்நான ஆராதனை நடைபெறவுள்ளது. என்னால் அதைச் செய்ய முடியாது, ஆனால் உங்களால் விசுவாசிக்க முடியும். அவர் தம்மைக் காண்பிக்கப் போதுமான அக்கறை உடையவராயிருந்தால், நீங்கள் விசுவாசிக்க போதுமான அக்கறை கொள்ள வேண்டும். அது சரியா? சரி, முழு கூட்டத்தாரும் ஜெபிக்கட்டும். பில்லி அல்லது சகோதரன் நெவில், ஒருவர், இந்த ஒலிபெருக்கியை உபயோகிப்பார்கள். அவர்கள் வரிசையினூடாக கடந்து செல்லும்போது, நாம் நம்முடைய தலைகளை தாழ்த்தி ஜெபிப்போமாக. இப்பொழுது, நான் இப்பொழுது உங்கள் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கப் போகிறேன், உங்கள் மீது கரங்களை வைத்து, நீங்கள் ஆட்கொள்ளப்பட்டிருக்கிற ஒவ்வொருவரும், இந்த அபிஷேகம் பண்ணப்பட்ட ஸ்தலத்தின் கீழ் நீங்கள் கடந்து செல்லும்போது, பொல்லாங்கு உங்களை விட்டு நீங்கும், நான் அதை அந்த விதமாக கூற வேண்டுமானால். அபிஷேகம் இங்கே உள்ளது போன்றே அங்கே பின்னால் உள்ளது. ஆனால் உங்களுடைய விசுவாசத்திற்காகவே நான் இதைக் கூறுகிறேன். இப்பொழுது ஒவ்வொருவரும் ஜெபியுங்கள்.

123199 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த சிறு பையன் சுகமடையட்டும். ஆமென். தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரன் சுகமடைவாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். கர்த்தாவே, நான் உம்முடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து கொண்டிருக்கிறேன். நீர், “விசுவாசிகளை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்றீர். விசுவாசிகள், எங்கள் இருவருமே. “அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்களேயானால், அப்பொழுது அவர்கள் சுகமடைவார்கள்.” இயேசுவின் நாமத்தில், நான் இந்த செயலைச் செய்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் இந்த சகோதரன் மீது கரங்களை வைக்கிறேன். ஆமென். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் நம்முடைய சகோதரனின் மேல், அவருடைய சுகமளித்தலுக்காக கரங்களை வைக்கிறேன். ஆமென். 200 சகோதரியே, அவர் உங்களுக்காக அக்கறை கொண்டிருக்கிறார். நான் கரங்களை மேல் வைக்க அக்கறை கொண்டுள்ளேன். நீங்கள் விசுவாசிக்க போதுமான அக்கறை கொண்டுள்ளீர்களா? ஆமென். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்களுடைய சகோதரி சுகமடையட்டும்.

124201 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரன் சுகமடைவாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரன் சுகமடைவாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரி சுகமடைவாளாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரன் சுகமடைவாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரன் சுகமடைவாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரி சுகமடைவாளாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரன் சுகமடைவாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரன் சுகமடைவாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரன் சுகமடைவாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரி சுகமடைவாளாக. இயேசுவின் நாமத்தில், ஆண்டவரே, என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில், இந்த என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரியை சுகப்படுத்தும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரியை சுகப்படுத்தும். சகோதரனே, அவர் விசாரிக்கிறார். உங்களைக் குறித்து என்ன? இயேசுவின் நாமத்தில், சுகப்படுத்தும்!

125202 இப்பொழுது ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருங்கள், ஒவ்வொருவரும் ஜெபியுங்கள். இது உங்களுடைய ஜனங்களினூடாக வந்து கொண்டிருக்கிறது. 203 இயேசுவின் நாமத்தில், என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில், இந்த என் சகோதரனை சுகப்படுத்தும். ஆமென். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த என் சகோதரனை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில், என் சிறிய சகோதரியை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், கர்த்தாவே, என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில், இந்த என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரியை, என் சகோதரனை சுகப்படுத்தும். என் சகோதரியை சுகப்படுத்தும். கர்த்தாவே, என் சகோதரியை சுகப்படுத்தும். என் சகோதரியை சுகப்படுத்த நான் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் பிதாவே, என் சகோதரியை குணமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகப்படுத்தும்.

126204 சகோதரியே, அவர் விசாரிக்கிறார். உங்களைக் குறித்து என்ன? இயேசுவின் நாமத்தில், உங்களுடைய சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். சகோதரியே இயேசுவின் நாமத்தில் உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். இயேசுவின் நாமத்தில், உங்களுடைய சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுடைய சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரியை சுகப்படுத்தும். இந்த என் சகோதரியை, பிதாவே, இயேசுவின் நாமத்தில் சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் இந்த என் சகோதரனை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் இந்த சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் எங்களுடைய சகோதரியை சுகப்படுத்தும். கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரனை குணமாக்கும். இயேசுவின் நாமத்தில் பிதாவே, என் சகோதரியை குணமாக்கும். இயேசுவின் நாமத்தில் இந்த என் சகோதரனை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் இந்த சிறு பையனை சுகப்படுத்தும். கர்த்தாவே, சகோதரன் க்ரீச்சை இயேசுவின் நாமத்தில் சுகப்படுத்தும். இந்த எங்களுடைய சகோதரியை இயேசுவின் நாமத்தில் சுகப்படுத்தும். இந்த எங்களுடைய சகோதரியை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமாக்குவீராக. பிதாவே, இருவரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகப்படுத்தும். ஆமென். 205 சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது உங்களுடைய பிள்ளையா? உங்களுடைய மனைவியா? சரி, நான் அதை அறியேன். சகோதரனே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இயேசுவின் நாமத்தில் இந்த என் சகோதரனை சுகப்படுத்தும். இந்த என் சகோதரியை, பிதாவே, இயேசுவின் நாமத்தில் சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் இந்த என் சகோதரனை சுகப்படுத்தும். என் சகோதரியை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகப்படுத்துவீராக. கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த என் சகோதரனை சுகப்படுத்தும். இந்த என் சகோதரியை, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் இந்த என் சகோதரனை குணமாக்கும். பிதாவே, இயேசுவின் நாமத்தில் இவர்களை சுகப்படுத்தும்.

127206 நான் ஒவ்வொருவருக்கும் என்னுடைய உத்தமமான ஜெபத்தை ஏறெடுக்கிறேன். இப்பொழுது நீங்கள் அக்கறை கொள்ளுகிறீர்கள். இயேசு விசாரிக்கிறார். இயேசு செய்தியை அனுப்பினார். இயேசு தம்முடைய ஆவியை அனுப்பினார். இயேசு தம்முடைய வார்த்தையை அனுப்பினார். இயேசு தம்முடைய ஊழியக்காரனை அனுப்பினார். நாம் யாவரும் அக்கறை கொள்ளுகிறோம். இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அக்கறை கொண்டு, அதை விசுவாசித்தால், அதை உத்தமத்தோடு ஏற்றுக்கொண்டால், அது செய்யப்படும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை குணப்படுத்தும். இயேசுவின் நாமத்தில், இந்த என் சகோதரியை, சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை குணப்படுத்தும். 207 தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த என் சகோதரியை சுகப்படுத்தும். பிதாவே, இதை அருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில், இந்த என் சகோதரியை, சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரியை சுகப்படுத்தும். ஆண்டவரே, இயேசுவின் நாமத்தில், இந்த என் சகோதரனை, சுகப்படுத்தும். 208 ஓ பரலோகத்தின் தேவனே, சுகப்படுத்த இரக்கமாயிரும்; கர்த்தாவே, அதை அருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மாம்சமும் பெலனும் வருவதாக. தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த என் சகோதரனை சுகப்படுத்தும். தேவனே, இங்கே நாற்காலியில் உள்ள எங்களுடைய சகோதரியை, கர்த்தாவே, நீர் அவளை சுகப்படுத்தி, அவளை சுகமாக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். 209 தேவனே, இங்குள்ள எங்களுடைய சகோதரியை அவளுடைய அருமையான அன்பின் செயலினால் சுகப்படுத்தும், இயேசுவின் நாமத்தில் இந்த ஸ்திரீக்கு உதவி செய்யும். தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த என் சகோதரியை சுகப்படுத்தும். தேவனே, என் சகோதரனை குணப்படுத்தும், நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த வயோதிக ஸ்திரீயை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஸ்திரீயை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் சுகமளித்தல் …?… இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த என் சகோதரியை, சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில், சுகமளித்தல் …?… கர்த்தாவே. இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை குணப்படுத்தும். இயேசுவின் நாமத்தில், கர்த்தாவே, இந்த ஒருவரை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், கர்த்தாவே, என் சகோதரனை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த என் சகோதரியை, சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், சுகமா …?… இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரனை சுகப்படுத்தும். சகோதரனை சுகப்படுத்த …?… [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.]

128210 முழு உத்தமத்தோடு வாருங்கள், எந்தக் காரியத்தையும் சந்தேகப்படாதீர்கள், அதை அப்படியே விசுவாசியுங்கள். இப்பொழுது ஒவ்வொருவரும் ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள். இது இங்கே கடந்து செல்கின்ற நம்முடைய ஜனங்கள், தேவனுடைய பிள்ளைகள். விசுவாசியுங்கள். இயேசுவின் நாமத்தில் பிதாவே, எங்களுடைய சிறிய சகோதரியை சுகப்படுத்தும். 211 கர்த்தாவே, என் விலையேறப்பெற்ற நண்பனை சுகப்படுத்தும். தேவனே, அவன் நீண்ட நேரம் காத்திருந்தான்; இதுவே அந்த வேளையாயிருப்பதாக. ஆமென். இயேசுவின் நாமத்தில், இந்த என் சகோதரியை, சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் …?… பிதாவே, இயேசுவின் நாமத்தில் அவளை சுகப்படுத்தும். இயேசுவில் …?… இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், பிதாவே, அவளை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில், இந்த என் சகோதரனை, சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் பிதாவே, என் சகோதரியை குணமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை குணப்படுத்தும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை, ஆண்டவரே, சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை குணமாக்கும், பிதாவே. இயேசுவின் நாமத்தில்…? தேவனே, இயேசுவின் நாமத்தில் எங்களுடைய சகோதரியை சுகப்படுத்தும். தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரியை சுகப்படுத்தும். 212 தேவனே, இயேசுவின் நாமத்தினால் என் சகோதரனின் பக்கவாதத்தை எடுத்துப் போட்டு, கர்த்தாவே, பிதாவே, அவரை சுகப்படுத்தும். தேவனே, இயேசுவின் நாமத்தில், இந்த என் சகோதரனே, சுகப்படுத்தும். இந்த என் மைத்துனரை, இயேசுவின் நாமத்தில், சுகப்படுத்துமாறு நான் ஜெபிக்கிறேன். 213 இயேசுவின் நாமத்தில், ஆண்டவரே, இந்த என் சகோதரியை சுகப்படுத்தும்; தேவனே அவளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், பிதாவே, எங்கள் சகோதரியை சுகப்படுத்தும் …?… 214 ஓ தேவனே, இப்பொழுது, இங்கே சில வேண்டுகோள்கள் உள்ளன, அவைகளை அவ்வண்ணமே அருளும், இயேசுவின் நாமத்தில்.

129215 இப்பொழுது, சகோதரனே, அந்தவிதமாகத்தான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்பொழுது, அதற்காக கர்த்தர் அதை செய்திருக்கிறார். 216 நீங்கள் பாருங்கள் அந்த குழந்தை …?… இப்பொழுது, உங்களுக்கு என்ன கோளாறு உள்ளது என்பதை அவர் எனக்கு தெரியப்படுத்துகிறார். நான் அதைக் கூப்பிடவில்லை …?… இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்… 217 ஓ தேவனே, இங்கே எடித்துக்காக நிற்கிறாள் …?… அவள் இங்கே நிற்கிறாள். கர்த்தாவே. நாங்கள் அந்த சிறிய காரியத்தைக் குறித்து சிந்திக்கிறோம். அவள் இப்பொழுது இங்கே கொண்டுவரப்படுவதற்காக இருந்தாள். கர்த்தாவே, அவளுடைய சகோதரி அவளுடைய ஸ்தானத்தில் நின்று கொண்டிருக்கிறாள். தேவனே, இந்த விண்ணப்பங்களை இயேசுவின் நாமத்தில் அவளுக்காக அருளும். 218 தேவனே, எங்கள் சகோதரன் மீது இரக்கமாயிரும், பிதாவே, இயேசுவின் நாமத்தில் அவரை சுகப்படுத்தும். 219 தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த என் விலையேறப்பெற்ற சகோதரனைத் தொட்டு, பிதாவே, இவரை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்களுடைய சகோதரியை சுகப்படுத்தும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரியை சுகப்படுத்தும். எங்கள் சகோதரனை, பிதாவே, இயேசுவின் நாமத்தில் சுகப்படுத்தும். இந்த எங்கள் சகோதரியை, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகப்படுத்தும். ஓ தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இதை சுகப்படுத்தும் …?… தேவனே, இந்த சிறு பையனை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகப்படுத்தும். கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் சகோதரனை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில், எங்களுடைய சுகமளித்தலை …?… ஓ தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரியை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், சுகப்படுத்த …?… இயேசுவின் நாமத்தில் எங்களுடைய சகோதரியை சுகப்படுத்தும்…? ஓ தேவனே, இந்த எங்களுடைய சகோதரியை, சுகப்படுத்தும், நான் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். தேவனே, எங்களுடைய சகோதரியை சுகப்படுத்தும், ஏனென்றால் நான் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். தேவனே, அவளை சுகப்படுத்தும்; கர்த்தாவே, இயேசுவின் நாமத்தில் இதை அருளும்.

130220 தேவனே, எங்கள் சகோதரனைத் தொடும்; அது உம்முடைய வார்த்தையாயுள்ளது; கர்த்தாவே, நீர் அதை வாக்குத்தத்தம் செய்தீர், நாங்கள் அதை விசுவாசிக்க வருகிறோம், இயேசுவின் நாமத்தில். 221 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், கர்த்தாவே, எங்கள் சகோதரியை சுகப்படுத்தும்; அவள் உத்தமத்தோடு வந்திருக்கிறாள், இப்பொழுது விசுவாசிக்கிறாள்; அவள் போய், சுகமடைவாள். இயேசுவின் நாமத்தில் அவள் போய் சுகமடைவாளாக, கர்த்தாவே. 222 தேவனே, உம்முடைய சுகமளிக்கும் கரங்களை மேல் வையும் …?… அவர்கள் அவளுடைய வேண்டுகோளோடு அவளுடைய வீட்டிற்குத் திரும்புவார்களாக. ஓ தேவனே, கர்த்தாவே, சுகத்தை அருளும். இயேசுவின் நாமத்தில் பிதாவே, எங்கள் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகப்படுத்தும். பரலோகத்தின் தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரனை சுகப்படுத்தும். என் சகோதரியே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில். இயேசுவின் நாமத்தில் இதை …?… சுகப்படுத்தும். இந்த என் சகோதரி டால்டனை, இயேசுவின் நாமத்தில் சுகப்படுத்தும். என் சகோதரியை, பிதாவே, இயேசுவின் நாமத்தில் சுகப்படுத்தும். கர்த்தாவே, இயேசுவின் நாமத்தில் என் சகோதரனை குணமாக்கும். 223 இப்பொழுது, அவர் அக்கறை கொள்ளுகிறார்; சகோதரனே, நீங்களும் கூட அதைச் செய்யுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் போய் அவருக்கு துதியை செலுத்தி, அவருக்கு நன்றி செலுத்துங்கள் …?… இதை அருளும் கர்த்தாவே, அநேக பாரங்கள் அவருக்கு இருக்கின்றன; பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரனை சுகப்படுத்தும்.

131224 நீர் அவள் மேல் இரக்கத்தை அனுப்புவீராக …?… 225 தேவனே, இங்குள்ள, என் சகோதரிக்கு சுகத்தை அருளும். அவள் வாசலில் நின்றுகொண்டு காத்துக் கொண்டிருக்க, பரிசுத்த ஆவியானவர் அவளைச் சூழ்ந்து கொண்டிருப்பதைக் காணுகிறேன். தேவனே, அவள் போய் உம்மை விசுவாசிப்பாளாக. பிதாவே, இதை அருளும். இயேசுவின் நாமத்தில், பிதாவே, அவர் விடுதலையாகப் போவாராக. தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் …?… நீர் என் சகோதரியை சுகப்படுத்த வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில், இந்த என் சகோதரியை, சுகப்படுத்தும். தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரனை குணப்படுத்தும். தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் …?… தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரனை சுகப்படுத்தும். தேவன் …?… வல்லமையால் வந்து …?… வல்லமை அவனை குணமாக்கும். 226 ஓ தேவனே, சுகப்படுத்தும் …?… அவளுக்கு …?… இங்கே ஒரு இடத்தைக் காண்பியும். கர்த்தாவே, அது விலகிச் செல்வதாக, அவள் தேவனுடைய வல்லமையை உணருவாளாக, இயேசுவின் நாமத்தில் …?… தேவனே, எங்களுடைய சகோதரனை குணமாக்கும், கர்த்தாவே, அவர் குணமடைவாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், தேவனே, எங்களுடைய சகோதரியை சுகப்படுத்தும். 227 தேவனே, சுகப்படுத்தும் …?… நீர் செய்கிற அநேக காரியங்களை அவள் கண்டிருக்கிறாள். இப்பொழுது அவர்கள் யாவரும் …?… சுகப்படுத்தும் …?… கர்த்தாவே, அருமையான கர்த்தராகிய இயேசுவே, நான் இரக்கத்திற்காக ஜெபிக்கிறேன். 228 தேவனே, இந்த …?… அவளை சுகப்படுத்தும் …?… கர்த்தாவே, அவளுடைய துக்கங்கள் அநேகமாயிருந்து வருகிறது, நாங்கள் அவைகளை பகிர்ந்து கொள்கிறோம். இப்பொழுது, அவள் …?…

132இயேசுவின் நாமத்தில், இந்த என் சகோதரியை, கர்த்தாவே, சுகப்படுத்தும். நாமத்தில் …?… என் சகோதரனை சுகப்படுத்தும். தேவனே, இந்த என் சகோதரனை சொஸ்தமாக்கி, அவரை சுகப்படுத்தும் …?… கர்த்தாவே, எங்கள் சகோதரியை சுகப்படுத்தும், இயேசு கிறிஸ்துவின் …?… இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என்னுடைய சிறிய சகோதரனை சுகப்படுத்தும். தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த என் சகோதரனை, சுகப்படுத்தும்,. தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த என் சகோதரனை சுகப்படுத்தும். தேவனே, என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில், அவள் சுகமடைவாளாக. 229 தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் …?… அவரை, இந்த என் சகோதரனை, சுகப்படுத்தும், ஓ தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரியை சுகப்படுத்தும். 230 இங்குள்ள என் சகோதரியை, கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் குணமாக்கும், அவள் போய் …?… 231 தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளுடைய வேண்டுகோளை அருளும், நீர் அந்த வேண்டுகோளை அருளும் என்று நான் ஜெபிக்கிறேன். 232 தேவனே, சகோதரி சிம்மன், அவள் இந்த வேளைக்காக காத்துக் கொண்டிருக்கையில், தேவனுடைய கிருபையும், இரக்கமும் இருப்பதாக. அவள் அதைக் கீழே இறக்கி விடக்கூடிய நேரம் …?… அவள் சுகமடைந்து …?… 233 தேவனே, சகோதரன் அன்கிரென் …?… தேவனே, சுவிசேஷ எக்காளம் ஊதுகிற ஒரு பொன்னான சத்தத்தை அவர் உடையவராயிருக்கிறார். தேவனே, அவரை சுகமாய் காத்துக்கொள்ளும்; இயேசுவின் நாமத்தில் அதை அருளும். 234 தேவனே, எங்களுடைய சகோதரி கிட் அந்த நாமத்தில் அழைத்துக் கொண்டிருக்கிறார் …?… உம்முடைய வல்லமை அவளை இப்பொழுது விடுதலையாக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன் …?… நேர்மையுடன் இந்த சிறிய தாய் …?… ஏழு நாட்கள் அவள் தன் தாயுடன் இருக்க வேண்டும். பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை அருளும். 235 தேவனே, அவளுடைய பிள்ளைகளுக்காக, ஓ, தேவனே, அவர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களில் அநேகர் சுகவீனமாயிருக்கிறார்கள், அந்தப் பெண் சுகவீனமாயிருக்கிறாள், மேலும் …?… ஓ தேவனே, நீர் அதை அருள வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக நான் ஜெபிக்கிறேன். 236 எனவே சகோதரன் டாமுக்காக நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், கர்த்தாவே, நீர் அவரை சுகப்படுத்தி, அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஜெபிக்கிறேன். நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக …?… 237 இங்கே ஒரு மனிதன்…? சகோதரனே, நீங்களும் கூட ஜெபிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? கர்த்தராகிய இயேசு…

133[ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] அவர் உங்களுக்காக விசாரிக்கிறார், அவர் உங்களுக்காக விசாரிக்கிறார்; சூரிய வெளிச்சத்தினூடாகவோ அல்லது நிழலினூடாகவோ, அவர் உங்களுக்காக விசாரிக்கிறார். அவர் உங்களுக்காக விசாரிக்கிறார், அப்படியானால், உங்களுடைய கவலைகளை அவர் மீது வைத்துவிடுங்கள். அவர் உங்களுக்காக விசாரிக்கிறார்; சூரிய வெளிச்சத்தினூடாகவோ அல்லது நிழலினூடாகவோ, அவர் உங்களுக்காக விசாரிக்கிறார். 238 நீங்கள் அவருக்காக அக்கறை கொள்கிறீர்களா? நீங்கள் அவருடைய வார்த்தைக்காக அக்கறை கொண்டிருக்கிறீர்களா? ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் சற்று நேரம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. இந்த வேண்டுகோள்களுக்கு நான் பதிலளித்தேன் என்று நான் நம்புகிறேன். நான் உங்கள் ஒவ்வொருவருடைய வேண்டுகோள்களுக்கும் பதிலளித்தேன்.

134239 சற்று நேரத்திற்கு முன்னர் நான் கூட்டத்தில் ஒரு சிறு பிழையை செய்துவிட்டேன். அதை யாராவது கவனித்திருப்பார்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். கர்த்தர் இப்பொழுது எங்கோ எனக்கு சுட்டிக் காட்டினார். நான் அதை யாரோ ஒருவருக்காகக் கூறும்போது, நான் அதை வேறொருவருக்காகக் கூறினேன். அந்த நபரை என்னால் காணமுடியவில்லை—முடியவில்லை, ஆனால் அது யாரோ ஒருவருக்காக அவர்கள் மேல் ஒரு ஆசீர்வாதத்தை வைத்தேன். நான்…அவர்கள் மிக வேகமாக வந்து கொண்டிருந்தனர், நான் கவனிக்கவில்லை. நான்…ஆம், அது இருந்தது, இப்பொழுது நான் அதைக் காண்கிறேன். இந்த மனிதனும், ஸ்திரீயும் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். நான் தவறாகக் கூறவில்லையென்றால், நேற்றிரவு இங்கே ஜெபர்சன்வில்லா விடுதியில் உள்ள ஒரு—ஒரு அறையிலோ அல்லது முற்றத்திலோ நான் அவர்களுடைய கரத்தைக் குலுக்கினேன். நான் அந்த மனிதனிடம் ஏதோ ஒரு காரியத்தைக் கூறினேன், நீங்கள் அதைக் கடந்து சென்றபோது, “சகோதரன்” என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, “சகோதரி” என்று அழைத்தேன். நீங்கள் அதை கவனித்தீர்களா? நான் அதை உங்களுடைய மனைவிக்காக பொருட்படுத்திக் கூறினேன். இப்பொழுது, அவளுக்கு சில காலமாக கோளாறு இருந்தது, நீண்ட காலமாக ஒரு குடல் கோளாறு உள்ளது. நீங்கள் இல்லினாய்ஸிலிருந்து வருகிறீர்கள். திருமதி மோங்காலாந்து, அது உண்மை, அதுதான் உங்களுடைய பெயர். இப்பொழுது, நான் உங்களை அறிந்திருக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள், ஆனால் நீங்கள் இப்பொழுது தொடர்பு கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்தால், ஒரு முழுமையான வெளியேற்றம் உண்டாகும் நீங்கள் விசுவாசிப்பீர்களேயானால், அது முன்பு இருந்தது போன்றே இருக்கும். நீங்கள் அதை எல்லா நேரத்திலும் காணும்படியாக, இப்பொழுது நான்…

135240 எனக்குத் தெரிந்த ஒரே காரியம், நேற்றிரவு நான் அந்த மனிதனை நினைத்துப் பார்த்தேன், அவருக்கு அவ்வளவு அழகான முடி இருந்தது என்று நான் நினைத்தேன், இந்த நரைத்த தலையுடைய மனிதன் இங்கே தன்னுடைய தலைமுடியை நடுவில் பிரித்து வாரிக்கொண்டு, இங்கே அமர்ந்திருக்கிறார். நான் பார்க்க நேர்ந்தது, அங்கே அந்த ஒளி அந்தவிதமாக அவர்கள் மேல் சுற்றி பிரகாசித்துக் கொண்டிருந்தது. அது அப்படித்தான் இருந்தது. அப்பொழுது தரிசனம் வெளிப்பட்டதை நான் கண்டேன். அவர்கள் யார் என்றும், அதைக் குறித்து ஒன்றுமே எனக்குத் தெரியாது. நேற்றிரவு அங்கே அந்தப் பெண்மணி இருந்தாள். அப்பொழுது நான், “நீங்கள் கூட்டத்திற்கு வருகிறீர்களா?” என்று கேட்டேன். அவள், “ஆம்” என்றாள். ஆனால் தேவனுடைய கிருபை அதை மீண்டும் இழுத்தது, அது யாராயிருந்தது. சகோதரனே, ஜெப வரிசையில் மாறி ஏதோ ஒன்று கூறப்பட்டதை நீங்கள் கவனித்தீர்களா? அது உங்களுக்கு பதிலாக சகோதரிக்கானதாயிருந்தது. அது, அது சரியாயிருந்தது, அங்கிருந்த அந்த சகோதரியிடம் சென்றது.

136241 இப்பொழுது அந்த ஜெப வரிசையினூடாக, அந்த கர்த்தருடைய தூதன் அங்கிருந்தார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். அது அழைக்கலாம். ஆனால் அழைக்கும்போது, அது பலவீனமடைந்து, பலவீனமடைந்து, பலவீனமடைந்துகொண்டே வருகிறது. பார்த்தீர்களா? எனவே அவர் உங்களுக்காக அக்கறை கொள்கிறார், நான்—நான் உங்களுக்காக அக்கறைகொள்கிறேன். நான் இன்னும் நான்கு அல்லது ஐந்து பேரை பார்த்திருக்கலாம், அதன்பின்னர், முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, பில்லி என்னை பிரசங்க பீடத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றிருப்பான். ஆனால் நான் நினைத்தேன், நிச்சயமாகவே, இத்தனை ஆண்டுகளாக நான்—நான் இங்கே உங்களுடன் வாழ்ந்து, தேசத்தைச் சுற்றிலும் உள்ள, உங்களை நான் நேசிக்கிறேன் என்பதை நீங்கள்—நீங்கள் அறிவீர்கள். ஓ, நீங்கள் என்னுடைய சொந்த பிள்ளைகளாயிருந்ததுபோல, நான் உங்களை நேசிக்கிறேன், நீங்கள் சுவிசேஷத்தில் என்னுடைய பிள்ளைகளாயிருக்கிறீர்கள். சுவிசேஷத்தினூடாக, நான் உங்களை கிறிஸ்துவுக்கு பெற்றெடுத்தேன். இப்பொழுது இந்த, இந்த வேண்டுகோள் போன்றவற்றிற்கு நான் பதிலளித்திருக்கிறேன் என்று நான் நினைக்கிறேன்.

137242 இப்பொழுது, நான் உங்களை நேசிக்கிறேன். நான் போய் உங்கள் மீது கரங்களை வைத்தால், பரிசுத்த ஆவியானவர் அதை செய்து கொண்டிருந்ததை நீங்கள் கண்டீர்கள், அதன்பின்னர் அந்தவிதமாக கூட்டத்தில் குழப்பம் உண்டானது. நான் அதை தவறவிட்டு, மிக வேகமாக கடந்து சென்று, ஒருவரையொருவர் ஆசீர்வதிக்கும்படி உரைத்தேன், அதன்பின்னர் பரிசுத்த ஆவியானவர் கூட்டம் முடிந்தவுடன் திரும்பி, அதை மீண்டும் காண்பிக்கிறார். பார்த்தீர்களா? நீங்கள் பார்க்கவில்லையா, அவர் விசாரிக்கிறாரே! இப்பொழுது நீங்கள் அக்கறை கொள்ளுகிறீர்களா? நீங்கள், “இந்த நேரம் முதற்கொண்டு, என்னுடைய இருதயத்தில் உள்ள ஏதோ ஒரு காரியம் என்னுடைய தொல்லைகள் தீர்ந்துவிட்டன என்று என்னிடம் கூறுகிறது. நான்—நான் நலமாக இருக்கிறேன், நான் சுகமடையப் போகிறேன்” என்று கூறுவீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய கரங்களை உயர்த்தி, “நான் அதை விசுவாசிக்கிறேன்!” தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சூரிய வெளிச்சத்தினூடாகவோ அல்லது நிழலினூடாகவோ, அவர் உங்களுக்காக விசாரிக்கிறார். 243 இது ஒரு மகத்தான பெரிய அன்பு விருந்து. நாம் இதைப் பாடி, ஒருவரோடு ஒருவர் கரங்களைக் குலுக்குவோமாக. அவர் உங்களுக்காக விசாரிக்கிறார், அவர் உங்களுக்காக விசாரிக்கிறார்; சூரிய வெளிச்சத்தினூடாகவோ அல்லது நிழலினூடாகவோ, அவர் உங்களுக்காக விசாரிக்கிறார்.

138244 இன்று காலை வரை நான் உங்களை இவ்வளவு நேரம் வைத்திருந்தேன்—நான்…நான்—நான்…நான் பிரசங்கிக்கும் வரைக்கும் என்னுடைய போதகர் பிரசங்கிப்பதில்லை. அவர் இன்றிரவு உங்களுக்காக செய்தியைக் கொண்டு வர முயற்சிப்பார், …தலைப்பின் கீழ் அடுத்த ஞாயிற்றுக் கிழமை ஆராதனை இருக்குமா என்பதைப் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம். நான் அவ்வாறு செய்யவில்லையென்றால், அதேவிதமான ஆராதனைகள் இருக்கும். எனவே உங்கள் யாவரையும், கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது ஒரு ஞானஸ்நான ஆராதனை நடைபெறவிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். 245 எனவே நீங்கள் கலைந்து செல்வதற்காக சற்று நேரம் எழுந்து நிற்பீர்களானால் நலமாயிருக்கும். நாம் அதை மீண்டும் பாடுவோம். “உங்களுடைய கவலைகளை அவர் மேல் வைத்துவிடுங்கள், ஏனென்றால் அவர் உங்களை விசாரிக்கிறார்.” இப்பொழுது நீங்கள் அவருக்காக அக்கறை கொண்டிருந்தால், நாம், “கர்த்தாவே, நான்…” என்று கூறுவோமாக. நீங்கள் இதைச் செய்யும்போது, நீங்கள்—நீங்கள் இந்த அறிக்கையை கூறுகிறீர்கள், “கர்த்தாவே, நீர் எனக்காக அக்கறை கொண்டிருக்கிறீர் என்பதை நான் அறிவேன். நான் என்னுடைய கரங்களை உயர்த்தி, நான் உமக்காக அக்கறை கொண்டிருக்கிறேன்.” நாம் பாடுகையில், அன்பின் இந்த அன்பு விருந்தில் இப்பொழுது நம்முடைய கரங்களை உயர்த்துவோமாக. அவர் உங்களுக்காக விசாரிக்கிறார், அவர் உங்களுக்காக விசாரிக்கிறார்; சூரிய வெளிச்சத்தினூடாகவோ அல்லது நிழலினூடாகவோ, அவர் உங்களுக்காக விசாரிக்கிறார்.

139246 இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், கூறுங்கள்… [சகோதரன் பிரான்ஹாம் அவர் உங்களுக்காக விசாரிக்கிறார் என்று பாடுகிறார்—ஆசி.] ஓ, என் கர்த்தரின் இனிமை! அவருடைய அன்பு உங்களை அவரண்டை நெருங்கி இழுப்பதை நீங்கள் உணரவில்லையா? “கர்த்தாவே, நான் உம்மை நேசிக்கிறேன். நான் உம்மை நேசிக்கிறேன். கர்த்தாவே, நீர் எனக்காக அக்கறை கொண்டிருக்கிறீர். நான் ஒரு பாவியாயிருக்கும் வரையில், நீர் எனக்காக மரிக்கும் வரைக்கும் அதிக அக்கறை கொண்டிருந்தீர். என் மீறுதல்களினிமித்தம் நீர் காயப்பட்டீர், உம்முடைய தழும்புகளால் குணமானேன்.” அவர் உங்களுக்காக விசாரிக்கிறார், அவர் உங்களுக்காக விசாரிக்கிறார்; சூரிய வெளிச்சத்தினூடாகவோ அல்லது நிழலினூடாகவோ, அவர் இன்னமும் உங்களுக்காக விசாரிக்கிறார். 247 நீங்கள் உங்களுடைய தலைகளை வணங்கியிருக்கையில், அதை இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். இங்குள்ள சகோதரன் எட்வர்ட்ஸ் அவர்களை ஜெப வார்த்தையின் மூலம் அவர் எங்களை அனுப்பிவிடுவாரா என்று நான் கேட்கப் போகிறேன். ஆனால், முதலில், நாம் அதை மீண்டும் மெளனமாகப் பாடுவோம். சூரிய வெளிச்சமோ அல்லது நிழலோ, அவர் இன்னமும் விசாரிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் அக்கறை கொண்டிருந்தார். நீங்கள் அக்கறை கொள்கிறீர்களா? “ஆம், கர்த்தாவே, நான் அக்கறை கொள்கிறேன் என்று நான் வாக்குப்பண்ணுகிறேன். நான் இப்பொழுதே தொடரப் போகிறேன். இங்கிருந்து, நான் அக்கறை கொள்கிறேன். நான் என்னுடைய சாட்சிக்காக அக்கறை கொள்கிறேன்” என்றேன். அவர் உங்களுக்காக விசாரிக்கிறார். சகோதரர் எட்வர்ட்ஸ். 